Jump to content

"மலைகளுக்கப்பால்" - ராஜன் விஷ்வா


Recommended Posts

 

இந்த மலைகளுக்கப்பால் தான்
நான் இருக்கிறேன்
 
மலைமுகட்டில் ஊற்றெடுக்குமிந்த நதி
இந்த மலைகளுக்கப்பால்
சமவெளிகளை விளைவிக்கிறது
 
பகலிரவு காலத்தை நகர்த்தும்
உக்கிரச் சூரியன் உதிப்பதும்
இந்த மலைகளுக்கப்பால் இருந்தே
 
மேய்வன விரும்பும் புல்வெளிக்காடும்
தவழ்வன பொழியும் மழைக்காடும்
இந்தமலைகளுக்கப்பால் தான் சந்திக்கின்றன
 
ஒலியின் மொழியை நூற்றாண்டுகளாக
எதிரொலித்தபடியுள்ளன பள்ளத்தாக்குகள்
இந்த மலைகளுக்கப்பால்
 
காற்றும் நிலமும் நீரும்
ஆதிநிர்வாணாத்தோடிருக்கும்
முடிவிலா ஆரண்யமிருப்பதும்
இந்த மலைகளுக்கப்பால் தான்
 
இரவு அந்தகார சுவையுடன்
இருளாகவேயுள்ளது
இந்த மலைகளுக்கப்பால்
 
கடவுள் எல்லைக்கோடு அகதிகளென
எதுவுமேயில்லை இந்த மலைகளுக்கப்பால்
உயிர்வாழ்தலை தவிர
 
துயர்கசியும் பாடலொன்றை
சுமந்தபடி வரும் பறவைகள்
தஞ்சமடைகின்றன் இறுதியாக
இந்த மலைகளுக்கப்பால்
 
பிரபஞ்ச இருப்பின் இயக்க
சூத்திரத்தில் எதுவித சமரசமுமில்லை
இந்த மலைகளுக்கப்பால்
பூ பூக்கிறது
.
.
...சருகாகிறது
 
பெரு வெளியென விரிந்திருக்கும்
இந்த மலைகளுக்கப்பால்
உண்மையில் ஒன்றுமேயில்லை
 
அந்தரத்தில் உறைந்தபடி
இந்த மலைகளுக்கப்பால்
இருப்பது நான் மட்டுமே
 
-ராஜன் விஷ்வா
 
நந்தலாலா இணைய இதழில் இந்த கவிதை பிரசுரமாகியுள்ளது
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான மலைப்பகுதி மனச்சித்திரத்தில் உருவாகும் வண்ணம் கவிதை சொற்சித்திரமாக வந்துள்ளது. மேலும் தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

On 16/11/2015, 13:05:39, ராஜன் விஷ்வா said:
பிரபஞ்ச இருப்பின் இயக்க
சூத்திரத்தில் எதுவித சமரசமுமில்லை
இந்த மலைகளுக்கப்பால்
பூ பூக்கிறது
.
.
...சருகாகிறது
 
பெரு வெளியென விரிந்திருக்கும்
இந்த மலைகளுக்கப்பால்
உண்மையில் ஒன்றுமேயில்லை
 
அந்தரத்தில் உறைந்தபடி
இந்த மலைகளுக்கப்பால்
இருப்பது நான் மட்டுமே
 
-ராஜன் விஷ்வா
 

பிடித்த வரிகள்.

தொடருங்கள் ராஜன் விஷ்வா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ராஜன் விஸ்வா,
உங்கள் எழுத்துக்களில் முதிர்ச்சி தெரிகிறது.
நிறைய வாசிப்பீர்கள் போல இருக்கிறது.
புவியல் பாடம் கேட்பது போல இருந்தது கவிதை..

வாழ்த்துக்கள்  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தரத்தில் உறைந்தபடி

இந்த மலைகளுக்கப்பால்

இருப்பது நீங்கள் என்றால்...!

 

இப்பால் இருந்து

ரசிப்பது நானே....!

நல்ல கவிதை , ராஜன் விஷ்வா...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இருந்தும் ஒன்றுமேயில்லாத   உணர்வுடன் ஒரு மனிதன்
இப்படித்தான் எனக்கு விளங்கியது.
யாராவது ஒரு பொழிப்புரை எழுதினால் இன்னும் பல விசயங்களை விளங்கிக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபஞ்சத்தை நகர்த்தும்,

இரகசியம் கூட..,

இந்த மலைகளுக்கப்பால் தான்,

மறைந்திருக்கின்றது!

 

சிவ தாண்டவத்தின்,

சூத்திரமும் கூட,

இந்த மலைகளுக்கப்பால் தான்,

மறைந்திருக்கின்றது!

 

எனக்கும்...,

அந்த மலைகளுக்காபால்,

எட்டிப்பார்க்க ஆசை தான்..!

 

வாழ்த்துக்கள் ராஜன் விஷ்வா...!

Link to comment
Share on other sites

உயிரான உறவுகளுக்கு வணக்கம்,

சற்றே வேலைப்பளு கூடிவிட்டது, மீண்டும் பழைய படி உங்களுடன் விரைவில் இணைந்து கொள்வேன், உங்கள் அன்பிற்கு நன்றி..

என்னில் மிகு அன்புகொண்ட புங்கை அண்ணனுக்கு இதை எழுதும் போதே மனதில் சமர்ப்பணம் செய்து விட்டேன்

Link to comment
Share on other sites

அருமையான  கவிதை  விஷ்வா 

நீ இன்னும் உச்சம் பெறுவாய்.  வாழ்த்துகள் நண்பா. 

Link to comment
Share on other sites

அருமையான  கவிதை  விஷ்வா 

 

மேலும் வளரனும் வரலாற்றில் வரனும் tw_blush:

Link to comment
Share on other sites

வாழ்த்து தெரிவித்த புங்கை, சுவி, சசி வர்ணம், அஞ்சரன், கிருபன், வாத்தியார், நெர்கொலு தாசன், ஜீவன் சிவா அண்ணன்களுக்கு நன்றி...

 

நிழலி அண்ணா ஒருமுறை சொன்னதிலிருந்து கவிதைக்கு பொழிப்புரை தருவதில்லை வாத்தியாரே... tw_blush:

ஒரு மழைக்கவிதை எழுதின நேரம் பேய் மழை பெய்யுது, அடுத்த மழைக்கு வெளியிடலாம் என்டிருக்கேன் :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.