Jump to content

கேர்ணல் கிட்டு.. மறந்த தாயகமும்.. மறக்காத புகலிடமும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

12508908_1107368689282547_81570338550748

12400770_1107368679282548_64863216688550

கிட்டு மாமா உள்ளிட்ட 10 மாவீரர்களினதும் நினைவு நாள் கடந்த 16ம் திகதி கடந்து போனது. இந்தியச் சதியில் இந்து சமுத்திரத்தில் தற்கொடை செய்து தன்னையே தாய் மண்ணிற்காய் தந்த இந்த வீரர்களை எப்படி மறந்தீர்கள்..?! மறக்க முடியாத தியாகங்கள் இவை.

நினைவு வீரவணக்கம்.

12548984_915119791874401_647953462063964

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை கார்ணல் கிட்டு 80களின் நடுப்பகுதியில் செய்த சகோதரப் பகுகொலைகள் காரணமாக இருக்கலாம்.

எனக்கு இன்னும்  நினைவிருக்கு எங்கள் வீடு சுண்டிக்குளி விதானையார் வீதியில் இருந்தது, அப்போது எனக்கு முன்று வயது, யாழ் ஓல்ட் பார்க் வீதியில் டெலோவினரின் வான் ஒன்றிற்குள் குண்டு வைத்து தமிழர்களின் இரத்தமும் சதையும் மரங்களிலும் சுவர்களிலும் சிதறிக்கிடந்த காட்சி.  அப்போது அதை புரிந்துகொள்ள முடியவில்லையாயினும் பின்னாட்களில் அந்தச் சகோதரப்படுகொலைகளைப் புரிந்துகொண்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா ஆயுத வழிப்போராட்டங்களின் போதும் எதிரிகளின் ஊடுருவல்களுடன் கூடிய எல்லா வகை படுகொலைகளும் நடந்தே வந்துள்ளன. ஒன்றிலும் எதுவும் தூய்மையானது கிடையாது. அது அமெரிக்க சுதந்திரப் போராட்டமாக இருக்கட்டும்.. ஈழ விடுதலைப்போராட்டமாக இருக்கட்டும்.

தாயகத்தில் வாழும் முன்னாள் போராளிகளையே மறந்த நிலையில் உள்ள மக்கள் கூட்டத்தையும் காண்கிறோம். அது எந்த இயக்கமாக இருந்தாலும். ஆனால்.. அந்தப் போராளிகளின் போராட்டத்தால் வாய்த்த வெளிநாட்டு வாழ்க்கையில் வரும் உல்லாசத்தை மட்டும் தாயகத்தில் உள்ள பலர் சுகிக்க மறப்பதில்லை. அது தேவைப்படுகிறது..! அங்கு எதுவும் மறக்கப்படவில்லை.

அடிப்படையில் தமிழன்.. ஏழையாகவும்.. பொருண்மிய ஏக்கம் நிறைந்தவனாகவும் இருப்பதே.. தான் அவன் இன்று... எல்லாத்தையும் இழக்க முக்கிய காரணம். அதில் மாவீரர்கள் மறப்படுவதும் அடங்கும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் விடுதலை உணர்வுடன் நடைபெற்ற கேணல் கிட்டு மற்றும் அவர்களுடன் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு வணக்கநிகழ்வு

 

வங்கக் கடலின் நடுவே அந்த தீயாக வேள்வித் தீ எரிந்து அணைந்து இவ் வருடம் 23 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன .ஆனால் தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து எரிந்துகொண்டே இருக்கின்றன.கேணல் கிட்டுவும் அவர்களுடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி வங்கக் கடலில் சங்கமித்த அந்த சம்பவம் சரித்திரம் மறக்காத சாவு மட்டும் அல்ல அது எங்களின் நெஞ்சங்களில் இருந்து நீங்க மறுக்கும் நெடும் அலையாகி நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று .

_DSC7461

கேணல் கிட்டு மற்றும் அவர்களுடன் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவாக யேர்மனியில் Essen நகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட வணக்க நிகழ்வில் , தேசியக்கொடி ஏற்றப்பட்டு ,தொடர்ந்து கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவை தழுவிக் கொண்ட மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து விடுதலை உணர்வுடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன , மாவீர்களின் தியாகங்களையும் , அவர்களின் அதி உன்னத அர்ப்பணிப்புகளையும் எடுத்துரைக்கும் விடுதலை நடனங்கள் , கவிதைகள் , நாடகம், , சிறப்புரை என பல்வேறு நிகழ்வுகள் சிறப்பாக அமைந்திருந்தது.

இறுதியாக தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் ஓர்மத்துடன் அனைவரும் உறுதி எடுத்துக்கொண்டு, வணக்க நிகழ்வு நிறைவுபெற்றது .
_DSC5148

_DSC5161

_DSC7421

_DSC7425

_DSC7430

_DSC7432

_DSC7438

_DSC7446

_DSC7455

_DSC7458

_DSC7472

_DSC7474

_DSC7475

_DSC7480

_DSC7513

_DSC7545

_DSC7554

_DSC7557

_DSC7558

_DSC7585

_DSC7586

_DSC7587

_DSC7595

_DSC7643

_DSC7662

_DSC7715

_DSC7716

_DSC7717

_DSC7717_1

_DSC7717_2

_DSC7718

_DSC7732

_DSC7734

_DSC7738

_DSC7750

_DSC7766

_DSC7767

_DSC7781

_DSC7782

_DSC7794

_DSC7795

_DSC7796

http://www.kuriyeedu.com/archives/33715_DSC7799http://www.kuriyeedu.com/archives/33715

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.