Jump to content

'இந்திய அரசுதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது!' - ஈழத்திலிருந்து ஒரு குரல்...


Recommended Posts

'இந்திய அரசுதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது!' - ஈழத்திலிருந்து ஒரு குரல்...

 

“அவன் தணிந்த குரலில் கதைத்தான். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டுவிட்டுக் கதைத்தான். அந்த இடைவெளிக்குள் அகப்பட்டு,  அவஸ்தைப்பட்டு அவஸ்தைப்பட்டு வெளியே வந்தான். இரண்டு வார்த்தைகளுக்கிடையிலான மெளனத்தில் என் மனம் நசிந்தது. இது ஒரு வலி. பட்டால் மட்டும் புரியும் வலி.”
- இது ஈழத்தமிழர் குணா கவியழகன் எழுதிய ‘நஞ்சுண்டகாடு’ நாவலில் வரும் வரிகள்.

poet%20guna%20kaviyalagan.jpgஅவருடனான உரையாடலும் இப்படியானதாகத்தான் இருந்தது. ‘குணா கவியழகனின் படைப்புலக ஆய்வரங்கு’ நிகழ்வுக்காக நெதர்லாந்திலிருந்து, சென்னை வந்தவரை தொடர்பு கொண்டேன். 'இலக்கியம் பேசுவதாக இருந்தால் நாம் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆம், எனக்கு இலக்கியம் தவிர பேச வேறொன்றுமில்லை. சம்மதமா...?' என்றார்.

உடனே சம்மதித்தேன். குணா அவருடைய நாவல்களிலேயே அரசியல் பேசுபவர். ஆகவே, நிச்சயம் அது வெறும் இலக்கிய உரையாடலாக மட்டும் இருக்காது என்று நம்பியதால் சம்மதித்தேன்.

உங்களுக்கு குணா யாரென்று நான் முன்கூட்டியே கூறிவிட்டால், இந்த பேட்டியை படிக்க வசதியாக இருக்கும். ‘குணா கவியழகன்’ ஈழத்தமிழர். இந்த இன அடையாளம் மட்டும் அவருடையதல்ல. நஞ்சுண்டகாடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம் என மூன்று நாவல்களை எழுதியவர். ஊடகவியலாளர். தன் நாவல்கள் மூலம் விடுதலைப் புலிகளையும் நேர்மையாக விமர்சனம் செய்தவர். இப்போது புலம்பெயர்ந்த தமிழர் என்ற அடையாளத்துடன் நெதர்லாந்தில் வசித்து வருபவர்.
 

வெயில் கக்கும் ஒரு முன்பகலில், சென்னை பெருமழையில் மோசமாக பாதிக்கப்பட்ட இடம் ஒன்றில் அவரைச் சந்தித்தேன். ஆனால், இப்போது அதற்கான எந்தவொரு வடுவையும் அந்தப் பகுதி சுமந்திருக்கவில்லை. ஆனால் குணா கவிழயகன்,  போர் ஏற்படுத்திய அனைத்து வடுகளையும் சுமந்திருக்கிறார். இனி அவருடனான உரையாடல்...

எளிய செய்திகளுடன் இந்தப் பேட்டி அமைய வேண்டும். அதனால் ஒரு தட்டையான கேள்விவுடனே இந்தப் பேட்டியைத் தொடங்குகிறேன். எது உங்களை நாவல் எழுத தூண்டியது...?

மென்மையாகச் சிரிக்கிறார். ’’எனக்கு இலக்கியம் அவ்வளவு பரிச்சயம் இல்லை. நான் வன்னி யுத்தத்திற்கு பின்பு அமெரிக்காவின், ’ஆசிய மறுசீராக்கல் கொள்கை’ குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினேன். அதன் நீட்சியாக வேண்டுமானால் என் முதல் இலக்கிய நூலான ‘நஞ்சுண்டகாடு’ நாவலைச் சொல்லலாம். யோசித்தால், அதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. என் நாவல்கள் என் வலிகளுக்கான வடிகால். அதை எனக்கான உளச்சிகிச்சையாக நினைக்கிறேன். போர் தந்த வலிகளிலிருந்து மீள எனக்கு எழுத்து நல்ல சிகிச்சையாக இருக்கிறது. அந்த சுய சிகிச்சை நாவலாக உருமாறி உள்ளது. இன்னும் சொல்லப்போனால், நான் எழுதப் போகும் ஒரு முக்கியமான நாவலுக்கான பயிற்சியாகத்தான் இந்த மூன்று நாவல்களையும் பார்க்கிறேன்.
   
புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உங்கள் முதல் நாவலான நஞ்சுண்டகாடுவில் விடுதலைப் புலிகள் மீதும் விமர்சனம் செய்து இருந்தீர்கள் அல்லவா...?

"ஆம். நான் எழுதுவதென்று முடிவெடுத்தவுடனே ஒரு விஷயத்தில் திடமாக இருந்தேன்... அது சமரசமற்றதாக இருக்க வேண்டுமென்று. அதனால் அவர்கள் செய்த பிழைகளையும் நான் விமர்சனம் செய்திருந்தேன். இந்தக் காரணத்தால் நான் எதிர்கொண்ட விமர்சனங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஆனால், நான் என் எழுத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறேன்!’’

eelam%20people.jpg

இறுதியாக நடந்த இன அழிப்பு போரை நீங்கள் தவிர்த்து இருக்கலாம் என்று எண்ணியதுண்டா...? போருக்கு காரணம் புலிகளின் ராஜதந்திர தோல்வி என்று கூறலாமா...?

’’ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஈழ மக்கள் என்றுமே போரை விரும்பியதில்லை. உலக நாடுகளின் ராஜ தந்திர விளையாட்டில் ஈழம் சிக்கி, சின்னாபின்னமானது. இந்த போரை விரும்பியது சீனா, அது சிங்கள அரசிற்கு துணை நின்றது. நியாயமாக சீனாவின் அரசியல் எதிரிகளான இந்தியாவும் அமெரிக்காவும் புலிகளின் பக்கமல்லவா இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. சீனாவின் பிடி இலங்கையில் இறுகக் கூடாது என்று இந்தியா நினைத்தது. அதுவும் இலங்கை அரசின் பக்கம் நிற்கிறது. ஆசிய கண்டத்தில் இந்தியாவை பகைத்துக் கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை. அதுவும் இந்தியாவின் நிலைப்பாட்டையே ஆதரிக்கிறது. ஆனால், புலிகள் தோற்கடிக்கப் படவேண்டும் என்று மட்டும்தான் அமெரிக்கா விரும்பியது. அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டுமென்பது இந்தியாவின் விருப்பமாக இருந்தது.

இந்தியாவின் இனப்பகைதான் இந்த இனப்படுகொலைக்கு துணை நின்றதற்கு காரணம் என்கிறார்களே இங்குள்ள தமிழ் தேசியர்கள்...?


’’இல்லை. இந்தியா துணை நின்றதற்கு காரணம் புவிசார் அரசியல் மட்டுமே!’’

அப்படியானால், இது புலிகளின் ராஜதந்திர தோல்விதானே...?

’’இது அவர்களின் ராஜதந்திர தோல்வி மட்டுமல்ல. முள்ளிவாய்க்கால், அனைத்து நாகரீக சமூகத்தின் தோல்வி. போரில், போர் குற்றம் நடந்ததாக சொல்கிறார்கள். ஆனால் இந்தப் போரே குற்றம்தான். அமைதி உடன்பாட்டில் இருக்கும் ஒரு சமூகத்தின் மீது போரை திணித்தது யார்...? இது மோசமான முன்னுதாரணம் அல்லவா...? இனி எந்தப் போராட்ட இயக்கமாவது, இவர்கள் கொண்டு வரும் அமைதி ஒப்பந்தத்தை நம்புமா...?’’

காங்கிரஸ் இல்லாமல் வேறு கட்சி மத்தியில் இருந்திருந்தால், இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டு இருக்காது என்று சொல்லலாமா...?

"இல்லை. நிச்சயம் இல்லை. இது இந்தியாவின் நிலைப்பாடு!’’

புலிகள் பல முறை இந்தியாவுடன் நேசக்கரம் நீட்டியும், இந்தியா அவர்களை நம்ப மறுக்க காரணமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்...?

’’ஆரம்பத்தில் சில தவறுகள் நடந்தது. அப்போது புலிகள் அரசியல் முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை. ஆனால், பின்பு அவர்கள் புரிந்து கொண்டார்கள், இந்தியா இல்லாமல் ஒரு தீர்வு கிடைக்காது என்பதை... ஆனால், இந்தியாவோ, புலிகளின் தனி ஈழக்கோரிக்கையை, தமிழ் அகண்ட தமிழ்த் தேச பேரரசிற்கான கோரிக்கையாக பார்த்தது. அதனால், அவர்கள் அதை ஆதரிக்கவில்லை; அதை முன்னெடுத்த புலிகளையும் ஆதரிக்கவில்லை. இப்போதும் நாங்கள் இந்தியாவையே நம்புகிறோம், இந்தியா இல்லாமல் ஒரு தீர்வு  இல்லை!’’

 

mgr%20pirabakaran.jpg

ஒரு காலத்தில் எம்.ஜி. ஆரின் முயற்சியால், இந்தியா ஒரு தீர்வை முன் வைத்தது. இலங்கையின் வடகிழக்கை ஒன்றிணைத்து தனி மாகாணமாக்கி, அதற்கு பிரபாகரனை முதல்வர் ஆக்குவது. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால், இந்த அழிவை தவிர்த்து இருக்கலாம் அல்லவா...?

’’நிச்சயம். நான் ராஜதந்திர தோல்வி என குறிப்பிட்டது இதைத்தான். அப்போது அதை  ஏற்றுக் கொண்டிருந்தால், நாங்கள் அரசியல் செய்வதற்கு, எங்கள் கோரிக்கைகளை அனைத்து சமூக மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். அதை மறுத்ததன் மூலம், அந்த வாய்ப்பு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. புலிகள் போர் வெற்றியில்தான் அதிகம் கவனம் செலுத்தினார்கள். அரசியல் தளத்தில் கவனம் செலுத்த தவறிவிட்டார்கள். இவர்கள் இரண்டிலும் கவனம் செலுத்தி இருந்தால், பல தோல்விகளை தவிர்த்து இருக்கலாம்!’’

சரி. இப்போது ஈழமக்களுக்கு எது தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்...?


’’வடகிழக்கை இணைப்பது. போலீஸ், வருவாய் போன்ற அதிகாரங்களை மையப்படுத்தாமல். அதைப் பகிர்ந்தளிப்பது!’’

அதாவது, இந்தியாவில் உள்ள மாநில அமைப்பு போல்...?


’’ஆம். அதுதான் தீர்வென்று நம்புகிறேன்!’’

தனி ஈழக்கோரிக்கையை முன்னிறுத்தி மீண்டும் அங்கொரு போர் மூள வாய்ப்புள்ளதா...?

’’நிச்சயமாக இல்லை. எக்காலத்திலும் போர் மூள வாய்ப்பில்லை. ஆனால், போர் மட்டுமே முடிந்துவிட்டது; போராட்டங்கள் முடியவில்லை. தன்னாட்சி உரிமைக்கான அரசியல் போராட்டங்கள் தொடரும். அங்குள்ள தமிழ் மக்களும் அரசியல் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். தங்களது கூட்டு உரிமைக்காக இன்னும் போராடி வருகிறார்கள். அதனால்தான் தமிழ் தேசியக் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுகின்றன!’’

உங்கள் கோரிக்கையை ஏற்க ராஜபக்‌ஷே முன் வந்தால் அவரை ஆதிரிப்பீர்களா...?
 

 ’’நிச்சயமாக!’’

என்ன...?!


’’ஆம். போர் எதிரி. அரசியல் எதிரியாக இருக்கவேண்டியது இல்லை. இதற்கு நம் கண் முன்னால் இருக்கும் உதாரணம் ஜப்பான். இரண்டாம் உலகப்போர் முடிந்ததும், அவர்கள் கூட்டு சேர்ந்தது, அவர்கள் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்காவுடன்!’’

போர் நடந்த போது, தமிழக மக்கள் மீதும், ஈழ ஆதரவு தலைவர்கள் மீதும், போராளிகளின் பார்வை எப்படி இருந்தது...?

’’நாங்கள் தமிழக மக்களை மட்டுமே முழுமையாக நம்பினோம். என்றுமே தலைவர்களை இல்லை. எங்களுக்கு அவர்களின் நிலையையும் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு தமிழக அரசியலை தாண்டித்தான், ஈழம் எல்லாம்... அதற்காக எங்களையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்காள். அதையும் நாங்கள் உணர்ந்தே இருந்தோம்.

அரசியல் தலைவர்களுக்கு ஈழமக்கள் மீது உண்மையான கரிசனம் இருந்திருந்தால், இங்கு அகதி முகாமில் இருக்கும் ஈழ மக்களுக்கும் அவர்கள் ஆதரவு கரம் நீண்டு இருக்க வேண்டும் அல்லவா... ஆனால், உண்மை நிலவரம் அப்படி இல்லையே..!’’

tamil%20nadu%20srilankan%20camp.jpg

வேறு எப்படி உங்கள் லட்சியங்களை அடைவது சாத்தியம் என நினைக்கிறீர்கள்...?

’’எங்கள் படகுக்கு நாங்கள்தான் துடுப்பு போட வேண்டும். எங்கள் பிள்ளையை நாங்கள்தான் பெற்றெடுக்க வேண்டும்!’’

சரி. இந்த கேள்வி இல்லாமல் பேட்டி முற்றுபெறாது... எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த கேள்வியை கேட்பதில் உடன்பாடில்லை... பிரபாகரன் இன்னும் உயிரோடு இருகிறாரா...?

’’நான் இந்த சந்தேகத்தை கிளப்புவதே இந்திய அரசு என்றுதான் நினைக்கிறேன். அவரின் தியாகம் முக்கியமானது. அவர் இறந்துவிட்டார் என போரை நடத்திய இலங்கை அரசே சொல்லிவிட்டது. இவர்கள் இப்படி ஒரு சந்தேகத்தை கிளப்ப காரணம், ’பிரபாகரன் இறந்துவிட்டார்’ என்று அவர்கள் அறிவித்தால், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். ராஜீவ் கொலை வழக்கை முடிக்க வேண்டும். அப்படி அந்த வழக்கு முடியும்பட்சத்தில், அந்த வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை சாத்தியம் ஆகும். அதை இந்தியா விரும்பவில்லை.

இதை தவிர்க்கவே இந்திய அரசு ஒரு குழப்ப நிலையை உண்டாக்கி, பிரபாகரனை உயிர்ப்புடன் வைத்திருக்க முனைகிறது என நினைக்கிறேன். இந்த இந்திய அரசின் ராஜதந்திரத்திற்கு, இங்குள்ள தமிழ் ஈழத் தலைவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ பலிகடா ஆகிக் கொண்டிருக்கிறார்கள்!’’ என்றவர் பெருமூச்சோடு சாய்ந்து அமர்ந்து கொள்கிறார்.

சின்ன இடைவேளைக்குப் பின் சன்னமான குரலில் சொல்கிறார்...

’’நான் அரசியலே பேசக் கூடாது என்றுதா நினைத்தேன். ஆனால், நீங்கள் அது போன்ற கேள்விகளையே கேட்டதால், பேச வேண்டியதாகிவிட்டது. நான் இப்போது தீவிர அரசியலில் இல்லை, இலக்கியம் மட்டுமே என் பணி. அதிலேயே இயங்க விரும்புகிறேன்!’’

-ஒரு அழுத்தமான கைக்குலுக்கலுடன் விடைபெற்றேன்.
http://www.vikatan.com/news/coverstory/59249-india-wants-prabakaran-to-be-alive-eezha-writer.art

Link to comment
Share on other sites

தெளிவான  பேட்டி ,

சில பதில்களுடன்  எனக்கு  உடன்பாடில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்தான் எல்லாத்தையும் அழித்தார்கள் 
அப்படி என்று வந்திருக்க வேண்டும் ...


பேட்டியை பார்க்க ஆமி செல் அடிச்ச மாதிரியும் வருகிறது ...
அதாவது யாதர்த்தமாக சொன்னால் 
எனக்கு உடன்பாடு இல்லை !

Link to comment
Share on other sites

புலிகள் பல முறை இந்தியாவுடன் நேசக்கரம் நீட்டியும், இந்தியா அவர்களை நம்ப மறுக்க காரணமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்...?

’’ஆரம்பத்தில் சில தவறுகள் நடந்தது. அப்போது புலிகள் அரசியல் முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை. ஆனால், பின்பு அவர்கள் புரிந்து கொண்டார்கள், இந்தியா இல்லாமல் ஒரு தீர்வு கிடைக்காது என்பதை... ஆனால், இந்தியாவோ, புலிகளின் தனி ஈழக்கோரிக்கையை, தமிழ் அகண்ட தமிழ்த் தேச பேரரசிற்கான கோரிக்கையாக பார்த்தது. அதனால், அவர்கள் அதை ஆதரிக்கவில்லை; அதை முன்னெடுத்த புலிகளையும் ஆதரிக்கவில்லை. இப்போதும் நாங்கள் இந்தியாவையே நம்புகிறோம், இந்தியா இல்லாமல் ஒரு தீர்வு  இல்லை!’

ஆரம்பத்தில் நடந்த சில தவறுகள் - சில மன்னிக்க முடியாத தவறுகள் ,சில அதிலிருந்து விலகமுடியாத தவறுகள் இவையெல்லாம் செய்ய முதலே ஆயிரம் தடவைகள்  யோசிக்கவேண்டிய தவறுகள் .

84-85 களிலேயே எங்களுக்கு  மிக  தெளிவாக விளங்கிய விடயம் இது .

ஆனால் இந்த தவறுகளை பற்றி  இன்று வரை பெருமை பேசுபவர்கள் தான் அதிகம் .இவர்கள் அந்த பெருமைக்காக இனத்தையே அழித்தார்கள் .

இந்த முதிர்சி புலிகளுக்கு என்றுமே வரவில்லை வரக்கூடிய சந்தர்ப்பமும் இல்லை ,

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசுறவரும் புலிதான்......

 

Link to comment
Share on other sites

17 minutes ago, விசுகு said:

பேசுறவரும் புலிதான்......

 

38 minutes ago, arjun said:

இந்த முதிர்சி புலிகளுக்கு என்றுமே வரவில்லை வரக்கூடிய சந்தர்ப்பமும் இல்லை ,

84-85 களிலேயே எங்களுக்கு  மிக  தெளிவாக விளங்கிய விடயம் இது .

ஆனாலும் சிலருக்கு வந்திருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் ராஜதந்திரங்கள் தோல்வியடையும் என்று தெரிந்த கவியழகன் அதனைச் சீர்செய்ய என்னமாதிரியான நடவடிக்கைகளை உள்ளிருந்தே மேற்கொண்டார் என்றும் சொல்லியிருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

புலிகளின் ராஜதந்திரங்கள் தோல்வியடையும் என்று தெரிந்த கவியழகன் அதனைச் சீர்செய்ய என்னமாதிரியான நடவடிக்கைகளை உள்ளிருந்தே மேற்கொண்டார் என்றும் சொல்லியிருக்கலாம். 

தான்அரசியலில் இல்லை என்று சொல்லியுள்ளாரே....

இந்தியாவுடன்  குலாவவேண்டுமென்றால் அரசியல் செய்யணுமே....

Link to comment
Share on other sites

6 minutes ago, கிருபன் said:

புலிகளின் ராஜதந்திரங்கள் தோல்வியடையும் என்று தெரிந்த கவியழகன் அதனைச் சீர்செய்ய என்னமாதிரியான நடவடிக்கைகளை உள்ளிருந்தே மேற்கொண்டார் என்றும் சொல்லியிருக்கலாம். 

உண்மைதான் கிருபன். ஆனால் அவருக்கு அப்போ தர்மபுரம் காணி பற்றி யோசிக்கவே நேரம் போதுமானாதாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

தான்அரசியலில் இல்லை என்று சொல்லியுள்ளாரே....

இந்தியாவுடன்  குலாவவேண்டுமென்றால் அரசியல் செய்யணுமே....

இப்ப அரசியலில் இல்லை. ஆனால் 2009 மே வரை இருந்தவர்தானே. அந்தக் காலத்தில் சிரிப்பின் செல்வரோடு ஒத்துவரவில்லை போலிருக்கு.

Link to comment
Share on other sites

11 minutes ago, கிருபன் said:

புலிகளின் ராஜதந்திரங்கள் தோல்வியடையும் என்று தெரிந்த கவியழகன் அதனைச் சீர்செய்ய என்னமாதிரியான நடவடிக்கைகளை உள்ளிருந்தே மேற்கொண்டார் என்றும் சொல்லியிருக்கலாம். 

எவர் சொல்லையும் கேட்கும் நிலையில்  எந்த தலைமையும் இருக்கவில்லை ,

பாலசிங்கத்தின் சொல்லே கேட்கவில்லை குணா எம்மாத்திரம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, arjun said:

எவர் சொல்லையும் கேட்கும் நிலையில்  எந்த தலைமையும் இருக்கவில்லை ,

பாலசிங்கத்தின் சொல்லே கேட்கவில்லை குணா எம்மாத்திரம் 

கவியழகன் தமிழீழ அரசியல் ஆய்வு மையத்திற்குப் பொறுப்பாக இருந்தவர். ஒருவகையில் புலிகளின் ராஜதந்திர அரசியல் பாதைகளுக்கும் பொறுப்பாக இருந்தவர் எனக்கூறலாம். 

2006 இல் வந்த செய்தி..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

புலிகளின் ராஜதந்திரங்கள் தோல்வியடையும் என்று தெரிந்த கவியழகன் அதனைச் சீர்செய்ய என்னமாதிரியான நடவடிக்கைகளை உள்ளிருந்தே மேற்கொண்டார் என்றும் சொல்லியிருக்கலாம். 

பிழைப்புவாதம் செய்பவன் அங்குமிங்கும் ஒட்டி வாழ்ந்துகொள்வான் 

போராளிகள் இலட்சியத்தால் உருவாகுபவர்கள் 
அவர்களுக்கு ஒரு வழி பாதைதான்.

எல்லாம் முடிய சினிமாவிற்கு விமர்சனம் எழுதி பிளைக்கவும் ஒரு கூட்டம் இருந்துகொள்ளும்.

அம்பேத்தகர் 
பெரியார் 
போல இந்தியாவில் யாரும் தோற்றுபோகவில்லை 
ஆனால் ஆறறிவு மனிதர்களிடம் அவர்கள் யாரும் உலகில் தோற்பது இல்லை.

இது உலக நியதி.

தற்போதைய சிரியா நிலைமைக்கு 
நாளை சிரிய அதிபரை சாட ஒருகூட்டம் சிரியாவில் உருவாகும்.
சிரிய அரசு சியாத் முஸ்லீம்களை உள்ளடக்கியதால்தான் இந்த நிலைமையே 
சிரியாவிற்கு வந்தது. 

இப்போ எந்த ராஜதந்திரமும் அங்கு இல்லை 
வெறும் ரவ்டிசம் மட்டுமே மேலோங்கி நிற்கிறது 
மேலை நாட்டு அரசியல் வாதிகளிடம் உண்மையில் ராஜதந்திரம் இருந்திருந்தால் 
ரசியா உள்ளிறங்க முன்பு காய் நகர்த்தி இருக்க வேண்டும்.
இப்போ ரசியா துருக்கி எல்லைக்கு வந்த பின்பு .... போர் நிறுத்தம் என்று கத்த வேண்டி வந்திருக்காது.

2007இல் ஆயிரகணக்கான பெண்கள் கென்யாவில் பாலியல் பலாத்தகாரம் 
செய்யபட்டார்கள் 
ஐ நா உடனே விச்சாரனை வேண்டும் என்று  பிரேரணை கொண்டுவந்தார்கள் 
பிரதமர் அங்கு இங்கு சுற்றாமல் நேரே அமெரிக்காவின் காலடியில் போய்  விழுந்தார் 
கென்யா அமெரிக்காவின் இன்னொரு மாகாணம் மாதிரி எமக்குள் ஏன் விசாரணை அது இது என்று ?

பின்பு இன்றைய அதே இலங்கை நிலைமை ....
உள்ளக விசாரணை என்று போனது 
(கிருபன் நேற்று செய்தி பார்த்தீர்களா ?) 
நேற்று உள்ளக விசாரணையும் நடக்காது என்று அரசு அறிவித்திருக்கு 
ஐ நா அது உள்நாட்டு விடயம் என்ற மாதிரி பொருள்பட சின்ன மட்டம் மூலமாக சொல்லியிருக்கு 
பெரிய மட்டம் பி பி சீ க்கு இன்னமும் முடிவு எடுக்கவில்லை 
மேலதிக ஆராய்வு நடப்பதாக சொல்லியிருக்கிறது 

சரியாக ஒருவருட வித்தியாசத்தில் இலங்கை விடயம் போய்கொண்டிருக்கு ...
முடிவு ஆறறிவு மனிதர்களுக்கு தெரிந்ததுதான் 
தெரியாத ஒரு கூட்டம் ...... 
அதன் பின்புதான் தாம் இருக்கிறோம் என்று காட்ட 
ஆய்வு கட்டுரை அது இது என்று எழுதும் 
அதுக்கு பல்லக்கு தூக்க ஒரு அடிமை கூட்டம் 
இங்கு காத்து கிடக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணை, சர்வதேச, உள்நாட்டு கலப்பு விசாரணை, பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்தவர்களை மட்டும் கொண்ட கலப்பு விசாரணை, உள்ளக விசாரணை என்று தேய்ந்து அதுவும் இல்லாமல் போகச் சாத்தியங்கள் அதிகம்தான். மைத்திரியும், ரணிலும் இப்போது மேற்குநாடுகளின் விருப்பத்திற்குரிய தலைவர்கள். அவர்களின் ஆட்சியைத் தொடரவும், அரசியலமைப்பை மாற்றவும், அதன் மூலம் தமிழர்களுக்கு 'ஏதாவது' ஒரு தீர்வைக் கொடுக்கவும் மேற்குநாடுகள் முனைகின்றன. ஆனால் கிடைக்கும் தீர்வு தமிழர்களுக்கு சரியான தீர்வா என்று கேள்வி கேட்டாலே புலி முத்திரை குத்த ஒத்தோடிகள் உள்ளனர். இதுதான் இப்போதைய நிலை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் இருக்கட்டும்.இவருக்கு எப்படி இந்திய அரசு விசா கொடுத்தது

Link to comment
Share on other sites

22 minutes ago, Maruthankerny said:

பிழைப்புவாதம் செய்பவன் அங்குமிங்கும் ஒட்டி வாழ்ந்துகொள்வான் 

போராளிகள் இலட்சியத்தால் உருவாகுபவர்கள் 
அவர்களுக்கு ஒரு வழி பாதைதான்.

எல்லாம் முடிய சினிமாவிற்கு விமர்சனம் எழுதி பிளைக்கவும் ஒரு கூட்டம் இருந்துகொள்ளும்.

அம்பேத்தகர் 
பெரியார் 
போல இந்தியாவில் யாரும் தோற்றுபோகவில்லை 
ஆனால் ஆறறிவு மனிதர்களிடம் அவர்கள் யாரும் உலகில் தோற்பது இல்லை.

இது உலக நியதி.

தற்போதைய சிரியா நிலைமைக்கு 
நாளை சிரிய அதிபரை சாட ஒருகூட்டம் சிரியாவில் உருவாகும்.
சிரிய அரசு சியாத் முஸ்லீம்களை உள்ளடக்கியதால்தான் இந்த நிலைமையே 
சிரியாவிற்கு வந்தது. 

இப்போ எந்த ராஜதந்திரமும் அங்கு இல்லை 
வெறும் ரவ்டிசம் மட்டுமே மேலோங்கி நிற்கிறது 
மேலை நாட்டு அரசியல் வாதிகளிடம் உண்மையில் ராஜதந்திரம் இருந்திருந்தால் 
ரசியா உள்ளிறங்க முன்பு காய் நகர்த்தி இருக்க வேண்டும்.
இப்போ ரசியா துருக்கி எல்லைக்கு வந்த பின்பு .... போர் நிறுத்தம் என்று கத்த வேண்டி வந்திருக்காது.

2007இல் ஆயிரகணக்கான பெண்கள் கென்யாவில் பாலியல் பலாத்தகாரம் 
செய்யபட்டார்கள் 
ஐ நா உடனே விச்சாரனை வேண்டும் என்று  பிரேரணை கொண்டுவந்தார்கள் 
பிரதமர் அங்கு இங்கு சுற்றாமல் நேரே அமெரிக்காவின் காலடியில் போய்  விழுந்தார் 
கென்யா அமெரிக்காவின் இன்னொரு மாகாணம் மாதிரி எமக்குள் ஏன் விசாரணை அது இது என்று ?

பின்பு இன்றைய அதே இலங்கை நிலைமை ....
உள்ளக விசாரணை என்று போனது 
(கிருபன் நேற்று செய்தி பார்த்தீர்களா ?) 
நேற்று உள்ளக விசாரணையும் நடக்காது என்று அரசு அறிவித்திருக்கு 
ஐ நா அது உள்நாட்டு விடயம் என்ற மாதிரி பொருள்பட சின்ன மட்டம் மூலமாக சொல்லியிருக்கு 
பெரிய மட்டம் பி பி சீ க்கு இன்னமும் முடிவு எடுக்கவில்லை 
மேலதிக ஆராய்வு நடப்பதாக சொல்லியிருக்கிறது 

சரியாக ஒருவருட வித்தியாசத்தில் இலங்கை விடயம் போய்கொண்டிருக்கு ...
முடிவு ஆறறிவு மனிதர்களுக்கு தெரிந்ததுதான் 
தெரியாத ஒரு கூட்டம் ...... 
அதன் பின்புதான் தாம் இருக்கிறோம் என்று காட்ட 
ஆய்வு கட்டுரை அது இது என்று எழுதும் 
அதுக்கு பல்லக்கு தூக்க ஒரு அடிமை கூட்டம் 
இங்கு காத்து கிடக்கிறது 

ஐந்தறிவுக்கு ஆறறிவு -1
ஆறறிவுக்கு ஐந்தறிவு +1
அப்ப எனக்கு எத்தனை அறிவு.

நிச்சயம் நாலுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

அதெல்லாம் இருக்கட்டும்.இவருக்கு எப்படி இந்திய அரசு விசா கொடுத்தது

விழ விழ ஒன்றல்ல ஓராயிரமாய் எழுந்துகொண்டு இருந்த 
சாத்த்ரிக்கு விசா மட்டும்மா கொடுத்தார்கள் ?
உளவுத்துறை அதிகாரியே வந்து புத்தகத்தை வெளியிட்டார்கள் 

அவருக்கே அந்த சலுகை இருக்கும்போது 
இவருக்கு விசா கொடுக்க கூடாதா ?

பற்றரி வாங்கி கொடுத்தவன் ஆயுள்கைதி ...
புலியை கண்டிருக்கிறேன் என்றவன் சிறை கைதி ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி இயக்கத்தில் இருந்தார் என்பதை அவரே சொன்னாலே தவிர மற்றவருக்கு தெரியாது!. ஆனால் இவர் அப்படியா???????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பேட்டியை எடுத்தமை/கேள்விகள்/பதில்கள் /பிரசுரித்தமை யாவும் இந்தியாவின் தேவைக்கே என "பப்" புத்தனின் அரசியல் நொலேட்ஜ்க்கு  எட்டுது.....இனிமேல் இந்தியாவாலும் தீர்வு எடுத்து தரமுடியாது ,அதற்கும் காரணம் புலிகள்தான் என்று சொல்லுகிறார்......ஆனால் இலங்கையில் இனி தீர்வு தேவையில்லை காரணம் இலங்கை இந்தியாவின் கைக்குள் என்று பேட்டி மூலம் சொல்ல வைத்திருக்க‌லாம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பகலவன் said:

உண்மைதான் கிருபன். ஆனால் அவருக்கு அப்போ தர்மபுரம் காணி பற்றி யோசிக்கவே நேரம் போதுமானாதாக இருந்தது.

வேண்டாமே ராசா

இதைத்தான் சிலர் ஆசைப்படுகிறார்கள்....

Link to comment
Share on other sites

இறுதியாகப் பதியப்பட்ட பல தனிமனித தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் திரியின் தலைப்போடு ஒட்டி பண்பாக கருத்துக்களை வைக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகமும் இருட்டாத் தான் கிடக்கும் என்று சொல்கிற மாதிரி இருக்குது விசுகு அண்ணா உங்கட கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகமும் இருட்டாத் தான் கிடக்கும் என்று சொல்கிற மாதிரி இருக்குது விசுகு அண்ணா உங்கட கருத்து.

இருக்கலாம் சகோதரி

ஒரு பொது நன்மை கருதி இவர்கள் மௌனம் காக்கணும் என்பதே 

இன்றைய சூழ்நிலைக்கு நல்லது...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.