Jump to content

வரதரின் படைப்புலகம்


Recommended Posts

வரதர் என்ற தி.ச.வரதராஜனின் படைப்புலகப் பணியில் அவரின் அச்சுவாகனமேறிய படைப்புகளை அன்னாரின் நினைவுப் படையலாக வழங்கவேண்டும் என்ற எண்ணம் கருக்கட்டியிருந்தது. இந்தப் பட்டியலில் இடம் பெற்ற அவர்தம் படைப்புக்களை முன்னர் வாசித்த பலருக்கு ஒரு நினைவு மீட்டலாகும் அதே சமயம் வரதரின் எழுத்துலகப் பங்களிப்பின் ஆவணப்படுத்தலின் ஒரு பகுதியும் கூட இது அமையும். அந்த வகையில் மார்ச் 2004 இல் வெளிவந்த வரதர் 80 என்ற சிறப்பு மலரில் இருந்து இந்தப் பட்டியலைத் தருகின்றேன்.

http://kanapraba.blogspot.com/2006/12/blog-post_26.html

Link to comment
Share on other sites

வணக்கம் கானபிரபா...

வரதர் அவர்களை பற்றிய சகல விபரங்களை ஆவணப்படுத்திய உங்கள் இந்த பதிவிற்க்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

வணக்கம் ரசிகை

வாசித்துக் கருத்தைப் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரதர் பற்றி அழகாய் ஆவணபடுத்தியிருக்கிறீங்க கானபிரபா சார்.

உங்கட எழுத்தும் அழகு

Link to comment
Share on other sites

வரதர் பற்றி அழகாய் ஆவணபடுத்தியிருக்கிறீங்க கானபிரபா சார்.

உங்கட எழுத்தும் அழகு

மிக்க நன்றிகள் கறுப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரதரின் பதிவுகளை ஆவணப்படுத்தியதற்கு நன்றிகள் பிரபா. அவர் சிக்கின் குனியாக் காய்ச்சலில் தான் மரணித்தாக செய்தி ஒன்றில் படித்தேன். உண்மையில் எங்கள் மக்கள் படும் அவஸ்தைக்கு இது ஒரு உதாரணம். மிகவும் நெஞ்சில் வலிக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரதர் ஓர் ஒப்பற்ற மனிதர்

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பெரும்பங்களிப்பாற்றிய `வரதர்' என்னும் தி.ச.வரதராஜன் இறைபதம் எய்திய செய்திகேட்டு அவரை அறிந்தவர்கள், அவரது எழுத்தைப் படித்தவர்கள் கலங்கி நிற்கின்றார்கள். இதழியல், படைப்புத்துறை, கருத்தாக்க வெளிப்பாடு என்ற பல்துறைகளிலும் வியப்பூட்டும் சாதனைகள் நிகழ்த்திய `வரதர்'. ஓர் ஒப்பற்ற மனிதர். இலக்கியத்துறையை செழுமைப்படுத்துவதற்காக ஓர் ஒப்புநோக்காளராக வாழ்வை ஆரம்பித்தவர். படிப்படியாக முன்னேறி `ஆனந்தா அச்சகம்' என்ற வெளியீட்டுவாரியத்தை ஆரம்பித்து அப்பணியை வாழ்வின் இறுதிவரை காத்தவர்.

இதழியல் நூல் வெளியீட்டுத் துறைகளில் அவரை, ஒப்பற்ற மனிதராக இலக்கியத்துறைக்கு அறிமுகப்படுத்தியது. அவர் கலைச்செல்வி முதல் மறுமலர்ச்சிக்காலம் வரை ஓயாத இலக்கியப் பணியாற்றிய பெருமை அவருக்குண்டு. `வரதரின்' காலம் அவரின் தனிமனிதத் திறமையை உணர எதிர்கால சந்ததியினருக்கு பெரும் களமாக இருந்ததெனலாம். அவரது சிறுகதைகள், நாவல்கள், காலப்பதிவுகள் அவை வெளியான காலத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியிருந்தன. அவருடைய படைப்புகள் நேற்றுவரை மற்றையோருக்கு உந்துசக்தியாக விளங்கிவந்துள்ளது.

ஈழத்து எழுத்துலக முன்னோடியான `வரதர்' எண்பது வயதைத் தாண்டியபோதும் இளைஞராகவே வாழ்ந்தவர். இவ்வயதிலும் சளைக்காது பணியாற்றியிருந்தமையை எண்ணும்போது நமக்கெல்லாம் பெருமைதான். நேற்று அவரை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் கம்பீரமாக நடந்து சென்றதைக் கண்டவர்கள் `சிக்குன் குனியா' கொடுமை நல்ல மனிதர்களை காவு கொள்ள வேண்டுமா என வேதனைப்படுவதுண்டு.

மற்றவர்கள் மனம் நோகாது குறைவாகப் பேசி எல்லோர் மனங்களையும் பெற்றவர் அவர். இலக்கிய வித்தகச் `செருக்கு' அவரிடம் ஒருபோதும் இருந்ததில்லை. எல்லோருக்கும் அவர் `நல்ல மனிதர்' எழுத்தாளர்களுள் சமுதாயத்தொண்டர்களின் தொகை பெருகிவரும் காலத்தில் வாழ்க்கையை உணர்ந்து தேவையறிந்து இலக்கியப் படைப்புகளை வெளியிட்டு எல்லோர் மனத்திலும் அன்பு பாராட்டிய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது. மட்டுமல்ல, அவரது வெற்றிடத்தை யாராலும் நிரப்பமுடியாது.

அவரது இலக்கியத் தகைமையை பலரும கௌரவித்து விருது வழங்கியதுண்டு. மூத்த எழுத்தாளராக அவரை நேசித்ததுண்டு. எழுத்தை நேசித்த `வரதருக்கு' எம் கண்ணீரைக் காணிக்கியாக்குவதைத் தவிர, வேறு வழியிருப்பதாக தெரியவில்லை. `தினக்குரல்' இல் அவரது பங்களிப்பு மறக்கமுடியாது. அந்த ஒப்பற்ற மனிதருக்கு எமது காணிக்கைகள்.

-தினக்குரல்-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.