Jump to content

இளைஞர்கள் செய்தி பெறும் பிரதான மூலமாக FACEBOOK – CPA ஆய்வில் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்கள் செய்தி பெறும் பிரதான மூலமாக FACEBOOK – CPA ஆய்வில் தகவல்

unnamed-e1453979481780-800x365.jpg

 

மேல் மாகாணத்தில் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களின் பயன்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கை நேற்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வில் 55.8%மான ஆண்களும் 44.2%மான பெண்களுமாக 1,743 பேரின் கருத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளவை,

 

unnamed

 

தற்போதைய செய்திகள் மற்றும் நிகழ்கால விவகாரங்களை தெரிந்து வைத்திருப்பதை அவர்கள் விரும்புகிறார்களா எனக் கேட்டபோது 1.7% பதிலளிப்பவர்கள் மட்டும் ‘ஒரு போதும் இல்லை” எனக் கூறினர். 55.1% பதிலளிப்பவர்கள் அதனை அதிகளவு விரும்புவதாகக் குறிப்பிட்டனர். அத்துடன், 42.3% ஓரளவு விரும்புவதாகக் கூறினர்.

தனியார் தொலைக்காட்சிகளே பதிலளிப்பவர்கள் செய்திகளைப் பெறும் மிகவும் பிரபல்யமான தகவல் மூலம் ஆகும். அதனைத் தொடர்ந்து பேஸ்புக் (Facebook) மற்றும் இணையத்தளம்/ வலையமைப்பு அமைந்துள்ளன. வயது அடிப்படையில் ஆய்வு முடிவுகளை வகைப்படுத்தும்போது பதிலளிப்பவர்களில் 18-24 வயதினரிடையே பேஸ்புக் (Facebook) முக்கியமான செய்திகளைப் பெறும் மூலமாகவும், அதேசமயம் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் இணையத்தளம்/ வலையமைப்பு என்பன காணப்படுகின்றன.

மின்னஞ்சல் வழியாக ஒரு சுவாரசியமான முக்கியமான செய்திக் கட்டுரையைப் பெறுவது தொடர்பில் 55.9% பதிலளிப்பவர்கள் ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றார்கள். 23.6% அதனை மின்னஞ்சல் வழியாக அனுப்புவதன் மூலம் பகிர்ந்துகொள்கிறார்கள், 18.4% பதிலளிப்பவர்கள் சமூக வலைதளங்கள் ஊடாக பகிர்ந்துகொள்தோடு, 13.9% இரண்டினையும் செய்கிறார்கள் எனவும் குறிப்பிட்டனர்.

MEDIA SURVEY1

கைத்தொலைபேசிக்கு சுவாரசியமான ஒரு குறுந்தகவலைப் பெற்றால் (SMS) நீங்கள் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று அவர்களிடம் கேட்டபோது, 24.2% பதிலளிப்பவர்கள் அதனை அநேகமாக மற்றவர்களுக்கு குறுந்தகவலாக SMS அல்லது உடனடிச் செய்தி மென்பொருள் – Instant Massage App பிரயோகங்கள் வழியாக அவர்களது கைத்தொலைபேசியின் மூலம் அனுப்புவதாகக் கூறுகின்றனர். அதேசமயம், 16.6% பதிலளிப்பவர்கள் சமூக ஊடகத் தளங்களில் பகிர்வதாகவும், 16.2% இரண்டினையும் செய்வதாகவும், இதன்போது 22% தாம் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.

 

MEDIA SURVEY2

 

கடந்த வருடம் இக்கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட ஏறத்தாழ 50% பதிலளிப்பவர்கள் தாங்கள் ஒன்லைன் மூலமாக அல்லது பிரதான ஊடகங்கள் வாயிலாக கற்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசியல் மற்றும் சமூக விடயங்கள் தொடர்பில் பெருமளவு கற்றுக்கொள்ள/ தெரிந்துகொள்ள தீர்மானித்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஒன்லைன் வாசிக்கும் அல்லது பிரதான ஊடகங்கள் வாயிலாக கற்ற விடயங்களின் அடிப்படையில் அரசியல் அல்லது சமூக விடயங்கள் தொடர்பிலானதொரு நடவடிக்கை எடுக்கும்போது, 22.9% பதிலளிப்பவர்கள் அவர்கள் நடவடிக்கை எடுத்ததற்கான காரணம் அவர்கள் ஒன்லைனில் வாசித்த குறித்த விடயம்தான் எனக் குறிப்பிட்டுள்ளனர். அதேசமயம் 20.8% பதிலளிப்பவர்கள் பிரதான ஊடகங்கள் மூலமாக கற்ற விடயங்களின் அடிப்படையிலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

MEDIA SURVEY4

நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்ட பதிலளித்தவர்களிடம் அவர்கள் எத்தகைய நடவடிக்கை எடுத்தார்கள் எனக் கேட்கப்பட்டது. நடவடிக்கை எடுத்தவர்களில் ஒன்லைன் மூலமாக (61.5% பதிலளிப்பவர்கள்) அவர்கள் கற்ற விடயங்களின் அடிப்படையில் அவர்கள் குடும்பத்திலும் நண்பர்களுக்கிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிந்தது எனவும், ஒன்லைன் ஊடாக வாயிலாக (16.5%) கலந்துரையாடலில் ஈடுபடுகிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

MEDIA SURVEY5

60.4% பதிலளிப்பவர்கள் தரவுப் பயன்பாட்டிற்கு அவர்களால் அதிகம் செலவு செய்ய முடியுமாயின் அவர்களது ஒன்லைன் பயன்பாடு அதிகரிக்கும் என்பதை குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களது இணையத்தளப் பாவனையை அதிகரிக்க அவர்களது சேவை வழங்குனர்கள் என்ன செய்யலாம் எனக் கேட்டபோது, 40.2% பதிலளிப்பவர்கள் இணைப்புக்கான வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், அதேசமயம், 37.5% பதிலளிப்பவர்கள் அதிகரிக்கப்பட்ட தரவுப் பொதி வேண்டும் என்றும் கேட்டனர். 35.5% பதிலளிப்பவர்கள் மாதாந்த கட்டணத்திற்கான செலவு குறைக்கப்படுமானால் அவர்களது இணையத்தளப் பயன்பாட்டினை அதிகரிப்பர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

பதிலளிப்பவர்களது வயது 35 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மாதாந்த கட்டணத்திற்கான செலவு குறைக்கப்படுமானால் அவர்களது இணையத்தள பயன்பாட்டில் ஓர் அதிகரிப்பைக் காணலாம் எனவும், அதேநேரம் 18-24 வயதுக் குழு முக்கியமாக அதிகரிக்கப்பட்ட தரவுப்பொதியும் (42.7% பதிலளிப்பவர்கள்) மற்றும் 25-34 வயதுக் குழுவிற்கு நல்லதொரு இணைப்பு வேகம் (41.6%) தேவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களிடம் இணைய சேவை வழங்குனர் அவர்களது இணையத்தின் வேகத்தை ஒரு கூடுதலான கட்டணத்தில் கணிசமானளவிற்கு அதிகரித்துத் தருவதற்கு முடியுமாயின், 30.8% பதிலளிப்பவர்கள் அவர்கள் மேம்படுத்துதலைக் கருத்தில் கொள்வார்கள் எனவும், அதேநேரம் 42.5% பதிலளிப்பவர்கள் மேம்படுத்துதலைச் சிலநேரம் கருத்தில் கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்களம் அல்லது தமிழில் கூடுதலான உள்ளடக்கங்கள் அல்லது தளங்கள் காணப்படுமாயின் நீங்கள் உங்கள் இணையப் பாவனையை அதிகரிப்பீர்களா எனக் கேட்டபோது, 57.1% பதிலளிப்பவர்கள் ஏற்றுக்கொண்டதுடன், அதேநேரம் 21.1% பதிலளிப்பவர்கள் அதிகரிக்காது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

media survey9

63.1% பதிலளிப்பவர்கள் அவர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒன்றுக்கு மேற்பட்ட செய்தி ஊடகங்கள் காணப்படுகின்றன, 25.3% பதிலளிப்பவர்கள் அனைத்து செய்தி ஊடகங்களும் ஒரே மாதிரியாகக் கருதுவதாகத் கூறினர். பெரும்பாலும் 10% அவர்களுக்கு நம்பத்தகுந்ததாக எந்தவொரு செய்தி ஊடகமும் இல்லை எனத் தெரிவித்தனர்.

பதிலளிப்பவர்களது நம்பிக்கையில் ஏனையவர்கள் எந்தளவுக்கு தாக்கம் செலுத்துகிறார்கள் என்பதைப் பார்த்தபோது, 37.2% பதிலளிப்பவர்கள் ஊடக வலைப் பக்கத்திலிருந்து நேரடியாக முதலில் அறிந்துகொள்ளும் செய்திக் கட்டுரைகளை விட, சமூக ஊடகங்கள் அல்லது மின்னஞ்சல் மூலமாக நண்பர்கள் முதலில் பகிர்ந்து கொள்ளும் செய்திக் கட்டுரைகளை நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆர்வத்தைத் தூண்டும் விதமாக 51.1% பதிலளிப்பவர்கள் தாம் நம்பாத ஒரு செய்திக் கட்டுரையை சமூக வலைப்பக்கத்தில் ஒரு நண்பர் பகிர்ந்து கொள்வதைக் காணும்போது தமது (பதிலளிப்பவரது) முதல் அபிப்பிராயத்தை தாம் சிலவேளை மீள் பரிசீலனை செய்வார்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

ஒன்லைன் அல்லது அச்சு ஊடகத்தில் நீங்கள் வாசிக்கும் முக்கியமான செய்தியின்/ கட்டுரையின் ஆசிரியரை அல்லது பிரசுரிப்பவரை அறிந்திருப்பது முக்கியமானது என 63.2% பதிலளிப்பவர்கள் தெரிவித்தார்கள். பெரும்பாலும் 30% பதிலளிப்பவர்கள் அது முக்கியத்துவம் அற்றது எனக் குறிப்பிட்டார்கள்.

தேர்தல் காலங்களின் போது உங்களின் பிரதான மற்றும் மிகவும் நம்பகமான தகவல் மூலம் எது எனப் பதிலளிப்பவர்களிடம் கேட்டபோது, குறிப்பிட்டுக் கூறும் விதத்தில் இணையத்தளமே முக்கியமானதும் மிகவும் நம்பகமானதுமான தகவல் மூலமாக 18.3% பதிலளிப்பவர்கள் குறிப்பிட்டார்கள். அதேநேரம் 16% பதிலளிப்பவர்கள் பேஸ்புக் என்பதனைக் குறிப்பிட்டுக் கூறினர். 40.3% பதிலளிப்பவர்களுக்கு அவர்களது பிரதான மற்றும் நம்பகமான மூலம் தனியார் ஊடகங்களின் தொலைக்காட்சி அலைவரிசைகளாக இருந்தன.

42.2% பதிலளிப்பவர்கள் அரசாங்க அமைச்சர்கள், மக்களுடன் இடைத் தொடர்பாடுவதற்கு சமூக ஊடகத்தை உபயோகிப்பது அவசியம் என நம்புகின்றனர். அதேநேரம், 26.2% பதிலளிப்பவர்கள் அது ஓரளவு அவசியம் என நம்புகின்றனர்.

 

http://maatram.org/?p=4208

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.