Jump to content

யாழ்கள சித்திவிநாயகர் ஆலயம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள சித்திவிநாயகர் ஆலயம்.
அன்பர்களே! பக்த அடியார்களே! இன்றிலிருந்து யாழ்களத்திலும் சைவ ஆலயம் திறக்கப்படுகின்றது.
 

ga-pi_zps5fc7563e.gif

 

 

மேலதிக விபரங்கள் பின்னர் அறித்தரப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லமுயற்சி! கள உறவுகள் ஆன்மீகத்தில் நாட்டம்கொள்வது வரவேற்கத் தக்கது!

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

யாழ்கள சித்திவிநாயகர் ஆலயம்.

யாழ்களத்தில் முருகன் கோவில்தான் வேண்டும் பிள்ளையார் வேண்டாமெண்டு நாலுபேர் கிளம்ப போறாங்கள் - கவனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சொல்லுக் கடங்கான்காண் சொல்லறிந்து நின்றவன்காண்
கல்லுள் ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண்" 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் சித்தி விநாயகருக்கும் இடையில்.. ஒரு பிரச்சனை போய்க்கிட்டு இருக்குது. ஆளை கனநாளா தேடிக்கிட்டு இருக்கிறம். ஒன்னுமில்ல எல்லாம் பிகர் மாட்டர் தான்.

யாழ் நல்லூர் அன்னசத்திர லேன் சித்தி விநாயகர் கோவில் தான் எங்கட சாமி கும்பிடுற இடம் ஒரு காலத்தில. அன்னசத்திர லேன் ஒரு காலத்தில் அழகான பிகருகளுக்கு பெயர் போன இடம். உந்த சித்தி விநாயகர் எங்களுக்கு முயற்சியில் சித்தி அளிப்பார் என்று பார்த்தால்... அந்தாள்.. பெயில் பண்ணிப்போட்டுது. "என்னைப் போல நீயும் இருக்கக் கடவ" என்று சபிச்சும் விட்டுது. அதுக்கு பரிகாரம் தேடி..பல காலமா ஆளைத் தேடுக்கிட்டு இருந்தம்.. இப்ப யாழில வந்து வசமா மாட்டிக்கிட்டார்..! tw_blush:

Link to comment
Share on other sites

வாழ்வை வளமாக்கும் விநாயகர் நிவேதனம்

விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப்பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிக் கிடக்கிறது. அது என்ன என்பதைத் தெரிந்து படைத்தால் வாழ்க்கையே வளமாகும்.

Bilderesultat for மோதகம்

மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது. 



கரும்பு:  கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும்  இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது.

 Bilderesultat for பொரி  

அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

http://aanmeegam.our24x7i.com/TAMIL_NOOLGAL/AANMEEGAM/AANMEEGAM/GANESHA_WORSHIP_../364/1.jws

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மாலைப்பூசை ஆறு மணி
பூசை முடிந்ததும் பொங்கல் மற்றும் சுண்டல் வழங்கப்படும்tw_blush:
உபயம் வாத்தியார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  நடக்குது இங்க...

 

பிள்ளையாரில தான் எல்லாம் தொடங்கிறது

முடிக்கிறது.....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழு
துள்ளி யோடும் தொடரும் வினைகளே
கருணை வள்ளல் கணபதியைத் தொழ
அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே
முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்
தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை 
வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இங்கே ஒரு ஆஸ்ரமத்தை திறந்து விட வேண்டியது  தான் :unsure:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பிள்ளையார் உருவான கதை

 

கைபிகோ 302

 
விவரங்கள்
எழுத்தாளர்: எஸ்.இலட்சுமணப்பெருமாள்
தாய்ப் பிரிவு: செம்மலர்
பிரிவு: நவம்பர்09
 வெளியிடப்பட்டது: 13 டிசம்பர் 2009

 

அழிக்கும் கடவுளான சிவபெருமான் பொது தர்மத்திற்குத்தான் தன்னோட அழிவு சக்தியை பயன்படுத்தலாமே தவிர சொந்த காரண காரியங்களுக்கு பயன்படுத்தினால் அது கொலை வழக்ககாத்தான் கருதப்படும்ங்கிறது கைலேங்கிரி பீனல்கோடிலுள்ள ஷரத்து.

அப்படியொரு கொலை வழக்கு விஷயமா கைலேங்கிரி ஹைகோர்ட் போயிட்டு அலுப்பா மலைக்கு வந்து சேர்ந்த புருசனை பார்வதியம்மா எதிர்கொண்டு என்னங்க. என்னாச்சுன்னு கேட்ட மட்டுல அவர் கையிலிருந்த திரிசூலத்தை வாங்கி மூலையில சாத்தி வச்சு கழுத்தில கிடந்த பாம்பை எடுத்து அசையில தொங்கவிட்டு ஆசுவாசப்படுத்துனா.

"உஸ்.... சும்மாயிரு. பையன்க காதுல விழுகப்போகுது அப்படீன்னார்." மூத்தவன் இல்லே இளையவன் முருகந்தான் இருக்கான் சும்மா சொல்லுங்கன்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே முருகன் விறுவிறுன்னு பக்கத்திலே வந்து "என்னப்பா ஆச்சு வாய்தா. அப்படி. என்ன கேசு ஒம்மேலே' அப்படீன்னான்.

சரி பய பெரிய பிள்ளையாயிட்டான். என்னைக்கிருந்தாலும் தெரியத்தான் போகுது. நானே சொல்லிர்றேன் அப்படீன்னு ஆரம்பிச்சா பார்வதி.

"அது வந்துப்பா முருகா! முன்னாடி ஒருநா நான் குளிக்கணும்னு கொல்லைப்பக்கமா போனேன். அந்நேரம் உங்கப்பா வெளியே போயிட்டாரு. குளிக்கும் போது காவலுக்கு யாருமில்லேயேன்னு ரோசனை பண்ணுனேன்."

"காவலுக்கா அதுசரி கைலேங்கிரியிலேயே எட்டிப் பாத்துர்றானா பொம்பளை குளிக்கிறதை,அதுவும் பரமசிவர் பெண்ஜாதி குளிக்கிறதை. உலகம் விளங்கிப்போகும். சரி பிறகு?"

"பிறகென்ன உடம்புல இருக்கிற அழுக்கை திரட்டி ஒரு உருவம் செஞ்சேன்."

"க்கும் அதென்ன அவ்வளவு அழுக்கு, இங்கே உனக்கு என்ன வேலை. என்னம்மா கரிசக் காட்டுல களையெடுக்கிற பொம்பளை மாதிரி. வெடி ஆபீஸிலெ தீப்பெட்டி கம்பெனியில வேலை செய்திட்டு குளிக்கிறதுக்கே தீரலைங்கிற மாதிரி அலைஞ்சிருக்கே! அப்பவும் அழுக்கு ஒரு உருவம். செய்யுற அளவுக்கா? பாம்பு சட்டை உரிச்ச மாதிரி."

"சொல்றதை கேளுப்பா"

"இல்லே இல்லே அதுதான் உனக்கு சக்தின்னு இங்கே. எவனோ உங்கிட்டே புளுகி இருக்கான். குளிச்சா பலம் போயிரும்ன்னு பயமுறுத்திருப்பான்".

"சும்மாயிரு அம்மாவை கேலிபண்ண இதுவா நேரம். கொறக்கதையை கேளு. அப்படி அந்த உருவத்தை வாசலுக்கு வெளியே காவல் வச்சிட்டு உள்ளே குளிக்கப்போனேன்."

"யாரை? அந்த அழுக்குருண்டையை காவல் வச்சிட்டு!"

"ஆமாமா உள்ளே குளிச்சிட்டு இருந்தனா..."

இப்பொ பரமசிவனாகிய சிவபெருமாள் கதையை தொடங்குனார்.

"அப்பொ நான் லாத்தலா வெளியே போயிட்டு உள்ளே நொழஞ்சேன். திடீர்ன்னு கைய ரெண்டையும் விரிச்சி மறிச்சி உள்ளே போகக் கூடாது. அப்படீன்னு குறுக்கே நின்னான்".

"யாரு? அந்த அழுக்குருண்டையா!"

"ஆமா... டேய் நீ யார்ரா அதச்சொல்ல நா யார்ன்னு தெரியுமா அப்படீன்னு நாக்கை துருத்தி முறுக்கிக்கிட்டு போடா போன்னுட்டு ஒரு எட்டு எடுத்து வச்சேன்".

"நீ யாரா இருந்தா எனகென்ன போயா அந்தப் பக்கம் எங்க அம்மா குளிச்சிட்டு இருக்குங்கிறேன். அப்படீன்னு என்ன நெட்டி தள்ளிவிட்டான். அவ்வளதான் எனக்குக் கோபம் அண்டகடாரம் முட்டிப்போச்சி. இடுப்பிலிருந்த வாளை எடுத்து தலையை ஒரே சீவு!"

முருகன் அப்பனைப் பார்த்து இகழ்ச்சியா கையை நீட்டி நீயெல்லாம்  ஒரு மனுசன்ங்கிற மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு சொன்னான்.

"இங்கெ பாருப்பா ஒரு பொம்பளை குளிச்சிட்டு வர்றதுக்கு எவ்வளவு நேரம் ஆயிரும். அதுவரைக்கு பொறுக்கலையா. ஒரு படுகொலையை பண்ணிட்டு போற அளவுக்கு அங்கே என்ன இருக்கு. இல்லே இதுக்கு முன்னாடி பாராததை பாக்கப்போறியா".

சிவபெருமாள் தலைய கவிழ்ந்த மட்டுல இருந்தார். அன்றைக்கிருந்த சோகம் போலவே இப்பொ இருந்து கொண்டு பார்வதி தொடர்ந்து சொன்னாள்.

"வெளியே வந்து பாக்குறேன். எம்பிள்ளை தலைவேற முண்டம் வேறயா கிடக்கான். அடப்பாவி மனுசா நீ விளங்குவியா துலங்குவியான்னு அழுதேன். நான் அழுகிறதை பார்க்கப் பொறாத இந்த மனுசன் சரி சரி நடந்தது நடந்து போச்சி. இதுக்கு வேற ஏற்பாடு பண்ணுதேம்முன்னு அந்தப் பக்கமா ஒரு யானை போயிட்டு இருந்தது. அதோட தலையை வெட்டி இந்த உடம்புல பொருத்தி உங்க அண்ணன் பிள்ளையார் பொறந்தான்."

"நல்ல வேளை அந்த நேரம் யானை தட்டுப்பட்டது. நாய்நரி வராம. இந்த லட்சணத்துல என்னைப் பாத்து நீ அம்மா வயித்துலயா பெறந்தே அப்படீன்னு கேக்கான். நான் அப்பா நெத்திக்கண்ணுல பொறந்ததை தெரிஞ்சுக்கிட்டு இவன் பிறவிக் கூறு தெரியாம. மடையன். எனக்கு முன்னாடியே சந்தேகம். இவன் எப்படி அம்மா வயித்துல பிறந்திருக்க முடியும். அப்படியே பிறந்திருந்தாலும் என்ன லட்சணத்திலே பால் குடிச்சிருப்பான்."

"சரி சரி அண்ணன்கிட்டெ அது இதெச்சொல்லி பழையபடி சண்டையைப் போடாதீங்க. விசயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்".

"அது கிடக்கட்டும் இப்பொ கோர்ட்டுல ஒம்மேல கொலைக்கேஸ்தானே நடக்கு".

"ரெட்டைக்கொலை. வாட்ச்மேனை கொன்னேன்னு ஒரு கேஸ். யானையை கொன்னேன்னு வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி ஒரு கேஸ்."

"அதான் ஒரு உசிரை உண்டாக்கி விட்டாச்சுல்லே. பிள்ளையாருங்கிற பேர்ல!"

"கொன்னது வாஸ்தவமா இல்லையா. ஆமா இல்லை ரெண்டுல ஒரு பதில் சொல்லுங்கிறான். சர்க்கார் வக்கீல். உற்பத்தி பண்ணுறது உன் வேலை இல்லைனுட்டான்."

"அடுத்த வாய்தா எப்பவாம்?".

"இன்னும் ஜட்ஜ்மெண்ட்தான். கலியுகத்திலே."

"அதென்ன வருசம் மாசம் கணக்கு இல்லாம யுகக்கணக்கு."

அடேய் இந்த மனுசர்களுக்கு நூறு வருசம்ன்னா நமக்கு ஒரு மணி நேரம்தான் கணக்கு. மனுசப்பதர்களுக்கு உண்டான கால அளவு நம்ம மாதிரி தேவாதி தேவர்களுக்கு கிடையாது. அதாவது இப்படிச் சொல்றேன் தெரிஞ்சுக்கோ.

"பிரம்மாவுடைய பேரன் ராவணன். பிரம்மா ஒருநாள் காலையில 'வெளிக்கி' கிளம்பிப் போனாராம். அப்பொ இடையில ஒரு ஆள் வந்து உங்களுக்கு பேரன் பிறந்திருக்கான் அப்படீன்டிருக்கார். சந்தோசம் சந்தோசம்ன்னு சிரிச்சுக்கிட்டே போயிட்டாராம்.

திரும்ப வந்து கால் கழுவ செம்புல தண்ணி மொண்டாராம். உங்க பேரன் ராவணன் செத்துப்போனான்னு தகவல் வந்திருக்குன்னு சரஸ்வதி வந்து சொன்னாளாம். தெரியும் தெரியும் இந்தா தலையில தண்ணி விடப்போறேன்னாராம்.

அதாவது பிரம்மா வெளியே இருந்துட்டு வந்து கால்கழுவும் முன்னால ராமன் - ராவணன் பிறந்து வளர்ந்து வனவாசமாகி ராம-ராவண யுத்தம் முடிஞ்சு போச்சாம். எல்லாம் கதைதானே. ஏற்கெனவே பிரம்மாவோட நாலாவது மண்டையப் பிச்சு எடுத்திட்டேன்ன ஒரு கேஸ்பெண்டிங்ல இருக்கு. இப்போ தேவர்களுக்கு ஆயுள்காலம் எவ்வளவு?

- எஸ்.இலட்சுமணப்பெருமாள்

 

http://keetru.com/index.php/2009-10-07-10-44-25/09-sp-260606644/1622--302

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நற்குஞ்சரக் கன்று நண்ணில் கலை ஞானம்,

கற்கும் சரக்கன்று காண்!

 

- திருவருட் பயன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை ஆரம்பித்தையிட்டு மிகவும் மனவருத்தமடைகின்றேன்.

மதங்கள் சிரித்து நையாண்டி பண்ணி மகிழ்வதற்கல்ல. இந்த திரியை சிரிப்போம் பகுதிக்கு நகர்த்தி நிர்வாகி ஒருவர் என்மீதிருக்கும் வக்கிர புத்தியை காட்டியுள்ளார்.

பலமுறை இது சம்பந்தமாக கேட்டும் இதுவரை பதிலில்லை.தயவு செய்து இந்த திரியை நீக்கிவிடவும்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

இந்த திரியை ஆரம்பித்தையிட்டு மிகவும் மனவருத்தமடைகின்றேன்.

மதங்கள் சிரித்து நையாண்டி பண்ணி மகிழ்வதற்கல்ல. இந்த திரியை சிரிப்போம் பகுதிக்கு நகர்த்தி நிர்வாகி ஒருவர் என்மீதிருக்கும் வக்கிர புத்தியை காட்டியுள்ளார்.

பலமுறை இது சம்பந்தமாக கேட்டும் இதுவரை பதிலில்லை.தயவு செய்து இந்த திரியை நீக்கிவிடவும்.

அண்ணை இதற்கு நானும் காரணமாக இருப்பதால் முதலில் உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

உங்கள் பதிவுகள் எப்போதுமே நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் இருப்பதால் நானும் இத்திரி சிரிப்பதற்கென்றே நினைத்துவிட்டேன். அதனால்தான் "பிள்ளையார பிறந்த கதை"  பதிவை இணைத்தேன்.
 

மறுபடியும் உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

அண்ணை இதற்கு நானும் காரணமாக இருப்பதால் முதலில் உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

உங்கள் பதிவுகள் எப்போதுமே நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் இருப்பதால் நானும் இத்திரி சிரிப்பதற்கென்றே நினைத்துவிட்டேன். அதனால்தான் "பிள்ளையார பிறந்த கதை"  பதிவை இணைத்தேன்.
 

மறுபடியும் உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

அட போங்க ஜீவன்! சிரிப்போம் பகுதியில்  நான் இணைத்திருந்தால் உங்களை விடவும் மேலே கருத்திட்டவர்களை விடவும் இன்னும் கலாய்த்திருப்பேன்.

நான் இணைத்தது வேறொரு பகுதியில்......அதை நிர்வாகம் இங்கே நகர்த்தியிருக்கின்றது. காரணம் கேட்டேன் இதுவரை பதிலில்லை.நான் நினைத்தது வேறு. நடந்தது வேறு. இதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for hundi

ஆரோஹரா, ஆரோஹரா

அப்பனே பிள்ளையார், அப்பா...

உனக்கு உண்டியலில காசு போடுற ஆக்களுக்கு, கேட்டதை எல்லாம் கொடப்பா..

எல்லாரும் நல்லா உண்டியலுக்க போடுங்கோ. எவ்வளவு போடலாம் எண்டது உங்களைப் பொறுத்தது. யோசித்து வையுங்கோ.

நாளைக்கு paypal இணைக்கப் படும் (பகிடிகில்ல, உண்மையாகவே தான்). பிள்ளையாரோட பகிடி விடக்கூடாது.

ஆரோஹரா, ஆரோஹரா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.