Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு
தேனாய் வளர்ந்த அகத்தின் அழகு
பார்த்தால் இனிக்கின்ற பருவம்
பாலில் மிதக்கின்ற உருவம்
மாலை வெயில் பழகும் மேனிக்கண்ட மயக்கம்
வா தென்றலே சொர்க்கத்தின் பக்கத்தில் வா

காலம் கனிந்து வளரும் உறவு
மேளம் முழங்க தொடரும் உறவு
தாய்மை கொடுக்கின்ற அம்சம்
வாழை வளர்க்கின்ற வம்சம்
வாழுகின்ற வரைக்கும் பாசம் வந்து தழைக்கும்
வா சொந்தமே உள்ளத்தில் என்றென்றும் வா


பட்டு வண்ண சேலைக்காரி......!
 

---பட்டுவண்ண சேலைக்காரி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரிய... புள்ள

தும்ப பூவு மல்லு வெட்டி
தொட தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாரவுகளே
வழி விடுங்க நேரமாச்சு..

ஏழ புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு யாஹ்ஹ்ஹ
இடுப்பு கொசுவத்துல சூட்சுமம் இருக்கு
நீ நெளிஞ்சு போகையில நெஞ்சுல சூழலுக்கு

வாட கத்தடிச்சு வாட்டுது மாமா
என் கூட வந்து குச்சிக்குள்ள ஒத்திக மாமா
உன் கூடலுக்கு சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா

உன் கண்ணு ரெண்டும் நாவற்பழம்
காச்சிருக்கு கொய்யாப்பழம் மூடி வைக்காத
திங்காம வீணடிக்காத

அட புல்லறுக்க போகையில
புள்ள வரம் கேட்க வந்தேன்
தள்ளி நிக்காத மனச கிள்ளி வைக்காத......!

---பஞ்சுமிட்டாய் சேலை கட்டி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

மழழைப் பருவத்தில் தாய் காவல்
வளர்ந்துவிட்டால் தன் மனம் காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இறந்துவிட்டால் பின் யார் காவல்
 
சட்டமென்பது வெளிக் காவல்
தர்மமென்றால் அது மனக் காவல்
இரண்டும் போனபின் எது காவல்
எது காவல், யார் காவல்
எது காவல்?
 
காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்
அவள் மாலை அணிந்த உயிரிக்கு உலகில் யார் காவல்?
யார் காவல்? யார் காவல்?
யார் காவல்?
 
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்

---உடலுக்கு உயிர் காவல்--- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

கோடி பழம் இருக்கு
கொய்யா தோப்புல
நீ சோடி பழம் கேட்டா
நியாயமே இல்ல

சமைச்ச கரி இருக்கு
சந்தை கடையில
நீ சமஞ்ச பொண்ணை
கேட்ட நியாமே இல்ல

சொத்த எழுதி தந்தாலும்
வர மாட்டேன்
கத்தி வச்சு கேட்டாலும்
தர மாட்டேன்

பரம்பரையா
கூத்துபடிச்சது நாங்க
இதை பணம் காசுக்கு
விக்க முடியாது போங்க

நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி

என்னை காதலிப்போர்
ஆயிரம் உண்டு
ஆனா என்னை கட்டிக்கிட
நிபந்தனை உண்டு

உனக்கு வாக்கப்பட
எனக்கு ஆசைதான்
ஆனா எனக்கு மொத புருஷன்
இந்த ஆட்டம்தான்

ஆம்பளைக்கு அடுப்பு ஊத
வர மாட்டேன்
புள்ள பெத்துதாடினா
தர மாட்டேன்

நிபந்தனைக்கு
கட்டுப்பட்டவங்க வாங்க
இல்லேன்னா நீட்டி படுக்க
வீட்டுக்கு வீட்டுக்கு போங்க

நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா......!

---நான் சூடான மோகினி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண்: என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலங்கடிச்ச சக்கலத்தி

ஆண்: என் கக்கத்துல
என் கக்கத்துல வச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்தை ஏத்திவுட்டா

ஆண்: அந்த சிட்டழகி அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி சொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

ஆண்: வள்ளநாட்டு மலையோரம்
வாரோம் ஒரு தாரம் பாத்தோம்
முள்ளுக்காடு மூட்டோரம்
மூச்சு முட்ட தேனெடுத்தோம்

ஆண்: கக்குளத்து பக்கத்துல
காள சாமி கோயிலிலே
சாதியதான் பலிகொடுத்து
சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம்

ஆண்: என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி ஏமனோட
வீட்டு விளக்க ஏத்துனா
எருமையாட்டம் திரிஞ்ச பயல
யானை மேல ஏத்துனா

ஆண்: அந்த மொட்டழகி அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு.....!

---என் ஆளு பண்டாரத்தி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண்: செல்லகுட்டி ராசாத்தி
போறதென்ன சூடேத்தி
கண்ணே உன் காதல் கதவ
வைக்காத சாத்தி

ஆண்: வெள்ளைக்கட்டி நீ ஆத்தி
வெக்கமென்னு ஏமாத்தி
எட்டி எட்டி போகாதடி
என்னை மல்லாத்தி

ஆண்: உன்னை நான் நெஞ்சுக்குள்ள
தொட்டில் கட்டி வெச்சேன் காப்பாத்தி

ஆண்: அடி கொட்டி கெடக்குது அழகு
நீ கூட வந்து கொஞ்சம் பழகு
உன் கண்ணே என்னை
கரையில் ஏத்தும் படகு

ஆண்: உன்னை கொத்த நினைக்குது கழுகு
உன் மேனி எங்கும் என்ன மெழுகு
நான் காட்டாறையும் அடக்கி ஆளும் மதகு

ஆண்: ஒண்டி வீரன் நானடி
உனக்கேத்த ஆளும் தானடி
உன் பட்டு பட்டு கன்னம் தொட்டு
தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி

ஆண்: வெற்றி வேலும் நானடி
வெளி வேஷம் போட மாட்டேன்டி
உன் அத்தை அத்தை பெத்த
முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி.......!

---செல்லக்குட்டி ராசாத்தி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......

🌹🌹🌹

என்ன சொல்லி நா ன் எழுத


என் மன்னவனின் மனம் குளிர ஹே ....


மேலாடைக்குள் நான் போராடினேன்

நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்

பேதை என்னை வாதை செய்யும்

வெட்கம் விடுமோ ஹோய்


அறியாதவள் நா....ன் தெரியாதவள்

முன் அனுப..வம் ஏ..தும் புரியாதவள்

எத்தனையோ தோ...ணுது மனசினிலே

அது அத்தனையும்... எழுதத் தெரியா...தவள்

காற்றாகப் போனாலும்

அவர் கன்னங்களை நான் தொடுவேன்

பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம்

கொண்டேனே நானும் கண்ணாவின் கோபம்

கொல்லாதே கொண்டாலும் சொல்லாலே கொல்லாதே

கண்ணான கண்ணா......!

---என்ன சொல்லி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
 
பறவையாய் திரிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும்
தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்
 
காற்று நீ யாக வீச என் தேகம் கூச
எதை நான் பேச
கலைந்து போனானே கனவுகள் உரச
பறித்து போனாயே இவளது மனச
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே
 
பார்வை கொஞ்சம் பேசுது
பருவம் கொஞ்சம் பேசுது
பதிலாய் எதை பேசிட தெரியாமல் நான்
கூச்சம் கொஞ்சம் கேக்குது
ஏக்கம் கொஞ்சம் கேக்குது

உயிரோ உனை கேட்டா தருவேனே நான்
அன்பே அன்பே மழையும் நீ தானே
கண்ணே கண்ணே வெயிலும் நீ தானே
ஒரு வார்த்தை உன்னை காட்ட
மறு வார்த்தை என்ன மீட்டா
விழுந்தேனே........!

---காதல் கண் கட்டுதே---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : என்னன்னா முன்ன பின்ன
இழுத்தின்டு இருக்கேல்
நன்னா கண்ண மூடிண்டு குத்துங்கோ

ஆண் : ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னாலதான் ஓடுங்கடா

ஆண் : குத்த வச்சப் பொண்ணு எல்லாம்
அத்தை பொண்ணுதான்
மத்தப் பொண்ணு எல்லாம்
இந்த மாமன் பொண்ணுதான்

ஆண் : கைத்தட்டிக் கூப்புடுதே
ரெண்டுக்கண்ணுதான்
ஏன்டான்னுக் கேட்க கேட்க
வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்ல இல்ல எங்களதான்.....!

---ஆடுங்கடா மச்சான்---

Link to comment
Share on other sites

வைத்தியரின் வருமானம் ஒருவரது சாவுடன் முடிந்துவிடுகிறது. நீத்தார் கடன் செய்விக்கும் அந்தணனின் வருவாய் ஒவ்வொரு வருடமும் அந்த ஒருவரின் உறவினர்கள் உயிரோடு இருக்கும்வரை வரும்.🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

வைத்தியரின் வருமானம் ஒருவரது சாவுடன் முடிந்துவிடுகிறது. நீத்தார் கடன் செய்விக்கும் அந்தணனின் வருவாய் ஒவ்வொரு வருடமும் அந்த ஒருவரின் உறவினர்கள் உயிரோடு இருக்கும்வரை வரும்.🤗

ஆனால்… அந்த செத்தவரின், இறுதிச் சடங்குக்கு… அந்தணர் வரவே மாட்டார். 🤪

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

ஆனால்… அந்த செத்தவரின், இறுதிச் சடங்குக்கு… அந்தணர் வரவே மாட்டார். 🤪

இறுதிச் சடங்கிற்கு வரமாட்டார் என்பது உண்மைதான். ஆனால் அது ஒரு துடக்குச் சம்பவமாக அவரவர் சாதியைப் பொறுத்து 14, 21, 31 நாட்கள் எனப் பேணப்பட்டு அக்கால முடிவில் துடக்கைக் கழிக்க அந்தணர் வருவார். வந்து அதற்கான வருவாயையும் பெற்றுச் செல்வார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இனிய காலை வணக்கம் தொலைந்தவர்களை தேடிச்செல்லலாம் விலகிசென்றவர்களை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது'

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

பெண் : எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட
மாயங்கள் செய்கிறாய்

ஆண் : உனக்குள் பார்க்கிறேன்
உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட
நான் வழி பார்க்கிறேன்

பெண் : இதழும் இதழும்
இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
ஆண் : இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை

பெண் : உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட
நான் வழி சொல்லவா......!

---கண்ணழகா காலழகா---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண்: ஹாய் மாலினி... ஐ ஆம் கிருஷ்ணன்...
நான் இதை சொல்லியே ஆகனும்...
நீ அவ்வளவு அழகு...
இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு...
இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க
I am love with you..

ஆண்: முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்...
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன... (முன்தினம் பார்த்தேனே...)

ஆண்: துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்க்காதோ... பேரழகே..

பெண்: முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே

ஆண்: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி......!
 

---முன்தினம் பார்த்தேனே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னாலதான் ஓடுங்கடா

ஆண் : குத்த வச்சப் பொண்ணு எல்லாம்
அத்தை பொண்ணுதான்
மத்தப் பொண்ணு எல்லாம்
இந்த மாமன் பொண்ணுதான்

ஆண் : கைத்தட்டிக் கூப்புடுதே
ரெண்டுக்கண்ணுதான்
ஏன்டான்னுக் கேட்க கேட்க
வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்ல இல்ல எங்களதான்.....!

---ஆடுங்கடா மச்சான்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண்: தன்னந் தனிச்சிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
ஆண்: புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்
பெண்: உன் கழுத்தில் மாலையிட ஒண்ணிரண்டு தோளைத் தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
ஆண்: வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
உள்ளம் மட்டும் உன் வழியே நானே

பெண்:அடிக்கிற காத்தைக் கேளு அசையற நாத்தைக் கேளு
நடக்கிற ஆத்தைக் கேளு நீ தானா …

ஆண்: இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே ஆ.......!  

--- இஞ்சி இடுப்பழகி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : சொந்தமில்லை நீ எனக்கு
பந்தமில்லை நான் உனக்கு
இருந்தாலும் என்னுயிரே
உன் வரவை தேடுகிறேன்

ஆண் : மேடை போடும் நாள் வருமோ
கடவுள் தந்த வாழ்வினிலே
 

ஆண் : குங்கும உதட்டழகும்
கொடி போன்ற உடலசைவும்
சங்கு கழுத்தழகும் கண்டு மனம் வாடுகிறேன்

ஆண் : மானினமும் மீனினமும்
மை போடும் பெண்ணினமும்
வாழைத் தோப்புக்குள்ளே
வந்திருக்க காணுகிறேன்

ஆண் : கரையேறி மீன் வருமோ
கை தேடித பால் வருமோ
இந்த ஜென்மம் இல்லையென்றால்….ஆஅ….ஆ….
இந்த ஜென்மம் இல்லையென்றால்
மறு ஜென்மம் உன்னருகே
இருந்திட ஆண்டவனை
எப்போதும் வேண்டுகிறேன்…..!

---அத்தை மகளும் இல்லை---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொல்லச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதரிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிளிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா.....!
 
---காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக---
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியானத்திற்கான முதல்படி.

ramana-maharishi-quotes-tamil-.jpg

ரமண மகரிஷி.

  • Like 3
Link to comment
Share on other sites

"நான் இரவு என் மனைவியுடன் உங்க வீட்டில் தங்க வருகிறேன்" என்று தன் நண்பர் ஒருவருக்குத் தொலைபேசியில் ஒருவர் தகவல் தந்தார்.
அதற்கு அந்த நண்பர் "மகிழ்ச்சி வாருங்கள், ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள், உங்கள் ஊரில் இருக்கிற உயர்தரமான பேக்கரியில் கொஞ்சம் காஸ்ட்லியான 'கேக்' வாங்கி வாருங்கள்" என்றார்.
"எதற்காக" என்று இந்த நண்பர் கேட்க, "என் மகன் தேர்வில் வெற்றி பெற்றிருக்கின்றான், 'சர்பிரைசாக' அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாகக் கொண்டாட விரும்புகிறேன். என்னால் இப்பொழுது வெளியே செல்ல முடியாது. ஆகையால் நீங்கள் ஊரிலிருந்து வாங்கி வாருங்கள்" என்றார். அவர் கூறியவாறு அந்த நண்பர் கொஞ்சம் அதிகமாகவே செலவழித்து நல்ல 'கேக்' ஒன்றை வாங்கிச் சென்றார் .
அந்தக் கொண்டாட்டம் முடிந்ததும்.இவரும் ஊருக்குக் கிளம்பத் தயாரானார். 'கேக்'கின் விலை என்ன என்று கேட்டு நண்பன் அதற்குண்டான தொகையை கொடுப்பான் என்று எதிர்பார்த்தார்.
ஆனால், ஒரு அட்டைப் பெட்டியைக் கொடுத்து "கொஞ்சம் பெரியதாக வாங்கி வந்து விட்டீர்கள், மீதமுள்ள 'கேக்'கை உங்கள் குழந்தைக்குக் கொடுங்கள்" என்று ஒரு பெட்டியை கொடுத்தார்.
எவ்வளவு தொகை என்று கேட்டு பணத்தைக் கொடுப்பான் என்று எதிர்பார்த்தால் மீதத்தை நம் தலையில் கட்டி விட்டானே என்று ஊருக்குத் திரும்பும் வழியில், மனைவியிடம் தன் நண்பனை சபித்துக் கொண்டே வந்தார்.
"விடுங்கள், அவர் ஒருவேளை மறந்திருக்கலாம் அல்லது நாளை மறுநாள் அனுப்பி விடலாம் என்று நினைத்திருக்கலாம்" என்றார் மனைவி. இருந்தாலும் அவரால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
வீட்டிற்கு வந்து அந்த அட்டைப் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் 'கேக்'குடன் பணமும், ஒரு கடிதமும் இருந்தது.
அந்தக் கடிதத்தில் "நண்பா, என்னுடைய பேச்சை மதித்து நீ என் மகனுக்காக 'கேக்' வாங்கி வந்தாய். தொகை எவ்வளவு என்று கேட்டு, அதைத் திரும்பக் கொடுத்து உன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. நீ வாங்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும். எனவே, இந்த பெட்டியில் வைத்து அனுப்பி வைக்கிறேன். தயவு செய்து இதை எடுத்துக் கொள்" என்றிருந்தது.
அதைப் படித்தவுடன், அவரை... நண்பன் கன்னத்தில் அறைந்தது போலிருந்தது. அவனைப் பற்றி எவ்வளவு தவறாக நினைத்துவிட்டோம். ஆனால் அவன் நம்மைப் பற்றி எவ்வளவு உயர்வாகக் கருதுகிறான் என்று வேதனையடைந்தார்.
மனம் வேதனைப்பட்ட அவர், உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு "உன்னைத் தவறாக புரிந்து கொண்டேன் என்னை மன்னித்து விடு" என மன்னிப்பு கேட்கப் போகிறேன் என்று மனைவியிடம் சொன்னார்.
அவ்வாறெல்லாம் பேசி இன்னொரு தவறை செய்யாதீர்கள். உங்களைப் பற்றி அவர் உயர்வாக நினைத்திருக்க, "அவரைப் பற்றி தவறாக நினைத்து விட்டேன்" என்று இப்பொழுது சொன்னால் அவர் வேதனைப்படுவார். உங்களின் மீதுள்ள மதிப்பு குறைந்து விடும் என்றார் மனைவி.
ஆம். பெரும்பாலும் நாம் அவசரப்பட்டு யூகத்தின் அடிப்படையிலும், ஆதாரங்கள் இல்லாமலும் மற்றவர்களைப் பற்றி தவறான முடிவுக்கு வந்துவிடுகிறோம்.
தெளிவான ஆதாரங்கள் கிடைக்காதபோது ஒருவரை குறை கூறுவது குற்றமாகும். அவர் தவறே செய்திருந்தாலும் அதற்கு... ஏதோ ஒரு நிர்பந்தம் அல்லது ஏதோ ஒரு காரணம் இருக்கலாம் என நாம் நினைப்பதால் நமக்கு இழப்பேதும் இல்லை. ஆனால் தவறு செய்யாத ஒருவரை நாம் யூகத்தின் அடிப்படையில் குற்றவாளி ஆக்கி மற்றவர்களிடம் பரப்பினால் நாம் குற்றவாளி ஆகிவிடுவோம்.
*நலமுடன் நட்பை பேணுவோம்.*
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/bmKIQk6BIt/

சுவாமிஜி நித்தியானந்தாவின் சோகக்கதை.

கேக்க ரொம்பவும் பாவமாயிருக்கு.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.