Jump to content

சரணடைந்த புலிகளின் தலைவர்களை சிறிலங்காப் படைகள் திட்டமிட்டே சுட்டுக்கொன்றன: எரிக் சொல்ஹெய்ம


Recommended Posts

3 hours ago, நேசன் said:

கேடு கெட்ட தமிழன் தான் பெயில்  .புலிகள் தமிழர், தமிழர் புலிகள்  இதை எவன் வந்தாலும் அழிக்க முடியாது. வரலாறு இதுதான்

புலிகள் குண்டு வைத்ததற்காக புலிகள் தமிழர் - தமிழர் புலிகள் என்பதை அன்றே புரிந்து கொண்டு கண்ட தமிழரை சுட்டுத்தள்ளி எஞ்சியவர்களை சிறையில் போட்ட சிறி லங்கா அரசுக்கு நீங்கள் இப்படியா வக்காலத்து வாங்குவது ? போர்க்குற்ற விசாரணையில் ஸ்ரீ லங்கா அரசு சொல்வதும் முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழர் புலிகள் - புலிகள் தமிழர் , ஆகவே எல்லாரும் போரில் இறந்தார்கள் என்பதே. நீங்கள் ஸ்ரீ லங்கா அரசு சார்பாக சாட்சியம் அளிக்க அழைக்கப்படலாம்.

 

Link to comment
Share on other sites

  • Replies 114
  • Created
  • Last Reply

அதைவிட விட பகிடி .

இப்ப புலிகள் இல்லை தீர்வை தரலாம் என்று ஒரு பகுதியும் 

முழு தமிழர்களுமே புலிகள் என்று இன்னொரு பகுதியும் இப்பவும் அடிபடினம் 

புலிகள் என்றுமே ஜனநாயக ரீதியில் தமிழர்கள் மனங்களை வென்றவர்கள் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி...சரி துள்ளாதேங்கோ.....கடைசியாய் நடந்த லெக்சனுக்கு பிறகு கூட்டமைப்பு இண்டுவரைக்கும் ஏதாவது செய்ததாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தெரியேல்லை....இன்னும் கொஞ்ச நாளையாலை தெரியுமெண்டு நினைக்கிறன். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சரி...சரி துள்ளாதேங்கோ.....கடைசியாய் நடந்த லெக்சனுக்கு பிறகு கூட்டமைப்பு இண்டுவரைக்கும் ஏதாவது செய்ததாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தெரியேல்லை....இன்னும் கொஞ்ச நாளையாலை தெரியுமெண்டு நினைக்கிறன். :cool:

சீறத்தொடங்கியாச்சு

ஐனநாயகம் இனித்தான்...

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

சீறத்தொடங்கியாச்சு

ஐனநாயகம் இனித்தான்...

இதை விட பெரிய கொமடி இந்த ஆறு வருசமாக மக்கள் யாரும்  போர் மூலம் துன்பப்படவில்லையாம் அதுவே சாதனையாம்....   அப்ப அங்கை ஆமிக்காறன் ஏன் துவக்கோடை நிக்கிறான் எண்டு தான் எனக்கு விளங்க இல்லை....  

புலிகளின் துவக்காலை வராத ஜனநாயகம் ஆமிக்காறன் துவக்காலை வந்து இருக்காம் என்டுறார் இங்கை ஒரு அ(வெ)ண்ணை... 

60% வோட்டு போட்டு அதிலை 40% வாக்கு வாங்கி இல்லாதவனிட்ட இருந்து புடுங்கி இருக்கிறவனுக்கு கொடுக்கிற ஜனநாயகம் பற்றி நிறையவே நான் இங்கை தெரிஞ்சு கொள்ளவேணும்...

Link to comment
Share on other sites

ஜனநாயகம் என்றாலே சிலருக்கு அலர்ஜி குறிப்பாக புலிகள் அவர்களது விசுவாசிகளுக்கு ஆனால் அவர்கள் ஓடிப்போனதும் அங்கு வாழ்கையை அனுபவிப்பதும் ஜனநாயக நாடுகளில் தான் .

இப்போ நாட்டில் சற்று ஜனநாயகம் திரும்ப அவர்கள் படும்பாடு இருக்கே சொல்லி மாளாது .நாட்டில் சுமூக நிலை வரக்கூடாது என்பதுதான் இவர்கள் பிரார்த்தனை .சனம் சந்தோசமாக இருப்பது தாங்கள் இவ்வளவு நாளும் சொல்லி வந்தது பொய்யாகிவிட்டது என்பதுதான் அவர்களுக்கு மக்கள் நிம்மதியாக இருப்பதை விட முக்கியம் .

சிங்கள அரசு  மாறிவிட்டது என்பது அல்ல அதன் பொருள் இனியும் தாமதிக்கமுடியாது .ஆறு வருடங்கள் அல்ல ஒரு வருடம் தான் மைத்திரி ஆட்சி வந்து ,பல மாற்றங்கள் வந்திருக்கு இன்னமும் பல வரவேண்டியிருக்கு ஏன் உடனே அவற்றை செய்ய முடியாமல் இருக்கு என்றால் அதற்கு பதில் 

மகிந்தா இப்ப முத்திரை சேகரித்துக்கொண்டோ வீட்டுத்தோட்டம் செய்துகொண்டே இருக்கின்றார் என்ற எரிக் சொல்கையும் சொன்னதை விட நல்ல பதில் இல்லை .அதே போல் தான் சிங்கள அரச யந்திரத்தின் நிலையும் .

புதிய அரசுஉடனடி மாற்றங்களை கொண்டுவந்து தமது அரசு கவுண்டால் தமது நிலை என்னவென்று அவர்களுக்கு நன்றாக தெரியும் அதனால் ஒவ்வொரு அடியையும் கவனமாகத்தான் வைப்பார்கள் .

முப்பது வருடங்கள் இவ்வளவு அவலங்களுக்குள் வாழ்ந்த மக்கள் இன்னமும் சிறிது காலம் பொறுப்பதில் ஒன்றும் ஆகிவிடாது .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தது இன்றும் வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும் உங்கள் கனவு என்றும் நிறைவேறப்போவதில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும் .

Link to comment
Share on other sites

அண்ணை இந்த ஜனநாயகத்தாலை தமிழ் மக்களுக்கு நீங்கள் ஆற்றிய திருத்தொண்டை பட்டியல் இட முடியுமா..?  

ஆனால் உங்கட ஜனநாயகத்தாலை கிடைத்த இன்னல்களை என்னாலை பட்டியல் இட முடியும்...  

சவாலாகவே கேக்கிறன்...  

பச்சை போட எண்டு நீங்கள் கூட்டி கொண்டு திரிகிற ஜால்றாக்களும் பங்குபற்றலாம்...   அறிவு இருந்தால்...  இல்லை ஜால்றா மட்டும் எண்றால் அதுவும் பறவாய் இல்லை..

Link to comment
Share on other sites

இந்த அரசின் போக்குடன் மகிழ்ச்சியாக இருப்பதனை
அங்கீகரிக்கவேண்டியது நான்மட்டுமல்ல. தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும்
பேரளவில் திரண்டு வாக்களித்தமையினாலேயே இந்த அரசு பதவிக்கு வந்தது.
பெரும்பான்மையான சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்சவிற்கே
வாக்களித்திருந்தனர். ஆகவே, தமிழ், முஸ்லிம் மக்களது அளப்பரிய
ஆதரவினாலேயே ரணிலும், சிறிசேனவும் தற்போது ஆட்சியிலிருக்கிறார்கள். நான்
மட்டுமல்ல, இலங்கையிலுள்ள சிறுபான்மையினர் அனைவருமே இந்த அரசினை
வரவேற்றிருக்கின்றனர். ஆனால், இந்த அரசு இப்போதுதான் தமது ஆட்சியை
ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டிலிருந்து பாரிய முன்னேற்றங்களை
அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. மக்கள் தமது கருத்துக்களை
வெளியிடக்கூடியதாக இருக்கிறது. பொருட்களின் விலை
குறைக்கப்பட்டிருக்கிறது. ஊடக நிலைமைகளில் பாரிய முன்னேற்றம்
ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்
வரவேற்கக்கூடியவை. ஆனால், வடக்கில் பாரியளவில் நிலைகொண்டிருக்கிறது.
மக்களின் நிலங்களிலும், வீடுகளிலும் நிலைகொண்டிருக்கிறது. இது
குறைக்கப்படவேண்டும். இன்னமும் பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று
வருகின்றன. அவை நிறுத்தப்படவேண்டும். கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
இந்த விடயங்களில் மேற்கொள்ளப்படுவதற்கு இன்னமும் நிறைய இருக்கின்றன.
ஆனால் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

-இது எரிக் சொல்கேயும் சொன்னது .இதுதான் பெரும்பான்மையினரின் கருத்தும் கூட .

ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கவே உங்களுக்கு அருகதையில்லை .இதை ஒருக்கா வாசியுங்கோ ,

"2009 இரணைப்பாலை .கடுமையான போர் நடந்துகொண்டிருக்கு பயிற்சியற்ற பிள்ளைகள் களமுனைக்கு அனுப்பபட்டுக்கொண்டிருக்க அனுபவமுள்ளவர்களோ தளபதிக்கும் குடும்பத்திற்கும் பாடுப்பட்டுகொண்டிருந்தார்கள் .போதாதற்கு இயக்க வாகனங்கள் ,எரிபொருட்கள் .தளபதியின் வீட்டிற்கு இரண்டு "கன்ரர் " வாகனங்களில் வீட்டு தளபாடங்கள் ,கட்டில் .மேசை ,உள்ளிருந்தே இயக்கம் விளையாட்டுக்கார் ,சின்ன சயிக்கில் முதலான பொருட்கள் வந்து இறங்குகின்றன .தொடர்ந்து ஒரு உழவு யந்திரமும் பெட்டிகளில் கடைக்குரிய சாமான்களுடன் வந்தது .அவர் கலியாணம் முடித்தது பணக்கார குடும்பமாம் வடிவான பெட்டை தாய் தகப்பன் வசதியாகத்தான் வைத்திருந்தவர்களாம் --ஊழிக்காலம் அத்தியாயம் 29  "

அடுத்த வரி எழுதி அறியாமையால் உயிர்விட்டவர்களை காயப்படுத்த விரும்பவில்லை . 

 

Link to comment
Share on other sites

56 minutes ago, காத்து said:

அப்ப அங்கை ஆமிக்காறன் ஏன் துவக்கோடை நிக்கிறான் எண்டு தான் எனக்கு விளங்க இல்லை....  

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இவ்வருடம் 6 மாதங்கள் தாயகத்தில் உள்ளேன் ஐயா. யாழில் இன்றுவரை இராணுவத்தை ஆயுதத்துடன் நான் பார்க்கவில்லை. பொலிஸ் கைத் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். கடந்த ஹர்த்தாலின் போது பொலிஸ் கமாண்டோக்கள் ஆயுதம் தரித்திருந்தார்கள். வித்யாவிற்கான ஹர்த்தாலில் ஏற்பட்ட குழறுபடிகளால் இந்த முன்னேற்பாடாம்.

கொஞ்சம் யதார்த்தத்தையும் கருத்தில் எடுங்கள்.

Link to comment
Share on other sites

கேட்டது ஏதோ அர்ச்சுண் சொல்லும் பதில் ஏதோ... நான் இறுதி போரை பற்றி கேக்கவில்லை...  தமிழர் இறுதி போருக்கு வர எது காரணம் எண்று கேக்கிறேன்...

இலங்கை ஒரு சமதர்ம மக்களாட்சி நாடு... தனித்த ஜனநாயக விளுமியங்களை உள்ளடக்கியதல்ல.... அதில் சமதர்மம் என்பது தான் முன்னிலை படுகிறது...  

நீங்கள் மேற்கு நாடுகள் என்பனவற்றில்  வாயினால் ஜனநாயகம் எண்று சொல்லும் அமெரிக்காவோ பிரித்தானியாவோ, இல்லை பிரான்ஸ்..  முடியாட்சியின் கீழான பாராளுமண்று, கூட்டாட்சியினூடு அதிபர் ,  சமதர்ம  ஆட்ச்சி விழுமியங்களை மட்டுமே கொண்டது...

இதிலை இலங்கையில் சமதர்மம் (சோசலீம்)  பொருந்திய இந்த  நாட்டில் குடிகள் சமமாக நடத்த படவேண்டும் எண்றே   விகிதாசாரம் அங்கு   திணிக்கப்பட்டது...   நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டு பூர்வீகமாக தமிழர் நிலன்கள்  சிங்களவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன...    தமிழர் நிலங்களில் சிங்கள காவல்துறையின  நிறுத்தப்பட்டனர்... 

ஜனநாயக விழுமியங்களாய்  சிங்களம் மட்டும் ஆட்சி மொழியானது... பொத்தம் ஆட்ச்சி மொழியானது..  சிங்க கொடியில் தமிழர்கள் கெஞ்சி கேட்டதுக்கு இணங்க ஒரு கோடு கொடுக்கப்பட்டது,,,

இதில் தமிழர்கள் மட்டும் பாதிக்க பட்டபோதே தமிழர்கள் ஆயுதங்களை கையில் எடுத்தனர்..

 

15 minutes ago, ஜீவன் சிவா said:

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இவ்வருடம் 6 மாதங்கள் தாயகத்தில் உள்ளேன் ஐயா. யாழில் இன்றுவரை இராணுவத்தை ஆயுதத்துடன் நான் பார்க்கவில்லை. பொலிஸ் கைத் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். கடந்த ஹர்த்தாலின் போது பொலிஸ் கமாண்டோக்கள் ஆயுதம் தரித்திருந்தார்கள். வித்யாவிற்கான ஹர்த்தாலில் ஏற்பட்ட குழறுபடிகளால் இந்த முன்னேற்பாடாம்.

கொஞ்சம் யதார்த்தத்தையும் கருத்தில் எடுங்கள்.

இராணுவமே இல்லை என்கிறீகளா இல்லை இருக்கிறார்கள் வெளியில் வருவது இல்லை என்கிறீர்களா...? தயவு செய்து விளக்கமாக சொல்லவும்...

தாயகம் என்பது எது யாழ்ப்பாணமா வன்னியா இல்லை  கிழக்கில் திருகோணமலை மட்டக்களப்பு  அம்பாறை...??

கொழும்பில் இருந்து நீங்கள் அங்கு போகும் வளியில்  எந்த இராணுவ முகாமும் இல்லை அங்கே இராணுவம் ஆயுதங்களோடை இல்லை என்பது ஆச்சரியமான விசயம்...  

 

56 minutes ago, arjun said:

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தது இன்றும் வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும் உங்கள் கனவு என்றும் நிறைவேறப்போவதில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும் .

இதில் தாங்கள் எந்த வகையில் வித்தியாசமானவர் என்பது எனக்கு புரியவில்லை...  

எனக்கு  என்ன கனவு எண்று ஏதும் தெரியாத போதும் எனது கனவை கண்டு கொண்டதாக நீங்கள் நினைப்பது தங்களின் அறிவை அளக்க போதுமானதாக இருக்கிறது...  

இதுக்கு பச்சை போட்டு தங்களை அடையாளபடுத்தி கொண்ட இருவரின் காள்புணர்வையும் அறிந்து கொள்ள முடிகிறது... 

அடையாளப்படுத்தியமைக்கு நண்றி..

Link to comment
Share on other sites

8 minutes ago, காத்து said:

இராணுவமே இல்லை என்கிறீகளா இல்லை இருக்கிறார்கள் வெளியில் வருவது இல்லை என்கிறீர்களா...? தயவு செய்து விளக்கமாக சொல்லவும்...

இராணுவம், கடற்படையினர், விமானப்படையினர் சாதாரணமாக யாழில் நடமாடுகிறார்கள் ஆனால் ஆயுதமின்றி. சென்றி கிடையாது. எந்தவிதமாகவும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதில்லை. அவர்கள் தமது சொந்த தேவைகளிற்காக தனிப்பட்ட முறையில் யாழிற்கு வருகிறார்கள். உதாரணமாக வங்கி, தபால் நிலையம், புகையிரத நிலையம் போன்றவற்றில் இவர்களை அதிகம் காணலாம். முன்னர் போன்று றக்கில் வந்து குதிப்பதெல்லாம் இப்ப இல்லை. சைக்கிள், மோட்டார் சைக்கிளில் வருகிறார்கள். சீருடையை அணிந்திராவிட்டால் இவர்களைப் பொதுமக்களிடமிருந்து வேறுபடுத்த முடியாது.

தாயகம் என்பது எது யாழ்ப்பாணமா வன்னியா இல்லை  கிழக்கில் திருகோணமலை மட்டக்களப்பு  அம்பாறை...??

யாழ்ப்பாணம்

கொழும்பில் இருந்து நீங்கள் அங்கு போகும் வளியில்  எந்த இராணுவ முகாமும் இல்லை அங்கே இராணுவம் ஆயுதங்களோடை இல்லை என்பது ஆச்சரியமான விசயம்...  

ஆச்சரியமான விடயம்தான் ஆனால் அதுதான் உண்மை.. இராணுவ முகாம்கள் உண்டு. இராணுவமும் உண்டு. ஆனால் ஆயுதத்துடன் இல்லை. 

சோதனைச் சாவடிகளும் இல்லை. நான் இங்கிருக்கும் காலத்தில் யாருமே என்னை மறிக்கவுமில்லை, அடையாள அட்டை கேட்கவுமில்லை.

மாற்றங்கள் நிறையவே நடந்துள்ளது. நடந்து கொண்டுமிருக்கின்றது. ஒரு சிறிய தகவல் உங்களிற்காக: பால்ய நண்பன் (கிராம சேவகர்) ஒருவரைச் சந்தித்திருந்தேன். இரு கிழமைக்கு முன்னர் வசாவிழான் பகுதியில் ஏறத்தாள 3 ஏக்கர் காணியை யாருக்கும் தெரியாமல் விடுவித்திருந்தார்கள் என்றான். வசாவிழான் கிராம சேவகரிற்கு மட்டும் அறிவித்துவிட்டு ஊடகங்களிற்கு செய்தி போகக் கூடாது என்பதும் அறிவுறுத்தப்பட்டதாம்.

பேரினவாதிகளை எப்படியெல்லாம் அரசே சமாளிக்க வேண்டி உள்ளதென்று பாருங்கள். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, காத்து said:

கேட்டது ஏதோ அர்ச்சுண் சொல்லும் பதில் ஏதோ... நான் இறுதி போரை பற்றி கேக்கவில்லை...  தமிழர் இறுதி போருக்கு வர எது காரணம் எண்று கேக்கிறேன்...

"பயங்கரவாதம்"

Link to comment
Share on other sites

3 minutes ago, வாலி said:

"பயங்கரவாதம்"

அதிலை அரசபயங்கரவாதமும் அடக்கம் தானே...?   அதை தானே நாங்களும் சொல்கிறோம்... 

இல்லை புலி மட்டும் தான் காரணம் என்பீர்களோ..

ஜீவன்...  இராணுவம் என்பதுக்கு வேற பெயர் என்ன  தெரியுமா...?  ஆயுத படையினர், பாதுகாப்பு படையினர்...  

பொண் புலிகள் இடுப்பில் பட்டியுடம் யாழ்ப்பாணத்துக்குள் உலாவியது போர் குற்றம் என்பது உங்களுக்கு தெரியுமா...?  சீருடையுடன் இராணுவம் ஆனால் ஆயுதம் இல்லை என்கிறீர்கள்...  அவர்களை இராணுவமே இல்லை எண்று சொல்லி இருந்தாலும் நான் நம்பி இருப்பேன்... 

உண்மையாக தான்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, காத்து said:

அதிலை அரசபயங்கரவாதமும் அடக்கம் தானே...?   அதை தானே நாங்களும் சொல்கிறோம்... 

இல்லை புலி மட்டும் தான் காரணம் என்பீர்களோ..

இதைத்தான் இதைத்தான் எதிர்பார்த்தன்.  முன்னைய அரசாங்கங்கள் எல்லாம் தமிழர் மீது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டன என்பது வெள்ளிடை மலை! ஆனால் அதற்கு ஈடாக புலிகளின் பயங்கரவாதமும் இருந்தது!  அதனால் தான் "புலிகளின் பயங்கரவாதம்" என்று குறிப்பிடாமல் "பயங்கரவாதம்" என்று மட்டும் ஒற்றைச் சொல்லில் பதில் எழுதினேன். அந்தப் பயங்கரவாதத்தை இருதரப்பும் மாறிமாறி ஒருவர் மீதும் எல்லாவறூக்கும் அதிகமாக அப்பாவிப் பொதுமக்கள் மீதும் செய்துகொண்டே இருந்தன.  இறுதி யுத்த காலத்தில் அரசு யுத்தமற்ற  வலயங்களை அறிவித்து மக்களைப் போகுமாறு கூறியது பின்னர் அங்கு தங்கியிருந்த மக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நிகழ்த்தியது, ஆனால் யுத்தமற்ற வலயமெனக் கூறப்பட்ட இடங்களுக்குள் போய் புலிகளும் தமது தாக்குதல்களை அரச படைகள் மீது தாக்கினர். இருதரப்பும் மாறிமாறி குற்றம் சுமத்தினர். ஆனால் கொத்துக்கொத்தாகக் காவுகொள்ளப்படது அப்பாவிப் பொதுமக்கள்தான். 

 
Link to comment
Share on other sites

16 minutes ago, காத்து said:

 சீருடையுடன் இராணுவம் ஆனால் ஆயுதம் இல்லை என்கிறீர்கள்...

நீங்கள் வசிக்கும் நாட்டில் இராணுவத்தினரைக் கண்டிருப்பீர்கள்தானே. அதேபோன்றுதான் இப்போது இங்கேயும்.

 

Link to comment
Share on other sites

4 minutes ago, வாலி said:

இதைத்தான் இதைத்தான் எதிர்பார்த்தன்.  முன்னைய அரசாங்கங்கள் எல்லாம் தமிழர் மீது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டன என்பது வெள்ளிடை மலை! ஆனால் அதற்கு ஈடாக புலிகளின் பயங்கரவாதமும் இருந்தது!  அதனால் தான் "புலிகளின் பயங்கரவாதம்" என்று குறிப்பிடாமல் "பயங்கரவாதம்" என்று மட்டும் ஒற்றைச் சொல்லில் பதில் எழுதினேன். அந்தப் பயங்கரவாதத்தை இருதரப்பும் மாறிமாறி ஒருவர் மீதும் எல்லாவறூக்கும் அதிகமாக அப்பாவிப் பொதுமக்கள் மீதும் செய்துகொண்டே இருந்தன.  இறுதி யுத்த காலத்தில் அரசு யுத்தமற்ற  வலயங்களை அறிவித்து மக்களைப் போகுமாறு கூறியது பின்னர் அங்கு தங்கியிருந்த மக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நிகழ்த்தியது, ஆனால் யுத்தமற்ற வலயமெனக் கூறப்பட்ட இடங்களுக்குள் போய் புலிகளும் தமது தாக்குதல்களை அரச படைகள் மீது தாக்கினர். இருதரப்பும் மாறிமாறி குற்றம் சுமத்தினர். ஆனால் கொத்துக்கொத்தாகக் காவுகொள்ளப்படது அப்பாவிப் பொதுமக்கள்தான். 

 

புலிகளை  பொறுப்பில் விடவோ தலைமைத்துவத்தில் அமரவைக்கவோ காரணம் என்ன யாரின் தவறு அது எண்று எண்றாவது யோசித்து பார்த்து இருப்பீர்களா...???

இந்திய இராணுவம் வரும் வரை புலிகளுக்கு இருந்த ஆதரவு என்ன என்பதை அறிவீர்களா....??   இந்திய இராணுவதுக்கு எதிராக செய்த மறியல்களுக்கு வந்த மக்களை விட  அவர்களை கையசைத்து வரவேற்ற மக்கள் அதிகம்...

இந்த நிலை மாற காரணம் யார்...??    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, காத்து said:

புலிகளை  பொறுப்பில் விடவோ தலைமைத்துவத்தில் அமரவைக்கவோ காரணம் என்ன யாரின் தவறு அது எண்று எண்றாவது யோசித்து பார்த்து இருப்பீர்களா...???

இந்திய இராணுவம் வரும் வரை புலிகளுக்கு இருந்த ஆதரவு என்ன என்பதை அறிவீர்களா....??   இந்திய இராணுவதுக்கு எதிராக செய்த மறியல்களுக்கு வந்த மக்களை விட  அவர்களை கையசைத்து வரவேற்ற மக்கள் அதிகம்...

இந்த நிலை மாற காரணம் யார்...??    

இந்திய இராணுவம் வந்து போகும் வரை யாழ் பல்கலைக் கழகத்துக்குள் புலிகள் கால்வைக்கக்கூட முடியாது இருந்தது என்பதனையும் அறிவோம்! 

Link to comment
Share on other sites

3 minutes ago, வாலி said:

இந்திய இராணுவம் வந்து போகும் வரை யாழ் பல்கலைக் கழகத்துக்குள் புலிகள் கால்வைக்கக்கூட முடியாது இருந்தது என்பதனையும் அறிவோம்! 

பிறகென்ன... இதுதான் உண்மை.. 

 தமிழ் மக்களிடம் புலிகளை ஓரங்கட்ட வைக்க முடியாத  அர்ப்பணிப்பு இல்லாத தமிழர் தலைமைகளை குற்றம் சொல்லுங்கள்... கிடைத்த சந்தர்பத்தை நழுவ விட்டவர்கள் அவர்கள்தான்.... 

இதிலை அர்சுணும் அடக்கம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உண்மை விஜிதரன், செல்வி, ராஜினி போன்ற பல்கலைக் கழகச் சமூகத்தவரை மண்டையில் போட்டதும். மற்றும் சிலரை அன்பாக விசாரித்து உபசரித்ததும் தானா? இந்திய இராணுவம் செய்த அடாவடிகளால் புலிகள் செய்த அடாவடிகளை மறந்து மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதே உண்மை. அதன் பின்னரும் அவர்கள் திருந்தவில்லை என்பதே திருத்தமான உண்மை!

Link to comment
Share on other sites

8 minutes ago, வாலி said:

என்ன உண்மை விஜிதரன், செல்வி, ராஜினி போன்ற பல்கலைக் கழகச் சமூகத்தவரை மண்டையில் போட்டதும். மற்றும் சிலரை அன்பாக விசாரித்து உபசரித்ததும் தானா? இந்திய இராணுவம் செய்த அடாவடிகளால் புலிகள் செய்த அடாவடிகளை மறந்து மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதே உண்மை. அதன் பின்னரும் அவர்கள் திருந்தவில்லை என்பதே திருத்தமான உண்மை!

மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை விட புலிகளை விடவும் மற்றவர்கள் கேடு கெட்டவர்களாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை...   மக்கள் புலிகளை சகித்து கொள்ள பழகிகொண்டார்கள்...

தீவிர TELO  ஆதரவாளனாக இருந்த நான் முன்னம் முன்னம் போன புலிகளின் கூட்டம்  திலீபன் அவர்களின் உண்ணாவிரதம்...  என்னை போல தான் பலரும் சகிப்பு தன்மையின் உச்சத்தில்  புலிகளுக்கு ஆதரவு கொடுக்க வந்து இருந்தார்கள்...    இது தான் சாதாரண தமிழனின் நிலைப்பாடாக இருந்தது..

Link to comment
Share on other sites

புலிகளை மக்கள் ஏற்றுகொண்டார்கள் என்றால் மாற்று இயக்கதவர்களை புலிகள் ஏன் கொலை செய்யவேண்டும் தடை செய்யவேண்டும் .பிரபாகரனுக்கு தனது அரசியல் அறிவு பற்றி நன்கு தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, காத்து said:

மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை விட புலிகளை விடவும் மற்றவர்கள் கேடு கெட்டவர்களாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை...   மக்கள் புலிகளை சகித்து கொள்ள பழகிகொண்டார்கள்...

அப்ப பொதுவாக எல்லோருமே கேடுகெட்டவர்கள எண்டு சொல்கிறிர்கள், <_<என்ன வித்தியாசம் சிலர் கொஞ்சம் கூடச் செய்திருப்பர் சிலர் கொஞ்சம் குறையச் செய்திருப்பர் எனிவேய்ஸ் நன்றி சில பல உண்மைகளை ஏற்றுக்கொண்டமைக்கு. 

Link to comment
Share on other sites

சகோதர கொலைகளின் தொடக்கமே அதுதான் .

ஆயுத போராட்டத்தில் மக்கள் வெறுப்படைய வைத்த முதல் நிகழ்வு அதுதான் .பிறகு நடந்தது எல்லாம் பலாத்தகார அரசியல் . 

Link to comment
Share on other sites

2 minutes ago, arjun said:

புலிகளை மக்கள் ஏற்றுகொண்டார்கள் என்றால் மாற்று இயக்கதவர்களை புலிகள் ஏன் கொலை செய்யவேண்டும் தடை செய்யவேண்டும் .பிரபாகரனுக்கு தனது அரசியல் அறிவு பற்றி நன்கு தெரியும் .

மக்கள் ஆதரவு உங்களுக்கு இருந்து இருந்தா உங்களை தடை செய்ய புலிகள் யார்...?  இந்திய இராணுவத்தோடை வந்தவர்கள் புலிகளை தடை செய்து இருந்தார்களே..   அது தெரியுமா...??

 

 

 

 

 

5 minutes ago, வாலி said:

அப்ப பொதுவாக எல்லோருமே கேடுகெட்டவர்கள எண்டு சொல்கிறிர்கள், <_<என்ன வித்தியாசம் சிலர் கொஞ்சம் கூடச் செய்திருப்பர் சிலர் கொஞ்சம் குறையச் செய்திருப்பர் எனிவேய்ஸ் நன்றி சில பல உண்மைகளை ஏற்றுக்கொண்டமைக்கு. 

இந்த பிரச்சினை தலையிழுக்கும் சீப்பு மாதிரி...   தலையை வாருவதோடு  உள்ள  ஊத்தை சேருவதை தடுக்க முடியாது... 

1947 ல் தொடங்கின பிரச்சினை யாரிலை ஊத்தை அதிகம் எண்ட அளவிலை தான் இண்டைக்கும் அணுகப்படுகிறது...  தவிர்க முடியாமல் நானும் அந்த ஊத்தைகளிலை ஒருத்தன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் என்றாலே நக்கலும் எள்ளலும் தான் எங்கள் ஆட்கள் பலரிடம் இருக்கிறது! ஆனால், மேலே சுட்டிக் காட்டியது போல மேற்கு நாடுகளில் இருக்கும் அபரிமிதமான ஜனநாயகம் தான் இத்தனை சகாப்தங்களாக மேற்கு நாடுகளுக்கு தமிழர்கள் வந்து ஒரு வாழ்வைக் கட்டியெழுப்ப உதவியது என்பதை இந்த நக்கல் காரர்கள் நினைப்பதில்லை! "சர்வாதிகாரம் தான் எங்களுக்குச் சரி" என்ற மாதிரிப் பேசும் தமிழர்களில் ஒருவராவது ரஷ்யாவுக்கொ கியூபாவுக்கோ அகதியாகப் போவதில்லை, கனடாவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் தான் போவார்கள்!  தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் முழு சுதந்திரம் தரும் ஜனநாயகம் வேணுமாம்! தாயகத்தில் முழு விடுதலை கிடைக்கும் வரை புலிகளை ஒத்த ஒரு அமைப்பின் கீழ் இருந்தாலே போதுமாம்! நல்ல ஜோக்கர்கள் இவர்கள்! :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.