Jump to content

சிறுபான்மை தேசிய இனம் அல்ல அது ஒருதேசமே!!!


Recommended Posts

இந்த உலகின் அரசியல் போக்கினை விளங்கிக் கொள்வதில் இருந்து கோட்பாடு வகுப்பதும், சமூக அமைப்பு எவ்வாறு உள்ளதை வைத்துத் தான் அதன் அரசியல் போக்கு இருக்கின்றது. சமூக விஞ்ஞானரீதியாக ஆராய்வதன் அடிப்படையில் இருந்து தான் விடயங்கள் முன்வைக்கப்படும், முன்வைக்க முடியும்.
Five%2Bleders.jpg

 

தனிமனிதர்களின் விளக்கம், நம்பிக்கை   அல்லது அகவுணர்வு சார்ந்த நிலையில் வெளிப்படுவது சமூக விஞ்ஞானப் பார்வையற்ற அரைநிலமானிய  பெருமைக்கு உட்பட்டதாகும்.  சமூகத்தின் சிந்தனைவடிவம் என்பது பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம் பெறாதவரையில் மாற்றத்திற்கு உள்ளாக முடியாது. இங்கு  சமூக விஞ்ஞான ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தும் போது ஒவ்வொருவரின் அரசியல் உலகக் கண்ணோட்டம் என்பதே வெளிப்பாடுகளை நிர்ணயிக்கின்றது. 
சில விடயங்களுக்கு ஒரு கேள்விபதில் என்று எதுவும் கொடுக்க முடியாது. சமூகத்தினை ஆராய்வது என்பது சமூகத்தின் அனைத்து தளங்களுக்கும் சென்று அங்க அசைவுகளை ஆராய வேண்டும்.
சமூகத்தின் அனைத்து தளங்களுக்கும் சென்று ஆராயாது மேலோட்டமாக பார்ப்பது பொதுப்புத்திக்கு உட்பட்டதாக இருக்கின்றது. சமூகத்தின்  சிந்தனைப் போக்கு, அரசியல் ஓட்டம் என்பதை பொதுப்புத்தியில் இருந்து அறிவதுதான் வழமையாக உள்ளது.
 
ஒரு பொருளைப் பற்றிய வியாக்கியானம் அறிவு மட்டத்தில் அமைந்துள்ளது. இவை என்னளவான கருத்தாக இருக்கின்ற போது அதற்கு மாற்றாக மறுஆய்வுரை வைத்து மாற்றுக் கருத்தைக் கொடுக்க முடியும்.
சமூகம் முரண்பாடுகள் சமூக மட்டத்தில் சமூக பொருளாதார அமைப்பில் இருந்து தான் சமூகத்தின் தன்னை எந்த நிலையில் இருந்து எவ்வாறு மாற்றமடைகின்றது என்பதை வெளிப்படுத்தும் ஆய்வுமுறைக்கு உட்பட்டதாகும்.
இந்த வகையில் பெருந்தேசிய வெறியும் குறுந்தேசியமும் ஒன்றல்ல.  ஒரு தேசிய இன முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக் காலத்தில் எவ்வகையான  போக்கு இருக்கின்ற என்பதை வைத்து ஆராயப்பட்டதே. பழைய உற்பத்தி முறைக்கான சமூகத்தின் கூடல் என்பது மாறிக் பொருளாதார எல்லைகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது.  இவ்வாறா வளர்ச்சிப் போக்கில் தேசிய இனங்கள் தேசமாக வளரும் என்பது இயங்கியல் ரீதியான வர்க்க ஆய்வின் வெளிப்பாடாகும்.
தமிழ் தேசத்தின் உரிமை ஏன் விட்டுக் கொடுக்க முடியாது காரணம் தேசிய இனம் என்பது தேசமாக வளரும், தேசியத்தின் முதலாளித்துவ ஜனநாயகத்தை மறுத்துவிட முடியாது.  அது ஏன் பிரிவினைவாதம் இல்லை, ஏன் தேசிய வெறிக்கு உட்பட்டது இல்லை என்பதை அறிய வேண்டுமானால் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி பற்றிய அறிதல் என்பது அவசியமானதாகும்.  ஒரு விடயத்தை நிறுவ வேண்டுமானால்என்னளவான கருத்தாக இருக்கின்ற போது அதற்கு மாற்றாக மறுஆய்வுரை வைத்து மாற்றுக் கருத்தைக் கொடுக்க முடியும். இதனை நிறுவ வேண்டும் என்றால்   அதனை தரவு ரீதியாக நிறுவ வேண்டும்.  மேம்போக்காக அல்லாமல் சமூகம் முரண்பாடுகள் என்பது பௌத்த சிங்கள மோலாதிக்கத்தில் மேல் கட்டப்பட்ட சமூக அரச இயந்திரம் என்பதை அறிவதன் ஊடாக அதாவது சமூக மட்டத்தில் சமூக பொருளாதார அமைப்பில் இருந்து தான் சமூகத்தின் தன்னை எந்த நிலையில் இருந்து எவ்வாறு மாற்றமடைகின்றது என்பதை வெளிப்படுத்தும் ஆய்வுமுறைக்கு உட்பட்டதாகும். பௌத்த சிங்கள பேரிவாத கட்டமைப்பு என்பது மாற்றமடையாத வரையில் எவ்வித விடுதலையும் சாத்தியமில்லை.
உயர்ந்த சிந்தனை -  ஜனநாயக வடிவம் கொண்ட சமூகத்தை உருவாக வேண்டும் என்றுவிருப்புவது. இவ்வாறான வடிவமாகத் தான் இருக்கும். ஆனால் அதற்கு நீண்ட காலம்செல்ல வேண்டும், நீண்ட நெடிய போராட்டம் தேவையானது, இதனை குறுக்குவழியில்,குறுகிய காலத்தில் அடைந்து விடலாம் என்பது சமூகப் போக்கை விளங்கிக் கொள்ளமுடியாத கற்பனாவாதிகளாகத் தான் முடியும்.  வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கில் பயன்படுத்தப்படும் வரைவிலக்கணங்கள் என்பது அந்தந்த பொருளாதார அமைப்பிற்கு ஏற்பவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கும்.
இவ்வாறே மூலவர்கள் வளர்ச்சிப் போக்கில் குறிப்பான  ஜனநாயக தேசிய இயக்கங்களின் வளர்ச்சியினை குறிப்பிட தேசிய வெறி, தேசியப் பெருமிதம் போன்ற சொல்லாடல்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.
இந்தச் சொல்லாடல்கள் என்பது பொருளாதார அமைப்பையும் அரசியல் போக்கையும் நிர்ணயிக்கின்றதாக இருக்கின்றது.
ஏகாதிபத்திய காலகட்டத்தில் எழும் மூலதனத்திற்கு எதிரான போராட்டங்கள் என்பது தேசிய- சுதேசிய பண்பைக் கொண்டு எழுவதும் அவை  ஏகாதிபத்தியத்தினை எதிர்த்து நிற்பதாகவும் இருப்பதை  தடுப்பதாகவும் இருக்கின்றது.
அதாவது தேசியக் கோசங்களை திட்டமிட்டு சிதைக்கின்றது. இங்கு முரண்பாடு கொண்ட சமூகத்தில் முரண்பாடுகளை மறுத்துக் கொண்டு கறுப்பு - வெள்ளை என்ற இரண்டைப் போக்கு மாத்திரம் உள்ளதாக இட்டுக் கட்டுகின்றது. இது குறிப்பாக சோவியத்தின் வீழ்ச்சியின் பின்னரான உலக அரசியல் அரங்கில் ஏற்பட்ட கருத்துருவாக்கத்தின் தாக்கம் புரையோடிப் போய் உள்ளது. இதிலும் குறிப்பாக 9/11 பின்னராக ஒன்று சாத்தானின் பக்கம் அல்லது நல்லவர்கள் பக்கம் என்ற போக்கினை ஒத்திசைவிற்கு ஏற்பவே கருத்துருவாக்கிகளின் செயற்பாடு இருந்து வந்துள்ளது. (வரைவிலக்கணங்களின் காலப் பொருத்தம் பற்றி http://velanவேலன்.blogspot.no/2015/12/blog-post.html இந்தப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரையை மேற்கொண்டு வாசிக்க)
 
அரைநிலப்பிரபுத்துவ சமூகச் சிந்தனையில் இருந்து வெளிப்படும் தேசியக் கோசங்களில் உள்ளதை முதலாளித்துவ- தாராளவாத சிந்தனை மையச் சிந்தனையின் அடிப்படையில் இருந்து அளவிடுவது என்பது அபர்த்தமானதாகும். இன்று குறிப்பாக இந்துத்துவா தேசியவெறியும், வலது தேசிய வெறியும் ஒன்றென்று இணைத்துவிடும் போக்கு வெகு முதன்மை கொண்டுள்ளது. இங்கு தனிமனிதர்களின், குறிப்பிட்ட வர்க்கத்தின் அகவுணர்வுப் போக்கும், வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கில் உருவாகும் முரண்பாடுகளும் ஒன்றல்ல.
இது குறிப்பாக தமிழ் தேசத்தின் வளர்ச்சிப் போக்கினையும், ஏகாத்தியத்தின் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை உயர்ந்த மனிதாபிமானமிக்க மனிதத்துவமாக காட்டிக் கொண்டு ஏகாதிபத்திய சகதிக்கு துணைபோகும் பின்னவீனத்துவ சிந்தனைப் போக்கே இருக்கின்றது. (கருத்துருவாக்கம் பற்றி இங்கு வாசிக்க முடியும் http://velanவேலன்.blogspot.no/2015/10/blog-post_26.html) தேசியக் கோரிக்கை என்பது ஏகாதிபத்திய காலகட்டத்தில் முதலாளித்துவக் கோரிக்கையாக முன்வைப்பது காலங்கடந்த கோட்பாடாகும்.  தேசிய- சுதேசியத்தை எதிர்த்துக் கொண்டு பெருந்தேசியவாதத்தினையும் நிதிமூலதனத்திற்கு எதிரான போக்கை திட்டமிட்டு திசை திருப்புகின்றது.
 

தோழர் லெனினின் இயங்கியல் முடிவு
நிலப்பிரபுத்துவக் கட்டம் முற்றுப்பெற்று தொழிற்துறை வளர்ச்சி ஏற்பட்ட தேசிய இனங்களின் எழுச்சியையும், பின்னர் தொழிற்துறை வளர்ச்சியை அடைந்து கொண்டிருந்த  பிரதேசங்களில் ஏற்பட்ட தேசிய இன எழுச்சியையும், பின்னர் ஏகாதிபத்திய காலகட்டத்தில் உருவாகின்ற தேசிய இனங்களின் ஜனநாயக இயக்கம் பற்றி தோழர் லெனின் விரிவாக வரையறுக்கின்றார். 
பொருளாதார வளர்ச்சி என்பது தேசிய இயக்கங்கள் உருவாகும் என்பது தனியே கொலனித்துவத்தின் மீதான  எழுச்சி மாத்திரம் அல்ல என்பதை தோழர் லெனின் சரியாகவே வரையறுக்கின்றார், -----In these countries the bourgeois-democratic movements have either hardly begun, or are far from having been completed. - (https://www.marxists.org/arc.../lenin/works/1916/jan/x01.htm) இந்த நாடுகளில் முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது.--- இங்கு லெனின் தேசிய இனங்கள் தேசத்திற்கான பண்பைக் கொண்டு வளர்ச்சியடைந்துள்ளது அல்லது வளரும் என்று வரையறுக்கின்றார். இதுதான் இயங்கியல் பொருள்முதல்வாதம் இதுதான் அடிப்படை. 
இலங்கையில் வரலாற்று ரீதியாகவே இரண்டு தேசங்களாக வளரக் கூடிய ஆற்றல்வளம் கொண்ட தேசிய இனங்கள் இருந்துள்ளது. அவைகள் முதலாளித்துவ வளர்ச்சியினால் தேசங்களைக் கொண்ட பொதுப்பண்புடன் வளர்கின்றது. கொலனித்துவ ஆட்சிகளால் அழைத்து வரப்பட்ட மலே, மலையக மக்கள் என்பார் புதிய தேசிய சிறுபான்மையாக உள்வாங்கப்படுகின்றார்கள். இவ்வாறே பாரம்பரியமாக வாழ்ந்து வந்த (இதில் வர்த்தக ரீதியான இடம்பெயர்ந்தவர்கள் ஒன்றிணைந்தும் உள்ளது) தமிழ் பேசும் முஸ்லீம்களின் அடையாளம் என்பது பாதுகாக்கப்பட்டு தன்மை தனிஅடையாளம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் தனியடையாளத்தினை முன்னிறுத்துவதற்கு தமிழ் மக்களின், முஸ்லீம் மக்களிடையே உள்ள அரைநிலமானியச் சிந்தனையும், அவர்களின் வளங்கள் பற்றிய மோதல் என்பது தமிழ் ஒன்றிணைந்த தேசத்தவர்களாக உருவாக முடியவில்லை. தமிழ் பேசும் முஸ்லீம்கள், தமிழர்களிடையேயுள்ள அரைநிலமானிய சிந்தனை உடைக்கப்படும் போது தமிழ் தேசத்தவர்களாக அடையாளம் காண நீண்ட போராட்டம் நிபந்தனையாக உள்ளது. இது புதிய சனநாயகப் புரட்சியின் ஊடாகவே சாத்தியமாகும். இந்த நிலையைக் கடப்பதற்கு நீண்ட பயணம் செல்ல வேண்டியுள்ளது.

தமிழ் - சிங்கள என ஆற்றல்வளம் கொண்ட  தேசிய இனங்கள் தேசமாக வளரும் கட்டத்தில் இருந்தது. சிங்கள தேசம் பெரும்பான்மை என்ற எண்கணக்கில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. இந்த வகையில் தான் இலங்கை என்பது ஒரு நாடு இரண்டு தேசங்கள் என்று வரையறுக்கப்படுகின்றது. லங்கா என்ற பெருந்தேசியம் இன்னொரு தேசத்தினை (ethnic - national  minority - ) சிறுபான்மை தேசியயினம் என்று கொள்கின்றது.  தமிழர் சிறுபான்மை தேசிய இனத்தவர்கள் என்று  இடது சந்தர்ப்பவாதிகள் உட்பட பெருந்தேசிய வெறியர்கள் ஒப்புவிக்கின்றார்கள்.
 
தமிழ் தேசத்தின் போராட்ட வரலாற்றை அறிகின்ற போது
1. 1984களில் சமரன் அமைப்பு தமிழர்கள் தேசம் என்று வரையறுத்துள்ளார்கள். http://samaran1917.blogspot.no/2009/03/blog-post_17.html  கட்டுரை உள்ளது.
2.http://padippakam.com/document/NLFT/nlft0007.pdf (pdf- page 3) NLFT தெளிவாக தமிழர்களை தேசமாக வரையறுக்கின்றது.
3.http://padippakam.com/document/EPRLF/Publications/eprlfPub1.pdf (pdf- page 10)
4. திம்புக் கோட்பாட்டில் தேசியம், தன்னாட்சி, தாயகம் என்று வரையறுக்கின்றது. இது தேசத்தின் வரைவைக் கொண்ட பண்பாகும்.
 
ஏன் திம்புக் கோரிக்கையில் உள்ள 3 அம்சங்களும் தேசத்தின் பண்பை முன்னிறுத்துகின்றது. இந்த வகையில் 1985களில் தமிழர் ஒரு தேசத்தவர்கள் என்று வரையறுத்துள்ள அமைப்புக்களும்  உண்டு. முள்ளிவாய்க்கால் வரையில் (de facto Government )  ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைக் கொண்டு தாம் தேசத்தின் உரிமைக்காக போராடியவர்கள் என்ற வரலாற்றுத் தரவும் உண்டு.
 
தமிழர் தேசம் என்று கூறுவது என்பது ஏதோ இன்று கண்டுபிடித்த ஒரு சொல் அல்ல. ஆனால் தமிழ் தேசம் அடக்குமுறைக்குள் பெரும்பான்மையினரால் ஒடுக்குதலுக்கு ஆழாகிவந்துள்ளார்கள்.  தமிழ் தேசத்தின் இருப்பும் வாழ்வும் என்பது ஆக்கிரமிப்பு உள்ளாகியிருக்கின்றது. இது மிகைப்படுத்திய அரசியல் பார்வை என்று குறுக்குவது அபர்த்தமாகும்.
ஒரு விடயத்தை நிறுவுவது என்பது வேறு பரீட்சையில் கணக்கை சோதனையை திருத்தும் முறையில் அல்ல. கணக்கில் ஏற்கனவே பதில் இருக்கும்  ஏற்கனவே இருக்கின்ற முடிவிற்கு ஏற்ப செய்து முடிக்கப்பட வேண்டும்.
ஒரு விடயத்தை வாசித்துவிட்டு ஏற்கனவே இருக்கின்ற விடைக்கு திருத்துவது போல இது வலது தேசியவாதம், தேசிய வெறி, ஜேவிபியின் தேசியவாதம் என்று குறுக்கி முத்திரை குத்துவதாகும்.
சமூக வளர்ச்சிப்போக்கை விஞ்ஞான ரீதியாக விளங்கிக் கொள்வது என்பது வேறு முன்னையை நிலைப்பாடுகளை அப்படியே பின்பற்றுவது என்பது வேறு. இவை இரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
ஒரு விடயத்தை அப்படியே ஏற்பது என்பது வேறு. இங்கு மூன்று வகை தேசங்கள் பற்றி லெனின் வரையறுக்கின்றார். அந்தப் பந்தியை வியாக்கியானம் (interpret)செய்தலும் அதனை அப்படியே பின்பற்றுவதும் வேறு.
லெனின் என்ன சொல்கின்றார் அவர் வரலாற்றுப் போக்கை வகைப்படுத்துகின்றார்.
அவர் எழுதுவது செயற்தந்திரமே, யுத்த தந்திரமோ அல்ல. சுயநிர்ணயம் என்பது பிரிந்து செல்வதா, சேர்ந்திருப்பதா யுத்த - செயற்தந்திரத்திற்கு உட்பட்டது. (அடுத்தது சுயநிர்ணயம் என்பது என்ன என்று விளங்கியும் இருக்கவேண்டும். சிலர் அதிகாரப் பகிர்வைத் தான் சுயநிர்ணயம் என்று வரையறுக்கின்றார்கள். இது ஒருபுறமிருக்க)
லெனின் இயங்கியல் பொருள்முதல்வாதத்தினை முன்வைக்கின்றார். இதனை விளங்கிக் கொள்ளாவிடின் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையை விளங்கிக் கொள்ள முடியாது.
ஒன்றை வியாக்கியானம் செய்வதற்கும் பேராசன்கள் கூறியதை அப்படியே பொருத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. தோழர் லெனின்  கூற்றை (interpret) செய்யமார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் விளக்க போதுமானது  இது கற்றுத் தரும் அணுகுமுறையைக்  கொண்டு  சமூகத்தினை ஆராயந்து கொள்ள முடியும்.
மார்க்ஸ்- லெனின்  கோட்பாட்டு அணுகுமுறை மாறானது அது வழிகாட்டும், ஆனால் கோட்பாடுகள் வளர்ந்துவரும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றது. இதனால் மார்க்ஸ் - லெனின் போன்றவர்கள் வந்தடைந்த கோட்பாடு மாற்றமடைகின்றது. 
இதன் காரணமாகவே லெனின் ஒவ்வொரு நாட்டவர்களும் சொந்தக் கோட்பாட்டை வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்.
 

தோழர் லெனின் கூறியதை வியாக்கியானம் செய்வதன் ஊடாகவே புதிய இலங்கைக்கான யுத்த - செயற்தந்திரத்தை வகுக்க முடியும். இன்றைய சிந்தனைப் போக்கு என்பதை தனிமனிதர்கள் தீர்மானிப்பது இல்லை. இன்றைய உலகப் போக்கு என்பது பின்னவீனத்துவ ஆய்வுமுறைக்குள் சிக்குண்ட போக்கும், அது சமூக அமைப்பினை முற்றுமுழுதான (holistic approach) பார்வையில் ஆய்வதற்குப் பதிலாக ஆய்வுக்குறுக்கல்வாதத்தினை முன்றுத்துகின்றது.
சுயநிர்ணயம் பற்றி குறிப்பாக 1905 பின்னரான தெளிவு என்பது தோழர்கள் லெனின், ஸ்ராலின் போன்றோர்கள் மார்க்சினை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் சென்ற பணியைச் செய்தார்கள். இது வலதுசாரி பிற்போக்கு தேசியவாதத்தினை இணைத்து முடிச்சுப் போடுவது வரலாற்றுக் குருட்டுவாதமாகும். வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் அமைகின்ற சமூக அமைப்பு வடிவங்களை விளங்கிக் கொள்ள வேண்டும். 
இந்தக் காலப்பகுதியில் தேசம் பற்றிய வரையறையை முதன்முதலில் தோழர் ஸ்ரானின் அதன் பின்னர் 1916களில் உலக வர்க்கப் போராட்டங்களின் வளர்ச்சிப் போக்கை தேசங்கள் எல்லைகள் கொண்ட நாடுகளாக பரிணமிப்பதையும், தேசங்கள் தமக்குள் இணங்கி ஒரு நாட்டுக்கள் அடங்குவதையும் வரலாற்று ஓட்டத்தில் சரியாகவே விளங்குகின்றார். இந்த ஆய்வு என்பது ஏகாதிபத்திய காலகட்டத்தில் தேசிய இனங்களின்  ஜனநாயக எழுச்சி ஏற்படும் என்ற கூற்று என்பதை மறுத்து நிறுவிட முடியாது. இங்குதான் லெனின் தொழிற்துறை வளர்ச்சியடைந்து கொண்டிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சுயநிர்ணயம் பற்றி வெவ்வேறான முடிகள் எடுத்திருந்தார்கள். 

இங்கு லெனின் கூறுகின்ற தேசிய இயக்கங்கள்  உருவாகும் என்பது ஏகாதிபத்திய காலத்திற்கானது. அவர் சரியாகவே வரையறுக்கின்றார், -----In these countries the bourgeois-democratic movements have either hardly begun, or are far from having been completed. - இந்த நாடுகளில் முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது.- 1916களில் லெனின் எழுதினாலும் இங்கு தேசிய இனங்கள் தேசங்களாக வளரும் என்பதைத் வெளிப்படுத்துகின்றார்.  அதாவது முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது என்கின்றார்.
 
கொலனித்துவவாதிகளினால் நிர்வாக நலனுக்காக இணைக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்த தேசிய இனங்கள் தேசத்தின் பண்பைக் கொண்டு வந்தது. இந்த நிலையில் 1920களில் முதலில் தமிழ் தேசத்தின் அரசியல் அபிலாசைகள் பற்றி பொன் அருணாசலத்தினால் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் தரகு வர்க்கத்தின் அரசியல் வறுமை என்பது சரணடைவிற்கும், காட்டிக் கொடுப்பிற்கும் உள்ளாகியது.
தேசிய இயக்கத்தின் வளர்ச்சி என்பது வலது -குட்டிமுதலாளிய அமைப்பாகிய புலிகளின் தலைமையைப் பெற்றுக் கொண்டது. இது தான் வர்க்கப் போராட்டத்தின் இயங்கியல் வளர்ச்சியாகும்.
 
 
தமிழ் தேசத்தின் போராட்டம்
தமிழ் தேசத்தின் போராட்டம் என்பது ஆயுதப் போராட்டமாக பரிணமித்த பின்னர் ஏற்பட்ட இடதுசாரிய அரசியல் ஆதிக்கம் ஏற்பட்டது. அந்த வேளையில் தமிழ் தேசத்தின் போராட்டம் என்பது தென்கிழக்காசியாவில் புரட்சிக்கான முன்னுதாரனாகவும், தமிழ் தேசத்தின் வெற்றி என்பது தென்கிழக்காசியாவில் உள்ள அடிமைத்தனத்தை உடைத்தெறியும் என்று கட்டியம் கூறப்பட்டது. ஆனால் குட்டி முதலாளிய இடதுசாரியப் போக்கு வீழ்த்தப்பட்டு குட்டிமுதலாளியக் வலது வர்க்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது முள்ளிவாய்க்கால் வரையில் கொண்டு வந்து விட்டது. இன்று தமிழ் தேசத்தின் போராட்டத்தினை தரகு வர்க்கத்தின் தலைமை ஏற்றுள்ள இன்றைய நிலையில்  உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கும், வெளிநாட்டு ஆதிக்க சக்திகளின் நலனுக்கான சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப் போராட்டத்தினை 30 வருடங்களின் பின் அதன் சாரத்தினை விளங்கிக் கொள்கின்ற போது முக்கியமானதாக இருக்கின்றது. தேசத்திற்கான போராட்டம் என்பதே அடிப்படையில் பழைய உற்பத்தி முறையை மாற்றியமைக்கின்ற போராட்டம் என்பது தான் அடிப்படையான சாரமாகும். 'இதுநாள் வரையிலான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறேயாகும்”  என்பதை இங்கு பொருத்திப் பார்ப்பது முறையாக இருக்கும். நிலமானிய உற்பத்தியின் சிதைவுடன் தேசங்களின் பண்பைக் கொண்ட தேசிய இனங்களின் போராட்டங்கள் வளர்ச்சி பெறுகின்றது. இந்த வகையில் பழைய உற்பத்தி முறையை மாற்றியமைக்கின்ற போராட்டம் என்ற வகையில் அவை புரட்சிகரமானதே. இது மூலவர்களின் வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கை நிரூபிக்கும் வகையில் இருக்கின்றது.
பல ஆயிரம் போராளிகளையும் பல லட்சம் மக்களை இழந்த ஒரு தேசத்தின் போராட்டத்தின் சிதைவு என்பது முள்ளிவாய்க்காலின் பின்னர் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது.   தமிழ் தேசம் என்பது முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியுடன் லங்கா என்ற தேசத்தின் கீழ் ஆக்கிரமிப்புக்குள் வந்தது. தமிழ்தேசம் ஆக்கிரமிப்பில் இருந்து  தமிழ் தேசத்தின் உரிமைக்கான மீளெழுச்சி ஏற்படாதவாது பல்வேறு சக்திகள் சிங்கள பௌத்த அரசின் மேற்பார்வையின் கீழ் செயற்பாடுகின்றார்கள்.  தேசிய இனங்களின் உரிமையை இனவாதமாக (racism - not national question) முன்னிறுத்தப்படுகின்றது. தேசிய இனங்களின் உரிமையின் அடிப்படையே துவேசமாக பார்க்கப்படுகின்றது.
இது தளத்தில் எழுத்தாளர்கள் - இலக்கியவாதிகள் என கலைகலைக்காக சேவை செய்பவர்கள் எனவும் - அரசியல் தளத்தில் தரகு தலைமை என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டு ஆளும் வர்க்கத்துடன் (ஏகாதிபத்திய- சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு துணையாக கட்டமைப்புச் சீர்திருத்தவாதிகள் மேற்கொள்கின்றார்கள்) இணைந்து பயணிக்கின்றார்கள். ஆனால் மற்றவர்களை வாயை மூடிக்கொண்டிரு என்ற அகம்பாவத்தில் செயற்படுகின்றார்கள். ” வடக்கு கிழக்கு தமிழர்கள் இனிமேல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள் எனவும், தமிழ் தேசம் தன்னுரிமையை கோருவது அடிப்படைவாதம் என்றார் சம்பந்தர்.

- புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் தாம் தான் புலிகளின் ஏகபிரதிநிதிகள் என்ற போர்வையில் ஏகாதிபத்திய- சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு துணைபோகின்றார்கள். 
-குட்டிமுதலாளிய -இடதுசந்தர்ப்பவாதம் என்பது தேசங்களின் ஜனநாயகப் போராட்டம் என்பதை வர்க்கப் போராட்டத்தின் அம்சமாக பார்க்காது வெறும் பொருளாதாரப் போராட்டமாகவும் உயர்குடியின் கோரிக்கை எனவும் தன்னை சுருக்கிக் கொண்டிருக்கின்றது.
 
தேசிய இனங்களை  அழிப்பது
கொலனித்துவத்தின் வெளியேற்றத்தின் போது எண்கணக்கில் பெரும்பான்மையான இருந்த நிலையில் ஆட்சிகட்டிலுக்கு வருவதற்கு முன்னரே சிங்கள தேசம் மற்றவர்களை அடக்கும் போக்கைக் கொண்டிருந்திருக்கின்றது. இந்த தேசிய இனமுரண்பாடு 1915 அடக்குமுறை வடிவம் தொடங்குகின்றது. முதலில் முஸ்லீம்களின் மூலதனமும் இருப்பின் மீதான தாக்குதல். பின்னர் மலையாளிகளின் மூலதனம்- தொழிலாளர்கள் மீதான தாக்குதல்.
இலங்கையில் மலையாளிகளின் மீதான தாக்குதல் என்பது பலமாற்றத்தை அடைந்துள்ளது. இந்தத் தாக்குதலால் கேரளத்திற்கு திரும்பிச் சென்றவர்கள்
சிங்களவர்களாக மாறிய மலையாளிகள், 
தமிழர்களாக மாறிய மலையாளிகள் என்றும் 
சிறிய பகுதியினர் வீட்டில் மலையாளமும் வெளியில் தேவைகருதி சிங்கள- தமிழ் பயன்படுத்திக் கொள்பவர்கள் உள்ளார்கள். 
மலையாளிகளைப் பொறுத்தவரை ஒரு மொழிச் சிறுபான்மையினராகக் கூட இலங்கையில் நிலைத்து நிற்க முடியவில்லை. மற்றைவர்களை ஒன்றிணைக்கும் - சிங்களமயமாக்கும் (assimilation) புறநிலை அழுத்தங்களாகும்.
இந்த நிலை கடற்கரை தமிழ் சமூகத்திற்கும் பொருந்தும் ஏனெனில் அவர்களும் அழுத்தத்திற்கு ஆளாகிவருகின்ற சமூகமாகும்.  கரையோரத்தில் வாழ்ந்த மக்கள் அதிகமானோர்  கத்தோலிக்க மதத்தவர்களே. இவர்கள் இன்று சிங்களமயமாக்கலுக்கு தொடர்ச்சியாக ஆட்பட்டு வருகின்றார்கள். இவர்ளை இட்டு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
இங்கு கரையோரத் தமிழர்களை சிங்களமயமாக்கியது கத்தோலிக்க மதத்தின் மீது பழிசுமத்திவிட முடியாது. காரணம் கத்தோலிக்க மதக்குருமார்களின் சிந்தனை வடிவம் என்பதே பெருந்தேசியத்தின் மீது கட்டப்பட்டவைதான். குறிப்பாக 1983களின் பின்னரான காலத்தில் ஒடுக்குமுறையை கொழும்பை மையமாகக் கொண்ட அதிமேற்றாணியார் கண்டும் காணாமல் இருந்தார் என்பது வெளிப்படையான உண்மையாகும். கத்தோலிக்கமானத்தின் சுயமான மதத்தின் நடவடிக்கையாக மாத்திரம் குறுக்கிவிடுவது மார்க்சிய இயங்கில் பார்வையில் உள்ள குறைபாடாகும்.  இந்த நிலையில் சிங்கள பெருந்தேசியத்தில் கலத்துவிடுவது என்ற தொடர்ச்சியான வேலைத் திட்டத்தில் அடிப்படையில்  செயற்படுகின்றது.
 
1949 பின்னர் மலையக மக்களின் குடியுரிமை பறிப்பு. பின்னர் குடியேற்றம் (1.நிலப்பறிப்பு) மொழி உரிமை (2.சிங்கள தனிச்சட்டம்) 3பொருளாதார அழிப்பு ( 1958. 1961. 1977. 1981. 1983 கலவரம் என்ற போர்வையில்) 4. கலாச்சாரம் அழிப்பும் திணிப்பும் ( வடக்கு கிழக்கை சிங்களமயமாக்கல்) இவை நான்கு அம்சங்களின் மீதான அழிப்புக்கள் நடைபெறுகின்றது. இவை நான்கு அம்சங்களை அழிக்கத் தொடங்குவது தான் இனவழிப்பு என்பது. இங்கு ஒரு தேசத்தின் (நேசன்) தேசிய இனத்தின் இருப்பை அழிப்பது தான் இனப்படுகொலை இன்று நேற்றுடன் சம்பந்தப்படுத்தி குறுக்குவது வரலாறு அல்ல. வரலாற்று நிகழ்வுகளை ஒன்று சேர அணுகப்பட வேண்டும். சிங்கள தேசம் இலங்கை முழுவதும் தன்னதும் மற்றையவர்கள் அவர்களில் நிழலில் வாழ வைத்தல் என்ற அடிப்படையில் இருந்து எழுந்து வருகின்றது. தன்னை பாதுகாத்துக் கொள்ள வீர புருசர்களை முன்நிறுத்துவம் தேசியப் போராட்டங்களில் இயல்பான நிலை தான்.
தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் ஐக்கியப் பட்டுப் போராடினாலும் அதனையும் மீறி இனவெழுச்சி ஏன் உருவாகிய என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதோ தற்செயலாக நிகழ்ந்ததாக கருதிவிட முடியாது. ஒரு புறம் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் நல்லெண்ணத்தை காட்டிக் கொண்டிருக்கின்றது. இந்த வேளையில் 1972களில் இருந்த முதலாளியம் அலட்சியம் செய்து வந்துள்ளது. மொத்தத்தில் இடதுசாரியம் தேசிய இனமுரண்பாடுகளை சரியாக கணித்து அதனை வழிநடத்தத் தவறிவிட்டது. ஆனால் அவர்கள் சுதாகரித்த போது தமிழ் குட்டிமுதலாளியம் தலைமைப் பாத்திரம் பெற்றுவிட்டது. 

 
தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டது வேலையில்லாப் பிரச்சனை, தரப்படுத்தல் என்பது குட்டிமுதலாளிகளை பாதிப்பை ஏற்படுத்தியது. தரப்படுத்தல் ( interpret ) பலமாதிரி வியாக்கியானம் செய்யலாம். அது michigan பல்கலைக் கழகத்தில் அல்லது தமிழகத்தில் இருப்பது போன்ற இடவொதுக்கீட்டுக் கொப்ப அரசியல் கொண்டதாக இருந்திருந்தால் ஆனால் அது அவ்வாறு அமையவில்லை. அது தமிழ் தேசத்தின் உருவாக்கத்தினை பின்னடிப்பது அல்லது வளர விடாது தடுப்பதில் இருந்து அமைந்து கொண்டதாகும். நிலம் - கல்லோயவுடனும், மொழி 1956 என்றும் பின்னர் பொருளாதாரம்- கலாச்சார அடையாளங்கள் என்று இல்லாதாக்கின்ற நிகழ்ச்சி நிரலில் அமைந்ததாகும். தரப்படுத்தலை சுருக்கிவிடுவது அடையாள அரசியலுக்கு உட்பட்டதே. தேசிய ஒடுக்குமுறை என்பதே அனைத்து தேசிய இனங்களில் உள்ள ஒடுக்கப்படும் வர்க்கங்களை பிரிக்கின்றது. தேசிய உரிமைக்கான போராட்டம் என்பது ஒடுக்கும் தேசத்தில் உள்ள ஒடுக்கப்படும் வர்க்கங்களை பிரிக்கவில்லை. தேசிய இனங்களின் உரிமை, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பதை (ரொட்கிஸ்டுக்கள்) ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் தேசத்தின் போராட்டம் என்பது பாட்டாளி வர்க்கத்தை பிரிப்பதாகவும், தேசிய (லங்கா) ஒன்றுமையை சிதைக்கின்றதாம். தமிழ் தேசத்தின் இருப்பை  மறுத்துக் கொண்டு செயற்படுத்தப்படும் கொள்கை திட்டங்கள் என்பது நிறுவனமயமாகியிருக்கின்ற போது வேலையில்லாத் திண்டாட்டம், தரப்படுத்தல் என்பது அது ஒரு பகுதிப் பிரச்சனையேயன்றி முதன்மையான பிரச்சனையாக இருப்பதில்லை.  அவ்வாறு மேட்டுக்குடியின் நலனில் அமைந்ததாக காட்டுவது குட்டிமுதலாளி,  வலதுசாரிய அகநிலை ஆய்வுப் போக்கிற்கு உட்பட்டதாகும்.
இனக்குழுமங்களுக்கிடையேயும், தேசிய இனங்களுக்கிடையே நடைபெறும் மோதல் என்பது அடையாளம், இருப்பு, வளம் சார்ந்தாக இருக்கின்றது. இது வெவ்வேறு பருமனில் மாறுபட முடியும். குறிப்பாக மார்க்சியவாதிகளின் மீது உள்ள பெரும் விமர்சனம் என்பது தேசிய இனப்பிரச்சனையை சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதேயாகும்.
தேசிய இனங்களுக்கிடையே நடைபெறுவது கூட வர்க்கப் பிரச்சனையேயாகும். தனியே பொருளாதாரப் போராட்டத்தினை மாத்திரமே முன்னிறுத்தி பொருளாதாரப் போராட்டதை மாத்திரமே வர்க்கப் போராட்டமாகச் சுருக்கிக் கொண்ட புரிதல் இலங்கை இடதுசாரிய வரலாறு இன்றுரை தொடர்கின்றது.

சமூக வளர்ச்சிப் போக்கில் முழுமையான அணுகுமுறைஊடாக அணுகியாராய வேண்டும். இங்குதான் தான் கோளாறு உள்ளது. நாம் பகுதியான விடயங்களை அணுகுதன் ஊடாக தவறான முடிவிற்கு வரப்படுகின்றது. குறிப்பிட்ட விடயத்தை அடையவதற்கான குறிப்பான் பொதுவாக இருக்கின்றது. இதனை இனவாதம் என்று எமது தேவைக்காக சுருக்கிப் பார்த்துவிட்டுச் செல்லமுடியும். ஆனால் பொதுவாக அவ்வாறு இல்லை. 
தேசிய இனங்களை நிலப்பிரபுத்துவம் உருவாக்குகின்றது, தேசங்களை முதலாளித்துவம் உருவாக்குகின்றது (லெனின்- ஸ்ராலின்) ஆனால் தேசிய இரண்டு தேசங்களின் அடையாளம் சார்ந்த முரண்பாடுகளில் இருந்து பிரச்சனையை அணுக வேண்டும். பெருந்தேசியவாதத்தினை புறந்தள்ளிக் கொண்டு இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையை இனவாதம் என்று சுருக்குவது தவறானதாகும். 
தேசங்களிடையேயான முரண்பாடுகள் தான் தேசிய உணர்வை தூண்டுகின்றது. அவை இரண்டும் தன்னிருப்பை, அடையாளத்தை, வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மரபுரீதியாக கடத்தப்படும் ஐதீகங்களை உருவாக்கிக் கொள்கின்றது, இவ்வாறு ஐதீகங்களில் இருந்து உருவாக்கப்படும் தேசிய வீரர்கள், தேசிய சின்னங்களாக முன்னிறுத்தப்படுகின்றது. ‘‘தமிழ் தேசத்தின் ஒடுக்குமுறை அதிகப்படுத்தும் போதும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எத்தனிக்கின்ற போது (myth- symbol- national heroes) வரலாற்றுப் பெருமிதம், சின்னங்கள், தேசிய வீரர்கள் என்பது தேசியத்தின் நலனுக்காக உருவாக்கப்படுவார்கள். இது தேசிய அபிலாசைகளை அடைவதற்கு மக்களை ஒரு பண்பு- ஒரு மனச் சிந்தனையை உருவாக்கி் கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது. தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோசம் தான் ஆண்டபரம்பரை என்ற கோசமாகும்.‘‘ அரைநிலப்பிரபுத்துவ சமூகச் சிந்தனையில் இருந்து வெளிப்படும் தேசியக் கோசங்களில் உள்ளதை முதலாளித்துவ- தாராளவாத சிந்தனை வடிவத்தைக் கொண்டு அளவிடுவது என்பது அபர்த்தமானதாகும். மாற்றாக வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கில் வெளிப்படும்  எதிர்வினை என்பதை கணித்திட வேண்டும். அதன் பின்னர் குறிப்பிட்ட இயக்கப் போக்கை யார் கைகளில் வசம் உள்ளது என்பதை கணிப்பிட்டே  சமூகத்தின் தேவைக்கான போராட்டங்களின் நியாயத்தை அறிந்து கொள்ள முடியும். தேச (formation of national identity and  unity) எழுச்சியின் போது உருவாக்கப்படும் அடையாளத்தின் ஒரு அங்கம். இதனை அறியாது ஆண்டபரம்பரையை நியாயப்படுத்துவதாக திரிப்பது இட்டுக் கட்டிய  அறிவியல் குறைபாடாகும். இனவாதம் (Racism)  இரத்தவகை சார்ந்த பிரச்சனையாக பொருத்துவது அபர்த்தமாகும்.  
இந்த வகையில் விடுதலையை ஆதரிப்பது முற்போக்கு தேசியம் சாந்ததாகும். இங்கு முன்னர் குறிப்பிடுவது போது வலதுதேசிய வெறியையும் சுதேசிய- ஜனநாயகக் தேசியப் போராட்டத்தையும் ஒரு வகையில் அடக்கி திரிக்கும் போக்குத் தான் இருக்கின்றது.
இங்கு தேசிய நலன் என்று ஏகாதிபத்தியங்களை எதிர்க்கின்ற போது அதனை தேசிய வெறி அல்லது தேசியவாதம் என்று ஒதுக்கிவிட முடியுமா? ஏகாதிபத்திய பொருள் உற்பத்தி முறை என்பது தனது சந்தையை எதிர்த்து நிற்பதை பயங்கரவாதமாகக் காட்டுகின்றது. சுதேசிய அடையாளங்களை இல்லாக்கி தமது சந்தையை அடிப்படையாகக் கொண்ட பண்ட உற்பத்தி, நுகர்வு, சந்தையை ஏற்படுத்துவதன் ஊடாக சர்வதேச வேலைப்பிரிவினையினால்  தன்னை தங்கி நிற்கும் நிலையை ஏற்படுத்துகின்றது. இந்தப் போக்கை எதிர்ப்பவர்களை தேசியவாதிகளாக அல்லது பயங்கரவாதிகளாக  அல்லது மத அடிப்படைவாதிகளாக ஏகாதிபத்தியம் முத்திரைகுத்துகின்றது.  
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் போது கூட வரலாற்றுப் பெருமிதம், சின்னங்கள், தேசிய வீரர்கள் என்பது தேசியத்தின் நலனுக்காக உருவாக்கப்படுவார்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பின் (formation of national identity and unity) எழுச்சியின் போது உருவாக்கப்படும் அடையாளத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றது.
பின்னவீனத்துவத்தின் எதிரொலியாக நல்லது கெட்டது என்ற ஒற்றைப் பரிமாணத்தில் எல்லாவற்றையும் இணைத்து கருத்துருவாக்கிக் கொள்கின்றது. இங்கு இனவாதம் என்ற வரையறை தன்னார்வம் சார்ந்த வரையறையாகும். முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை பெருந்தேசியத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொண்டு தேசிய இனப்பிரச்சனையை இனவாதமாகப் பார்ப்பது மார்க்சிய அணுகுமுறை அல்ல. 
 

சிங்கள மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அவசியம்
பௌத்த - சிங்கள பேரினவாதம் என்பது நிறுவனப்பட்ட நிலையில் அரசியல் செயற்பாடுகளை உருவாக்கிக் கொள்ளும் நிறுவனமைப்பின் அதிகாரம் வர்க்கம் என்பது பேரினப் பெருமிதத்திற்கு அப்பால் சிந்திக்க முடியாது. இதுதான் பண்டா- செல்வா தொடக்கும் 2004 வரையிலான சமரச நடவடிக்கைகள் மீதான சிங்கள பேரினவாத சக்திகளின் எதிர்ப்பு காட்டி நிற்கின்றது. ஆனால் தம்மை முற்போக்கு சக்திகளாவும், தேசிய நல்லிணக்கத்திற்கு தயாராக இருப்பதாக காட்டிக் கொள்ளும் சக்திகள் எவரும் சிங்கள மக்களிடத்தில் நியாயத்தை கொண்டு செல்லப்பட வேண்டும் 
தமிழ் தேசமாக இருப்பதையோ அல்லது இனப்பிரச்சனையானது பிரதான என்பதை ஏற்றுக் கொள்ளாததைத் தான் தென்னிலங்கை சக்திகளிடம் காணமுடிகின்றது. ஒடுக்கும் தேசிய இனத்தில் உள்ள முற்போக்கு சக்திகள் தான் தன்சொந்த தேசிய இனத்திடம் ஒடுக்கப்படும் மக்களின் நியாயத்தை கொண்டு செல்ல வேண்டும். ஆனால் தமிழ் தேசத்தின் உரிமையை பிரிவினைவாதமாகவும், இனவாதமாகவும் வரையறுத்து ஒடுக்கும் சிங்கள தேச இராணுவ- ஆட்சியாளர்களுடன் சேர்ந்து முள்ளிவாய்க்காலில் சவப்பெட்டி அடிக்க ஒத்துழைத்தார்கள். இன்றும் அதில் எவ்வித மாற்றமும் இல்லாதது பிரசைகளுக்கான (தென்னிலங்கையில் தீர்க்கமான சக்தியாகிய ஜேவிபியின் தீர்வு பற்றிப் பார்க்க) உரிமை (ரணில் கிராமிய சபை போல) பிச்சைக்கு சமமான மக்களுக்கான ஜனநாயக உரிமையை சிறுமைப்படுத்துகின்றார்கள்.

ஒடுக்கும் தேசமானது சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டு தன் சொந்த தேசத்தின் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராட வேண்டும். லங்கா தேசத்தின் கீழ் மற்றவர்கள் எல்லாம் சிறுபான்மை என்ற ரீதியில் சிந்திக்கும் நிலையில் சிங்கள- தமிழ் உழைக்கும் வர்க்கத்திற்கான ஒற்றுமை என்பதை சிதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். - தேசங்களின் இருப்பை மறுத்த தீர்வு அல்ல. இதேபோல பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனை முறைக்கு தேசிய இனப்பிரச்சனைக்கு  சாத்தியமில்லாத சமஷ்டி என்ற தீர்வைக் கூட தமிழ் மக்களில் உள்ள உயர்வர்க்கத்தின் தேவையாக தேசங்களின் இருப்பை மறுதலித்து பிரச்சாரம் செய்யும் இடது சந்தர்ப்பவாதம் பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியத்தின் பெயரில் முன்னிறுத்துகின்றது. 

தமிழ் "மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் தான்,  அந்த மக்களிடம் முற்போக்கான சிங்கள சக்திகள்,  தனிநாட்டை அமைப்பதற்கான அச்சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள முடியும்" (தோழர் நா.சண்முகதாசன்)

தேசிய ஒடுக்குமுறையை மறைத்துக் கொண்டு எவ்வித யாப்பையும் புரட்சிகரமாக படைத்துவிட முடியாது. இன்றைய ஆளும் வர்க்கம் என்பது தரகு வர்க்கமாகவும், அரைநிலமானியத்தில் கட்டப்பட்டதாகும். இங்கு முற்போக்கு முகாம் என்பது அரைநிலமானியத்தில் மேற் கட்டப்பட்ட போக்கு என்பது தேசிய ஒடுக்குமுறையை லங்கா ஒற்றைத்தேசியத்தினுள் தீர்வை முன்வைக்கின்றது.

ஜேவிபியின் புதிய யாப்புருவாக்கத்தில் இருந்து கள்ளமௌமனம் கொள்வது என்பது ஒடுக்கப்படும் மக்களின் உரிமை பற்றிய ஜேவிபியின் நிலைப்பாட்டில் ஐயம் கொள்ள வேண்டியிருக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரையில் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் ஒடுக்குமுறை என்பது ஏகாதிபத்தியத்தின்- பிராந்திய வல்லரசின் ஒடுக்குமுறையே பிரதானமானதாகவும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களை சகிக்கும்படி கோரும் நிலையாகும். இது ஏகாதிபத்திய பொருளாதாரவாதத்திற்கு பலியாகிப் போனதன் விழைவாகும். 
ஒடுக்கும் தேசம் மற்றைய தேசத்தினையும், தேசிய இனங்களையும் ஒடுக்கிக் கொண்டு இருக்கின்ற வேளையில் சிங்கள தேசத்தவர்களும் சுதந்திரக் குடிகளாக இருக்க முடியாது.
சாதாரண மக்களுக்கு மொழியோ, தேசமோ, கிடையாது  அல்லது இந்தக் காலத்தில் சாதி யார் பார்க்கின்றார்கள் என்று கருத்திடுவது  நடைபெறுகின்றது. ஆனால் ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பு என்பது தனியே தனிமனிதர்களின் உணர்வு சார்ந்து இருப்பதில்லை. அது இருக்கின்ற பொருளாதார அமைப்பின் சிந்தனையின் படி இயக்கப்படுகின்றது.  மதவாதிகள் கூறுவது போல இறைவனின் முன் ஏழை, பணப்படைத்தவர் என்ற பேதம் இல்லை. இவ்வுலக வாழ்வில் கிடைக்காததை விண்ணுலக வாழ்வில் சுகவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை போல சோசலிசவாழ்வில் உரிமை பெறமுடியும் என்ற சிந்தனை ஊட்டுவது என்பதே சமூக விஞ்ஞானப் பார்வையற்றதாகும்.

முதலாளித்துவத்தை வளர்க்க மாட்டோம் ஆனால் நாங்கள் சோஷலிசத்தால் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போரிடுவோம். மக்கள் சுரண்டப்படுகின்றார்கள்,  தேசிய, மத, மொழி, குல ரீதியாக பிரிந்திருப்பது பாட்டாளி வர்க்க நலனைப் பாதிக்கும். தேசிய இன, மத, மொழி கடந்து அனைவரும் போராட வேண்டும். இது வெளிப்படையான சரியானதாகத் தோன்றினாலும்  ஒடுக்கப்படும் வர்க்கங்களின் தேசிய இன, மொழி, மதம் ஒன்றினணவைத் தடுப்பது இலங்கை சமூக பொருளாதார அமைப்பாகும்.  அதுவும் தேசிய ஒடுக்குமுறையே  இந்தக் உழைக்கும் வர்க்கங்களின் ஒன்றிணைவை தொடர்ந்தும் உடைந்து வந்துள்ளது.  1982 முன்னர் ஐக்கியப்பட்ட போராட்டங்கள் என்பது நடைபெற்றது. இது தேசிய முதலாளித்துவ ஜனநாயக இயக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கவில்லை. இந்தப் போக்கில் தேசிய முதலாளித்துவ ஜனநாயக இயக்கங்களை பிரிவினைவாதமாக அது காட்டிநின்றது. மறுபுறத்தில் ஒடுக்குமுறை என்பது அதிகரிக்கின்ற போது ஒடுக்கப்படும் தேசிய இனம் என்பது தன்னை பாதுகாத்துக் கொள்ள ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கின்றது.  தமிழ் தேசம் தனது அரசியல் உரிமைக்காக ஆயுதங்கள் கொண்டு பெரும் சமர்கண்ட போராட்டத்தை கொண்டதாகும். 
''ஒரு அரசியல் போராட்டத்தின் அதியுயர்ந்த கட்டத்தில், அதியுன்னத வடிவமாக எழுவதே ஆயுதப் புரட்சிப் போராட்டமாகும்'' என்றார் லெனின்.  அரசியலில் ''இரத்தம் சிந்தும் அரசியலே ஆயுதப் போராட்டம்''  முள்ளிவாய்க்கால் வரையில் போராடி மாண்ட போராளிகளும், அங்கு கொல்லப்பட்ட 149000 மக்களின் அழிவுடன் தான் தமிழ் தேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது. லங்கா தேசத்தினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தமிழ் தேசம் விடுதலைக்கு எதிராக பல போக்குகளை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது.  இத்த இடையீடுகள்  அனைத்தையும் உடைத்துக் கொண்டே இலங்கையில் வர்க்கப் போராட்டம் என்பது நடைபெற வேண்டியிருக்கின்றது. இலங்கையில் பௌத்த பேரினவாதக் கட்டமைப்பு என்பது சிதைக்கப்பட வேண்டுமென்றால் உற்பத்தி முறை மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். மாற்றத்திற்கு உள்ளாக எவ்வித மாற்றமும் கட்டமைப்பு சீர்திருத்தவாதத்திற்கு உட்பட்டதே. தேசிய இனங்களின் ஒடுக்குமுறையை தகர்க்காத ஜனநாயகப் போராட்டங்கள் எவையும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான சாத்தியமில்லை. அவ்வாறு சாத்தியம் இருப்பதாக கருதுவ என்பது கற்பனாவாத- அகவுணர்வு பார்வை கொண்ட (குட்டிமுதலாளிய) மேட்டுக்குடிவாதமாகும்.

ஒடுக்கப்படும் -  தேசத்தின் தேசிய இனங்களில், ஒடுக்கும் தேசத்தின் மக்களின் ஒத்துழைப்பு இல்லாது ஒரு போராட்டத்தினை வெற்றி கொள்ள முடியாது. இதனை எவரும் மறுக்க முடியாத உண்மையாகும். இங்கு முதலாளித்துவ ஜனநாயக இயக்கம் என்பது நிலபிரபுத்துவத்தின் சிதைவுடன் உருவாக்கப்படுகின்றது. இதுவும் ஜனநாயகக் கட்டத்தைச் சேர்ந்தது. 

 

“இனப்பகமை - தேசிய பகமை பாட்டாளிகளை பிரிக்கின்றதாம்“
நிலப்பிரபுத்துவத்திடம் இருந்து  அடுத்த கட்டத்திற்கு நகர்வதும், தேசிய ஒடுக்குமுறையில் இருந்து தன்னை மீட்பது மாத்திரம் அல்ல ஒடுக்கும் தேசத்தின் உழைப்பாளிகளின் விடுதலைக்கு உதவுவதும், தன்னை ஏகாதிபத்திய நுகர்த்தடியில் இருந்து விடுவிப்பததையும் நோக்காகக் கொண்டது.  இந்த நிலையில் பௌத்த சிங்கள பெருந்தேசியத்திற்கு மேல் கட்டப்பட்ட சமூக அமைப்பை உடைக்காது, புதிய உற்பத்தி முறையை மாற்றியமைக்காது அந்தக் கட்டமைப்பு மாறிவிட முடியாது. இதனை உணர்ந்ததாக  அல்லது அறிந்த  யுத்த- செயல்பாட்டுத் தந்திரம் என்பது உரிமையை அங்கீரித்த தென்னிலங்கை இடதுசாரி களிடம் இருந்து இதுவரையும் முக்கிய கருத்துருவாக்க அமைப்பாகிய  ஜேவிபி யிடம் இருந்து வரவில்லை. ஜேவிபி என்பது அடிப்படையில் சமூக பெருந்தேசியவாத அமைப்பாகும். இவர்களின் அரசியல் செயற்பாட்டுத் தாக்கும் என்பதை கவனத்தில் கொள்ளாது அரசியல் போக்கை கணித்துக் கொள்ள முடியாது. 

ஜேவிபியின் குட்டி முதலாளிய சந்தர்ப்பவாதம் என்பது மலைய மக்களை இந்திய விஸ்தரிப்புவாதம் என்பதில் இருந்து தமிழர் தலைமை தாங்குவதா என்ற எதிர்ப்பு நிலையில் இருந்து 2009 மூர்க்கமாக இருந்துள்ளது.  நாம் ஜிஜி பொன்னப்பலத்தை எவ்வாறு துரோகம் செய்தவர்கள் என்று விமர்சிக்கின்றோமே. அதேயளவு துரோகத்தைத் தான் ஜேவிபியும் மலையக மக்களைப் பொறுத்தவரையில் செய்திருக்கின்றது. 
தமிழ் தேசத்தின் போராட்டம் பயங்கரவாதம், பிரிவினைவாதம் என்று அழித்த இலங்கை இடதுசாரியமானது  ரொட்கிய சிந்தனை வடிவமாக தொடர்கின்றது.   தேசிய கோரிக்கை என்பது பாட்டாளி வர்க்கத்தை பிரிப்பதாக கூறுகின்றதுடன் தேசிய இனங்களின் ஜனநாயகக் கோரிக்கை மறுக்கின்றது. ஆனால் உண்மையில் தேசிய இன ஒடுக்குமுறையை பாதுகாப்பதே வரலாற்று ரீதியாக மேற்கொள்ளப்படுகின்றது. தமிழ் தேசத்தை ஒடுக்கும் பெரும்பான்மை பெருந்தேசியம் என்பது சொந்த மக்களை அடக்குவதன் மூலம் மற்றைய தேசிய இனங்களையும் ஒடுக்கின்றது.  பௌத்த பெருந்தேசியவாத உலகக் கண்ணோட்டத்தை பாதுகாத்துக் கொண்டு அதன் மேல் பெருந்தேசிய இருப்பை பாதுகாப்பதில் குட்டிமுதலாளி சந்தர்ப்பாத இடதுசாரியம் துணைநிற்கின்றது.
தமிழ் தேசத்தின் போராட்டம் என்பது ஜனநாயக கட்டத்திற்கான போராட்டமே. இங்கு பிரிவினைவாதமாக, தேசிய வெறியாகக் காட்டுவது என்பது மார்க்சியமாக முடியாது. சந்தைக்காய் அலையும் ஏகாதிபத்திய சந்தையில் இருந்து விடுதலை என்பது சுதேசிய சந்தையை உருவாக்கிக் கொள்வதாகும். இங்கு சுதேசிய சந்தையை முன்நிறுத்துகின்ற போது அதனை அடிப்படைவாதமாக- தேசிய வெறியாக பிதட்டி ஒடுக்கப்படும் தேசங்களின் மக்களை பிற்போக்குவாதிகளாக காட்டுகின்றது. ஒரு சமூகம் என்பது பண்பட்ட சமூகமாக இருக்கத் தேவையில்லை என்று நிதிமூலதனம் வகுப்பு வைக்கின்ற போது அதனை ஆமோதித்து தேசிய இனங்களின் அடையாளங்களை முன்னிறுத்துகின்ற போது பிற்போக்குத் தனமாக காட்டுகின்றது. (இங்கு நாசிச- சாதிய- சியோனிச- பெருந்தேசிய -சோவனிச- ஒடுக்கும் சிந்தனையைப் பற்றி இங்கு உரைக்கவில்லை. பிற்போக்குத் தேசியக் கூறுகளை சுதேசிய- முதலாளித்துவ ஜனநாயக இயக்கங்களுடன் இணைத்து இட்டுக்கட்டும்)  அதாவது சுதேசியம் என்பது தன்னிறைவு சார்ந்தும், இயற்கையை நேசித்தும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். 
ஒடுக்கும் தேசமானது சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டு தன் சொந்த தேசத்தின் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராட வேண்டும். லங்கா தேசத்தின் கீழ் மற்றவர்கள் எல்லாம் சிறுபான்மை என்ற ரீதியில் சிந்திக்கும் நிலையில் சிங்கள- தமிழ் உழைக்கும் வர்க்கத்திற்கான ஒற்றுமை என்பதை சிதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். - தேசங்களின் இருப்பை மறுத்த தீர்வு அல்ல. 
இலங்கை இடதுசந்தர்ப்பவாதமும், சிங்கள பெருந்தேசிய மையவாதமும் வர்க்கச் சுரண்டலைக் கொண்ட ஒடுக்குமுறையையும் (class oppression) தேசிய (genocide) அழிப்பையும் ஒரே வரையறைக்குள் கொண்டு வருகின்றார்கள். சமூகத்தை இல்லாதொழிக்கும் அரசியலும், வர்க்க ஒடுக்குமுறையும் ஒற்றைத் தட்டில் வைத்து அணுகுவது அபர்த்தமான சிந்தனைப் போக்காகும்.  இலங்கையில் தமிழர் தேசமும், மற்றைய தேசிய இனங்களின் இருப்பும்  அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. இங்கு தேசிய இனப் பிரச்சனையும் ஒரு வர்க்கப் போராட்டம் தான் அது தன் இருப்பையும் அரசியல் உரிமையையும் வேண்டி நிற்கின்ற போராட்டமாகும். இனவழிப்பை எதிர்த்து நிற்பது தமிழ் தேசியவெறியாக இட்டுக்கட்டி பெருந்தேசிய அரசியலை ஏற்றுக் கொள்கின்றது. முள்ளிவாய்க்காலுடன் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டது அதாவது பிரிவினைவாதம், தீவிரவாதம் முடிவிற்கு கொண்டு வந்துவிட்டதாக எண்ணிக் கொண்டால் கூட அது இயங்கிலாக அமையாது.

 

வரலாற்றுப் போக்கில் இருந்து விடயங்களை அறிந்து கொள்வதா அல்ல  
துப்பிய சொல்லில் இருந்து வரலாற்றைக் கற்றுக் கொள்வதா??

 
தமிழ் தேசத்தின் ஜனநாயகக் கட்டத்திற்கான போராட்டத்தை எதிர்ப்பது, மறுப்பது, எவருக்கும் உரிமை இல்லை. தமிழ் தேசத்தின் உரிமைக்கான போராட்டம் என்பது இனவாதமோ, பிரிவினைவாதமோ அல்ல. தமிழ் தேசத்தின் உரிமையை மறுதலிக்க எவருக்கும் உரிமை. தமிழர்கள் ஒரு தேசம் - சுயநிர்ணயம் உடையவர்கள். சுயநிர்ணயம் என்பதை அதிகார பரவலாக்கல் என்று கொச்சைப்படுத்துவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கு எதிரான காத்திரமான எதிர்வினையாற்ற வேண்டிய தேவையிருக்கின்றது. சுயநிர்ணயம் என்பது மறுக்க முடியாத குறைந்தபட்ச ஜனநாயக உரிமை.
 
சிங்களவர் - தமிழர்- முஸ்லீம் என்று கதைப்பது இனவாதம் என்று பிரச்சாரப்படுத்தப்படுகின்றது. இதனை வெளிப்படையாகப் பார்த்தால் துவேசங்களை முன்னிறுத்துவதாகத் தென்படும். ஆனால் பௌத்த சிங்கள மேலாதிக்கவாதம் என்பது நிறுவனமயப்பட்டுள்ளது. இது அரச அதிகாரத்தில் மாத்திரம் அல்ல அனைத்து நிறுவனக் கட்டமைப்பு, மக்களின் சிந்தனை எங்கும் புரையோடிப் போயுள்ளது.
இங்கு இனவாதமாக வரையறுப்பதன் ஊடாக அரச கட்டமைப்பை மூடிமறைப்பது நடைபெறுகின்றது. இவர் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவருகின்றவர்களின் வெளிப்பாடுகளையும் நிறுவனமயப்பட்ட (‘‘institutionalized discrimination and spontaneous reaction‘‘) பெருந்தேசிய சிந்தனையையும் ஒன்றிணைப்பது என்பது பெருந்தேசிய நிறுவனக் கட்டமைப்பை நியாயப்படுத்தி ஒடுக்கப்படும் மக்களையும் இருக்கின்ற நிறுவனக் கட்டமைப்புகள் ஒன்று கலக்கும் சிந்தனைக்கு அப்பால் வேறு எதுவும் இல்லை.  ஆக எல்லாம் இனவாதம் என்பது ஒற்றைப் பரிமாணமாக பார்ப்பது என்பது நிச்சயம் இந்த சமூக  அமைப்பை பாதுபாப்பதாக இருக்கின்றது. இனவாதம் என்று வரையறுத்து பிரச்சாரம் செய்வது என்பது தேசிய இனப்பிரச்சனை இருக்கின்றது என்பதையும் மறுத்திருக்கின்றது.
 
லங்கா என்ற அரசியல் சிந்தனைக் கட்டமைப்பு என்பது பௌத்த - சிங்கள பெருமிதத்தின் மேல் கட்டப்பட்டது. அந்த பெருமிதக் கட்டமைப்பு என்பது முழு இலங்கையையும் தன்னுடைய பௌத்த பூமியாக கருதுகின்றது. இதன் காரணமாகவே பௌத்த அடையாளச் சின்னங்களை தமிழ் தேசமெங்கும் உருவாக்கிக் கொள்கின்றது. இந்த வகையான கலாச்சார ஆக்கிரமிப்பு, அடையாள மாற்றம் என்பதை வரலாற்றுப் போக்கோடும் தேசங்களுக்கான உரிமை என்பது ஏதோ ஒரு பெட்டிக்கடை நடத்துவது போல ஏதோ அதனைக் கொண்டே வாழ்வை நடத்து என்று கருதும் ஜனநாயக விரோதப் போக்கைக் கொண்டதாகும். 
தமிழ் தேசத்தின் போராட்டத்தினை தமிழ்- சிங்கள ஆளும் வர்க்கத்தினால் கொச்சைப்படுத்த முடிகின்றது. பௌத்த தேசியவாதத்தினை பாதுகாத்துக் கொண்டு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  இதனை பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியமாக கருத்துருவாக்கப்படுகின்றது.  அதாவது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தை ஒன்றுபட்ட இலங்கைக்குள் காண முயற்சிக்கும் குட்டிமுதலாளிய இடதுசந்தர்ப்பவாதம் முன்னிறுத்துகின்றது.
 
லங்கா என்னும் சிங்கள பௌத்த தேசம் (நேசனுக்குள் சிறுபான்மை) – என்ற இலங்கை ஒற்றையாட்சி நாட்டினில் சிங்கள பௌத்த அதிகார வர்க்கம் மற்றைய தேசிய இனங்களை பயன்படுத்த முற்படும் நிகழ்ச்சி நிரலுக்குள் இருந்தே பல கருத்துருவாக்கங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. (institutional rights are different from Sovereignty)  
இறுதியாக ஆண்டபரம்பரை என்ற காரணத்திற்காக தமிழ் தேசத்தின், மற்றும் தேசிய இனங்களின் சுயநிர்ணயத்திற்கான போராட்டம் என்பது அவசியமானது என்று சுருவிடுவது இயங்கியல் அல்ல. மாறான தோழர் லெனின் வார்த்தைகளில்- தேசிய விடுதலைக்கான முதலாளித்துவ- ஜனநாயக இயக்கங்களில் உள்ள அதிகப் புரட்சிகரமான சக்திகளுக்கு உறுதியான ஆதரவு கொடுக்க வேண்டும்.  
 
நன்றி.. வேலன் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வலது -குட்டிமுதலாளிய அமைப்பாகிய புலிகளின் தலைமையைப் பெற்றுக் கொண்டது. இது தான் வர்க்கப் போராட்டத்தின் இயங்கியல் வளர்ச்சியாகும்
.
 

இஞ்ஞாருங்கோ  .இஞ்ஞாருங்கோ 
 ஒடிவாங்கோ  புலிகளைபற்றி கட்டுரையாளர் கணக்க சொல்லுயிருக்கிறார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலுக்கு போனத்தட்கு ஆயிரம் காரணம் வாசிச்சாச்சு 
1001ஆக ....
வலதுசாரி முதளித்துவம்தான் காரணம் என்று இன்று வாசிக்க 
முடிந்ததை விடுத்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.