Jump to content

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு


Recommended Posts

On 20/02/2016 at 2:46 PM, பிரபாதாசன் said:

சிங்களமும் உலகமும் இப்பவும் தமிழரின் பலத்தினை அழிப்பதில் இன்னும் முழு மூச்சுடன் இயங்குகின்றது ..ஆனால் பாலாய் போன எங்கள் தமிழன் இன்னும் காக்கை வன்னியனகவே இருக்கின்றான் ...இந்த கேவலம் கெட்ட தமிழனுக்கு தனி நாடு ஏன் ...சிங்களத்தின் காலை நக்கி வாழ தான் சரி ....இப்ப உள்ள அரசியல் அதனை தானே தெளிவாக காட்டுகின்றது ....சிங்களவன் ஒன்றாக தமிழனை எதிர்க்கிறான் ..ஆனால் எங்களில் தான் இப்ப தர்மவான்களும் , நீதியாளர்களும் , எங்களுக்கே குழி தோண்டி கொண்டிருக்கிறார்கள் ...

ஒருவருடம் ஆகியும் வித்தியாவின் கொலைக்கு தண்டனை கிடைக்காத இந்த நிலை தான் ...இங்க கொஞ்ச பேருக்கு மக்கள் சந்தோசமாக உள்ளார்களாம் .....இது மட்டும் புலிகள் காலம் என்றால் ....சில தினங்களில் தண்டனை முடிந்திருக்கும் ....
 

இப்ப என்ன சொல்ல வாறிங்க? காசடித்த கூட்டம் புலிக்கொடி தூக்கி தேவாரம் பாடியதால அவர்களை கண்டும் காணாமல் விடவேண்டுமா? இதுக்குள்ள காக்கை வன்னியன் எட்டப்பன் எல்லாம் எதுக்கு? சத்தியமாக எனக்கு உங்களை போன்றவர்களின் சிந்தனையோட்டம் விளங்குவதே இல்லை. கண்ணுக்கு முன்னால ஒரு கூட்டம் போராட்டத்தை காட்டி கோடி கோடியாக கொள்ளையடித்து வாழுது. அதை எவராவது சுட்டி காட்டினா அவன் சிங்கள கைக்கூலி. 

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply
10 hours ago, தெனாலி said:

இப்ப என்ன சொல்ல வாறிங்க? காசடித்த கூட்டம் புலிக்கொடி தூக்கி தேவாரம் பாடியதால அவர்களை கண்டும் காணாமல் விடவேண்டுமா? இதுக்குள்ள காக்கை வன்னியன் எட்டப்பன் எல்லாம் எதுக்கு? சத்தியமாக எனக்கு உங்களை போன்றவர்களின் சிந்தனையோட்டம் விளங்குவதே இல்லை. கண்ணுக்கு முன்னால ஒரு கூட்டம் போராட்டத்தை காட்டி கோடி கோடியாக கொள்ளையடித்து வாழுது. அதை எவராவது சுட்டி காட்டினா அவன் சிங்கள கைக்கூலி. 

காக்கை வன்னியன் எட்டப்பன் போன்ற கூட்டம் ஈழவிடுதலைப் போராட்டத்திற்குள் புகுந்து அதனை நிர்மூலமாக்கியதுபோன்று அந்தக் கூட்டத்தின் வாரிசுகள் இன்று மீண்டெழமுயலும் தமிழ்மக்களிடையேயும்  புகுந்து காசடித்தும், புலிக்கொடி தூக்கித் தேவாரம் பாடுவதையும் கண்டும் காணாமல் விடவேண்டுமா? அவர்களை மக்கள் இனம்கண்டுகொள்ள வேண்டும் இல்லையெனில் பரமேசுவரன் போன்றவர்களிடமும் மக்களுக்குச் சந்தேகம் வந்துவிடும். 


யேர்மனியில் சந்தர்ப்பவாதிகளிடம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சிக்கிக்கொண்டுள்ளது. இதனைக் கண்டும் ஏதும் செய்யமுடியாத கையறுநிலையில் இங்குள்ள தமிழர்கள் விரக்தியடைந்துள்ளனர். காரணம் யேர்மனி நாட்டின் சட்டங்கள் இந்தச் சந்தர்ப்பவாதிகளைப் பாதுகாக்கிறது. 


7 பேர் அங்கத்தவர்களாக இணைந்து இந்த நாட்டில் ஒரு மன்றத்தை உருவாக்கிப் பதிந்துகொள்ளலாம். அதில் அவர்கள் உருவாக்கியுள்ள யாப்பின்படி எத்தனை ஆயிரம் மக்களிடமிருந்தும் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். பெற்ற உதவிகள் சரியாகவே கையாளப்பட்டது என அந்த ஏழுபேரில் நான்குபேர் ஏற்றுக்கொண்டால்... அது தவறு என்று எவராலும் எதிர்க்கவோ, புகார்கொடுக்கவோ முடியாது.  


கண்ணுக்கு முன்னால ஒரு கூட்டம் போராட்டத்தை காட்டி கோடி கோடியாக கொள்ளையடித்து வாழுது. அது உண்மைதான். அப்படி வாழ்பவர்கள் புலிகளல்ல. புலித்தோல் போர்த்திப் புகுந்துள்ள சந்தர்ப்பவாதிகள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்,

ஜேர்மனியில் மட்டுமில்லை உலகில் எங்கேயும் இப்போ நான்தான் புலி, புலி ஆதரவாகக் என்று சொல்லும் அனைவரும் இப்படிப்பட்ட கயவர்களே.

 

புலி எந்த ஒன்று மே 09 க்கு பின் இல்லை.

இப்போ இருபதெல்லாம் புலியை காட்டி வயிறு வளர்க்கும் கூட்டம்.

Link to comment
Share on other sites

16 hours ago, தெனாலி said:

இப்ப என்ன சொல்ல வாறிங்க? காசடித்த கூட்டம் புலிக்கொடி தூக்கி தேவாரம் பாடியதால அவர்களை கண்டும் காணாமல் விடவேண்டுமா? இதுக்குள்ள காக்கை வன்னியன் எட்டப்பன் எல்லாம் எதுக்கு? சத்தியமாக எனக்கு உங்களை போன்றவர்களின் சிந்தனையோட்டம் விளங்குவதே இல்லை. கண்ணுக்கு முன்னால ஒரு கூட்டம் போராட்டத்தை காட்டி கோடி கோடியாக கொள்ளையடித்து வாழுது. அதை எவராவது சுட்டி காட்டினா அவன் சிங்கள கைக்கூலி. 

பொய்யாக நடித்தவர்களுடன் உண்மையானவர்களும் ஒன்று சேர்க்கபட்டு உள்ளார்கள் ...அதுதான் என்வாதம் ...மற்றும்படி காசடித்தவ்ர்களை நான் ஆதரிக்கவில்லை ....அவர்கள் நிட்சயமாக தண்டிக்கப்படுவார்கள் ..மாவீரரின் ஆத்மா அவர்களை சும்மா விடாது ....தண்டனை கிடைத்தே தீரும் ....ஆனால் இப்ப அவசியமானது ...பிளவினை காட்டி விமர்சனகளை வளர்த்து சிங்களத்துக்கு கை கொடுக்க வேண்டாம் ...எத்தனை ஆயிரம் விலை மதிக்க முடியாத வீரர்கள் இறந்து விட்டார்கள் இந்த காசு மட்டுமா எங்களுக்கு பெரிதாக இருக்க போகின்றது ...

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

பாஞ்,

ஜேர்மனியில் மட்டுமில்லை உலகில் எங்கேயும் இப்போ நான்தான் புலி, புலி ஆதரவாகக் என்று சொல்லும் அனைவரும் இப்படிப்பட்ட கயவர்களே.

 

புலி எந்த ஒன்று மே 09 க்கு பின் இல்லை.

இப்போ இருபதெல்லாம் புலியை காட்டி வயிறு வளர்க்கும் கூட்டம்.

உங்கள் நோக்கம் நிறைவேறிவிட்டதுபோன்ற மகிழ்ச்சி உங்கள் கருத்தில் தெரிகிறது. தமிழீழ விடுதலையை நேசித்த, நேசிக்கும் உண்மையான தமிழர்கள் புலிகளாகவே உலகெங்கும் இப்போதும் நிறைந்துள்ளனர். ஐரோப்பாவில் 'நான் சிறீலங்கா தமிழன்' என்று சொல்லும் ஒருவரை 'நீ புலி' என்று சொல்லித்தான் அந்த ஐரோப்பியர்கள் இன்றும் வினவுகின்றனர்.

 
புலிகள் வந்துவிடுவார்கள் என்று கதிகலங்கி, அதற்கான வேறு காரணங்களைக்கூறி, சிறீலங்கன் அரசு இப்போதும் நவீன ஆபுதங்கள் வாங்கிக் குவிக்கிறது....! மகிந்தா கூட்டம் வெளிபடையாகவே புலி, புலி என்று ஓடி ஓடிப் பிரசாரம் செய்கிறது....! இந்தியாவும் புலிகள்பற்றி ஏதேதோ எல்லாம் எழுதுகிறது....! நீங்கள்மட்டும் மே 09 க்கு பின் புலிகளே இல்லை என்று அடித்துச் சொல்கிறீர்கள். புலிகள் அனைவரையும் நீங்கள் ஒருவரே தனி ஆளாக நின்று அழித்தீர்களா...?? ஆச்சர்யம்!! 
 

Link to comment
Share on other sites

43 minutes ago, Paanch said:

உங்கள் நோக்கம் நிறைவேறிவிட்டதுபோன்ற மகிழ்ச்சி உங்கள் கருத்தில் தெரிகிறது. தமிழீழ விடுதலையை நேசித்த, நேசிக்கும் உண்மையான தமிழர்கள் புலிகளாகவே உலகெங்கும் இப்போதும் நிறைந்துள்ளனர். ஐரோப்பாவில் 'நான் சிறீலங்கா தமிழன்' என்று சொல்லும் ஒருவரை 'நீ புலி' என்று சொல்லித்தான் அந்த ஐரோப்பியர்கள் இன்றும் வினவுகின்றனர்.

 
புலிகள் வந்துவிடுவார்கள் என்று கதிகலங்கி, அதற்கான வேறு காரணங்களைக்கூறி, சிறீலங்கன் அரசு இப்போதும் நவீன ஆபுதங்கள் வாங்கிக் குவிக்கிறது....! மகிந்தா கூட்டம் வெளிபடையாகவே புலி, புலி என்று ஓடி ஓடிப் பிரசாரம் செய்கிறது....! இந்தியாவும் புலிகள்பற்றி ஏதேதோ எல்லாம் எழுதுகிறது....! நீங்கள்மட்டும் மே 09 க்கு பின் புலிகளே இல்லை என்று அடித்துச் சொல்கிறீர்கள். புலிகள் அனைவரையும் நீங்கள் ஒருவரே தனி ஆளாக நின்று அழித்தீர்களா...?? ஆச்சர்யம்!! 
 

வெட்கபடவேண்டிய விடயத்திற்கு  பெருமைப்படுவர்களை என்ன செய்யாலாம் .

நீங்கள் புலிகளை எப்படி பார்த்தீர்கள் என்பது முக்கியமல்ல புலிகளை உலகம் எப்படி பார்த்தது என்பதுதான் முக்கியம் .

மகிந்தா தொட்டு இந்தியாவரை அவர்களை இன்றும் இழுப்பது அவர்களால் ஏற்பட்ட அழிவுகள் தான் .

இன்று ISIS ,அல்கைடா என்று உலகமெ பேசுது ,

தாடி தலைப்பாவுடன் யாரைப்பார்த்தாலும்  இவனும் அவர்களில் ஒருவனோ என்று ஒரு சந்தேகப்பார்வை.

YouTube இல் முழுநீள அங்கியுடன் தாடி தலைப்பா சகிதம்  ஒரு Bag கொண்டுவந்து அவர் போட மக்கள் விழுந்து அடித்து ஓடும் காட்சிகளை  பார்த்து சிரிக்கின்றார்கள் .

இது சிரிப்பதற்கு உரிய விடயமல்ல அவர்களை மக்கள் எப்படி பார்கின்றார்கள் என்ற உளவியல் சம்பந்தபட்ட விடயம் .

இன்றும் சிரியாவில் தற்கொலை தாக்குதல்கள் நடந்து தினமும் நாற்பது ஐம்பது பேர்கள் என்று பலியாகும் போது  எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டிகள் இன்றும் இந்த நாகரீகமடை ந்த உலகில் இருக்கின்றார்கள் என்று கோவம் வரும் பிறகு நாங்களே அதை ஆராதித்தவர்கள் பிறகு மற்றவர்களை பார்த்து கோபப்பட என்ன இருக்கு என்ற நினைவும் வரும் . 

உலகம் முழுக்க ஒருவரை தெரிகின்றதென்றால் அவர் பலவகையில் பிரபலாமாக இருக்கலாம் .

காந்தி ,மார்டின் லூதர் கிங் ,மாண்டேலா ஒரு விதம் 

கிட்லர் ,முசோலினி ,போல்போட் வேறுவிதம் 

பிரபலமாவது பெரியவிடயமல்ல அது எப்படி என்பதுதான் முக்கியம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

விசுகு அண்ணா எங்கட வீட்டில குப்பைகளை வைத்துக் கொண்டு அடுத்தவனை திட்டி என்ன பயன்.

உண்மைதான்  சகோதரி.

நான் மேலேயே எழுதினேன்

இது அவர்களுக்குள் உள்ள பிரச்சினை

அதை அவர்கள் முடிக்கணும்

உண்மைகளை மக்களுக்குச்சொல்லணும் என்று....

 எனது வரம்புக்கு உட்பட்டு  என்னால் சொல்லக்கூடியதை

தெரிந்தவற்றை நேரடியாகவே சொல்லியாச்சு...

 

இதில் எனது கவலை எல்லாம்

ஒருங்கிணைப்புக்குழுவின் கீழுள்ள

தமிழ்ப்பாடசாலைகளின் மாணவர்கள்

விளையாட்டுக்கழகங்களின் வீரர்கள்

இயல் இசை நாடகங்களின் எமது சிறார்களின்  எதிர்காலம் தான்...

இவை உலகம் பூராகவும் எமது அடுத்த சந்ததியின் தமிழ்க்கல்வி 

மற்றும் கலைகள் சார்ந்து செய்தவை தான் இன்றும் ஈழத்தமிழினத்தை ஒரு தனி அடையாளமாக காத்துவருகிறது.

ஒன்றை உடைப்பது

அல்லது இல்லாமல் செய்வது சிறியவிடயம்

ஆனால் உருவாக்குவது....

அதன் பழுவும் வேதனையும் நான் அறிவேன்.

ஏனெனில் இவற்றை உருவாக்கும்போது நானும் இருந்தேன்....

 

Link to comment
Share on other sites

3 hours ago, arjun said:

வெட்கபடவேண்டிய விடயத்திற்கு  பெருமைப்படுவர்களை என்ன செய்யாலாம் .

நீங்கள் புலிகளை எப்படி பார்த்தீர்கள் என்பது முக்கியமல்ல புலிகளை உலகம் எப்படி பார்த்தது என்பதுதான் முக்கியம் .

மகிந்தா தொட்டு இந்தியாவரை அவர்களை இன்றும் இழுப்பது அவர்களால் ஏற்பட்ட அழிவுகள் தான் .

இன்று ISIS ,அல்கைடா என்று உலகமெ பேசுது ,

தாடி தலைப்பாவுடன் யாரைப்பார்த்தாலும்  இவனும் அவர்களில் ஒருவனோ என்று ஒரு சந்தேகப்பார்வை.

YouTube இல் முழுநீள அங்கியுடன் தாடி தலைப்பா சகிதம்  ஒரு Bag கொண்டுவந்து அவர் போட மக்கள் விழுந்து அடித்து ஓடும் காட்சிகளை  பார்த்து சிரிக்கின்றார்கள் .

இது சிரிப்பதற்கு உரிய விடயமல்ல அவர்களை மக்கள் எப்படி பார்கின்றார்கள் என்ற உளவியல் சம்பந்தபட்ட விடயம் .

இன்றும் சிரியாவில் தற்கொலை தாக்குதல்கள் நடந்து தினமும் நாற்பது ஐம்பது பேர்கள் என்று பலியாகும் போது  எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டிகள் இன்றும் இந்த நாகரீகமடை ந்த உலகில் இருக்கின்றார்கள் என்று கோவம் வரும் பிறகு நாங்களே அதை ஆராதித்தவர்கள் பிறகு மற்றவர்களை பார்த்து கோபப்பட என்ன இருக்கு என்ற நினைவும் வரும் . 

உலகம் முழுக்க ஒருவரை தெரிகின்றதென்றால் அவர் பலவகையில் பிரபலாமாக இருக்கலாம் .

காந்தி ,மார்டின் லூதர் கிங் ,மாண்டேலா ஒரு விதம் 

கிட்லர் ,முசோலினி ,போல்போட் வேறுவிதம் 

பிரபலமாவது பெரியவிடயமல்ல அது எப்படி என்பதுதான் முக்கியம் .

2009 இல் அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய புலிகள் இயக்கத்தை, தீவிரவாத இயக்கமாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


2011ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று, டச்சு நாட்டு நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் "பயங்கரவாத அமைப்பு" அல்ல எனத் தீர்ப்பு வழங்கியது. 


2011ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ள, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீதான தடை சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ளனர். இதன் மூலம் 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீங்கியுள்ளது.


2011 ஜூன் 23 இல் நேபிள்ஸ் நீதிமன்றம் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது. 
16.10.2014 அன்று தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என, லக்சம்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


 ISIS ,அல்கைடா என்ற அமைப்பை உலகத்தில் எந்த ஒருநாடும் ஆதரித்ததில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அப்படியானதல்ல. அல்கைடா என்ற அமைப்புடன் விடுதலைப் புலிகள் அமைப்பை ஒப்பிடுவது மிகவும் ஒரு உச்சமான கேவலமான காழ்ப்புணர்ச்சியாகத் தெரியவில்லையா ?? 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

2009 இல் அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய புலிகள் இயக்கத்தை, தீவிரவாத இயக்கமாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


2011ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று, டச்சு நாட்டு நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் "பயங்கரவாத அமைப்பு" அல்ல எனத் தீர்ப்பு வழங்கியது. 


2011ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ள, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீதான தடை சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ளனர். இதன் மூலம் 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீங்கியுள்ளது.


2011 ஜூன் 23 இல் நேபிள்ஸ் நீதிமன்றம் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது. 
16.10.2014 அன்று தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என, லக்சம்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


 ISIS ,அல்கைடா என்ற அமைப்பை உலகத்தில் எந்த ஒருநாடும் ஆதரித்ததில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அப்படியானதல்ல. அல்கைடா என்ற அமைப்புடன் விடுதலைப் புலிகள் அமைப்பை ஒப்பிடுவது மிகவும் ஒரு உச்சமான கேவலமான காழ்ப்புணர்ச்சியாகத் தெரியவில்லையா ?? 
 

பாஞ்ச்! நன்றாக சொல்லியுள்ளீர்கள். 

Link to comment
Share on other sites

ஆண்டுகளை பாருங்கள் ,

2009 இற்கு எதை செய்தும் என்ன ஆகாப்போகுது 

அதைவிட பகிடி இந்தியாவும் தடை தமிழ் நாட்டை ஆளுபவர்களும் எதிர்ப்பு சீமானின் ஆதரவு எங்களுக்கு போலிருக்கு பான்சின் நியுசிலாந்து டச்சு நீதி மன்ற தீர்ப்பு பற்றிய கருத்துக்கள் .

சர்வதேசம் என்றால் என்னவென்று தெரியாது 

இந்தியா என்றால் யாரென்று தெரியாது 

தமிழ் நாட்டை ஆட்சி செய்பவர்கள் யாரென்று தெரியாது 

ஆனால் ஒரு சுப்பன் சொன்னான் குப்பன் சொன்னான் என்று நியாயப்படுத்தல் 

இருபது வருடமாக எந்த ஒரு நாட்டிடமும்  இருந்து ஒரு அங்கீகாரமோ கடைசி ஆதரவோ பெறமுடியவில்லை புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவவை மட்டும் கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓடிய உங்களுக்கு சர்வதேசம் என்றால் என்ன என்று சொன்னால் புரியவா போகுது .

84 இலேயே டெல்கியில் அலுவலம் திறந்து வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த ஆட்கள் நாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலவரம் வந்தவுடனேயே காணாமல் போனவர்கள்...
84 இலேயே டெல்கியில் அலுவலம் திறந்து வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த ஆட்கள்..
கடைசியில் மாலைதீவை பிடித்து தமிழீழம் அமைக்க முயன்றமை குறித்து உங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

3 hours ago, arjun said:

ஆண்டுகளை பாருங்கள் ,

2009 இற்கு எதை செய்தும் என்ன ஆகாப்போகுது 

அதைவிட பகிடி இந்தியாவும் தடை தமிழ் நாட்டை ஆளுபவர்களும் எதிர்ப்பு சீமானின் ஆதரவு எங்களுக்கு போலிருக்கு பான்சின் நியுசிலாந்து டச்சு நீதி மன்ற தீர்ப்பு பற்றிய கருத்துக்கள் .

சர்வதேசம் என்றால் என்னவென்று தெரியாது 

இந்தியா என்றால் யாரென்று தெரியாது 

தமிழ் நாட்டை ஆட்சி செய்பவர்கள் யாரென்று தெரியாது 

ஆனால் ஒரு சுப்பன் சொன்னான் குப்பன் சொன்னான் என்று நியாயப்படுத்தல் 

இருபது வருடமாக எந்த ஒரு நாட்டிடமும்  இருந்து ஒரு அங்கீகாரமோ கடைசி ஆதரவோ பெறமுடியவில்லை புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவவை மட்டும் கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓடிய உங்களுக்கு சர்வதேசம் என்றால் என்ன என்று சொன்னால் புரியவா போகுது .

84 இலேயே டெல்கியில் அலுவலம் திறந்து வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த ஆட்கள் நாங்கள்.

எனக்கு எதுவுமே தெரியாது! ஒப்புக்கொள்கிறேன். பெரும் அறிஞர்களும், அறிவாளிகளும்  நிறைந்துள்ள யாழ்களத்தில், நீயும் ஒருவனென்று ஏதோ கிறுக்குகிறாயே... உன்னைப்பற்றி அவர்கள் எப்படி எள்ளிநகையாடுவார்கள் என்று கொஞ்சமேனும் சிந்தித்தாயா? என்று என்னறிவு என்னைப் பரிகசிக்கத் துவண்டு கிடந்தேன். கவலைப்படாதேடா தோழா! நானிருக்கிறேன்!! என்று என்னைவிடவும் கீழாகக் கிறுக்கும் நீங்கள் எனக்குக் கைகொடுத்துள்ளீர்கள் நீங்கள் வாழவேண்டும்!!!  
 

Link to comment
Share on other sites

 

 

[url=http://www.yarl.com/forum3/topic/112639-பங்கு-பிரிப்புக்களும்-படுகொலையும்-பாகம்-2/?page=1]பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம் 2 

 

சாத்திரியார் யாழை மேய்பவர் என்ற அடிப்படையில இதை வாசிப்பார் என நினைக்கிறேன்.

புதிய  தலைமுறைக்காக "அன்று சிந்திய இரத்தம்" எழுதும் கப்பில இதையும் எழுதி முடித்து விடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஆளாளுக்கு எதிர்க்கருத்து எழுதுவதாக நினைத்துக்கொண்டு விதண்டாவாதம் செய்யாமல் யதார்த்தத்துக்கு வருவோம்.

புலிகளுடன் இருந்தவர்களே ( நான் சொல்வது இயக்கத்தில் வன்னியில், தலைமைக்கு வெகு அருகில் இருந்தவர்கள் பற்றி) அவ்வப்போது பணத்தைச் சுருட்டிக் கொண்டு கம்பிநீட்டியிருக்கிறார்கள். பணமென்று வரும்போது எவருமே விதிவிலக்கில்லை. 

அப்படியிருக்க இயக்கத்தால் வெளிநாட்டில் காசு சேர்க்கலாம் என்று அனுமதிப் பத்திரம் கொடுக்கப்பட்டவர்கள் மட்டும் அள்ளு கொள்ளையாய்த் தம்மிடம் மக்கள் இன உணர்வால் உந்தப்பட்டுக் கொடுத்த பணத்தைக் கைய்யாடாமல் இருப்பார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. இப்படிச் சொல்வதால் வெளிநாட்டில் பணம் சேர்க்கும் எல்லோருமே மற்றவர்களின் பணத்தைக் கைய்யாடுகிறார்கள் என்று சொல்ல வரவில்லை, ஆனால் கைய்யாடுபவர்களும் அங்காங்கே இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவருகின்றேன்.

இயக்கத்திற்காகப் பணம் சேர்த்தவர்கள் சேர்த்த பணத்தில் எத்தனை வீகிதத்தை வன்னிக்கு அனுப்பினார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதை இயக்கமும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லையாம் என்று பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஏனென்றால், சேர்க்கும் பணத்தையெல்லாம் மரியாதையாக ஊருக்கு அனுப்பிப் போடவேணும் என்று இயக்கம் கட்டளையிட்டால் எவருமே (மற்றவனின் காசில் ஆசைப் பட்டவர்களைச் சொல்கிறேன்) பணம் சேர்க்க முன்னுக்கு வரமாட்டார்கள். ஆகவே இயக்கமும் அவர்களுக்கு ஒரு பிடியைக் கொடுத்துக்கொண்டுதான் மீதியைப் பெற்றுக்கொண்டதாம்.

முதலில் இயக்கத்துக்காகப் பணம் சேர்ப்பவர்கள் எல்லாருமே சொக்கத் தங்கங்கள், நேர்மைக்கு இலக்கணங்கள் எனும் மாயைவிட்டு வெளியே வாருங்கள். சிலர் இருக்கிறார்கள், ஆனால் கைய்யாடுபவர்களும் இருக்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் இங்கே இயக்கத்துக்காகப் போராடவில்லை, பணம்தான் சேர்க்கிறார்கள். 

மாதாந்தப் பணம் கேட்டவர்களும், வீட்டு மோர்ட்கேஜில் மேலதிகமாகக் கடன் பெற்றுத் தாங்கோ என்று கேட்டவர்களும் இங்கே இருக்கிறார்கள். அதைவிட 2009 போரின் இறுதிக் காலத்திலும் பணம் கேட்டவர்களும் இருக்கிறார்கள். வன்னிக் கொலைக் களத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்த இவர்கள் எப்படிப் பணம் சேர்த்து யாருக்கு யாரினூடாக அனுப்ப அன்று சேர்த்தார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

இன்று பணத்திற்காகத் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. மாவீரர் தினம் இரண்டாக நடக்கிறது. குழுவுக்குக் குழு போட்டியாக மாவீரர் தின அறிக்கையும், செய்திகளும் வெளியிடுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கு எதிரிதான் காரணம் என்று நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதால் அவர்களின் வியாபாரம் களை கட்டுகிறது.

இறுதியாக, தலைமையையே ஏமாற்றி சேர்த்த பணத்தில் பகுதியை மட்டுமே வன்னிக்கு அனுப்பி மீதியை ஏப்பம் விட்டவர்களுக்கு இன உணர்வால் உந்தப்பட்டு, எதுவுமே யோசிக்காமல், "பொடியளுக்குத்தானே" என்று அள்ளிக் கொடுக்கும் அப்பாவிகளின் பணத்தை ஏப்பம் விடுவது ஒன்றும் அவ்வளவு கடிணமான காரியமாக இருக்கப்போவதில்லை.  

 

முதலில் யார் யார் எவ்வளவு பணத்தை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லட்டும், அந்தப் பணத்தை என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறார்கள் என்று சொல்லட்டும். அந்தப் பணத்தை தாயகத்தில் போரில் ஊணமான போராளிகளுக்கும், கணவனை, மனைவியை பெற்றொரை இழந்த அநாதைகளுக்கும் செலவழிப்பதாகச் சொல்லட்டும், அப்போது நம்புகிறோம் இவர்கள் நேர்மையானவர்கள் என்று. அதுவரை, இவர்கள் நம்பகத்தன்மை கேள்விக்குறிதான்.  

 

வாங்கோ, வந்து எல்லாரும் என்னை ஒரு திட்டு திட்டிவிட்டுப் போங்கோ !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு

உங்கள் கருத்தைப்பார்க்கும் போது

மிகவும் தள்ளி நின்றிருக்கின்றீர்கள் என்பது மட்டும் தான் தெரிகிறது..

அது உங்கள் தப்பல்ல

90 வீதமானவர்கள் இவ்வாறு தான் இருந்தார்கள்

நின்றார்கள்.

நீங்களுமா ரகு ......???

இதற்கு மேல் இத்திரியில் எழுத விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/21/2016 at 1:14 AM, தெனாலி said:

இப்ப என்ன சொல்ல வாறிங்க? காசடித்த கூட்டம் புலிக்கொடி தூக்கி தேவாரம் பாடியதால அவர்களை கண்டும் காணாமல் விடவேண்டுமா? இதுக்குள்ள காக்கை வன்னியன் எட்டப்பன் எல்லாம் எதுக்கு? சத்தியமாக எனக்கு உங்களை போன்றவர்களின் சிந்தனையோட்டம் விளங்குவதே இல்லை. கண்ணுக்கு முன்னால ஒரு கூட்டம் போராட்டத்தை காட்டி கோடி கோடியாக கொள்ளையடித்து வாழுது. அதை எவராவது சுட்டி காட்டினா அவன் சிங்கள கைக்கூலி. 

இப்படி யாழில் வந்து காட்டுக்கத்து கத்துவதை விட அவர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்யுங்களேன். அது இப்படியான நயவஞ்சகர்களை அறிந்துகொள்ளவும்  எமது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கவும்  பேருதவியாக இருக்கும்.

On 2/22/2016 at 3:06 PM, goshan_che said:

பாஞ்,

ஜேர்மனியில் மட்டுமில்லை உலகில் எங்கேயும் இப்போ நான்தான் புலி, புலி ஆதரவாகக் என்று சொல்லும் அனைவரும் இப்படிப்பட்ட கயவர்களே.

 

புலி எந்த ஒன்று மே 09 க்கு பின் இல்லை.

இப்போ இருபதெல்லாம் புலியை காட்டி வயிறு வளர்க்கும் கூட்டம்.

புலிதான் இப்போது இல்லைஎன்றாகிவிட்டதே  அப்படியிருந்தும் இப்போதும் ஏன் அவர்களுக்கு பணம் கொடுக்கிறீர்கள். இதில் யார் முட்டாள் என்று புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

மிகவும் யதார்த்தமான கருத்துகள்.

வெடிவிழப் போது தலை கவனம்.

எப்போதும்,

பெயரை எப்படி மாற்றினாலும் அதே அசட்டுக் கேள்விகள் மட்டும் எப்போதும் அப்படியே இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, arjun said:

உலகம் முழுக்க ஒருவரை தெரிகின்றதென்றால் அவர் பலவகையில் பிரபலாமாக இருக்கலாம் .

காந்தி ,மார்டின் லூதர் கிங் ,மாண்டேலா ஒரு விதம் 

கிட்லர் ,முசோலினி ,போல்போட் வேறுவிதம் 

பிரபலமாவது பெரியவிடயமல்ல அது எப்படி என்பதுதான் முக்கியம் .

தயவுசெய்து காந்தியையும் மண்டேலாவையும் ஒரேதட்டில் வைத்து ஒப்பிடாதீர்கள். காந்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பல வீரர்களின் உயிர் தியாகத்தால் கிடைத்த விடுதலையை தனதாக்கிக் கொண்டவர். மண்டேலா அப்படியல்ல.

 

இதே நாகரிக உலகத்தில்தானே ஜார்ஜ் புஷ்ஷும் பொய்யான காரணங்களைக்காட்டி இஸ்ரேலை பாதுகாக்க எத்தனையோ ஆயிரம் ஈராக்கியர்களை கொன்றுகுவித்தனர். 

Link to comment
Share on other sites

11 hours ago, Sasi_varnam said:

கலவரம் வந்தவுடனேயே காணாமல் போனவர்கள்...
84 இலேயே டெல்கியில் அலுவலம் திறந்து வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த ஆட்கள்..
கடைசியில் மாலைதீவை பிடித்து தமிழீழம் அமைக்க முயன்றமை குறித்து உங்கள் கருத்து என்ன?

நான் சிறுவனாக பார்க்கும் சசி பல வேலைகளில் குழந்தைதனமாகவும் கருத்தை எழுதுவார் .

84 இல் டெல்கியில் அலுவலகம் திறந்து நிருபர்களையும் வெளிநாட்டுதூதுவர்களை சந்தித்ததும் பயிற்சிக்கு பாலஸ்தீனத்திற்கு போராளிகள் சென்றதும் உமா மோரிசியல் உத்தியோகபஊர்வ பிரயாணம் மேற்கொண்டதும் பின்னர் செய்த பல தவறுகளால் இல்லை என்று ஆகிவிடாது .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடுவதில் இருந்த அக்கறை சற்றேனும் நாட்டில் என்ன நடக்கின்றது என்பதில் காட்டியிருந்தால் பலருக்கு இப்படி எழுதவேண்டிய தேவை வராது .

உங்களை மாதிரி நானும் எழுதுவதென்றால் முப்படையும் வைத்திருந்தவர்கள் எப்படி வெள்ளை கொடி பிடித்து எதிரியின் காலில் காலில் விழுந்தது குறித்து உங்கள் கருத்து என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு சொன்ன கருத்தையே பல இடங்களில், பல திரிகளில் பதிவு செய்து இருக்கிறேன்.
அது யதார்த்தம். எவனோ செய்த தவறுகளுக்கு யாரும் வெள்ளை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதே நேரம் மாறி, மாறி இங்கே உறவாடும் ஒருவருக்கொருவர் காரி உமிழ்து கொள்ளவும் தேவை இல்லை.

இன்னும் ஒரு திரியில் கனடாவில் தேசியத்தின் பெயரால் காசு சுருட்டியவர்களின் பெயர் விவரங்கள் இருந்தால் தாருங்கள், நான் அவர்களிடம் இது பற்றி கதைக்கிறேன் ஏன் என்றால் இது ஒரு ஈழ தமிழனின் கடமை எனவும் எழுதினேன்.

இதோ ஒரு உதாரணம்.
கொழும்பான் வாழ்க்கையில தெரிஞ்சு கொள்ள நெறையவே இருக்கு.
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புறிய செல்வோரை அரபுக்காரன் எப்படி ஆட்டிப்படைகிறான் என்பதை நாங்கள் அறிவோம்.  இங்கே அப்படி அல்ல, அவனவன் அவனவனுக்கு கைதேர்ந்த கலையை செவ்வனே செய்து கொண்டுதான் இருப்பான். 
இங்கே சீக்கியர் முதல், சிங்களவர் வரை
பாக்கிஸ்தானி முதல்  பாலஸ்தீனியன் வரை 
அயர்லாந்துக்காரன் முதல் ஆப்கானிஸ்தான் காரன் வரை
ஆக மொத்தம் வெள்ளையன் முதல் கருப்பன்வரை
ஒரு கொஞ்ச பேர் இந்த இந்த மாதிரியான முறை கேடான வேலைகள தொடர்ந்தும் செய்து கொண்டு தான் இருப்பார்கள் , இதில் தமிழர் ஒன்றும் விதி விலக்கல்ல.
இவர்களில் கொஞ்ச பேர் நொந்து போன தமிழனையே "தேசியம்" என்ற பெயரில் குறி வைகிறார்கள்.

கனேடிய பாராளுமன்ற செனட்  சபையில் இருந்த மைக் டாப்பி, பர்மேலா வாலின், இன்னும் கொஞ்ச பேர் பொய்யான கணக்கு வழக்குகளை காட்டி அரசாங்க பணத்தை கையாடி கோர்ட்டு, கேஸு என்று இன்னும் இழுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 

இப்படி எத்தனையோ தில்லாலங்கடி இருக்கு கொழும்பான்.
நமக்கென்னவோ கண்ணில் படுவது "புலம் பெயர் ~ ஈழத்து தமிழரின்" ஜில்மால் மட்டும்தான்.
அதற்காக அவர்கள் செய்வது சரி என்று மட்டும் நான் சொல்ல வரவில்லை.
அவர்கள் பத்தோடு பதினொன்று மட்டுமே. 
மற்றையவர்கள் எல்லாம் புனிதர்கள் என்ற உங்கள் விம்பம் தவறானது.

  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, arjun said:

நான் சிறுவனாக பார்க்கும் சசி பல வேலைகளில் குழந்தைதனமாகவும் கருத்தை எழுதுவார் .

84 இல் டெல்கியில் அலுவலகம் திறந்து நிருபர்களையும் வெளிநாட்டுதூதுவர்களை சந்தித்ததும் பயிற்சிக்கு பாலஸ்தீனத்திற்கு போராளிகள் சென்றதும் உமா மோரிசியல் உத்தியோகபஊர்வ பிரயாணம் மேற்கொண்டதும் பின்னர் செய்த பல தவறுகளால் இல்லை என்று ஆகிவிடாது .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடுவதில் இருந்த அக்கறை சற்றேனும் நாட்டில் என்ன நடக்கின்றது என்பதில் காட்டியிருந்தால் பலருக்கு இப்படி எழுதவேண்டிய தேவை வராது .

உங்களை மாதிரி நானும் எழுதுவதென்றால் முப்படையும் வைத்திருந்தவர்கள் எப்படி வெள்ளை கொடி பிடித்து எதிரியின் காலில் காலில் விழுந்தது குறித்து உங்கள் கருத்து என்ன ?

உங்கள் கருத்துக்களில் ஒன்று மட்டும் புறிவதில்லை..

அடிக்கடி "போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடுவதில்" என்ற சொற்களை பாவிக்கிறீர்களே ...

84 நாளில் வெளியேறியவர் நீங்கள்... 90 களில் வெளியேறியவன்  நான்.

சிங்கள காடையர், இலங்கை ராணுவ கெடுபிடி, இந்திய ராணுவ அட்டூழியங்கள், ஈ.பீ.டீ.பீ, ஒட்டுக்குழு, ஒட்டாத குழு, மாணிக்கதாசன், வெள்ளையன் இப்படி பல பேரின் கொடூரங்களுக்கு மத்தியில், அடக்கு முறைக்கு முகம் கொடுத்தவன்.

போராட்ட காலத்தில் புலிகளுக்கும், மக்களுக்கும் மண்ணில் நின்று சின்ன அளவிலாவது ஒத்தாசைகள், உதவிகள் புரிந்தவன் நான். 
எந்த விதத்தில் நீங்கள் போராட்டத்தில் என்னை விட பங்கெடுத்தவன், தோல் கொடுத்தவன் என்று சிலாகிக்கிறிர்கள்.        

வெள்ளை கொடி பிடித்து எதிரியின் காலில் ....

பல துரோகிகளின் உதவிகளோடு,

சர்வதேசத்தின் அரவணைப்போடு,

எதிரியின் கை ஒங்க,

நாம் பலம் இழக்க

முடிவுக்கு வந்ததே புலிகளின் ஆயுத போராட்டம்.   

Link to comment
Share on other sites

கருணாநிதி அடிக்காத காசா அல்லது ஜெயலலிதா அடிக்காத காசா இவற்றை எல்லாம் விட்டு விட்டு அவனவன் ரீமோர்ட்கேஜ் செய்து ,கிரடிற் காட்டில் அடித்து போராட்டத்திற்கு என்று கொடுத்த  கொஞ்ச காசை பற்றி ஏன் அலட்டிகொள்கின்றீர்கள் ?

ராஜீவ்காந்தி போபர்ஸில் அடிக்காத கொள்ளையா லல்லு பிரசாத் மாட்டுதீவனத்தில் செய்யாத ஊழலா நிதியுடன் தொடர்பில் இருந்தால் நாலு பணத்தை பொக்கெட்டுக்குள் வைக்கத்தான் சொல்லும் இதையெல்லாம் போய் பெரிதுபடுத்திக்கொண்டு ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragunathan said:

இங்கே ஆளாளுக்கு எதிர்க்கருத்து எழுதுவதாக நினைத்துக்கொண்டு விதண்டாவாதம் செய்யாமல் யதார்த்தத்துக்கு வருவோம்.

புலிகளுடன் இருந்தவர்களே ( நான் சொல்வது இயக்கத்தில் வன்னியில், தலைமைக்கு வெகு அருகில் இருந்தவர்கள் பற்றி) அவ்வப்போது பணத்தைச் சுருட்டிக் கொண்டு கம்பிநீட்டியிருக்கிறார்கள். பணமென்று வரும்போது எவருமே விதிவிலக்கில்லை. 

அப்படியிருக்க இயக்கத்தால் வெளிநாட்டில் காசு சேர்க்கலாம் என்று அனுமதிப் பத்திரம் கொடுக்கப்பட்டவர்கள் மட்டும் அள்ளு கொள்ளையாய்த் தம்மிடம் மக்கள் இன உணர்வால் உந்தப்பட்டுக் கொடுத்த பணத்தைக் கைய்யாடாமல் இருப்பார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. இப்படிச் சொல்வதால் வெளிநாட்டில் பணம் சேர்க்கும் எல்லோருமே மற்றவர்களின் பணத்தைக் கைய்யாடுகிறார்கள் என்று சொல்ல வரவில்லை, ஆனால் கைய்யாடுபவர்களும் அங்காங்கே இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவருகின்றேன்.

இயக்கத்திற்காகப் பணம் சேர்த்தவர்கள் சேர்த்த பணத்தில் எத்தனை வீகிதத்தை வன்னிக்கு அனுப்பினார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதை இயக்கமும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லையாம் என்று பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஏனென்றால், சேர்க்கும் பணத்தையெல்லாம் மரியாதையாக ஊருக்கு அனுப்பிப் போடவேணும் என்று இயக்கம் கட்டளையிட்டால் எவருமே (மற்றவனின் காசில் ஆசைப் பட்டவர்களைச் சொல்கிறேன்) பணம் சேர்க்க முன்னுக்கு வரமாட்டார்கள். ஆகவே இயக்கமும் அவர்களுக்கு ஒரு பிடியைக் கொடுத்துக்கொண்டுதான் மீதியைப் பெற்றுக்கொண்டதாம்.

முதலில் இயக்கத்துக்காகப் பணம் சேர்ப்பவர்கள் எல்லாருமே சொக்கத் தங்கங்கள், நேர்மைக்கு இலக்கணங்கள் எனும் மாயைவிட்டு வெளியே வாருங்கள். சிலர் இருக்கிறார்கள், ஆனால் கைய்யாடுபவர்களும் இருக்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் இங்கே இயக்கத்துக்காகப் போராடவில்லை, பணம்தான் சேர்க்கிறார்கள். 

மாதாந்தப் பணம் கேட்டவர்களும், வீட்டு மோர்ட்கேஜில் மேலதிகமாகக் கடன் பெற்றுத் தாங்கோ என்று கேட்டவர்களும் இங்கே இருக்கிறார்கள். அதைவிட 2009 போரின் இறுதிக் காலத்திலும் பணம் கேட்டவர்களும் இருக்கிறார்கள். வன்னிக் கொலைக் களத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்த இவர்கள் எப்படிப் பணம் சேர்த்து யாருக்கு யாரினூடாக அனுப்ப அன்று சேர்த்தார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

இன்று பணத்திற்காகத் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. மாவீரர் தினம் இரண்டாக நடக்கிறது. குழுவுக்குக் குழு போட்டியாக மாவீரர் தின அறிக்கையும், செய்திகளும் வெளியிடுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கு எதிரிதான் காரணம் என்று நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதால் அவர்களின் வியாபாரம் களை கட்டுகிறது.

இறுதியாக, தலைமையையே ஏமாற்றி சேர்த்த பணத்தில் பகுதியை மட்டுமே வன்னிக்கு அனுப்பி மீதியை ஏப்பம் விட்டவர்களுக்கு இன உணர்வால் உந்தப்பட்டு, எதுவுமே யோசிக்காமல், "பொடியளுக்குத்தானே" என்று அள்ளிக் கொடுக்கும் அப்பாவிகளின் பணத்தை ஏப்பம் விடுவது ஒன்றும் அவ்வளவு கடிணமான காரியமாக இருக்கப்போவதில்லை.  

 

முதலில் யார் யார் எவ்வளவு பணத்தை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லட்டும், அந்தப் பணத்தை என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறார்கள் என்று சொல்லட்டும். அந்தப் பணத்தை தாயகத்தில் போரில் ஊணமான போராளிகளுக்கும், கணவனை, மனைவியை பெற்றொரை இழந்த அநாதைகளுக்கும் செலவழிப்பதாகச் சொல்லட்டும், அப்போது நம்புகிறோம் இவர்கள் நேர்மையானவர்கள் என்று. அதுவரை, இவர்கள் நம்பகத்தன்மை கேள்விக்குறிதான்.  

 

வாங்கோ, வந்து எல்லாரும் என்னை ஒரு திட்டு திட்டிவிட்டுப் போங்கோ !

இங்கு ஒரு யாதர்தமும் இல்லை எதார்த்தமும் இல்லை 

புலியை வைத்து வாந்தி எடுப்பது ....
புலம்பெயர்ந்தவர்களை வைத்து வாந்தி எடுப்பது ...
(அவர்களுக்கு புலன் பெயர்ந்துள்ளதால் அந்த லிஸ்டில் அவர்கள் இல்லை) 
தமிழ் இனத்தை வைத்து வாந்தி எடுப்பது ....
"தமிழ் ஈழம்"  அது எதோ புலிகள் உருவாக்கிய நிலம் என்று 
இரு மனபிராந்தி அதைவைத்து வாந்தி எடுப்பது ....


எல்லாம் முடிய ஒன்றுமில்லை என்றால் 
மக்கள் எவளவு கஸ்ட்ரபட்டு காசு கொடுத்தார்கள் ?
என்று நீலி கண்ணீர் வடிப்பது ....
காசு கொடுத்த நாங்களே எதோ நடப்பது நடக்கட்டும் என்று 
பார்த்துகொண்டு இருக்கிறோம்.

புலி இல்லை 
புலம்பெயர்ந்தவர்கள் இல்லை 
தமிழ் இல்லை 
தமிழ் ஈழத்தை சார்ந்தவரில்லை 

இப்ப ஏன் குத்தி முறிகிறார்கள் ? 
எங்கேனும் சொறிஞ்சா ...? போய் நல்ல கடி சொறி மருத்துவரை பார்க்க வேண்டும் 
மூளை குறைபாடு என்றால் பொய் ஒரு சைகொலோஜிச்டை பார்க்க வேண்டும்.

குறைந்த பட்சம் ஒரு கடிதம் போடுபவனுக்கே ஒரு முகவரி வேண்டும்.
இதில் அடுத்தவனுக்கு வாந்தி எடுக்க வெளிக்கிட்டு விட்டார்கள்.

இதுக்குள் அல்கெய்டா ... ஐ ஸ் ஸ் பற்றி புலியை செருகி விட 
மன கனவு கானபவர்களுக்கு ஒன்றை சுருக்ககமாக சொல்கிறேன்.

முடிந்தால் ஐ ஸ் ஸ் கொடியுடன் கனடாவில் நாலு வீதியில் திரிந்துவிட்டு 
வந்து இந்த வர்னைகளை கொட்டவும்.

எங்களிடம் நீதி நியாயம் இருக்கிறது 
அது அவர்களுக்கும் தெரியும் 
எமக்கு முகவரி இருக்கிறது .... அதுதான் புலிக்கொடி !
வரும் 14ஆம் திகதியும் இதே கொடியுடந்தான் ஐ நா போகிறோம் .
வெள்ளை மாளிகை போனோம் ...
பக்கிங்கம் பலஸ் போனோம் ....
டில்லிக்கும் போனோம் .....
உலகம் எங்கும் போய்க்கொண்டுதான் இருக்கிறோம்.

நாம் ஈழ தமிழர்கள் 
அடுக்கமுறைக்கு ஆளானவர்கள் 
அகிம்சை தோற்றது 
ஆயுதம் ஏந்தி போராடினோம் 
சர்வ ஆதிக்க உலகம் எம்மை அழித்தது 
(உலகில் இது புதியதல்ல ) 
மீண்டும் கதவுகளை தட்டுவோம்.

உரிமை போர் உடைந்ததாய் உலகில் இல்லை ஒரு உவமை !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கனடாவில் ஐ எஸ் கொடியோடு நடக்கணும் எண்டா 

நீங்கள் கொழும்பில் கோல்பேசில் புலிக் கொடியோடு நடக்கோணும் அதுதான் நியாயமான சவால்.

அவருக்கும் ஈராக் தெருக்களில் போய் ஐ எஸ் கொடி ஆட்டப் பயமிருக்காது.

மேற்கின் பார்வையில் புலியும் ஐ எஸ் சும் பயங்கரவாதிகள்.

ஆனால் ரெண்டும் ஒண்டல்ல.

ஐ எஸ் எதிரி.

புலி தேவைக்கேற்ப பயன்படுத்தக் வேண்டிய அமைப்பு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் புலிக்கொடியை புலிகளின் கட்டுப்பாடில் உள்ள 
பிரதேசத்தில் மட்டுமே பிடிக்கிறோம் என்று எழுதவில்லை என்று நினைக்கிறேன்.
உலகம் எங்கும் பிடிக்கிறோம் என்றுதான் எழுதினேன்.

ஜெனங்கள் தங்கள் உரிமைகளை கொல்பேசில் (கொழும்பில்)
ஜெனநாயக ரீதியாக பேசும் நிலைமை இருந்திருந்தால் 

புலியே இருந்திருக்காது!

நாட்டு பற்று காரணமாக 
எனது வீட்டு முற்றத்திலேயே ஒரு சிங்க கொடி பறந்து கொண்டு இருக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.