Jump to content

எம்.பிக்கள் - மாகாண சபையினர் சந்திப்பை உடனே நடத்துங்கள்! - கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கோரிக்கை


Recommended Posts

 
[ வியாழக்கிழமை, 24 டிசெம்பர் 2015, 01:50.57 AM GMT ]
sampantan.JPG
மாகாண சபையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பை உடனடியாக நடத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று வலியுறுத்தியுள்ளனர்.

வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத் திட்டம் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கே இந்தச் சந்திப்பை உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண சபையின் ஒரு தொகுதி உறுப்பினர்கள், நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்புக்குச் சென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாணசபையின் வரவு - செலவுத் திட்டம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது. அமைச்சுக்களுக்கு ஒதுக்கிய நிதி உரியமுறையில் செலவு செய்யப்படாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஒதுக்கிய நிதியில் 58 சதவீதமான நிதியே செலவு செய்யப்பட்டு முடிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாலும், எஞ்சிய நிதி திரும்பிச் செல்லும் நிலையில் இருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராயப்படவேண்டும் என்று சம்பந்தனிடம் மாகாண சபை உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் அதில் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலும் ஆராயவேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக, மாகாண சபை உறுப்பினர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 27ம் அல்லது 28ம் திகதிகளில் கூட்டத்தை நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

http://www.tamilwin.com/

 
 
Link to comment
Share on other sites

அடுத்த தடவை விக்கி முதலமைச்சராக வாய்ப்பில்லாமல் போய்விடுமோ? சைக்கிள் காரர்கள் அவரைக் கைவிடமாட்டினம் என்று நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்துப்போன சைக்கிள்ள ஏறினால் கோவிந்தா கோவிந்தாதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் மாவை கும்பல்கள் கூட்டமைப்பு எண்ட பேரிலை வந்தபடியாலைதான்  இண்டுவரைக்கும் காத்து போகாமல் ஓடிக்கொண்டிருக்கு :innocent:........அவரவர் பழைய சொந்த நாமங்களோடை வந்திருந்தால் இண்டைக்கு றிம்மே இருந்திருக்காது கண்டியளோ!!!! :cool:

Link to comment
Share on other sites

சம்பந்தர் மாவை கூட்டத்தினர் உறுதியான வண்டியில் இருந்ததனால் தான் பல அன்னக்காவடிகள் தாவிக்கொண்டன.

இல்லாவிட்டால் சிதம்பரத்தாரை கூட்டமைப்புக்கு தலைவராக நியமிக்காமல் சுரேசை புலிகள் நியமிக்க வைத்திருக்கலாம் தானே?

இன்றைக்கும் விட்டு சின்னத்தில்தான் எல்லாரும் வாக்கு கேட்கினம். எல்லாத்துக்கும் மேல பல கட்சிகளையும் இணைத்து பொதுவான ஒரு நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த கூட்டமைப்பு நோக்கம் நிறைவேறினால் இந்த அமைப்பு பிரிந்து பன்முகப்படலாம்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் சுதந்திர கட்சியின் தலைமையில் உருவான ஒரு கூட்டமைப்புத்தான் அதுக்காக அதை போய் ஒருகட்சியாக பதிவு செய்யச்சொல்ல கேட்டால் எப்படி இருக்கும்?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.