Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

சித்திரமும் கை பழக்கம் 

செந்தமிழும் நா பழக்கம் 

வைத்ததொரு கல்வி அது மனப்பழக்கம் 

நித்தம் நடையும்  நடைப்பழக்கம் 

கொடையும்  தயையும்  பிறவிக்குணம்.....!

--- ஓளவையார் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கோடைகாலத்து தென்றல்
குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடைகாலத்தில் ஆடல்
விளையாடல் கூடல்..
வானம் தாலாட்டுபாட
மலைகள் பொன்னூஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட
பூவில் மேடையமைத்து
பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு, துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு.......!

----காதல் வைபோகமே-----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

இன்பத்தையே பங்கு வைத்தால் 

புன்னகை சொல்வது நன்றி 

துன்பத்திலே துணை வந்தால் 

கண்ணீர் சொல்வது நன்றி 

வாழும்போது வருவோர்க்கெல்லாம் 

வார்த்தையாலே  நன்றி சொல்வோம் 

வார்த்தை இன்றி போகும்போது 

மௌனத்தாலே நன்றி சொல்வோம்......!

---நாலு பேருக்கு நன்றி----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கார வீட்டுத் திண்ணையில கறிக்கு மஞ்சள்  அரைக்கையில 

மஞ்சலை அரைக்குமுன்னே மனசை அரைச்சவளே 

கரிசக்காட்டு ஓடையில  கண்டாங்கி துவைக்கையில 

துணியை நனையவிட்டு மனசை பிழிஞ்சவளே 

நெல்லு கலத்து மேட்டு மேலே என்னை இழுத்து முடிஞ்சிட்டு போறவளே 

போனவை போனவதான்  புத்திகெட்டு போனவதான் 

புது கல்யாண சேலையில கண்ணீரை துடைச்சுக்கிட்டு போறவளே 

போனவ போனவதான் பெஞ்சாதியா போனவதான் 

நா தந்த மல்லிகையை நட்டாத்தில் போட்டு விட்டு 

அரளிப் பூச்சூடி  அழுதபடி போறவளே 

கடலைக்காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள 

காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல.....!

----ராசாத்தி என் உசுரு என்னுதுல்ல----

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வேல்விழி போடும் தூண்டிலே 

நான் விழலானேன் தோளிலே 

நூலிடை தோயும் நோயிலே 

நான் வரம் கேட்கும் கோயிலே 

அன்னமே எந்தன் சொர்ணமே -- உந்தன்

எண்ணமே வானவில் வர்ணமே 

கண்ணமே மது கிண்ணமே - அதில் 

பொன்மணி வைரங்கள் மின்னுமே 

என்னையே தொல்லை பண்ணுமே 

பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே.......!

---இந்த மான் உந்தன் சொந்த மான்----

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பழனப்  பாகல்  முயிறு  மூசுகுடம்பை 

கழனி  எருமை  கதிரொடு மயக்கும் 

பூக்கஞல்  ஊரன்  மகள்  இவள் 

நோய்க்கு  மருந்தாகிய  பணைத்தோளோளே ........!

 

பழனத்து பாகலில் உள்ள எறும்புகள் மொய்த்து உறையும் கூடுகளை கழனிகளில் மேயும் எருமைகள் நெற்கதிரோடு சேர்த்து சிதைக்கும் தன்மையில், பூக்கள் நிறைந்த மருதநிலத் தலைவன் மகளான இவள் யான் கொண்ட காமநோய்க்கு மருந்தாகி அதனைத் தீர்த்த பருத்த தோளையுடையவள்.....!

---ஐங்குறுநூறு ....99....---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆசைக்கு தாள் போட்டு அடைத்ததென்ன லாபம் 

அதுதானே குடம் தன்னில் எரிகின்ற தீபம் 

மனதோடு திரை போட்டு  மறைக்கின்ற  மோகம் 

மழை நீரை பொழியாமல் இருக்கின்ற மேகம் 

சிலருக்கு சிலநேரம் துணிச்சல்கள் பிறக்காது 

துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது 

காட்டாத காதல் எல்லாம் மீட்டாத வீணையைப்போல் ......!

--- பூங்கொடிதான் பூத்ததம்மா-----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!  

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் 

சாராய கங்கை காயாதடா 

ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் எல்லாம் 

காசுள்ள பக்கம் பாயாதுடா 

குடிச்சவன் போதையில் நிற்பான் 

குடும்பத்தை வீதியில் வைப்பான் 

தடுப்பது யார் என்று நீ கேளடா 

கள்ளுக்கடை காசிலே தாண்டா 

கட்சிக் கொடி  ஏறுது போடா 

மண்ணோடு போகாமல் 

நம் நாடு திருந்தச் செய்யோணும்.....!

---உன்னால் முடியும் தம்பி தம்பி----

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.