Jump to content

பிரித்தானிய மாவீரர் நாள் - என்ன நடந்தது ?????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பணி மென்மேலும் தொடரவேண்டும்...இனத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் நாள்  ....அதனை கொச்சைப்படுத்த  ஓரிருவர் வருவினம்....கவலைப்படவேண்டாம்.... உங்கள் உன்னதமான பணிக்கு கிடைத்த பரிசுதான் ..லண்டனில் திரண்ட வீரத்தமிழர் மாபெரும் கூட்டம்....இதனைகண்டு வயிறு எரிந்தவர்களின் வெளீப்பாடே சில கருத்துக்கள்....

Link to comment
Share on other sites

ஹால் வாடைக்கு எடுக்கும் போது  எத்தனையாயிரம் மக்கள் கலந்து கொள்வார்கள் என நிகழ்வு ஏற்ப்பாட்டாளர்களால்   அவர்களுக்கு கூறி இருப்பார்கள் தானே/???

 

இங்கு 100 ஈரோக்கு  ஒரு ஹால் புக் பன்னினாலும் ஒரு ஓப்பந்தம் போட்டப்படும்   அதே போல் சேதாரங்களுக்கும் இன்ஸுரன் போடப்படும்...... ஹோம்ரூல்ஸ்  என ஏதாவது  பேப்பர் தந்து இருப்பார்கள் தானே/???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/11/2015 02:54:56, பெருமாள் said:

ஒட்டுக்குழுக்கள்,சொறிலன்காவின்காவடிகளுக்குதான் தற்போது மாவீரர் நிகழ்வின் கணக்கு விபரங்கள் ,எவரால், எத்தனைபேரால் இயங்குது என்றவிபரங்கள் அதி முக்கியமாய் தேவைபடுது. இதுகளுக்கு பதில் அழிக்காவிடின் ஒன்றும் குறைந்து போக போவதில்லை  மெசொ .

 

ஏதாவது ஒரு கேள்வி கேட்பதற்கு

ஆகக்குறைந்த தகுதி

அதில் ஈடுபாடாகவாவது  இருக்கணும்

இங்கே அது தான் கிடையாதே

அப்புறம் எதுக்கு கேள்வி மேல் கேள்வி..??

நான் ஒவ்வொரு வருடமும் மாவீரர் மண்டபத்துக்கு பணம் அன்பளிப்பு செய்பவன்

எனக்குத்தெரியும்

எதற்கு கொடுக்கின்றேன்

என்ன செய்கிறார்கள் என்று.

 

Link to comment
Share on other sites

மாவீரர் நாள் கணக்குகள் சரியாகக் காட்டப்படாது இருப்பது நேர்மையற்றதாயினும் மாவீரர்நாளை ஒழுங்கமைத்து இத்தனை ஆயிரம் பேர்களை ஒன்று திரட்ட இவர்களால் மட்டுமே முடியும். இன்னும் இலங்கை அரசுக்கு அச்சுறுத்தலாக இருப்பது இந்த தமிழர்கள் ஒன்று கூடுவதும் உணர்வுடன் நிகழ்வுகளை நடாத்துதலுமே. இதையும் நாம்கைவிட்டால் எம்மவர் எல்லாம் மறந்து தாம் தம் வேலையைப் பார்ப்பதை யாராலும் தடுக்கமுடியாது போய்விடும். அத்துடன் இங்கு இப்படியான நிகழ்வுகள் தொடர்வதனால்த்தான் அதனை முறியடிக்க இலங்கை அரசு அங்கு சில தார்த்தல்களைச் செய்கிறது. நாட்டுக்குக் கொடுப்பவர்கள் கொடுத்துக்கொண்டு இருக்கக் கதைப்பவர்கள் கதைத்துக்கொண்டு மட்டுமே இருக்கின்றனர். தமிழ் இனம் இருக்கும் வரை நாம் எந்தத் தடைவரினும் எத்தனை முரண்பாடுகள் இருப்பினும் மாவீரரை நினைவுகூர்ந்து நிர்ப்பது அவசியம். செலவு குறைவு என்று வெட்டவெளியில் செய்வோமாக இருந்தால் காற்று மழை குளிர் என்னும் புறக் காரணிகளால் மக்கள் வராமல் நிற்ப்பார்கள். இது நிலையான ஒரு இடம் என்பதனாலேயே வருகின்றனர். பிழை பிடிக்க ஆரம்பித்தால் எங்கும் பிடிக்கலாம். -மெசோ

இத்தனை பேரை ஒன்று திரட்ட இவர்களால் மட்டுமே முடியும் - சினிமா இயக்குனர்கள்  நல்ல கதையுடன் போக தயாரிப்பாளர் நாலு பாட்டை போடு ,ஆறு சண்டை போடு குளியல் சீன் பாலியல் வல்லுறவு சீன் போடு அப்பதான் மக்கள் வருவார்கள் என்பது போலிருக்கு உங்கள் கருத்து .ஆக்கபூர்வமாக ஒருவிடயத்தை செய்வதுதான் முக்கியமே ஒழிய எத்தனை பேர்கள் வந்தார்கள் என்ற எண்ணிக்கை அல்ல .

இலங்கை அரசிற்கு அச்சுறுத்தலாக இருப்பதுவும் இந்த தமிழர்கள் ஒன்று கூடுவதும் உணர்வுகளுடன் நிகழ்வுகளை நடத்தலுமே - நீங்களுமா ?

யுத்தம் நடக்கும்போது ஒருவருடமாக உலகம் முழுக்க வீதியில் இறங்கியும் ஒரு துரும்பை கூட அசைக்க முடியவில்லை இனியும் முடியாது .புலம்பெயர்ந்தவர்கள் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லவில்லை தாம் வசிக்கும் நாட்டில் இருக்கும் அரசின் ஊடாக இலங்கை அரசிற்கு கொடுக்கும் அழுத்தமே ஓரளவு உதவும் .  அதை விட்டு புலம் பெயர்ந்த நாட்டில் கூடும் இந்த கூட்டங்களை  இலங்கை அரசு என்றுமே கண்டுகொள்ளப்போவதில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுக்க வீதியில் இறங்கியும் ஒரு துரும்பை கூட அசைக்க முடியவில்லை /  புலம் பெயர்ந்த நாட்டில் கூடும் இந்த கூட்டங்களை இலங்கை அரசு என்றுமே கண்டுகொள்ளப்போவதில்லை .

உண்மை... ஆகவே 

நீங்களும் அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் அர்ஜுன் ..

பிரச்சினை அதோடு முடிந்து விடும். அவ்வளவே!!!

Link to comment
Share on other sites

சமூக பிரக்ஞை என்று ஒரு சொல்லு இருக்கு கேள்விப்பட்டீர்களோ தெரியாது .

யாழ்பாணத்தில் குப்பை வீதியெங்கும் நிறைந்திருந்தால் அது யாழ் மாநகர சபை -யாழ்பாண மக்கள் சம்பந்தபட்டது என்று இருக்காமல் எதையும் செய்தால் நல்லது சிந்திகின்றம் பாருங்கோ அதற்கு பெயர் தான் சமூக பிரக்ஞை .

எவன் எக்கேடு கேட்டாலென்ன எவன் செத்து துலைந்தலென்ன என்று வாழ்பவர்கள் தான் உலகில் அதிகம் நான் அப்படி இல்லாததுதான் எனது பிழையோ தெரியாது சசி .

Link to comment
Share on other sites

அச்சா, அண்ணனுக்கு மாவீரர் நாளில் இவ்வளவு அக்கறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Surveyor said:

அச்சா, அண்ணனுக்கு மாவீரர் நாளில் இவ்வளவு அக்கறை.

தமிழருக்கு ,விடுதலைக்கு ,என்ன விசய்ம் ,நிகழ்வு நடந்தாலும் அண்ணன் இப்படித்தான் கதைப்பார்....ஒருநாளும் சார்பாக கதைக்க மாட்டார்....வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் மாதிரி...அவரைக் கண்டுக்காதீங்க...

Link to comment
Share on other sites

அந்த மண்டபம் மாவீரர் நாள் நடாத்துவதற்கு உகந்த இடம் இல்லை . எக்செல் மண்டபத்தை விட விலை குறைவாக இருக்கலாம். அதன்  அமைப்பு  உள்கட்டமைப்பு  களியாட்ட விழாவுக்கெ சரியானது. போய் இருப்பது கீழே வருவது எல்லாம் மிகவும்  சிரமம்..

உண்மையில் பிரான்ஸ் தாக்குதலின் பின்னனியாக இருக்கலாம்  சரியான பாதுகாப்பு கெடுபிடி .    மற்றும்படி  ஒழுங்கமைத்தவர்களின் தவறு என்று ஒன்றும் இல்லை  . அவர்களும் எதிர்ப் பார்க்காத ஒன்று. . உண்மையில் எக்செல் மண்டபம் போல்  ஒரெ சமதரையில்  நிகழ்வுகள் நடாத்துவதே இந்நிகழவுக்கு  பொருத்தமாக இருக்கும்.   மாவீரர் துயிலும் இல்லப்பாடல் பாடல் பாடி முடிந்தவுடன்  பூப் போட விளக்கேற்ற  , வெளியேறுபவர்கள் வெளியேற  சமதரை மண்டபமே சரியானது.

உண்மையாகவே பாதுகாப்பாளர்கள் வெளியே வந்து பார்த்தவுடன் பயந்து விட்டார்கள், மக்கள் வந்து  குவிந்து  கொண்டே இருக்கிறார்கள். ஒரே ஒரு மெட்டல்   செக்கரை வைத்து தான்  பரி சோதித்தார்கள். கடைசியில் அவர்கள் கையை மீறி விட்டது  விடமாட்டோம் என்றே   சொல்லி விட்டார்கள்..

இலண்டனில் இப்படியான ஒன்று கூடல் மண்டபம் எடுப்பது கஸ்டம் தான்.

தாயகத்தில் இரும்புபிடிக்குள் இருக்கும் மக்களால்  தங்கள் போராளிகளை  தங்கள் வீரர்களை, தங்கள் பிள்ளைகளை நினைவு கூற முடியாத நிலையில் புலம் பெயர் வாழும் நாம் தான்  இதனை ஒரு கடமையாக எற்று வருடத்தில் ஒரு முறை  அவர்களுக்காக ஒன்று கூடுதல் எமது கடமையாகும்.,நன்றிக்குரியவர்களாவோம்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அர்ஜுன் சரியாக சொன்னார் குப்பைகளை யார் கொட்டுவது என்று .....அவருக்கு புரிந்தால் சரி ..
இது எமது புனிதர்களை நினைவு கூறுவதோடு உலகுக்கு சொல்லும் செய்தி கூட ....மக்கள் ஒன்று பட்டால் சாதிக்க முடியும் ....குழப்பிகளுக்கு சொல்லி புரிய வைக்க தேவை இல்லை ....அவர்கலால் புரியவும் முடியாது ...
குழப்பிகளின் நோக்கம் குழப்புவதே ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.