Jump to content

டேவிட் ஐயாவின் நினைவு பகிர்வும் கலந்துரையாடலும் .


Recommended Posts

 

இன்று ஒரு முக்கியமான நினைவு கூட்டம் ஒன்றுக்கு போன திருப்தி .

டேவிட் ஐயாவின் நினைவு பகிர்வும் கலந்துரையாடலும் .

டேவிட் ஐயா அவர்களின் காந்தீயம் ஊடாக தமிழர் நிலங்களை எவ்வாறு அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்தும் குடியேற்றங்களிலும் இருந்து பாதுகாத்தார் ,அவரின் தூர நோக்கு செயல் எழுபதுகளில் தொடங்கியது எப்படி எவ்வாறு ,நாம் தொண்ணூறுக்கு பின்னரே விடுதலை போராட்டங்களை அறிந்து இருக்கிறோம் என்றுதான் சொல்ல வேணும் அதற்க்கு முன்னுள்ள வரலாறுகள் மறைக்கப்பட்டதா அல்லது எழுதாமல் விடப்பட்டதா என்றுதான் தெரியவில்லை .

அங்கு உரையாற்றிய சிலரின் கருத்துக்கள் 

எத்தினை போராட்ட இயக்கங்கள் இருந்தது அதன் தலைவர்கள் மரணங்கள் கூட நினைவு கூறப்படுவதில்லை, ஆனால் ஒரு காந்தீய போராளி மக்களுடன் வாழ்த்த ஒருவருக்கு உலகெல்லாம் நினைவு நிகழ்வு நடைபெறுகிறது என்றால் அது டேவிட் ஐயா ஒருவருக்கு தான் .

பீ .ஏ. காதர் 

.....................................................
ஆனையிறவுக்கு அங்கால தான் தமிழீழம் இருக்கு என்றுதான் பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் , ஈழம் என்றாலே நான் யாழ்ப்பாணம் என்று சொல்வதுதான் பெருமையாக கொள்கிறார்கள் ,முதலில் அவைகள் மாறனும் ஈழம் என்பதன் எல்லையை அவர்கள் எது என புரிந்து கொண்டு பேச வேணும் .

...............................................
காந்தீய வழி வந்த இளையவர்கள் ஆயுத வழிக்கு போனது எதற்காக என்பதற்கு ஜெனி அக்கா கொடுத்த விளக்கம், அவர் காந்தீயத்தில் ஆரம்ப கால உறுப்பினர் என்பதால் சொல்லும் போது அட இவ்வளவு தூர நோக்கோடு டேவிட் ஐயா போன்றவர்கள் இருந்திருக்கிறார் என வியக்க வைக்கிறது .

பண்ணை திட்டம் ,முன்பள்ளி என விளிம்புநிலை மக்களை எவ்வாறு விழிப்பு நிலைக்கு கொண்டுவாறது என்பதற்கு எழுபதுகளில் ஒருவர் திட்டம் இட்டு நகர்த்து இருக்கிறார் என்றால் ஆச்சரியம் தான் .

.......................................................
டேவிட் ஐயா நினைத்து இருந்தால் அரச பதவியில் இருந்தவர் அவரும் ஒய்வு வரை அப்பதவியில் இருந்து விட்டு ஒய்வு பெற்றபின் ஒரு இரவில் தமிழ்தேசியம் பேசி தலைவர் ஆகி இருக்கலாம் .

ரஞ்சித் 
............................................................

உண்மையில் நாம் வரலாறுகளை, வழிகாட்டிகளை தொலைத்து விட்டு ஒரு குறுகிய வட்டத்தில் நின்றுகொண்டு தமிழ்தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது மிக மிக வேதனையான ஒரு விடயம்தான் ,மீண்டும் காந்தீயங்கள் போன்ற அமைப்புக்கள் உருவாக வேண்டும் அவற்றின் ஊடாக மக்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன் .

மண்டபம் நிறைந்த ஒரு நிகழ்வு நடந்தது என்றால் இன்றுதான் எல்லோரும் வந்திருந்தார்கள் கட்சி இயக்க வேறுபாடுகள் இன்றி ஒரு நல்லிணக்க செயல்பாடு போல் இருந்தது .

 

12316423_10204041417755573_5720236388572

12347710_917080014995435_576080855152228

Link to comment
Share on other sites

6 hours ago, அஞ்சரன் said:

உண்மையில் நாம் வரலாறுகளை, வழிகாட்டிகளை தொலைத்து விட்டு ஒரு குறுகிய வட்டத்தில் நின்றுகொண்டு தமிழ்தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது மிக மிக வேதனையான ஒரு விடயம்தான் ,மீண்டும் காந்தீயங்கள் போன்ற அமைப்புக்கள் உருவாக வேண்டும் அவற்றின் ஊடாக மக்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன் .

பகிர்வுக்கு நன்றி அஞ்சரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி அஞ்சரன்...யாரது ரஞ்சித் கேள்விப்படாத பெயராய் இருக்குது

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி அஞ்சரன்...யாரது ரஞ்சித் கேள்விப்படாத பெயராய் இருக்குது

இவர் தமிழீழ காவல்துறையின்  ஒரு பொறுப்பில் இருந்தவர்  உடையார்கட்டு  பகுதி  என  நினைக்கிறேன்  நீண்டகாலம் அவருக்கும்  பேசுவதற்கு  சந்தர்ப்பம்  கொடுக்கபட்டது .இறுதியாக  வந்தவர்களில்  ஒருவர்  எனவும் சொல்லலாம் .

17 hours ago, ஜீவன் சிவா said:

பகிர்வுக்கு நன்றி அஞ்சரன்.

நன்றி  வருகைக்கு  ஜீவன்  சிவா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அஞ்சரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காந்தீயம் டேவிட் ஐயா நிகழ்வு பற்றிய பதிவு

meet phoகாந்தீயம் டேவிட் ஐயாவின் நினைவுப் பகிர்வும் , கலந்துரையாடலும், நூல் வெளியீடும் சென்ற ஞாயிற்றுக்கிழமை (06.12.2015) பிரான்சின் தலைநகர் பாரீஸ் லாச்சப்பல் செயின்ட் புறுனோ மண்டபத்தில் இடம்பெற்றது. பல்வேறு அரசியல் நம்பிக்கை கொண்டவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், நண்பர்கள் பொது மக்கள் என மிகத் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்ச்சிக்கு காந்திய சமூக செயற்பாட்டாளர் இ. பூபாலசிங்கம் அவர்கள் தலைமை தாங்கினர். ‘இலங்கை தேசிய இனப்பிரச்சனையும் டேவிட் ஐயாவும்’ என்ற தலைப்பிலான உரையை பி.ஏ.காதர் அவர்கள் நிகழ்த்தினார்கள்.டேவிட் ஐயாவைப் பற்றி தொகுக்கப்பட்ட ‘அர்ப்பண வாழ்வில் வலிசுமந்த மனிதன்’ என்ற நூலும் வெளியிடப்பட்டது.

மிகவும் நட்புணர்வுடனும் தோழமையுடனும் நடைபெற்ற கூட்டத்தில் இறுதியில் நடைபெற்ற கலந்துரையாடலில் பார்வையாளர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய நண்பர்களின் பேச்சின் சிறுகுறிப்புக்கள் பின் இணைப்பாக இங்கு தரப்பட்டுள்ளது

இ. பூபாலசிங்கம்

POOBALAPILLAI இ. பூபாலசிங்கம்

டேவிட் ஐயா இராஜசுந்தரம் ஆகியோர் காந்தீய அமைப்பை உருவாக்கி பாதிக்கப்பட்ட மலையக மக்களை எமது வடகிழக்கு பிரதேசங்களில் குடியேற்றி அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை செய்து, எமது தமிழ் பிரதேசங்களை காப்பாற்றிய மனிதர்கள்.அதுபோல் வடகிழக்கு பிரதேசங்களிலுள்ள எல்லைக் கிராமங்களுக்கு அரணாக பண்ணைகள் குடியேற்றத் திட்டங்களை திட்டமிட்ட தன்னிறைவு பொருளாதாரத்துடன் சிறப்புற செய்தார்கள். சில காலப் பகுதியில் ரி.ஆர்.ஆர் ஓ மற்றும் செடெக் என்னும் ஸ்தாபனங்களையும் இணைத்துக்கொண்டு கூடுதல் உதவிகளை செய்தார்கள்.

ஜென்னி

ஜென்னி ஜென்னி

காந்தீயம் என்பது இதன் ஸ்தாபகர்களான தலைவர் டேவிட் ஐயா செயலாளர் வைத்தியர் ராஜசுந்தரம் ஆகியோர் ஒன்றிணைந்து உருவாக்கிய அமைப்பாகும்.

இவர்களின் நோக்கம் குறிக்கோள் என்பன ,கிராமிய மட்டத்திலான ஆரம்ப பாடசாலைகளை உருவாக்குவதும் இதற்கான தொண்டர் ஆசிரியர்களாக அந்தந்த கிராம மட்டத்திலுள்ள இளம் பெண்களை தெரிவு செய்து அவர்களுக்கான விழிப்புணர்வு- ஆளுமை-கிராமியத்தின் தலைமை மற்றும் சமூக அக்கறையுடனான கல்வி முறைமைகளை பயிற்றுவித்து அந்தந்த கிராமத்தின் சமூக பிரதிநிதியாக்குவதும், அந்தக் கிராமத்தை மையப்படுத்தி கிராமிய கூட்டுத்தலைமையை உருவாக்குவதாகும்.. அடுத்ததாக கிராம மக்களிடையே தன்னிறைவு பொருளாதாரமும் மற்றும் வடகிழக்கில் குடியேற்றத்தின் மூலம் தமிழ் பேசும் மக்களின் விகிதாசார பரம்பலை அதி கரிப்பதாகும் .

இவ்வாறாக வடகிழக்கில் மொத்தமாக 500 மேற்பட்ட பாலர் பாடசாலைகளும் 12ற்கு மேற்பட்ட பெரிய பண்ணைகள் மற்றும் நியாயவிலைக்கடைகளும் 25000 ற்கு மேற்பட்ட குடும்பங்களை குடியேற்றியதுமான வேலைத்திட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தொண்டர் ஆசிரியர்களும் ஏனைய வேலைத்திட்டங்களுக்கு பல இளைஞர்களும் இணைக்கப்பட்டனர் நானும் திருமலை தொண்டராசிரியராக 1979லிருந்து 1983 வரை செயற்பட்டதால் இந்த மறைந்த டேவிட் ஐயா -டொக்டர் ராஜசுந்தரம் மற்றும் சந்ததியார் அனைவருடனும் பயணித்த காலங்களும் அவர்கள் எங்களைப் போன்றோரை உருவாக்கிய விதமும் மொத்தத்தில் ஒரு மக்கள் போராட்டத்தை மையப்படுத்தி வாழ்வியல் பணிகளை முதன்மை படுத்தி எம்மை போன்றோரையும் வழிநடத்தி தினார்கள். எம் சமூகத்தின் பால் இவர்களுக்கு இருந்த அக்கறைகளும் அர்பணிப்புக்களும் அதன் செயற்பாடுகளும் எம் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு வரலாற்று பாடமே.

எம். பௌசர்

எம். பௌசர் எம். பௌசர்

காந்தீயம், டேவிட் ஐயாவை வரலாற்றில் நாம் கண்டைய முற்படும்போது, டொக்டர் இராசசுந்தரம், சந்ததியார், போன்ற சமூக அரசியல் பங்களிப்பாளர்களையும், காந்தீயம் கொண்டிருந்த சமூக அரசியல் பொருளாதாரத் திட்டங்களையும், அதை தன்னலம் கருதாது பங்களித்த ஆயிரக்கணக்கான மனிதர்களையும் சந்திக்க முடியும். அத்துடன் வடக்கில் நடந்த சிங்களக் குடியேற்றம் , புளொட் அமைப்புக்கும் காந்தீயத்திற்குமான உறவு, 1983 ஜுலை இனப்படுகொலை, 53 அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலையின் பதிவுகள், காந்தீயத்தால் அமைக்கப்பட்ட பண்ணைகளில் தொண்டர்களாக பணியாற்ற வந்த கிராமப்புற இளைஞர்கள் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பு , அக்காலத்தில் இயங்கிய அமைப்புகள், மட்டக்களப்பு சிறை உடைப்பு, புளொட்டுக்குள் நடந்த உட்கட்சிப் போராட்டம், தமிழகத்தின் அகதி வாழ்வு போன்ற பல்வேறு முக்கிய வரலாற்றின் கட்டங்களை சந்திக்க முடியும்.

தமது அனுபவங்கள், பாடங்கள், பாடுகளை எழுத வரலாற்றில் சம்பந்தப்பட்ட அனைவரும் முன்வர வேண்டும். ஏனெனில் சமகாலத்தினை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, இளைய தலைமுறையினருக்கு முழு வரலாறும். ஈழப் போராட்டத்தின் தொடக்கம் பற்றிய அறிதல் கொண்டு சென்று சேர்க்கப்படவில்லை. இதற்கு சுயேற்சையான ஆய்வு நிறுவனங்களும் காய்தல் உவத்தல் அற்ற ஆய்வாளர்களும் தேவைப்படுகின்றனர். அதற்கான சிந்தனையை கிளர்த்துவதற்காகவே, காந்தீயம் , டேவிட் ஐயா பற்றிய எம்மால் வெளியிடப்பட்ட நூல் அமைகிறது

மணி நாகேஷ்

மணி நாகேஷ் மணி நாகேஷ்

ஈழப்போராட்ட வரலாற்றில் பல அற்புதமான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம்.களத்தில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்து போராடிய போராளிகள் ஒரு புறமும் அறவழியில் கருத்தியல் ஜனநாய தளத்தில் தமது இனத்தின் வாழ்விற்காய் போராடிய மனிதர்கள் இன்னொரு புறமுமாக போராட்ட அசைவியக்கம் நகர்வதை நாம் அறிவோம் .இந்நிலையில் 1970களில் காந்தீயம் என்ற இயக்கத்தை உருவாக்கி அதன் வழி தமிழினத்தின் வாழ் வுரிமைக்காக போராடிய மகத்துவமான மனிதராக டேவிட் ஐயாவை நாம் காண்கின்றோம்.

அண்மையில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போது பேரினவாதிகளின் திட்டமிட்ட குடியேற்றம் என்பது -எமது இனத்தை எவ்வாறு வேரறுத்து செல்கின்றதென்பதை, புள்ளிவிபரங்களை விரிவாக அறிக்கையிட்டிருந்தார். பேரினவாதிகளின் இனஅழிப்பின் இன்னொரு வடிவமே திட்டமிட்ட குடியேற்றம் என்பதனை முன்னுணர்ந்து 70களிலேயே தமிழர் குடியேற்றங்களை நிறுவி ஏராளமான மலையகத் தமிழரின் வாழ்வாதாரத்திற்கு வழியமைத்ததுடன் சிங்கள பேரினவாதிகளுக்கும் சவாலாக அமைந்தார். 1983 ஜீலை இனக்கலவரத்தின் பின் தமிழகத்தில் புலம்பெயர்ந்த போதே டேவிட் ஐயாவை 1987ல் நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அவர் வசித்த அண்ணாநகர் வீட்டிற்கு அடிக்கடி சென்று உரையாடிய பொழுதுகள் என்றும் மறக்க முடியாதவை.

கிருபன்

கிருபன் கிருபன்

டேவிட் ஐயா உருவாக்கிய காந்தீயத்தை முன்மாதிரியாக கொண்ட பண்ணைகளின் உருவாக்கம் மக்களின் சமகால வாழ்வாதார நெருக்கடிகளுக்கான மாற்றீடாகவும் தொலை நோக்காக- சமூக முன்னேற்றத்திற்கான வேலைத்திட்டங்களை கொண்டதாகவும் இருந்ததை நாம் அறியக்கூடியதாக உள்ளது.பண்ணை அமைப்பில் காணப்படும் கூட்டு உழைப்பு முறை வாழ்க்கையும் உயிரியல் சுழற்சி முறையிலான உற்பத்தியும் தரமான உற்பத்திகளின் மக்களிற்கான நுகர்வுக்கப்பால் மாதிரி பண்ணைகளை உருவாக்கத்தினூடாக சமூக சுற்றுச் சூழலையும் பாதுகாத்து அடிப்படை சமூக மாற்றத்தையும் கட்டியெழுப்ப முடியும் என நிருபித்துள்ளார்.

இந்த பண்ணை உழைப்பு உற்பத்திகளையும் தாண்டி கல்வி -சுகாதாரம்- விளையாட்டு- கலை என அனைத்து சமூக காரணிகளிலும் காந்தீயம் கவனம் செலுத்தி செயற்பட்டிருக்கின்றதென்பதை பல தரவுகள் நிறுபித்துள்ளன.

எனவே இவற்றை படிப்பினையாக கொண்டு நாமும் எமது நாட்டில் வாழ்வாதார பணிகளை செய்ய முயற்சிக்க வேண்டும்

பாலகிருஸ்ணன்

BALAKIRUSNAN பாலகிருஸ்ணன்

நான் அறிந்தளவில் டேவிட் ஐயாவின் மூலம் உருவாக்கப்பட்ட காந்தீயம் என்னும் பரந்து பட்ட சமூக அமைப்பானது முழுமையாக தனது பணிகளை செய்ய முடியாது போனமையே எமது தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என்பதை உணர முடிகின்றதுடேவிட் ஐயா தனது அர்ப்பண வாழ்வில் நன்கு திட்டமிடப்பட்ட பொருளாதார கட்டுமாணங்களை நிறுவுவதற்கான அடிப்படை வேலைத்திட்டங்களை படிப்படியாக முன்னெடுத்துள்ளார்
அதன் வரைபாக பாலர் பாடசாலைகள்- அதன் தொண்டர் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாந்தரங்கள் மற்றும் கூட்டுப்பண்ணை முறைமைகள் என கிராம நிர்மாணப் பணிகளை சிறப்புற மேற்கொண்டார் இதனால் அனைத்து கிராமங்களிலும் உழைப்பாளி மக்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள்- சமூக விழிப்புணர்வு -இளைஞர்களின் தலைமைத்துவம் என ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப அயராது செயற்பட்டார்

ரஞ்சித்

ரஞ்சித் ரஞ்சித்

டேவிட் ஜயாவின் நிகழ்வு பற்றிய சுவரொட்டியை லாச்சப்பல் கடைத்தெருவில் ஒட்டச்சென்ற போது பலர் கேட்டார்கள் யார் இந்த ஐயா என்று இது மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. யார் இந்த டேவிட் ஐயா தமிழ்மக்களுக்கான சுதந்திர வாழ்வுக்காக தனது பதவி, பட்டம், சுகபோக வாழ்வைத்துறந்து மேற்கு நாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர். இவரை மட்டுமல்ல இதே கொள்கையுடன் தமது வீடுகளை விட்டு புறப்பட்டு உயிருடன் திரும்பி வராத அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த ஐம்பதினாயிரம் உடன்பிறப்புக்களையும் நாம் மறக்கக்கூடாது. டேவிட் ஐயாவின் கனவான காந்தீய கிராமங்களின் இன்றைய நிலை என்ன? பல அழிக்கப்பட்டு விட்டன. பல அரைவாசிக்கும் குறைவான மக்களுடன் இருக்கின்றன. தாயகம் செல்லத் தடையற்றவர்கள் அங்கு சென்று இக்காந்தீய கிராமங்களை மீளமைப்பதே டேவிட்ஐயாவிற்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.

கிரிஸ்டி

KIRIST கிரிஸ்டி

நான் மாணவர் அமைப்பிலிருந்து பின் புளொட்டின் செயலதிபர் உமாமகேஸ்வரன் கொள்கையால் கவரப்பட்டு புளொட்டில் இணைந்தேன்.எமது செயலதிபர் மூலம் டேவிட்ஐயாவிற்கு அறிமுகமானேன்.இந்நிலையில் வவுனியாவின் எல்லை பறிபோகும் நிலைவந்த போது டேவிட் ஐயா டொக்டர் இராஜசுந்தரம் ஆகியோர் போராடி நின்றது. காரணம் இவர்கள் எமது மக்களை மூன்றுமுறிப்பு தச்சன் குளம் போன்ற பதகுதிகளில்குடியேற்றி இடைநிறுத்தம் செய்தனர்.இதற்கு முன் வவுனியா எம்பி அடங்காத்தமிழன் திரு சுந்தரலிங்கம் தனது காணிகளை கொடுத்து உதவி செய்தனர் இதற்கு காரணம்ஆனையிறவுக்கு அப்பால்(வெளியே)வராமல் உள்ளே இருந்தபடி பிரதேசவாதத்தை பேசி நாம் நம்மண்ணை இழந்ததுதான்
இதன் பின் காந்தீயத்தின் செயற்பாடு தடைப்பட சர்வோதயத்தில் இணைந்து எமது செயற்பாட்டைத் தொடர்ந்தோம்.இந்நிலையில் டொலர் பாம், கென் பாம் பறிபோன நிலையில் கொக்குளாயும் அதன் தொடர்ந்த பிரதேசங்களும் பறிபோகமுல்லைத்தீவு நோக்கி வந்த மக்களை பராமகரிக்கவேண்டியேற்பட்டது.இது தான் எமது கடந்த கால வரலாறு.இது இங்கு அமர்ந்திருக்கும் தலைவர் புபாலசிங்கம் அவர்கட்கும் தெரியும்.

பி.ஏ.காதர்

பி.ஏ.காதர் பி.ஏ.காதர்

டேவிட் ஐயாவை நினைவு கூர்வது எதற்காக?அவர் தனது சமூகத்தை நேசித்த ஒரு நேர்மையான எளிமையான உண்மையான மனிதர் என்பதனால் எமது நன்றிக் கடனை செலுத்துவதற்காகவா?விடுதலைப் போராட்டத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு மேற்கத்தைய நாடுகளில் அடைக்கலம் கோரி சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு பொழுது போக்காக அரசியல் பேசும் நபர்களைப் போலல்லாது தனக்கு முன்னால் இருந்த சுகவாழ்வை தூக்கியெறிந்து விட்டு ஒரு வேலைத்திட்டத்துடன் நாடு திரும்பி அதற்காக வாழ எத்தனித்து அப்பயணம் தடைப்பட்டு போன பின்னரும் அதற்கான தருணத்தை எதிர்பார்த்தபடி எஞ்சிய காலத்தை கழித்த அவரது அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்துவதற்கு மாத்திரம் தானா? நல்லதொரு வெகுஜன அமைப்பை கட்டியெழுப்பி அதனை புளொட் அமைப்பிற்கு தாரைவார்த்து கொடுத்து அதனால் காந்தீய அமைப்பே அழிவதற்கு காரணமாயமைந்தவர் என குற்றஞ்சாட்டுவதன் மூலம் தம்மை தத்துவார்த்த மேதைகளாக காட்டிக் கொள்ள முயல்கின்ற சிலரது வக்கிரத்தை ஓதுக்கி விட்டு நோக்கினால் அவரை நினைவு கூறுவதென்பது நாம் பார்க்கத் தவறிய அல்ல புரிந்து கொள்ளத் தவறிய அவரது பார்வையை அதன் இலட்சியத்தின் தாற்பரியத்தை அல்லது இலட்சிய நோக்கை சமூக விஞ்ஞான வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்து கொண்டு அவர் தொடக்கி வைத்த பயணத்தை தொடர வேண்டிய வரலாற்று கடமையை நினைவுட்டிக் கொள்வதற்காகத்தான்.

அசோக்

அசோக் அசோக்

தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காககவும் தன் வாழ்வை அர்பணித்த டேவிட் ஐயா நம்மைப்போல் சுயநலமிக்க வாழ்வொன்றை தேர்வு செய்திருந்தால் அவர் கோடீஸ்வரராக மாறியிருப்பார்.ஆனால் அவர் எமது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்காக மேன்மைக்காக தனது பதவியையும் பட்டத்தையும் துறந்து தனது சொந்த உழைப்பை தியாகம் செய்தார்.இதற்காக அவர் காந்தியத்தை தேர்வு செய்தார்.

காந்திய கோட்பாடுகளில் காணப்பட்ட எளிமை சிக்கனம் கிராமிய சுயபொருளாதார திட்டம் உள்ளுர் வளங்களை பயன்படுத்தல் சுயஅபிவிருத்தி தன்னிறைவு என்பன போன்ற நடைமுறை சார்ந்த திட்டங்களை சுவீகரித்து அவற்றை செயல்வடிவத்தில் நடைமுறைப்படுத்தினார்.டேவிட் ஐயா தொலை நோக்கு சிந்தனை கொண்டவராக செயல்படுத்திய அரசியல் சமூக பொருளாதார கல்வி மேம்பாட்டு திட்டங்களை நாம் தொடர்ச்சியாக செயல்படுத்தி இருப்போமானால் தமிழ் பிரதேசங்களில் பல்வேறு மாற்றங்களை நாம் உருவாக்கியிருக்க முடியும்.

 

http://inioru.com/memories-of-ghnadeyam-david-iya-event-held-in-pais/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

நம்ம யாழ் கிருபனா அது?

இப்படி ஒரு கேள்வி வரலாம் என்று நினைத்திருந்தேன்.!

2007 இல் சாத்திரியும் இவரை நான் என்று நினைத்துக் கேட்டிருந்தார். 

நான் அவரில்லை!

மேடையில் எல்லாம் பேசிப் பழக்கமும் இல்லை. முடி இல்லாத மண்டையுமில்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.