Jump to content

ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூடியது: தாயகத்தை கைப்பற்ற சதி- வைகோ ஆவேச பேச்சு


Recommended Posts

பரபரப்பான சூழ்நிலையில் ம.தி.மு.க. உயர் நிலைக் கூட்டம் தாயகத்தில் இன்று காலை கூடியது.

இதில் கலந்து கொள்வதற்காக பொது செயலாளர் வைகோ காலை 10 மணிக்கு தாயகம் வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் கூடி இருந்தனர்.

வைகோவைப் பார்த்ததும் புரட்சிப் புயல் வைகோ வாழ்க என்று உணர்ச்சி பொங்க வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர். தாயகம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தொண்டர்கள் மத்தியில் வைகோ ஆவேசமாக பேசினார்.

அப்போது உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் விட்டு கதறி அழுதார். வைகோ வந்ததும் கூட்டம் தொடங்கியது. முன்னதாக தாயகத்தில் தொண்டர் வைத்திருந்த கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார். நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கேக் வழங்கினார்.

தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசியதாவது:-

ம.தி.மு.க.வை எத்தனையோ கஷ்டங்களை சந்தித்து வளர்த்தோம். 5 உயிர்களை இழந்தோம். தாயகம் என்ற பெயரில் புதிய கட்சி அலுவலகத்தையும் திறந்தோம்.

இந்த அலுவலகம் சாதாரணமாக கட்டப்பட்டது அல்ல. ஜோசப் என்பவர் ஏசு பிறந்த ஊரான பெத்லகேம் சென்று அங்கிருந்து புனித நீரை எடுத்து வந்து தெளித்து வாஸ்து முறைப்படி கட்டப்பட்டது.

13 வருடங்களாக எந்த வன்முறையிலும் ஈடுபடாமல், யாருக்கும் தீங்கு செய்யாமல் கட்சி நடத்துகிறோம். கலவரம் நிற்க வேண்டும், சாந்தி தழைக்க வேண்டும் என்பதே விருப்பம். கிறிஸ்துமஸ் பண்டிகையை கூட அந்த நோக்கத்தில்தான் இன்று கொண்டாடுகிறார்கள்.

ம.தி.மு.க. உருவான வரலாறை நினைத்துப்பார்க்கிறேன். கொலைகார பழி சுமத்தி வெளியேற்றினார்கள். பலர் மடிந்தனர். பொட்டல் காட்டில் நின்று கட்சி வளர்த்தோம். வீதி வீதியாக பணம் திரட்டி புதிய கட்டிடம் கட்டினோம். இதற்காக பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் அல்ல. இந்த தாயகம்தான் எனக்கு கோவில், மசூதி, தேவாலயம்.

குருவிக்குத்தான் கூடு கட்டிய கஷ்டம் தெரியும். ஏழை விவசாயி மனைவி மக்களுடன், மண்ணைப் பிசைந்து சுவர் எழுப்பி ஓலைகள் கட்டி குடிசை செய்து உள்ளே குடியேறுகிறான். அந்த விவசாயிக்குத்தான் கூரை வீட்டின் அருமை தெரியும். அவர்களைப் போலத்தான் தாயகத்தை கட்டினோம்.

1994 ஜனவரி 15-ல் இந்த அலுவலகம் திறக்கப்பட்ட போது என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தோம். அண்ணாவின் தாயகம் நினைவுக்கு வந்தது. அந்த பெயரை சூட்டினோம். இது எல்லோரும் கூடும் தாயகம் நம் அனைவருக்கும் வீடு. இதனை உருவாக்கப்பட்டபாடுகள் ஏராளம்.

இப்படி வளர்க்கப்பட்ட இயக்கத்தை நிர்மூலம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் யாரும் ஆத்திரப்படக்கூடாது. அமைதி காக்க வேண்டும். பழிச்சொல்லுக்கு பழக்கப்பட்டவர்கள் நாம் துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். சாந்த குணம் உள்ளவர்கள் பாக்கிய வான்கள்.

13 வருடங்களாக கட்சி நடத்துகிறோம். எந்த கலவரத்திலும் ஈடுபட்டது இல்லை. பொதுமக்களுக்கு இடைïறு செய்தது இல்லை. முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக நடை பயணம் சென்றேன். 5 நிமிடம் கூட போக்குவரத்து நின்றது இல்லை.

நமது கட்சிதான் தமிழ் நாட்டுக்கு தேவையான நல்ல கட்சி. ஜெயிக்கலாம், ஜெயிக்காமல் போகலாம். ஓட்டு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். ஆனால் தமிழ்நாட்டுக்கு நல்ல கட்சி நமது கட்சிதான். தற்போது ம.தி.மு.க.வை அழிக்க சில திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.

அ.தி.மு.க. உடன்பாட்டில் இருந்து நம்மை வெளியேற்றுவது முதல் திட்டம். கலவரம் செய்து நாங்கள்தான் உண்மையான ம.தி.மு.க. என்று அறிவிக்க செய்வது இன்னொரு திட்டம். சதி திட்டங்கள் எங்கு வகுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.

கடந்த மாதம் 27-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சி.ஐ.டி. நகர் வீட்டில் முதல்- அமைச்சரை இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இன்று காலை கூட செஞ்சி ராமச்சந்திரன் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியுள்ளார்.

200-க்கும் மேற்பட்ட கிரிமினல்கள் போக்கிரிகளுடன் தாயகத்துக்கு உள்ளே வர திட்டமிட்டதாக தகவல் கிடைத்து உள்ளது. அவர்களை தடுத்தால் கலவரம் செய்யவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அவர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

கடைசி நேரத்தில் இது மாறலாம். உள்ளே நுழையும்போது நீங்கள் தடுத்தால் கைகலப்பில் ஈடுபடுவார்கள். அதன் பிறகு மாநகராட்சி தேர்தலில் நடந்ததுபோல வன்முறைகள் நிகழும். எனவே எந்த கட்டத்திலும் ஆத்திரப்படாதீர்கள்.

ம.தி.மு.க. என்ற கட்சியே இருக்க கூடாது என்பதுதான் அவர்கள் திட்டம். ஜெயிலில் இருந்து வெளிவர உதவும்படி நான் மன்றாடியதாக பழி சொல்லப்பட்டுள்ளது. நான் ஜெயிலில் இருந்து வெளிவர விரும்பாமல் தான் உள்ளே இருந்தேன். யாரிடமும் மன்றாடவில்லை. இன்னும் என் மீது வழக்கு உள்ளது.

தேர்தலில் ஆதரவு வேண்டும் என்று கேட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். நான் போய் கண்ணீர் விட்டு கதறி அழுதேனாம். தி.மு.க. வுக்கு ஆபத்து வந்த காலங்களில் கூட கட்சியை பாது காக்க போராடியவன். கட்சிப் பதவியில் இருந்து எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரனை நீக்கினோம்.

கோர்ட்டில் அதற்கு மட்டும்தான் தடை பெறப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தை நடத்த தடை இல்லை. அவர்களே பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்துள்ளனர். அதன் பிறகு இங்கே ஏன் வர வேண்டும். தி.மு.க. தொண்டர்களுக்கும், எங்களுக்கும் பகை இல்லை. நீங்கள் குறுக்கே வராதீர்கள்

ரவுடிகள் வரட்டும், போலீஸ் வரட்டும் அறவழியில் எதிர்ப்போம். என்னையும் தாக்க திட்டமிட்டுள்ளனர். தாயகத்தை பூட்டி விட வேண்டும். இந்த கட்சி இருக்ககூடாது. அலுவலகம் இயங்க கூடாது என்று நினைக்கிறார்கள். பூட்டி போடவும் திட்டமிடுகிறார்கள்.

அப்படிப்பட்ட அநீதி நடந்தால் பொட்டல் காட்டில் நின்று கூட கட்சியை நடத்துவேன். என் உடம்பில் உயிர் இருக்கும் வரை கட்சியை வளர்ப்பேன். எனக்கு பிறகு லட்சோப லட்சம் தொண்டர்கள் வளர்ப்போம். எதற்கும் அஞ்ச மாட்டோம்.

(இவ்வாறு கூறும்போது வைகோ கண்கலங்கி அழுதார்)

எங்கள் மனதில் கள்ளம் இல்லை, துரோகம் இல்லை, எது நடந்தாலும் சந்திப்போம், கலவரம் செய்து தாயகத்தை பூட்டி விடலாம் ஆனால் நாங்கள் வாழும் தமிழக மக்களின் இதயங்களை பூட்ட முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இன்றைய கூட்டத்தில் மொத்தம் உள்ள 36 மாவட்ட செயலாளர்களில் 33 பேர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் தியாகபாடி எல்.கணேசனுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் அவர் கலந்து கொள்ள வில்லை.

கோவை, புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நீலகிரி மாவட்ட செயலாளர் நஞ்சன் அமெரிக்கா சென்று உள்ளார். இவர்கள் இருவரும் வைகோவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

பொருளாளர் கண்ணப்பன், மல்லை சத்யா, பட அதிபர் எஸ்.தாணு, செய்தி தொடர்பாளர் நன்மாறன், சென்னை மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், வீர.இளவரசன், ஞானதாஸ், டாக்டர் சதன்திருமலை குமார், வரதராஜன், மாநில நிர்வாகிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சீமா பஷீர், மனோகரா, ராமமூர்த்தி, குமாரி விஜயகுமார், தேவ தாஸ், அருணாசலம், பாளை. குருநாதன், உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஏற்கனவே கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட எல்.கணேசன் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

தென்மாவட்ட விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நடை பயணம் மேற்கொண்டு மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்தமைக்காக வைகோவுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.