Jump to content

தமிழினியின்; சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “


Recommended Posts

இளம் வயதில் வெதரிங் ஹைட் ஒரே நாவலை தந்துவிட்டு இறந்த எமிலி புரண்டே ஆங்கில இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார் (Wuthering Heights – Emily Brontë’) அதுபோல் தமிழினியின் சுயசரிதையும் ஈழத் தமிழர்களால் பலகாலம் பேசப்படும். அரசியல் போராட்டத்தை இப்படி எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்பதோடு நமக்கு தவறுகளைப் புரிந்து கொள்ளும் பாலபாடமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன்

அரசியல்

முப்பது வருடகால தமிழ் விடுதலைப் போராட்டத்தை மகோன்னத போராட்டமாகவும் அதன் தலைவரை கடவுளுக்கு நிகராகவும் வைத்து எதுவித விமர்சனமற்ற போராட்டமாக எடுத்துச் சென்றோம். ஆனால் போராட்டம் 2009 இல் முற்றாக ஆவியான பின்பு இயக்கத்தில் வெவ்வேறுகாலங்களில் இருந்தவர்கள் நாவல்களாக எழுதினார்கள்.

நமது சமூகத்தில் இலக்கியம் படிப்பவர்கள் எத்தனைபேர்?

தொடர்ந்தும் இந்த ஆயுதப்போராட்டம் பேசாப்பொருளாக இருக்கிறது. இதை பாவித்து சுயநலமிகள் தங்களது வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்.

அரசியலில் உள்ளவர்கள் புலி எதிர் – புலி ஆதரவு என்று பேசி பதவிப்போட்டியில் இறங்கினார்கள். இலட்சக்கணக்கான மனிதர்கள் உயிர்கொடுத்த ஆயுதப்போராட்டம் பற்றிய அறிவுசார் தர்க்கங்களை மக்களிடம் அவர்கள் எடுத்து செல்லவில்லை..

தமிழ் ஊடகங்கள் கலாச்சார பண்பாட்டுத்தளத்திலோ அரசியலிலோ எதுவிதமான பங்களிப்பை செய்யாது அமெரிக்க கால்பந்தாட்டத்தின்போது நடனமாடும் இளம் பெண்கள் செயரிங் குழுவாக இருந்தது.

பல்கலைக்கழகங்களைப் பற்றி பேசிப்பயனில்லை அதைவிட எங்கள் காலத்தில் இருந்த பொண்ட் ரியூட்டரியின் சமூகபங்களிப்பு அதிகம்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சமீபத்தில் மாணவிகளின் உடைககளில் கவனம் செலுத்திவருகிறது

இந்த நிலையில் வெளிவந்திருக்கும் தமிழினியின் சுயசரிதை நூல் பல விடயங்களை நமக்குத் தெரிவிக்கிறது. எனது அறிவில் இருந்த சில வெற்றிடங்களை நிரப்புகிறது.

தமிழினியின் கூர்மையான எழுத்துக்கு அறிமுகம் தேவையில்லை. அவரது ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு தொடர்பு கொண்டு முகநூல் நண்பராகினேன்

இலக்கியம்

பல பெண்கள் தங்களது தாம்பத்திய உறவை முறித்தபின் தங்களுக்கு கணவனால் நடந்த கொடுமையை மடைதிறந்தால்போல் கொட்டுவார்கள் இதை நான் எனது தொழிலில் பலமுறை கேட்டிருக்கிறேன். இப்படியான செய்கை அவர்களது மனப்பாரத்தை இறக்குவதுடன் மீண்டும் வேறுதிசையில் பயணத்திற்கு தயார்ப்படுத்துகிறது. நான் நினைக்கிறேன் பெண்களின் தாய்மையோடு இது சம்பந்தபட்டுள்ளது. அவர்களது இலட்சியங்கள் உடலுறவு தாம்பத்தியத்துடன் முடிவடைவதில்லை. இந்த தன்மையுடன் தனது மனப்பாரத்தை மிகவும் தெளிவான மனதுடன் தமிழினி இந்த நூலில் இறக்கி வைத்திருக்கிறார்..

எஸ்பொவின் வரலாற்றில் வாழ்தல் யாழ்ப்பாணத்து சாதியின்மேல் ஏற்பட்ட வெறுப்பால் தனது மனதில் உள்ளபாரத்தை வெளிக்காட்டும கத்தாசிஸ் இலக்கியமாக அடையாளப்படுத்தினேன். . எஸ்பொவின் சுயசரிதையில் சில இடங்களில் நம்பகத்தைன்மை தெளிவற்று இருந்தது.

கத்தாசில் இலக்கியத்தில் (Catharsis literature )முக்கியமாக சொல்லப்படுவது உண்மையாக இருக்கவேண்டும். அதன்படி தமிழினியின் புத்தகம் சத்தியமான வார்த்தைகளைக் கோர்த்து கத்தாசில் இலக்கியம் படைத்திருக்கிறார்..

இந்த புத்தகத்தில் உள்ள சில முக்கிய பந்திகளை இங்கு அடையாளப்படுத்தியுள்ளேன்.

இதுவரைகாலமும் நாலுகால் மிருகங்கள் எட்டுக்கால் நட்டுவக்காலிகள் போன்றவர்கள் எல்லாம் ஈழத்து அரசியல் என்னுடன் பேசுவார்கள். இவர்களுடன் பழகுவதற்கு பலவருட படிப்பும் மிருகவைத்திய அனுபவம் துணை செய்தது.. இனிமேல் அரசியல் பேசவருபவர்களிடம் குறைந்தபட்சமாக ‘தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் படித்துவிட்டுவா ‘ என சொல்வதற்கு தீர்மானித்திருக்கிறேன்.

புத்தகத்தின் சில பகுதிகள்

தலைவரைப்பற்றியது :-

“ஒருநாள் நானும் தளபதிகள் விதுஷாவும், துர்க்காவும் தலைவரை சந்திப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தோம். அது சமாதானம் தொடங்கிய ஆரம்ப கால கட்டம். அந்த சந்திப்பில் தலைவர் பல விடயங்கள் பற்றியும் எம்மோடு பேசிக்கொண்டிருந்தார். அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்;
“மட்டக்களப்பு, அம்பாறைப் போராளிகள் போராட்டத்தில எவ்வளவோ கஷ்டங்களைப் பட்டிருக்கிறாங்கள் அவங்கட குடும்பங்களுக்கும் அந்த மக்களுக்கும் நிறைய வேலைகள் செய்யவேணும். நிதித்துறை மூலமா ஒரளவு பண உதவியையும் செய்து கருணாவுக்கும் சொல்லியிருக்கிறன், அந்தச் சனத்திற்கு நிறைய உதவிகள் செய்யச் சொல்லி. அவன் செய்யிறான், இவங்கள் பொட்டு ஆக்கள் என்னட்ட வந்து அங்க அது பிழை இது பிழை எண்டு சொல்லிக் கொண்டு நிக்கிறாங்கள், தளபதிமாருக்குள்ள முதலில ஒற்றுமை இருக்கவேணும்” என்று குறிப்பிட்டார்.”

தமிழினியின் கருத்தாக:-

“இலங்கைப் படையினரை வலுச் சண்டைக்கு இழுத்து யுத்தத்தை ஆரம்பிப்பதன் மூலம் தலைவரால் திருகோணமலைப் படையணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஆட்லறிகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களைக் கைப்பற்ற முடியும் என திருகோணமலையின் தளபதியாக இருந்த சொர்ணம் கருதினார். அவரது திட்டத்திற்கு தலைவருடைய அனுசரணையும் இருந்தது. இயக்கம் எதிர்பார்த்த படியே இறுதி யுத்தம் திருகோணமலை மாவிலாற்றங்கரையில் மூண்டது. 2006 ஆகஸ்ட் 15 இல் மாவிலாறு பகுதி முழுமையாக இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதுடன், மூதுார், சம்பூர், கட்டைப்பறிச்சான், தோப்பூர் எனப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை நோக்கி யுத்தம் விரிவடையத் தொடங்கியது. புலிகள் இயக்கம் எதிர்பார்த்தமைக்கு மாறாக திருகோணமலைத் தோல்விகள் அமைந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் மீது இருந்த அதீத நம்பிக்கை மாவிலாற்றில் பலத்த அடிவாங்கத் தொடங்கியது.” “

எதிர்பாரது சந்தித்த இராணுவ அதிகாரி பற்றி தமிழினி::-

“வணக்கம் தமிழினி” என சளரமான தமிழில் பேசினார். அவரைக் கண்டதும் எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது.. அந்த மனிதரை முன்னர் எங்கேயோ சந்தித்துப்பேசிய நினைவு பொறி தட்டியது. ஒரு கணம்தான். தலைக்குள் மின்னலடித்ததைப்போல சுதாகரித்துக் கொண்டேன். சமாதான காலத்தில் வன்னிக்கு வந்த ஊடகவியலாளர்களோடு ஏதோவொரு சிங்கள ஊடகத்தின் சார்பில் அதன் பிரதிநிதியாக இவரும் வந்திருந்தார். அரசியல் பொறுப்பாளர் உள்ளிட்ட பல இயக்க முக்கியஸ்தர்களைச் சந்தித்ததுடன் கிளிநொச்சியில் அமைந்திருந்த அரசியல்துறை மகளிர் செயலகத்தில் என்னையும் சந்தித்திருந்தார்.
சளரமாகத் தமிழில் பேசக்கூடிய அவர், பல போராளிகள், பொறுப்பாளர்களுடன் போராட்டத்திற்கு சார்பான ஒருவர் என்ற தோரணையுடன் மிக இலகுவாக நட்புரிமையுடன் பழகிய ஞாபகங்கள் வந்தது. அது மட்டுமல்லாமல், 2004ம் ஆண்டில் முதல் பெண் மாவீரரான 2ம் லெப் மாலதியின் நினைவு நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியாக கிளிநொச்சியில் நடத்தப்பட்டபோது இவரும் கலந்துகொண்டு அனைவரோடும் தன்னை ஊடகவியலாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு மிக இயல்பாக பல விடயங்கள் பற்றியும் உரையாடியதும் நினைவுக்கு வந்தது. அந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி எவ்வளவு சாதுரியமாகப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் துாவிவிட்டு கிளிநொச்சியின் சந்து பொந்துகளில் உலவித் திரிந்தார் என்பதை பெரும் திகைப்போடு நினைத்துப் பார்த்தேன்

யுத்த இறுதிநாட்களில் பொட்டம்மான்:-

மிகவும் சுருக்கமாக பின்வரும் விடயங்களைப் பொட்டம்மான் தெரிவித்தார்;

“ஒரு அதிசயம் நடந்தாலே தவிர இயக்கம் வெல்வது என்பது இனிச் சாத்தியமில்லை, இயக்கத்தின் ஆவணங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை முற்றாக அழித்து விடுங்கள், மக்கள் இராணுவத்திடம் செல்லத் தொடங்கி விட்டார்கள், இறுதிக் கட்டத்தில் போராளிகளும் அவர்களோடு சேர்ந்து செல்ல வேண்டி வரும்போது ’இதிலே புலி இருந்தால் எழும்பிவா’ என்று கூப்பிடுவான் அப்போது ’நான் புலி’ என எழுந்து போகும் போது சுட்டுக் கொல்லுவான், இதுதான் நடக்கப்போகுது, யுத்தத்தில ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துவதற்கு தலைமை முழு முயற்சிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறது, ஆனாலும் திரும்பவும் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள், அதிசயமொன்று நடந்தாலே தவிர நாங்கள் வெல்லுறது சாத்தியமில்லை, நான் உங்களை குழப்புவதற்காக இப்படி சொல்லவில்லை. உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லுகிறேன், முக்கியமாக உங்களை இன்றைக்கு கூப்பிட்ட விடயம் உங்களிடமிருக்கும் ஆவணங்களை அழித்துவிடுங்கள் என்பதை கூறுவதற்காகத்தான்”.

அத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது. காயப்பட்டிருந்த போராளிகளைப் பற்றியோ அல்லது இயக்கத்தையே நம்பி பராமரிப்பு இல்லங்களில் இருந்தவர்களைப் பற்றியோ கூட ஒரு வார்த்தை கூறப்படவில்லை. பெண் போராளிகள் எதிர் நோக்கக் கூடிய இரட்டிப்பு ஆபத்து பற்றியோ எதுவுமே பேசப்படவில்லை. ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவும் தோன்றாத மனநிலையில், அனைவரும் கலைந்து சென்றோம். விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களுக்கு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற இறுதியான ஒன்றுகூடல் அதுவாகத்தான் இருந்தது.-

விதுஷா தமிழினியிடம்கூறியது :-

“சண்டைப் பயிற்சி உள்ள இருபத்தையாயிரம் பேரும் ஆட்லறிக்குரிய எறிகணைகளும் இருந்தால்தான் மீண்டும் கிளிநொச்சியை பிடிக்கலாம்,” என்று தலைவர் கூறியதாக சுரத்தேயில்லாமல் கூறினார் விதுஷா. ”பொட்டம்மான் கதைக்கிற கதைகளை நினைச்சா விசர்தான் பிடிக்கும். எனக்கென்டால் அவரில இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போட்டுது. நிலைமைகள் விளங்காமல் கதைச்சுக் கொண்டு நிற்கிறார்”

“எல்லாரும் என்னுடைய கையிலதான் எல்லாம் இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். என்னட்ட ஒன்டுமில்லை என்ர கை வெறுங்கை” என்று தலைவர் தனது கையை விரித்துக் காட்டியதாக ஈழப்பிரியன் தனது கைகளை விரித்துக் காட்டினார். “அண்ணையே இப்பிடிச்சொன்னால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என மன வருத்தத்துடன் கூறிவிட்டுச்சென்ற அடுத்த சில நாட்களில், ஈழப்பிரியன் என்ற இளம் போராளி மகாபாரத்தில் வரும் அபிமன்யூவின் தீரத்துடன் கிளிநொச்சியில் தன்னைச் சுற்றி வளைத்த இராணுவத்துடன் மோதி வீர மரணத்தைத் தழுவினான்..:: “

உயிரோடு இருந்தால் ஏதோ அரசியல் லாபத்திற்காக தமிழினியால் எழுதப்பட்டது என்பார்கள். இறந்த பின்பு இதை எமக்கு தந்து விட்டதால் தமிழினி தனது மரணத்தை அர்த்தமுளளதாக செய்துவிட்டு போயிருக்கிறார். இவர் போல் எத்தனைபேர் யார் யாரோ கனவுகளுக்கு உயிர்கொடுக்க நினைத்து மாண்டார்கள் என்பது நினைப்பதற்கு கடினமானது.

தமிழினியின்ஆரம்ப வக்கீலாக இருந்த தமிழ்க் காங்கிரசின் தலைவர் விஞாயகமூர்த்தியால் கைவிடப்பட்ட பின்பு சிங்கள வக்கீலான மஞ்சுல பத்திராஜாவால் (Manjula Pathirajah) மேல்கொண்டு தமிழினியின் கேஸ் எடுத்து செல்லப்பட்டது. தமிழினி மிகவும் குறைந்தகாலத்தில் சிறையில் இருந்து விடுதலையாகினார். தமிழினிக்காக ஆஜரானபோது எதுவித பணமும் வாங்காது மடடுமல்ல நோர்வேயில் இருந்து சில உறவினர் பணம்கொடுக்க முன்வந்தபோது மஞ்சுல பத்திராஜாவால் வாங்க மறுத்தார். தமிழினியை சந்திக்க சிறைக்கு செல்லும்போது உணவுப்பண்டங்களைக் கொண்டு செல்வது இவரது வழக்கம்.

இலங்கையில் போரில் இருசமூகங்கள் ஈடுபட்டபோதும் மனித விழுமியங்களை பலர் பாதுகாத்தனர் என்பது எதிர்காலத்ததை அடுத்த சந்ததியினருக்கு நம்பிக்கையுள்ளதாக்கும் என்பதால் இந்த விடயத்தைக் இங்கு குறிப்பிடுகிறேன்

ஒரு கூர்வாளின் நிழலில் – காலச்சுவட்டின் வெளியீடு

http://noelnadesan.com/2016/03/07/தமிழினியின்-சுயசரிதை-ஒ/

Link to comment
Share on other sites

வாசிக்க மிக ஆவலாக இருக்கு ,

எப்போ கையில் கிடைக்கும் என்று  தேடித்திரிகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

வாசிக்க மிக ஆவலாக இருக்கு ,

எப்போ கையில் கிடைக்கும் என்று  தேடித்திரிகின்றேன் .

மிகவும் சோகமான வரலாற்றுப் பதிவுகள்.... :(

அர்ஜூன் அண்ணரின் வரிகளை பார்த்தல் "எப்போ கையில் கிடைக்கும் என்று  தேடித்திரிகின்றேன்" 

யாரையோ அடிப்பதற்கு தேடிக்கொண்டு இருக்கிறார் போல இருக்கிறதே.  :oO:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ இதை வாசித்து விட்டு வகுப்பு எடுப்பினம். தாங்கள் கண்ணால் கண்டது மாதிரி.

இப்படியானாவர்கள் எங்கள் போராட்டத்தை அறிந்ததே "செவிவழி & நூல்வழி"

Link to comment
Share on other sites

சசி  ,

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள் தான் இப்ப உலகம் எங்கும் போராட்டம் பற்றி கதை விடுகின்றார்கள் ,

தமிழினி கடைசிவரை போராட்டத்தில் இருந்தவர் அதுதான் அந்த ஆவல் .

தமிழ்கவி ,குணா கவியழகன் இப்போ தமிழினி

------------------

 

7 hours ago, MEERA said:

கொஞ்சம் பொறுங்கோ இதை வாசித்து விட்டு வகுப்பு எடுப்பினம். தாங்கள் கண்ணால் கண்டது மாதிரி.

இப்படியானாவர்கள் எங்கள் போராட்டத்தை அறிந்ததே "செவிவழி & நூல்வழி"

இதில் ஒழிக்க என்ன இருக்கு ,

யாழில் இருப்பவர்கள் எல்லாம் முள்ளிவாய்காலில் தப்பி வந்தவர்கள் மாதிரி இருக்கு உங்கள் எழுத்து அதற்கு பச்சை வேறு ,

இந்த கோஸ்டி வெடி கேட்க காகம் மாதிரி பறந்த கோஸ்டி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில உண்மைகள்  கசக்கத்தான் செய்யும் ,அதற்காக நடந்து முடிந்தவைகளை மாற்றமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மாதிரி வெடி என்ற சொல்லைக் கேட்டவுடன் ஓடவும் இல்லை ஒரத்தநாடு நாட்டிலிருந்து புடவை விற்க வரவும் இல்லை. 

நாங்கள் இலங்கையில் எத்தனையோ சம்பவங்களை பார்த்துத்தான் வந்திருக்கிறோம். முள்ளிவாய்க்காலில் தப்பி வந்தவர்களும் இருக்கிறார்கள் யாழில். 

6 hours ago, arjun said:

சசி  ,

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள் தான் இப்ப உலகம் எங்கும் போராட்டம் பற்றி கதை விடுகின்றார்கள் ,

தமிழினி கடைசிவரை போராட்டத்தில் இருந்தவர் அதுதான் அந்த ஆவல் .

தமிழ்கவி ,குணா கவியழகன் இப்போ தமிழினி

------------------

 

இதில் ஒழிக்க என்ன இருக்கு ,

யாழில் இருப்பவர்கள் எல்லாம் முள்ளிவாய்காலில் தப்பி வந்தவர்கள் மாதிரி இருக்கு உங்கள் எழுத்து அதற்கு பச்சை வேறு ,

இந்த கோஸ்டி வெடி கேட்க காகம் மாதிரி பறந்த கோஸ்டி .

 

 

ந்ந்தன் யாராவது ஒட்டுக் குழு உறுப்பினர் தனது இயக்கத்தில் நடந்தவற்றை எழுதியுள்ளார்களா?

5 hours ago, நந்தன் said:

சில உண்மைகள்  கசக்கத்தான் செய்யும் ,அதற்காக நடந்து முடிந்தவைகளை மாற்றமுடியாது.

என்க்கு தெரிந்த வரை 2009ற்குப் பின்னர் மற்றவர்கள் தலைவரை விமர்சித்து எழுத தமிழினி மட்டும் தான் அம்மானை விமர்சித்து எழுதியிருக்கிறார். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நொயல் நடேசனின் முன்னோட்டம் இந்தப் புத்தகத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரப் போகிறது. "மிருக வைத்தியப் படிப்பும் அதனால் வந்த தொழில் அனுபவமும் தேசிய அரசியல் பேசுவோருடன் உறவாட உதவியது" என்று சொல்லியிருப்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். இதற்குப் பல அர்த்தங்கள், சந்தர்ப்பங்கள் வரும் போது குறிப்பிடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, arjun said:

சசி  ,

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள் தான் இப்ப உலகம் எங்கும் போராட்டம் பற்றி கதை விடுகின்றார்கள் ,

தமிழினி கடைசிவரை போராட்டத்தில் இருந்தவர் அதுதான் அந்த ஆவல் .

தமிழ்கவி ,குணா கவியழகன் இப்போ தமிழினி

------------------

 

இதில் ஒழிக்க என்ன இருக்கு ,

யாழில் இருப்பவர்கள் எல்லாம் முள்ளிவாய்காலில் தப்பி வந்தவர்கள் மாதிரி இருக்கு உங்கள் எழுத்து அதற்கு பச்சை வேறு ,

இந்த கோஸ்டி வெடி கேட்க காகம் மாதிரி பறந்த கோஸ்டி .

நீங்க திருந்தவோ

பழிவாங்குதலை நிறுத்தவோ

பழிவாங்குதலுக்காக தேடுவதை ஆனால் அதை மறைப்பதை உணரவோ

போவதில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மு.வாய்க்காலில் தோற்றவுடன் புலனாய்வுப் போராளிகள்,அரசியற் போராளிகளையும்,அரசியற் போராளிகள்,புலனாய்வு போராளிகளையும் மாறி,மாறி குற்றம் சொல்லத் தொடங்கிட்டினம்...நல்ல காலம் அக்கா,புத்தகம் வெளி வரேக்கு முதலே இறந்து விட்டார். இல்லா விட்டில்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கூர்வாளின் நிழலில் ... 

இந்த புத்தகத்திற்கு தமிழினி அக்கா வைத்த பெயரிலேயே போராட்டத்திதற்கான அர்த்தங்கள் பொதிந்து கிடக்கிறது. 
    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினிக்கு சிக்கல் என்றவுடன் முகத்தை திருப்பியவர்கள் எல்லாம் இப்போது அவரது புத்தகத்திற்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு நிற்கிறார்கள். 

Link to comment
Share on other sites

24 minutes ago, MEERA said:

தமிழினிக்கு சிக்கல் என்றவுடன் முகத்தை திருப்பியவர்கள் எல்லாம் இப்போது அவரது புத்தகத்திற்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு நிற்கிறார்கள். 

திருப்பி சொறிவதில்லை என்று முடிவு எடுத்தாச்சு .

நீங்கள் தொடர்ந்து சொறியுங்கோ பிரச்சனை இல்லை .:cool:

Link to comment
Share on other sites

 

 

32 minutes ago, arjun said:

திருப்பி சொறிவதில்லை என்று முடிவு எடுத்தாச்சு .

நீங்கள் தொடர்ந்து சொறியுங்கோ பிரச்சனை இல்லை .:cool:

ஓ அப்படியா, நல்ல அரசியல் வாதியப்ப, வாலை சுருட்ட வேண்டிய இடத்தில் சுருட்ட
பழகிவிட்டீர்கள் :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஒரு விதி செய்வோம்... 
சீண்டாமை ..மதிப்போம்..
மீறினால் ஏறி மிதிப்போம் 

சும்மா ஒரு கவிதை நயத்துக்கு எழுதியது... 

Link to comment
Share on other sites

1 hour ago, வந்தியதேவன் said:

 

 

ஓ அப்படியா, நல்ல அரசியல் வாதியப்ப, வாலை சுருட்ட வேண்டிய இடத்தில் சுருட்ட
பழகிவிட்டீர்கள் :cool:

 

என்னை பொறுத்தவரை தமிழினி புலிகளில் இருந்தது பல உயிர்களின் இழப்புகளுக்கு துணை போன ஒருவர்தான் ,

இப்போ அவர் என்ன எழுதியிருகின்றார் என்று வாசிக்க ஆவல் அவ்வளவுதான் .இன்று பல தாம் செய்த தவறுகளுக்கு பிரயாசித்தம் தேடுகின்றார்கள் .

மற்றபடி சிலருடன் சொறிந்தாலும் கொஞ்சம் ஆரோக்கியம் இருக்கும் அதுவும் இல்லாதவர்களுடன் அதுவும் வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் அறிமுகம்: "ஒரு கூர்வாளின் நிழலில்" - தெய்வீகன்

 
.
(மெல்பனில்  கடந்த  ஞாயிற்றுக்கிழமை  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம் நடத்திய  அகில  உலகபெண்கள்  தினவிழாவில் அறிமுகமான   தமிழினியின்  புதிய  நூல்)

 
Thamilini%2BBook.png
 
விடுதலைப்புலிகள்  அமைப்பின்  மகளிர்  அரசியல்துறைபொறுப்பாளரான  தமிழினி அவர்கள்  எழுதிய  தன்வரலாற்று  நூல் ஒரு கூர்வாளின்  நிழலில். சாவதற்கு  முன்புவரை  தான் எதிர்கொண்ட  போராட்ட  வரலாற்றையும்  தான்  நடத்திய போராட்டங்களையும்  சத்தியத்தின் வழிநின்று  சாட்சியமாக்கியிருக்கும்  பதிவு

 
வாழ்வுக்கும்  சாவுக்கும்  இடையில் ஊசலாடிக்கொண்டிருந்த  உயிரின்  கடைசித்துளிவரைக்கும்  தான்  மிகவும்  நேசித்தமண்ணுக்கும்  மக்களுக்கும்  உண்மைகளை  சொல்லவேண்டும் என்பதற்காக  பல  விடயங்களை  எழுத்தில்  பதிந்துவிட்டு சென்றிருக்கும்   வரலாற்று  பொக்கிசம்.

 ஒரு இனத்தின்  அகமும்  புறமுமாக  முப்பதாண்டு  காலம்  பெரு நம்பிக்கையுடன்  மேற்கொண்ட  ஆயுதப்போராட்டமானது  எவ்வாறு கொடூரமாக முடிவுக்கு  கொண்டுவரப்பட்டது  என்பதை உணர்வுபூர்வமாக  பேசியிருக்கும்  வரலாற்று  நூல்  என்று இதைக்கூறலாம்

 
 
 

 
Thamizini_Sivakamy.jpg
 
 
போர்  முடிவுற்ற  ஏழாண்டு  காலத்தை  எட்டிக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில்  அது  ஏற்படுத்திய  எத்தனையோ  காயங்களையும்  வலிகளையும்  பல  எழுத்தாளர்கள்  தமதுபுனைவெழுத்துக்களின்  ஊடாக  இலக்கியமாக்கியிருக்கிறார்கள்போரிலக்கியத்தின்  நுண்கூறுகளைக்கூட  அவ்வப்போது  தொட்டும் சென்றிருக்கிறார்கள்.  ஆனால்,  தமிழினி எழுதியிருக்கும்  இந்த நூலின்  ஒவ்வொரு  பக்கமும்  ஈழத்தமிழர்கள்  அனைவரும்வாசிக்கவேண்டிய  அவசியத்தை  தன்னகத்தே  கொண்டிருக்கிறதுஅவர்  முன்வைக்கும்  நியாயங்கள்  அனைத்திலும்  உண்மையை தயங்காமல்  பேசியிருக்கிறார்.

 
 தன்னையும்  தான்  சார்ந்த  அமைப்பையும்  தங்களது  பிழைகளையும்  எந்த  சமரசமும்  இல்லாமல்  விமர்சித்திருக்கிறார்இதன்   மூலம்  தான்  நேசித்த  மக்கள்  எதிர்காலத்தில்கண்மூடித்தனமான  இறந்தகால  புனைவுகளுடன் பயணித்துவிடக்கூடாது  என்ற  கவனத்தை  பொறுப்புடன்  பதிவு செய்திருக்கிறார்

 
என்னை பொறுத்தவரை,  ஈழத்தின்  போர்  இலக்கிய  வரலாற்றில் பலரது  படைப்புக்கள்  -  முன்னர்  கூறியது  போல -  புனைவுகளாக பதிவு  செய்யப்பட்டு  கவனத்தை  ஈர்த்திருக்கின்றன.   கோவிந்தனின் புதியதோர் உலகம்  முதல் ஐயர்,  செழியன்,  புஸ்பராசா, புஸ்பராணி என்று   பலர்  தாம்  சார்ந்த  இயக்கங்கள்  குறித்தும்  மக்கள்  குறித்துசாதகமாகவும்   எதிர்நிலைகளிலிருந்தும்  தத்தமது  நியாயப்பாடுகளை பதிவு செய்திருக்கிறார்கள்.  ஆனால், தமிழினியின்  கூர்வாளின் நிழலில்  அவற்றிலிருந்து  தனித்து  நின்று  பேசுகிறது  என்றுதான் சொல்வேன்
  
Thamilini%2BBook.png


 
சில இடங்களை  வாசிக்கும்போது, கைகள்  நடுங்கியது.  உயிரை  உருவி  எடுத்து  வெளியில்  எறிந்தது போன்ற  வெறுமையுடன் அடுத்த  பக்கத்துக்கு  செல்லவேண்டியதாகவும்  இருந்தது.   மக்களின் முன்னால்  தயங்காமல்  தன்  குற்றங்களை  ஒப்புக்கொண்டு கூற்றவாளிக்கூண்டில் ஏறிநின்று  பேசுகின்ற  ஒப்புதல் வாக்குமூலமாகவும்   தனது  விசுவாசத்தினதும்  அதன்  வீரியத்தின் நீட்சியில்   புறக்கணிக்கப்பட்ட  பொதுக்கடமைகளையும் வெளிப்படையாகபேசுகின்ற  -  உண்மைக்கு  நெருக்கமான - படைப்பாகவும்  அது  காணப்படுகிறது
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா, புத்தகத்திலே என்ன பெரிசாய் அவ எழுதி இருக்க போறா???...நடந்து முடிந்த மு.வாய்க்கால் முழுத் தவறையும் புலனாய்வுப் பிரிவின் மீதும்,பொட்டரின் மீது சுமத்தி இருப்பார்...அவர்கள் சொல்லித் தான் பலவந்தமாக ஆட்களை இயக்கத்திற்கு பிடித்தோம் என்பார்...கருணா மீது ஒரு பிழையும் இல்லை என்பார்.சிங்கள இராணுவத்தினர் எவ்வளவு கண்ணியமானவர்கள்.தங்களை மிக கண்ணியமாக நடத்தினர் என எழுதினாலும் ஆச்சரியமில்லை.......

புத்தகத்தை வாசிக்காமல் கருத்து சொல்வது தப்புத் தான்.ஆனால் என்னுடைய ஊகம் இது தான்

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

அர்ஜீன் அண்ணா, புத்தகத்திலே என்ன பெரிசாய் அவ எழுதி இருக்க போறா???...நடந்து முடிந்த மு.வாய்க்கால் முழுத் தவறையும் புலனாய்வுப் பிரிவின் மீதும்,பொட்டரின் மீது சுமத்தி இருப்பார்...அவர்கள் சொல்லித் தான் பலவந்தமாக ஆட்களை இயக்கத்திற்கு பிடித்தோம் என்பார்...கருணா மீது ஒரு பிழையும் இல்லை என்பார்.சிங்கள இராணுவத்தினர் எவ்வளவு கண்ணியமானவர்கள்.தங்களை மிக கண்ணியமாக நடத்தினர் என எழுதினாலும் ஆச்சரியமில்லை.......

புத்தகத்தை வாசிக்காமல் கருத்து சொல்வது தப்புத் தான்.ஆனால் என்னுடைய ஊகம் இது தான்

 

உங்கள் கணிப்பு தப்பு,

மிகவும் நேர்மையான போராளி என்று அவர் படைப்புகள் மூலம் அறிய கூடியதாக இருந்தது ,புலிகளின் தலைமை  மீது சில விமர்சனங்கள் இருக்க சந்தர்ப்பம் இருக்கு மற்றபடி ஏதும் பெரிதாக இருக்காது ஏனெனில் புலிகளின் செயற்பாடுகளை மனதார சரியென்று நம்பி செயற்பட்ட ஒருவர் .

நான் வாசிக்க ஆவலாக இருப்பதற்கு காரணம்  இதுவரை எவரும் சொல்லாத எழுதாத விடயங்கள் அதில் இருக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை உங்கள் யதார்த்தமான கருத்துக்கு.
புலிகளின் பாசறையில் தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்த / தலைமைத்துவம் கொண்ட போராளி தான் தமிழினி அக்கா.                               அந்தர் பல்டி எல்லாம் அடித்து கதை எழுதி இருக்க மாட்டார் என்பதுவே என் யூகமும்.
யுத்த பூமியின் கொடூரம், அடைந்த சின்னபின்னம், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், சிறை வாழ்வு, நோயுற்ற நிலை, உதவிக்கரம் நீட்டியவர்கள், சுடு சொல்லில் திட்டியவர்கள் என்பதன் பிரதிபலிப்புகளாக இந்த புத்தகம் இருக்கும் என நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இருக்கும் போது இது வந்திருக்க வேண்டும்.

இப்போ இதில் யார் யாரின் சேர்ப்பு இருக்குமோ எனும் சந்தேகம் வராமலில்லை.

இருக்கும் போதும் ஒரு கட்டாயத்தின் பேரில் எழுதப் பட்டதா எனும் சந்தேகமும் தொனிக்கவே செய்தது.

கட்டாயம் வாங்கிப் படிப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, arjun said:

உங்கள் கணிப்பு தப்பு,

மிகவும் நேர்மையான போராளி என்று அவர் படைப்புகள் மூலம் அறிய கூடியதாக இருந்தது ,புலிகளின் தலைமை  மீது சில விமர்சனங்கள் இருக்க சந்தர்ப்பம் இருக்கு மற்றபடி ஏதும் பெரிதாக இருக்காது ஏனெனில் புலிகளின் செயற்பாடுகளை மனதார சரியென்று நம்பி செயற்பட்ட ஒருவர் .

நான் வாசிக்க ஆவலாக இருப்பதற்கு காரணம்  இதுவரை எவரும் சொல்லாத எழுதாத விடயங்கள் அதில் இருக்கலாம் .

இதுவரை எல்லாம் தெரிந்த மாதிரி பிலிம் காட்டிவிட்டு...... இன்று மிச்சம் மீதி இருப்பதையும் வாசித்து புலிவாந்தி எடுக்க புது புத்தகம் தேடுகின்றது ------

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

இவர் இருக்கும் போது இது வந்திருக்க வேண்டும்.

இப்போ இதில் யார் யாரின் சேர்ப்பு இருக்குமோ எனும் சந்தேகம் வராமலில்லை.

இருக்கும் போதும் ஒரு கட்டாயத்தின் பேரில் எழுதப் பட்டதா எனும் சந்தேகமும் தொனிக்கவே செய்தது.

கட்டாயம் வாங்கிப் படிப்பேன்.

தமிழினி இருக்கும் போதே இவரது நூல் வெளியிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது கோசான். அவர் உயிருடன் இருக்கும் போதே இது தொடர்பான விடயங்கள் தொடங்கப்பட்டு நடந்து வந்ததை அறிந்து இருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒருமுறை தமிழினி மேலும் இரு போராளிகளுடன் சமாதான காலத்தில் சுவிஸ் நாட்டிற்கு வந்த சமயம் எனது வீட்டிற்கும் வந்திருந்தார். அவரை அழைத்துவந்த மாநிலப்பொறுப்பாளர் கடந்த வருடம் அவரின் முகநுhல் புறோபைல் படத்தில் நடிகர் விஜய் குடியிருந்தார் என்பது வேறு விடயம்.

அது ஒரு வெள்ளிக்கிழமை இரவு நேரம். வரவேற்பறையில் தமிழினியும் இன்னபிற பணியாளர்களும் உட்கார்ந்திருந்தார்கள். எனக்கு தமிழினி யார் என்றே தெரியாது. யாரோ ஒரு போராளி வந்திருக்கின்றார் என்பதோடு சரி.

சம்பிரதாயத்திற்காக வரவேற்பறை சுவரில் சாய்ந்துநின்று வணக்கம் வைத்தேன். அந்த சுவர் இப்படி எத்தனையோ வணக்கங்களை கண்டிருக்கின்றது.

இப்பொழுது அந்த மாநிலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவரும் நானும் அப்போது தளபதி படத்தில் வரும் ரஜனி & மம்முட்டி போல் உயிர்நண்பர்கள். வெள்ளி இரவு என்றாலே நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடிப்பது வழக்கம். அன்று அவன் தான் என்னை ஏற்றிச்செல்வதற்கு வந்திருந்தான். அப்படி தமிழினியுடனும் பேசும் வாய்ப்பு அவனிற்கும் அமைந்தது.

மரியாதை நிமித்தமாகவென்றாலும் ஏதாவது பேசியாக வேண்டும். என்ன கேட்கலாம் என்ற சிந்தனையில் இருந்த போது அவரே மேசையில் இருந்த கடிதத்தில் ஒரு நீண்ட ஜேர்மன் சொல்லைக்காட்டி அதனை வாசித்து காட்ட முடியுமா என்றார். நான் வாசித்துக்காட்டியதும் அவரும் அவருடன் வந்த பெண்ணும் (மெய்பாதுகாவலராக இருக்க வேண்டும்) ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள்.

எவ்வளவு பெரிய ஒரு போராளிக்கு இவ்வளவு சின்ன ஆசையா என்று நினைத்துக்கொண்டேன்.

இப்பொழுது எனது முறை. ஏதாவது கேட்டாக வேண்டும். இல்லாதுவிடின் அவர் சென்ற பின்னர் எனக்கு அப்பாவால் இலவச வகுப்புகள் எடுக்கப்டலாம்.

அடுத்த நாள் தமிழனி பங்குபற்றும் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. "பெடியனும் பெட்டையும் சேர்ந்து ஒரு அமைப்பில வேலை செய்யிறதை பெற்றோர்கள் தப்பா நினைக்கினம். இதைபற்றி நீங்கள் ஒருக்கா கூட்டத்தில கதையுங்கோ" என்று ஒரு கோரிக்கை வைத்தேன். அவனவனுக்கு அவனவன்ரை பிரச்சனை முக்கியம்.

அந்த கோரிக்கைக்கு ஒரு காரணமும் இருந்தது. நான் அப்பொழுது ஒரு அமைப்பில் இருந்த ஒருத்தியை லைன் போட்டுக்கொண்டிருந்தது தான் காரணம். அப்புறம் என்னாச்சா? அந்த லைன் அறுந்து ரெம்ப நாளாகிவிட்டது. அது வெறும் அவுட்கோயிங்க் லைன் மட்டுமே. இறுதிவரை இன்கம்மிங்க வரவேயில்லை. 
தமிழினியக்கா என்ன நினைத்தாவோ தெரியவில்லை "சரி சொல்லுறனப்பன்" என்றுவிட்டு மற்றவர்களுடன் வேறுவிடயங்கள் பற்றி பேசத்தொடங்கினார்.

அதன் பின்னர் அவரை நான் சந்தித்ததும் இல்லை. அவ்வப்போது ஊடகங்களில் பார்க்கின்ற முகம் மட்டுமே. 
இறுதியாக யாராலுமே மறக்க முடியாத அந்த புகைப்படத்தில் தான் பார்த்தேன்.
நோய்தின்று முடித்த உடலை வெள்ளை துணிகளால் மூடி பெட்டிக்குள் வைத்திருந்த அந்த புகைப்படத்தை தான் சொல்கின்றேன்.

எவ்வளவு பெரிய ஒரு ஆளுமை. இப்படியா முடியவேண்டும்? எங்காவது பார்த்து பேசிய மனிதர்கள் மரணிக்கும் போது மட்டுமே மரணத்தின் வலியை உணருகின்றவர்களில் நானும் ஒருவன். தமிழினி அக்காவின் மரணம் அப்படி தான் இருந்தது.

அவரின் மரணத்திற்கு பின்னர் நடந்ததெல்லாம் என்னவோ சுயநல அரசியல்கள் தான். இறுதிவரை அவருடன் தொடர்பில் இருந்ததாக ஒருவர் வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டார். ஆனால் தமிழினியின் குடும்பத்தாரோ இறுதிச்சடங்கிற்கு கூட பணமில்லாமல் பிச்சையெடுக்கும் நிலமை. இன்னொரு பகுதி அவரிற்கு என்ன பதவி கொடுத்து கெளரவிக்கலாம் என்ற சண்டையில் மும்முரமாக இருந்தது. அரசியல் தலைவியை வைத்தே அரசியல் செய்துகொண்டார்கள். ஆனால் பாவம். இறுதிவரை தமிழினியால் வழக்கறிஞரிற்கு கூட பணம் கொடுக்க முடியாமல் இக்கட்டாண நிலையிலிருந்தார். அவர் கட்டிக்காத்து வந்த அமைப்பை இப்பொழுது கொண்டிளுப்பவர்களோ, அவரை வைத்து அரசியல் செய்பவர்களோ அல்லது அவருடன் இறுதிவரை தொடர்பிலிருந்ததாக சொன்ன அந்த நபரோ இதைபற்றி அறிந்திருக்கவில்லை போலும்.

இறுதியில் சிங்கள வழக்கறிஞரான மஞ்சுல பத்திராஜாவால் (Manjula Pathirajah) பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் சிறையிலிருந்து தமிழினியை வெயியே கொண்டுவந்தார்.

இங்கே நான் சொல்வது யாரோ ஒருவரைபற்றியதல்ல.ஒரு தலைவியை பற்றி. அவரிற்கே இந்நிலையென்றால்...

தமிழினியின் உண்மையான நிலைப்பாடு தெரியவரும் பட்சத்தில் அவரையும் துரோகியாக்கவதற்கான வேலைகளில் இதே அமைப்புகள் இறங்கும் என்று உள்பெட்டியில் சில நண்பர்கள் வருத்தம் தெரிவித்தார்கள்.

இக்கருத்திற்கு வலுச்சேர்தாற்போல் ஒரு ஆரம்பகால பணியாளர் தனக்கு தமிழினியின் விடுதலை மீது சந்தேகம் இருப்பதாக என்னிடம் சில மாதங்களிற்கு முன்னர் கூறியிருந்தார்

"எல்லா மனிதர்களையும் போல் 2009ற்கு பின்னர் போராளிகளிற்கு விடிவதில்லை. அவர்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டு, அவர்களை நடுத்தெருவில் பிச்சையெடுக்க வைத்த எங்களிற்கு அவர்களின் கொள்கைப்பிடிப்பு பற்றி பேசுவதற்கு ஏதாவது அருகதையிருக்கிறதா" என்று கேட்டதும் அவர் ஆம்/இல்லை என்ற தோணியில் தலையசைத்திருந்தார்.

இப்படி ஒரு சூழ்நிலையில் தான் கூர்வாளின் நிழலில் சுயசரிதையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன்.

Google Play Storeஇல் இந்த புத்தகம் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது. இலவசமாக சில பக்கங்களை வாசிக்கும் வசதியும் அங்கே உள்ளது. அப்படி வாசித்தவற்றில் முன்னுரையிலே அனைவரின் சந்தேககங்களிற்கும் முற்றுப்புள்ளி வைத்தாற்போல் "விசாரணையின்போதோ அல்லது அதன் பின்னரோ சக போராளி ஒருவர்கூட தன்னால் எதிரியிடம் காட்டிக்கொடுக்கப்படவில்லை. தான் சார்ந்திருந்த அமைப்புக்கு உரியதான ஒரு சதம் பணத்தையோ சிறு பொருளையோ தான் எதிரியிடம் ஒப்படைக்கவோ அல்லது சொந்தப்பாவனைக்கு எடுத்துக்கொள்ளவோ இல்லை". என்று எழுதப்பட்டிருக்கின்றது.

"இனியும் ஆயுதப்போராட்டம் என்ற வழிமுறையில் எமது அடுத்த சந்ததி சிந்திக்கக்கூடாது என்பதை எனது ஆத்மாவிலிருந்து கூறுகின்றேன். எமது எதிர்காலச்சந்ததி தமது அறிவாற்றலால் உலகத்தை வென்றெடுக்க வேண்டும். போர்க்களங்களில் உயிரைக்கொடுத்த வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த யுத்தம் எங்களோடு முடிந்துபோகவேண்டும் என்றுதான் எண்ணினார்களே தவிர அடுத்த சந்ததிக்கு அது தொடர வேண்டும் என நினைத்திருக்கவில்லை" இது தமிழினியின் வரிகள்.

இன்னுமோர் இடத்தில் இப்படி எழுதுகின்றார் "நாடு கிடைத்ததும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற எங்களின் புத்திஜீவிகள் நாட்டை முன்னேற்றுவார்கள் என்று நாங்கள் நம்பிக்கொண்டிருந்தோம்".

இப்பொழுது எனது மனசாட்சி என்னை கொல்வது போல் உங்களின் மனசாட்சியும் உங்களை கொன்றுகொண்டிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா, நீங்கள் நினைக்கின்ற மாதிரி புத்தகம் இருந்தால் சந்தோசம்...எதற்கும் புத்தகம் வரட்டும் வாசித்து விட்டுக் கருத்துக் கூறலாம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.