Jump to content

சமையல் செய்முறைகள் சில


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பசலைக் கட்லட் நல்லதொரு பலகாரம்

Link to comment
Share on other sites

10 hours ago, suvy said:

அந்தக் கடைசி வசனத்துக்காகச் செய்து சாப்பிடலாம்....! tw_blush:

 

இனியும் வளரும் எண்டு நினைக்கிறீங்கள் :grin:

உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு கும்பிடு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

இனியும் வளரும் எண்டு நினைக்கிறீங்கள் :grin:

உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு கும்பிடு 

இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு, மூளை வளரும் ஆனால் உள்ளே இருக்கும் அறிவு வளருமா என்பதில் உங்களுடன் உடன்படுகின்றேன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

கறிவேப்பிலை தோசை :

13041393_509857712536221_175598014607619


தேவையானவை:
தோசை மாவு - கால் கிலோ
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1
சீரகம் - கால் டீஸ்பூன்
ஜவ்வரிசி - 100 கிராம்.
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஜவ்வரிசியை அரை மணிநேரன் ஊறவைத்து சீரகம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,,உப்பு சேத்து மிஸ்ஸியில் மையாக அரைக்கவும்.இதனை தோசை மாவுடன் கலந்து தோசைகளாகவார்த்து எடுத்துப்பரிமாறவும்.

 

 

கீரை பாத்

12957676_509222509266408_108575065355014


தேவையானவை:
அரிசி - 1 கப்
முளைகட்டிய பாசிப்பயறு - அரை கப்
சின்ன வெங்காயம் - 3
சிறுகீரை அல்லது முளைக்கீரை - 3 கப் பொடியாக நறுக்கியது
பூண்டு - 4 பற்கள்
பச்சைமிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தே.அளவு
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை:
அரிசியையும் பாசிப்பயறையும் ஒன்றாக கலந்து மஞ்சள்தூள், நெய், உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வேறு ஒரு பாத்திரத்தில் கீரையுடன் பூண்டு பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வெந்ததும் இறக்கவும்.கீரையை மசித்து சாதத்துடன் கலந்து வைக்கவும். தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சாதத்துடன் சேர்த்துப் பரிமாறவும். 

Link to comment
Share on other sites

வாழைப்பூ வடை

942240_510241165831209_84851923071271935


தேவையானவை:


வடைக்கு அரைக்க
கடலைப்பருப்பு - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய் - 3
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன்
மாவில் கலக்க
வாழைப்பூ - 1 கப்
பெரிய வெங்காயம் - கால் கப்
கறிவேப்பிலை, புதினா- தலா 1 டீஸ்பூன்
மல்லித்தழை, உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
வடைக்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். வாழைப்பூவை நரம்பு நீக்கிவிட்டு பொடியாக நறுக்கவும். வெங்காயம், புதினா, கறிவேப்பிலை மல்லித்தழையை பொடியாக நறுக்கவும். இனி அரைத்த வடை மாவுடன் இவற்றைச் சேர்த்து கலந்து பிசையவும். மாவை சிறு சிறு உருண்டையாக்கி உள்ளங்கையில் வைத்து வட்டமாக தட்டவும். பிறகு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Link to comment
Share on other sites

வெள்ளரி சாதம்

13000130_510841512437841_773606966187116


தேவையானவை:
பச்சரிசி - 1 கப்
வெள்ளரித் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உ.பருப்பு- தலா அரை டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காய வைத்து தாளிக்க வேண்டியதை சேர்த்து தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், மஞ்சள்தூள், வெள்ளாரி துருவலையும் உப்பையும் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்குங்கள்.இந்த கலவையுடன் சாதம் எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி பரிமாறுங்கள்.

 

 

 

.கறிவேப்பிலை அடை :

12986975_509875849201074_896566479211955


தேவையானவை :
பச்சரிசி - 5 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
உளுந்து - 3 டேபிஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
பொடியாக நறுக்கிய பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பச்சரிசி,துவரம் பருப்பு,கடலைப்பருப்பு,உளுந்தை அரை மணிநேரம் ஊறவைத்து கறிவேப்பிலை ,காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணிநேரம் ஊறவைத்துஅடை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.வெங்காயம்,உப்பு,பூண்டினை இந்த மாவுடன் கலந்து கொள்ளவும்..அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் அடைகளாக வார்த்து எடுத்துப்பரிமாறவும்.

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

மூளை வறுவல்

12998344_511473435707982_232375890914665

 

தேவையானவை:
ஆட்டு மூளை - ஒன்று
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன் (காரத்துக்கு ஏற்ப)
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:
மூளையைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளித்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள மூளையை முழுதாக சேர்த்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். மூளை வெந்து முட்டைப் பொரியல் போல வருகின்ற போது கரண்டியால் உடைத்து விடவும். சிறிது நேரம் மூடிப்போட்டு வேக வைத்து பிறகு அடுப்பை அணைத்துப் பரிமாறவும்.

 

 

 

 

 

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎01‎/‎2016 at 5:50 AM, நவீனன் said:

இன்ஸ்டன்ட் போண்டா
தேவையானவை:
இட்லி மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
அரிசி மாவு, ரவை - தலா 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தே.அளவு
எண்ணெய் - பொரிக்க‌
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள்வும். ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரிசி மாவு, ரவை, உப்பு ஆகியவற்றை கெட்டியாக ஒன்றாக கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் இன்ஸ்டன்ட் போண்டா ரெடி.

12492032_474375216084471_843949914219449

இது இறுக்கமாக குழைத்தால் வேக நேரமெடுக்கும், வடைக்கு குழைத்த பதத்திலிருந்தால் விரைவில் வெந்து மெது மெதுப்பாக இருக்கும்.
இரண்டு தரம் செய்துவிட்டேன், பிள்ளைகள் சாப்பிடும் போது, இது என்ன ஓட்டை போடாத வடையா என கேட்கின்றார்கள்tw_blush:

நிர்வாகம் இந்த திரியை PIN பண்ணிவிட்டால் நன்றாக இருக்கும். இதில் பல நல்ல சமையல் குறிப்புகள் இருக்கின்றது. இதைப் பார்த்துதான் பல சமையல் செய்கின்றேன்.

நன்றி நவீனன் உங்கள் இணைப்புகளுக்கு.

On ‎19‎/‎04‎/‎2016 at 3:36 PM, நவீனன் said:

 

.கறிவேப்பிலை அடை :

12986975_509875849201074_896566479211955


தேவையானவை :
பச்சரிசி - 5 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
உளுந்து - 3 டேபிஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
பொடியாக நறுக்கிய பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பச்சரிசி,துவரம் பருப்பு,கடலைப்பருப்பு,உளுந்தை அரை மணிநேரம் ஊறவைத்து கறிவேப்பிலை ,காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணிநேரம் ஊறவைத்துஅடை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.வெங்காயம்,உப்பு,பூண்டினை இந்த மாவுடன் கலந்து கொள்ளவும்..அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் அடைகளாக வார்த்து எடுத்துப்பரிமாறவும்.

அடுத்த சமையலறை Project இதுதான், இதற்கு பயறும் சேர்த்தால் நன்றாக இருக்குமென நினைக்கின்றேன், செய்து பார்த்துவிட்டு கூறுகின்றேன்

Edited by உடையார்
Link to comment
Share on other sites

மரவள்ளி கிழங்கு தோசை

13076639_512507098937949_760175825370706

 

தேவையானவை:
மரவள்ளி கிழங்கு - ஒரு கிலோ
இட்லி அரிசி - 200 கிராம்
சிவப்புமிளகாய் / வர மிளகாய் - 4
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 25 கிராம்
எண்ணெய் - 20 மில்லி லிட்டர்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
அரிசியை நன்றாகக் கழுவி தண்ணீரில் 3 மணிநேரம் ஊறவைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மரவள்ளி கிழங்கை தண்ணீரில் சேர்த்து, அதன் தோலை நீக்கவும். பிறகு, கிழங்கினை நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். துண்டுகளாக்கிய மரவள்ளிக் கிழங்குடன், ஊறவைத்த அரிசி, சிவப்புமிளகாய், கறிவேப்பிலை, உப்பு, சீரகம், தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் ஒரு தோசைக் கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், தயாராக வைத்திருக்கும் மாவினை தோசை போல் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். சூடான தோசையை கெட்டியான தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

பப்பாளி அல்வா

12592364_512506165604709_284312415990745

தேவையானவை:
பப்பாளி(காய்) - 250 கிராம்
பால் - 500 மில்லி லிட்டர்
சர்க்கரை - 125 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்
முந்திரி - 10 கிராம்
திராட்சை - 5 கிராம்
நெய் - 100 மில்லி லிட்டர்
வெண்ணிலா எசன்ஸ் - கால்டீஸ்பூன்
ஆரஞ்சு கலர் - ஒரு சிட்டிகை

செய்முறை:
பப்பாளியின் தோலை சீவி, விதைகளை நீக்கி, மீடியம் துண்டுகளாக கட் செய்யவும். கட் செய்த பப்பாளி துண்டுகளை, துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சையை பொன்நிறமாக வறுத்துக்கொள்ளவும். மற்றொரு வாணலியில் பப்பாளி துருவல், பால் சேர்த்து நன்றாக வேகவிடவும். கலவையில் பால் கொதிவந்ததும் ஏலக்காய், ஆரஞ்சு கலர், வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து வேகவிடவும். சிறிது நேரம் கழித்து அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும். சர்க்கரை கரைந்து கலவை கெட்டியாகும் பொழுது, நெய்யை சேர்த்து, நன்றாக கிளறவும். பாத்திரத்தில் கலவை ஒட்டாமல் வரும்வரை கிளறியதும், வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

Link to comment
Share on other sites

கத்திரிக்காய் வற்றல்

13094178_513181075537218_263383178418162

 

 

தேவையானவை:
கத்திரிக்காய் - ஒரு கிலோ
புளி - பெரிய எலுமிச்சையளவு
உப்பு - ஒரு கைப்பிடி

செய்முறை:
கத்திரிக்காயைக் கழுவி இதன் காம்பை மட்டும் நறுக்கி விடவும். சதைப்பகுதியை நீளவாக்கில் நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். தண்ணீரில் போட்டு வைப்பதால், கத்திரிக்காய் கறுத்துப் போகாது. புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து, இதனுடன் ஊற வைத்த புளித்தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் நறுக்கிய கத்திரிக்காய்த் துண்டுகளைப் சேர்த்து வேக விடவும். பாதி வெந்தவுடன் கத்திரிக்காயை தண்ணீர் வடிக்கும் தட்டில் கொட்டி ஆற விடவும். பிறகு கத்திரிக்காயை தட்டில் ஒவ்வொன்றாகப் பரப்பி வைத்து வெயில் காய வைக்கவும். இரண்டு மூன்று நாட்கள் காய வைத்து எடுத்து வைக்கவும்.
இந்தக் கத்திரிக்காய் வற்றலை வைத்து நாம் தினசரி செய்யும் காய்கறி சாம்பார் போலவே சாம்பார் செய்யலாம். கத்திரிக்காய் வற்றலை சாம்பார் செய்வதற்கு முன் சிறிது நேரம் தண்ணீரீல் ஊற வைத்துக் கொள்ளவும். இந்த வற்றலை நன்றாக காயவைத்து எடுத்து வைத்தால், ஒரு வருடம் வரை கெடாது. காய்கறி விலை அதிகமாக விற்கும் காலங்களில் இந்த வத்தலை உபயோகித்துக் கொள்ளலாம். கத்திரிக்காய் புளிக்குழம்பு செய்யும் போது இந்த வத்தலை சேர்த்து குழம்பு செய்யலாம்.

Link to comment
Share on other sites

கறிவேப்பிலைக் கோழி

தேவையானவை:
 சிக்கன் - அரை கிலோ
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 மல்லித்தூள் (தனியாத்தூள் ) -
ஒரு டேபிள்ஸ்பூன்
 சீரகம் - கால் டீஸ்பூன்
 மிளகு - ஒரு டீஸ்பூன்
 சோம்பு - அரை டீஸ்பூன்
 எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

p15.jpg

செய்முறை:
சிக்க‌னை சுத்தம் செய்து விருப்பமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிக்கன், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கனை சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கிளறவும். மிதமான தீயில் சிக்கனை வேக விடவும். தேவையென்றால், தண்ணீர் விட்டுக் கொள்ளலாம். கலவை கிரேவி பதத்தில்தான் வர வேண்டும். இறக்குவதற்கு முன் எலுமிச்சைச்சாறு ஊற்றி இறக்கிப் பரிமாறவும்.

 

 

 

மா வற்றல்

தேவையானவை:
 பெரிய கிளிமூக்கு மாங்காய் - 5
 கல் உப்பு - முக்கால் கப்
 மோர் - அரை கப்

p82.jpg

செய்முறை:
மாங்காயை நன்றாகக் கழுவி துடைத்துக் கொள்ளவும். தோலுடன் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய மாங்காய்த் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, இதில் உப்பு, மோர் ஊற்றிப் பிசிறி மூடி போட்டு ஒரு நாள் ஊற வைக்கவும். மறுநாள் மாங்காய்த் துண்டுகளை உப்பு நீரிலிருந்து எடுத்து, வெயிலில் காய வைக்கவும். மாலையில் மாங்காய்த் துண்டுகளை இதே உப்பு நீரில் மீண்டும் போட்டு மூடி வைக்கவும். இவ்வாறு தொடர்ந்து பாத்திரத்தில் உள்ள உப்பு நீர் வற்றும் வரை மாங்காய் வத்தலை ஊறவைத்து காயப்போடவும். பிறகு மாங்காய் வற்றலை இரண்டு நாள் வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும். உப்பு சரியாக இருந்தால், மா வற்றல் ஒரு வருடம் வரை கெட்டுப் போகாது. காய்ந்த மா வற்றல்களை பாத்திரத்தில் அடைத்து வைக்கவும். இந்த மா வற்றலைக் கொண்டு, சாம்பார், புளிக்குழம்பு செய்யலாம். புளிக்குழம்பு செய்யும் போது மாங்காய் சேர்ப்பதால் தனியாக புளி சேர்க்கத் தேவையில்லை.

மா வற்றலைக் கொண்டு சாம்பாரை காய்கறி சாம்பார் செய்வது போல செய்யவும். சாம்பார் வைப்பதற்கு முன் மா வற்றலை தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். மாங்காய் மலிவாக கிடைக்கும்போது இந்த வற்றலை போட்டு வைத்துக் கொண்டால், வருடம் முழுவதும் மாங்காய் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் செய்யப்படும் அவியல் கூட நன்றாக இருக்கும். ஊற வைத்த மா வற்றலில் ஊறுகாயும் போடலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலநேரத்துக்கு ஏற்ற பதிவுகள்...கத்தரிக்காய் வற்றல் , மாங்காய் வற்றல் வெய்யிலையும் பிரயோசனப் படுத்தலாம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎19‎/‎04‎/‎2016 at 3:36 PM, நவீனன் said:

 

.கறிவேப்பிலை அடை :

12986975_509875849201074_896566479211955


தேவையானவை :
பச்சரிசி - 5 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
உளுந்து - 3 டேபிஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
பொடியாக நறுக்கிய பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பச்சரிசி,துவரம் பருப்பு,கடலைப்பருப்பு,உளுந்தை அரை மணிநேரம் ஊறவைத்து கறிவேப்பிலை ,காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணிநேரம் ஊறவைத்துஅடை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.வெங்காயம்,உப்பு,பூண்டினை இந்த மாவுடன் கலந்து கொள்ளவும்..அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் அடைகளாக வார்த்து எடுத்துப்பரிமாறவும்.

நல்ல சுவையுடன் சத்தான உணவு பிள்ளைகளுக்கு, தோசை பதத்தில் இருந்தால் விரைவாக சுடலாம்,

நவீனன் தொடர்ந்து இணையுங்கள், சமையல் கலையில் ஒரு கரை காண வேண்டும்.

நன்றி நிர்வாகத்திற்கு PIN பண்ணிவிட்டதிற்கு

Link to comment
Share on other sites

கொத்தவரங்காய் வற்றல்

தேவையானவை:
 கொத்தவரங்காய் - அரை கிலோ
 உப்பு - ஒன்றரை டீஸ்பூன்
 புளிக்காத தயிர் - 2 கப்

p84.jpg

செய்முறை:
கொத்தவரங்காய் பிஞ்சாக இல்லாமல் பெரியதாக, முற்றியதாக இருந்தால் வற்றல் நன்றாக இருக்கும். கொத்தவரங்காயைக் கழுவி இரண்டு நுனிகளையும் நறுக்கி விடவும். ஒரு லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, இதில் அரை டீஸ்பூன் உப்பு, மற்றும் கொத்தவரங்காயைச் சேர்த்து பாதி அளவு வேக விடவும். பிறகு கொத்தவரங்காயை தண்ணீர் வடிக்கும் தட்டில் கொட்டி தண்ணீரை வடிக்கவும்.

பிறகு இதை வெயிலில் நன்றாக காய வைக்கவும். கொத்தவரங்காயுடன் மீதமுள்ள ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக ஒட்டுமாறு பிசறி வெயிலில் காய வைக்கவும். மாலையில் எடுத்து மீண்டும் அதே தயிரில் போட்டு வைக்கவும். மறுநாள் மீண்டும் வெயிலில் வைக்கவும். இதே போல தயிர் வற்றும் வரை ஊற வைத்து வெயிலில் காய விடவும். காய்ந்த கொத்தவரங்காயை எண்ணெயில் அப்பளம் பொரிப்பது போல் பொரித்து எடுக்கவும். பொரிக்கும்போது அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். இல்லையென்றால், வற்றல் கருகி கசப்பு ருசியைக் கொடுக்கும். இந்த வத்தலை தயிர் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

 

 

கறிவேப்பிலை இறால்

தேவையானவை:
 இறால் - கால் கிலோ
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
 இஞ்சி-பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன்
 பொட்டுக்கடலை மாவு - அரை டீஸ்பூன்
 மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
 கார்ன்ஃப்ளார் மாவு - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எலுமிச்சை - ஒன்றில் பாதி
 பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
 முட்டை - ஒன்று (உடைத்து நன்கு கலக்கி வைக்கவும்)
 பொடியாக நறுக்கிய
சின்ன வெங்காயம் - 10
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
 எண்ணெய் - தேவையான அளவு

p16.jpg

செய்முறை:
இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். தேவையானவற்றில் கொடுக்கப்பட்டுள்ள எலுமிச்சைச் சாறு தவிர்த்து, மற்ற எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊறிய இறாலைச் சேர்த்துப் பொரித்தெடுத்து வைக்கவும். பரிமாறும் போது எலுமிச்சைச்சாறு தெளித்துப் பரிமாறவும்.

 

Link to comment
Share on other sites

மட்டன் கொத்துக்கறி

தேவையானவை:
 கொத்துக்கறி - கால் கிலோ
 சின்ன வெங்காயம் - 200 கிராம்
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - 4
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 பூண்டு - 10 பல் (தட்டிக்கொள்ளவும்)
 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு

p47.jpg

செய்முறை:
மட்டன் கொத்துக்கறியை இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை இறுத்து கொத்துக்கறியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சோம்புத்தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வேக வைத்த கொத்துக்கறியைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். பச்சை வாசனை போனதும் இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

 

 

 

 

மணத்தக்காளி வற்றல்

தேவையானவை:
 மணத்தக்காளிக் காய் - 200 கிராம்
 தயிர் - ஒரு கப்
 உப்பு - ஒரு டீஸ்பூன்

p85.jpg

செய்முறை:
மணத்தக்காளிக்காயை சுத்தம் செய்து கழுவி, தயிர், உப்புடன் சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் மணத்தக்காளிக்காயை ஒரு தட்டில் பரப்பி, வெயிலில் காய விடவும். மாலையில் மீதமுள்ள தயிரில் போட்டு மூடி வைக்கவும். தயிர் வற்றும் வரை மணத்தக்காளியை ஊற வைத்து வெயிலில் காய வைக்கவும். இரண்டு நாட்கள் வெயிலில் நன்றாக காய வைத்து எடுக்கவும். இந்த மணத்தக்காளி வற்றலை சிறிது நெய்விட்டு பொரித்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட வயிற்று வலி மற்றும் வயிற்றுப் புண் ஆறி விடும். இந்த வற்றலை எந்தக் காயைக் கொண்டும் செய்யும் புளிக்குழம்பில், தாளிக்கும்போது சேர்த்துக்கொண்டால், குழம்பு மணமாகவும் நல்ல சுவையுடனும் இருக்கும்.

 

Link to comment
Share on other sites

 

மாம்பழ பிரஞ்சு டோஸ்ட் சான்விச் : செய்முறைகளுடன்...!

 

mangosenvichhhhh.jpg


தேவையான பொருட்கள் :

பால் – 1 கப்
முட்டை – 1
தேன் – 2 ஸ்பூன்
ஏலக்காய், பட்டை தூள் – ஒரு சிட்டிகை
மாம்பழம் – 1
வெண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை :

• மாம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• ஒரு கிண்ணத்தில் பால், முட்டை, தேன், ஏலக்காய், பட்டை தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பால் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.

• முட்டை சேர்க்க விரும்பாதவர்கள், 1 ஸ்பூன் கார்ன்ஃப்லார் (அ) கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யலாம்.

• தோசை கல்லில் வெண்ணெய் போட்டு ரொட்டி துண்டுகளை முட்டை கலவையில் முக்கி எடுத்து, தோசைக்கல்லில் இரு புறமும் மிதமான சூட்டில் டோஸ்ட் செய்யவும்.

• டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளில் நடுவில் நறுக்கிய மாம்பழ துண்டுகளை வைத்து பரிமாறவும்.

• உங்களுக்கு பிடித்த எந்த பழங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்

Link to comment
Share on other sites

முருங்கை பூ சூப் : செய்முறைகளுடன்...!

 

soup.jpg


தேவையான பொருட்கள் :
முருங்கை பூ – 2 கைப்பிடி
புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
தக்காளி – 1 ( நறுக்கி கொள்ளவும்)
ரசப்பொடி – 2 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு – 2 தேக்கரண்டி( சிறதளவு நீரில் கரைத்து கொள்ளவும்)
உப்பு – சுவைக்கு

தாளிக்க :
மிளகு – 1 தேக்கரண்டி ( தூளாக்கவும்)
சீரகம் – அரை தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி


செய்முறை :
* புளியை சிறிதளவு நீரில் கரையுங்கள். அத்துடன் முருங்கை பூ, தக்காளி, ரசப்பொடி கலந்து நன்கு கொதிக்க வையுங்கள். பருப்பு கரைசல், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களையும் சேர்த்து தாளித்து சூப்பில் சேருங்கள்.

* இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சூப்பாகவும் பருகலாம். சளி, இருமலுக்கு சுவையான மருந்து இது.

 

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப் நல்லாயிருக்கு....! சைனீஸ் கலரிங் காட்டுது...!!

கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் இதைத் தவிர்ப்பது நல்லது என நினைக்கின்றேன்...!

  • Like 1
Link to comment
Share on other sites

சுண்டைக்காய் வற்றல்

தேவையானவை:
 சுண்டைக்காய் - 100 கிராம்
 தயிர் - ஒரு கப்
 உப்பு - ஒரு டீஸ்பூன்

p87.jpg

செய்முறை:
சுண்டைக்காய்களைக் கழுவி காம்பை நீக்கி விட்டு, ஒரு கல்லால் எல்லா சுண்டைக்காயையும் தட்டி, வெயிலில் காய வைக்கவும். காய்ந்த சுண்டைக்காய்களை, உப்பு மற்றும் தயிருடன் கலந்து ஒரு நாள் ஊற வைக்கவும். பின்னர் தயிரிலிருந்து எடுத்து வெயிலில் காய வைக்கவும். பிறகு மீதமுள்ள தயிரில் போடவும். இவ்வாறு தயிர் வற்றும் வரை ஊறவைத்து காயப்போடவும். சுண்டைக்காய்களை நன்றாக காய வைத்து எடுத்து வைக்கவும். இதை எண்ணெயில் பொரித்து தயிர் சாதத்துடன் சாப்பிடலாம். காய்ந்த சுண்டைக்காய்களை புளிக்குழம்பில் சேர்த்தால், நல்ல சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.

 

பிரெட் ஆனியன் பொடிமாஸ்

தேவையானவை:
 பிரெட் - 10
 நீளமாக நறுக்கிய
பெரிய வெங்காயம் - 2
 பச்சைமிளகாய் - 3
 துண்டுகளாக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்

தாளிக்க:
 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 கடுகு - அரை டீஸ்பூன்
 உளுந்து - அரை டீஸ்பூன்
 கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 சீரகம் - கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு

p57.jpg

செய்முறை :
பிரெட்டை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, பிரெட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு ஊற்றிக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

 

Link to comment
Share on other sites

மிளகுக் குழம்பு

13083290_513570565498269_636380061907737

தேவையானவை:
புளி - சிறிய எலுமிச்சையளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு

அரைக்க:
எண்ணெய் - சிறிதளவு
மிளகு - 2 டீஸ்பூன்
மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிதளவு எண்ணெயில் நன்றாக மணம் வரும் வரை வறுத்து, ஆறியவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல், அரைத்து வைத்துள்ள விழுது முதலியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கவும்.
குறிப்பு:
இந்தக் குழம்பு ஒரு வாரத்துக்கு நன்றாக இருக்கும். தேவையென்றால், தாளிக்கும்போது தோலுரித்த
10 பூண்டுப் பல் சேர்த்துக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

கறிவேப்பிலை பூரி

தேவையானவை:
 கோதுமை மாவு - கால் கிலோ
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
 மிளகு - அரை டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

p17.jpg

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறிவேப்பிலை, மிளகு, சீரகத்தைச் சேர்த்து வறுத்து சூடு ஆறியதும், மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும். இனி கோதுமை மாவுடன் அரைத்த பொடி, உப்பு, தண்ணீர் சேர்த்து மாவாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாகக்கி பூரிகளாக தேய்த்து, எண்ணெயில் சுட்டெடுக்கவும். ஊறுகாய், உருளைக்கிழங்கு கிரேவி, தயிர்ப் பச்சடி, சென்னாவுடன் சேர்த்துப் பரிமாறவும்.

 

மட்டன் கொத்துக்கறி

தேவையானவை:
 கொத்துக்கறி - கால் கிலோ
 சின்ன வெங்காயம் - 200 கிராம்
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - 4
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 பூண்டு - 10 பல் (தட்டிக்கொள்ளவும்)
 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு

p47.jpg

செய்முறை:
மட்டன் கொத்துக்கறியை இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை இறுத்து கொத்துக்கறியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சோம்புத்தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வேக வைத்த கொத்துக்கறியைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். பச்சை வாசனை போனதும் இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூரிக்கும் கொத்துக்கறிக்கும் நல்ல பொருத்தமாய் இருக்கும்....செம டேஸ்ட்..அடி...அடி...தூள்....!!  tw_blush:

Link to comment
Share on other sites

கத்தரி மொச்சை பிரட்டல்

13133200_514957395359586_622145445423261

 

தேவையானவை: பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ, பச்சை மொச்சை - 100 கிராம், நாட்டுப் பூண்டு - 4 பல் (நசுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு (சுத்தம் செய்து, நசுக்கவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சோம்பு (பெருஞ்சீரகம்) - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, நாட்டுத் தக்காளி - 4, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காய், சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளியை மீடியம் சைஸில் நறுக்கவும். பச்சை மொச்சையை வேகவைக்கவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, சோம்பு தாளிக்கவும். சோம்பு சிவந்த பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்க்கவும். பாதி வதங்கிய பின் நறுக்கிய கத்திரிப்பிஞ்சு சேர்த்து, நன்றாக வதக்கி... வேகவைத்த மொச்சை, அரை கப் நீர் விட்டுக் கிளறவும். எல்லாம் நன்கு சேர்ந்து உதிர்உதிராக ஆன பின் இறக்கவும். மீதமுள்ள எண்ணெயைக் காய்ச்சி... நசுக்கிய பூண்டு, இஞ்சி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு புரட்டி கத்திரி - மொச்சை கலவையில் சேர்த்துக் கலந்து... கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

நாட்டுக்காய் கூட்டாஞ்சோறு

13103328_514935552028437_976515983013286

 

தேவையானவை: அரிசி - 200 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு, புளி - நெல்லிக்காய் அளவு, வாழைக்காய் - ஒன்று, கத்திரிக்காய் - 4, இளம் முருங்கைக்காய் - ஒன்று, அவரைக்காய் - 10, வெள்ளை முள்ளங்கி - ஒன்று (இவற்றைப் பெரிய துண்டுகளாக நறுக்கவும்), முங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, நெய், எண்ணெய் - தலா 2 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு.

வதக்க: நாட்டுத் தக்காளி - 3 (நறுக்கவும்), நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்.

வறுத்து அரைக்க: தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது காரத்துக்கேற்ப), தேங்காய் - அரை மூடி (சிறிய மூடி போதும்... துருவிக்கொள்ளவும்), சின்ன வெங்காயம் - 4, நாட்டுத் தக்காளி - ஒன்று.

செய்முறை: அரிசியுடன், துவரம்பருப்பு, கொஞ்சம் உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அகலமான மண்சட்டி (அ) அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை சிவக்க வறுத்து விழுதாக்கவும். அதே மண்சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தக்காளி, வெங்காயத்தை வதக்கவும். இத்துடன் நறுக்கிய காய்கள், முருங்கைக்கீரை சேர்த்து தண்ணீர் தெளித்து, முக்கால் பதமாக வெந்த பின் புளிக்கரைச்சல், தேவையான உப்பு, மஞ்சள்தூள், அரிசி - பருப்பு கலவை சேர்க்கவும். பின்னர், அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். நெய்யை காயவிட்டு, கடுகு தாளித்து, கூட்டாஞ்சோறில் சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

சேமியா பிரியாணி

தேவையானவை:
 சேமியா - 200 கிராம்
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
 இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
 பச்சைமிளகாய் - 2
 கேரட் - 1
 பீன்ஸ் - 3
 காலிஃபிளவர் - ஒரு கைப்பிடியளவு
 தக்காளி - 3
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 புதினா இலை - சிறிதளவு
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 நெய் - 4 டீஸ்பூன்

தாளிக்க:
 எண்ணெய் - 2  டேபிள்ஸ்பூன்
 சீரகம் - முக்கால் டீஸ்பூன்
 பட்டை - ஒரு துண்டு
 கிராம்பு - 2
 ஏலக்காய் - ஒன்று
 பிரிஞ்சி இலை - ஒன்று

p59.jpg

செய்முறை:
சேமியாவை உதிரி உதிரியாக வேக வைத்துக்கொள்ளவும். தக்காளியை பேஸ்ட் போல அரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் காலிஃபிளவர் பூக்கள் சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும். இத்துடன் தக்காளி பேஸ்ட்டை ஊற்றி, காய்களை மிதமான தீயில் வேக விடவும். பிறகு மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெந்த சேமியாவைச் சேர்த்து பதமாக கிளறி, கொத்தமல்லித்தழை, புதினா இலை தூவி, இறுதியாக நெய் ஊற்றிக் கிளறி, பத்து நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.

 

சப்பாத்தி குருமா

தேவையானவை:
 உருளைக்கிழங்கு - 500 கிராம்
 பொடியாக நறுக்கிய
    பெரிய வெங்காயம் - ஒன்று
 பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
 பச்சைப்பட்டாணி - ஒரு கைப்பிடியளவு
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 கறிமசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க:
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு

p58.jpg

செய்முறை:
குக்கரில் உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப்பட்டாணியைச் சேர்த்து வேகவைத்து, கிழங்கைத் தோலுரித்து மசித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், வெந்த பச்சைப்பட்டாணி சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிமசாலாத்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். மசாலாக்கள் உருளைக்கிழங்கில் நன்கு ஒட்டியதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து இறக்கவும்.

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.