Jump to content

அயோக்கியத்தனமான தீவிரவாதம்


Recommended Posts

ஒரு தீவிரவாதப்போக்கு எதை நோக்கி இருக்கின்றது என்பதைப் பொறுத்தே விழைவுகள் இருக்கின்றது. மதம்நோக்கிய இவர்களது தீவிரவாதம் அவர்களையும் அழித்து எனையவர்களையும் அழிக்கின்றது. இவர்களுக்கு உரிய குறிக்கோள் என்பதும் இலக்கு என்பதும் அடிப்படையில் இல்லாத ஒன்றை அடித்தளமாகக கொண்டது. மதம் கடவுள் என்பது மனிதன் பிறந்து இறக்கும் வரை குழப்பமானதும் நம்பிக்கை சார்ந்ததும் தவிர உண்மையானது கிடையாது. புலிகளிடம் ஒரு நோக்ம் இருந்தது அவை வாழ்வுக்கான தேவையை அடிப்படையாகக் கொண்டது. நிலத்திற்கான போராட்டமாக அது இருந்தது. ஆனால் அதை அடைவதற்கான முயற்சியில் தீவிரவாததத் தன்மை இருந்தது. இரண்டு தரப்பும் ஒப்பிட முடியாத இலக்குகளை கொண்டது என்பதே உண்மை. ஆனால் அடிப்படையில் இல்லாத ஒன்றின் மீதான தீவிரவாதப்போக்கு இந்த இஸ்லாமிய மதசார் தீவிரவாதம்போல் தமிழர்களிடத்தில் இருக்கின்றது. அதுவானது இவர்களின் மதப்பற்றுப்போல் தமிழர்களின் சாதீயம் மீதான பற்றும் அதன் மீதான தீவிரத் தன்மையும். இத் தன்மை எப்போதும் அறிவுகுக்கு இடம் தரமாட்டாது. இஸ்லாமிய மதத் தீவிரவாதம் அவர்களை அழித்து அறிவை பயன்படுத்துபவர்களுக்கு அடிமையாக்கின்றது. தமிழர்களின் சாதீயம் மீதான தீவிரத்தன்மை எப்போதோ சமூகங்களை சிதைத்து முரண்பாடுகளை தோற்றுவித்து ஒன்றுபட முடியாத உளவியல் மன நிலையை ஸ்திரமாக்கி நாடற்றவர்களாகவும் இரண்டாம் தரப்பிரயைகளாகவும் உருவாக்கிவிட்டது. அடிப்படையில் இல்லாதஒன்றின் மீதான தீவிரத்தன்மை முட்டாள்தனமானது. ஒரு உளவியல் நோய். இவர்களுக்கு முந்திய முட்டாள்கள் தமிழர்கள். இவ்வாறான பல முட்டாள் தனங்களை ஒப்பிட முடியும் தவிர புலிகளையும் இவர்களையும் ஒப்பிட முடியாது.  

Link to comment
Share on other sites

8 hours ago, Sasi_varnam said:

அயோக்கியதனமான தீவிரவாதம் கதைச்சு கடைசியில புலம் பெயர்ந்த தமிழர் அநேகர் சுத்துமாத்தில் தான் முன் வந்தவர் என்ற கருத்தில் நிற்கிறது. 
.......... .............

மேற்குலகை தூற்றுவதை விட்டு, பணிப்பெண்களாக (அரபு) முஸ்லீம் நாடுகளுக்குப் போன பெண்களையும், இதர தொழில்களுக்குப்  போன ஆண்களையும் விசாரிச்சு பாருங்கள்.
எண்ணை இருக்கும் திமிர் இவர்களிடம் எக்கச்சக்கம். அது இல்லாமல் போனால் பூஜ்யம் தான்.
எது எப்படியோ இந்த "முஸ்லீம்" தீவிரவாதம் அடக்கப்படவேண்டும், களைத்து எறியப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பதில் கருத்தில் ஒருபங்காக தமிழர்களின் சுத்துமாத்து பற்றி கதைக்கப்பட்டுள்ளது....அதுக்கு உங்களுக்கு ஏன் பத்திக்கொண்டு வருகுது?

பணிப்பெண்களாக, தொழிலாளிகளாக செல்பவர்களுக்கு கொடுமைகள் நடப்பதை இல்லையென்று சொல்லவில்லை.

எத்தனையோ இலங்கையர்கள் சொந்தமுயற்சியால் பொருளாதாரத்தில் முன்னேறுவது மத்தியகிழக்கில் இருந்துதான். ஒழுங்கான சட்டதிட்டங்களை பின்பற்றாமல் தொழிலார்கள் அனுப்பப்படுவதே இதற்கு முக்கிய காரணம். இரண்டுவார பயிற்சிநெறியுடன் ஒழுங்கான ஒப்பந்தத்தில் அனுப்பினால் எல்லாம் சீராக இருக்கும்.

மே.உலகம் போன்று அடிச்சு காசுபறிக்கும், போன்பறிக்கும் விளையாட்டெல்லாம் இல்லை. ஏன் வீட்டுக்கதவு பூட்டத்தேவையில்லை.

 பணிப்பெண்கள் மீதான கொடுமை மேற்குலகில் இல்லையோ?  என்ன படித்த பெண்கள் அங்கு பணிப்பெண்களாக வேலை செய்வதால் எஜமானியால் ஒன்றும் செய்யமுடியாது.

 

80பதுகள் 90களில் நின்று கதைக்கக்கூடாது..... எண்ணையை விட பல உற்பத்திகள், IT, பாங்கிங், சுற்றுலாதுறை என பலவழிகளில் மத்தியகிழக்கின் முன்னேற்றம் மே.உலகிட்கு பொறுக்குமா என்ன???????       


மே.உலகை யாரும் வையவும் இல்லை கொய்யவும் இல்லை, அங்குள்ள ஓட்டை ஒடிசல்களையும்.....அதன் சுத்துமாத்துக்களையும் தான் இங்கு புட்டுவைக்கின்றோம்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.