Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வரப்போற?
மச்சான் எப்போ வரப்போற?

பத்து தல பாம்பா வந்து முத்தம் தரப்போற
நான் ஒத்தையில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில் மட்டும்தான் உன்ன நான் சந்திச்சான்
ஹே எப்போ வரப்போற?
மச்சான் எப்போ வரப்போற?

பத்துமட பாய வந்து சொக்கி விழப்போற
வாசல பாக்குற கோலத்தக் காணோம்
வாலிய சிந்துறேன் தண்ணிய காணோம்
சோழி தேடி போனேன் காணாத தூரம்
கோட்டிக்காரி நெஞ்சில் தாளாத பாரம்
காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்
ஈரமாகவும் கண்ணோரம் கப்பல் ஆடும்......!
---மல்லிப்பூ ---
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
 
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
நீலம் கொண்ட கண்ணும்
நேசம் கொண்ட நெஞ்சும்
காலம்தோரும் என்னை சேறும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மனி
 
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது, பூ வைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்......!
 
---வா வா அன்பே அன்பே---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : சிறு கைவளை
கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும்
பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள்
முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ

ஆண் : சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ

ஆண் : பெண்ணல்ல
பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள்
ரோசாப்பூ கண்ணல்ல
கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ

ஆண் : தென்றலைப் போல
நடப்பவள் என்னைத் தழுவ
காத்து கிடப்பவள் செந்தமிழ்
நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு
வாய்த்த மருமகள்

ஆண் : சிந்தையில் தாவும்
பூங்கிளி அவள் சொல்லிடும்
வார்த்தை தேன்துளி அஞ்சுகம்
போல இருப்பவள் கொட்டும்
அருவி போல சிரிப்பவள்

ஆண் : மெல்லிய தாமரை
காலெடுத்து நடையை பழகும்
பூந்தேரு மெட்டியை காலில்
நான் மாட்ட மயங்கும் பூங்கொடி.......!

--- பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

பெண் : கொல்லையில வாழ எல
கொட்டடியில் கோழி குஞ்சு
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா

பெண் : காத்தோட உன் வாசம்
காடெல்லாம் ஒம் பாசம்
ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா
சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா

பெண் : கல்லாக நின்னாயோ
கால் நோக நின்னாயோ
கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு

பெண் : மல்லாந்து போனாலும்
மண்ணோடு சாஞ்சாலும்
அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு

பெண் : தலைச்சம் புள்ளை இல்லாம
சரிஞ்சது எத்தன ஆட்சி
நீயே எங்க ராசா வா வா களத்துக்கு
தாயோட பாரம் மாசம் பத்தய்யா
தாங்காம நீயும் போனா தப்பய்யா.......!

--- எள்ளு வய பூக்கலையே---
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

உனைப்போன்ற ஆணை
நான் நம்பி வந்தேன்
உயிர்கொன்று நீ ஓடினாயே
எனைப்போன்ற பெண்ணை ஏமாற்றிவிட்டு
தினம் நூறு பொய்கூறுறாயேன்?
அட நீசொல்லு நீ மனுசனா?
 
தேன்போலே பேசி
துரோகங்கள் செய்தாய்
அதை யாருக்கும் நீ செய்யாதே
நான் போன பின்னர்
எனைப்பற்றி இழிவாய்
யாரோடும் பேசிக்கொல்லாதே
 
மனச்சாட்சியை
நீ விலைபேசினாய்
அட நீசொல்லு நீ மனுசனா?
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
பொய் பொய்யா சொல்லி
ஏமாத்தினது போதும்.....!

---ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : கண்ணு வெச்சதும்
நீதானா வெடி கண்ணி
வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான்
கப்பம் கட்ட காமன்
சொன்னானா தில்லானா
தில்லானா

பெண் : நான்
தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில்
தில்லானா

ஆண் : மஞ்சக் காட்டு மைனா

பெண் : உன்ன
கொஞ்சிக் கொஞ்சிப்
போனா திக்குத் திக்கு
நெஞ்சில் தில்லானா

பெண் : பட்டிக்காட்டு
முத்து நீயோ படிக்காத
மேதை தொட்டுத் தொட்டுப்
பேசத் தானே துடித்தாளே ராதை

ஆண் : கள்ளம்
கபடமில்லை நானோ
அறியாத பேதை
மக்கள் மனம் தானே
எந்தன் வழுக்காத பாதை

பெண் : ஹேய்
கொடுத்தால நான்
வந்தேன் எடுத்தால வேண்டாமா

ஆண் : அடுத்தாளு
பாராமல் தடுத்தாள வேண்டாமா

பெண் : முடி கொண்ட
உன் மார்பில் முகம்
சாய்க்க வேண்டாமா

ஆண் : முடி போட்டு
நம் சொந்தம் முடிவாக வேண்டாமா

பெண் : தடையேதும்
இல்லாமல் தனித்தாள வேண்டாமா......!

--- தில்லானா தில்லானா---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!


ஆயிரம் நினைவாகி
ஆனந்தக் கனவாகி
காரியம் தவறானால்
கண்களில் நீராகி

ரகசியச் சுரங்கம் நீ
நாடக அரங்கம் நீ
சோதனைக் களம் அல்லவா
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா

ஒரு கணம் தவறாகி
பல யுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை
கண்களில் வடிப்பாயே

உண்மைக்கு ஒரு சாட்சி
பொய் சொல்ல பலசாட்சி
யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா

ஆசையில் கல்லாகி
அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும்
ஐயத்தில் தவிப்பாய் நீ......!


---மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : நீ நடந்து போகையிலே
பூ நடந்து போகக்கண்டேன்
பெண் : ஹாஹாஹாஹா
ஆண் : நீ சிரிக்கும் பொன்னழகில்
பால் வடிந்து ஓட கண்டேன்

பெண் : முத்தோ மணியோ
எல்லாம் கவிதை எங்கே
கற்றுக்கொண்ட வித்தை இது

ஆண் : சொல்லித்தந்தது
உந்தன் பார்வை அள்ளித்தந்தது
உந்தன் ஜாடை
பெண் : அன்பில் ஆடும்
உள்ளம் கண்டேன்

பெண் : நேரமுண்டு
காலமுண்டு மாலையிட
சொந்தமுண்டு மாலையிட்ட
பின்னால் இந்த சோலைக்கிளி
கொஞ்சும் வந்து

ஆண் : பொன்னே பூவே
எல்லாம் குறும்பு எங்கே
கற்றுக்கொண்ட வித்தை இது

பெண் : அச்சம்தந்தது உந்தன்
வேகம் வெட்கம் தந்தது
உந்தன் மோகம்
ஆண் : அன்பில் ஆடும்
உள்ளம் கண்டேன்......!

--- ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : பற்றிய பொருள் விடாத உடும்பின் பிடிபோலே
பற்றிட வேண்டும் அதை நாமே புவி மேலே


பெண் : இசையினில் சுருதி லயமே….ஆ…..ஆ…..ஆ
இணைந்திடும் நிலை போலே
என்றும் கலந்துண்ணும்
காக்கைகள் செயல் போலே

பெண் : எண்ணத்தில் ஒன்றாய்
எல்லோரும் வாழ்ந்தாலே
இன்பத்தின் எல்லையை
காண்போம் அதனாலே……

பெண் : எண்ணத்தில் ஒன்றாய்
எல்லோரும் வாழ்ந்தாலே
இன்பத்தின் எல்லையை
காண்போம் அதனாலே……!

--- ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

ஆண் : வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை
நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

பெண் : விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது

ஆண் : எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

பெண் : ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல

ஆண் : ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

பெண் : நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே.......!

--- தென்றல் வந்து தீண்டும் போது---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

 


சக்க போடு போட்டாளே
சவுக்கு கண்ணால சத்தியமா
பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ
என்னால என் தாகம் தான்
கூடுது இந்த பொன்னால

கொண்டையில பூவடுக்கி
கும்முன்னுதான் பேசுற
கெண்டக்கால நீவுற கிச்சு
கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு
புடிக்க வெக்குற

அஞ்சு நொடி
நேரத்தில கோடி முறை
பாக்குற மீனுக்குஞ்சு
போல துள்ளி ஐசாலக்கடி
காட்டுற

எச்சி தொட்டு கச்சிதமா
உன்னை என்னை ஒட்டிக்கலாம்
முத்தம் வெச்சு முத்தம்
வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம்

கொழுத்து போன
பொம்பள இடுப்ப
கொண்டாடியே கொஞ்சம்
நானும் ஓடினா தவிப்ப
திண்டாடி

உள்ளங்கள சேர்த்து
வெச்சு ஊருக்காக வாழுற
பம்பரமா ஓடுற உன்னை
எண்ணி ஏங்குறேனே என்ன
செய்ய போகுற

உள்ளங்கையில்
தூக்கி வெச்சு உத்து உத்து
பார்க்கவா உருட்டி கீழ தள்ளி
ஒண்டிக்கு ஒண்டி ஆடவா

ஒத்த சொல்லு
சொன்னதில பத்திக்கிச்சு
என் மனசு
மத்தபடி கன்னத்துல
முத்த கத நீ எழுது

வடிச்ச சோறு
போலத்தான் ஆவி பறக்குற
ஹே மடிச்ச சேலை
கலைக்க தான் கூவி
அழைக்கிறேன்......!

---சக்க போடு போட்டானே---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : சின்ன பெண்
பெண்ணல்ல வண்ண
பூந்தோட்டம்
பெண் : கொட்டட்டும்
மேளம் தான் அன்று
காதல் தேரோட்டம்

பெண் : உன்னை காணாதுருகும்
நொடி நேரம் பல மாதம் வருடம்
என மாறும்

ஆண் : நீங்காத ரீங்காரம்
நான் தானே நெஞ்சோடு
நெஞ்சாக நின்றேனே

பெண் : ராகங்கள் தாளங்கள் 100
ராஜ உன் பேர் சொல்லும் பாரு

ஆண் : சிந்தாமல் நின்றாடும்
செந்தேனே சங்கீதம் உண்டாகும்
நீ பேசும் பேச்சில் தான்

ஆண் : வலையோசை கல
கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல்
காற்றும் வீசுது
பெண் : சில நேரம் சிலு
சிலு சிலு என சிறு விரல்
பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

ஆண் : சின்ன பெண்
பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
பெண் : கொட்டட்டும்
மேளம் தான் அன்று
காதல் தேரோட்டம்......!

--- வலையோசை--- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

--- செங்கையில் மான் தூக்கி 

சிவந்த மழு தூக்கி 

அங்கத்தில் ஒரு பெண்ணை 

அனுதினமும் தூக்கி 

திங்களை கங்கையை கதித்த 

சடையில் தூக்கி 

அங்கும் இங்கும் தேடியவரும்

கண்டிடாத காலைத் தூக்கி 

ஆடும் தெய்வமே எனை 

கை தூக்கி ஆள் தெய்வமே ---

(யாரும் குழம்ப வேண்டாம், எனக்கு கொஞ்சம் காச்சலாய் கிடக்கு).....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

35 minutes ago, suvy said:

(யாரும் குழம்ப வேண்டாம், எனக்கு கொஞ்சம் காச்சலாய் கிடக்கு).....!

சுவியரின் காய்ச்சல், விரைவில்  குணமாக வேண்டுகின்றோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

சுவியரின் காய்ச்சல், விரைவில்  குணமாக வேண்டுகின்றோம். 

அந்த காய்ச்சல் அவருடைய 18 ஆவது வயதிலிருந்து இருக்கிறது 🤣 ஒருபோதும் குணமாகது......😄. இன்னுமொருமுறை   மூன்று முடிச்சு  போட்டால் சுகமாகும்  🤣🤪.  ஆனால் வாய்ப்பில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காய்ச்சலைப்பற்றி கவனயீனமாய்  இராதீங்கோ!

காலம் கெட்டுக் கிடக்கு . 

சுவி உங்கள் காயிதப்பெட்டி   திறப்பு எங்கே .? பூட்டிக்  கிடக்கிற மாதிரி இருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

அந்த காய்ச்சல் அவருடைய 18 ஆவது வயதிலிருந்து இருக்கிறது 🤣 ஒருபோதும் குணமாகது......😄. இன்னுமொருமுறை   மூன்று முடிச்சு  போட்டால் சுகமாகும்  🤣🤪.  ஆனால் வாய்ப்பில்லை 

ஏதோ முன்செய்  புண்ணியத்தில் ரெண்டு நேரம் நேரகாலத்துக்கு விழுங்கிக் கொண்டு இருக்கிறன்......இது போதும்........!  😂

7 minutes ago, நிலாமதி said:

காய்ச்சலைப்பற்றி கவனயீனமாய்  இராதீங்கோ!

காலம் கெட்டுக் கிடக்கு . 

சுவி உங்கள் காயிதப்பெட்டி   திறப்பு எங்கே .? பூட்டிக்  கிடக்கிற மாதிரி இருக்கு..

காய்ச்சல் கணகாலமாய் வரேல்ல......வந்தது நல்லது.......ஒரு 10 நாளாவது உடம்பில இருந்திட்டு போகட்டும்......தலைக்குள் சளி இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக இளகி உருகி வெளியேறுது.....அது நல்லதுதானே......இங்கு ஓரிரு நாள் நல்லா பனி கொட்டினது ......நானும் அந்த நேரம் வளவுக்குள்ள நின்று நல்லா நனைந்து போட்டன் ........சரியாயிடும்.......!   😁

எனது காயிதப் பெட்டி பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை ......நிர்வாகம் தயவு செய்து அதை ஒருக்கால் பார்த்து திறந்து விடுங்கோ.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

ஏதோ முன்செய்  புண்ணியத்தில் ரெண்டு நேரம் நேரகாலத்துக்கு விழுங்கிக் கொண்டு இருக்கிறன்......இது போதும்........!  😂

காய்ச்சல் கணகாலமாய் வரேல்ல......வந்தது நல்லது.......ஒரு 10 நாளாவது உடம்பில இருந்திட்டு போகட்டும்......தலைக்குள் சளி இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக இளகி உருகி வெளியேறுது.....அது நல்லதுதானே......இங்கு ஓரிரு நாள் நல்லா பனி கொட்டினது ......நானும் அந்த நேரம் வளவுக்குள்ள நின்று நல்லா நனைந்து போட்டன் ........சரியாயிடும்.......!   😁

எனது காயிதப் பெட்டி பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை ......நிர்வாகம் தயவு செய்து அதை ஒருக்கால் பார்த்து திறந்து விடுங்கோ.......!

சரி அண்ணனை விரைவில் சுகம் பெற வேண்டுகிறேன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

சரி அண்ணனை விரைவில் சுகம் பெற வேண்டுகிறேன்  

அது இனி முடியாது கந்தையா.........அண்ணன் போன மாதம்தான் ஊர்ல மோசமாகிப் போனார்.......31ம் முடிஞ்சுட்டுது........!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

 

சுதந்திரம் என்பது.‌.!!
கர்நாடகாவில் உள்ள கொம்பாரு சரணாலயத்தை ஒட்டியுள்ள ஒரு ஓய்வறையில் இச்சம்பவம் நடந்தது.
ஒரு சிறுத்தை நாயை துரத்திக் கொண்டிருந்தபோது..
நாய் கழிப்பறைக்குள் நுழைந்துவிட்டது.
கழிப்பறை வெளியில் இருந்து மூடப்பட்டது. நாயின் பின்னால் நுழைந்த சிறுத்தையும், கழிவறைக்குள் சிக்கிக் கொண்டது.
சிறுத்தையை பார்த்ததும் நாய் பீதியடைந்து ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்தது. அது குரைக்கக்கூடத் துணியவில்லை.
சிறுத்தை பசியால் நாயை துரத்தி வந்தாலும் நாயை ஒன்றும் செய்யவில்லை.
ஒரே பாய்ச்சலில் நாயை இரவு உணவாக ஆக்கியிருக்கலாம்.
ஆனால் இரண்டு விலங்குகளும் கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரம் வெவ்வேறு மூலைகளில் ஒன்றாக இருந்தும். சிறுத்தைப்புலியும், நாயும் அமைதியாகவே இருந்தன. வனத்துறையினர் சிறுத்தையை, {ரிமோட் இன்ஜெக்ஷன் கன்} கால்நடை மயக்க மருந்து மூலம் அவற்றைப் பிடித்தனர்.
இப்போது கேள்வி என்னவெனில், பசித்த சிறுத்தை ஏன் எளிதாக கிடைத்த நாயை உண்ணவில்லை???
இந்த கேள்விக்கு வனவிலங்கு ஆய்வாளர்கள் சொன்ன பதில்:
வனவிலங்குகள் அதன் சுதந்திரத்தை மிகவும் உணர்திறன் கொண்டவை. அவைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டது என்பதை உணர்ந்தவுடன், அவை தங்கள் பசியை மறக்கும் அளவுக்கு ஆழ்ந்த துக்கத்தை உணர முடியும்.
வயிற்றுக்கு உணவளிக்கும் விலங்குகளின் இயல்பான உந்துதல் கூட மறையத் தொடங்கி விடுமாம்.
இப்படிப்பட்ட இயற்கையே உயிர்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தான் மனிதன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பறித்து விடுகிறான்.
ஒரு மனிதனாக நமக்கும் பல்வேறு வழிகளில் சுதந்திரம் தேவை......
பேச்சு, கருத்து, மதம் மற்றும் நம்பிக்கை, உணவு , சிந்தித்து செயல்படும் சுதந்திரம்.... போன்றவை. இவை நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது என மனிதனை தவிர எந்த விலங்கையும் நாம் குற்றம் சாட்ட முடியாதல்லவா..!
சுதந்திரம் என்ற கருத்தை இன்னும் விரிவாகப் பார்த்தால், அது மகிழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது!!!
மேலும் மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம்....!
 
May be an image of cat
 
 
 
 
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : காதல்…..பூ என் காதல்
யாதும் உன் ஆளதோ
கனவே கனவே
கண்ணை கடனாக தருவாயோ

ஆண் : அடியே அடியே உயிரினை
காதல் தாங்காதா
ஒரு விழியாவது தூங்காதா
மொழி இருந்தும் வழி இருந்தும்
என் காதலை சொல்ல முடியாதா…..

ஆண் : ஒரு விழி இன்பம் ஆனதடி
ஒரு விழி வன்மம் ஆனதடி
மின்சாரம் ரீங்காரம்
இருண்டுக்கும் நடுவே தவித்தேனே

ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி
வாசம் அது வாசம் வீசுதடி

ஆண் : உன் கண்கள் கண்ணாடி ஆனால்
கண்ணின் முன்னே என்னை காண கூடாதா
ஆகாயம் தேடி நான் போக மாட்டேன்
வீட்டோடு வெண்ணிலா நீதானே
மயில் தோகையோ என் கை ரேகையாய்
சேரும் வரை சேர்ந்திருப்பேன்......!

---காதல்.....பூ என் காதல்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : { அழகிய லைலா
அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள்
மன்மத புயலா

ஆண் : அடடா பூவின்
மாநாடா ஓ ஓ ஓ ஓ
அழகுக்கு இவள்தான் தாய் நாடா

ஆண் : ஏ சிறகென
விரித்தாள் கூந்தலை
இங்கே சூரிய நிலவாய் ஆனது அங்கே

ஆண் : என் மனம் இன்று
போனது எங்கே மன்மதனே உன் ரதி எங்கே

ஆண் : கன்னத்தை தொட்டால்
சந்தனம் கொட்டும் வெட்கத்தை
தொட்டால் குங்குமம் கொட்டும்

ஆண் : புன்னகை பட்டால்
மல்லிகை மொட்டும்
பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்

ஆண் : காலடி ஓசைகள்
கம்பனை கேட்டது அம்மம்மா

ஆண் : பிக்காசோவின்
ஓவியம் ஒன்று பீத்தோவனின்
சிம்பனி ஒன்று பெண்ணாய் மாறியதோ......!

--- அழகிய லைலா---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : சுகமான தாளம்
கணக்காகப் போட சரியான நேரம்
பெண் : அட அதுக்குனு இருக்குது
அருகினில் மிருதங்கமே….ஹோய்…

பெண் : இடி இடிக்குது இடிக்குது
இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப் போகுதடி
ஆண் : குளிர் அடிக்குது அடிக்குது
மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி

ஆண் : முக்காலி போட்டு வெச்சா
அதில் உக்காரத்தோணுமடி ஓஒ….
உக்காந்து பாட்டெடுக்க
உந்தன் ஒத்தாச வேணுமடி

பெண் : அதைச் சொல்லி
இதைச் சொல்லி அசத்துற
உள்ள உறங்கிடும் உணர்ச்சிய உசுப்புற
ஆண் : எடுக்கவும் கொடுக்கவும் தடுக்குற
அடி எனக்கென இருப்பதை மறைக்கிற

பெண் : ஆடை நீக்கிப் பார்க்க வரும்
வாடைக்காத்து நீயா
ஆண் : பார்த்தால் என்ன பாவம்
இது பிஞ்சா இல்லை காயா
பெண் : ஆத்தா அதப் பாத்தா
ஒரு ஆவேசம் உண்டாகும்......!

--- இடி இடிக்குது இடிக்குது---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.