Jump to content

சமையல் செய்முறைகள் சில


Recommended Posts

மாம்பழ லஸ்ஸி.. செய்வது எப்படி??

12508827_1238231609526581_12927422362709

தேவையானவை: நன்கு கனிந்த மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், தயிர் - ஒரு கப், பால் - அரை கப் (காய்ச்சி ஆற வைத்தது), ஐஸ்கட்டிகள், சர்க்கரை - தேவைக்கேற்ப.

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து, குளிர வைத்து, சிறிய கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும்.

 

 

 

தேங்காய்ப்பொடி.. செய்வது எப்படி??

1654290_1236430819706660_233180614497584

தேவையானவை: முற்றிய தேங்காய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து... தேங்காய், உப்பு சேர்த்துப் பொடித்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: இந்த தேங்காய்ப்பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். காய் கறிகளை சமைக்கும்போது மேலே தூவிக் கிளறலாம். இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். கொப்பரைத் தேங்காயில் தயாரித்தால், ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

 

 

பூண்டுப்பொடி.. செய்வது எப்படி??

1888447_1236430446373364_313800811463560

தேவையானவை: பூண்டு - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 10, உளுத்தம்பருப்பு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன்... மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

குறிப்பு: பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.

 

 

பருப்புப்பொடி... செய்வது எப்படி??

12096458_1236429046373504_56353402156190

தேவையானவை: துவரம்பருப்பு - 2 கப், கடலைப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.

குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட... சுவை அசத்தலாக இருக்கும்.

 

 

 

பூசணிக்காய் கலவைக் கூட்டு.. செய்வது எப்படி??

1960116_1235073446509064_882886377455912

தேவையானவை: நறுக்கிய இளம் வெள்ளைப் பூசணி - ஒரு கப், வெந்த துவரம்பருப்பு - அரை கப், உலர்ந்த மொச்சை - 50 கிராம், கறுப்பு கொண்டைக்கடலை - 50 கிராம், புளித் தண்ணீர், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, துருவிய தேங்காய் - அரை கப், எண்ணெய் - சிறிதளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, தேங்காய் துருவல் - கால் கப், தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை: உலர்ந்த மொச்சை, கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவிட்டு, மறுநாள் காலை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு வடிக்கவும். பூசணித் துண்டுகளை சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவிட்டு வடிக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை எண்ணெயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் வெந்த பூசணி, மொச்சை, கொண்டைக்கடலை, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், புளித் தண்ணீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வெந்த துவரம்பருப்பு, பொடித்த மசாலா சேர்த்து மேலும் நன்கு கொதிக்கவிட்டு, தாளிக்கும் பொருட்களை எண்ணெயில் தாளித்து சேர்த்து இறக்கவும் (கூட்டு கெட்டியாக இருக்க வேண்டும்).

 

கறிவேப்பிலை குழம்பு.. செய்வது எப்படி??

1935285_1234479456568463_708688057592145

தேவையானவை: கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு, மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சைப் பழ அளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை வதக்கிக்கொள்ளவும். அதே வாணலியில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும். இவற்றுடன் புளியை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து தேவையான உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வைத்ததை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

சூடான சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். சுட்ட அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன்.

 

 

Link to comment
Share on other sites

வீட்டிலேயே கார்லிக் பிரெட் தயாரிக்க வேண்டுமா?

https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xfl1/t31.0-8/12471491_472796579575668_8182837982359117766_o.jpg

அரை ஸ்பூன் பூண்டு பேஸ்ட் எடுத்து, அதில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் குழையுங்கள். இதை பிரெட் துண்டுகளின் மேல் லேசாகத் தடவி, தோசைக்கல்லிலோ அல்லது டோஸ்ட்டரிலோ டோஸ்ட் செய்தால்.. கார்லிக் பிரெட் தயார்.

இதைவிட எளிமையாக தயாரிக்க...முதலில் வெண்ணெய் தடவிய பிரெட்டை டோஸ்ட் செய்யுங்கள். பிறகு, இரண்டாக வெட்டிய ஒரு பல் பூண்டை அதன் மேல் தேய்த்துவிட்டால்..கார்லிக் வாசனையுடன் பிரெட் கமகமவென்று இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிட மனம் வருமா

Link to comment
Share on other sites

மொச்சை சாம்பார்.. செய்வது எப்படி??

993853_1239592566057152_6800089468552324

 

தேவையானவை: உலர் மொச்சை - 100 கிராம், சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், புளி - எலுமிச்சைப் பழ அளவு, தேங்காய்த் துருவல் - சிறிய கப், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும். தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக் கவும்.

புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்துக் கலந்து, மேலும் கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

Link to comment
Share on other sites

Aval Vikatans Foto.
 

கீரை மிளகூட்டல்.. செய்வது எப்படி??

தேவையானவை: முளைக் கீரை - ஒரு சிறிய கட்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். கீரையைப் பொடியாக நறுக்கி வேகவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... சீரகம், தேங்காய்த் துருவல், மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, உப்பு சேர்த்து கீரையுடன் கலந்து, வேகவைத்த பருப்பையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, வாணலியில் ஊற்றிக் கொதிக்கவைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கீரையுடன் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: இதனை சூடான சாதத்துடன் சேர்த்து நெய் விட்டு சாப்பிடலாம். இதே முறையில் எல்லா கீரையிலும் தயாரிக்கலாம்.

Link to comment
Share on other sites

செட்டிநாட்டுத் தைப்பொங்கல் ரெசிப்பிக்கள்

 

 

dot1%283%29.jpgபொங்கல் சாதம் 

dot1%283%29.jpgசர்க்கரைப் பொங்கல் 

dot1%283%29.jpgபருப்பு மசியல்

dot1%283%29.jpgவாழைக்காய்ப் பொரியல் 

dot1%283%29.jpgஅவரைக்காய்ப் பொரியல்

dot1%283%29.jpgசர்க்கரைவள்ளிக் கிழங்குப் பொரியல் 

dot1%283%29.jpgமொச்சைக் கூட்டு

dot1%283%29.jpgபறங்கிக்காய்க் குழம்பு

dot1%283%29.jpgபல காய்க் குழம்பு

p111.jpg

தைப்பொங்கல் அன்று செட்டிநாட்டுப் பகுதிகளில் கடைப்பிடிக்கும் சம்பிரதாய உணவு வகைகளைச் செய்து காட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார்.

பொங்கல் சாதம்

தேவையானவை:

 பச்சரிசி - 200 கிராம்
 தண்ணீர் - 4 டம்ளர்

p1112.jpg

செய்முறை:

பச்சரிசியை ஒரு முறை கழுவவும். இரண்டாவது முறை கழுவும்போது கொடுக்கப்பட்ட 4 டம்ளர் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக அரிசியில் ஊற்றி கழுவவும். இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வடிகட்டி பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பொங்கி வரும்போது தீயைக் குறைத்து அரிசியைச் சேர்த்து வேகவிடவும். அரிசி வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:

தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு கரண்டியால் சிறிது தண்ணீரை எடுத்துவிடவும். தேவையென்றால் கடைசியில் சேர்த்துக்கொள்ளலாம்.


சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - 200 கிராம் (புதியது)
 தண்ணீர் - 3 டம்ளர்
 வெல்லம் - 200 கிராம்
 தேங்காய்த்துருவல் - கால் கப்
 முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் (திராட்சை) - தலா 10
 நெய் - 4 டீஸ்பூன்
 ஏலக்காய் - 1

p113.jpg

செய்முறை:

பச்சரிசியை முதல்முறை நன்றாகக் கழுவவும். இரண்டாவது முறை கழுவும் தண்ணீரில், அரிசி வேகவைக்கத் தேவைப்படும் 3 டம்ளர் தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ளவும். அந்த தண்ணீரை வடிகட்டி, பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பொங்கிவரும் போது, அரிசியைச் சேர்த்து தீயைக் குறைத்து வேகவிடவும். அரிசி வெந்தவுடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் கரையும் வரை நன்கு கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (திராட்சை), ஏலக்காய் மற்றும் தேங்காய்த்துருவலை பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:

வெல்லத்தில் கல், மண் இருந்தால் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி அரிசியோடு சேர்க்கவும். பொங்கல் அதிக தண்ணீரை இழுக்கும் என்பதால், கவலை வேண்டாம்.


பருப்பு மசியல்

தேவையானவை:

 பாசிப்பருப்பு - 100 கிராம்
 காய்ந்த மிளகாய் - 3
 பூண்டு - 4 பல்
 கறிவேப்பிலை - 10 இலைகள்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p114.jpg

செய்முறை:

பூண்டுப் பல்லைத் தோலுடன் இடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அதில் பாசிப்பருப்பு, இடித்த பூண்டு, கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள், சிறு துண்டுகளாக உடைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து வேகவிடவும். பருப்பு வெந்ததும் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும் (உப்பை கடைசியில்தான் சேர்க்க வேண்டும், இல்லாவிட்டால், பருப்பு வேகாது). இதை சாதத்தோடு பரிமாறவும்.


வாழைக்காய்ப் பொரியல்

தேவையானவை:

 வாழைக்காய் - 1
 தண்ணீர் - 3 கப்
 சின்ன வெங்காயம் - 5
 பச்சை மிளகாய் - 1
 கறிவேப்பிலை - 10 இலைகள்
 தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

p115.jpg

செய்முறை:

வாழைக்காயைத் தோல் சீவி மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும். இதில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவைக்கவும். வெந்தவுடன் தண்ணீரை வடிக்கவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் வேகவைத்த வாழைக்காய், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.


அவரைக்காய்ப் பொரியல்

தேவையானவை:

 அவரைக்காய் - 200 கிராம்
 தண்ணீர் - 2 கப்
 சின்ன வெங்காயம் - 6
 காய்ந்த மிளகாய் - 2
 கறிவேப்பிலை - 10 இலைகள்
 தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

p116.jpg

செய்முறை:

அவரைக்காயைக் கழுவி நீளமாக நறுக்கிக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அவரைக்காயுடன்,  2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேகவைக்கவும். காய் வெந்ததும் தண்ணீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளித்து, வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், அவரைக்காய் மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


சர்க்கரைவள்ளிக் கிழங்குப் பொரியல்

தேவையானவை:

 சர்க்கரைவள்ளிக் கிழங்கு - கால் கிலோ
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
 கறிவேப்பிலை - 10 இலைகள்

p117.jpg

செய்முறை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கை கழுவிதோலுடன் வட்டமாக நறுக்கவும். பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து வேகவிடவும். பிறகு, தண்ணீரை வடிக்கவும். காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பின்னர் வேகவைத்த கிழங்கைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


மொச்சைக் கூட்டு

தேவையானவை:

 ஃப்ரெஷ் மொச்சை - கால் கிலோ
 துவரம்பருப்பு - 100 கிராம்
 தண்ணீர் - ஒன்றரை கப்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 சின்னவெங்காயம் - 6  (இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்)
 சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - 10 இலைகள்
 தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 சீரகம் - கால் டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
 கடுகு - அரை டீஸ்பூன்

p118.jpg

செய்முறை:

துவரம்பருப்பை ஒன்றரை கப் தண்ணீர், மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து அரை பதமாக குக்கரில் வேக விடவும். இதனுடன் ஃப்ரெஷ் மொச்சை, சின்ன வெங்காயம், சாம்பார்பொடி, உப்பு சேர்த்து மேலும் வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, மொச்சைக் கலவையில் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


பறங்கிக்காய்க் குழம்பு

தேவையானவை:

 பறங்கிக்காய் - 200 கிராம்
 சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்.)
 தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)
 பூண்டு - 4 பல் (இடித்து வைத்துக்கொள்ளவும்)
 கறிவேப்பிலை - 10 இலைகள்
 புளி - சின்ன எலுமிச்சை அளவு
 தன்ணீர் - 2 கப்
 உப்பு - தேவையான அளவு
 சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
 எண்ணெய் - 3 டீஸ்பூன்
 சீரகம் - கால் டீஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
 வெந்தயம் - 10
 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

p119.jpg

செய்முறை:

புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைக்கவும். பறங்கி விதைகள் மற்றும் தோலை நீக்கிவிட்டு, பெரிய துண்டுகளாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம், சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் பறங்கிக்காய் சேர்த்து லேசாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து மசிய வதக்கவும். பிறகு புளிக்கரைசல், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.  பிரஷர் குறைந்ததும் குக்கரைத் திறந்து, நன்கு கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறவும்.


பல காய்க் குழம்பு

தேவையானவை:

 முருங்கைக் காய், கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு - தலா 1
 கத்திரிக்காய் - 3
 சுரைக்காய், பறங்கிக்காய், பலாக்காய், வாழைக்காய் - சிறிதளவு
 அவரைக்காய் - 10
 ஃப்ரெஷ் மொச்சை - அரை கப்
 காராமணி - 10
 தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
 சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கவும்)
 கறிவேப்பிலை - 20 இலைகள்
 புளி - எலுமிச்சை அளவு
 தண்ணீர் - 2 கப்
 சாம்பார் பொடி - 5 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
 கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்

p120.jpg

செய்முறை:

புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைக்கவும். சுரைக்காய், வாழைக்காய், பலாக்காயைத் தோலை நீக்கி ஒரே அளவில் சதுரத் துண்டுகளாக நறுக்கவும். மற்ற காய்கறிகளையும் நறுக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து புளிக்கரைசல், சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் நறுக்கிய காய்கறிகள், ஃப்ரெஷ் மொச்சை, காராமணி, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து மூடி, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும், பிரஷர் அடங்கியவுடன் குக்கரைத் திறந்து தாளித்ததைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:

இதற்கு இங்கு சொன்ன காய்களைத் தவிர்த்து நீங்கள் விரும்பும் காய்கறிகளையும் பயன்படுத்தலாம்

vikatan.com

Link to comment
Share on other sites

வெண்டைக்காய் ஸ்வீட் பச்சடி.. செய்வது எப்படி??

12510220_1242029865813422_47031404535640

தேவையானவை:வெண்டைக்காய் - கால் கிலோ, வெல்லம் - 50 கிராம், புளி - சுண்டைக்காய் அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வெண்டைக்காயை சின்னச் சின்ன வில்லைகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெண்டைக்காயை வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். முக்கால் பதம் வெந்ததும் வெல்லத்தைப் பொடித்துச் சேர்க்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, பச்சடியில் சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால், 3 டீஸ்பூன் தேங்காய் துருவலை சேர்க்கலாம்.

குறிப்பு: வெண்டைக்காய் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் மிகவும் ஏற்றது.

Link to comment
Share on other sites

இன்ஸ்டன்ட் போண்டா
தேவையானவை:
இட்லி மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
அரிசி மாவு, ரவை - தலா 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தே.அளவு
எண்ணெய் - பொரிக்க‌
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள்வும். ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரிசி மாவு, ரவை, உப்பு ஆகியவற்றை கெட்டியாக ஒன்றாக கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் இன்ஸ்டன்ட் போண்டா ரெடி.

12492032_474375216084471_843949914219449

Link to comment
Share on other sites

10308341_1239593819390360_71574825929042

வெந்தயக்கீரை சாம்பார்.. செய்வது எப்படி??

தேவையானவை: வெந்தயக்கீரை - 2 சிறுகட்டு, துவரம்பருப்பு - ஒரு கப், புளி - எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும். வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்கவிட்டு, வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: வெந்தயக்கீரை குளிர்ச்சி தரும்; வயிற்றுப்புண் ஆற்றும்.

 

Link to comment
Share on other sites

10606309_474376899417636_347948613116065

மிளகு மாதுளை

தேவையானவை:
மாதுளை முத்துக்கள்- 100 கிராம்
வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள்- ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு- ஒரு சிட்டிகை

செய்முறை:
வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் மிளகுத்தூள், கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் உப்பு, மாதுளை முத்துகளைச் சேர்த்து லேசாகப் புரட்டி எடுத்து, பரிமாறவும்.
 
Link to comment
Share on other sites

hs983l.jpg

தேங்காய்ப்பால் சொதி.. செய்வது எப்படி??

தேவையானவை: பீன்ஸ் - 5, கேரட், குடமிளகாய், பச்சை மிளகாய் - தலா ஒன்று, தேங்காய்ப்பால் - 100 மில்லி, கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு

செய்முறை: பீன்ஸ், குடமிளகாய், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கவும். காய்களை, சிறிது எண்ணெய் விட்டு தேவையான உப்பு சேர்த்து வதக்கி, தேங்காய்ப்பால் சேர்த்து... கடுகு, வெந்தயம் தாளித்து இறக்கவும்.

குறிப்பு: தேங்காய்ப்பால் சொதி, இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷன்.

Link to comment
Share on other sites

பேபி பீட்ஸா தோசை

12507316_474696909385635_806641244600504

தேவையானவை:
தோசை மாவு- அரை கிலோ
பேபி கார்ன் - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய மூன்று கலர் குடமிளகாய்- தலா ஒன்று
துருவிய மொசரல்லா சீஸ்- சிறிதளவு
சில்லி ஃபிளேக்ஸ்- ஒரு டீஸ்பூன்
ஓரிகானோ- ஒரு டீஸ்பூன்

செய்முறை:
பேபி கார்னை வேக வைத்து மெல்லிய வட்டமாக நறுக்கி வைக்கவும். தோசைக்கல்லை நன்கு சூடுபடுத்தி, சிம்மில் வைக்கவும். ஒரு சின்ன கரண்டி தோசை மாவெடுத்து, உள்ளங்கை அளவிலான ஊத்தப்பமாக தோசைக்கல்லில் ஊற்றவும். மாவு வேகும் முன் அதன் மேல் வெங்காயம், பேபி கார்ன், குடமிளகாயை வைக்கவும். தோசையைத் திருப்பிப் போட்டு அதைச் சுற்றி ஒரு சொட்டு எண்ணெய் விட்டு வேக விடவும். இதை அப்படியே பிளேட்டுக்கு மாற்றவும். இனி தோசையின் மேல் சீஸ் தூவி அது உருகும் நேரத்தில், சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோவைச் சேர்க்கவு. இதை 2 நிமிடம் கழித்து கஞ்ச் பாக்ஸில் வைத்து குழந்தைகளுக்குக் கொடுத்து விடவும்.

Link to comment
Share on other sites

 
 
 
Aval Kitchens Foto.
 
 

தக்காளி சட்னி


தேவையானவை:
தக்காளி - 5
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 8
உப்பு - தே.அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
காய்ந்த மிளகாயுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். தக்காளியுடன் மிளகாயை அரைத்தால் திப்பி திப்பியாக வரும். இத்துடன் தக்காளியை சேர்த்து அரைத்து பிறகு சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்திருக்கும் தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாசனை போக லேசாக வதக்கவும். கொதி வந்தது, பெருங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கி பரிமாறவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மியில் என்டால் மம்மி எல்லாத்தையும் ஒன்றாகப் போட்டு அரைப்பா..., இங்கு மிக்சியில் தக்காளி வெங்காயத்தைத் தனித்தனியாக அரைத்து அரைத்தமிளகாயுடன் மீன்டும் சேர்த்து அரைப்பதுதான் சுலபமாய் இருக்கும்...!

நன்றி நவீன்...!

Link to comment
Share on other sites

Aval Kitchens Foto.
 

மோர்க்குழம்பு


தேவையானவை:
மோர் - 200 மில்லி
தேங்காய் - 30 கிராம்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
இ ஞ்சி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - தே.அளவு
சின்ன வெங்காயம் - 50 கிராம்
வெள்ளை பூசணி - 50 கிராம்
எண்ணெய் - தே.அளவு
செய்முறை:
ஊறவைத்த கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்புடன் மல்லி தேங்காய் இஞ்சி பூண்டு காய்ந்த மிளகாயைச் சேர்ந்து நன்கு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம் வெள்ளை பூசணி சேர்த்து வதக்கவும். இத்துடன் சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அரைத்த கலவையைச் சேர்த்து வதக்கி பச்சை வாசனை போன பிறகு மோர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

12493957_476478915874101_118991610520432

இட்லி டிக்கா


தேவையானவை:
சிறிய துண்டுகளாக நறுக்கிய இட்லி - 1 கப்
மூவர்ண குடமிளகாய் - தலா 1
ப்ராசஸ்டு சீஸ் - 200 கிராம்
இட்லி மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தே.அளவு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
டூத்பிக் - தே.அளவு
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ஒரு பவுலில் இட்லி துண்டுகளை சேர்த்து அதன் மேல் சோள மாவை தூவி கிளறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, இட்லிகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இதன் மேலே இட்லி மிளகாய்ப்பொடிகளை எல்லா பக்கமும் படுவது போல தூவவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கியூப் வடிவத்தில் நறுக்கிய குடமிளகாய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து லேசாக வதக்கவும். இனி டூத்பிக்கில் இட்லி, குடமிளகாய், சீஸ் என ஒன்றன் பின் ஒன்றாக சொருகி பரிமாறவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இட்டலியையும் பார்பிகியூப் ரேஞ்சுக்கு கொண்டு வந்தாச்சா..., இட்டலிக்கு வந்த வாழ்வைப் பார்....!  :)

  • Like 2
Link to comment
Share on other sites

பாலக்கீரை பக்கோடா

12604872_477648939090432_819455777326249


தேவையானவை:
பாலக்கீரை - 1 கப்
பெரிய வெங்காயம் - அரை கப்
சோம்பு - அரை டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை - தலா 1 டீஸ்பூன்
கடலைமாவு - ஒன்னரை கப்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தே.அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
பாலக்கீரையின் பின்புறம் உள்ள தண்டை நீக்கிவிட்டு இலையை மட்டும் பொடியாக நறுக்கவும். வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். பூண்டு சோம்பு இரண்டையும் இடிக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பாலக்கீரை, பெரிய வெங்காயம், புதினா, மல்லித்தழை, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, இடித்த பூண்டு கலவையை சேர்த்து பிசையவும். இதில் தண்ணீர் சேர்க்க கூடாது. வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கலவையை பொரித்தெடுக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலக் கீரை என்டால் எந்த வகைக் கீரை?

Link to comment
Share on other sites

வாழைப்பூ வடை

12621979_477591962429463_209839702009172


தேவையானவை:
கடலைப்பருப்பு - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய் - 3
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன்
மாவில் கலக்க:
வாழைப்பூ - 1 கப்
பெரிய வெங்காயம் - கால் கப்
கறிவேப்பிலை, புதினா - தலா 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை , உப்பு - தே.அளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
வடைக்கு கொடுத்துள்ள பொருட்களை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். வாழைப்பூவை அதன் நடுவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு கழுவி பொடியாக நறுக்கவும். வெங்காயம், புதினா, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை பொடியாக நறுக்கவும். இனி அரைத்த மாவுடன் இவற்றை சேர்த்து கலந்து பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வட்டமாக தட்டி பொரித்தெடுக்கவும்.

Link to comment
Share on other sites

·
 
 
 
Aval Kitchens Foto.
 
 

பூண்டுச் சட்னி

தேவையானவை:

பூண்டு - 150 கிராம்
வரமிளகாய் - காரத்திற்கு ஏற்ப
புளி - சின்ன நெல்லிக்காய்
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை :

பூண்டை தோலுரித்து எடுத்துக்கொள்ளவும். மற்றவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு மிளகாயை நிறம் மாறாமல் வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.அடுத்து பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.மிக்ஸியில் மிளகாய், உப்பு, புளி மூன்றையும் நன்றாக பொடிக்கவும். பின் வதக்கிய பூண்டை சேர்த்து அரைத்தெடுக்கவும். நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான பூண்டு சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு சூப்பர் காமினேசன்

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

7 hours ago, நவீனன் said:
·
 
 
 
Aval Kitchens Foto.
 
 

பூண்டுச் சட்னி

தேவையானவை:

பூண்டு - 150 கிராம்
வரமிளகாய் - காரத்திற்கு ஏற்ப
புளி - சின்ன நெல்லிக்காய்
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை :

பூண்டை தோலுரித்து எடுத்துக்கொள்ளவும். மற்றவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு மிளகாயை நிறம் மாறாமல் வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.அடுத்து பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.மிக்ஸியில் மிளகாய், உப்பு, புளி மூன்றையும் நன்றாக பொடிக்கவும். பின் வதக்கிய பூண்டை சேர்த்து அரைத்தெடுக்கவும். நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான பூண்டு சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு சூப்பர் காமினேசன்

ம்ம்.. நல்லாய் தான் இருக்கும் ஆனா பூண்டு மணம் தான்.....

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.