Jump to content

என்னவளே என் கவிதை


Recommended Posts

உன் 
கள்ளம் பிடிபட்டது .....
கண்ணாடியில் நீயே....
உன்னைபார்த்து பேசுகிறாய் ....
என்றுதான் இதுவரையும் ....
நினைத்தேன் ....!!!

இல்லை இல்லை ....!!!

என் 
உருவத்தை நினைத்து ....
என்னோடு பேசுகிறாய் ....
என கண்டுகொண்டேன் .....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 01

 

####

ஏய் ....
நீ தூங்கிவிட்டு எழுந்த .....
போர்வை கசங்கியிருக்கும் ....
வடிவத்தை பார் ......
இதய வடிவத்திலேயே ....
சுருண்டு கிடக்கிறது .....
அத்தனை நினைவகளுடன் ....
கனவுகளுடன் தூங்கியிருகிறாய் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 02

Link to comment
Share on other sites

நீ .........!!!
குளிக்கும்போது ....
எதற்காக சிரிக்கிறாய் ....?
உச்சியிலே ஊற்றும் போது ....
உன்னை மறந்து சிரிக்கிறாய் ....
உண்மையைச்சொல் .....
என்னை தானே நீராக ....
நினைக்கிறாய் .....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 03

###

தலையை துவட்டிவிட்டு ....
துவாயை பார்த்து ....
சிணுங்குகிறாய் .......
முடிகள் உதிர்ந்து விட்டதே ...!!!

உனக்கு தெரியுமா ...?
உதிர்ந்த முடிகள் ....
ஓலம்விட்டு அழுகின்றன .....
உன்னை விட்டு பிரிந்து ....
விட்டோமே என்று ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 04

Link to comment
Share on other sites

கோயிலில் அம்மனுக்கு ....
சேலை மாற்றி அலங்காரம் ....
பார்கிறார்கள் .....
என் நடமாடும் அம்மனின் ...
தரிசனம் கிடைக்காதவர்கள் ...!!!

பாட்டி 
சொன்னது நினைவுக்கு .....
நினைவுக்கு வருகிறது .....
இறைவன் மனிதவடிவில் ....
அவதரித்தார் என்று ......
இன்று பூரணமாய் நம்புகிறேன் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 05

Link to comment
Share on other sites

நீ 
வீதிவழியே வருகிறாய் ....
கற்களும் முற்களும் ....
தானாகவே விலகுகின்றன ....
உன்னை குத்தி ஜென்மபலியை....
ஏற்க விரும்பவில்லைபோலும் ....!!!

மலர்ந்த பூக்கள் கூட முகம் ....
சுழிக்கின்றன உன் அழகை ...
பொறுக்கமுடியாமல் கோபம் ....
கொண்டுவிட்டனபோலும் ....?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 06

###

எல்லோர் 
தலையை சுற்றியும் ....
இரவில் நுளம்புதானே .....
வட்டமிடும் ......
உன் தலையை சுற்றி ....
பட்டாம் பூச்சிகள் ....
பறக்கின்றனவே ....?
இரவு பூந்தோட்டம் நீயோ ...?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 07

Link to comment
Share on other sites

சூரியன் திரும்பும் ....
திசையில் சூரியகாந்தி பூ ....
திரும்புமாம் .....!!!

நீ 
சற்றே திரும்பிப்பார் ....
எத்தளை சூரியர்கள் ....
திரும்புவார்கள் .....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 08

ஆயிரம் கவிதைகள் ....
ஆயிரம் பின்னூடல்கள் ....
ஆயிரம் கவிரசிகர்கள்.....
பலநூறு சிறப்புகவிதை ....!!!

அத்தனையையும் ....
தாண்டிய சிறப்புகவிதை .....
என்னவள் கவிதையை ...
ரசித்து என் கையில் ....
முத்தமிட்ட ஆசை என்று ....
சொன்ன அந்த ஒரேகவிதை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 09

Link to comment
Share on other sites

எத்தனை நாள் ....
இடியுடன் கூடிய மழை ....
பொழிந்தாலும் .....
என்னவள் கண்சிமிட்டும் ...
நொடியில் என் இதயம் ....
காணும் இடியின் ஓசையை ....
என்னவள் என்ன பார்க்கும் ...
கணப்பொழுதில் ...
என்னில் தோன்றும் மின்சாரம் ....
எதுவுமே நிகரில்லை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 10

Link to comment
Share on other sites

நீயும் நானும் ....
காதல் பாதயாத்திரை ....
செல்வோம் வாராயா ....?
உன் பெயரை நானும் ....
என் பெயரை நீ ....
உச்சரிப்பதே நம் ...
காதல் பஜனை கீதம் ...!!!

என்னை நீ பார்ப்பதும் ...
உன்னை நான் பார்ப்பதும் ....
காதல் ஆராதனை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 11
Link to comment
Share on other sites

எனக்கு காதல் பிடிக்காது ....
காதல் என்றாலே கசப்பு ....
வேலையில்லாதவன் ....
செய்யும் வேலையே காதல் ....!!!
இப்படி சொல்பவரெல்லாம் ....
உன்னை பார்க்காதவர்கள் .....!!!

உன்னை பார்த்தபின் காதல் ....
வரவில்லையென்றால் ...
பிறப்பிலேயே அர்த்தமில்லை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 12

பாம்பின் வாயில் அகப்பட்ட ....
தவளைபோல் வாழ்கிறேன் ...
உன்னை பார்க்காமலும் ...
பேசாமலும் தவிர்க்கிறேன் ...!!!

நிச்சயம் சொல்வேன் ....
நான் போதைபழகத்துக்கு ....
ஆளாகமாட்டேன் ....
போதையாக நீ இருப்பதால் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 13

Link to comment
Share on other sites

ஏய் என் கவிதைகளை ....
காகிதக்கப்பல் செய்து ....
விட்டிருக்கிறாய் போலும் ....
இரண்டு கப்பல்களும் ...
ஒன்றை ஒன்று உரசுகின்றன ...!!!

தயவு செய்து அவற்றை ...
பிரிக்காதே - நானும் நீயும் 
அல்லவோ அவை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 14

உனக்கு எழுதிய கவிதையை ....
பார்த்துவிட்டு - தங்களுக்கும் ...
கவிதை எழுதப்பழக்கி விடுங்கள் ...
என்கிறார்கள் ....!!!

கவிதை 
எழுத பழகதேவையில்லை 
காதலித்தால் போதும் கவிதை ...
அருவியாய் கொட்டும் என்றேன்...
நான் என்ன கவிஞனா ....?
இல்லையே - காதலித்தேன் ....
எழுதுகிறேன் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 15

Link to comment
Share on other sites

நீ 
ஓடி வரும்போது ...
காற்று உன்னை நன்றக ....
தழுவுகிறது .....
காற்று கொடுத்துவைத்தது ....!!!

நீ 
மூச்சு வாங்கும் போது ....
எனக்கு பேச்சே 
நின்றுவிடும்போல் இருக்கிறது ....
உன் மூச்சில்லாவிட்டால் ....
எனக்கு பேச்சேது ....?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 16

Link to comment
Share on other sites

உன் 
பார்வை கிடைக்காத ....
இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ....
வருத்தப்படும் வாலிபர் சங்கம் ...
உருவாக்கப்போகிறார்களாம் ...!!!

உன் 
பார்வை பட்ட நானோ ....
வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை ....
நீ அறிவாயோ ...?
எப்போது அறிவாயோ ....?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 17

Link to comment
Share on other sites

நீ 
பூக்களின் ராணி ....
நீ வரும் வழியெல்லாம் ....
பூக்கள் உனக்கு ...
தலைவணங்குகின்றன .....!!!

வீதியிலே ....
பூக்கள் வாடிவிழுந்துள்ளன ....
என்று நினைக்காதே ...
உன் பாதங்களில் அவை ....
தொடவேண்டும் என்பதற்காக ....
தானாக உதிர்ந்தன ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 18

எத்தனை முறைதான் ....
ஏமாறுவது -நீ நீ என்று ....!
பெண்கள் எல்லாம் ....
நீயாக தெரிய என்ன ....
ஜாலம் செய்கிறாய் ...?

நண்பன் டேய் ...
என்று கூப்பிடால் கூட ...
நீ அழைப்பதுபோல் ....
இருப்பதற்கு என்ன ....
மாயம் செய்தாயோ ...?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 19

Link to comment
Share on other sites

எனக்கு அவள் அழகு ....
தங்க,, வைர,, முத்து ....
என்று சொல்லிக்கொண்டு ....
போகலாம் ....!!!

இத்தனை அழகாக ....
தெரிவது அவள் அங்கம் அல்ல .....
அவளில் நான் காணும் காதல் ....
அவளிடம் காதல் நிரம்பியுள்ளது ....
என்னிடம் காதல் மித மிஞ்சியுள்ளது ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 20

Link to comment
Share on other sites

நம்பினால் நம்பு .....
உன்னை நினைத்து கவிதை ....
எழுதுகிறேன் .அருகில் இருக்கும் ...
கடதாசி பூவில் ஒரு இனம் ....
புரியாத வாசனை .....
செயற்கை மலரே என்னை ....
காதலிக்கும் போது ....
என் இயற்கை பூ நீ ....
ஏன் தயங்குகிறாய் ....?


++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 21

நீ காலில் முள் குத்தி .....
"ஐயோ" என்று கூச்சலிட்டாய் ....
எனக்கோ "ஐயோ" என்றது ...
"என்னையோ" அழைகிறாய் ...
என்று இதயம் துடித்தது ....
"ஐயோ" என்னை ஒருமுறை....
உன் திருவாயால் அழைதுவிடு ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 22
Link to comment
Share on other sites

ஆம் 
நீ வீட்டில் இருந்து ....
வந்துகொண்டிருகிறாய்....
வீசும் காற்றிலிருந்து ....
கேட்கும் ஓசையிலிருந்து ....
பூக்களின் ஆரவாரத்திலிருந்து...
பட்டாம் பூச்சிகளின் 
படபடப்பிலிருந்து,,,,,
புரிந்துகொண்டேன் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 23

எனக்கு அழகு இருக்கா ....?
இல்லையா என தெரியாது ....
உன்னை காதலிக்கும் அளவு ...
உள்ளம் அழகாய் அழகாய் ....
இருக்கிறது .....!!!

இல்லையேல் ...
உடல் அழகை எனக்கு தா ...
உள்ளத்தின் அழகை நான் ....
தருகிறேன் காதல் என்றால் ....
பரிமாற்றம் தானே ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 24

Link to comment
Share on other sites

நீ 
அருவிக்கு அருகில் எடுத்த ...
புகைப்படத்தை பார்த்தேன் ....
இரண்டு அருவிகள் போட்டி ...
போடுவதுபோல் இருந்தது ...
என்றாலும் நீ தான் அழகு ....
சந்திர மண்டலத்தில் அருவி ...
அழகுதானே ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 25

Link to comment
Share on other sites

உன்னோடு பேச -நீ 
வாய்ப்பு தருகிறாயில்லை...
உன்னருகே வரும் தோழியோடு ....
கதைத்தால் முறைக்கிறாய் ....
உன்னருகே காவலுக்கு வரும் ...
தங்கையுடன் பேசினால் ...
அவளையும் மிரட்டுகிறாய் ....
அப்போ உன்னோடு பேசும் ...
சந்தர்ப்பம் தான் எது ....? 

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 26

Link to comment
Share on other sites

உன்னை தெருவோரத்தில் ....
கண்டுவிட்டு பேசாமல் வரும் ...
ஒவ்வோரு முறையும் -ஆறுதல் ....
சொல்கிறது முற்றத்து பூக்கள் ....!!!
கவலை படாதே மன்னவா ....
மனமிரங்குவாள் விரைவில் ...
என்கிறது .....!!!
பூவுக்கு புரியும் தானே.....
ஒரு பூவில் குணம் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 27

என் .....
வீட்டோரம் வரபோகிறாய் ...
என்பதை உணர்கிறேன் உயிரே ....
முற்றத்து பூக்கள் அழகு பெறுகிறது ....
பட்டாம் பூச்சிகள் ஆயத்தமாகிறது ....
உன்னை அழைத்து வர .....
இருத்தும் என்னபயன் -ஒரு முறை ...
என் வீட்டை திரும்பிபார்க்கிறாய் ....
இல்லையே.....???

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 28

Link to comment
Share on other sites

நீ என்னை ....
பின் தொடராதே என்கிறாய் ....
உன் பார்வையால் முறைக்கிறாய் 
நானோ உன் நிழல் என்பதை ...
அறியாமல் வாழ்கிறாய் ....!!!
நீ என்னை தொடராவிட்டாலும் ...
நான் உன்னை தொடர்வேன் ....
நிழலாய் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 29
Link to comment
Share on other sites

மரமொன்றில் ...
நீ சாய்ந்து இருகிறாய் ....
மரத்தில் இதயம் குதூகலம் ...
அடைவதை பார்கிறேன் ....
என் இதயம் ஓலமிடுவதையும் ....
பார்கிறேன் ....
உன் இதயம் எப்போது ....
உன்னில் இருக்கும் என்னை ...
பார்க்கப்போகிறது .....?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 30
Link to comment
Share on other sites

உன்வரவுக்காக .....
காத்திருக்கும் ....
நொடியில் கூட உன்னை ...
பற்றிய கவிதைகள் ....
வரைந்துகொண்டே ...
இருக்கிறேன் ....!!!

நீ 
பேசும் காலம் வரும் வரை ....
கவிதையில் ஒரு அகராதி ....
எழுதிவிடுவேன் .....
என்னை படைப்பளியாக்கவா ...?
உன்னை படைத்தான் இறைவன் ...?

&

........என்னவளே என் கவிதை.........
.............கவி நாடியரசர் ...................
.......கவிப்புயல் இனியவன்.............
.............யாழ்ப்பாணம்.....................

 

Link to comment
Share on other sites

பொம்மையை கண்டவுடன் ....
நிலத்தில் விழுந்து அழுதேன் ...
உடனே கிடைத்தது ....!!!

உயிருள்ள பொம்மை ....
உன்னை கண்டவுடன் ....
அடம் பிடித்து அழுகிறது ...
இதயம் உன்னோடு ....
பேசும் படி .....!!!

&

........என்னவளே என் கவிதை.........
.............கவி நாடியரசர் ...................
.......கவிப்புயல் இனியவன்.............
.............யாழ்ப்பாணம்.....................

நீ 
வாங்கும் ஒவ்வொரு ....
பொருட்களும் ....
நீ வாங்கியவுடன் ...
உயிர் பெறுகிறது ....
உன் கையை முத்தமிடவே ....
உயிர் பெறுகின்றன் ....!!!

நீ 
பாவித்து தூக்கியெறிந்த ....
பொருளொன்று என்னிடம் ...
முறையிட்டுகொண்டிருகிறது ...!!!

^

........என்னவளே என் கவிதை.........
.............கவி நாட்டியரசர் ...................
.......கவிப்புயல் இனியவன்............. 
.............யாழ்ப்பாணம்.....................

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

உன்னை பார்க்க ....
எந்தளவு ஆசையோ ...
அதை விட ஆசை -நீ 
தூங்கும் அழகை பார்க்க ....
தலையணையை -நீ 
அணைக்கும் அழகை ....!!!

நான் 
ஒரு கனவு கண்டேன் ...
என்று நீ தலையை ....
சொறிந்தபடி கூறும் ...
அந்த மந்தியழகும்....
ஒரு அழகுதான் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 34

நீ 
என்னை 
காதலிக்காவிட்டாலும் ...
நான் காதலிப்பேன் 
ஏன் தெரியுமா ...?
உன்னை காதலித்த ...
முதல் ஆள் நானான ...
இருக்கவேண்டும் ....!!!

உனக்காக காத்திருப்பதே ....
காதல் சுமமாக இருப்பதால் ....
நீ காதலிக்கா விட்டாலும் ....
காத்திருப்பேன் ...!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 35

Link to comment
Share on other sites

  • 1 month later...

கவிப்புயல் இனியவன் 

என்னவளே என் கவிதை

Link to comment
Share on other sites

அழகு .....
உனக்கு பெருமை ....
எனக்கு கொடுமை ....
காதலுக்கு ஆழமில்லை ...
ஒருமுறை எனக்கு சந்தர்ப்பம் ....
தந்துபாரேன் காதலின் ...
ஆழத்தை தேடிப்பார்ப்போம் ....!!!

இறுதி மூச்சு ....
உன்னோடு பேசிக்கொண்டு ....
போகவேண்டும் ....
உன் நினைத்து போகவேண்டும் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 36

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.