Jump to content

பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம். 


Recommended Posts

பிரேக் இல்லாத கார் கடைசியில் தானும் அடிபட்டு மக்களையும் அடித்து நொருங்கும் என்று அப்பவே பரிதாபப்பட்டோம் அதுவே தான் நடந்தது .

ஆனால் சுமந்திரனின் நிதானமாக ஓடுகின்றது, போக வேண்டிய இலக்கை சேராவிட்டாலும் தானும் அடிபட்டு மக்களையும் அடிக்காது என்பது நிட்சயம் .

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply

இதிலை என்ன கொடுமை எண்றால் இஞ்சினே இல்லாமல்  சுமத்திரனை பிளேன் எண்டு உசுப்பேத்தி விட்டது  தான்...   மேலை இருந்து மனிசன் டபார் எண்டு குதிச்சிட்டுது...  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, வாலி said:

இதற்கு வரும் காலம் பதில்கொடுக்கும். நிச்சயம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுவரும். ஏனெனில் அதைக் குழப்ப இப்ப இலங்கை அரசியலில் புலிகள் இல்லை. முற்றுமுழுவதும் சிறந்த ஒரு தீர்வு என்று வராவிட்டாலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வுகிடைக்கும் என உறுதியாக நம்பலாம். ஒருவேளை அது சிறந்ததொரு தீர்வாக அமைந்தால் கூட புலிவால்கள் தொடந்தும் புலம்பிக்கொண்டே இருப்பர்கள். அவர்களையும் பார்த்து நாங்கள் சேர்ந்து பரிதாபப்படவேண்டும்!

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை மேற்குநாடுகளின் பரிந்துரைப்படி ரணில் சிங்களவர்களுக்கு நோகாமல் கொடுப்பார். அதனைச் சிறந்த தீர்வாக தமிழர்களுக்கு விற்கும் சந்தைப்படுத்தும் பிரதிநிதிதான் சுமந்திரன்.

தமிழர்கள் என்ற இனமான உணர்வினை பலவீனப்படுத்தி, இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தினை சுமந்திரன் செய்கின்றார். ஆனால் சிங்கள மொழிக்கும், பெளத்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசியல் யாப்பு இருக்கும்வரை இந்த வேலைத்திட்டத்தினை வெற்றியாக்கமுடியாது.

Link to comment
Share on other sites

31 minutes ago, வாலி said:

இதற்கு வரும் காலம் பதில்கொடுக்கும். நிச்சயம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுவரும். ஏனெனில் அதைக் குழப்ப இப்ப இலங்கை அரசியலில் புலிகள் இல்லை. முற்றுமுழுவதும் சிறந்த ஒரு தீர்வு என்று வராவிட்டாலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வுகிடைக்கும் என உறுதியாக நம்பலாம். ஒருவேளை அது சிறந்ததொரு தீர்வாக அமைந்தால் கூட புலிவால்கள் தொடந்தும் புலம்பிக்கொண்டே இருப்பர்கள். அவர்களையும் பார்த்து நாங்கள் சேர்ந்து பரிதாபப்படவேண்டும்!

மிக சரியான கருத்து .

எந்த தீர்வு வந்தாலும் சொகுசு வாழ்வு வாழும் புலம்பெயர்ந்தவர்கள் ஏற்றுகொள்ளப்போவதில்லை .முடிந்தவரை அதை குழப்ப வேறு முயற்சிப்பார்கள் .கடந்த தேர்தலில் அதுதான் நடந்தது ஆனால் நாட்டில் மக்கள் மிக தெளிவாக இருக்கின்றார்கள் என்று நம்புகின்றேன் .

குமார் பொன்னம்பலத்தை விட டக்கிளசின் கட்சி அதிக வாக்குகள் எடுத்தது மிக நல்ல உதாரணம் .

Link to comment
Share on other sites

இங்கு சுமந்திரனுக்கு எதிராக எழுதுபவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ளுகிறேன். நம்ம சுமந்திரன் ஒரு ஜாம்பவான். இருந்து பாருங்கள் காலம் பதில் சொல்லும். சுமந்திரனின் வாரிசாக அவரின் மகன் அல்லது மகள் இதே போல வீரவசனத்தை பேசி தமிழ் அரசியலில்   வெற்றி பெறுவர். எல்லோரும். வியக்கும். வண்ணம் இலங்கை அரசியலிலும் சொத்து சுகம் சேர்த்து மிக சந்தோசமாக நம்ம சுமந்திரன் வாழ்வார்.

அவர் ஒரு சட்டமேதை. அதனால் மிக திறமையாக சட்டம் தன்மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தனது அரசியல் விளையாட்டை காட்டி பேரப்பிளைகள் மட்டுமல்ல அவரது பூட்டப் பிள்ளைகளுக்கு கூட சொத்து சேர்த்து தனது வாழ்வில் பெரிய வெற்றியை பெறுவார். ஏனென்றால் அவர் ஒரு தமிழர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை மேற்குநாடுகளின் பரிந்துரைப்படி ரணில் சிங்களவர்களுக்கு நோகாமல் கொடுப்பார். அதனைச் சிறந்த தீர்வாக தமிழர்களுக்கு விற்கும் சந்தைப்படுத்தும் பிரதிநிதிதான் சுமந்திரன்.

தமிழர்கள் என்ற இனமான உணர்வினை பலவீனப்படுத்தி, இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தினை சுமந்திரன் செய்கின்றார். ஆனால் சிங்கள மொழிக்கும், பெளத்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசியல் யாப்பு இருக்கும்வரை இந்த வேலைத்திட்டத்தினை வெற்றியாக்கமுடியாது.

தமிழர்களின் இனமான உணர்வினை சுமந்திரன் பலவீனப்படுத்துகின்றார் என்ற உங்கள் கருத்தை நான் ஏற்கமறுக்கின்றேன். முள்ளிவாய்க்கால், ஜெனிவா, மாவீரர் போன்ற முக்கிய தருணங்களில் விழா எடுத்து கொடி ஆட்டுவதும், கொத்துரொட்டி, கார்த்திகைப் பூ, கலண்டர் விற்பதும், தாயகத்தில் ஏற்பட்டுள்ள புலிகளுக்குப் பின்னான அரசியலைக் குழப்புவதும் என் பார்வையில் இனமான உணர்வாகப் படவில்லை. இலங்கைத்தீவில் பிரிவினைக்கு இடமில்லை என்ற நிலையில் நாம் இலங்கையர் என்ற அடையாளம் என்பது ஒரு பிரச்சினை இல்லை என்றே கருதுகின்றேன். இங்கு நாம் பிரிவினை இல்லாமல் இலங்கையர் என்ற அடையாளத்துடன் மற்றைய சமூகங்களுடன் இணைந்து வாழ முடியும் என்பதை சுமந்திரன் சொல்ல்வதில் செய்வதில் எந்தத் தவறையும் நான் காணவில்லை. சுமந்திரனின் செயல்பாடு தவறாயின் மக்கள் அடுத்த தேர்தலில் அதற்கான பதிலை கொடுப்பார்கள். 

இன்கே பிரச்சினை என்னவென்றால் நீங்கள் சொன்ன சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்துக்கும் முன்னுரிமை கொடுத்தல் என்பதுதான்.  மொழிப் பிரச்சினையைக்கூட ஓரளவு வெற்றிகொண்டுவிடலாம் என நினைக்கின்றேன். ஆனால் இந்த பௌத்த பேரினவாதச் சிந்தனை அற்ற அரசியல் யாப்பு என்பதே முக்கியமான பிரச்சினை. இதனை வெற்றிகொள்வதே சவாலான விடயம்.  இதனை உசுப்பிவிட்டுக் கொண்டிருப்பதனால் சாதித்துவிடமுடியாது. தீர்வுக்கான வரைபு ஏதோ ஒரு புள்ளியில் இருந்து தொடங்கப்படவேண்டும். அதனையே கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும் செய்துகொண்டு இருக்கிறார்கள்.  பெரும்பான்மைச் சிங்களவர்களுடன் இனைந்துதான் தீர்வை பெறவேண்டும் என்ற நிலை தவிர வேறு வழி இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. 

Link to comment
Share on other sites

நேற்று முந்தினம் சிங்கள பாராளுமன்றில் .. முஸ்லீம் ஷரியாவிற்கு எதிராக சுமந்திரன் போர் தொடுத்தபோது ஆச்சரியமாக இருந்தது!  சில நாட்களுக்கு முன் தான் முஸ்லீங்களின் வடக்கு வெளியேற்றத்திற்காக ஒப்பாரி வைத்து அழுதது உலகம் அறிந்தது! ... அதற்கு மேல் நேற்றுவரை இதயங்களால் ஒன்றுபட்டு விட்ட சிங்களத்தோடு, இன்று லடாய்!  ... அனுபவ அரசியலற்ற பூஸ்வான அரசியல்வாதி! ... சுமந்திரனை விடுங்கள் ... ...

... இங்கு புலத்திலிருந்தும் சிலர் ... சிங்களத்தோடு சேர்ந்து வெட்டுவோம், வீழ்த்துவோம் என சில நாட்களுக்கு முன்னர் புறப்பட்டவர்களின் நிலை பரிதாபம்! பாதிரியார் இமானுவேல் போன்றோர் சிங்களத்திற்கு பாவமன்னிப்பு அளிக்கவும் தயாரானார்! இவர் போன்றோரை சிங்கள வலையில் சிக்க வைத்தவர்களில் முக்கியமானவர் திருவாளர் சுமந்திரன்! இன்று ...????????????

பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம் .... சரி சரி ... எல்லைக்கப்பால்?????

Link to comment
Share on other sites

19 minutes ago, வாலி said:

தமிழர்களின் இனமான உணர்வினை சுமந்திரன் பலவீனப்படுத்துகின்றார் என்ற உங்கள் கருத்தை நான் ஏற்கமறுக்கின்றேன். முள்ளிவாய்க்கால், ஜெனிவா, மாவீரர் போன்ற முக்கிய தருணங்களில் விழா எடுத்து கொடி ஆட்டுவதும், கொத்துரொட்டி, கார்த்திகைப் பூ, கலண்டர் விற்பதும், தாயகத்தில் ஏற்பட்டுள்ள புலிகளுக்குப் பின்னான அரசியலைக் குழப்புவதும் என் பார்வையில் இனமான உணர்வாகப் படவில்லை. இலங்கைத்தீவில் பிரிவினைக்கு இடமில்லை என்ற நிலையில் நாம் இலங்கையர் என்ற அடையாளம் என்பது ஒரு பிரச்சினை இல்லை என்றே கருதுகின்றேன். இங்கு நாம் பிரிவினை இல்லாமல் இலங்கையர் என்ற அடையாளத்துடன் மற்றைய சமூகங்களுடன் இணைந்து வாழ முடியும் என்பதை சுமந்திரன் சொல்ல்வதில் செய்வதில் எந்தத் தவறையும் நான் காணவில்லை. சுமந்திரனின் செயல்பாடு தவறாயின் மக்கள் அடுத்த தேர்தலில் அதற்கான பதிலை கொடுப்பார்கள். 

இன்கே பிரச்சினை என்னவென்றால் நீங்கள் சொன்ன சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்துக்கும் முன்னுரிமை கொடுத்தல் என்பதுதான்.  மொழிப் பிரச்சினையைக்கூட ஓரளவு வெற்றிகொண்டுவிடலாம் என நினைக்கின்றேன். ஆனால் இந்த பௌத்த பேரினவாதச் சிந்தனை அற்ற அரசியல் யாப்பு என்பதே முக்கியமான பிரச்சினை. இதனை வெற்றிகொள்வதே சவாலான விடயம்.  இதனை உசுப்பிவிட்டுக் கொண்டிருப்பதனால் சாதித்துவிடமுடியாது. தீர்வுக்கான வரைபு ஏதோ ஒரு புள்ளியில் இருந்து தொடங்கப்படவேண்டும். அதனையே கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும் செய்துகொண்டு இருக்கிறார்கள்.  பெரும்பான்மைச் சிங்களவர்களுடன் இனைந்துதான் தீர்வை பெறவேண்டும் என்ற நிலை தவிர வேறு வழி இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. 

நீங்க ஒன்றுக்கும் கவலைப்படாதீங்க வாலி சார். உங்க சுமந்திரன் ஜாலியாக வாழ்வார். இன்னும் பத்தி வருடத்தில் இலங்கையின் கோடீஸ்வர்ர்களில் ஒருவராக இருப்பார். 

Link to comment
Share on other sites

30 minutes ago, வாலி said:

தமிழர்களின் இனமான உணர்வினை சுமந்திரன் பலவீனப்படுத்துகின்றார் என்ற உங்கள் கருத்தை நான் ஏற்கமறுக்கின்றேன். முள்ளிவாய்க்கால், ஜெனிவா, மாவீரர் போன்ற முக்கிய தருணங்களில் விழா எடுத்து கொடி ஆட்டுவதும், கொத்துரொட்டி, கார்த்திகைப் பூ, கலண்டர் விற்பதும், தாயகத்தில் ஏற்பட்டுள்ள புலிகளுக்குப் பின்னான அரசியலைக் குழப்புவதும் என் பார்வையில் இனமான உணர்வாகப் படவில்லை. இலங்கைத்தீவில் பிரிவினைக்கு இடமில்லை என்ற நிலையில் நாம் இலங்கையர் என்ற அடையாளம் என்பது ஒரு பிரச்சினை இல்லை என்றே கருதுகின்றேன். இங்கு நாம் பிரிவினை இல்லாமல் இலங்கையர் என்ற அடையாளத்துடன் மற்றைய சமூகங்களுடன் இணைந்து வாழ முடியும் என்பதை சுமந்திரன் சொல்ல்வதில் செய்வதில் எந்தத் தவறையும் நான் காணவில்லை. சுமந்திரனின் செயல்பாடு தவறாயின் மக்கள் அடுத்த தேர்தலில் அதற்கான பதிலை கொடுப்பார்கள். 

இன்கே பிரச்சினை என்னவென்றால் நீங்கள் சொன்ன சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்துக்கும் முன்னுரிமை கொடுத்தல் என்பதுதான்.  மொழிப் பிரச்சினையைக்கூட ஓரளவு வெற்றிகொண்டுவிடலாம் என நினைக்கின்றேன். ஆனால் இந்த பௌத்த பேரினவாதச் சிந்தனை அற்ற அரசியல் யாப்பு என்பதே முக்கியமான பிரச்சினை. இதனை வெற்றிகொள்வதே சவாலான விடயம்.  இதனை உசுப்பிவிட்டுக் கொண்டிருப்பதனால் சாதித்துவிடமுடியாது. தீர்வுக்கான வரைபு ஏதோ ஒரு புள்ளியில் இருந்து தொடங்கப்படவேண்டும். அதனையே கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும் செய்துகொண்டு இருக்கிறார்கள்.  பெரும்பான்மைச் சிங்களவர்களுடன் இனைந்துதான் தீர்வை பெறவேண்டும் என்ற நிலை தவிர வேறு வழி இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. 

பகிர்வுக்கு நன்றி வாலி.
உங்கள் கருத்தை முழுமையாக நான் ஏற்றுக்கொள்கின்றேன். என்ன பச்சைதான் கைவசம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாலியின் நிதானமான கருத்தே என்னதும். சிங்களவர்கள் மாறப் போவதில்லை அல்லது பௌத்த சிங்களம் என்பது மறைய இன்னும் நூறு ஆண்டுகள் ஆகலாம். அது கூட சிங்களவர்களிடையே இருந்து உருவாகும் ஒரு மிதவாதத் தலைவரால் மட்டுமே சாத்தியமாகும், பு.பெ தமிழர்களின் மிரட்டலால் அது நிகழாது. வேண்டுமானால் இன்னும் கூர்மை பெற்று வாழும்! 

இயலாத ஒன்றை இயலாது என்று சொல்வதற்கும் ஒரு நேர்மை வேண்டும்!"எப்படி என்று கேட்கக் கூடாது, ஆனால் எடுத்துத் தருவோம்!" என்று சொன்ன இயக்கங்கள் சில தவறுகளைச் செய்த போதும் மூன்று தசாப்தங்கள் அவகாசம் கொடுத்தோம்! இப்ப ஒரு ஆண்டிலேயே உண்மையை ஒப்புக் கொள்ளும் ஒருவனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறோம்! அவ்வளவு அரசியல் தூர நோக்கு எங்களுக்கு!:cool:

 

 

 

1 hour ago, Sasi_varnam said:

 

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

வாலியின் நிதானமான கருத்தே என்னதும். சிங்களவர்கள் மாறப் போவதில்லை அல்லது பௌத்த சிங்களம் என்பது மறைய இன்னும் நூறு ஆண்டுகள் ஆகலாம். அது கூட சிங்களவர்களிடையே இருந்து உருவாகும் ஒரு மிதவாதத் தலைவரால் மட்டுமே சாத்தியமாகும், பு.பெ தமிழர்களின் மிரட்டலால் அது நிகழாது. வேண்டுமானால் இன்னும் கூர்மை பெற்று வாழும்! 

இயலாத ஒன்றை இயலாது என்று சொல்வதற்கும் ஒரு நேர்மை வேண்டும்!"எப்படி என்று கேட்கக் கூடாது, ஆனால் எடுத்துத் தருவோம்!" என்று சொன்ன இயக்கங்கள் சில தவறுகளைச் செய்த போதும் மூன்று தசாப்தங்கள் அவகாசம் கொடுத்தோம்! இப்ப ஒரு ஆண்டிலேயே உண்மையை ஒப்புக் கொள்ளும் ஒருவனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறோம்! அவ்வளவு அரசியல் தூர நோக்கு எங்களுக்கு!:cool:

 

 

 

ஒகோ நூறு ஆண்டு ஆகுமா? அப்ப சுமந்திரனின் பூட்டப் பிள்ளையும் இந்த பிரச்சனையைத் கதைத்து பதவி எடுத்து சுக வாழ்க்கை வாழலாம். உங்களுக்கும் அது பெரிய நிம்மதி. எவ்வளவு தூர நோக்கு உங்களுக்கு. அது சரி நீங்களும் தமிழர் தானே. 

Link to comment
Share on other sites

3 hours ago, வாலி said:

சரி, உங்ஜ்கதமிழர்களின் இனமான உணர்வினை சுமந்திரன் பலவீனப்படுத்துகின்றார் என்ற உங்கள் கருத்தை நான் ஏற்கமறுக்கின்றேன். முள்ளிவாய்க்கால், ஜெனிவா, மாவீரர் போன்ற முக்கிய தருணங்களில் விழா எடுத்து கொடி ஆட்டுவதும், கொத்துரொட்டி, கார்த்திகைப் பூ, கலண்டர் விற்பதும், தாயகத்தில் ஏற்பட்டுள்ள புலிகளுக்குப் பின்னான அரசியலைக் குழப்புவதும் என் பார்வையில் இனமான உணர்வாகப் படவில்லை. இலங்கைத்தீவில் பிரிவினைக்கு இடமில்லை என்ற நிலையில் நாம் இலங்கையர் என்ற அடையாளம் என்பது ஒரு பிரச்சினை இல்லை என்றே கருதுகின்றேன். இங்கு நாம் பிரிவினை இல்லாமல் இலங்கையர் என்ற அடையாளத்துடன் மற்றைய சமூகங்களுடன் இணைந்து வாழ முடியும் என்பதை சுமந்திரன் சொல்ல்வதில் செய்வதில் எந்தத் தவறையும் நான் காணவில்லை. சுமந்திரனின் செயல்பாடு தவறாயின் மக்கள் அடுத்த தேர்தலில் அதற்கான பதிலை கொடுப்பார்கள். 

இன்கே பிரச்சினை என்னவென்றால் நீங்கள் சொன்ன சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்துக்கும் முன்னுரிமை கொடுத்தல் என்பதுதான்.  மொழிப் பிரச்சினையைக்கூட ஓரளவு வெற்றிகொண்டுவிடலாம் என நினைக்கின்றேன். ஆனால் இந்த பௌத்த பேரினவாதச் சிந்தனை அற்ற அரசியல் யாப்பு என்பதே முக்கியமான பிரச்சினை. இதனை வெற்றிகொள்வதே சவாலான விடயம்.  இதனை உசுப்பிவிட்டுக் கொண்டிருப்பதனால் சாதித்துவிடமுடியாது. தீர்வுக்கான வரைபு ஏதோ ஒரு புள்ளியில் இருந்து தொடங்கப்படவேண்டும். அதனையே கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும் செய்துகொண்டு இருக்கிறார்கள்.  பெரும்பான்மைச் சிங்களவர்களுடன் இனைந்துதான் தீர்வை பெறவேண்டும் என்ற நிலை தவிர வேறு வழி இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. 

சரி, உங்களுக்கு இங்கு புலத்தில் வரும் செலவுகளை சரி செய்ய வாங்கும்/விற்கும் உணவு கூட நக்கலாக படுகிறது??  (... சிலரின் பிழைகள் என்ன செய்வது ... எங்குதான் இல்லை??? ..) ! அப்படியானாலும் காசு கொடுத்து வாங்கும் கொத்து, ... மிரட்டி வாங்கிய சோத்துப்பார்ச்சலை விட கேவலமாக உங்களுக்கு படுகிறது! அது இருக்கட்டும் ... 

என் பார்வைக்கு ... சுமந்திரன் ... 2008இற்கு முன் எங்கிருந்தவர்? தமிழ் மக்களின் வாழ்வுக்கான போராட்டத்தில் பங்கு ... சாத்வீகமாகவாவது இருக்கட்டும் ...??? எவ்வாறு 2008இற்கு பின் தமிழரசு கட்சிக்குள் உள்நுளைந்து, இன்று தலைமையை கைப்பற்றும் நிலைக்கு வந்தார்???? ... போன்ற விடை தெரியாத பல கேள்விகள்.....

சரி ... அதுவும் இருக்கட்டும் ...

புலிகள் ... ஆயுதம் தாங்கியது ... 47இற்கு பின் ஏறக்குறைய 30 வருட உங்களை போன்ற ..  இன்று காலத்துக்கு ஏற்ப நுளைந்து பின்னணிபாடும் ... அகிம்சாவாதிகளின் தோல்விகளின் பின்னாள்தான்!

இன்று வரை ... நாம் சேர்ந்து செய்த ... உங்கள் பாசையில் ...  போட்ட ஒப்பந்தங்கள் எத்தனை? ... பண்டா-செல்வா. டட்லி/செல்வா,  ... எங்கே போயிற்று??? 

பௌத்த பேரினவாத சிந்தனை ... இது எதிர்காலத்திலும் சில ஆழும் சிங்கள தலைவர்களால் மாற்றியமைக்கப்படக்கூடியதல்ல! ... புரியுங்கள் ... இது நூற்றாண்டாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் ... இலங்கை வரலாற்றின் பௌத்த பேரினவாத அரசியலமைப்புச்சட்டம்! 

சரி ... சுமந்திரனின் பார்வையில் பெரும்பான்மையினருடன் இணைந்துதான் பெற வேண்டுமாயின் ... ஏன் தமிழரசு கட்சியை சுமந்திரன் தேர்தெடுத்தவர்??? அதே சிந்தனையுள்ள குத்தியின் ... மன்னிக்கவும் பண்பான சொல்லா தெரியவில்லை, இதே சொல், எம் தேசிய கவியும் ... பின்னால் போயிருக்கலாமே??

அதற்கு மேல் ... மைத்திரி/இரணிலின் நல்லாட்சி(?) வந்து ... சுமந்திரனின் பாசையில் "இதயங்களால் ஒன்றுபட்ட ஆட்சி" ... ஒரு வருடம் ஆகவில்லை!   ... எம்மை பொறுமை காக்க சொன்ன உங்களால் ... ஒரு வருடம் காக்க முடியவில்லை???

இப்போ, நாமா .. பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம்  ..  இதை சொன்னோம்??? 

ஏனப்புக்களே ... அதற்கு எங்கடித்தாலும், அந்த காலையே தூக்குவதை போல் தூக்குகிறீர்கள்????

இன்றைய சுமந்திரனின் ... இந்த ஓலம் ... அனுபவமற்ற ஓர் அரசியல்வாதியின் அலறல் மட்டுமே! ... கேவலம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவையர் பொறுக்கிறாராம்.. இவர் சும் பொறுமையின் எல்லைக்கே போயிட்டாராம். கெதியா மந்திரிப் பதவியை ஏத்துக்கிட்டு.. தமிழனை காட்டிக்கொடுக்க..கிளம்புங்க சார் இல்ல மாவைக்கு மந்திரிப்பதவி கைமாறிடும் போலக் கிடக்குது. இதைவிட்டால்.. உங்களுக்கு வேறு எதுவும் வராது.  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை மேற்குநாடுகளின் பரிந்துரைப்படி ரணில் சிங்களவர்களுக்கு நோகாமல் கொடுப்பார். அதனைச் சிறந்த தீர்வாக தமிழர்களுக்கு விற்கும் சந்தைப்படுத்தும் பிரதிநிதிதான் சுமந்திரன்.

தமிழர்கள் என்ற இனமான உணர்வினை பலவீனப்படுத்தி, இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தினை சுமந்திரன் செய்கின்றார். ஆனால் சிங்கள மொழிக்கும், பெளத்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசியல் யாப்பு இருக்கும்வரை இந்த வேலைத்திட்டத்தினை வெற்றியாக்கமுடியாது.

ஒரு நூறு ஏக்கர் காணியை விட முடியல்ல.. மகிந்த விட ஏற்பாடு செய்திருந்த காணியை கொடுத்திட்டு... அதோட எல்லாம் முடிஞ்சிட்டதா காட்டிட்டார் ரணில். 220 பேரை விடுதலை செய்ய 12,000 உதாரணம் காட்டிறார். சரத் சொல்லுறார் இராணுவம் தவறிழைச்சிருக்குது என்று ரணில் சொல்லுறார் ராணுவத்தை தண்டிக்க அனுமதிக்கமாட்டம் என்று.. இப்படியாப்பட்ட ரணில்.. இலங்கை - இந்திய ஒப்பத்தக் காலம் தொட்டு சொறீலங்கா அரசியலில் இருக்கும் ரணில் நரித்தனமாக இருப்பாரே தவிர.. மகிந்த கும்பலை விட இந்தக் கும்பல் மோசமானது என்பதை இங்கு துதிபாடும் கூட்டம் உணரும். இப்படி காலத்துக்கு காலம் தமிழ் மக்கள் மத்தியில்.. முட்டாள்களை உருவாக்கி சிங்களம் தன்னை சுதாகரித்துக் கொள்வது எமது சாபக்கேடு.

புலிகள் இருந்த போது வந்த அழுத்தங்கள் எதுவும் இல்லாத நிலையில்.. தமிழர்களுக்கு ஒரு மண்பிடியும் சிங்களத்திடம் இருந்து கிடைக்காது. சந்திரிக்கா ஒருவேளை சில தீர்வுகளை சிங்களத்துக்கு அதிக ஆதாயம் தேடி கொண்டு வர முனைந்தாலும் ரணில் அதையும் எரிப்பார்... இதுதான் கடந்த காலம். இப்பவும் இந்தக் கூட்டத்தை நம்பிறது ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்தின் அரசியல் நிர்க்கதி என்பதால்.. வேற வழி அதுக்கு இல்ல. அதனால் ஆகும். :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாலி said:

 

 அதனையே கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும் செய்துகொண்டு இருக்கிறார்கள்.  பெரும்பான்மைச் சிங்களவர்களுடன் இனைந்துதான் தீர்வை பெறவேண்டும் என்ற நிலை தவிர வேறு வழி இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. 

சிங்களவர்களுடன் இணைந்து ஈழத்தில் இருக்கும் மிச்சத் தமிழர்களுக்கும் சங்கூதும் நிலைக்கு நாம் வராமல் இருக்க வேண்டுமென்றால் சுமந்திரன், சம்பந்தன் அவர்கள் போன்ற அரசியல்வாதிகள் புறக்கணிக்கப்படவேண்டும்.
அவர்களின் பிரச்சாரப் பீரங்கிகளும் முடக்கப்படவேண்டும் இல்லையேல்
இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற நிலைதான் விரைவில் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாத்தியார் said:

சிங்களவர்களுடன் இணைந்து ஈழத்தில் இருக்கும் மிச்சத் தமிழர்களுக்கும் சங்கூதும் நிலைக்கு நாம் வராமல் இருக்க வேண்டுமென்றால் சுமந்திரன், சம்பந்தன் அவர்கள் போன்ற அரசியல்வாதிகள் புறக்கணிக்கப்படவேண்டும்.
அவர்களின் பிரச்சாரப் பீரங்கிகளும் முடக்கப்படவேண்டும் இல்லையேல்
இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற நிலைதான் விரைவில் வரும்.

முடிந்தால் இதை செய்துகாட்டுங்கள் அய்யா வாத்தியாரே! இலங்கையில் தமிழர் வாழ்ந்தார்கள் என்ற நிலை வரும் என்று பூச்சாண்டி காட்டுவது தெரிகின்றது. ஈழத்தின் தமிழினம் வரலாற்றின் பல சவால்களைக் கண்டு மீண்டும் மீண்டும் தலைநிமிர்ந்து வந்திருக்கின்றது.  புலிவால்களின் தாளத்துக்கு ஆடாவிட்டால் ஈழத்தின் தமிழினமே அழிந்துவிடும் என்று உங்களின் பேராறிவினால் மட்டுமே தீர்க்கதரிசனம் உரைக்க முடியும். புலிவால்கள் கஜே கம்பனியைக் கொண்டுவர பகீரதப் பிராயத்தனம்செய்து மூக்குடைபட்டும் இன்னும் திருந்தவில்லை எனத் தெரிகின்றது. தமிழினம் அழிந்துவிடும் என்ற புதுக் கரடி ஒன்றை எடுத்து விட்டிருக்கிறீர்கள். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மிகத் தெளிவானவர்கள். அவர்களுக்குத் தங்களது தலைமையை இப்போது எந்த அழுத்தங்களுக்கும் முகம்கொடுக்காமல் தீர்மானிக்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, arjun said:

பிரேக் இல்லாத கார் கடைசியில் தானும் அடிபட்டு மக்களையும் அடித்து நொருங்கும் என்று அப்பவே பரிதாபப்பட்டோம் அதுவே தான் நடந்தது .

ஆனால் சுமந்திரனின் நிதானமாக ஓடுகின்றது, போக வேண்டிய இலக்கை சேராவிட்டாலும் தானும் அடிபட்டு மக்களையும் அடிக்காது என்பது நிட்சயம் .

இந்தா சனாதிபதி ஆட்சியை முடிச்சுக்காட்டுறன் எண்டு சொன்னவர் இப்பவும் அதே கதிரையிலை....அவருக்கு வக்காளத்து வாங்கின சம்பந்தன் கோஷ்டியும் நல்ல கதிரையைலை.......இனியென்ன தமிழ்மக்களின் பிரச்சனை அவர்களுக்கு பகுதிநேர பிரச்சனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாலி said:

 இலங்கையில் தமிழர் வாழ்ந்தார்கள் என்ற நிலை வரும் என்று பூச்சாண்டி காட்டுவது தெரிகின்றது. ஈழத்தின் தமிழினம் வரலாற்றின் பல சவால்களைக் கண்டு மீண்டும் மீண்டும் தலைநிமிர்ந்து வந்திருக்கின்றது.  

 

 

 

இலங்கையில் இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் கடந்த 1981 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத்து எட்டு லட்சமாக காணப்பட்டது. அப்போது நாட்டில் சிங்களவர் பெரும்பான்மையினராகவும், தமிழர் இரண்டாவது நிலையிலும், முஸ்லிம்கள் மூன்றாவது நிலையிலும் காணப்பட்டனர்.

தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 2011ல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் இலங்கையின் சனத்தொகை 2கோடியே 12 இலட்சத்து 83ஆயிரத்து 913 என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி; தரும் தகவல் வெளியாகியுள்ளது.

சிங்களவர்கள் 73.8வீதமாகவும்,

முஸ்லீம்கள் 7.2வீதமாகவும்,

இந்திய வம்சாவழி தமிழர்கள் 4.6வீதமாகவும்,

இலங்கை தமிழர்கள் 3.9வீதம் எனவும்

இலங்கை புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இரண்டாவது பெரும்பான்மை இனமாக முஸ்லீம்கள் உயர்ந்துள்ள அதேவேளை இரண்டாவது பெரும்பான்மை இனமான (24.90வீதமாக இருந்த) இலங்கை தமிழர்கள் நான்காவது நிலையில் உள்ள சிறுபான்மை இனமாக 3.9வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளனர்.

இது இணையத்தில் கிடைத்த தகவல்

 

உங்கள் கருத்தின்படி தமிழர்கள் இப்படித்தான் தங்கள் இருப்பைத் தக்க வைத்திருக்கின்றனர்.
இன்னும் 20 வருடங்களில் இலங்கையில் தமிழர்களின் இருப்பு 1 வீததிற்க்குக் கீழேயும் வரலாம். அடுத்த 20 வருடங்களில் எப்படி இருக்கும் என்று நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள்.

இதற்கும் நீங்கள் புலிகளையும் அவர்களின்  பயங்கரவாதத்தையும் தான் காரணம் காட்டுவீர்கள் என்பதும் தெரியும்.

Link to comment
Share on other sites

19 hours ago, no fire zone said:

 

... இங்கு புலத்திலிருந்தும் சிலர் ... சிங்களத்தோடு சேர்ந்து வெட்டுவோம், வீழ்த்துவோம் என சில நாட்களுக்கு முன்னர் புறப்பட்டவர்களின் நிலை பரிதாபம்! பாதிரியார் இமானுவேல் போன்றோர் சிங்களத்திற்கு பாவமன்னிப்பு அளிக்கவும் தயாரானார்! இவர் போன்றோரை சிங்கள வலையில் சிக்க வைத்தவர்களில் முக்கியமானவர் திருவாளர் சுமந்திரன்! இன்று ...????????????

பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம் .... சரி சரி ... எல்லைக்கப்பால்?????

நிச்சயமாக முள்ளிவாய்க்கால் இல்லை. வேறு வழிகளை அவர்கள் காண்பார்கள். இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்படுவது அமெரிக்க அரசின் திட்டங்களுக்கும் இந்தியாவுக்கும் மிகவும் பாதகமானது. சீனா மீண்டும் காலூன்றும் சாத்தியம் உள்ளது. இவ்வளவு கஷ்டப்பட்டு ஆட்சியை மாற்றியவர்கள் தமது நோக்கத்தில் அவ்வளவு விரைவாக தோல்வி அடைய மாட்டார்கள்.

19 hours ago, trinco said:

இங்கு சுமந்திரனுக்கு எதிராக எழுதுபவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ளுகிறேன். நம்ம சுமந்திரன் ஒரு ஜாம்பவான். இருந்து பாருங்கள் காலம் பதில் சொல்லும். சுமந்திரனின் வாரிசாக அவரின் மகன் அல்லது மகள் இதே போல வீரவசனத்தை பேசி தமிழ் அரசியலில்   வெற்றி பெறுவர். எல்லோரும். வியக்கும். வண்ணம் இலங்கை அரசியலிலும் சொத்து சுகம் சேர்த்து மிக சந்தோசமாக நம்ம சுமந்திரன் வாழ்வார்.

அவர் ஒரு சட்டமேதை. அதனால் மிக திறமையாக சட்டம் தன்மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தனது அரசியல் விளையாட்டை காட்டி பேரப்பிளைகள் மட்டுமல்ல அவரது பூட்டப் பிள்ளைகளுக்கு கூட சொத்து சேர்த்து தனது வாழ்வில் பெரிய வெற்றியை பெறுவார். ஏனென்றால் அவர் ஒரு தமிழர். 

இன்னுமொரு ஜி.ஜி. பொன்னம்பலம் என்று சொல்கிறீர்கள். இன்னுமொரு கஜேந்திரன் வேண்டாமா?

13 hours ago, வாத்தியார் said:

சிங்களவர்களுடன் இணைந்து ஈழத்தில் இருக்கும் மிச்சத் தமிழர்களுக்கும் சங்கூதும் நிலைக்கு நாம் வராமல் இருக்க வேண்டுமென்றால் சுமந்திரன், சம்பந்தன் அவர்கள் போன்ற அரசியல்வாதிகள் புறக்கணிக்கப்படவேண்டும்.
அவர்களின் பிரச்சாரப் பீரங்கிகளும் முடக்கப்படவேண்டும் இல்லையேல்
இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற நிலைதான் விரைவில் வரும்.

இன்னுமொரு தேசியத் தலைவர் வந்தால் இந்த மிச்சத் தமிழருக்கு என்ன கிடைக்கும்? இன்னுமொரு முள்ளிவாய்க்கால். இன்னுமொரு தேசியத் தலைவர் வராமல் இருக்க சுமேந்திரன் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, trinco said:

ஒகோ நூறு ஆண்டு ஆகுமா? அப்ப சுமந்திரனின் பூட்டப் பிள்ளையும் இந்த பிரச்சனையைத் கதைத்து பதவி எடுத்து சுக வாழ்க்கை வாழலாம். உங்களுக்கும் அது பெரிய நிம்மதி. எவ்வளவு தூர நோக்கு உங்களுக்கு. அது சரி நீங்களும் தமிழர் தானே. 

இல்லை!  நீங்கள் எல்லாம் "நாம் தமிழர்!" என்று பெருமையாகச் சொன்னால், நான் தமிழன் இல்லை! அப்படிச் சொல்ல வெட்கப் படும் ஒருவன், இன அனாதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்!:cool:

Link to comment
Share on other sites

40 minutes ago, Jude said:

நிச்சயமாக முள்ளிவாய்க்கால் இல்லை. வேறு வழிகளை அவர்கள் காண்பார்கள். இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்படுவது அமெரிக்க அரசின் திட்டங்களுக்கும் இந்தியாவுக்கும் மிகவும் பாதகமானது. சீனா மீண்டும் காலூன்றும் சாத்தியம் உள்ளது. இவ்வளவு கஷ்டப்பட்டு ஆட்சியை மாற்றியவர்கள் தமது நோக்கத்தில் அவ்வளவு விரைவாக தோல்வி அடைய மாட்டார்கள்.

இன்னுமொரு ஜி.ஜி. பொன்னம்பலம் என்று சொல்கிறீர்கள். இன்னுமொரு கஜேந்திரன் வேண்டாமா?

இன்னுமொரு தேசியத் தலைவர் வந்தால் இந்த மிச்சத் தமிழருக்கு என்ன கிடைக்கும்? இன்னுமொரு முள்ளிவாய்க்கால். இன்னுமொரு தேசியத் தலைவர் வராமல் இருக்க சுமேந்திரன் தேவை.

இலங்கையின் பிரதமராக பண்டாரநாயக்காவின் வருகைக்குப்பின் தமிழருக்கு எதிரான அரசபயங்கரவாதம் வளர்ந்து மகிந்தாவின் காலத்தில் தலைவித்தாடிய வரையில் நித்திரையாகக் கிடந்தவர்கள்... இன்று எழுந்து பார்த்தபோதுதான் தமிழர்களுடைய போராட்டம் தெரிந்தது. அது அவர்களுக்குப் பயங்கரவாதமாகவும் காட்சிகொடுத்துள்ளது.:shocked::shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முன்னம் இது தெரியும்தானே.அதுக்கு கையைத்தூக்கிப்போட்டு இப்ப இந்த சலிப்பு எதற்கு.2016 முடிய இதே டயாலாக் திரும்ப பேசுவீர்கள்.வல்லரசுகளை வளைத்தத இராஜதந்திரம் எங்கே போனது.மென்வலு எம்வலு.......

 

 

 

 

Link to comment
Share on other sites

46 minutes ago, Justin said:

இல்லை!  நீங்கள் எல்லாம் "நாம் தமிழர்!" என்று பெருமையாகச் சொன்னால், நான் தமிழன் இல்லை! அப்படிச் சொல்ல வெட்கப் படும் ஒருவன், இன அனாதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்!:cool:

ஜஸடின் நானும் உங்களைப்போல் தான் தமிழன் என்று சொல்ல வெட்கப்படுபவன் தான். நீங்களும் தமிழர் தான் என்று நான்  கூறியது உங்களுக்கு புரியவில்லை என்றால் அதற்கு என்ன செய்ய. என்ன தான் அனாதை என்று நீங்கள்  கூறினாலும் அங்கு கருத்து களத்தில்  மற்றவர்களை எதற்கெடுத்தாலும் நீங்கள் பரிகசிக்கும் போது உங்களில்  தமிழனை  நான் காணுகிறேன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடக்கிற புடுங்குப்பாடுகளும் ஒருவர் மீது மற்றவர் பாய்வதும் விவாதிப்பது என எல்லாமே அங்கு உள்ள எம் மக்கக்கு விடிவு வேண்டும் என்பதற்றாகவே.ஆனால் இங்கு கருத்து மோதலில் ஈடுபடுபவர்கள் எப்படி சித்திரம் வரைவது என்பதிலேயே குறியாக ஈருக்கிறார்களே தவிர யாரும் சுவரைப்பற்றி கவலைப்படுவதாக தொிய வில்லை. மேலே வாத்தியார் தந்த புள்ளி விபரம் தொடருமானால் இன்னும் சில காலங்களில் பிரச்சனை தானாக தீர்ந்து விடும்.அதாவது தமிழரே இல்லாமல் ஆகினால் பிரச்சனை தீரும் தானே.இப்ப முக்கிய பிரச்சனை மக்களின் இருப்பும் அதை ஊக்குவிப்பதும்தான்.இப்பவும் அங்கு பலர் வெளி நாடு செல்லவே முயன்று வருகின்றனர். அடாத்தாக நிகழும் நிலப்பறிப்புக்கு நிராக மனமுவந்து நிலத்தை மற்ற இனத்தவர்களுக்கு நல்ல விலைக்கு வித்துப்போட்டு வெளி நாடு செல்லவென அந்தக்காசை பயன் படுத்தகிறார்கள்.முதலலில் மக்களை அங்கு வாழ்வதற்க்கு ஊக்குவிக்க வேணும்.அதை இங்கிருந்து கொண்டு செய்ய முடியுமா என்பது கேழ்விக்குறியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

 

இலங்கையில் இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் கடந்த 1981 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத்து எட்டு லட்சமாக காணப்பட்டது. அப்போது நாட்டில் சிங்களவர் பெரும்பான்மையினராகவும், தமிழர் இரண்டாவது நிலையிலும், முஸ்லிம்கள் மூன்றாவது நிலையிலும் காணப்பட்டனர்.

தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 2011ல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் இலங்கையின் சனத்தொகை 2கோடியே 12 இலட்சத்து 83ஆயிரத்து 913 என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி; தரும் தகவல் வெளியாகியுள்ளது.

சிங்களவர்கள் 73.8வீதமாகவும்,

முஸ்லீம்கள் 7.2வீதமாகவும்,

இந்திய வம்சாவழி தமிழர்கள் 4.6வீதமாகவும்,

இலங்கை தமிழர்கள் 3.9வீதம் எனவும்

இலங்கை புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இரண்டாவது பெரும்பான்மை இனமாக முஸ்லீம்கள் உயர்ந்துள்ள அதேவேளை இரண்டாவது பெரும்பான்மை இனமான (24.90வீதமாக இருந்த) இலங்கை தமிழர்கள் நான்காவது நிலையில் உள்ள சிறுபான்மை இனமாக 3.9வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளனர்.

இது இணையத்தில் கிடைத்த தகவல்

 

உங்கள் கருத்தின்படி தமிழர்கள் இப்படித்தான் தங்கள் இருப்பைத் தக்க வைத்திருக்கின்றனர்.
இன்னும் 20 வருடங்களில் இலங்கையில் தமிழர்களின் இருப்பு 1 வீததிற்க்குக் கீழேயும் வரலாம். அடுத்த 20 வருடங்களில் எப்படி இருக்கும் என்று நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள்.

இதற்கும் நீங்கள் புலிகளையும் அவர்களின்  பயங்கரவாதத்தையும் தான் காரணம் காட்டுவீர்கள் என்பதும் தெரியும்.

வாத்தியார் எனக்கு மற்ற ஆக்களுக்கு கணக்குப் படிப்பிக்கேலாது. நீங்கள் கொடுத்த தரவுகளைக் கூட்டிப் பார்த்தால் 89.5%  தான் வரும். அது உங்கள் பிரச்சினை மட்டுமல்ல உங்களுக்கு ஊக்கம் கொடுத்தவரின் பிரச்சினையும் கூட.

இனி விடயத்துக்கு வருவோம். கீழ்வரும் இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தின் இணைப்பில் 146 ஆம் பக்கம் முழுத் தரவுகளும் இருக்கின்றது 

http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/Pages/Activities/Reports/FinalReport/FinalReport.pdf

2012 இல் சிங்களவர் 74.9% இலங்கைத் தமிழர் 11.2% இந்தியத் தமிழர் 4.1% இலங்கைச் சோனகர் 9.3%

1981 இல் சிங்களவர் 74.0% இலங்கைத் தமிழர் 12.7% இந்தியத் தமிழர் 5.5% இலங்கைச் சோனகர் 7.0%

இங்கு தமிழர்களின் சனத்தொகைப் பரம்பல் வீழ்ச்சிக்கு பொருளாதார அகதிகள் மேற்கத்தைய தேசங்களுக்குப் பெருமளவு புலம்பெயர்ந்தமை, தொடர்ச்சியான யுத்ததினால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை அதிலும் இனவிருத்திக்கு ஏதுவான இளைஞர்கள் அதிகம் பலியாகியமை, பல்வேறு காரணங்களினால் தமிழர்கள் அதிகளவு வாரிசுகளைப் பெற்றுக்கொள்ளாமை முதலிய காரணங்களைச் சொல்லலாம். மறுபுறத்தே இலங்கைச் சோனகர் 2.3% ஆலும் சிங்களவர் 0.9% ஆலும் அதிகரித்து இருக்கின்றனர். முக்கியமாக இலங்கைச் சோனகரின் வளர்ச்சி அபரிமிதமானது. அவர்கள் வாரிசுகளை அதிகளவில் உருவாக்குவதே முக்கிய காரணமெனினும் தமிழரின் விகிதம் குறைகின்றபோது மற்றைய இனங்களின் விகிதம் புள்ளிவிபரப் பட்டியலில் அதிகரித்தே காணப்படும். 

நிலைமை இவ்வாறிருக்க, நீங்கள் உங்கள் பூச்சாண்டி காட்டலுக்கு முகவரியற்ற மற்றும் பிழையான தகவல்களை தந்த இணையத்தை நம்பி இருப்பது வேடிக்கையானது.  போரில் காவுகொடுக்கப்பட்ட மக்களையும் போராளிகளையும் இனி மீண்டழவைக்க இயலாத நிலையில் இப்போது தமிழினம் செய்யக் கூடியது ஆகக் குறைந்தது ஒரு தம்பதியர் 3 குழந்தைகளையாவது பெற்றெடுத்தல் (இதிலும் போரின் தாக்கம் இருக்கும்), பொருளாதார அகதிகளை மீண்டும் வரவழைத்தல் (இவர்கள் ஒருபோது வரமாட்டார்கள், விசில் குஞ்சுகளே இவர்களில் பெரும்பான்மையானோர்).  <_<

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.