Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும்
சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன்
தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்
 
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
 
தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீரென்று
பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே.....!

---வசீகரா---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது
பொறந்தாலும் பொம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா ஆம்பிளைய நினைக்க கூடாது
ஆம்பிளை எல்லாம் பொம்பளை போலே மாறவும் கூடாது
பெண் ஆடும் ஆட்டத்தை கண்டு நோட்டத்தை கொண்டு பாடவும் கூடாது

ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே அய்யா உன்னை நெனச்சேனே
அர்ஜுனன் போலே அழகிருக்க அனுமார் ஜாதி பிடிச்சேனே
பரம்பரை ஞாபகம் போகலையே பழையதை இன்னும் மறக்கலையே
மரத்துக்கு மேலே தாவலையே மனுஷன கொரங்கா நெனைக்குறியே

காதல கவிஞன் பாடி வச்சான்
கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான்
உன்ன எனக்குன்னு எழுதி வச்சான்
உறவ நெனச்சி அழுக வச்சான்


சிரிக்கிற காதல் முறிந்துவிடும்
அழுகிற காதல் உறுதிப்படும்
முடிகிற வரைக்கும் அழுதுவிடு
முடிந்ததும் என்னை மனந்துவிடு......!
 

---பொறந்தாலும் ஆம்பிளையாய்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : பூமாலையே
பெண் : ஏங்கும் இரு தோள்
ஆண் : தோள் சேரவா
பெண் : வாசம் வரும் பூ
ஆண் : பூமாலையே
பெண் : ஏங்கும் இரு தோள்
ஆண் : தோள் சேரவா
பெண் : வாசம் வரும் பூ

ஆண் : நான் உனை
நினைக்காத நாளில்லையே
தேனினைத் தீண்டாத பூ இல்லையே
ஆண் : நான் உனை
நினைக்காத நாளில்லையே……
பெண் : என்னை உனகென்று கொடுத்தேன்
ஆண் : தேனினைத் தீண்டாத பூ இல்லையே…
பெண் : ஏங்கும் இளம் காதல் மயில் நான்

ஆண் : தேன் துளி பூவாயில்
பெண் : லலலா….
ஆண் : பூவிழி மான் சாயல்
பெண் : லலலா….
ஆண் : தேன் துளி பூவாயில்
பெண் : லலலா….
ஆண் : பூவிழி மான் சாயல்

பெண் : {கன்னி எழுதும்
வண்ணம் முழுதும்
வண்டு தழுவும்
ஜென்மம் முழுதும்} (2)

ஆண் : நாளும் பிரியாமல்
காலம் தெரியாமல்
கலையெல்லாம் பழகுவோம்
அனுதினம்..


பெண் : கோடையில் வாடாத
கோவில் புறா
ஆண் : லலலா
பெண் : காமனை காணாமல்
காணும் கனா
ஆண் : ராவில் தூங்காது ஏங்க..
பெண் : காமனை காணாமல்
காணும் கனா …
ஆண் : நாளும் மனம்
போகும் எங்கோ

பெண் : விழிகளும் மூடாது
ஆண் : லலலா
பெண் : விடிந்திட கூடாது
ஆண் : லலலா
பெண் : விழிகளும் மூடாது……
ஆண் : லலலா
பெண் : விடிந்திட கூடாது

ஆண் : {கன்னி இதயம்
என்றும் உதயம்
இன்று தெரியும் இன்பம் புரியும்} (2)

பெண் : காற்று சுதி மீட்ட
தாளம் நதி கூட்ட
கனவுகள் எதிர்வரும் அனுபவம்.....!

--- பூமாலையே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : ஆத்தா ஆசை தாங்கல பாத்தா
நேத்து தூங்கல
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
சொர்க்கத்தின் வழி மூடலாமா

ஆண் : தஞ்சாவூரில் நாலு வேலி நஞ்சை உண்டா
குழு : லல்லல்லா
ஆண் : கொஞ்சம் காலம் சொந்தம் கொண்டு கொஞ்சி தீர்ப்பாய்
குழு : லல்லல்லா
ஆண் : கன்னி சுகம் பெற
பெண் : ஆஹ்
ஆண் : அள்ளி செலவிடு
பின்னி பிணைந்திடு
பெண் : ஆஹ்
ஆண் : உன்னை மறந்திடு

ஆண் : பட்டணத்தில் பத்து மாடி கட்டடமா
வித்துப்புட்டா பத்து மாதம் மெத்தை சுகம்
கற்பு பரம்பரை ஆஹா தொட்டா சிணுங்குவா
சொல்லி தெரிவதா சொர்க்கம் தெரியுதா
ஆளப் பார்த்து மாலை மாத்து.....!

---ஆத்தா ஆசை தாங்கல பாத்தா---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் இன்று..

rjwzFY.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

பெண் : மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

ஆண் : விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை

பெண் : நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு.....!

---மழையே மழையே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of person, child and outdoors

வருமானம் என்பது... கண்ணீரைப் போல்,
ஒரே இடத்திலிருந்துதான் வருகிறது.

செலவு என்பதோ... வியர்வையைப் போல்,
எல்லா இடத்திலிருந்தும் வருகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை

ஆண் : நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை

பெண் : ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன் தானே

ஆண் : அடி அழகா சிரிச்ச முகமே
நா நெனச்சா தோணும் இடமே
அடி அழகா சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே ..ஓ ஓ

ஆண் : அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடை முறையை
ரசிக்கும் ரசிகனும் ஆனேன்

பெண் : அவன் அருகினிலே
கனல் மேல் பனி துளி ஆனேன்
அவன் அணுகயிலே
நீர் தொடும் தாமரை ஆனேன்

ஆண் : அவளோடிருக்கும்
ஒரு வித சிநேகிதன் ஆனேன்
அவளுக்கு பிடித்த
ஒரு வகை சேவகன் ஆனேன்

பெண் : ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன் தானே......!

---நான் பிழை நீ மழை---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : { ஒரு தெய்வம் தந்த
பூவே கண்ணில் தேடல்
என்ன தாயே } (2)

ஆண் : வாழ்வு தொடங்கும்
இடம் நீதானே

ஆண் : வானம் முடியும்
இடம் நீதானே காற்றைப்
போல நீ வந்தாயே சுவாசமாக
நீ நின்றாயே மார்பில் ஊறும்
உயிரே

ஆண் : ஒரு தெய்வம் தந்த
பூவே கண்ணில் தேடல்
என்ன தாயே

பெண் : நெஞ்சில் ஜில்
ஜில் ஜில் ஜில் காதில்
தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால்
நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஆண் : எனது செல்வம் நீ
எனது வறுமை நீ இழைத்த
கவிதை நீ எழுத்துப் பிழையும் நீ

ஆண் : { இரவல் வெளிச்சம்
நீ இரவின் கண்ணீர் நீ } (2)

ஆண் : { எனது வானம்
நீ இழந்த சிறகும் நீ } (2)
நான் தூக்கி வளர்த்த
துயரம் நீ

ஆண் : { ஒரு தெய்வம்
தந்த பூவே சிறு ஊடல்
என்ன தாயே } (2)......!

---ஒரு தெய்வம் தந்த பூவே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

நெஞ்சில் உள்ள காயம் ஒன்று
நெஞ்சை விட்டு தீர்ந்தது
என்னை இன்று நானே காண
நேரம் வந்து சேர்ந்தது

பூஜைக்கான தேவனே
பூவில் ஏறி ஆடினால்
பூஜை செய்யும் யாருமே
கோபம் கொள்ளல் நீதியே
சொந்தம் கொண்ட எந்தன் தேவி
சொன்ன வார்த்தை நியாயமே
புனிதம் நீரில் வந்ததே
நதியின் மூலம் அல்லவா

தாயின் பாவம் பிள்ளையை சாருகின்ற நாட்டிலே
தனது பாவம் தன்னையே தாக்கும் நீதி குற்றமா
வெள்ளை ஆடை புள்ளி வீழ்ந்தால்
வேறு சாட்சி வேண்டுமோ மனிதன் பாவம் செய்தால்
மனதுதானே சாட்சியம்

---நெஞ்சில் உள்ள காயம் ஒன்று---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : கண்ணே என் முன்னே
கடலும் துள்ளாது பெண்ணே
நான் தூண்டில் போட்டால்
விண்மீனும் தப்பாது கண்ணே
என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில்
போட்டால் விண்மீனும் தப்பாது
உள்ளங்கை தேனே கள்வன்
நான்தானே கள்வனை கொள்ளை
கொண்ட கள்ளி நீதானே பொன்
கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை
அங்கம் சொந்தமானால் தங்கம்
தேவையில்லை

பெண் : உடைவாளில் நீ
எந்தன் உடைதொட்ட
அந்நேரம் உன் பார்வை
எந்தன் உயிர் தொட்டா
தருவாயோ கோழைக்கு
வாழ்க்கை பட்டால் வாழ்வே
என்னாகும் உன் வாலுக்கு
வாழ்க்கைப் பட்டால் வாழ்வே
பொன்னாகும் நீ என்னை மீண்டும்
திருடத்தான் வேண்டும் முரட்டுக்
கைகள் தொட்டு மொட்டுக்கள்
பூக்கவேண்டும்.....!

---ஒட்டகத்தை கட்டிக்கோ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : என் எதிரே ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா
பெண் : தினுசான கேள்வி தான்ப்பா
துடிப்பான காளையப்பா

ஆண் : கடலோரம் கப்பலப்பா
கரை தட்டி நிக்குதப்பா
பெண் : பெண் தொட்ட மலையும் சாயும்
நடுசாமம் நிலவும் காயும்

பெண் : வேஷம் நாணம்
தேகம் தேய்தொழிந்து
தூசி போலே தொலை வீர்ப் பார்

பெண் : மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாருடா

ஆண் : என் ஆச ரோசா
பெண் : கட்டிக்கிட்டு முட்டிக்கலாம்
ஒரு வாட்டி வா

ஆண் : நான் தானே ராசா
பெண் : ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம்
தீ மூட்டி ஆ

பெண் : ஈசன் ஆளும்
சாம்பல் மேல் உழன்று
ஈசல் போலே ஆளை வீர்ப் பார்

ஆண் : காத்தாடி போல நெஞ்சு
கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு
சேர்ந்தாடுதே......!

---என் எதிரே இரண்டு பாப்பா---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ இருந்த
இருட்டெல்லாம் இனி மேலே
கொக்கரக்கோ

ஆண் : கொக்கர கொக்கரக்கோ
சேவல் கொக்கரக்கோ சேவல்
கூவக்குள்ளே பெட்டை கோழி
கொக்கரக்கோ

ஆண் : சங்கு சக்கரம் போல
மனசு சுத்துற வேளை
சுறாங்கனிக்க மாலு கெண்ணா
வா அதோ பாரு வானம்
துணி துவைக்குது மேகம்
விலகி போகுது சோகம்
நீ வா ஆஆ ஆஆ

வெள்ளிமணி கொலுசுக்குள்ள
துள்ளுகிற மனசுக்குள்ள
சந்தோசம் நிலைச்சிருக்க
சாமிகிட்ட கேட்டிருக்கேன்

பெண் : எல்லோரும் அருகிருக்க
பொல்லாப்பு விலகிருக்க
அன்பான உங்ககிட்ட
ஆண்டவனை பாத்திருக்கேன்

ஆண் : எண்ணம் இருந்தா
எதுவும் நடக்கும் தன்னால
ஏ நீ துணிஞ்சா உலகம்
உனக்கு பின்னால

பெண் : குத்துவிளக்கா
சிரிச்சா சிரிச்சா தப்பேது
கொள்ளையடிச்சான் மனச
மனச இப்போது

ஆண் : நம்ம பக்கம்
காத்து வீசுறத பாத்து
நல்லவங்களை சேர்த்து
நீ போடு தினம் கூத்து.....!

---கொக்கரக்கோ கொக்கரக்கோ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அச்சச்சோ புன்னகை
ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து
கையோடு மறைத்துக்கொண்டேன்

அச்சச்சோ புன்னகை
அத்திப்பூ புன்னகை
சிந்தாமல் சிதறாமல்
முந்தானை ஏந்திக்கொண்டேன்

உன் புன்னகை ஹோ ஹோ
எனும் சாவியால் ஹோ ஹோ
உன் புன்னகை
எனும் சாவியால்
என் காதல் திறந்துகொண்டேன்

வாா்த்தையில் காதலை சொன்னாய்
என் வாலிபம் மலா்ந்ததடி
உன்னை கலந்தபின் நான் சென்று குளித்தால்
கடல் குடிநீா் ஆகுமடி

கவிதை ஓ
இது கவிதை ஓ
இன்னும் கற்பனை செய்வோமா
உயிரை இடம் மாற்றி
நம் உதடுகள் சோ்ப்போமா

அம்மம்மா நுனிவிரல் தொட்டே
என் இதயம் பதறியதே
ஆழங்கள் தொட என்னாகும்
என் உயிரே சிதறியதே

நீ தீண்டினால் ஹோ ஹோ
உயிா் தூண்டினால் ஹோ ஹோ
நீ தீண்டினால் உயிா் தூண்டினால்
நெஞ்சில் போக்ரான் வெடிக்கிறதே


--- அச்சச்சோ புன்னகை ---


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : ஓடி ஓடி விளையாட
ஓடி ஓடி விளையாட வாடா
நீ ஓடிப்போகலாகாது
ஓடிப்போகலாகாது வாடா

பெண் : ஏய் தீ மேல
நின்னவள பூ மேல
தள்ளுறியே ஏனோ நீ
என்னுயிரை கண்ணால
கிள்ளுறியே சூப்பரு ஆட்டம்
சூப்பரு சூப்பரு ஜோடி சூப்பரு

ஆண் : ஏய் உன்னோட
நிக்கிறப்போ உள் மூச்சு
தித்திக்குதே நீ தள்ளி
போகுறப்போ என் ஆவி
பத்திக்குதே

ஆண் : சூப்பரு
குழு : செம்ம பிகரு
ஆண் : ஆட்டம் சூப்பரு
குழு : இப்ப கிழிக்க
போகுது விசிலு
ஆண் : சூப்பரு
குழு : அவ நம்ம ஆளு
ஆண் : ஜோடி சூப்பரு

ஆண் : சத்தமின்றி
யுத்தமின்றி முத்தம்
ஒன்று தாடி புள்ள
நீயும் நானும் ஒன்னா
சேர்ந்து ஓடிப்போலாமா

பெண் : உன் குரலுல
உன் குரலுல செல்லமா
கூப்பிடும் போது என்
பெயரே சொந்தமா கேட்குதடா

ஆண் : ஏய் நீ சிரிக்கிற
நீ சிரிக்கிற அழக என்
கண்ணு பார்த்தா ஏய்
இமைக்க மறந்து போகுதடி

பெண் : உன் கைகோர்த்து
நானும் போனாலே
மின்சாரம் தான் உள்ளே பாயாதா.....!

---ஓடி ஓடி விளையாட---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஏய் அம்மி கல்லா நான் இருக்கேன்
மஞ்ச அரைக்க நீ வாரியா
நஞ்ச வேலியா நான் இருக்கேன்
நாத்து நட நீ வாரியா
திருவிழாவா நான் இருக்கேன்
உறியடிக்க நீ வாரியா
வாய்க்காலா நான் இருக்கேன்
வழிமறிக்க நீ வாரியா
 
பனைமரமா நான் இருக்கேன்
கல்லெடுக்க நீ வாரியா
பந்தக்காலா நான் இருக்கேன்
கூரை பின்ன நீ வாரியா
தரைமேடா நான் இருக்கேன்
சிலம்பு சுத்த நீ வாரியா
பஞ்சாரமா நான் இருக்கேன்
கோழி புடிக்க நீ வாரியா

முந்திரி காடா நான் இருக்கேன்
நாி விரட்ட நீ வாரியா
நான் ராக்கு முத்து ராக்கு
என்ன தொட்டுக்கத்தான் சாக்கு
அட நாக்கு முழி மூக்கு
எல்லாம் நல்ல நல்ல சோக்கு
 
இது ஆம்பளையே பாக்காத காத்து
என்ன அப்படியே அள்ளியெடுத்து போத்து.....!

---மன்னார்குடி கலகலக்க ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

ஆண் : விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
 

பெண் : நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு

பெண் : கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

பெண் : நனைந்த பூவில் வண்டு
ஒதுங்கும் போது ஒரு சோதனை......!

--- மழையே மழையே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : குட்டி சுவர் ஏறி
வெட்டி கதை பேசி
காதல் ஜாலியில்
பாடம் காலி தோழா
அடோலெஸ்சென்ட்
ஏஜ்ஜில் அந்த சுகம்
தேடி சூடு பட்டு
போனோம் தோழா

பெண் : தப்பான ரூட்டில்
சென்று ரைட்டான ரூட்டை
கண்டோம் மிஸ்டேக்ஸ்
ஆர் தி சீக்ரெட் ஆஃப்
சக்ஸஸ்

பெண் : நாம் ஓடி
போனோம் உலகம்
புரிந்தது
ஆண் : அவளுக்காகவே
உழைக்க தெரிந்தது
ஆண் & பெண் : லவ் இஸ்
தி சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்.....!

---மாத்தியோசி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

சொப்பன சுந்தரி நான் தானே
நான் சொப்பன லோகத்தின் தேன் தானே.

மார்கழியை சித்திரையாய்
மாத்திடுமே முத்தம் ஒன்னு
பூக்கடையே இங்கேவந்து
பூஜை பன்னும் கிட்டே நின்னு
இராத்திரிக்கும் தூக்கத்துக்கும்
எப்பவும் இராசியில்லை
ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும்
எப்பவும் பஞ்சமில்லை
நோன்டிலுக்கும் தென்றலுக்கும்
சொந்தமும் தேவையில்ல
எங்களுக்கும் தேவதைக்கும்
சம்பந்தம் மாறவில்ல
அத்தனை பேரையும் அத்தானா மாத்திடும்
சங்கமும் இங்கேதான்......!

---சொப்பன சுந்தரி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

உன் ஆடைப்பட்டாலே
ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப்புன்னகையால்
பெரும் தூரல் வருகிறது
உன் முகத்தில் அசையும் முடி
கிளைத்துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால்
அடை மழையேப் பொழிகிறது
 
போதும்போ நீ போ
என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீ போ
என் உலகம் உறைகிறது
 
விழியே விழியே பேசும் விழியே
ஒரு பாா்வைப் பாா்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே
நான் வந்தேன் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே......!

---விழியே விழியே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : கேளு பாப்பா ஆசையின் கதையை
ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை
பணத்தில் ஆசை பதவியில் ஆசை
பருவ நாளில் காதலில் ஆசை

ஆண் : அளவு குறைந்தால் ஆசையும் வெல்லும்
ஆனவரைக்கும் போதுமென்றெண்ணும்
எந்த வீட்டில் ஆசைகள் இல்லை
எல்லோரையும் வெல்லுவதில்லை

ஆண் : நூறு கிடைத்தால் ஆயிரம் கேட்கும்
ஆயிரம் கிடைத்தால் அதைவிடக் கேட்கும்
ஆசை எங்கே முடிந்தது கண்ணே
ஆண்டவன் கூட ஆசையின் பின்னே

ஆண் : ஆசைக் கொண்டது கிடைக்காதென்றால்
கிடைத்த ஒன்றில் ஆசை கொள்வாய் நீ
நெஞ்சுக்கு தேவை நிம்மதி தானே
நிம்மதி இறைவன் சன்னதி தானே

--- கேளு பாப்பா ஆசையின் கதையை---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
 
அவள் அள்ளி விட்ட பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு
கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே(கண்டேனே... கண்டேனே...)
 
பார்த்து பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவணை மாற்றி விட்டாய்
சாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய்
 
கூச்சம் கொண்ட தென்றலா?
இவள் ஆயுள் நீண்ட மின்னலா
உனக்கேற்ற ஆளாக
என்னை மாற்றி கொண்டெனே
 
பேசும் அழகினை கேட்டு ரசித்திட
பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே
தூங்கும் அழகினை பார்த்து ரசித்திட
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே
 
பனியில் சென்றால் உன் முகம்
என் மேலே நீராய் இறங்கும்
ஓ தலை சாய்த்து பார்த்தாளே
தடுமாறி போனேனே......!

---ஒரு மாலை இளவெயில் நேரம்---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.