Jump to content

கொன்று விடுவார்கள் என்பதால் போகலைசெஞ்சி


Recommended Posts

சென்னை: மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் என்னை தாக்க திட்டமிட்டிருந்ததால் நான் அங்கு போகவில்லை என்று செஞ்சி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் இன்று கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் நடந்தது. முதலில் இந்தக் கூட்டத்தில் நாங்களும் கலந்து கொள்வோம் என்று எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் கூறியிருந்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால் இருவரும் வரவில்லை. எல்.ஜி. தஞ்சையில் இருந்தார். செஞ்சியார் மட்டும் சென்னையில் இருந்தார்.

ஏன் கூட்டத்திற்குப் போகவில்லை என்பதை செய்தியாளர்களிடம் செஞ்சி ராமச்சந்திரன் விளக்கினார். அவர் கூறுகையில், அவைத் தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள்தான் இதுபோன்ற கூட்டங்களை கூட்ட முடியும். மதிமுக தொடங்கப்பட்ட காலம் முதல் இதுதான் நடந்து வருகிறது.

இதுவரையில் நடைபெற்ற தேர்தல்களில் மதிமுக பெற்ற வெற்றி தோல்வி குறித்து விவாதிக்க திட்டமிட்டிருந்தோம். நானும், எல்.கணேசனும் கலந்து கொண்டால், மாவட்டச் செயலாளர்கள் மனம் மாறி எங்கே எங்கள் பக்கம் வந்து விடுவார்களோ என்ற பயத்தில்தான் அவசரம் அவசரமாக சட்டவிரோதமாக ஒரு கூட்டத்தைக் கூட்டி எங்களை நீக்குவதாக அறிவித்தார்கள்.

இதன் பிறகு நடைபெற்ற கூட்டங்களில் தாயகத்தை கைப்பற்ற முயற்சி நடக்கிறது, உயர் நிலைக் குழுக் கூட்டத்தில் வன்முறையைத் தூண்ட சதி நடக்கிறது என்று வைகோ குற்றம் சாட்டி வந்தார்.

உண்மையிலேயே வைகோதான் தாயகத்தில் குண்டர்களைத் திரட்டி வைத்துள்ளார். வன்முறைக்கு இடம் அளிக்கக் கூடாது என்ற காரணத்தினால் தான் நாங்களும் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

செய்தியாளர்: சதி என்று எதைச் சொல்கிறீர்கள்? உங்களை கொலை செய்யும் திட்டம் இருந்ததாக கூறுகிறீர்களா.?

செஞ்சி: நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது அந்தக் குற்றச்சாட்டு ஒத்துப் போவது போலத்தான் தெரிகிறது. எங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் முக்கியம் இல்லை. 29ம் தேதி சேலம் சுமங்கலி கல்யாண மண்டபத்தில் பொதுக்குழு நடக்கவுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் கலந்து கொள்வார்கள்.

குடும்ப அரசியலை தொடர்ந்து எதிர்த்து வந்தவர் வைகோ. திமுகவில் மு.க.ஸ்டாலின் கட்சி பொறுப்புகளை வகித்து தேர்தலில் நின்று ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் வைகோவின் மகனுக்கும், மதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சியில் அவர் எந்தப் பொறுப்பிலும் இல்லை. ஆனால் கட்சி விவகாரங்களிலும், நிர்வாகிகள் நியமனத்திலும் அவர் தலையிடுகிறார்.

வைகோ அதிமுக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும். அப்படி அவர் வெளிவந்தால், தற்போது நாங்கள் எடுத்த முடிவு குறித்து மறு பரிசீலனை செய்வோம். நான் மத்திய அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு இவ்வாறு நடந்து கொள்வதாக கூறப்படுவது தவறு. எனக்கு பதவி மீது ஆசை இல்லை என்றார் செஞ்சி ராமச்சந்திரன்.

http://thatstamil.oneindia.in/news/2006/12/25/gingee.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.