Jump to content

பாரிசில் குண்டு வெடிப்பு: 129 பேர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Paris attacker slipped into Europe with refugees

அகதிகளோடு அகதியாக, சிரியாவில் இருந்து கிரீஸ் வழியாக பாரீஸ் வந்த தீவிரவாதி.

பாரீஸ்: பாரீஸ் நகரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் சிரியாவில் இருந்து அகதியாக கிரீஸ் வழியாக ஐரோப்பா வந்துள்ளார். 
பாரீஸ் நகரின் 6 இடங்களில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடந்த படாகிளான் தியேட்டர் அருகே கிடந்த தீவிரவாதியின் உடலுக்கு அருகில் சிரியா பாஸ்போர்ட் இருந்தது. 
இந்நிலையில் அந்த நபரை அடையாளம் காணுமாறு பிரான்ஸ் அதிகாரிகள் கிரீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். தீவிரவாதி சிரியாவில் இருந்து அகதியாக கிரீஸில் உள்ள லெரோஸ் தீவுக்கு கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி வந்தது தெரிய வந்துள்ளது. 
அவர் அகதிகளோடு அகதியாக கிரீஸ் வந்து அங்கிருந்து பாரீஸுக்கு வந்துள்ளார். அவருடன் எத்தனை தீவிரவாதிகள் அகதிகள் என்ற பெயரில் கிரீஸ் வந்தனர் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. 
மேலும் தீவிரவாதிகள் பயன்படுத்திய 2 கார்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது தவிர தாக்குதல்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நன்றி தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை பல  லட்சம் சிரிய  அகதிகள் பல்கான் வழியாக ஐரோப்பாவிற்குள் வந்துள்ளனர். இவர்களுடன் தீவிரவாதிகளும் வந்திருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது

Link to comment
Share on other sites

பாரீஸ் தியேட்டரில் தாக்குதல் நடத்திய உமர் இஸ்மாயில் முஸ்தபா யார்?
 
பாரீஸ்: பாரீஸில் உள்ள படாகிளான் தியேட்டரில் தாக்குதல் நடத்திய உமர் இஸ்மாயில் முஸ்தபாவை சிறு சிறு குற்றங்கள் செய்தவராகத் தான் போலீசாருக்கு தெரிந்துள்ளது. பாரீஸ் நகரில் 6 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் பலியாகியுள்ளனர், 352 பேர் காயம் அடைந்துள்ளனர். படாகிளான் தியேட்டரில் தாக்குதல் நடத்திய தீவரிவாதிகளில் ஒருவர் பாரீஸை சேர்ந்த உமர் இஸ்மாயில் முஸ்தபா என்பது தெரிய வந்துள்ளது.
 
  சம்பவ இடத்தில் கிடந்த விரலை வைத்து போலீசார் உமரை அடையாளம் கண்டுள்ளனர். அவர் பாரீஸின் புறநகர் பகுதியான கோர்கோரன்னஸில் 1985ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி பிறந்தார். அவர் 2004ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை சிறு சிறு குற்றங்களுக்காக சிக்கியுள்ளார். ஆனால் சிறை தண்டனை விதிக்கப்படவில்லை.
 
உமர் கடந்த ஆண்டு சிரியாவுக்கு சென்று வந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உமரை அடையாளம் கண்டதும் போலீசார் அவரின் தந்தை மற்றும் அண்ணனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அவர்களின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தினர். பாரீஸ் தாக்குதல்களில் உமருக்கு தொடர்பிருந்தது தெரிய வந்ததும் அவரின் சகோதரர் போலீசில் சரண் அடைந்துள்ளார்.
 
உமரின் சகோதரர் கூறுகையில் உமர் சிறு சிறு குற்றங்கள் செய்து வந்தது எனக்கு தெரியும். ஆனால் அவர் இப்படி ஒரு தாக்குதலை நடத்துவார் நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் பல ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இல்லை. என் தாய்க்கு போன் செய்தேன். அவருக்கும் உமரின் நடவடிக்கைகள் பற்றி எதுவும் தெரியவில்லை என்றார். உமர் பாரீஸின் தென்மேற்கில் உள்ள லூஸ் பகுதியில் இருக்கும் மசூதிக்கு தினமும் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/omar-ismail-mostefai-petty-criminal-cold-blooded-terrorist-239881.html
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Französischer Kampfjet (Archivbild): Angriff auf Rakka

பாரிசில் தாக்குதல் நடந்து இரு நாட்களுக்கு பின் சிரியாவில் தர்மயுத்தம் நடத்த போர் விமானங்கள் புறப்பட்டு விட்டனவாம்

Link to comment
Share on other sites

பாரிஸ் தாக்குதல்கள்: புதிய வகையிலான பயங்கரவாதம்?

16 நவம்பர் 2015
Bookmark and Share
 

 

பாரிஸ் தாக்குதல்கள்: புதிய வகையிலான பயங்கரவாதம்? தமிழில் குளோபல் தமிழ்செய்திகள்:-



பாரிசில் இடம்பெற்றுள்ள தொடர்ச்சியான குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிபிரயோகங்களின் எண்ணிக்கையும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளும் பிரான்ஸை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

எட்டு தற்கொலைகுண்டுதாரிகளுடன் சேர்த்து 135ற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள நிலையில், 2004 இல் ஸ்பெயினில் புகையிரதத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற மிகமோசமான பயங்கரவாத தாக்குதலாக இது காணப்படுகின்றது.


இவ்வாறான பேரழிவுகளை உண்டாக்ககூடிய தாக்குதல்களை கட்டுப்படுத்த கூடிய வல்லமை மேற்குலகின் பாதுகாப்பு படையினருக்கு உள்ளதா என்ற கேள்வியும் பாரிஸ் தாக்குதலிற்கு பின்னர் எழுந்துள்ளது.


பிரான்ஸ் ஜனாதிபதி  ஐஎஸ் அமைப்பு மேற்கொண்ட யுத்தம் என இந்த தாக்குதலை வர்ணித்துள்ளார்.


 பாரிசில் இந்த தாக்குதல் ஏன் இடம்பெற்றது?

ஜனவரி மாதத்தில் சார்லிஹெப்டோவின், பெண்பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பேரங்காடி  ஆகியவற்றின் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் பாரிஸ் உயர்ந்தபட்ச உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது, இந்த தாக்குதல்களுடன் தொடர்பு பட்டிருந்த அமெடி கௌலிபலி ஐஎஸ் அமைப்பின் உத்தரவின் பேரிலேயே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.


கடந்த பல வருடங்களாக பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள வீடமைப்பு திட்டங்களும், ஏனைய நகரங்களும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் விளை நிலங்களாக காணப்பட்டன, பெருமளவு வேலை வாய்ப்பின்மையும்,புறக்கணிப்பும் காணப்படும் பகுதிகளை சேர்ந்த தனிமைப்படுத்தப்பட்ட இளவயது இஸ்லாமியர்களிற்கு ஜிகாத் ஓரு கவர்ச்சிகரமான விடயமாக காணப்பட்டது.


சிரியாவிலும், ஈராக்கிலும் போராடுவதற்காக 500ற்கும் மேற்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் பிரான்சிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர், இது ஏனைய மேற்குலகநாடுகளை விட அதிகமான எண்ணிக்கையாகும்.


ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளில் இணைந்துள்ள பிரான்ஸ் விமானங்கள் பல வெற்றிகரமான தாக்குதல்களை ஈராக்கிலும் சிரியாவிலும் மேற்கொண்டுள்ளது.

வெள்ளிகிழமை இலக்குவைக்கப்பட்ட பகுதிகள் எதனை உணர்த்துகின்றன அவை கடுமையான பாதுகாப்பில்லாத, பொதுமக்கள் அதிகமாக காணப்படும் பகுதிகள்,- நோக்கம், எவ்வளவு பொதுமக்களை கொலைசெய்ய முடியுமோ அவ்வளவு பேரைகொல்வது.


ஜேர்மனிக்கும்-பிரான்சிற்கும் இடையில் உதைபந்தாட்டப் போட்டி நடந்துகொண்டிருந்த மைதானம் நிச்சயமாக  வாய்ப்புகள் அதிகம் கூடிய  ஓரு இலக்கு-


எனினும் அருகில் உள்ள உணவகத்தில் மூன்று தற்கொலை குண்டுதாரிகள் தங்களை வெடிக்கவைத்ததே  வழமைக்கு மாறான விடயமாக காணப்படுகின்றது,பிரான்ஸ் இவ்வாறன தொடர்குண்டு வெடிப்புகளை முன்னர் சந்தித்ததில்லை.


இதன்பின்னர் பட்டகிளான் இசையரங்கில் இடம்பெற்ற தாக்குதல்- மீண்டும் தற்கொலை குண்டுதாரிகளால மேற்கொள்ளப்பட்டது, கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த பிரான்சின் இளம்வயதினரை இலக்குவைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இசைநிகழ்வொன்றின் போது இடம்பெற்ற இந்த தாக்குதலில் 80 ற்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.


பிரான்சின் சில விமர்சகர்கள் 2002 இல் மொஸ்கோவில் இடம்பெற்ற பணயக்iதிகள் சம்பவத்தை இதனுடன் ஓப்பிட்டுள்ளனர், மொஸ்கோவில் செச்னிய தீவிரவாதிகள் அந்த அரங்கில் இருந்தவர்களை பணயக்கைதிகளாக பிடித்தனர்,இந்த தாக்குதல் மற்றும் ரஸ்ய படையினரின் மீட்பு நடவடிக்கை காரணமாக 140ற்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.


வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் சுற்றுலாப்பயணிகள் காணப்படும் இடங்களில் இடம்பெறவில்லை மாறாக பாரிசின் தொழிலாளர் வர்க்கத்தினர் அதிகமாக உள்ள பகுதிகளில் இடம்பெற்றுள்ளன என பிரான்சின் பத்திரிகையாளர் ஓருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


குறிப்பிட்ட தாக்குதலிற்கு பொறுப்பேற்று விடுத்துள்ள அறிக்கையில் ஐஎஸ் வக்கிரம் மற்றும் தீமையின் தலைநகரம் என பாரிசை வர்ணித்துள்ளது. இசைநிகழ்விற்கு செல்பவர்களை புறச்சமயத்தவர்கள் என அது தெரிவித்துள்ளது.


இந்த இலக்குகள் தெரிவுசெய்யப்பட்ட விதத்தை நோக்கும்போது கலாச்சாரம் என்ற விடயம் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது தெளிவாகின்றதுஎன்கிறார்,பாதுகாப்பு கொள்கை தொடர்பிலான நிபுணர் சசாங்ஜோசி அவர்கள் வேண்டுமென்றே மக்கள்  கேளிக்கைகளில் ஈடுபடும் பகுதிகளை தெரிவு செய்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

 
ஏனயை முக்கியநகரங்களில் இடம்பெற்ற தாக்குதல் போன்றதா இது?
 
இந்த தாக்குதலை 2008 நவம்பரில்  இடம்பெற்ற மும்பாய் தாக்குதலுடனேயே ஓப்பிடமுடியும் என்பது அவரின்  கருத்து,பாக்கிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர், மும்பாய் வீதிகளில் பாரிய அச்சத்தையும் அழிவையும் அவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.
 
ஐரோப்பாவை பொரறுத்தவரை இந்த தாக்குதல் 2004 இன் மட்ரிட் புகையிரத குண்டுவெடிப்பு மற்றும் 2005 லண்டன் தாக்குதல்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
 
ஐரோப்பாவில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் யூதர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர், ஜிகாத்தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் பலவற்றிற்கு அராபியர்கள் குறித்த இஸ்ரேலின் பகைமை உணர்வே காரணமாக தெரிவிக்கப்பட்டது.
 
எனினும் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல்கள் இலக்கை தெரிவுசெய்யும்போது தீவிரவாதிகளிடம் முன்னுரிமைக்குரிய தனியொரு இலக்கோ அல்லது தலைமைப்பீடமோ இல்லை என்பதை புலப்படுத்தியுள்ளது என்கிறார் ஜோசி.
 
ஐஎஸ் அமைப்பு தன்னால் எந்தநேரத்திலும், எங்கும்,தாக்குதலை மேற்கொள்ளகூடிய வல்லமையுள்ளதையும் எங்களால் அதனை தடுக்க முடியாது என்பதையும் காண்பிக்க முயல்கின்றது என்கிறார் பெல்ஜியத்தை சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர்,
இந்த தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்ட, நீண்ட காலம் பயிற்சியெடுக்கப்பட்ட ஓன்று என்பது அவரது கருத்து,
 
எனினும் பாரிஸ் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் மத்தியகிழக்கில் பல களங்களை கண்டவர்களாகவோ அல்லது ஆயுதநிபுணர்களாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை என்கிறார் ஜோசி.
 
பிரான்சின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவீனமானவையா?
 
இல்லை என்கின்றனர் ஜோசியும், பெல்ஜியம் நிபுணரும்,
உங்களால் இலகுவாக இலக்குவைக்கப்படக்கூடிய அனைத்து பகுதிகளையும் பாதுகாக்க முடியாது,என்கிறார் ஜோசி, பிரான்ஸ் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது அதனால் இந்த தாக்குதலை தடுத்திருக்க முடியுமா  என தற்போது கூற முடியாது சிறிதுநாட்கள் பிடிக்கும் என்கிறார் பெல்ஜியம் நிபுணர்,
 
ஐஎஸ் அமைப்பு தாக்குதல்களை பிரான்சிற்கு வெளியே ஓருங்கிணைத்ததா அல்லது பிரான்சிற்குள் உள்ள ஐஎஸ் அமைப்பினால் கவரப்பட்ட இஸ்லாமியர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டனரா என்பது முக்கியமான கேள்வியாக காணப்படுகின்றது,
 
Link to comment
Share on other sites

பாரிஸ் தாக்குதல் ஈராக் மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடியே என உ.பி. அமைச்சர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கான் பாரிஸ் தாக்குதல் பற்றி கூறுகையில், தீவிரவாத தாக்குதல்கள் எங்கு நடந்தாலும் வன்மையாக கண்டிக்கத்தக்கதுதான்.

ஆனால் இத்தகைய தீவிரவாத தாக்குதல்களுக்கான அடிப்படை காரணம் என்ன என்பதையும் நாம் உணர வேண்டும்.

அமெரிக்காவும் அதன் மேற்குலக நட்பு நாடுகளும் சிரியா, லிபியா, ஈராக், ஆப்கானில் தங்களது சுயநலத்துக்காக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன.

அந்நாடுகளின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க அமெரிக்கா தலைமையில் மேற்குலக நாடுகள் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டன.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அப்பாவி மக்களை கொன்று குவிக்கின்றனர்.

எனவே, சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பதிலடி தான் இந்த பாரிஸ் தாக்குதலை என பேசியுள்ளார்.

தற்போது இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Link to comment
Share on other sites

பாரீஸில் தாக்குதல் நடத்திய மேலும் 2 தீவிரவாதிகளின் அடையாளம் கண்டுபிடிப்பு
 
பாரீஸ்: பாரீஸில் தாக்குதல் நடத்திய மேலும் 2 தற்கொலைப்படை தீவிரவாதிகளின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அதில் ஒருவருக்கு ஏற்கனவே தீவிரவாத வழக்கில் தொடர்புள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 129 பேர் பலியாகினர். அதில் படாகிளான் தியேட்டரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி பாரீஸை சேர்ந்த உமர் இஸ்மாயில் முஸ்தபா என்பது தெரிய வந்தது.
 
இந்நிலையில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்திய மேலும் 2 தீவிரவாதிகளின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் சிரியாவைச் சேர்ந்த அகமது அல் முகமது மற்றொருவர் பாரீஸை சேர்ந்த சாமி அமீமோர். படாகிளான் தியேட்டரில் தாக்குதல் நடத்திய அமீமோர் 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி பாரீஸின் புறநகர் பகுதியான டிரான்சியில் பிறந்தவர்.
 
அவருக்கு ஏற்கனவே தீவிரவாத வழக்கில் தொடர்பு இருந்துள்ளது. அவரது குடும்பத்தார் 3 பேரை போலீசார் இன்று தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அகமது அல் முகமது உடலின் அருகே சிரியா பாஸ்போர்ட் கிடந்தது. விசாரணையில் முகமது சிரியாவில் இருந்து அகதிகளோடு அகதியாக கடந்த அக்டோபர் மாதம் கிரீஸ் வந்தது தெரிய வந்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/2-more-paris-attackers-identified-say-french-prosecutors-239952.html
Link to comment
Share on other sites

On 11/15/2015, 10:40:29, Nathamuni said:

புதிதாக எதுவும் இல்லை.

இது ஜெருசலதினை முஸ்லிம்கள் கையில் இருந்து மீட்க, கிறிஸ்தவர்கள் அன்று பல நூறாண்டுகளாக நடாத்திய சிலுவை யுத்தத்தின் தொடர்ச்சி தான்.

சரியாக ஆய்வு செய்தால், இது மதச் சண்டையே தான். நீள்கிறது, இன்னும்....

இது இலகுவில் முடியாது.

12 hours ago, குமாரசாமி said:

Französischer Kampfjet (Archivbild): Angriff auf Rakka

பாரிசில் தாக்குதல் நடந்து இரு நாட்களுக்கு பின் சிரியாவில் தர்மயுத்தம் நடத்த போர் விமானங்கள் புறப்பட்டு விட்டனவாம்

எல்லாம் சரிதான் சும்மா பதில் தாக்குதல் எண்டு சொல்லலாம் தானே எதுக்கு தர்மயுத்தம் என்றொரு அடைமொழி?

எங்குமே தர்மம் இல்லை, வெறும் யுத்தம்தான் மிச்சம்.

Link to comment
Share on other sites

பாரிஸ் தாக்குதல்:முக்கிய சூத்திரதாரி அடையாளம்?

 

 

தீவிர தேடுதல் நடவடிக்கையில் பெல்ஜியம் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
AP தீவிர தேடுதல் நடவடிக்கையில் பெல்ஜியம் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

பாரிஸ் தாக்குதல் விசாரணைகள், மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த பெல்ஜிய நாட்டு பிரஜை ஒருவரை மையப்படுத்தி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

பாரிஸ் தாக்குதல்கள் தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணைகள், மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த பெல்ஜிய நாட்டு பிரஜை ஒருவரை மையப்படுத்தி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

 

அப்தல்ஹமீத் அபாவுத் எனும் 27 வயதான இந்த நபர், பிரசல்ஸ் நகரில் இரண்டு தாக்குதாளிகள் தங்கியிருந்த அதே பகுதியில் தங்கியிருந்தார் எனவும் கூறப்படுகிறது.

சந்தேகத்துகுரிய இந்த நபர் தற்போது சிரியாவில் ஐ எஸ் அமைப்பில் உள்ளார் என பாதுகாப்பு அதிகாரிகள் நம்புகிறார்கள்.

இதனிடையே மேலும் இரண்டு தாக்குதலாளிகளை பிரெஞ்ச் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

பேட்டக்லா(ன்) இசை அரங்கில் தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலை குண்டுதாரிகளில் சமி அமிமூரும் ஒருவர் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு, தீவிரவாத சதித்திட்டம் ஒன்று தொடர்பாக முறையாக விசாரணைகளுக்கு அந்த நபர் உட்படுத்தப்பட்டிருந்தார்.

பிரான்ஸின் தேசிய விளையாட்டு அரங்கில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய நபர் அஹ்மட் அல் மொஹ்மட் என்று நம்பப்படுகிறது.

அவரது உடலுக்கு அருகில் கிடைத்த கடவுச் சீட்டு, அவருடையது என உறுதியானால் அவர் சிரியாவில் 1990ஆம் பிறந்தவர் என்பது தெரியவரும்.

http://tamil.thehindu.com/bbc-tamil/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/article7884401.ece

2j2ydqa.png

Link to comment
Share on other sites

பாரிஸ் தாக்குதல்: 24 பேர் இதுவரை கைது

 
பிரெஞ்ச் உள்துறை அமைச்சர் பெய்நார் காசநோவ்
AFP பிரெஞ்ச் உள்துறை அமைச்சர் பெய்நார் காசநோவ்

பாரிஸ் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்ச் உள்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்ச் உள்துறை அமைச்சர் பெய்நார் காசநோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

நாடு முழுவதும் 168 இடங்களில் காவல்துறையினர் முற்றுகையிட்டு முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுகளுக்கு அப்பாற்பட்டு கலாஷ்னிகோவ், தானியங்கித் பிஸ்டல்கள், ராக்கெட் ஏவும் கருவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் காசநோவ் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத ஜிகாதி அமைப்பில் உள்ளவர்களிடம், அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி விசாரணைகள் நடைபெற்று வருவதாக பிரெஞ்ச் அரசாங்கம் கூறுகிறது.

தமது நாட்டின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு எதிரானத் தாக்குதல்கள் காத்திரமாகவும் முழுமையானதுமாக இருக்கும் எனவும் பிரான்ஸின் உள்துறை அமைச்சர் காசநோவ் வலியுறுத்தியுள்ளார்.

http://tamil.thehindu.com/bbc-tamil/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-24-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article7884400.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித உயிர்கள் மதிக்கப் பட வேண்டியவை என்டாலும் மேற்குலகில் இருப்பவர்களுக்கும் இரத்தம்,வலி/வேதனை என்டால் என்ன என்று தெரிய வேண்டும். மேற்குலகில் பிறந்தால் அவர்கள் ஒன்றும் தேவ தூதர்கள் இல்லை...இறந்தது அப்பாவிச் சனங்கள் என்டாலும் இதே மக்கள் தான் தமது நாட்டு அரசு வேறு நாடுகளில் போய் தேவையில்லாமல் யுத்தம் புரிய அனுமதி கொடுத்து உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே அரசியல்...இங்கு பொதுமக்களின் பங்கு எள்ளளவும் இல்லை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.