Jump to content

ஹொலிவூட்டில் திருப்பதி மசிர் !


Recommended Posts

பரீட்சையில் பாஸாக வேண்டுமா? வேலை கிடைக்க வேண்டுமா? வெளிநாடு போக வேண்டுமா? தீராத நோய்கள் தீர வேண்டுமா? காதலன்/காதலியைக் கைப்பிடிக்க வேண்டுமா? பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டுமா? சினிமாவில் சேர ஆசையா?

கவலை வேண்டாம். உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள எளிய வழி உங்கள் மசிரை திருப்பதிக்கு வந்து மழுங்க வழித்துக் கொள்வது. ஏற்கெனவே மொட்டையடித்தவர்கள் பயன் பெற்றுளார்கள். பயன்பெற்றவர்கள் மீண்டும் மொட்டையடிக்க வருகிறார்கள்.

*

உலகத்தில் வத்திக்கானுக்கு அடுத்தபடியான பணக்கார ஆலய நிர்வாகம் திருப்பதிதான் என்கிறார்கள். கோயில் நிர்வாகம் சுமார் 120 கோடி டொலர்களை வருடாந்தம் செலவழிக்கிறதென்றால், கிடைக்கும் வருமானம் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பக்த கோடிகளால் கிடைக்கும் கோடிக்கணக்கான நன்கொடைகளை விட இன்னொரு கொடையும் ஆலய நிவாகத்திற்கு பணத்தை அள்ளிக் கொடுக்கிறது. அது வேறெதுவுமில்லை, பக்தர்களின் மசிர் !

மொட்டை போட்டுக்கொள்ளும் பக்தர்களின் மயிர் சுமார் 400 தொன் வரை வருடம் ஒன்றுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் பெறுமதி சுமார் 130 கோடி டொலர்கள் என்று

மதிப்பிடப்படுகிறது. 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடும் கோயில் மயிரின் பிரதான இறக்குமதி நாடுகளாக சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகி வெளிநாடுகளுக்கு வந்திறங்கும் மயிரை 2000 டொலர்களில் ஆரம்பித்து வாங்கிறார்கள் பிரபல வாடிக்கையாளர்கள்.

“கோயில் மயிர்” (Temple Hailr) என்றழைக்கப்படும் திருப்பதி மசிர் ஹொலிவூட்டில் மிகவும் பிரசித்தமானது. யாரோ ஒரு பக்தையால் ஏதோ ஒரு வேண்டுதலுக்காக கடவுளுக்கு காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட மசிர் பத்தாயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால், டேவிட்பெக்ஹாம், பரிஸ்ஹில்டன் அல்லது ஜனற் ஜக்ஸன் தலையை அலங்கரிக்கக்கூடும்.

ஒவ்வொரு வருடமும் சுமார் 9-20 கோடிப் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து மொட்டையடித்துக் கொள்கிறார்கள். இவர்களை மொட்டையடிப்பதற்காக சுமார் 600 சிகையலங்காரத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தியுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவிக்கிறது. இவர்களுக்கான பணத்தைக் கொடுப்பதென்னவோ மொட்டை போட்டுக்கொள்ளும் பக்தர்கள்தான்.

*

ஏற்றுமதி செய்யப்படும் மயிர் தரம் பிரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும் இடத்தில் பெண்கள் 10 மணித்தியாலங்களுக்கும் மேலாக, இரவு/பகலாக வேலை வாங்கப்படுகிறார்கள். ஒருநாள் ஊதியமாக இவர்களுக்குக் கிடைப்பது வெறும் 18,- ரூபாய்கள் மட்டுமே. மயிர்களில் சிக்கெடுக்கும் வேலைகளுக்கு சிறுவர்களும் அமர்த்தப்பட்டுள்ளார்கள். இவர்களின் பிஞ்சு விரல்கள் இதற்கு மிகவும் உபயோகமானவை என்பது முதலாளிகளின் விளக்கமாயிருக்கிறது.

தொழிலாளர்களுக்கான ஊதியத்திலும், வேலை நேரத்திலும் நியாயமாக நடந்துகொள்ளாத முதலாளிகள்/கோயில் நிர்வாகம் அவர்களது உடல்நலத்திலா அக்கறை காட்டப் போகிறார்கள். கைகளுக்கு கையுறைகளோ, மூக்கு/வாயை மறைக்கும் தடுப்புத்துணிகளோ இல்லாத நிலையில் மயிர்க் குவியல்களுக்குள் இருந்து வேலை செய்யும் பெண்களும், பிள்ளைகளும் தோல் நோய் உட்பட பலவிதமான் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.

*

வீணாகப் போகும் மயிரைக் காசாக்குவது ஒன்றும் பிழையான விடயமல்ல. ஆனால் கோயிலின் பெயரால் ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களைச் சுரண்டுவது உடனடியாக தடுக்கப்பட வேண்டியது. இங்கே தொழிலாளருக்குரிய பாதுகாப்புகள் எதுவுமில்லை. வேலைநேர ஒழுங்குகள் இல்லை. வயதெல்லை கவனிக்கப்படவில்லை. மருத்துவ வசதிகள்/சுகாதர ஒழுங்குகள் இல்லை. மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது.

*

மயிரை மழுங்க வழித்துவிட்டு, மொட்டைத் தலையுடன் திரிந்தால் கேட்டதைக் கொடுப்பார் கடவுள் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இவர்களின் இந்த நம்பிக்கை முட்டாள்தனமானது என்று ஆணித்தரமாக நம்புவது கடவுள்/மத எதிர்ப்பாளர்கள் மட்டும் இல்லை, முக்கியமாக கோயில் நிர்வாகம்தான் என்பது இங்கு சுவாரஸ்யமானது. இல்லையென்றால் பக்தர்கள் கடவுளுக்கு அன்புடனும்/பயத்துடனும் அள்ளி வழங்கும் மசிர்-காணிக்கையை விற்று அவர்கள் காசாக்குவார்களா?

மதங்கள்/கோயில்கள் ஒடுக்குமுறை நிறுவனமாக மட்டுமல்ல, சிறந்த வியாபாரிகளாகவும் இருக்கின்றன என்பதற்கு மயிர் வியாபாரம் ஒரு சின்ன சாட்சியம்தான். மறைத்தும், ஒளித்தும் செயற்படுகின்ற கோயில்கள் இப்போதெல்லாம் நிர்வாணமாகிக் கொண்டிருந்தாலும், கடவுள் நம்பிக்கை முற்றிப் போன பக்தர்கள் இவற்றைக் கண் திறந்து பார்ப்பதாயில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது நம்பிக்கைகளைப் பற்றிக் கதைப்பது முட்டையில் மயிர் புடுங்குவது போன்றது அல்லது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாக எடுக்கிறார்கள். இதில் அவர்களின் மயிர் “பிஸ்னெஸ்” பற்றிக் கதைப்பதெப்படி. தங்கள் நம்பிக்கைகளே தங்களை மொட்டையடிப்பதை அவர்கள் புரிந்துகொள்ள விரும்பவில்லை.

பக்தர்களை நன்கு புரிந்து கொண்ட கோயில் நிர்வாகமோ கோடிக்கணக்கான டொலர்களில் புரள்கிறது. காசேதான் கடவுளடா, அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா என்பது அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது!

*

இந்த மசிர் வியாபாரம் பற்றி சுருக்கமாக ராஜேந்தர் பாணியில் சொல்வதென்றால் -

பக்தர்கள் அடிப்பதோ மொட்டை

கோயில் நிர்வாகம் எண்ணுவதோ துட்டை

கடவுள் நம்பிக்கைக்கு போட்டார் பட்டை

http://porukki.weblogs.us/2006/12/14/holly...ruppathi_masir/

Link to comment
Share on other sites

கடவுள் மீதே சந்தேகம் கொண்டவர்கள் நமது பக்தகோடிகள். கையை காலை வெட்டிக்கொடுக்க மாட்டினம் ஏனென்டால் திருப்பி வளராது. மயிர் வளிச்சாலும் திருப்பி வளரும். வளராட்டிக்கும் பராவாய்யில்லை.

போனா மயிர் வந்தால் மலை என்டு சொல்வாங்களே அதுதான் இது.

Link to comment
Share on other sites

  • 2 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.