Jump to content

நான் தான் கருப்பு எம்ஜிஆர் விஜய்காந்த்


Recommended Posts

சென்னை: எனக்கு எம்.ஜி.ஆரின் ஆசி நிறைய உள்ளது என நடிகர் விஜய்காந்த் கூறினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பெரியார் மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மூவேந்தர் மக்கள் முன்னணி, ஜனநாயக முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 2,000 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி தேமுதிகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில்,

நான் எம்.ஜி.ஆரை எனது குருவாக ஏற்று கொண்டிருக்கிறேன். அதனால் அவரது சீடனாகிய என்னை மக்கள் கறுப்பு எம்ஜிஆர் என்று அழைக்கின்றனர். அவரது ஆசி எனக்கு நிறைய உள்ளதால் தான் அவரது சிலை மட்டுமின்றி அவர் பயன்படுத்திய பிரசார வாகனம், "கோட்' மற்றும் "டை' ஆகியவையும் எனக்கு கிடைத்தன.

எம்ஜிஆரை போல நான் கட்சி ஆரம்பித்தது மக்களுக்காக தான். நான் அரசியலை வைத்து பிழைக்க வரவில்லை. மக்களுக்காக உழைக்கத் தான் வந்திருக்கிறேன். எம்ஜிஆர் மக்களையே தனது வாரிசாக நினைத்தார். எனக்கு இரு பிள்ளைகள் இருந்தாலும் நானும் மக்களையும், அவர்களது குழந்தைகளையும் தான் வாரிசாக நினைக்கிறேன்.

தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளிக்கும் கட்சிகள் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஐந்தாண்டுகளை கடத்துகின்றனர்.

முல்லை பெரியாறு அணை பிரச்னையானாலும், காவிரி பிரச்னை ஆனாலும் காலத்தை கடத்துவதே அரசின் நடவடிக்கையாக உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தீர்வு கிடைக்காதது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட உச்சக்கட்ட கொடுமை.

எதற்கெடுத்தாலும் ஜெயலலிதா பேசிக்கொண்டே இருக்கிறார் என்று முதல்வர் கருணாநிதி சொல்கிறார். ஜெயலலிதா ஆட்சி செய்த போது அவரும் அதை தானே செய்தார்.

தேர்தல் நேரத்தில் கூட்டணி வைக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர். நான் அவர்களிடம் கட்சி மீது நம்பிக்கை வையுங்கள், கூட்டணி மீது நம்பிக்கை வைக்காதீர்கள் என்று கூறினேன். இன்றைக்கு தேமுதிக சாதித்து காட்டியிருக்கிறது.

நான் என் கட்சி தொண்டர்களை வேறு கட்சி தொண்டர்களோடு பேசக் கூடாது என்று சொல்வதில்லை. அவ்வாறு பேசுபவர்களை மற்றவர்கள் போல் கட்சியை விட்டு நீக்குவதில்லை. மாறாக அவர்களுடன் நெருங்கி பழகுங்கள் என்று அறிவுறுத்துவேன் என்றார்.

கௌரவ ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும்:

இதற்கிடையே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் முழுவதும் உள்ள 67 அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள 1500க்கும் மேற்பட்ட விரிவுரையாளர் பணியிடங்களில் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்கப்படாத காரணத்தினால் மணி நேர கூலி அடிப்படையில் மணிக்கு ரூ. 100 வீதம் மாதத்திற்கு 40 மணி நேரம் என்று அரசுக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

கடந்த கல்வி ஆண்டில் முடிவில் உயர்நீதிமன்றம் இனிமேல் கௌரவ விரிவுரையாளர் முறையே கூடாது என்று தீர்ப்பளித்து தமிழக அரசுக்கு நிரந்தர நியமனத்துக்கு அறிவுறுத்தியது. தமிழக அரசும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

அப்படி நிரந்தர ஆசிரியர் நியமனத்தின் போது அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளராக வேலை பார்ப்பவர்களில் தகுதி உடையோருக்கு முன்னுரிமை கொடுத்தும், குறைந்தபட்ட தகுதியுயோருக்கு (முதுநிலை 55 சதவீதம்) கூடுதல் தகுதியான எம்பில் முடிப்பதற்கு குறுகிய கால அவகாசம் கொடுத்தும், அரசு அவர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்.

பள்ளிகளிலும் ஏனைய துறைகளிலும் தமிழக அரசு தற்காலிக ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிரந்தரப்பணியில் அமர்த்தியதைப் போல கௌரவ விரிவுரையாளர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து நிரந்தரப்பணியில் அமர்த்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2006/12...vijaykanth.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருப்பு எம்.ஜி.ஆரைப் பார்த்து ஒரியினல் எம்.ஜி.ஆர் எத்தனையாம் ஆண்டு கட்சி தொடங்கினார் என்று கேட்டுப் பாருங்கள் அவருக்குத் தெரியாது. வெட்கத்தை விட்டு ஒன்றைச் சொல்கிறேன், நடிகை மதுமிதாவிடம் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இறந்த செய்தியை நான் தொலைபேசியில் கூறியபோது, பாலாண்ணையைப் பற்றி அவர் பல விடயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார். அந்த மதுமிதாவுக்கு தெரிந்த விடயங்கள்கூட இந்த கறுப்பு எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. ஈழத்தமிழர் ஆதரவுப் போரட்டம் முல்லைப் பெரியாறு, தமிழ் வழிக் கல்வி போன்றவற்றில் இவர் தன்னை ஈடுபடுத்தியதில்லை. மறைமலையடிகள் யார் என்று கேட்டுப் பாருங்கள் விடை தெரியாது. இவர் தமிழ் நாட்டில் கட்சி நடத்துகிறாராம்.

விஜயகாந்த இவ்வாறு அரசியலில் குறளி வித்தை காட்டுவது, வயது போனதால் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு குறைவதால் ஏற்படும் செல்வாக்கின் வீழ்ச்சியை அரசியலில் நுழைந்து சரிசெய்துவிட முடியும் என நினைக்கும் ஆர்வக் கோளாறென்றே கருதமுடிகிறது. ஐம்பது வயதுக்குப் பிறகும் இருபது வயது நடிகைகளுடன் கட்டிப் பிடித்து காதல் டூயட் பாடவேண்டும் என்று நினைத்தால் அது தொடர்ந்து நடக்கக்கூடியதா?

அரசியல் இவர் படங்களில் ஓட்டும் பொலிஸ் ஜீப்பும் அல்ல, செங்கோல் இவர் தொப்புளில் விட்ட பம்பரமும் அல்ல!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி : பத்திரிகை நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "பெரியாரே கடவுள் இல்லைன்னு சொல்லலையே மூடநம்பிக்கைகள் கூடாதுன்னுதானே சொல்லியிருக்கிறார்" என்று திரு விஜயகாந்த் அவர்கள் பதிலளித்திருக்கிறார்.

இது தொடர்பான எனது கருத்துப் படம்

vmct0.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.