Jump to content

வண்ண சிங்கள


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

"நெக்ஸ்ட் பிளிஸ்" என்ற அழ‌கிய குரலுக்கு சொந்தகாரியான அழகி என்னை அழைக்க நானும் "‍‍‍ஹாய்" என்று சொல்லியபடியே இருக்கிற பல் எல்லாத்தையும் காட்டிகொண்டு பயணப்பொதிகளை இழுத்து கொண்டு அவள் இருக்கும் கவுன்டர் அருகே சென்று கையில் ஆய‌த்தமாக வைத்திருந்த பாஸ்போர்டையும் விமான டிக்கட்டையும் கொடுத்தேன் .புன்முறுவலுடன் வாங்கியவள் சகலதும் ச‌ரியாக இருக்கின்றதா என பார்த்தபடியே பொதிகளை நிலுவையில் வைக்கும்படி சொன்னாள் .

த‌ராசு 35 கில்லோ காட்டியது.முப்பது கில்லோ தான் கொண்டு போகமுடியும் மிகுதியை நீங்கள் எடுக்க வேணும் என்றாள்.கை பொதியில் எவ்வள‌வு இருக்கு என்று பார்ர்ப்போம் அதையும் தராசில் வையுங்கோ என்றாள் . மெதுவாக தூக்கி வைத்தேன் அது ஒன்பது கில்லோ என்பதை காட்டியது.கை பொதி ஏழு கில்லோ தான் அனுமதிப்போம் அதையும் குறையுங்கோ என்றாள் . சிறிலங்கா விமானநிலையத்தில் ஒருகாலத்தில் கொஞ்ச காசை கொடுத்தால் கண்டு கொள்ளாமல் விட்டிடுவாங்கள் , அறுவாங்கள்  இப்ப கண்ட இடத்திலயும் கமராவை பூட்டி வைச்சிருக்கிறாங்கள் இதனால் வாங்கிறவங்களுக்கும் சுதந்திரமில்லை கொடுக்கிறவங்களுக்கும் சுதந்திரமில்லை என்று திட்டியபடியே சாமான்களை குறைச்சு போட்டு மீண்டும் நிலுவையில் வைத்தேன் 31 கில்லோ காட்டியது. இந்த தடவை கைப்பொதியை எடை பார்க்கும் படி கேட்கவில்லை.பொதிகளுக்கு லெபிள்களை ஒட்டிய அழ‌கி தங்க்யூ என்று சொல்லி பாஸ்போர்ட்டையும் போர்டிங்க் பாஸையும் தந்தாள் ..நானும் பதிலுக்கு நன்றி சொல்லி போட்டு  கைப்பொதியை தூக்கியபடி இடத்தை விட்டு நக‌ர்ந்தேன்.

குறைத்த நாலு கில்லோவையும் எப்படியும் கை பொதிக்குள் அடைந்து கொண்டு செல்வது என முடிவெடுத்தேன்.ஏற்கனவே அதனுள் இடம் இருந்தபடியால் இந்த நாலுகில்லோவையும் உள்ளே திணிக்ககூடியதாக இருந்தது.

குடிவரவு,குடியக‌ழ்வு விண்ணப்படிவத்தை நிரப்பி எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு கைப்பையை தோளில் மாட்டிய‌படி  உள்ளே சென்று வரிசையில் நின்றேன்.அங்கும் ஒரு பெண் அதிகாரி புன்முறுவலுடன் நெக்ஸ்ட் என்றாள்.பாஸ்போர்ட்டில் உள்ள படத்துடன் எனது முகம் பொருந்துகிறாத என பார்த்த பின்பு  கடவுச்சீட்டில்  சீல் குத்தி  தந்தாள் .அவ‌ளுக்கும் நன்றியை சொல்லிவிட்டு அடுத்த வரிசையில் நின்றேன்.அது பொதிகளை எக்ஸ்ரே செய்யும் லைன்.எனக்கு முன்னாள் வெள்ளையின‌ தம்பதியினர் இருவர் நின்றனர்.அவர்களின் கையில்  தண்ணீர் போத்தல் இருந்தது .அதை உள்ளே கொண்டு செல்ல முடியாது  என அதிகாரி சொல்ல தம்பதியினர் மனஸ்தாபட்டனர்.

உள்ளே கொண்டு செல்ல வேணுமென்றால் தண்ணீர் கொஞ்சத்தை குடித்து காட்டவும் என அதிகாரி கேட்க அவர்கள் குடித்துகாட்டினார்கள் ,அதன்பின்பு உள்ளே கொண்டுசெல்ல அதிகாரி அனுமதித்தார்.

என்னடாப்பா தண்ணீர் போத்தல் கொண்டு செல்வதற்கு இவ்வளவு நடப்பு காண்டுகின்றனர் என மனதில் எண்ணிகொண்டிருக்கும் பொழுது எனது முறை வந்தது .பெல்ட்,பேர்ஸ் போன்ற‌வற்றை  ஒரு டிரேயில் வைத்து , கைபொதியையும் எக்ஸ்ரே  மேசினுடாக அனுப்பிவிட்டு,நான் எக்ஸ்ரே கதவுடாக சென்றேன்.

தம்பி நல்ல பிள்ளை குண்டுகள் ,வெடிபொருட்கள் ,துப்பாக்கி அவனிட‌மில்லை என்று மெசின் தன‌து மெளன‌த்தின் மூலம் காட்ட‌ அதிகாரி உள்ளே செல்ல அனுமதித்தார்.நான் பெல்ட்,பேர்ஸ்,கைபொதியை எடுக்க போக இன்னுமொரு அதிகாரி கைபொதியை திறந்து காட்டும்படி கேட்டார்.உள்ளிருந்த சென்ட் போத்தலை எடுத்து எவ்வளவு மில்லி என  பார்த்துவிட்டு 100 மில்லி என்றபடியால் கைப்பொதியை கொண்டு செல்ல அனுமதித்தார்.

போர்டிங்க் பார்சில் குறிப்பிட்ட் கேட் இலக்கத்தை கண்டுபிடித்து வாசலில் நின்ற அழ‌கியிடம் போர்டிங் பார்சை கொடுத்து விமானத்தில் ஏறினேன்.

வெல்கம்,யுஅ சீட் ஒன் ரைட் என்றாள்,அவளுக்கும் ஒரு தங்க்யூ சொல்லி போட்டு எனது இருக்கையில் இருந்தேன்.நடை பாதையின் அருகில் உள்ள சீட் என்றபடியால் எனக்கு மிகவும் ச‌ந்தோசமாக இருந்தது.ஏன் என்றால் விமானபணிப்பெண்களை அடிக்கடி அழைத்து தேவையானதை வாங்க‌லாம்,அத்துடன் இயற்கை உபாதைகளுக்கு செல்வதென்றாலும் மற்றவ‌ர்களிடம் "எக்ஸ்கியுஸ் மீ" என்று பல்லிக்காமல் சென்று வரலாம். என்ன தான் வயசு போனாலும் பெண்களை கண்டால் ஒருக்கா பார்க்கதான் மனசு சொல்லுது.மனசின் ஆசையை நிறைவேற்ற சிங்கை அழகிகளை பார்த்து மனசை சமாதானப்படுத்திய பின்பு,தொலைக்காட்சி யில் படங்கள் பார்க்க முடிவு செய்தேன்.பிளேனிலிருந்து  தமிழ் படம் பார்த்தால் கெளரவ குறைச்சல் என்றபடியால் இங்கிலிஸ் படம் ஒன்றை பார்க்க‌முடிவுசெய்து முன்னால் இருந்த தொலைகாட்சிபெட்டியை விரல்களால் தொட்டு விறும்பிய சனலை அழுத்தி ஒரு ஆங்கில படத்தை போட்டு காதினுள் இய‌ர்பொனை செருகிகொண்டேன். விமானம் எயர்பொக்ட்டுக்குள் போகும் பொழுது சிறிது ஆட்டம் போட அடியேனுக்கு மனதில் பல எண்ணங்கள் தோண்றி  மறைந்தன.விமானிக்கு மூளையில் பிசகு என்றால் என்ன செய்வது,விமானத்தை யாராவது கடத்தினால்,கீழேயிருந்து யாராவது ஏவுகனையால் தாக்கினால் போன்ற எண்ணங்கள் உண்டாக எல்லாம் வல்ல சிட்னிமுருகனை நினைத்து" முருகா யூ ஆர் கிரேட் "என்று ஆங்கிலத்தில் வணங்கி ,ஊரில இருக்கும் சிவனை நினைத்து ஓம் நமச்சிவாயா சொல்லி மனத்தை தெற்றிகொண்டு கண்யர்ந்து போனேன்.

'சேர் யூ லைக் கொவி,யூஸ்"

இனிமையான குரலை கேட்டு திடுக்கெட்டு எழுந்து "ஸ்கொட்ச் ஒன் த ரொக்"என்றேன்.

ஒரு சிறிய பிளக்லேபிள் போத்தலும் ஐஸ் கட்டிகள் நிரப்பிய‌ கிளாசையும் ,அத்துடன் பிநட்ஸ் பக்கற்றையும் சிரித்த முகத்துடன் தந்து சென்றாள்.

படத்தை பார்த்தபடியே பழரசத்தைரசித்து பருகினேன்.மீண்டும் ஒரு பெக் எடுக்க வேண்டும் போல‌ இருக்க ,படம் பார்த்த கண்கள் விமானபணிப்பெண்ணை தேடியது.எனது கண்களின் தேடலுக்கு பலன் கிடைத்து.

"கான் ஐ ‍ஹாவ் வன் மொர் டிரிங்க்"

"சுயர்"

"தங்க்யூ"

மீண்டும் ரசித்து பருகிகொண்டிருக்கும் பொழுது வண்டிலை தள்ளி கொண்டு வந்தவள்,

"சேர் வட் யூ லைக் "

இரண்டு மாசால தோசை ஒரு தயிர் வடையும் என்று கேட்டாள் தந்திடுவாளாக்கும் என மனம் நினைக்க ,அவளோ என‌க்கு தான் கேட்டது புரியவில்லை என்ற எண்ணத்தில் தங்களிடம் உள்ள இரண்டு சாப்பாட்டை சொன்னால் அதில் சிக்கன் என்பது மட்டும் எனக்கு புரிந்தபடியால் அதையே திருப்பி சொல்ல சாப்பாட்டை தந்து புன்னகையும் இலவசமாக தந்து சென்றாள்..

சாப்பாட்டை முடித்தவுடன் அடுத்த தூக்கத்துக்கு தயாரானேன.

விமானி விமானத்தை இறக்குவத‌ற்குறிய அறிவிப்புக்களை செய்தார் விமானபணியாட்களும் அதற்குறிய ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தார்கள் .நானும் புறக்கணி சிறிலங்கா என்ற கொள்கையை துறந்திட்டு "அப்பே லங்கா,நமோ நமோ மாதா"என்ற கொள்கையை அறவணைத்து கொண்டு இறங்கினேன்...ஆயுதப்படையினர் ஆயுதமின்றி நின்றனர் ...ஓஓஓஒ...சமாதானம் வந்திட்டோ அதுதான் ஆயுதமின்றி ஆயுதப்படையினர் என்று நினைத்துகொண்டு எனது பொதிகளை பார்த்துகொண்டிருந்தேன்.டேய் புறம்போக்கு சமாதானம் வந்தால் ஏன்டா ஆயுதமின்றிய ஆயுதப்படை மனசாட்சி ஒரு கேள்வியை கேட்க திகைத்து போய் அதுதானே என்று மீண்டும் பதில் கேள்வியை மனசாட்சி கேட்டுது.... இப்படியான இக்கட்டான‌ நேரங்களில்.."ஒம் நமச்சிவாயா"சொல்லி மன‌தை சமாதானப்படுத்துவதுண்டு.அப்படி சொல்லிகொண்டு மனதை சமாதனப்படுத்தும் பொழுது எனது பொதி போன்று ஒன்று  வர அதை எடுத்து தயாராக‌ இருந்த ரொலியில் எற்றி தள்ளும் பொழுது

" மாத்தையா பொட்டாக் இன்ட மெக்க மகே பாக் " என்ற குரல் கேட்டு

அறைகுறை சிங்களம் தெரிந்தபடியால் எதோ பொதிப்பிரச்சனை, பாக்கை மாறி கொண்டுவந்திட்டன் போல  என்று போட்டு பாக்கை பார்த்தேன் என்ட பொதியில் இருந்த கீறல்கள் அந்த பொதியில் இல்லை என்பது புலப்பட்டது. பொதியின் சொந்தக்காரியின் குரலை கேட்டு அவளை பார்த்தேன்.ஆகா ஆகா ஆஅ காஆகா ....."ஒயாகே பாக் மேக்க எனேத"என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தேன் சிங்களபாரம்பரிய உடை உடுத்த ஒரு முப்பதைந்து வயது மதிக்க வண்ண சிங்களத்தி என்னருகில் நின்றாள்.....அர‌சியலும் ......புலம் பெயர் புண்ணாக்கும்...சிங்கையூருச்சியா?சிங்களத்தியா? தமிழிச்சியா?.

Link to comment
Share on other sites

கதை நல்லாத்தான் போகுது. தொடருவீங்களா அல்லது முற்றுமா.


பெண்கள் எமது கண்கள் போன்றவர்கள். ஆனாலும் ஆரம்பம் முதலே பெண்களாவே சந்திப்பது கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு. எங்கோ மச்சம் இருக்கு, எங்கென்று சொன்னால் நானும் அங்கு ஸ்ரிக்கர் ஒட்டலாம். புத்தா(உங்களைச் சொல்லவில்லை ஒறிஜினல் புத்தரைச் சொனேன்) உனது திருவிளையாடலா இது. 

இயல்பான எழுத்தோட்டம். தொடர்ந்து எழுதுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

கொஞ்சம் இழுத்தமாதிரி தெரியுது எனக்கு..

(உங்களுடைய பழைய கதைகளின் சுருக்கத்தாலோ என்னமோ)

கடைக்கு சிங்களப்பெண்கள் வரும் போது 

இனி எனக்கும் இது ஞாபம் வரும்..

அர‌சியலும் ......புலம் பெயர் புண்ணாக்கும்...சிங்கையூருச்சியா?சிங்களத்தியா? தமிழிச்சியா?.

தொடர்ந்து கிறுக்குங்கள் புத்தர்

Link to comment
Share on other sites

கதை அருமை சகோ புத்தன்... தொடர்ந்து எழுதுங்கள்!!! கிழமைக்கு ஒரு கதையாவது குறைந்தது எழுதுங்கள்!! வாசிக்க ஆவல் :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கேயுரிய அந்த நளினம் கதை முழுதும் இழையோடுகின்றது....! தொடர்ந்து எழுதுங்கள்...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமாக புத்தனின் கதையில் இருந்து ஏதோ ஒண்டு மிஸ்பண்ணுகிறது என்று நினைக்கின்றேன்! ஆகா கண்டுபிடித்துவிட்டேன்.  <_< புத்தனின் கதைகளில் நக்கல் நளினத்துடன் சமூகத்திற்கான ஒரு செய்தியும் இருக்கும். இன்று அந்த செய்தியைக் காணவில்லை. ஒருவேளை சிங்களத்திகள் அழகென்ற செய்தியை சொல்லுகின்றாரோ தெரியவில்லை.  :rolleyes:  மற்றும்படி கதைசொல்லும் பாங்க்ம் எழுத்துநடையும் சூப்பர்!tw_blush:

Link to comment
Share on other sites

உங்களை மாதிரித்தான் எல்லாரும் ,

83 கலவரத்தின் போது லண்டனில்  வெட்ட வேண்டும் கொத்த வேண்டும் என்று நின்ற பலர் அத்துலத்முதலியின்  அழகிய உறவு ஒன்று வந்து சேர அதே கூட்டம் தான் பின்னால் அலைந்தது .

நல்ல யதார்த்தமான கதை புத்தன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானப் பயணத்தின் போது ஏற்படும் சம்பவங்களை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.
நானே ஸ்ரீ லங்கனில் பறந்து ~ கட்டுநாயக்கா தளத்தில் இறங்கியது போல ஒரு உணர்வு.
அப்படியே கட்டுநாயக்கா, சீதுவ, ஜாஎள,  வத்தள , பிட்ட கொட்டுவ ... என்று உங்கள் பயணக் கதையை தொடருங்கள் ... 

"அம்மா ப்பா சிங்கள படு கேன ...கியளா வேடக் நஎ சகோதரயா ..."
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்! சும்மா சுண்டி விட்டமாதிரி ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறியள்.....நான் நெடுக சொல்லுற மாதிரி நீங்கள் ஒரு பேய்க்காய் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானப் பயணத்துக்குள்ள ...இவ்வளவு விசயங்கள் இருக்குது எண்டு இண்டைக்குத் தான் தெரியும்!

அன்பையும், எழிலையும் அள்ளித் தருகின்றது.. எயார் லங்கா .. என்ற கொச்சைத் தமிழ் 'வனக்கம்' காலத்தில்.. ஆரம்பித்த 'பறப்பு'.. இன்று வரை தொடர்கின்றது!

இவ்வளவு நாளும்... பேய்க்குஞ்சு மாதிரி... கோணர் சீற்றில பயணித்து... எனது காலத்தை வீணாக்கி விட்டதாக இப்போது உணர்கிறேன்! இந்த 'உரசல்' விஷயம்... இது வரை யாரும் சொல்லித் தரவே இல்லை!

சிங்களப் பெண்கள் அன்பை.. வெளிக்காட்டும் விதமே தனித்துவமானது தான்! எங்கள் பெண்களும் தான் அன்பைக் காட்டுகிறார்கள்! ஆனால்.. வார்த்தைகளால் வெளிப்படுத்துவது மிகவும் குறைவு! எப்போதாவது வருகின்ற 'நீலச் சந்திரனைப்' போலவே அவர்களது ..அன்பு வெளிக்காட்டல்' அமைகின்றது!

உங்களது கதையில்.. ஆங்கிலமும்.. சிங்களமும் கலந்து..இருந்தாலும்.. உங்கள் எழுத்து நடை.. அதை ஒரு 'உறுத்தலாகக்' காட்டாமல் கதையை இயல்பாக நகர்த்திச் செல்வது உங்கள் தனித்துவம்!

இப்போதெல்லாம்.. புத்தன்  'கிறுக்கல்' நிலையைத் தாண்டி... எழுத்தாளன் என்ற நிலைக்கு வளர்ந்து விட்டான் என்றே நினைக்கத் தோன்றுகின்றது!

தொடர்ந்து எழுதுங்கள், புத்தன்!

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நளினம் கலந்த இயல்பான எழுத்து நடை புத்தனுக்கு உாிய தனித்தன்மை. கதையை தொடருங்கள். செய்திக்காகக் காத்திருக்கும் எம் எதிா்பாா்ப்பை ஏமாற்றாமல்....... , தொடருங்கள் புத்தன் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/01/2016 at 2:41 AM, ஜீவன் சிவா said:

கதை நல்லாத்தான் போகுது. தொடருவீங்களா அல்லது முற்றுமா.


பெண்கள் எமது கண்கள் போன்றவர்கள். ஆனாலும் ஆரம்பம் முதலே பெண்களாவே சந்திப்பது கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு. எங்கோ மச்சம் இருக்கு, எங்கென்று சொன்னால் நானும் அங்கு ஸ்ரிக்கர் ஒட்டலாம். புத்தா(உங்களைச் சொல்லவில்லை ஒறிஜினல் புத்தரைச் சொனேன்) உனது திருவிளையாடலா இது. 

இயல்பான எழுத்தோட்டம். தொடர்ந்து எழுதுங்கள். 

எல்லாம் அவன் செயல் அந்த ஒறிஜினல் புத்தன் செயல்

On 30/01/2016 at 3:11 AM, விசுகு said:

ம்ம்ம்

கொஞ்சம் இழுத்தமாதிரி தெரியுது எனக்கு..

(உங்களுடைய பழைய கதைகளின் சுருக்கத்தாலோ என்னமோ)

கடைக்கு சிங்களப்பெண்கள் வரும் போது 

இனி எனக்கும் இது ஞாபம் வரும்..

அர‌சியலும் ......புலம் பெயர் புண்ணாக்கும்...சிங்கையூருச்சியா?சிங்களத்தியா? தமிழிச்சியா?.

தொடர்ந்து கிறுக்குங்கள் புத்தர்

நன்றிகள் விசுகு எல்லாம் உங்களது பாராட்டுக்கள் தான் என்னை தொடர்ந்து கிறுக்க வைக்கின்றது....

On 30/01/2016 at 5:51 AM, மீனா said:

கதை அருமை சகோ புத்தன்... தொடர்ந்து எழுதுங்கள்!!! கிழமைக்கு ஒரு கதையாவது குறைந்தது எழுதுங்கள்!! வாசிக்க ஆவல் :)

 

நன்றிகள் மீனா ....ஒரு கிழமைக்கு ஒரு கதை(கிறுக்கல்) என்பது சாத்தியமில்லை ..மாதத்திற்கு ஒன்று தர முயற்சிக்கிறேன்

On 30/01/2016 at 6:31 AM, suvy said:

உங்களுக்கேயுரிய அந்த நளினம் கதை முழுதும் இழையோடுகின்றது....! தொடர்ந்து எழுதுங்கள்...!!

நன்றிகள் சுவி ....உங்களது பாராட்டுக்கள் தான் எனது விட்ட‌மின்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/01/2016 at 6:31 AM, suvy said:

 

On 30/01/2016 at 6:47 AM, வாலி said:

வழக்கமாக புத்தனின் கதையில் இருந்து ஏதோ ஒண்டு மிஸ்பண்ணுகிறது என்று நினைக்கின்றேன்! ஆகா கண்டுபிடித்துவிட்டேன்.  <_< புத்தனின் கதைகளில் நக்கல் நளினத்துடன் சமூகத்திற்கான ஒரு செய்தியும் இருக்கும். இன்று அந்த செய்தியைக் காணவில்லை. ஒருவேளை சிங்களத்திகள் அழகென்ற செய்தியை சொல்லுகின்றாரோ தெரியவில்லை.  :rolleyes:  மற்றும்படி கதைசொல்லும் பாங்க்ம் எழுத்துநடையும் சூப்பர்!tw_blush:

சீ சீ ....தமிழ்தான் அழகு.....தெமிளு படு கொந்தாய்..:rolleyes:.நன்றிகள் வாலி

On 30/01/2016 at 6:47 AM, வாலி said:

 

On 30/01/2016 at 6:47 AM, வாலி said:

 

On 30/01/2016 at 6:57 AM, arjun said:

உங்களை மாதிரித்தான் எல்லாரும் ,

83 கலவரத்தின் போது லண்டனில்  வெட்ட வேண்டும் கொத்த வேண்டும் என்று நின்ற பலர் அத்துலத்முதலியின்  அழகிய உறவு ஒன்று வந்து சேர அதே கூட்டம் தான் பின்னால் அலைந்தது .

நல்ல யதார்த்தமான கதை புத்தன் .

நன்றிகள் அர்ஜூன் ....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.

On 30/01/2016 at 10:51 AM, Sasi_varnam said:

விமானப் பயணத்தின் போது ஏற்படும் சம்பவங்களை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.
நானே ஸ்ரீ லங்கனில் பறந்து ~ கட்டுநாயக்கா தளத்தில் இறங்கியது போல ஒரு உணர்வு.
அப்படியே கட்டுநாயக்கா, சீதுவ, ஜாஎள,  வத்தள , பிட்ட கொட்டுவ ... என்று உங்கள் பயணக் கதையை தொடருங்கள் ... 

"அம்மா ப்பா சிங்கள படு கேன ...கியளா வேடக் நஎ சகோதரயா ..."
  

நன்றிகள் சசி.....இப்ப கடுகதி வீதியை போட்டபிறகு வத்தளை ,ஜாஎல "ப‌டுகளை" பார்க்க ஏலாமல் கிடக்கு.....:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/01/2016 at 11:38 AM, குமாரசாமி said:

புத்தன்! சும்மா சுண்டி விட்டமாதிரி ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறியள்.....நான் நெடுக சொல்லுற மாதிரி நீங்கள் ஒரு பேய்க்காய் :cool:

நன்றிகள் கு.சா ஐயா உங்களின் பாராட்டுக்கள்தான் எனது கிறுக்களுக்கு ஊக்கமாத்திரை

On 31/01/2016 at 1:50 PM, புங்கையூரன் said:

 

இப்போதெல்லாம்.. புத்தன்  'கிறுக்கல்' நிலையைத் தாண்டி... எழுத்தாளன் என்ற நிலைக்கு வளர்ந்து விட்டான் என்றே நினைக்கத் தோன்றுகின்றது!

தொடர்ந்து எழுதுங்கள், புத்தன்!

 

  

சிங்களத்தியை விட இந்த பாராட்டு என்னை உச்சத்திற்கே கொண்டு போயிற்று....நன்றிகள் புங்கை அண்ணா

On 31/01/2016 at 8:36 PM, அபராஜிதன் said:

புலம்பெயர் ஈழத்து இலக்கியவாதி புத்தன் வாழ்க வாழ்க :D

நன்றிகள் அபாஜிதன்....ஒரு சிறு திருத்தம்...சிட்னி இலக்கியவாதி....புத்தன் வாழ்க‌

On 31/01/2016 at 0:42 AM, Kavallur Kanmani said:

நளினம் கலந்த இயல்பான எழுத்து நடை புத்தனுக்கு உாிய தனித்தன்மை. கதையை தொடருங்கள். செய்திக்காகக் காத்திருக்கும் எம் எதிா்பாா்ப்பை ஏமாற்றாமல்....... , தொடருங்கள் புத்தன் பாராட்டுக்கள்

நன்றிகள் காவ‌லூர் கண்மணி .....சிறு சிறு அத்தியாயமாக தொடர்கிறேன்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லில்லாத பொக்கை வாயையே வாயெல்லாம் பல்லென்று நினைக்கிற வயதில முப்பத்தஞ்சு வயசு கூட பதினாறு வயசாத்தான் தெரியும். tw_blush:tw_blush:tw_blush: ஸ்கொட்ச் இறங்கினால் முப்பத்தஞ்சு ஐம்பத்தஞ்சு ஆகத் தெரிந்திருக்கும். அப்ப எல்லாம் கொள்கையளும் திரும்ப வந்திருக்கும்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்து பயணிகளை திருப்தி படுத்தவதற்காகவோ என்னவோ எல்லா இடங்களிலும் அழகிய பெண்களையே வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

இம் முறை பயணத்தில் நானும் ரொம்ப படித்துவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.2.2016 at 0:12 AM, கிருபன் said:

பல்லில்லாத பொக்கை வாயையே வாயெல்லாம் பல்லென்று நினைக்கிற வயதில முப்பத்தஞ்சு வயசு கூட பதினாறு வயசாத்தான் தெரியும். tw_blush:tw_blush:tw_blush: ஸ்கொட்ச் இறங்கினால் முப்பத்தஞ்சு ஐம்பத்தஞ்சு ஆகத் தெரிந்திருக்கும். அப்ப எல்லாம் கொள்கையளும் திரும்ப வந்திருக்கும்.!

எங்கடை நிலைமை தெரிஞ்சும் வேணுமெண்டு வெறுப்பேத்துறார்mad02171.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.