Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

அன்னை என்று ஆகுமுன்னே ஆராரோ பாட வந்தேன்

என்னவென்று பாடுவேன்கண்ணே ! எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே....!

--- அம்மா ---

(அந்தம்மா எந்த நேரத்தில பாடினாங்களோ இன்றும் தமிழ்நாட்டுக்கே அம்மாவாய் இருக்கிறாங்க.)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரசன்ற் சேர்!

எனது முந்தைய கருத்து ஒன்று. கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி 10 வருடங்களுக்கு முன்னர் யாழில் எழுதியது!

..

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எல்லாவற்றையும் எங்கும் எழுதிவிட முடியாது. கருத்துக்கள் மற்றையோரைப் பாதிக்கும், கோபமூட்டும், வன்முறைகளைத் தூண்டும் (உ+ம். முகம்மது நபியின் கேலிச்சித்திரம்) என்பதைப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் என்ற பெயரில் ஆளையாள் தாக்கி எழுதுவதனால் எதுவித பலனுமில்லை. உணர்ச்சிவசப் பட்டு, அவசரப்பட்டு எழுதினால், உங்கள் அம்மணத்தை கண்காட்சியாக எல்லோரும் பார்க்க அனுமதிக்கின்றீர்கள் என்று அர்த்தம். 

விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், முட்டையில் மயிர் பிடுங்வதாக இருக்கக் கூடாது, தற்பெருமையைப் பறைசாற்றுவதாக இருக்கக் கூடாது. கற்றுக் குட்டித்தனமான விமர்சனங்களையும், கருத்துக்களையும் எழுதிக்கொள்வதால் எவரையும் அறிவூட்டமுடியாது. மாறாகத் தவறான பாதையில்தான் இட்டுச் செல்லமுடியும் (தெளிவானவர்கள் தங்கள் பாதையிலேயே போய்க் கொள்வார்கள்) 

யாழ் களத்தில் வருபவர்கள் பலர் அனாமேதயங்களே. எழுதுபவர்களின் கருத்துக்களை வைத்துக் கொண்டுதான் அவர் எந்தத் தளத்தில்/பின் புலத்தில் இருந்து கருத்தாடுகின்றார் என்பதை மற்றவர்வர்கள் புரிந்து கொள்ள முயலவேண்டும். 

தேசியத்திற்கு எதிராக எழுதப் போகின்றேன் அல்லது ஆதரவாக எழுதப் போகின்றேன் என்று ஒருவர் முன்கூட்டியே அறிவித்தால், அதை அப்படியே ஏற்றுக் கொள்வதும் முட்டாள்த்தனமானது/சிறுபிள்ளைத்தனமானது.

 

http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=9650&view=findpost&p=169199

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனாருக்கு என்னாயிச்சுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

கிருபனாருக்கு என்னாயிச்சுது?

சொந்தக் கருத்துக்களை எழுத இப்ப நேரமில்லை. அதனால் முன்னர் சொந்தமாக :cool: எழுதிய தத்துவங்களை இரை மீட்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா...

 

12805960_240345129641972_564926718593654

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்

பணமில்லாத வீட்டினிலே சொந்தம் எல்லாம் துன்பம்....!

--- பணம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா!

.....

பலம் என்பது, மற்றாக்களை அவர்களுடைய கருத்தை முழுமையா வைக்கவிடாம தடுக்கிறதுதான். ஏதாவது முட்டையில மயிர் பிடுங்கி, மயிரைப் பற்றி மட்டும் கதைச்சு அதில வெல்றதுதான். வெல்லாட்டி நித்திரை வராதெல்லே.

கருத்துப் பதிந்த திரி: http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=7268&view=findpost&p=137425

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா!

943968_1272067766143950_5147437341468683

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

மனம் பார்க்க மறுப்போர் முன்  படைத்தாய் கண்ணா,

நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா

--- நிறவெறி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா!

...

யாழ் களத்தில் கருத்தாடுபவர்கள் எல்லோரும் அறிவிஜீவிகள் அல்ல, அல்லது அடி முட்டாள்களும் அல்ல. அவரவர் தங்கள் தங்களுக்குப் பிடித்ததை எ௯ழுதுகிறார்கள், குழுக்களாக கருத்தாடுகிறார்கள் (அல்லது அரட்டை அடிக்கிறார்கள்). 

அதிக அரட்டையும், சினிமா மாயையும் உள்ள எங்கள் சமூகத்தின் நிலையை யாழிலும் பிரதிபலிக்கின்றது என்பது யாரும் மறுக்கமுடியா உண்மையான விடயம். வார சஞ்சிகைகள் வரும்போது, சினிமாப் பக்கத்தை ஒருவர் முதலாவதாகப் படிப்பார். இன்னொருவர் அரசியலைப் படிப்பார். மற்றொருவர் எதுவுமே படிக்க மாட்டார். அதுபோலத்தான் இங்கும். இதற்காக யாரும் யாரையும் நோகவேண்டியதில்லை. 

தத்துவங்கள், சித்தாந்தங்கள் எடுத்த எடுப்பிலேயே அனைவருக்கும் புரிந்துவிடுவதில்லை. புரியாமல் இருந்தாலும் ஒன்றும் கெட்டுவிடுவதில்லை. வழமையான பொழுதுபோக்குகளுடன் எங்கள் வாழ்க்கை தன்பாட்டில் போகும். எங்குபோகும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்பவர்கள்தான் அதிகம். 

மார்க்கசியம், சோசலிசம், அரசியல் விஞ்ஞானம், முதலாளித்துவம், பொருள்மையவாதம், சிற்றிலக்கியம், பேரிலக்கியம், தீவிர இலக்கியம், எல்லாம் அறிந்து என்ன செய்யப் போகின்றோம். இருப்பது முதலாளித்துவ ஐரோப்பாவில். அதிகம் படித்தால் எப்படி முதலாளித்துவம் எங்கள் உழைப்பை அட்டை மாதிரி உறிஞ்சுகின்றது என்பது புரிந்துவிடும். அது புரியாமல் இருப்பதே பலருக்கு நல்லது. 

தேடலும் ஆர்வமும் இல்லாமல் எமது சமூகம் போவது எதிர்காலத்திற்கு நல்லது என்றால் நாங்கள் எமது சிந்தனைமுறையை மாற்றாமல் அப்படியே தொடர்வோம்.

http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=7268&view=findpost&p=137312

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

நான் போன பின்னும் உயிர்வாழ வேண்டும் , எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு.

பாரெங்கும் வண்ணம் பூ எல்லாம் வாசம், நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு....!

--- அம்மா ---

Link to comment
Share on other sites

நானும் உள்ளேன். வந்து வந்து போகின்றேன்.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகரில்லையா - பிறர்

தேவையறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளையில்லையா....!

--- சிறந்த மனிதன் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா!

12799069_1114178005268612_54055418465669

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா!

12670778_959735010731026_778311045908249

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

உச்சி வெய்யில் சூரியனை மேகம் மூடுது, உள்ளம் எனும் சூரியனை கோபம் மூடுது

காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது, பேசிக் கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது...!

--- கோபம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேனுங்கோ!

 

முன்னைய தத்துவம் ஒன்று

.....

 

மனிதனுக்குரிய பலவீனங்கள் பல எனக்கும் உள்ளது. பலவீனங்களை மறைத்து உத்தமனாக நடிக்கும் போக்கைவிட நேர்மையாக நடக்க வேண்டும் என்ற கொள்கையுடையவன் நான். 

உலகத்தில் எல்லா கேள்விகளுக்கும் ஒருவரால் விடைகூற முடியுமென்றால் அவர் ஒரு ஞானி. விடையற்ற கேள்விகள் பல உள்ளன. கேள்விகள், தேடல்கள் இல்லாமல் இருந்தால் ஆறறிவு வைத்து என்ன பிரயோசனம். விலங்கைப் போல, பறவையைப் போல, உணவு தேடுவதிலும், வம்சத்தை விருத்தி செய்வதிலும், வம்சத்தைப் பாதுகாப்பதிலும் மட்டும் அக்கறை கொண்டால் மனிதனாக இருப்பதில் அர்த்தமில்லை. 

மகாத்மா, அமைதியும் மனச்சாந்தியும் உள்ள வாழ்வை அடைய வேண்டுமென்றால் காவியுடையை அணிந்து சாமியாரகப் போகவேண்டியதுதான். போராட்டமும் சஞ்சலமும் இல்லாத வாழ்வு கற்பனையில்தான் கிடைக்கும். வாழ்க்கை என்பது நாம் இருக்கும் நிலையிலிருந்து நாம் அடைய நினைக்கும் நிலைக்குச் செல்வதற்கான போராட்டமே. போராட்டத்தில் வெற்றி பெறாமலேயே அநேகமாக எல்லோருடைய வாழ்வும் அஸ்தமிக்கிறது.

 

http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=4437&view=findpost&p=76106

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.