Jump to content

மழைக்காலம் துவங்கும் - ராஜன் விஷ்வா


Recommended Posts

12549026_10205698755653779_8192344968966

 

மழைக்காலம் துவங்கும்

மேய்ச்சல் நிலங்களை
புற்கள் போர்த்தியிருக்கும்

எல்லாம் எரிந்த சாம்பலிலிருந்து
மூங்கில் துளிர்க்கும்

நொண்டி நாய் தங்க நிறகுட்டிகள்
நான்கை ஈனும்

நீண்ட குரலெடுத்து பாடும்
ஒற்றை வால்க்குருவி கூடடைந்திருக்கும்

வண்ணத்து பூச்சியொன்றின்
நிறங்கள் குலைந்திருக்கும்

தூறல் நின்றபின்
வெளிக்கிடும் தவளைக்காக
நீர்ப்பாம்பு கரையை பார்த்திருக்கும்

குயவனின் கனவுகளுக்குள்
தலைபிரட்டை நீந்த கற்றிருக்கும்

சம்பா நாற்று நீரில் மிதந்திருக்கும்
பெருங்கிழவன் உளம் விளைந்திருக்கும்

செப்பனிடாத கூரைவழியோடும் மழையருவி
சிலந்தியின் பின்னலில்

சன்னல்களை வரைந்திருக்கும்

 

விட்டில் பூச்சியின் சிறகில்

விடிந்த பின்னும்  ஒளிர்ந்தபடி

விளக்கு மரங்கள் 

 

செம்படவனின் தோணிக்குள் தங்கமீன்

புதுநீர்பரப்பை கண்டதாய் சிலாகித்திருக்கும

மீண்டுமொரு மழைக்காலம் இப்படியான
ஏதாவதொன்றை பிரசவிக்கும்

புலரா இரவில் பெய்யும்
பெருமழையில் நடந்தபடி நான்
நனைந்து கொண்டிருப்பேன்...

 

-ராஜன் விஷ்வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்... சுப்பர்...! நல்லதொரு மழைக்காலம்...!

கடைசியில் எனக்கு இப்படித் தோன்றியது:

புலரா இரவில் பெய்யும்

சாரலில் நனைந்தபடி நான்

நடந்து கொண்டிருப்பேன்....!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூவானம் பட்டு துளிர்த்தது மனம் ஓடி விளையாடும் ஓடைகள் கண்டு உயிர் வந்தது உழவனுக்கு ஒரு பிடி உலகுக்கென்று......... சோறு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை, ராஜன் விஷ்வா...!

மழையில் நனைந்த அனுபவம் ஏற்பட்டது...!

ஒரு கவிதையின் கருக்கட்டலும்.. அதன் பிரசவத்தின் வலியும் ஒரு தாயின் வலியைப் போலத் தான்...! 

நமது ஊரின் மழைக்காலத்து வாசனையை நுகர்ந்து நீண்ட காலமாகி விட்டது..! சிவப்புக் கம்பளப் பூச்சிகளுக்காகவும்...ஆங்காங்கே ஓடித்திரியும் மஞ்சள் பொட்டுகள் வைத்த கருநிற வண்டுகளுக்காகவும் ஏங்கி நிற்கிறது மனசு! 

அத்துடன் மழைக்காலத்து இரவுகள் தரும் வசந்த காலத்து நினைவுகளும் வந்து போகின்றன!

 

உடலைப்  பிரிந்த சேலைத் தாவணிகள்....

ஊடல் முனகல்களால் தூக்கம் கலையும்!

 

விடி விளக்குளின் வெளிச்ச நாக்குகள்,

மெல்லத் தங்களை உள்ளிழுத்துக்  கொள்ளும்!

 

நனைத்த முற்றங்களின் பாதிக் கோலங்களை...

கூந்தலின் ஈரம் மெல்லக் கலைக்கும்!

 

இன்னுமொரு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ராஜன் விஷ்வா கவிதை எழுதினால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தேன்!

அதன் விளைவு தான் எனது வரிகள்!

தொடர்ந்தும் கவியுங்கள்.. விஷ்வா!

,

 

 

Link to comment
Share on other sites

சுப்பர் கவிதை. 80 களில் நான் சிறுவனாக இருந்தபோது அனுபவித்த மழைக்காலத்தை அனுபவிப்பது போல இருக்குது. ஆனால் இப்பொது அப்பிடியான மழையும் இல்லை அனுபவிக்க நேரமும் இல்லை.

Link to comment
Share on other sites

நன்றி சேயோன், சுவி, முனிவர்ஜீ :)

 

நீங்கள் எழுதியது இன்னும் சிறப்பாக உள்ளது சுவி அண்ணா.. சாரலில் தானே நனைய முடியும்.. 

 

கவிதைக்கெல்லாம் பதில் போடுறீங்க தனி மடலனுப்பினால் ஒன்றும் அனுப்புவதில்லை.... உங்களதும், சர்வேயரின் நினைவுகளை கிளறி விட்டதே இந்த கவிதை அதன் இலக்கை அடைந்துவிட்டதாக மனம் உணருகிறது... எப்போதும் போல உங்களன்பிற்கு எனது வணக்கங்கள் புங்கை அண்ணா.. :)

 

உங்கள் முன் நான் கத்துக்குட்டி தான் என்றைக்கும்.. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராசா

கவிதையை வாசித்தபோது

தொலைத்த மண்ணும்

வாழ்க்கையும் கண்முன் வந்து கண்கள் இருண்டன...

ஒரு விதத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்

ஒருவித பொறாமை தான் வருகிறது...

தொடருங்கள்

வாழ்க வளமுடன்..

Link to comment
Share on other sites

On 2016-01-29 at 4:35 AM, ராஜன் விஷ்வா said:

 

 

 

வண்ணத்து பூச்சியொன்றின்
நிறங்கள் குலைந்திருக்கும்

தூறல் நின்றபின்
வெளிக்கிடும் தவளைக்காக
நீர்ப்பாம்பு கரையை பார்த்திருக்கும்

 

 

-ராஜன் விஷ்வா

அருமை விஷ்வா... மழையையும் இயற்கையையும் லயிக்கும் மனசால் மட்டுமே இப்படி கவிதை எழுத முடியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருள் கொஞ்சம் இடிச்சுது, அதுதான்....!

பெருமழையில் யாரும் நடப்பார்களா, ஒன்றில் குடையுடன் போவினம் அல்லது ஓடிப் போவினம்.... எப்படியோ மிகவும் அருமையான கவிதை அதில் சந்தேகமில்லை....! (குறை நினைக்க வேண்டாம்....!).  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மழைக்கால கவிதை அருமையாக இருக்கின்றது விஷ்வா

Link to comment
Share on other sites

On 1/30/2016 at 11:11 PM, விசுகு said:

நன்றி ராசா

கவிதையை வாசித்தபோது

தொலைத்த மண்ணும்

வாழ்க்கையும் கண்முன் வந்து கண்கள் இருண்டன...

ஒரு விதத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்

ஒருவித பொறாமை தான் வருகிறது...

தொடருங்கள்

வாழ்க வளமுடன்..

மிக்க நன்றி அண்ணா... மழை எல்லா ஊரிலும் தானே பெய்யுது கவலையை விடுங்கள்.. மழையில் மழழையாய் மாறி மகிழ்ந்து இருங்கள்.  :)

On 1/30/2016 at 11:46 PM, நிழலி said:

அருமை விஷ்வா... மழையையும் இயற்கையையும் லயிக்கும் மனசால் மட்டுமே இப்படி கவிதை எழுத முடியும்!

நன்றி சகோ வாழ்த்திற்கு :)

On 1/30/2016 at 0:12 AM, suvy said:

பொருள் கொஞ்சம் இடிச்சுது, அதுதான்....!

பெருமழையில் யாரும் நடப்பார்களா, ஒன்றில் குடையுடன் போவினம் அல்லது ஓடிப் போவினம்.... எப்படியோ மிகவும் அருமையான கவிதை அதில் சந்தேகமில்லை....! (குறை நினைக்க வேண்டாம்....!).  :)

உங்களது குறைகள் என்னை மேருகூட்டத்தானே, மகிழ்வே என்றும்  :)

நன்றி கு.சா மாமா... விகடகவி அண்ணா :)

Link to comment
Share on other sites

கவிஞரே உங்கள் கவிதையில் ஈசல்களுக்கும் சிறு இடம் கொடுப்பீர்களா? உங்கள் கவிதையை வாசித்தபோது ஈசலின் நினைவு வந்தது. கரையான் புற்றில் இருக்கும் கரையான்கள் ஈசலாகி??? பின்னர் மின்குமிழ்களில் மோதி தற்கொலை செய்யும் காட்சிகள் நினைவில் வருகின்றன.

Link to comment
Share on other sites

On Friday, February 05, 2016 at 3:57 AM, கலைஞன் said:

கவிஞரே உங்கள் கவிதையில் ஈசல்களுக்கும் சிறு இடம் கொடுப்பீர்களா? உங்கள் கவிதையை வாசித்தபோது ஈசலின் நினைவு வந்தது. கரையான் புற்றில் இருக்கும் கரையான்கள் ஈசலாகி??? பின்னர் மின்குமிழ்களில் மோதி தற்கொலை செய்யும் காட்சிகள் நினைவில் வருகின்றன.

Aa

ஆகா மறந்தேவிட்டேன்.. 

 

விளக்கு மரங்களின் வெளிச்சத்தை

இறந்த பின்னுன் ஈசல் ஒளிர்ப்பதாய் எழுதியுள்ளேன். 

 

நன்றி அண்ணா கருத்திற்கும் பச்சை புள்ளிக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.