Jump to content

வெற்றி இல்லாத யுத்தமா? தோல்வி இல்லாத சமாதானமா?


Recommended Posts

http://www.tamilnaatham.com/articles/2007/jan/sabesan/09.htm

"பொன்சேக்காவே சொன்னவர்" புலிகள் பலமாக இருக்கிறார்கள். "வரலாற்றில் முதல் தடவையாக திருகோணமலை தளங்களிற்கு எறிகணை அடிக்கிறம்" என்ற முதுகு சுரண்டலில் உடன்பாடில்லை. சிறீலங்காவும் வரலாற்றில் முதற்தடவையாக செய்த பலவற்றைப் பட்டியல் இடமுடியும்.

முடிவுரையில் கேட்பவர்களை (வாசகர்களை) திருப்த்திப்படுத்தும் வகையல் "வெகுவிரைவில்" பாச்சல் நடக்கும் என்ற வழமையான பீச்சலில் உடன்பாடில்லை.

மற்றும் படி சமாதான காலத்தின் சவால்கள் சதிகள் வெற்றிகள் பற்றி நல்லதொரு பார்வை.

இன்று நாம் எதிர்கொள்ளும் கவலைக்குரியதும் வேதனையானதுமான விடையமும் எமது மிகப்பெரும் பலவீனமாக மாறக்கூடிய ஆபத்தில் இருப்பதும் "புலிகள் இராணுவ ரீதியில் பலமாக இருக்கிறார்கள்" என்று அடிக்கடி காட்டி வெளிப்படையாக சாகசங்கள் செய்து ஒளிப்பதிவில் காட்டி செய்தித்தலையங்கங்களாக ஆக்கினால் தான் எம்மவர்கள் (அதாவது தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை என்பவற்றில் நம்பிக்கை உள்ள விடுதலைக்கும் சுதந்திர தமிழீழ தனியரசிற்கு ஏங்குபவர்கள்) தமது நிலைப்பாட்டை தொடர்வார்கள் போலுள்ளது. இல்லாவிட்டால் தமது அபிமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ரசிகர்களை திருப்த்திப்படுத்தும் வகையில் நடந்து காட்டாவிட்டால் மாற்றிக் கொள்வது போல் மாறிவிடும் நிலையில் இருக்கிறார்களா?

ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்...

சிறீலங்காவோடு ஒப்பிடும் பொழுது புலிகளின் நிலை பின்வரும் 3 இல் ஒன்றாகத்தான் இருக்கும்.

-1- புலிகள் பலவீனமாக இருக்கிறார்கள்

-2- புலிகள் சமபலத்துடன் இருக்கிறார்கள்

-3- புலிகள் பலமாக இருக்கிறார்கள்.

போராட்டத்திலும் அதன் அடிப்படைகளிலும் உண்மையான விசுவாசம் இருந்தால் மேலுள்ள 3 இல் எதுவாக இப்பொழுது புலிகள் இருக்கிறார்கள் என்பது விவாதத்திற்கும் ஆய்விற்கு தேவையானதா?

புலிகள் பலவீனமாக இருக்கிறார்கள் என்ற worst case assumption எடுத்துக் கொண்டு தொடர்ச்சியாக பலப்படுத்துவதிலும் எம்மால் முடிந்ததை தொடர்ந்து பங்களிப்பதையும் எமக்குரிய கடமையை செய்ய எமக்கு பக்குவம் இல்லாது இருப்பது ஏன்? 30 வருடத்திற்கு மேலான போராட்ட அனுபவத்தில் இருந்து இந்த அடிப்படைப் பக்குவத்தைக் கூட பெறாத பரதேசிகளாக ஏன் நாம் இன்னமும் இருக்கிறோம்?

ஏன் இப்படியான சஞ்சலங்கள் எமக்குள்? அதை தெளிவுபடுத்த ஆய்வுகள் ஏன் அடிக்கடி தேவையாகிறது? இவற்றால் சுதந்திரமாக தனிநாடு ஒன்றை நிர்வகிக்கும் பொறுப்பும் பக்குவமும் தகுதியும் உள்ள ஒரு இனமாக உலக அரங்கில் நாம் தெரிவோமா? இல்லை எம்மை அங்கீகரித்து தனி நாட்டை உருவாக்க உதவினால் கடமையில் பொறுப்பில் கவனம் இன்றி வறுமையும் குற்றங்களும் நோயும் மரணங்களும் குடி கொண்ட இன்னொரு தோல்வி அடைந்த நாடாக மாறும் என்ற சந்தேகத்தை சர்வதேசத்திற்கு கொடுக்கிறோமா? ஒரு சுதந்திர தனிநாட்டிற்குரிய கடமையை பொறுப்புகளை பொறுமைகளை அர்ப்பணிப்புகளை உணர்ந்தவர்களாக விளங்கியவர்களாக பக்குவத்தைப் பெற்றவர்களாக இருக்கிறோமா?

30 வருடங்களிற்கு மேலான காலத்தில் 65000 மேற்பட்ட மக்களின் இறப்புகள் 18000 மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களிற்கு பிறகும் போராட்டைத்தை பொழுது போக்கும் அங்கலாய்ப்பாக ஏன் இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 62
  • Created
  • Last Reply

Situation Report

By Iqbal Athas

.......The near two decades of fighting by Security Forces and the Police (including the STF) in the separatist war have generated considerable international attention. In the past, US Army teams were in Sri Lanka to study some aspects including the use of improvised explosive devices (IEDs). Now, the United Kingdom's Ministry of Defence has shown interest.

Representatives of two British organizations will arrive in Sri Lanka tomorrow. One is from the Joint Counter Terrorism Training Advisory Team (JCTTAT) in the Ministry of Defence whilst the other is the Royal Navy Maritime Warfare Centre (MWC). They want to interact with senior officers in the Army, Navy, Air Force and the Police Special Task Force on their experiences in irregular warfare, force protection, securing of harbours and military bases. The three member team is also expected to visit Trincomalee. ......

கடந்த காலங்களை விட சர்வதேச நாடுகளின் ஆளுமை அதிகம் காணப்படுவதை வாகரைப் யுத்தம் மட்டும் அல்ல ஈழப்போர் - 4 இல் தொடர்ந்தும் அவதானிக்க முடியும்.

Link to comment
Share on other sites

.............நாம் எமது போராட்டத்தின் முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம்.புலத்திலும்,களத்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டம் வெற்றியோ/ தோல்வியோ ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்பது வெளிப்படையாக தெரியத் தொடங்கி விட்டது. இந்திய அணுகு முறை பற்றி ஏற்கனவே பலதடவை எழுதியுள்ளேன். கீழ் உள்ள இணைப்பு இன்னுமொரு பார்வையை தரும்.....

LTTE AVOIDS BATTLE OF ATTRITION IN THE EAST - INTERNATIONAL TERRORISM MONITOR---PAPER NO. 178

http://www.saag.org/%5Cpapers22%5Cpaper2105.html

இக்கட்டுரையின் ஆசிரியர் டெல்ஹியில் உள்ள கொள்கை வகுப்பு பிரிவு சவுத் புளெக்கின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் உங்களைப் போன்றோருக்கு பிச்சை போட்ட நிறுவனத்தில் இருந்தவர் என்று கட்டாயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்..

அவருக்கு மஹிந்தவையும் பிடிக்காது. பிரபாகரனையும் பிடிக்காது.. அவரின் எதிர்வுகூறல்கள் பல பொய்த்துப் போயின, அப்படியிருந்தும் சளைக்காமல் ஆய்வறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றார்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை, அதற்கு அவரோ, நீங்களோ, நாங்களோ விதிவிலக்கல்ல..

Link to comment
Share on other sites

எமது போராட்டம் வெற்றியோ/ தோல்வியோ ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்பது வெளிப்படையாக தெரியத் தொடங்கி விட்டது. இந்திய அணுகு முறை பற்றி ஏற்கனவே பலதடவை எழுதியுள்ளேன். கீழ் உள்ள இணைப்பு இன்னுமொரு பார்வையை தரும்.....

LTTE AVOIDS BATTLE OF ATTRITION IN THE EAST - INTERNATIONAL TERRORISM MONITOR---PAPER NO. 178

http://www.saag.org/%5Cpapers22%5Cpaper2105.html

இக்கட்டுரையின் ஆசிரியர் டெல்ஹியில் உள்ள கொள்கை வகுப்பு பிரிவு சவுத் புளெக்கின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் இன்னும் போரைத் துவக்கவே இல்லை அதுக்குள்ள முடிவுரை எழுதிப்போட்டியள். நீங்கள் யார் என்ன நோக்கத்துக்காக இங்க எழுதுறியள் என்பது வெட்ட வெளிச்சம் ஆகிட்டுது.கனக்க அவசரப்படாதையுங்கோ பிறகு சொன்னதெல்லாத்தையும் திருப்பி எடுக்க வேண்டி இருக்கும்.உங்களுக்கு பழசுகளை அடிக்கடி நாபகப் படுத்த வேண்டியதக் கிடக்கு.ஜெயசிகுறுவுக்கும் இப்படித் தான் குதிச்சனியள், கொன்சம் யோசிச்சுப் போட்டு எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

  • 1 year later...

கிழக்குத் தேர்தலை ரத்து செய் இந்தியாவை தலையிடக் கோரிக்கை - த.தே.கூட்டமைப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=36366

சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்களுக்குத் திரும்பவேண்டும் என்று தென் ஆபிரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

http://www.puthinam.com/full.php?2b1Voge0d...d434OO3a030Mt3e

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் சமாதான முன்னெடுப்புக்களையே விரும்பி நிற்கிறது: சுரேஸ் பிரேமச்சந்திரன்

http://www.puthinam.com/full.php?2b1Voge0d...d434OO3a030Mt3e

அரசும் புலிகளும் யுத்தத்தை நிறுத்தி 'சமாதான' பேச்சுகளை மீள ஆரம்பிக்க வேண்டுமென்ற தொனிப்பொருளில் 'நடுநிலை' ஊடகங்கள் என்று தம்மை கூறிக்கொள்வோர் மட்டும் அல்ல தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கும் ஊடகங்களும் செய்திகளை வெளியிடத் தொடங்கிவிட்டன.

சுமார் ஒரு வருடங்களுக்கு முன் யாழ் களத்தில் நிகழ்ந்த சில விவாதங்கள் இன்றும் தொடர்ச்சியாக விவாதிக்கக் கூடிய அனைத்து அம்சங்களும் கொண்டவை. அன்றைய விவாதங்களில் பங்கு கொண்டவர்களின் இன்றைய நிலைப்பாடு என்ன? கருத்துகள் என்ன? என்பது விவாதத்தின் தொடர்ச்சியை இன்னும் பயனுள்ளதாக்கும்; ஆரோக்கியமுள்ளதாக்கும்.

கிழக்கில் வாகரையில் நிகழ்ந்த இறுதி யுத்தகாலத்தில் மீண்டும் சமாதான பேச்சுகளைத் தொடங்கக்கூடிய அரிய வாய்ப்புகள் இருந்தன. அதனைப்போன்ற வடக்கில் ஆனையிறவில் தொடங்கவுள்ள அடுத்த பாரிய யுத்தத்துக்கு முன் 'சமாதான' பேச்சுகளைத் தொடவேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களின் கைகளில் உள்ளது.

சமாதான வழிமுறையிலான போராட்டத் தொடர்ச்சி மட்டுமே இனிவரும் காலத்தில் ''தமிழ்த் தேசியம்'' இதுவரை செய்த தியாகங்களுக்கும் சிந்திய குருதிக்கும் அர்த்தமுள்ள அரசியல் விளைச்சலை அறுவடை செய்ய உதவும்.

Link to comment
Share on other sites

சமாதான கதவுகள் திறந்துதான் இருக்கிறது எண்று தமிழீழ அரசில் துறை பொறுப்பாளர் நடேசன் அவர்கள்.. கூட்டமைப்பு நாடாளிமற்ற உறுப்பினர்களிடம் கூறியதாக செய்திகள் வெளியாகினவே... படிக்கவில்லையா காண்டம் அவர்களே...??

போரை நிறுத்தி சமாதானத்துக்கு வாருங்கள் எண்று நீங்கள் அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்புங்கள்....

Link to comment
Share on other sites

என்ன சமாதாணம் இல்ல எங்களுக்கு காண்டமாகி விட்டதா?

Link to comment
Share on other sites

ஐநா சாசனப்படி சுய உரிமைகளோடு தனித்து வாழும் தகுதியும் விழுமியங்களும் உடைய இனமாகத்தான் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். மட்டக்களப்பின் நடக்கும் கொடூரம் இலங்கை படைகள் செய்யும் அட்டூளியத்தின் உச்சமாகத்தான் பார்க்க படும்... தமிழர் மீதான ஒடுக்கு முறையின் அங்கம்தான் புலிகள் மீதான தாக்குதல் எண்று, மக்கள் மீது நடாத்தப்படும் அட்டூளியங்கள்... இதை உலகம் பார்க்கவில்லை என்று சொல்வது மிக மோசமான முட்டாள்த்தனம்...

இலங்கையில் முழு அளவில் யுத்தம் தொடங்கவில்லை... ஆனாலும் இலங்கையில் வருமானம் படுத்து விட ஆரம்பித்தாச்சு.. பங்குச்சந்தை விழுந்து செலவாணியின் நிலை பரிதாபமாக இருக்கும் வேளை இப்போதே ஆரம்பித்தாச்சு... முழு அளவான யுத்தம் என்பது சிங்கள மக்களை எப்படி எல்லாம் பாதிக்க போகிண்றது, இலங்கையை வறுமையில் வாட்ட போகிண்றது என்பதுக்கும் நல்ல உதாரணங்கள் எல்லாம் சொல்ல ஆசை, ஆனால் இப்போ வேண்டாம்.... சிங்களவர் பாதிக்க படும்போது தமிழர் பட்டதுன்பங்களின் முடிவாக அமையும்...! அப்போ தமிழரை தலைநிமிர்த்த புலம்பெயர் தமிழர் சமூகம் உறுதியாக கை கொடுக்கும்...! காரணம் அது எமது தேசம்...!

சிங்கள தேசத்தின் பொருளாதாரம் பொறிந்து விழப்போகிறது என்ற வகையான கருத்துகளைக் கடந்த ஒரு வருட காலத்தில் சிங்களம் வாங்கிக்குவித்துள்ள போர்த்தளபாடங்களின் அளவுகளுடன் ஒப்பிடும் போது பெரும் தவறான முன் அனுமானங்களாகி விட்டன. கடந்த ஒரு வருடமாக சர்வதேச சமூகம் தமிழர் தலைமையின் மீது கொடுத்த அழுத்தம் போல் சிங்கள தரப்புக்கு கொடுக்க வில்லை என்பதை இப்போ தயா புரிந்து கொண்டதால்தான் என்னவோ ''சமாதான கதவுகள் திறந்துதான் இருக்கிறது என்று தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் அவர்கள்.. கூட்டமைப்பு நாடாளுமற்ற உறுப்பினர்களிடம் கூறியதாக'' வந்த செய்திகள் குறித்து எனக்கு நினைவுபடுத்தியுள்ளார். நன்றி தயா.

தலைவரின் பேச்சையே திசை திருப்பி கருத்து வைக்கும் சமாதாணம் நீர் எல்லாம் எமக்கு சமாதாணம் பற்றி விளக்கம் சொல்லுறிங்களோ?

நிலமைப்பா வெய்யில் எறிக்கும் போது மழை பெய்வது எற்று கொள்ளாம் ஆனா வெய்யில் எறிக்கும் போது இரவு என்று அடம் பிடிப்பது கொஞ்சம் ஒவர்ப்பா

''வெய்யில் எறிக்கும் போது இரவு என்று அடம் பிடிப்பது'' சாத்தியமானது. நல்லிரவில் சூரியன் உதிக்கும் நாட்டில் வசிப்பவர்களிடம் இதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

பயனுள்ள கருத்தாடல்கள்தான் இங்கு முக்கியமே அன்றி நபர்கள் முக்கியம் அல்ல. ஒருவருடத்துக்கு முன் யுத்தம்தான் 'தீர்வு' யுத்தத்தால்தான் 'தீர்வு' என்று இருந்த ஐ.வி. சசியின் கருத்தில் இன்னும் ஏதாவது மாற்றம் உள்ளதா தெரியவில்லை. நீங்கள்தான் சசி எழுதவேண்டும்.

Link to comment
Share on other sites

சிங்கள தேசத்தின் பொருளாதாரம் பொறிந்து விழப்போகிறது என்ற வகையான கருத்துகளைக் கடந்த ஒரு வருட காலத்தில் சிங்களம் வாங்கிக்குவித்துள்ள போர்த்தளபாடங்களின் அளவுகளுடன் ஒப்பிடும் போது பெரும் தவறான முன் அனுமானங்களாகி விட்டன. கடந்த ஒரு வருடமாக சர்வதேச சமூகம் தமிழர் தலைமையின் மீது கொடுத்த அழுத்தம் போல் சிங்கள தரப்புக்கு கொடுக்க வில்லை என்பதை இப்போ தயா புரிந்து கொண்டதால்தான் என்னவோ ''சமாதான கதவுகள் திறந்துதான் இருக்கிறது என்று தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் அவர்கள்.. கூட்டமைப்பு நாடாளுமற்ற உறுப்பினர்களிடம் கூறியதாக'' வந்த செய்திகள் குறித்து எனக்கு நினைவுபடுத்தியுள்ளார். நன்றி தயா.5

500 மில்லியன் டொலர்களுக்கு இறைமை அடகுகடையில் வைத்து இருக்கும் இலங்கை பற்றிதானே நீங்கள் பேசுவது....!!

பழசுதான் எண்டாலும்புதுசாக அப்போதைய தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அண்ணா சொல்வதை ஒரு தடவை கேட்டு பாங்கள்...

பேச்சுக்கு நாங்கள் போவது பலவீனர்களாக அல்ல என்பதை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்....!!!!!

Link to comment
Share on other sites

500 மில்லியன் டொலர்களுக்கு இறைமை அடகுகடையில் வைத்து இருக்கும் இலங்கை பற்றிதானே நீங்கள் பேசுவது....!!

பேச்சுக்கு நாங்கள் போவது பலவீனர்களாக அல்ல என்பதை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்....!!!!!

இலங்கை மீள முடியாத கடனாளியாக போவது குறித்த உங்கள் கருத்துடன் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்து இல்லை. பலவீனமான நிலையில் தமிழர் தலைமை பேச்சுக்கு மீண்டும் போவதாக 'நான்' கருதுவதாக நீங்கள் குறிப்பிடுவதுடன் 'நான்' கடுகளவும் உடன்பாடு உடையவன் அல்ல.

'பலவீனம்' அல்லது 'பலம்' , 'பலவீனம்' எதிர் 'பலம்' என்ற எதிரெதிராக உரையாடல்களை நாம் தொடர்ந்து நடத்துவது விளைச்சல் அற்ற கட்டாத்தரையில் விதைநெல் எறியும் வீண்வேலை.

தமிழ்த்தேசியம் இதுவரை கொடுத்த விலைமதிப்பற்ற 'ஈகைகள்' பயனுள்ள பெறுபேறுகள் உடைய அரசியல் 'மூலதனம்' ஆக்கி தேசிய விடுதலையைத் தொடர்வதே இன்றைய யதார்த்தமாய் எம்முன் உள்ள ஒரே வழியாகும். அதனைதான் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் ''சமாதான கதவுகள் திறந்துதான் இருக்கிறது'' என்று குறிப்பிடுகிறார் என்று கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதனைதான் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் ''சமாதான கதவுகள் திறந்துதான் இருக்கிறது'' என்று குறிப்பிடுகிறார் என்று கருதுகிறேன்.

சமாதானக் கதவுகள் திறந்திருக்கின்றது என்பதனைப் புலிகள் பலமிழந்து விட்டதால் கால அவகாசம் கேட்கப் பாவிக்கிறார்கள் (அல்லது கப்பலில் இருந்து ஆயுதங்கள் வரவழைக்கப் பாவிக்கும் தந்திரம்) என மகிந்தவும் அவருக்குப் முண்டுகொடுக்கும் பேரினவாதிகளும் ஒட்டுண்ணிகளும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.. ஆனால் தமிழீழத் தனிநாட்டை அடையப் போரிடும் போராளிகளும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் தமிழ்த் தேசியத்தில் பற்றுள்ள மக்களும் இதுவோர் இராஜதந்திர ரீதியான பேச்சு என்பதனை நன்குணர்வர்.

போரின் மூலம் தமிழர்களைத் தோற்கமுடியாது என்பதனை சிங்கள அரசும் அதன் படைகளும் உணரத் தலைப்பட்டால் சமாதானம் பேசச் சந்தர்ப்பம் உள்ளது. எனினும் இந்தியாவினதும், இணைத்தலைமை நாடுகளுடன், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் இராணுவ பொருளாதார உதவிகளுடன் வன்னி மீதான ஆக்கிரமிப்பையும், கிளிநொச்சி மீதான கொடியேற்றலையும் முதன்மைப்படுத்தி நிற்கும் மகிந்தவிற்கு தற்போது சமாதானத்தில் நாட்டமில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. எனவே வலிந்து திணிக்கப்பட்ட ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு எத்தகைய சவால்களையும் முறியடித்து தமிழ்த் தேசியத்தின் சக்தியை நிலைநாட்ட வேண்டிய தேவை தமிழர்களுக்கு உண்டு. வெற்றுச் சமாதான கோசங்களால் தற்போது தமிழர்களுக்குச் சாதகமான தீர்வைப் பெற்றுவிடமுடியாது என்பதனைப் புரிந்துகொண்டு தமிழ்த் தேசியத்தினைப் பலப்படுத்தும் முயற்சியில் உங்கள் நேரத்தைச் செலவழியுங்கள்..

நன்றி.

Link to comment
Share on other sites

தமிழ்த்தேசியம் இதுவரை கொடுத்த விலைமதிப்பற்ற 'ஈகைகள்' பயனுள்ள பெறுபேறுகள் உடைய அரசியல் 'மூலதனம்' ஆக்கி தேசிய விடுதலையைத் தொடர்வதே இன்றைய யதார்த்தமாய் எம்முன் உள்ள ஒரே வழியாகும். அதனைதான் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் ''சமாதான கதவுகள் திறந்துதான் இருக்கிறது'' என்று குறிப்பிடுகிறார் என்று கருதுகிறேன்.

நீங்கள் பேச்சுக்கு எவ்வளவு தான் முக்கியத்துவம் கொடுத்தாலும் அரசூ பேச்சுக்கு வருமா எண்று ஒரு முறை ஆய்வு செய்யுங்கள்.!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.