Jump to content

“சோதனைக்கூட விந்தணுக்கள் மூலம் குழந்தைகள் சாத்தியம்”


Recommended Posts

“சோதனைக்கூட விந்தணுக்கள் மூலம் குழந்தைகள் சாத்தியம்”

சோதனைக்கூடத்தில் விந்தணுக்கள் உருவாக்கி சாதனை செய்திருப்பதாக சீன விஞ்ஞானிகள் அறிவிப்பு
 சோதனைக்கூடத்தில் விந்தணுக்கள் உருவாக்கி சாதனை செய்திருப்பதாக சீன விஞ்ஞானிகள் அறிவிப்பு

குருத்தணுவில் இருந்து சோதனைக்கூடத்தில் விந்தணுவை உருவாக்கி அதன் மூலம் ஆரோக்கியமான குட்டி/ழந்தைகளை உருவாக்க முடியும் என்பதற்கான சாத்தியத்தை தாங்கள் நிரூபித்திருப்பதாக சீன விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

விலங்குகளின் உடலுக்கு வெளியே விந்தணுக்களை உருவாக்கியிருப்பதும் அதன்மூலம் கருவூட்டப்பட்டு பிறந்த எலிக் குட்டிகள் ஆரோக்கியமாக இருப்பதும் விஞ்ஞான உலகில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

சுண்டெலிகளில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் ஆரோக்கியமான சுண்டெலிக்குட்டிகள் பிறந்திருப்பதாகவும் இதனை மனிதர்களுக்கும் விரிவுபடுத்த முடியும் என்றும், அதன் மூலம் குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளுக்கான சிகிச்சை முறையில் மிகப்பெரிய புரட்சிகரமான மாற்றங்கள் சாத்தியமாகலாம் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சீன ஆய்வாளர்கள் குருத்தணுக்களை எடுத்து அதில் இருந்து ஆரம்பகட்ட விந்தணுவை உருவாக்கி, அதைக்கொண்டு சுண்டெலிகளின் கருமுட்டையை செயற்கை முறையில் கருவூட்டினார்கள். அப்படி கருவூட்டப்பட்ட எலியின் கருமுட்டைகளில் இருந்து ஆரோக்கியமான எலிக்குட்டிகள் பிறந்திருப்பதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

செல் ஸ்டெம் செல் என்கிற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வறிக்கையின்படி அப்படி பிறந்த எலிக்குட்டிகள் அனைத்தும் ஆரோக்கியமாக வளர்ந்ததாகவும், அவை அனைத்தும் இயற்கையான முறையில் குட்டிகளை ஈன்றதாகவும், அந்த குட்டிகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வின் முடிவுகள், இந்த நடைமுறை மனிதர்களில் கூட சாத்தியப்படலாம் என்பதை குறிப்புணர்த்துவதாக நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த செயற்கை விந்தணுக்களுக்கு இயற்கை விந்தணுக்களைப்போல வால் பகுதி இருக்கவில்லை

 இந்த செயற்கை விந்தணுக்களுக்கு இயற்கை விந்தணுக்களைப்போல வால் பகுதி இருக்கவில்லை

விபத்து அல்லது காயங்கள் காரணமாக விதைப்பைகள் அகற்றப்பட்டவர்கள், புற்றுநோய் சிகிச்சை காரணமாகவோ, அல்லது நோய்த் தொற்றுகாரணமாகவோ, அல்லது வேறு வகையான குறைபாடுகள் காரணமாகவோ விந்தணுக்களை உற்பத்தி செய்யமுடியாமல் போன ஆண்களுக்கு இந்த சிகிச்சைமுறை எதிர்காலத்தில் பயன்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விலங்குகள் மற்றும் மனிதர்களின் விதைப்பைகளில் விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்படுவது என்பது இயல்பான நிகழ்வாக தோன்றினாலும் அது அடிப்படையில் மிகவும் சிக்கலான, நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் ஒரு இயற்கை நிகழ்வு. பல பாலூட்டிகளுக்கு அவற்றின் விதைப்பைகளில் ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாகி அவை கருமுட்டையை கருவுறச் செய்வதற்கு குறைந்தது ஒரு மாத காலம் பிடிக்கும்.

ஆனால் தற்போது விந்தணுக்களை பரிசோதனைக்கூடங்களில் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியும் என்பதை சீன விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள்.

கருவூட்டப்பட்ட முட்டையின் ஆரம்பகட்டத்தில் உருவாகும் குருத்தணுக்கள், உடலின் எந்த உறுப்பாகவும், தசையாகவும் வளரும் தன்மை கொண்டவை. அப்படிப்பட்ட குருத்தணுக்களை சரியான காலகட்டத்தில் தனியாக பரிசோதனைக்கூடத்தில் பிரித்தெடுத்து, அந்த குருத்தணுக்களுடன் சில வேதிநொதிமங்கள், ஹார்மோன்கள் மற்றும் விதைப்பைகளின் திசுக்களையும் சேர்த்ததன் மூலம் இந்த குருத்தணுக்களை ஆரம்பகட்ட விந்தணுக்களாக ஆய்வாளர்கள் வளர்த் தெடுத்தனர்.

இப்படி வளர்க்கப்பட்ட விந்தணுக்கள் இயற்கையான விந்தணுக்களைப்போலவே அனைத்து தன்மைகளையும் கொண்டிருந்தாலும் இத்தகைய விந்தணுக்கள் தாமே நீந்திச் சென்று கருமுட்டையை சினையுறச் செய்யத் தேவையான வால்பகுதி இருக்காது. எனவே இந்த விந்தணுக்களை செயற்கை கருவூட்டல் முறையில் மட்டுமே கருமுட்டைக்குள் செலுத்தி அதை கருவூட்ட முடியும். அப்படியே இந்த சோதனைகளிலும் செய்யப்பட்டது.

சோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்ட விந்தணுக்களைக் கொண்டு செயற்கை முறையில் மட்டுமே கருவூட்டமுடியும்  சோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்ட விந்தணுக்களைக் கொண்டு செயற்கை முறையில் மட்டுமே கருவூட்டமுடியும்

அதன் இறுதி முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்களும் இந்த துறை சார் மற்ற நிபுணர்களும் தெரிவித்தாலும் இது மனிதர்கள் மத்தியில் செய்வதற்கு பலவித தடைகளை கடக்கவேண்டியுள்ளது.

இந்த நடைமுறையை மனிதர்களுக்கு செய்வதற்கான விஞ்ஞான சாத்தியங்கள் உருவாக்கப்படவேண்டும். அதற்கான அனுமதிகளை அரசுகளிடம் பெறவேண்டும்.

காரணம் இப்படியான செயற்கை முறை விந்தணுக்களை உருவாக்கத் தேவைப்படும் மூலப்பொருளான குறிப்பிட்ட ரக குருத்தணுக்கள் கருவூட்டப்பட்ட முட்டையின் ஆரம்பகட்டத்தில் இருந்தே பிரித்தெடுக்க முடியும்.

அந்த கட்டத்தில் அது புத்தம் புதிய தனி உயிரா அல்லது அல்லது வெறும் கருவூட்டப்பட்ட கருமுட்டை மட்டுமேவா என்று நிர்ணயிப்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. எனவே கருவூட்டப்பட்ட முட்டையில் இருந்து புதிய உயிர் உருவாகும் நிலையில் அதன் குருத்தணுக்களைப் பிரித்தெடுப்பது சரியா தவறா என்கிற தார்மீக கேள்விக்கு விஞ்ஞானத்துறையிலும் அரசுகள் மட்டத்திலும் மத நம்பிக்கையாளர்கள் மத்தியிலும் இன்னமும் ஏற்கத்தக்க ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

http://www.bbc.com/tamil/science/2016/02/160226_sperms

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.