Jump to content

காதலித்துப் பார்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்துப் பார்..

கடதாசி வீணாகும்

கல்லாப்பெட்டி காலியாகும்..

கண்ணீர் பெருகும்

கவலை மிஞ்சும்..

காதலித்துப் பார்..

கடற்கரை வெளியில்

கருவாடாய் காய்வாய்

கள்ளமில்லா உன் நெஞ்சில்

களவும் பொய்யும் குவியும்.

காதலித்துப் பார்..

காற்சட்டைப் பொக்கட் கிழிஞ்சு போகும்

காவாலியும் உன்னைச் சுரண்டுவான்..

காரில் பெற்றோல் தீரும்

காண்போர் முகம் சுழிக்கும்...

காதலித்துப் பார்..

கிரகம் பிடிக்கும்

கிருபை இழக்கும்..

கறுமம் இவன் பிறப்பென்று

கவிதை சுயம்பாடும்.

காதலிக்காமல் பார்..

உன்னை நீயே நேசிக்கப் பழகுவாய்

உள்ளம் திடமாகும்

உழைப்பு இதமாகும்

உன்னை நீ அறிவாய்

உலகம் உன்னில்

உருளும்...!!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்...அருமையான கவிதை நெடுக்கர்! அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள். tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்துப் பார்....!

 

இரவுகள் முழுவதும்...,

கனவுகளால் நிறைந்திருக்கும்!

 

இரத்த உறவுகள் கூட..,

தூரத்துச் சொந்தங்களாகும்!

 

உனக்கென....,

ஒரு வீடு, ஒரு மனைவி..,

ஒரு சுற்றம் என்று....

ஒரு மன்னனைப் போன்ற...,

மனநிலை தோன்றும்!

 

உடையில் ஒரு மாற்றம்,

உடலில் ஒரு மாற்றம்,

நடையில் ஒரு துள்ளல்...,

உன்னை நீயே காதலிக்கத் தொடங்குவாய்!

 

நீ அழுகின்ற போது,

உனது கண்ணீரை ஏந்திட..,

நீ சிரிக்கின்ற போது,

சேர்ந்து சிரித்திட....,

இன்னுமொரு ஜீவன்...

உனக்காகக் காத்திருக்கும்..!

 

 

நெடுக்கர்... கோவிக்காதையுங்கோ....!

 

எனது தனிப்பட்ட காதல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளேன்!

 

உங்கள் கவிதை நல்லாயிருக்கு..!

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, புங்கையூரன் said:

காதலித்துப் பார்....!

 

இரவுகள் முழுவதும்...,

கனவுகளால் நிறைந்திருக்கும்!

(உண்மைச் சொல்லனும்.. காதலிக்க முதல் கனவே வந்ததில்லையா..??!.. காதலிச்ச பின் எத்தனை தடவை அந்தக் கனவை மீண்டும்.. கண்டிப்பீங்க)tw_blush:

 

இரத்த உறவுகள் கூட..,

தூரத்துச் சொந்தங்களாகும்!

(உண்மைச் சொல்லனும்..  இது எவ்வளவு புளுகு. அம்மாவும் அப்பாவும் அண்ணனும் தங்கையும் தூரமாகிட்டாய்ங்களா...??! அப்ப வந்தவ பிச்சாளுறான்னு அர்த்தம்.)tw_blush:

 

உனக்கென....,

ஒரு வீடு, ஒரு மனைவி..,

ஒரு சுற்றம் என்று....

ஒரு மன்னனைப் போன்ற...,

மனநிலை தோன்றும்!

(உண்மைச் சொல்லனும்.. நான் உழைச்சு வாங்கின்னா தான் என் வீடு.. நான் வேலை தேடி சம்பளம் வாங்கினாத்தான்.. கல்யாணம் காட்சியே.. இதில நான் மனைவி வந்த பின் தான் மன்னன் என்பது செமக் காமடி. காதலிக்க முதல் நானே சக்கரவர்த்தி.)tw_blush:

 

Quote

 

உடையில் ஒரு மாற்றம்,

உடலில் ஒரு மாற்றம்,

நடையில் ஒரு துள்ளல்...,

உன்னை நீயே காதலிக்கத் தொடங்குவாய்!

( உண்மைச் சொல்லனும்.. காதலிக்க முதல் இருந்த செழிப்பு.. அழகு.. உடை.. உடல்.. சிகை அலங்காரம்.. காதலிச்சு கல்யாணமான பின் எங்கண்ணை இருக்கு. அவனவன் 2 வேலை.. 3 வேலைகன்னு நித்திரைக்கு வழியில்லாமல் பாதியில செத்துத் தொலையிறான்.. நீங்க என்னடான்னா..)tw_blush:

 

நீ அழுகின்ற போது,

உனது கண்ணீரை ஏந்திட..,

நீ சிரிக்கின்ற போது,

சேர்ந்து சிரித்திட....,

இன்னுமொரு ஜீவன்...

உனக்காகக் காத்திருக்கும்..!

(உண்மைச் சொல்லனும்.. நீங்க ஊமையா அழுகிற போது உங்களை தேற்றின சினிமாப்பாடல் அளவுக்கு உங்களோட கூட வந்தவ எத்தனை வாட்டி தேற்றி இருப்பாங்க. கூட காயப்படுத்திட்டு.. குறைவா தேற்றிறதுக்கு எதுக்கண்ணே இன்னொரு ஜீவன். அதிலும் தானே தனியனாக இந்த ஜீவன் கூட சகிக்கவும் சுகிக்கவும் செய்யுமே. சுற்றம் சூழல் நட்பு என்று கூட சுயமாளுமே.)tw_blush:

நெடுக்கர்... கோவிக்காதையுங்கோ....!

எனது தனிப்பட்ட காதல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளேன்!

 

உங்கள் கவிதை நல்லாயிருக்கு..!

 

நன்றி புங்கையண்ணா மற்றும் கு.சாண்ணா... மற்றும் ஆக்கத்தைப் படிச்சு விரும்பின உறவுகளுக்கும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியல்ல குசா அண்ணா எங்கேயோ போயீட்டீங்கள்...ஒவ்வொரு வருடமும் இப்படியான நேரங்களில வந்து கண்ணீர் வடிக்கிறதே நெடுக்கருக்கு வேலையாப் போயிட்டுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்சின்ர கவிதையையும் , புங்கையின் கவிதையையும் பார்த்தால் ,முதல்ல ஒரு காதலியைத் தேடிப் பிடிக்க வேணும்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

முடியல்ல குசா அண்ணா எங்கேயோ போயீட்டீங்கள்...ஒவ்வொரு வருடமும் இப்படியான நேரங்களில வந்து கண்ணீர் வடிக்கிறதே நெடுக்கருக்கு வேலையாப் போயிட்டுது

அக்கோய் கண்ணீர் விட காதல் ஒன்றும் ஜீவனோபாயம் அல்ல. வெறும் உயிரின் உணர்ச்சி. உயிர்களில் எழும் எத்தனையோ உணர்ச்சிகளில் அதுவும் ஒன்று.. தோன்றி மறைஞ்சிடும். அதுக்காக உலகில் அழுபவன்.. முட்டாள். அதை அதை சரியான சந்தர்ப்பத்தில் சொல்லத்தான் இது. tw_blush:

2 hours ago, suvy said:

நெடுக்ஸ்சின்ர கவிதையையும் , புங்கையின் கவிதையையும் பார்த்தால் ,முதல்ல ஒரு காதலியைத் தேடிப் பிடிக்க வேணும்....!

எனி நீங்க காதலி பிடிச்சு.. கதலி தான் பிடிக்கலாம் சுவி அண்ணா. tw_blush:

கருத்துப் பகிர்விற்கும் விருப்புப் பகிர்விற்கும் நன்றி சொந்தங்களே. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கலைஞன் said:

'யாரை? எவர்? எப்போது? எப்படி? எங்கே? காதலிக்கின்றார் என்பதை பொருத்தது!' ??

யாருக்கு.. எது.. எப்போது.. எவ்வளவு.. எங்கே பசிக்கிறது என்பது போல என்றீங்க. கொடுமை. tw_blush:

கருத்துக்கு நன்றி கலைஞன்.. நீண்ட நாட்களின் பின் தங்கள் கருத்தைக் காண்பதில் மகிழ்ச்சி. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14.2.2016 at 4:08 PM, nedukkalapoovan said:

காதலித்துப் பார்..

கடதாசி வீணாகும்

கல்லாப்பெட்டி காலியாகும்..

கண்ணீர் பெருகும்

கவலை மிஞ்சும்..

காதலித்துப் பார்..

கடற்கரை வெளியில்

கருவாடாய் காய்வாய்

கள்ளமில்லா உன் நெஞ்சில்

களவும் பொய்யும் குவியும்.

காதலித்துப் பார்..

காற்சட்டைப் பொக்கட் கிழிஞ்சு போகும்

காவாலியும் உன்னைச் சுரண்டுவான்..

காரில் பெற்றோல் தீரும்

காண்போர் முகம் சுழிக்கும்...

காதலித்துப் பார்..

கிரகம் பிடிக்கும்

கிருபை இழக்கும்..

கறுமம் இவன் பிறப்பென்று

கவிதை சுயம்பாடும்.

 

 

காதலித்தவளையே கல்யாணம் செய்து பார்
இத்தனையும் ஒரு பொருட்டாகவே  தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் பஸ்ஸைத் தவறவிட்டுவிட்டார். இனி யாராவது இரக்கப்பட்டு ஏதாவது செய்தால்தான் 'அது' உண்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நெடுக்ஸ் பஸ்ஸைத் தவறவிட்டுவிட்டார். இனி யாராவது இரக்கப்பட்டு ஏதாவது செய்தால்தான் 'அது' உண்டு!

சொந்தக் கார்ல போற நெடுக்ஸுக்கு எதற்கு பஸ். tw_blush:

3 hours ago, வாத்தியார் said:

காதலித்தவளையே கல்யாணம் செய்து பார்
இத்தனையும் ஒரு பொருட்டாகவே  தெரியாது

ஏன்னா.. இதை விட மோசமானதுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் இல்லையா வாத்தியார் அண்ணா. tw_blush:

கருத்துச் சொன்ன உறவுகளை அனைவருக்கும் நன்றி. விருப்பம் தந்தவர்களுக்கும். tw_blush:

Link to comment
Share on other sites

நெடுக்கால போவானுக்கு காதலில் இப்படி ஒரு கோபமா?  அனுபவமா? அனலடிக்குது  கவிதை.

நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Sembagan said:

நெடுக்கால போவானுக்கு காதலில் இப்படி ஒரு கோபமா?  அனுபவமா? அனலடிக்குது  கவிதை.

நன்றி 

என்ன செண்பகன்.. கொஞ்சக் காலம் இடைவெளி விட்டு வந்து.. இப்படிக் கேட்கிறீங்க. நாங்க காதலுக்கு எதிரி எல்லாம் கிடையா. ஆனால் காதல் என்ற ஒன்று இந்த உலகில் இப்ப இல்லை என்று திடமா நம்பிறம். அது சங்க காலத்தோட செத்துப் போயிட்டுது. tw_blush:

கருத்துக்கு நன்றி நண்பரே. tw_blush:

Link to comment
Share on other sites

 

On 2/16/2016 at 4:35 PM, nedukkalapoovan said:

சொந்தக் கார்ல போற நெடுக்ஸுக்கு எதற்கு பஸ். tw_blush:

நானும்  கல்யாணம் கட்ட முதல்  சொந்த கார்தான். காரோட்டி கை வலித்த  காலமும் இருக்கு. . tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கா ளா ன் said:

 

நானும்  கல்யாணம் கட்ட முதல்  சொந்த கார்தான். காரோட்டி கை வலித்த  காலமும் இருக்கு. . tw_blush:

கை வலிக்கிற அளவுக்கெண்டால் கியர்பொக்ஸ் சூடேறியிருக்குமே smilie_car_150.gif

Link to comment
Share on other sites

 

 

1 hour ago, குமாரசாமி said:

கை வலிக்கிற அளவுக்கெண்டால் கியர்பொக்ஸ் சூடேறியிருக்குமே smilie_car_150.gif

என்டை காருக்கு  நல்ல cooling system இருந்தது.  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/02/2016 at 3:12 AM, கா ளா ன் said:

 

 

என்டை காருக்கு  நல்ல cooling system இருந்தது.  tw_blush:

 

On 18/02/2016 at 0:34 AM, கா ளா ன் said:

 

நானும்  கல்யாணம் கட்ட முதல்  சொந்த கார்தான். காரோட்டி கை வலித்த  காலமும் இருக்கு. . tw_blush:

 

அப்ப காளான் அண்ணன் இப்ப எல்லாம் அடிக்கடி கைகாட்டி கண்ட பஸ்ஸிலும் ஏறி இறங்கி போய்க்கிட்டு இருக்கிறாப் போல.

 

நக்கல் கருத்துக்கு நன்றி அண்ணன். tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.