Jump to content

ஆனந்த விகடனில் சென்ற வாரம் (30.12.15) "திருடன் விளையாட்டு” நிலாக்கனவு" என்ற எனது இரு கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஆனந்த விகடனில் சென்ற வாரம் (30.12.15) "திருடன் விளையாட்டு” நிலாக்கனவு"  என்ற எனது இரு கவிதைகள் வெளியாகியுள்ளன, என்பதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

திருடன் விளையாட்டு

 

 

 

ராஜா

 

ராணி

 

மந்திரி

 

போலீஸ்

 

திருடன்

 

சீட்டெழுதிப் போட்டு விளையாடியது

 

சண்டையில் முடிந்தது.

 

அழுதுகொண்டே ஓடி வந்த

 

நிலா சொன்னாள்....

 

ராஜா - ராணி

 

மந்திரி - போலீஸ்,

 

எல்லாரும் திருடன்!”

 

 

 

 

 

 

 

நிலாக்கனவு

 

 

 

நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன்

 

அந்தக் கனவில் நிலாக்குட்டி வருகிறாள்

 

விழித்துப் பார்த்தால்

 

நிலாக்குட்டி என்னை துயிலெழுப்புகிறாள்

 

கனவில் அவளைக் கண்டுகொண்டிருந்ததை

 

கதையாகச் சொல்கிறேன்

 

நிலாக்குட்டி தூங்கிப்போகிறாள்.

 

கனவு கலைந்து நான் துயிலெழுகிறேன்

 

கதையைச் சொல்லலாமென்றால்

 

நிலாக்குட்டி

 

தூங்கிக்கொண்டிருக்கிறாள்.

 

 

 

-சேயோன் யாழ்வேந்தன்

 

(நன்றி: ஆனந்த விகடன்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு வாக்கை

இடுவோம் என்று

இங்கு வர

விகடனே விதைத்திட்டுது

என்கிறார்  சேயோன்

திருடன்.....!

நன்றி நன்பரே...!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.