Jump to content

பலாலி விமானநிலையத்தை பூநகரி நோக்கி நகர்த்த முடியும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பலாலி விமானநிலையத்தை பூநகரி நோக்கி நகர்த்த முடியும்
[ சனிக்கிழமை, 20 பெப்ரவரி 2016, 08:40.39 PM GMT ]
palale_plit01.jpg
மக்கள் சொந்த இடங்களில் மீளக்குடியேற வேண்டும். அவர்களின் தேவைகள் ஓரளவு நிறைவேற்றப்பட பின்னரே அபிவிருத்தி தொடர்பில் ஆராய வேண்டும்

இவ்வாறு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் விமான நிலையத்தை வேறுபகுதிக்கு மாற்றி அப்பகுதியை அபிவிருத்தி செய்யமுடியும் எனத் தெரிவித்தார்.

வலி. வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அன்மையில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பலாலி விமானநிலையம் தொடர்பில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாகவே யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பேராசிரியர் துரைராஜா அவர்களால் முன்மொழிவு செய்யப்பட்டது.
குறிப்பாக பலாலி விமானநிலையத்தை பூநகரியில் உள்ள கௌதாரிமுனை வினாசிஓடை, மண்ணித்தலை போன்ற பரந்த நிலப்பரப்பில் அமைக்கமுடியும்.

இத்தகைய இடங்களில் விமானநிலையம் அமைக்கும் போது வடக்கு கிழக்கிற்கான மத்திய நிலையமாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து குருநாகலில் இருந்து மண்ணித்தலைக்கு 300 மீற்றர் வரை பாலம் அமைப்பதன் ஊடாகவும் ஏற்கனவே கேரதீவு சங்குப்பிட்டி பாதை இருக்கிறது.

இதன்மூலம் மன்னாரில் இருந்து வருபவர்களுக்கு மட்டக்களப்பு, திருகோணமலையில் இருந்து வருபவர்களுக்கு முல்லைதீவின் ஊடாக வருவதற்கு ஆரம்பத்தில் இருந்தே ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக முன்னாள் பேராசிரியர் துரைராஜா மண் தொடர்பான ஆய்வை மேற்கொண்டே இந்த ஆய்வை முன்வைத்தார்.

அந்த எண்ணக்கருவின் படி பலாலி விமானநிலைய பிரதேசம் செம்மண் பிரதேசமாகும். இது யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தினுடைய முக்கியமான முதுகெலும்பாகும்.

குறிப்பாக மரக்கறி செய்கை, முந்திரிகை, வெற்றிலை செய்கைகளுக்கு உகந்த இடம். இங்கு மண், நீர் வளமான பிரதேசமாகும். இத்தகைய பிரதேசத்தை விமானநிலைய விஸ்தரிப்பு எனக்கூறி அரசு சுவீகரிக்குமானால் யாழ். மாவட்டத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு இல்லாமலே போய்விடும் சூழல் ஏற்படும்.

அதற்காகவே பூநகரி அடையாளம் காணப்பட்டது. இது கூட நெருக்கடி ஏற்படுமானால் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள சுருவில் பகுதி பரந்த பகுதியாகவும் தட்டையானதும் கல்பூமியாகவும் காணப்படுகிறது.

இந்த இடத்திலும் விமானநிலையத்தை அமைப்பது சாலப்பொருத்தமாகும் என்ற விடயமும் அன்று ஆராயப்பட்டது. அதந்கான காரணம் அராலித்துறை பாலம் அமைக்கும்போது 15 நிமிடத்திலும் செல்லமுடியும்.

அதேபோல் பண்ணைப்பாலத்திந்கும் செல்ல முடியும். அதேபோல் மண்டைதீவிற்கும் கௌதாரிமுனைக்கும் ஏற்படுத்தும் பாதைகூட மிக விரைவாக தீவுப்பகுதிக்கு செல்ல முடியும்.
இவ்வாறு ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் விமானநிலையம் அமையும் போது தீவகம் முழுமையாக அபிவிருத்தி அடையும். அங்கு மீள்குடியேற்றம், விவசாயம் அதிகரிக்கும்.
மண்டைதீவிலும் அமைக்கலாம். ஆனால் போதிய இடம் அங்கு இல்லை.

எனினும் பூநகரி, சுருவில் பகுதிகளில் விமானநிலையம் அமைப்பது காலத்தின் தேவையாக இருக்கும். நாம் எத்தகைய அபிவிருத்தி செய்தாலும் மக்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என்றார்.

http://www.tamilwin.com/show-RUmuyCRUSWfv4B.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுருவிலில் விமானத்தளமா?அப்ப நான் வீட்டிற்கு நடந்தே போயிடலாம்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களமும் இந்த உலக வல்லாதிக்க சக்திகளும் பொதுமக்களினதும் தமிழரதும் தேவைக்கான விமான  நிலையம் அமைப்பதாயின் அவர்களது கருத்துகளுக்குச் செவிசாய்ப்பர். இது தமது இராணுவ பொருண்மிய நலன்நோக்கிலான ஒரு ஆக்கிரமிப்புத் திட்டமாகவுள்ளதால் தமிழரது பொருண்மியவள இழப்பு  மீள்குடியேற்றம் மக்களின் வாழ்வாதார நலன் குறித்து அக்கறை கொள்ளும் அவசியம் அவர்களுக்கில்லை. அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும் என்ற முதுமொழி இங்கும் பொருந்துகிறது. 

Link to comment
Share on other sites

அப்படி அரசு சிந்தித்து செயற்படுமாயின் சிங்கப்பூருக்கு முன்னல்லோ போய் நிற்கும். இப்படி கடனாக வாங்க வேண்டி வராது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

என்ன சுருவிலில் விமானத்தளமா?அப்ப நான் வீட்டிற்கு நடந்தே போயிடலாம்!!!!

நானும்,புளியங்கூடல் ..,சின்னமடு தாண்டி வயல்வெளிக்க இறங்கினா வீட்ட போயிடலாம்.ஆனா வீடு இல்ல அட அத்திவாரமே இல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளியங்கூடல் சின்னமடு தாண்டினா  என்னுடைய ஊர்தானே (நாரந்தனை)வரும் நீங்களும் நானும் ஓரே ஊரா?

4 hours ago, நந்தன் said:

நானும்,புளியங்கூடல் ..,சின்னமடு தாண்டி வயல்வெளிக்க இறங்கினா வீட்ட போயிடலாம்.ஆனா வீடு இல்ல அட அத்திவாரமே இல்ல

புளியங்கூடல் சின்னமடு தாண்டினா  என்னுடைய ஊர்தானே (நாரந்தனை)வரும் நீங்களும் நானும் ஓரே ஊரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புலவர் said:

புளியங்கூடல் சின்னமடு தாண்டினா  என்னுடைய ஊர்தானே (நாரந்தனை)வரும் நீங்களும் நானும் ஓரே ஊரா?

புளியங்கூடல் சின்னமடு தாண்டினா  என்னுடைய ஊர்தானே (நாரந்தனை)வரும் நீங்களும் நானும் ஓரே ஊரா?

பக்கத்து ஊர் சரவணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நந்தன் said:

பக்கத்து ஊர் சரவணை

சரி இப்போது சின்ன வயது ரகசியங்களை எல்லாம் (சரவணைபுளியங்கூடல் சின்னமடு) பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...
கல்யாணி டீச்சர், O/L எடுத்துக் கொண்டு இருந்த நந்தினி, சைக்கில் கடை சின்ன ராசு, பரியார் வீட்டு மாமரம், கிரைண்டிங் மில் ஆனந்தன் ...  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Sasi_varnam said:

சரி இப்போது சின்ன வயது ரகசியங்களை எல்லாம் (சரவணைபுளியங்கூடல் சின்னமடு) பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...
கல்யாணி டீச்சர், O/L எடுத்துக் கொண்டு இருந்த நந்தினி, சைக்கில் கடை சின்ன ராசு, பரியார் வீட்டு மாமரம், கிரைண்டிங் மில் ஆனந்தன் ...  :)

நானும் காரைநகரிலிருந்து ஊர்காவற்துறையூடாக நாரந்தனை, சரவனை எல்லாம் வாறனான். இதில்தான் சுவாரஸ்யம் நிறைய இருக்கு.

இப்ப அதிகமான விமானங்கள் எல்லாம் கடலில்தான் இறங்குகின்றன. விரும்பினால் அவை ஏழாற்றுப் பிரிவில் இறங்கட்டும். ஊர்மனைக்குள் சத்தமும் இருக்காது.நயினாதீவு, அனலைதீவு எல்லாம் பக்கம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் படைகள் யாழ் நகரை பிடிக்க நகர்ந்த போது காரைநகர் ஊடாக.. தீவகம் சென்று அடைக்கலம் தேடிய போது இந்த ஊர்களுக்கு எல்லாம் போக முடிந்தது. சுருவிலில் இருந்த ஒரேஒரு பேக்கரி தான் அன்று அத்தனை ஆயிரம் மக்களுக்கு சாப்பாடு.. பாண் போட்டது.  சிறிய வயதில் நடந்த நிகழ்வுகள் என்பதால் இப்போதும் பசுமையாக உள்ளன.

சுருவில் ஒரே மணல் நிறைந்த பகுதியாக இருந்தது. சுருவில் கடற்கரை சுற்றுலாவுக்கு சிறந்த இடம்.

இன்று தீவகம்... சுடுகாடாக்கப்பட்டு விட்டது என்று கேள்விப்பட்ட போது கவலையே எஞ்சியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீன தொழில்நுட்பத்தை வைத்து குட்டிக்குட்டி நாடுகள் எல்லாம் பொதுமக்களுக்கு பங்கம் வரக்கூடாது என்று கடலில் விமானநிலையங்களை உருவாக்குகின்றன.

ஆனால் வல்லரசுகளின் கடைக்குட்டிக்கு...........தமிழர்களின் விவசாய பூமிகள்தான் தன் படைகளை இறக்க வசதியாய் இருக்கின்றதோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.