Jump to content

தமிழர் மரபுத் திங்கள் சேர்மனியில் பிரகடனம்.


Recommended Posts

தமிழர் மரபுத் திங்கள்      சேர்மனியில்       பிரகடனம்.

 

தமிழ் கல்விக் கழகம் பிராங்பேர்டின்; கீழ் இயங்கும் தமிழாலயம் பிராங்பேர்ட் ஆண்டுதோறும் நடாத்திவரும் தமிழர் திருநாளாகிய தைப்பொங்கல் விழா, 23.01.2016ல் பிராங்போட் நகரில் சமய அனுட்டானங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களை பாடசாலை மாணவர்களும் ஆசரியர்களும் இருமருங்கும் நின்று வணக்கம் கூறி,  விழா மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். தமிழர் திருநாள், விளையாட்டுப்போட்டி, ஆண்டு விழா, சிறிய பண்டிகைகள், பண்பாட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகள், தமிழ்த் திறனாய்வுப் போட்டி ஆகியவற்றை வருடாவருடம் நடாத்தி வரும்  இப்பாடசாலை 23.04.1995 ல் ஆரம்பிக்கப்பட்டது.  மழலைப் பிரிவு தொடக்கம் வளர்நிலை 12 வரை 169 மாணவர்கள் இங்கு கல்வி பயில்கிறார்கள். 31 ஆசிரியர்கள் கல்வி போதிக்கிறார்கள்.

 

இவ்வாறான ஒரு பாடசாலையை நடாத்திவரும் நிர்வாகத்தினரும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும்  நாடுகடந்த தமிழீழ அரசில்  நம்பிக்கையும் பற்றும் கொண்டுள்ளார்கள்.  அதற்கமைவாக நாடுகடந்த தமிழீழ அரசவை சேர்மனிய பிரதிநிதிகளை அழைத்து, கௌரவித்துள்ளதுடன், அண்மைக் காலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழர் மரபுத் திங்கள் திட்டத்தினையும்   சேர்மன் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் முதல் முதலாகப் பிரகடனப் படுத்தவும் வழிசமைத்துத்    தந்துள்ளார்கள். இவ்விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசவை சேர்மனியப் பிரதிநிதிகளான திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தார்.  திரு கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் பொங்கல் சிறப்பு பற்றியும் திரு சுப்பையா லோகநாதன் அவர்கள்  பாடசாலையின் சிறப்பு பற்றியும் உரையாற்றினார்கள்;. திரு வேலாயுதபிள்ளை இரவீந்திரநாத் அவர்கள், தமிழர்  மரபுத் திங்கள் பிரகடனத்தை வெளியிட்டு வைத்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசின், தமிழர் மரபுத் திங்கள் அறிக்கையும் கனடா ஒன்ராறியோ மாகாணத்தின் ஏற்பு அறிக்கையும்  விழாவுக்கு வருகை தந்தவர்களுக்கு மண்டபத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

 

நாம் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், எமது தாய் மொழி தமிழையும்,  கலை, கலாச்சாரங்கள் பண்பாடு, பழக்க வழக்கங்கள் போன்ற பாரம்பரியங்களையும் தொடர்ந்து காப்பாற்றுவோம்  என்பதை தமிழ் கல்விக் கழக பிராங்பேர்ட்  நிர்வாகத்தினரும்  அதன் கீழ் இயங்கும் தமிழாலய நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் இந் நிகழ்வுமூலம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள். பாடசாலை நிர்வாகத்தினரின்  மேற்பார்வையின்  கீழ், மழலைகள், உயர் வகுப்பு மாணவர்கள், பழைய மாணவர்கள், பெரியோர்கள் வரை,  கவிதை, சொற்பொழிவு, பரதம், நடனம், நாடகம், கோலாட்டம், பட்டி மன்றம், இசைக் கச்சேரி, போன்ற பல நிகழ்ச்சிகள்  இந் நிகழ்வில் வழங்கப்பட்டதுடன்  இவ்வருடம் நடைபெற்ற தமிழ்த் திறனாய்வுப் போட்டியில் பங்குபற்றி வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கும் இந் நிகழ்வின்போது சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

சுமார் 600க்கு மேற்பட்ட மக்கள் இந்நிகழ்வில் பங்குபற்றியமை குறிப்பிடத் தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனியில் தமிழ் பாடசாலைகள் பெருமைபட கூடியதாக இருப்பதாக சொல்கிறார்கள்.

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.