Jump to content

கொமிட்டி.


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

கொமிட்டி.....சங்க காலம் தொட்டு இன்றுவரை சங்கங்கள் அமைப்பது என்பது எங்களது இரத்தத்தில் ஊறிய ஒன்று.இன்று பலர் தமிழ் வளர்க்க,சமயம் வளர்க்க,விளையாட்டு,விடுதலை இன்னும் பல விடயங்களை வளர்ப்பதற்காக இந்த சங்கங்களை அமைத்து அதற்கு ஒரு நிர்வாக குழுவை உருவாக்கி அதில் தலைவர்,செயலாளர்,காசாளார் பதவிகளை  அடிபட்டு பெற்று சமுதாயத்தில் அங்கீகாரம் பெறுகிறார்கள்.ஆனால்  சங்கங்களது  நோக்கங்களை நிறை வேற்றுவதிலும் பார்க்க  தனி நபர்களின் நோக்கங்களும் ஆசைகளும் இந்த சங்கங்கள் மூலம் நிறைவடைகிறது.இது தாயகத்தில் அரசியல் ,ஆயுதப்போராட்டம் போன்றவற்றில் தொடங்கி இன்று புலம் பெயர்ந்த தேசங்கள்வரை செல்கின்றது.

சங்கங்களை உருவாக்குவதில் இருக்கும் ஒற்றுமை அதை உடைப்பதிலும் எம்மவருக்கு உண்டு.ஒரு சங்கம் தொடர்ந்து தனது பணிகளை எழுதப்படாத விதிகளின் படி பல வருடங்களாகதொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது அதில் சிலபிழைகளை கண்டு பிடித்து புதிய கொமிட்டியை உருவாக்கி பிரிவினை மக்களிடையே உருவாக்குவதில்  நாம் சலைத்தவர்கள் அல்ல என பல சங்கங்களில் எம்மவர்கள் நிறுபித்துள்ளனர்.

மூத்த பிரஜைகள் சங்கம்,ஊர்சங்கங்கள்,பாடசாலை சங்கங்கள் இன்னும் பல இதில் அடங்கும்.இதற்கு முக்கிய காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் பொதுநலத்தை விட சுயநலம் ஒரு சில அங்கத்துவர்களிடையே இருப்பதை காணலாம்.

இந்த ஒரு சிலர் பெரிய மாற்றத்தையே அந்த சங்கத்தில் ஏற்படுத்தக்கூடியவர்களாக இருப்பர்.இந்த ஒரு சிலரால் ஏற்படும் மாற்றம் நன்மையை விட தீமையை அதிகம் சமுகத்திற்கு ஏற்படுத்தும்,ஏற்படுத்தியும் இருக்கு.இந்த பிரிவினை உண்டாக்க சிலர் உள்ளிருந்து வேலை செய்வார்கள் சிலர் வெளியிலிருந்து நல்லவர் போல் நடித்து பிரிவினையை உருவாக்கி மனதினுள் சிரித்து மகிழ்வார்கள்.

அண்மையில் ஒரு பஜனை சங்கத்திலும் இப்படி ஒரு இழுபறி நிலை ஏற்பட்டது.என்னடா பஜனை சங்கத்திலயும் இழுபறியா என்று நீங்கள் நினைப்பது விளங்குது ,என்ன செய்வது எங்கன்ட விதி  அதிலயும் புகுந்து விளையாடிட்டு.

இருபதைந்து வருடங்களுக்கு மேலாக பஜனை பாடிக்கொண்டிருந்த ஒரு  சங்கத்துக்கே ஆப்பு வைச்சிட்டாங்கள் என்றால் பாருங்கோ.

 

 

அன்று  வெள்ளிக்கிழமை எங்கன்ட இந்துசனங்கள்  க்திமயமாக இருப்பதாக சக இந்துக்களுக்கு காட்டுவதற்காக வேஸ்டி நஷனல் அணிந்து பஜனை பாடுவதற்கு தயாராக மண்டபத்தில் நின்றார்கள் .அடியேனும் பஜனை பாட மண்டபத்திற்கு செல்லும் பொழுது, வாசலில் வேஸ்டியை மடிச்சு கட்டி கொண்டு வழமைக்கு மாறாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார் கந்தர்.அவரது முகம் சிவந்து கோபத்தின் உச்சத்தை காட்டிகொண்டிருந்தது.

அவரிடம் பேச்சு   கொடுக்காமல் செல்ல முயற்சிக்கும் பொழுது, "டெய் சுரேஸ் என்னடா பார்க்காத மாதிரி போறாய் இங்க வாடா"

"இல்லை அண்ணே உள்ள போய்யிட்டு வந்து ச‌ந்திக்கதான் இருந்தனான்"

"நீ காய்வெட்டிட்டு போக பார்த்தனீ எனக்கு தெரியுமடா ,உங்கன்ட குணம்"

"இல்லையண்ணை, சத்தியமா உங்களை சந்திக்கதான் இருந்தனான் "

"சரி, சரி  உங்க உள்ள புடுங்குபாடு நட‌க்குது நீ கேள்வி பட்டனீயோ"

"பஜனை பாடுற இடத்தில என்ன புடுங்குபாடு"

"எல்லாம் யார் தலமை தாங்கி பாடுறது என்றுதான்."

"இவ்வளவு காலமும் ஒழுங்கா  பாடிக்கொண்டு தானே வந்தவ‌ங்கள், இருந்தால் போல‌ என்ன பிரச்சனை"

"அதடாம்பி தலமைதாங்கி பாடுற ஆளும்,பக்கவாத்தியம் வாசிக்கிற ஆட்களும் பிழையா செய்யினம் என்று ஒரு கோஸ்டி கதையை கட்டிகொண்டு திரியுது தங்களிடம் பாடுற பொறுப்பை தந்தால் தாங்கள் ஒழுங்காக பாடி தாளம் போடுவினம் என்று அடம் பிடிக்கினம்"

"அதை எப்படி அண்ண விடுறது அனுபவம் இறுக்கிற ஆட்கள் பாடும்பொழுது உவையள் புதுசா வந்த ஆட்கள் பாட  அனுமதிக்க முடியும்,கொஞ்சமாவது அனுபவம் வேணும்தானே"

"நீ அப்படி சொல்லுறாய் அந்த கோஸ்டி சொல்லுது தாங்கள் பஜனை பாடினால் வெள்ளை,சிங்களவன் எல்லாம் வந்து பாடுவாங்கள் என்று"

"சிங்களவனோ ,என்ன அண்ணே  புது கதையா கிடக்கு"

"நீ இருந்து பார்  உந்த பஜனை கோஸ்டி ஒரு நாளைக்கு சிங்களவின் பிரதிநிதி ஒருத்தனை பிரதம விருந்தினராய் அழைக்காவிடில்"

"அதுக்கேன்ன வந்தா வந்திட்டுப்போகட்டும்"

"டேய் நீ என்னடா சொல்லுறாய் எங்கன்ட சனம் இவ்வளவு நாளும் கட்டிகாத்த ஒழுங்கை உவங்கள் நேற்று வந்தவங்கள் குழப்ப முடியுமோ , சரி வா நேரம் போகுது உள்ள போய்  பார்ப்போம்"

இருவருமாக உள்ளே சென்றோம் .பஜனை பாட வந்த மக்களுக்கு என்ன நடக்குது என்று தெரியவில்லை.அவர்களுக்கு தங்களுடைய பிள்ளைகள் நன்றாக பஜனை பாடினால்  சரி என்று இருந்தார்கள் ஆனால் இரு கோஸ்டிகள் மட்டும் உசாராக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

" அண்ண நீங்கள் சொன்னது சரிதான் போல கிடக்கு ,கோஸ்டி கோஸ்டியாக நின்று கதைச்சுக்கொண்டிருக்கினம்,எதாவது அடிபாடு வருமோ "

 

"சும்மா,விசர்கதை கதைக்கிறாய் அவங்கள் நல்லா படிச்சவங்கள் ஒரு நாளும் உந்த கீழ்தரமானசெயலில் ஈடுபடமாட்டாங்கள்,எதோ தேர்தல் மூலம் தெரிவு செய்யப்போறாங்களாம்"

 

"தேர்தல் மூலமோ,மானம்கேட்ட வேலை"

"ஏன்டாம்பி எங்கன்ட பிரதமரையே தேர்தல் மூலம் மாத்திற‌ம் ,பஜனை கோஸ்டியை மாற்றினால் ,தப்பே"

"பிரதமரை மாத்திறோம் தான், ஆனால் தொடர்ந்து பாரளுமன்ற பிரதிநிதியாக இருந்து கட்சிக்கு பல வருடங்கள் உழைத்தவர்களைதான் பிரதமராக நியமிக்கிறார்கள்,றோட்டில போரவரை கூப்பிட்டு நியமிப்பதில்லை"

நாங்கள் இருவரும் மூலையில் நின்று கதைப்பதை கண்ட கனகர் ,தான் அறிந்த  விடுப்பை எங்களுக்கு சொல்வதற்காக ஒடி வந்தார்.கனகரும்,கந்தரும் ஒரே வயசுக்காரர்.கந்தரின் பேரப்பிள்ளைகள் பஜனை பாடுவதற்கு வாறவர்கள் ஆனால் கனகரின் பேரப்பிள்ளைகள் அந்தப்பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை,ஆனல் ஊர் விடுப்பு கதைப்பதில் அவருக்கு நிகர் அவரே.

"எல்லாம் சப்பேண்டு போயிட்டு"

"ஏன் "

"தேர்தல் வைக்காமல், புதுசா வந்த மொமிட்டிக்கு எல்லாத்தையும் கொடுத்து போட்டாங்கள்"

"அது நல்லம் தானே அண்ணே"

அடேய் நீ சின்ன பெடியன் உதுல இருக்கிற தில்லுமுல்லுகளை பற்றி தெரியாது.

என்னைப்பார்த்து "ஒமாடா" என்று கந்தரும் சொல்லிய பின்பு அவர்கள் இருவரும்  விடுப்பு கதைக்க தொடங்கிவிட்டார்கள்.

"தேர்தல் வைக்காமல் புது கொமிட்டியை விட்டது தப்பு கண்டியளோ,நீங்கள் அதைப்பற்றி என்ன நினைக்கிறியள் கந்தர்"

"அதுதானே அனுபவமில்லாமல் உவங்கள் என்னைத்தை செய்யப்போறாங்களோ?"

"கும்பலில  கோவிந்தா பாடுறதற்கு என்னத்துக்கு  அனுபவம் என்று நினைத்திட்டாங்கள் போல"

"சாதாரண பஸ் டிரைவருக்கே எல், பி என்று கொடுத்து ஒட விட்டபின்பு தானே பொறுப்பை கொடுக்கிறாங்கள்."

"ஆனால் உவங்கள் எடுத்த உடனே ஒடப்போறாங்கள் ,அதுக்கு பழைய பாட்டுக்காரர் உடன் பட்டிருக்கினம்,உண்மையை சொன்னால் இரண்டு கோஸ்டிக்கும் பஜனை பாடும் மாணவர்களில் அக்கறை இல்லை கண்டியளோ"

"அக்கறையில்லை என்று சொல்ல முடியாது ,டிசன்டா விட்டு விலகிட்டினம் போல"

"என்ன மயிர்  டிசனட், நாளைக்கு இன்னொரு கோஸ்டி உந்த பஜனை கோஸ்டிக்கு மூடுவிழா வைக்க வேணும் என்ற கெட்டஎண்ணத்துடன் இன்னோரு கொமிட்டியை உருவாக்கி உள்ள வந்தால் இவ்வளவு காலமும் எங்கன்ட சனம் கஸ்டப்பட்டு கட்டிகாத்த இந்த பஜனைக்குழுவை யார் காப்பாற்றுவது."

"சரியா சொன்னீங்கள்,சட்டங்களை மதிக்க தெரியாதசனத்திற்கு டிசன்ட்,ஜென்டில்மன்ட் அக்கிறிமன்ட் எல்லாம் சரிபடாது."

"இரண்டு வருடங்கள் தொடர்ந்து பஜனை பாடியவர்கள்,தாளம்போட்டவர்கள் தான் தலைமை தாங்கி பாடலாம் என்று சட்டம் போட வேண்டும்"

அண்ணவையள் நீங்கள் இதில் இருந்து கதைப்பதால் ஒன்று நடக்க போறதில்லை அவங்கள் தாங்கள் நினைச்சதைதான் செய்வாங்கள் நீங்கள் நடக்கிறஅலுவல்களை போய் பாருங்கோ என்று கூறி அங்கிருந்து அகன்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்... என்னத்தைச் சொல்லுறது....! ஈகோ பிரச்சனையால ஒரு பாடசாலையே ஐ கோ என்டு போயிட்டுது...,பதவிப் பிரச்சினையில காலூன்றின  கழகமே கழன்டு ஓடீட்டுது... ! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.