Jump to content

பெண்களின் ஓரினச்சேர்க்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வாசித்த ஓர் செய்தியும், தொடர்பான கட்டுரையும்

ஓரினச் சேர்க்கை மோகம்! வீட்டை விட்டு ஓடிய யுவதிகள் கைது

ஓரினச் சேர்க்கை மோகத்தில் வீடுகளை விட்டு ஓடிச் சென்ற பாடசாலை மாணவி ஒருவரையும், யுவதி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவரும், 20 வயதான யுவதி ஒருவருமே இவ்வாறு அவிசாவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்னர்.

அண்மையில் அவிசாவளை பஸ் நிலையத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவர் பற்றி, அருகாமையில் இருந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இருவரும் ஓரினச் சேர்க்கையில் நாட்டம் கொண்டு நட்பு கொண்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பெற்றோர் விரும்பாத காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறியதாக பாடசாலை மாணவியும் யுவதியும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளுக்காக இந்த இருவரையும் அவிசாவளை பொலிஸார் மீரிகம பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

 

பெண்களின் ஓரினச்சேர்க்கை

Mar 26th, 2015 · Comments Off

பெண்களின் ஓரினச்சேர்க்கைக்கு லெஸ் பியன் என்று பெயர். இது தற்கிளர்ச்சிக்கு ம், சுய இன்பத்திற்கும் இணையானது. விடு தியில் தங்கியிருக்கும் சில மாணவிகள், பெண்களிடம் இப்பழக்கம் இருக் கிறது.
திருமணமான பெண்கள் இதில் ஈடுபடுவ தற்கு காரணம் கணவன் மூலம் திருப்திகர மான உச்சக்கட்டம் அடையாததுதான். சூழ்நிலை ஒரு காரணமாக உள்ளது.
இந்த லெஸ்பியன் பழக்கம் அளவுடன் இரு க்கும்வரை தவறில்லை. அளவுக்கு மீறி னால்தான் தவறானது. சில சமயம் அளவு க்கு மீறிப் போகும்போது ஆண்க ளையே வெறுக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடிய அபாயம் இருக் கிறது.
செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத்தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கிறது. நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன? பெண்ணின் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக்கட்டுரை.

பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகரமாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு உண்மையாக வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு இருக்கிறது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன.

திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார்களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.

இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணும் திருமண உறவில் விரிசல் – விவாகரத்து போன்றவையாகும்.

எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது இன்றியமையாதது ஆகும்.

சமீப காலம்வரை பெண்களுடைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோங்கி இருந்தது. இன்று நிலை மிகவும் வேகமாக மாறி வருகிறது.

பெண்களும் முழுமையான இன்பம் அனுபவிக்க வேண்டும். அவ்வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இயற்கையில் பார்த்தால் ஆண்களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப்பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்

- See more at: http://www.kudumbauravu.com

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அந்த வீடுகளில் இருந்துகொண்டே....
வடிவாக வாழ்ந்திருக்க்கலாம்.

லூசுதனாமாக ஓடி இப்ப விளம்பரம் செய்து கைது ஆனதுதான் பலன்.

15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தினார் 
என்று கேசை மாற்றி 20 வயது யுவதி உள்ள போக போகிறார். 

இலங்கை இந்தியா நாட்டில் இதை வேறு விதமாகத்தான் கையாள வேண்டும்.
அதற்கான வசதிகள்தான் அங்கே நிறைவாக இருக்கிறது.  

28 minutes ago, colomban said:

இன்று வாசித்த ஓர் செய்தியும், தொடர்பான கட்டுரையும்

ஓரினச் சேர்க்கை மோகம்! வீட்டை விட்டு ஓடிய யுவதிகள் கைது

ஓரினச் சேர்க்கை மோகத்தில் வீடுகளை விட்டு ஓடிச் சென்ற பாடசாலை மாணவி ஒருவரையும், யுவதி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவரும், 20 வயதான யுவதி ஒருவருமே இவ்வாறு அவிசாவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்னர்.

அண்மையில் அவிசாவளை பஸ் நிலையத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவர் பற்றி, அருகாமையில் இருந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இருவரும் ஓரினச் சேர்க்கையில் நாட்டம் கொண்டு நட்பு கொண்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பெற்றோர் விரும்பாத காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறியதாக பாடசாலை மாணவியும் யுவதியும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளுக்காக இந்த இருவரையும் அவிசாவளை பொலிஸார் மீரிகம பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

 

பெண்களின் ஓரினச்சேர்க்கை

Mar 26th, 2015 · Comments Off

பெண்களின் ஓரினச்சேர்க்கைக்கு லெஸ் பியன் என்று பெயர். இது தற்கிளர்ச்சிக்கு ம், சுய இன்பத்திற்கும் இணையானது. விடு தியில் தங்கியிருக்கும் சில மாணவிகள், பெண்களிடம் இப்பழக்கம் இருக் கிறது.
திருமணமான பெண்கள் இதில் ஈடுபடுவ தற்கு காரணம் கணவன் மூலம் திருப்திகர மான உச்சக்கட்டம் அடையாததுதான். சூழ்நிலை ஒரு காரணமாக உள்ளது.
இந்த லெஸ்பியன் பழக்கம் அளவுடன் இரு க்கும்வரை தவறில்லை. அளவுக்கு மீறி னால்தான் தவறானது. சில சமயம் அளவு க்கு மீறிப் போகும்போது ஆண்க ளையே வெறுக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடிய அபாயம் இருக் கிறது.
செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத்தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கிறது. நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன? பெண்ணின் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக்கட்டுரை.

பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகரமாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு உண்மையாக வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு இருக்கிறது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன.

திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார்களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.

இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணும் திருமண உறவில் விரிசல் – விவாகரத்து போன்றவையாகும்.

எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது இன்றியமையாதது ஆகும்.

சமீப காலம்வரை பெண்களுடைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோங்கி இருந்தது. இன்று நிலை மிகவும் வேகமாக மாறி வருகிறது.

பெண்களும் முழுமையான இன்பம் அனுபவிக்க வேண்டும். அவ்வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இயற்கையில் பார்த்தால் ஆண்களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப்பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்

- See more at: http://www.kudumbauravu.com

 

நாங்கள் மட்டும் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறமாக்கும்.

சும்மா நாடகம் போட்டு வாழ்நாளை தொலைகிறதுதான் மிச்சம்.
அதுதான் பெண்புத்தி பின் புத்தி என்பார்களோ தெரியாது.

காத்தடிக்கிற நேரம் சுளகை நல்லாய் தூக்கி தூற்றிவிட்டு 
கற்று ஓய எல்லாவற்றையும் துடைத்து கூட்டிவிட்டு 
துற்றுதல் என்பது நடந்த மாதிரியே இல்லாமல் இருந்துவிட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.