Jump to content

தமிழினியின்; சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “


Recommended Posts

இளம் வயதில் வெதரிங் ஹைட் ஒரே நாவலை தந்துவிட்டு இறந்த எமிலி புரண்டே ஆங்கில இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார் (Wuthering Heights – Emily Brontë’) அதுபோல் தமிழினியின் சுயசரிதையும் ஈழத் தமிழர்களால் பலகாலம் பேசப்படும். அரசியல் போராட்டத்தை இப்படி எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்பதோடு நமக்கு தவறுகளைப் புரிந்து கொள்ளும் பாலபாடமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன்

அரசியல்

முப்பது வருடகால தமிழ் விடுதலைப் போராட்டத்தை மகோன்னத போராட்டமாகவும் அதன் தலைவரை கடவுளுக்கு நிகராகவும் வைத்து எதுவித விமர்சனமற்ற போராட்டமாக எடுத்துச் சென்றோம். ஆனால் போராட்டம் 2009 இல் முற்றாக ஆவியான பின்பு இயக்கத்தில் வெவ்வேறுகாலங்களில் இருந்தவர்கள் நாவல்களாக எழுதினார்கள்.

நமது சமூகத்தில் இலக்கியம் படிப்பவர்கள் எத்தனைபேர்?

தொடர்ந்தும் இந்த ஆயுதப்போராட்டம் பேசாப்பொருளாக இருக்கிறது. இதை பாவித்து சுயநலமிகள் தங்களது வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்.

அரசியலில் உள்ளவர்கள் புலி எதிர் – புலி ஆதரவு என்று பேசி பதவிப்போட்டியில் இறங்கினார்கள். இலட்சக்கணக்கான மனிதர்கள் உயிர்கொடுத்த ஆயுதப்போராட்டம் பற்றிய அறிவுசார் தர்க்கங்களை மக்களிடம் அவர்கள் எடுத்து செல்லவில்லை..

தமிழ் ஊடகங்கள் கலாச்சார பண்பாட்டுத்தளத்திலோ அரசியலிலோ எதுவிதமான பங்களிப்பை செய்யாது அமெரிக்க கால்பந்தாட்டத்தின்போது நடனமாடும் இளம் பெண்கள் செயரிங் குழுவாக இருந்தது.

பல்கலைக்கழகங்களைப் பற்றி பேசிப்பயனில்லை அதைவிட எங்கள் காலத்தில் இருந்த பொண்ட் ரியூட்டரியின் சமூகபங்களிப்பு அதிகம்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சமீபத்தில் மாணவிகளின் உடைககளில் கவனம் செலுத்திவருகிறது

இந்த நிலையில் வெளிவந்திருக்கும் தமிழினியின் சுயசரிதை நூல் பல விடயங்களை நமக்குத் தெரிவிக்கிறது. எனது அறிவில் இருந்த சில வெற்றிடங்களை நிரப்புகிறது.

தமிழினியின் கூர்மையான எழுத்துக்கு அறிமுகம் தேவையில்லை. அவரது ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு தொடர்பு கொண்டு முகநூல் நண்பராகினேன்

இலக்கியம்

பல பெண்கள் தங்களது தாம்பத்திய உறவை முறித்தபின் தங்களுக்கு கணவனால் நடந்த கொடுமையை மடைதிறந்தால்போல் கொட்டுவார்கள் இதை நான் எனது தொழிலில் பலமுறை கேட்டிருக்கிறேன். இப்படியான செய்கை அவர்களது மனப்பாரத்தை இறக்குவதுடன் மீண்டும் வேறுதிசையில் பயணத்திற்கு தயார்ப்படுத்துகிறது. நான் நினைக்கிறேன் பெண்களின் தாய்மையோடு இது சம்பந்தபட்டுள்ளது. அவர்களது இலட்சியங்கள் உடலுறவு தாம்பத்தியத்துடன் முடிவடைவதில்லை. இந்த தன்மையுடன் தனது மனப்பாரத்தை மிகவும் தெளிவான மனதுடன் தமிழினி இந்த நூலில் இறக்கி வைத்திருக்கிறார்..

எஸ்பொவின் வரலாற்றில் வாழ்தல் யாழ்ப்பாணத்து சாதியின்மேல் ஏற்பட்ட வெறுப்பால் தனது மனதில் உள்ளபாரத்தை வெளிக்காட்டும கத்தாசிஸ் இலக்கியமாக அடையாளப்படுத்தினேன். . எஸ்பொவின் சுயசரிதையில் சில இடங்களில் நம்பகத்தைன்மை தெளிவற்று இருந்தது.

கத்தாசில் இலக்கியத்தில் (Catharsis literature )முக்கியமாக சொல்லப்படுவது உண்மையாக இருக்கவேண்டும். அதன்படி தமிழினியின் புத்தகம் சத்தியமான வார்த்தைகளைக் கோர்த்து கத்தாசில் இலக்கியம் படைத்திருக்கிறார்..

இந்த புத்தகத்தில் உள்ள சில முக்கிய பந்திகளை இங்கு அடையாளப்படுத்தியுள்ளேன்.

இதுவரைகாலமும் நாலுகால் மிருகங்கள் எட்டுக்கால் நட்டுவக்காலிகள் போன்றவர்கள் எல்லாம் ஈழத்து அரசியல் என்னுடன் பேசுவார்கள். இவர்களுடன் பழகுவதற்கு பலவருட படிப்பும் மிருகவைத்திய அனுபவம் துணை செய்தது.. இனிமேல் அரசியல் பேசவருபவர்களிடம் குறைந்தபட்சமாக ‘தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் படித்துவிட்டுவா ‘ என சொல்வதற்கு தீர்மானித்திருக்கிறேன்.

புத்தகத்தின் சில பகுதிகள்

தலைவரைப்பற்றியது :-

“ஒருநாள் நானும் தளபதிகள் விதுஷாவும், துர்க்காவும் தலைவரை சந்திப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தோம். அது சமாதானம் தொடங்கிய ஆரம்ப கால கட்டம். அந்த சந்திப்பில் தலைவர் பல விடயங்கள் பற்றியும் எம்மோடு பேசிக்கொண்டிருந்தார். அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்;
“மட்டக்களப்பு, அம்பாறைப் போராளிகள் போராட்டத்தில எவ்வளவோ கஷ்டங்களைப் பட்டிருக்கிறாங்கள் அவங்கட குடும்பங்களுக்கும் அந்த மக்களுக்கும் நிறைய வேலைகள் செய்யவேணும். நிதித்துறை மூலமா ஒரளவு பண உதவியையும் செய்து கருணாவுக்கும் சொல்லியிருக்கிறன், அந்தச் சனத்திற்கு நிறைய உதவிகள் செய்யச் சொல்லி. அவன் செய்யிறான், இவங்கள் பொட்டு ஆக்கள் என்னட்ட வந்து அங்க அது பிழை இது பிழை எண்டு சொல்லிக் கொண்டு நிக்கிறாங்கள், தளபதிமாருக்குள்ள முதலில ஒற்றுமை இருக்கவேணும்” என்று குறிப்பிட்டார்.”

தமிழினியின் கருத்தாக:-

“இலங்கைப் படையினரை வலுச் சண்டைக்கு இழுத்து யுத்தத்தை ஆரம்பிப்பதன் மூலம் தலைவரால் திருகோணமலைப் படையணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஆட்லறிகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களைக் கைப்பற்ற முடியும் என திருகோணமலையின் தளபதியாக இருந்த சொர்ணம் கருதினார். அவரது திட்டத்திற்கு தலைவருடைய அனுசரணையும் இருந்தது. இயக்கம் எதிர்பார்த்த படியே இறுதி யுத்தம் திருகோணமலை மாவிலாற்றங்கரையில் மூண்டது. 2006 ஆகஸ்ட் 15 இல் மாவிலாறு பகுதி முழுமையாக இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதுடன், மூதுார், சம்பூர், கட்டைப்பறிச்சான், தோப்பூர் எனப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை நோக்கி யுத்தம் விரிவடையத் தொடங்கியது. புலிகள் இயக்கம் எதிர்பார்த்தமைக்கு மாறாக திருகோணமலைத் தோல்விகள் அமைந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் மீது இருந்த அதீத நம்பிக்கை மாவிலாற்றில் பலத்த அடிவாங்கத் தொடங்கியது.” “

எதிர்பாரது சந்தித்த இராணுவ அதிகாரி பற்றி தமிழினி::-

“வணக்கம் தமிழினி” என சளரமான தமிழில் பேசினார். அவரைக் கண்டதும் எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது.. அந்த மனிதரை முன்னர் எங்கேயோ சந்தித்துப்பேசிய நினைவு பொறி தட்டியது. ஒரு கணம்தான். தலைக்குள் மின்னலடித்ததைப்போல சுதாகரித்துக் கொண்டேன். சமாதான காலத்தில் வன்னிக்கு வந்த ஊடகவியலாளர்களோடு ஏதோவொரு சிங்கள ஊடகத்தின் சார்பில் அதன் பிரதிநிதியாக இவரும் வந்திருந்தார். அரசியல் பொறுப்பாளர் உள்ளிட்ட பல இயக்க முக்கியஸ்தர்களைச் சந்தித்ததுடன் கிளிநொச்சியில் அமைந்திருந்த அரசியல்துறை மகளிர் செயலகத்தில் என்னையும் சந்தித்திருந்தார்.
சளரமாகத் தமிழில் பேசக்கூடிய அவர், பல போராளிகள், பொறுப்பாளர்களுடன் போராட்டத்திற்கு சார்பான ஒருவர் என்ற தோரணையுடன் மிக இலகுவாக நட்புரிமையுடன் பழகிய ஞாபகங்கள் வந்தது. அது மட்டுமல்லாமல், 2004ம் ஆண்டில் முதல் பெண் மாவீரரான 2ம் லெப் மாலதியின் நினைவு நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியாக கிளிநொச்சியில் நடத்தப்பட்டபோது இவரும் கலந்துகொண்டு அனைவரோடும் தன்னை ஊடகவியலாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு மிக இயல்பாக பல விடயங்கள் பற்றியும் உரையாடியதும் நினைவுக்கு வந்தது. அந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி எவ்வளவு சாதுரியமாகப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் துாவிவிட்டு கிளிநொச்சியின் சந்து பொந்துகளில் உலவித் திரிந்தார் என்பதை பெரும் திகைப்போடு நினைத்துப் பார்த்தேன்

யுத்த இறுதிநாட்களில் பொட்டம்மான்:-

மிகவும் சுருக்கமாக பின்வரும் விடயங்களைப் பொட்டம்மான் தெரிவித்தார்;

“ஒரு அதிசயம் நடந்தாலே தவிர இயக்கம் வெல்வது என்பது இனிச் சாத்தியமில்லை, இயக்கத்தின் ஆவணங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை முற்றாக அழித்து விடுங்கள், மக்கள் இராணுவத்திடம் செல்லத் தொடங்கி விட்டார்கள், இறுதிக் கட்டத்தில் போராளிகளும் அவர்களோடு சேர்ந்து செல்ல வேண்டி வரும்போது ’இதிலே புலி இருந்தால் எழும்பிவா’ என்று கூப்பிடுவான் அப்போது ’நான் புலி’ என எழுந்து போகும் போது சுட்டுக் கொல்லுவான், இதுதான் நடக்கப்போகுது, யுத்தத்தில ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துவதற்கு தலைமை முழு முயற்சிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறது, ஆனாலும் திரும்பவும் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள், அதிசயமொன்று நடந்தாலே தவிர நாங்கள் வெல்லுறது சாத்தியமில்லை, நான் உங்களை குழப்புவதற்காக இப்படி சொல்லவில்லை. உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லுகிறேன், முக்கியமாக உங்களை இன்றைக்கு கூப்பிட்ட விடயம் உங்களிடமிருக்கும் ஆவணங்களை அழித்துவிடுங்கள் என்பதை கூறுவதற்காகத்தான்”.

அத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது. காயப்பட்டிருந்த போராளிகளைப் பற்றியோ அல்லது இயக்கத்தையே நம்பி பராமரிப்பு இல்லங்களில் இருந்தவர்களைப் பற்றியோ கூட ஒரு வார்த்தை கூறப்படவில்லை. பெண் போராளிகள் எதிர் நோக்கக் கூடிய இரட்டிப்பு ஆபத்து பற்றியோ எதுவுமே பேசப்படவில்லை. ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவும் தோன்றாத மனநிலையில், அனைவரும் கலைந்து சென்றோம். விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களுக்கு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற இறுதியான ஒன்றுகூடல் அதுவாகத்தான் இருந்தது.-

விதுஷா தமிழினியிடம்கூறியது :-

“சண்டைப் பயிற்சி உள்ள இருபத்தையாயிரம் பேரும் ஆட்லறிக்குரிய எறிகணைகளும் இருந்தால்தான் மீண்டும் கிளிநொச்சியை பிடிக்கலாம்,” என்று தலைவர் கூறியதாக சுரத்தேயில்லாமல் கூறினார் விதுஷா. ”பொட்டம்மான் கதைக்கிற கதைகளை நினைச்சா விசர்தான் பிடிக்கும். எனக்கென்டால் அவரில இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போட்டுது. நிலைமைகள் விளங்காமல் கதைச்சுக் கொண்டு நிற்கிறார்”

“எல்லாரும் என்னுடைய கையிலதான் எல்லாம் இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். என்னட்ட ஒன்டுமில்லை என்ர கை வெறுங்கை” என்று தலைவர் தனது கையை விரித்துக் காட்டியதாக ஈழப்பிரியன் தனது கைகளை விரித்துக் காட்டினார். “அண்ணையே இப்பிடிச்சொன்னால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என மன வருத்தத்துடன் கூறிவிட்டுச்சென்ற அடுத்த சில நாட்களில், ஈழப்பிரியன் என்ற இளம் போராளி மகாபாரத்தில் வரும் அபிமன்யூவின் தீரத்துடன் கிளிநொச்சியில் தன்னைச் சுற்றி வளைத்த இராணுவத்துடன் மோதி வீர மரணத்தைத் தழுவினான்..:: “

உயிரோடு இருந்தால் ஏதோ அரசியல் லாபத்திற்காக தமிழினியால் எழுதப்பட்டது என்பார்கள். இறந்த பின்பு இதை எமக்கு தந்து விட்டதால் தமிழினி தனது மரணத்தை அர்த்தமுளளதாக செய்துவிட்டு போயிருக்கிறார். இவர் போல் எத்தனைபேர் யார் யாரோ கனவுகளுக்கு உயிர்கொடுக்க நினைத்து மாண்டார்கள் என்பது நினைப்பதற்கு கடினமானது.

தமிழினியின்ஆரம்ப வக்கீலாக இருந்த தமிழ்க் காங்கிரசின் தலைவர் விஞாயகமூர்த்தியால் கைவிடப்பட்ட பின்பு சிங்கள வக்கீலான மஞ்சுல பத்திராஜாவால் (Manjula Pathirajah) மேல்கொண்டு தமிழினியின் கேஸ் எடுத்து செல்லப்பட்டது. தமிழினி மிகவும் குறைந்தகாலத்தில் சிறையில் இருந்து விடுதலையாகினார். தமிழினிக்காக ஆஜரானபோது எதுவித பணமும் வாங்காது மடடுமல்ல நோர்வேயில் இருந்து சில உறவினர் பணம்கொடுக்க முன்வந்தபோது மஞ்சுல பத்திராஜாவால் வாங்க மறுத்தார். தமிழினியை சந்திக்க சிறைக்கு செல்லும்போது உணவுப்பண்டங்களைக் கொண்டு செல்வது இவரது வழக்கம்.

இலங்கையில் போரில் இருசமூகங்கள் ஈடுபட்டபோதும் மனித விழுமியங்களை பலர் பாதுகாத்தனர் என்பது எதிர்காலத்ததை அடுத்த சந்ததியினருக்கு நம்பிக்கையுள்ளதாக்கும் என்பதால் இந்த விடயத்தைக் இங்கு குறிப்பிடுகிறேன்

ஒரு கூர்வாளின் நிழலில் – காலச்சுவட்டின் வெளியீடு

http://noelnadesan.com/2016/03/07/தமிழினியின்-சுயசரிதை-ஒ/

Link to comment
Share on other sites

வாசிக்க மிக ஆவலாக இருக்கு ,

எப்போ கையில் கிடைக்கும் என்று  தேடித்திரிகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

வாசிக்க மிக ஆவலாக இருக்கு ,

எப்போ கையில் கிடைக்கும் என்று  தேடித்திரிகின்றேன் .

மிகவும் சோகமான வரலாற்றுப் பதிவுகள்.... :(

அர்ஜூன் அண்ணரின் வரிகளை பார்த்தல் "எப்போ கையில் கிடைக்கும் என்று  தேடித்திரிகின்றேன்" 

யாரையோ அடிப்பதற்கு தேடிக்கொண்டு இருக்கிறார் போல இருக்கிறதே.  :oO:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ இதை வாசித்து விட்டு வகுப்பு எடுப்பினம். தாங்கள் கண்ணால் கண்டது மாதிரி.

இப்படியானாவர்கள் எங்கள் போராட்டத்தை அறிந்ததே "செவிவழி & நூல்வழி"

Link to comment
Share on other sites

சசி  ,

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள் தான் இப்ப உலகம் எங்கும் போராட்டம் பற்றி கதை விடுகின்றார்கள் ,

தமிழினி கடைசிவரை போராட்டத்தில் இருந்தவர் அதுதான் அந்த ஆவல் .

தமிழ்கவி ,குணா கவியழகன் இப்போ தமிழினி

------------------

 

7 hours ago, MEERA said:

கொஞ்சம் பொறுங்கோ இதை வாசித்து விட்டு வகுப்பு எடுப்பினம். தாங்கள் கண்ணால் கண்டது மாதிரி.

இப்படியானாவர்கள் எங்கள் போராட்டத்தை அறிந்ததே "செவிவழி & நூல்வழி"

இதில் ஒழிக்க என்ன இருக்கு ,

யாழில் இருப்பவர்கள் எல்லாம் முள்ளிவாய்காலில் தப்பி வந்தவர்கள் மாதிரி இருக்கு உங்கள் எழுத்து அதற்கு பச்சை வேறு ,

இந்த கோஸ்டி வெடி கேட்க காகம் மாதிரி பறந்த கோஸ்டி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில உண்மைகள்  கசக்கத்தான் செய்யும் ,அதற்காக நடந்து முடிந்தவைகளை மாற்றமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மாதிரி வெடி என்ற சொல்லைக் கேட்டவுடன் ஓடவும் இல்லை ஒரத்தநாடு நாட்டிலிருந்து புடவை விற்க வரவும் இல்லை. 

நாங்கள் இலங்கையில் எத்தனையோ சம்பவங்களை பார்த்துத்தான் வந்திருக்கிறோம். முள்ளிவாய்க்காலில் தப்பி வந்தவர்களும் இருக்கிறார்கள் யாழில். 

6 hours ago, arjun said:

சசி  ,

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள் தான் இப்ப உலகம் எங்கும் போராட்டம் பற்றி கதை விடுகின்றார்கள் ,

தமிழினி கடைசிவரை போராட்டத்தில் இருந்தவர் அதுதான் அந்த ஆவல் .

தமிழ்கவி ,குணா கவியழகன் இப்போ தமிழினி

------------------

 

இதில் ஒழிக்க என்ன இருக்கு ,

யாழில் இருப்பவர்கள் எல்லாம் முள்ளிவாய்காலில் தப்பி வந்தவர்கள் மாதிரி இருக்கு உங்கள் எழுத்து அதற்கு பச்சை வேறு ,

இந்த கோஸ்டி வெடி கேட்க காகம் மாதிரி பறந்த கோஸ்டி .

 

 

ந்ந்தன் யாராவது ஒட்டுக் குழு உறுப்பினர் தனது இயக்கத்தில் நடந்தவற்றை எழுதியுள்ளார்களா?

5 hours ago, நந்தன் said:

சில உண்மைகள்  கசக்கத்தான் செய்யும் ,அதற்காக நடந்து முடிந்தவைகளை மாற்றமுடியாது.

என்க்கு தெரிந்த வரை 2009ற்குப் பின்னர் மற்றவர்கள் தலைவரை விமர்சித்து எழுத தமிழினி மட்டும் தான் அம்மானை விமர்சித்து எழுதியிருக்கிறார். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நொயல் நடேசனின் முன்னோட்டம் இந்தப் புத்தகத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரப் போகிறது. "மிருக வைத்தியப் படிப்பும் அதனால் வந்த தொழில் அனுபவமும் தேசிய அரசியல் பேசுவோருடன் உறவாட உதவியது" என்று சொல்லியிருப்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். இதற்குப் பல அர்த்தங்கள், சந்தர்ப்பங்கள் வரும் போது குறிப்பிடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, arjun said:

சசி  ,

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள் தான் இப்ப உலகம் எங்கும் போராட்டம் பற்றி கதை விடுகின்றார்கள் ,

தமிழினி கடைசிவரை போராட்டத்தில் இருந்தவர் அதுதான் அந்த ஆவல் .

தமிழ்கவி ,குணா கவியழகன் இப்போ தமிழினி

------------------

 

இதில் ஒழிக்க என்ன இருக்கு ,

யாழில் இருப்பவர்கள் எல்லாம் முள்ளிவாய்காலில் தப்பி வந்தவர்கள் மாதிரி இருக்கு உங்கள் எழுத்து அதற்கு பச்சை வேறு ,

இந்த கோஸ்டி வெடி கேட்க காகம் மாதிரி பறந்த கோஸ்டி .

நீங்க திருந்தவோ

பழிவாங்குதலை நிறுத்தவோ

பழிவாங்குதலுக்காக தேடுவதை ஆனால் அதை மறைப்பதை உணரவோ

போவதில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மு.வாய்க்காலில் தோற்றவுடன் புலனாய்வுப் போராளிகள்,அரசியற் போராளிகளையும்,அரசியற் போராளிகள்,புலனாய்வு போராளிகளையும் மாறி,மாறி குற்றம் சொல்லத் தொடங்கிட்டினம்...நல்ல காலம் அக்கா,புத்தகம் வெளி வரேக்கு முதலே இறந்து விட்டார். இல்லா விட்டில்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கூர்வாளின் நிழலில் ... 

இந்த புத்தகத்திற்கு தமிழினி அக்கா வைத்த பெயரிலேயே போராட்டத்திதற்கான அர்த்தங்கள் பொதிந்து கிடக்கிறது. 
    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினிக்கு சிக்கல் என்றவுடன் முகத்தை திருப்பியவர்கள் எல்லாம் இப்போது அவரது புத்தகத்திற்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு நிற்கிறார்கள். 

Link to comment
Share on other sites

24 minutes ago, MEERA said:

தமிழினிக்கு சிக்கல் என்றவுடன் முகத்தை திருப்பியவர்கள் எல்லாம் இப்போது அவரது புத்தகத்திற்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு நிற்கிறார்கள். 

திருப்பி சொறிவதில்லை என்று முடிவு எடுத்தாச்சு .

நீங்கள் தொடர்ந்து சொறியுங்கோ பிரச்சனை இல்லை .:cool:

Link to comment
Share on other sites

 

 

32 minutes ago, arjun said:

திருப்பி சொறிவதில்லை என்று முடிவு எடுத்தாச்சு .

நீங்கள் தொடர்ந்து சொறியுங்கோ பிரச்சனை இல்லை .:cool:

ஓ அப்படியா, நல்ல அரசியல் வாதியப்ப, வாலை சுருட்ட வேண்டிய இடத்தில் சுருட்ட
பழகிவிட்டீர்கள் :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஒரு விதி செய்வோம்... 
சீண்டாமை ..மதிப்போம்..
மீறினால் ஏறி மிதிப்போம் 

சும்மா ஒரு கவிதை நயத்துக்கு எழுதியது... 

Link to comment
Share on other sites

1 hour ago, வந்தியதேவன் said:

 

 

ஓ அப்படியா, நல்ல அரசியல் வாதியப்ப, வாலை சுருட்ட வேண்டிய இடத்தில் சுருட்ட
பழகிவிட்டீர்கள் :cool:

 

என்னை பொறுத்தவரை தமிழினி புலிகளில் இருந்தது பல உயிர்களின் இழப்புகளுக்கு துணை போன ஒருவர்தான் ,

இப்போ அவர் என்ன எழுதியிருகின்றார் என்று வாசிக்க ஆவல் அவ்வளவுதான் .இன்று பல தாம் செய்த தவறுகளுக்கு பிரயாசித்தம் தேடுகின்றார்கள் .

மற்றபடி சிலருடன் சொறிந்தாலும் கொஞ்சம் ஆரோக்கியம் இருக்கும் அதுவும் இல்லாதவர்களுடன் அதுவும் வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் அறிமுகம்: "ஒரு கூர்வாளின் நிழலில்" - தெய்வீகன்

 
.
(மெல்பனில்  கடந்த  ஞாயிற்றுக்கிழமை  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம் நடத்திய  அகில  உலகபெண்கள்  தினவிழாவில் அறிமுகமான   தமிழினியின்  புதிய  நூல்)

 
Thamilini%2BBook.png
 
விடுதலைப்புலிகள்  அமைப்பின்  மகளிர்  அரசியல்துறைபொறுப்பாளரான  தமிழினி அவர்கள்  எழுதிய  தன்வரலாற்று  நூல் ஒரு கூர்வாளின்  நிழலில். சாவதற்கு  முன்புவரை  தான் எதிர்கொண்ட  போராட்ட  வரலாற்றையும்  தான்  நடத்திய போராட்டங்களையும்  சத்தியத்தின் வழிநின்று  சாட்சியமாக்கியிருக்கும்  பதிவு

 
வாழ்வுக்கும்  சாவுக்கும்  இடையில் ஊசலாடிக்கொண்டிருந்த  உயிரின்  கடைசித்துளிவரைக்கும்  தான்  மிகவும்  நேசித்தமண்ணுக்கும்  மக்களுக்கும்  உண்மைகளை  சொல்லவேண்டும் என்பதற்காக  பல  விடயங்களை  எழுத்தில்  பதிந்துவிட்டு சென்றிருக்கும்   வரலாற்று  பொக்கிசம்.

 ஒரு இனத்தின்  அகமும்  புறமுமாக  முப்பதாண்டு  காலம்  பெரு நம்பிக்கையுடன்  மேற்கொண்ட  ஆயுதப்போராட்டமானது  எவ்வாறு கொடூரமாக முடிவுக்கு  கொண்டுவரப்பட்டது  என்பதை உணர்வுபூர்வமாக  பேசியிருக்கும்  வரலாற்று  நூல்  என்று இதைக்கூறலாம்

 
 
 

 
Thamizini_Sivakamy.jpg
 
 
போர்  முடிவுற்ற  ஏழாண்டு  காலத்தை  எட்டிக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில்  அது  ஏற்படுத்திய  எத்தனையோ  காயங்களையும்  வலிகளையும்  பல  எழுத்தாளர்கள்  தமதுபுனைவெழுத்துக்களின்  ஊடாக  இலக்கியமாக்கியிருக்கிறார்கள்போரிலக்கியத்தின்  நுண்கூறுகளைக்கூட  அவ்வப்போது  தொட்டும் சென்றிருக்கிறார்கள்.  ஆனால்,  தமிழினி எழுதியிருக்கும்  இந்த நூலின்  ஒவ்வொரு  பக்கமும்  ஈழத்தமிழர்கள்  அனைவரும்வாசிக்கவேண்டிய  அவசியத்தை  தன்னகத்தே  கொண்டிருக்கிறதுஅவர்  முன்வைக்கும்  நியாயங்கள்  அனைத்திலும்  உண்மையை தயங்காமல்  பேசியிருக்கிறார்.

 
 தன்னையும்  தான்  சார்ந்த  அமைப்பையும்  தங்களது  பிழைகளையும்  எந்த  சமரசமும்  இல்லாமல்  விமர்சித்திருக்கிறார்இதன்   மூலம்  தான்  நேசித்த  மக்கள்  எதிர்காலத்தில்கண்மூடித்தனமான  இறந்தகால  புனைவுகளுடன் பயணித்துவிடக்கூடாது  என்ற  கவனத்தை  பொறுப்புடன்  பதிவு செய்திருக்கிறார்

 
என்னை பொறுத்தவரை,  ஈழத்தின்  போர்  இலக்கிய  வரலாற்றில் பலரது  படைப்புக்கள்  -  முன்னர்  கூறியது  போல -  புனைவுகளாக பதிவு  செய்யப்பட்டு  கவனத்தை  ஈர்த்திருக்கின்றன.   கோவிந்தனின் புதியதோர் உலகம்  முதல் ஐயர்,  செழியன்,  புஸ்பராசா, புஸ்பராணி என்று   பலர்  தாம்  சார்ந்த  இயக்கங்கள்  குறித்தும்  மக்கள்  குறித்துசாதகமாகவும்   எதிர்நிலைகளிலிருந்தும்  தத்தமது  நியாயப்பாடுகளை பதிவு செய்திருக்கிறார்கள்.  ஆனால், தமிழினியின்  கூர்வாளின் நிழலில்  அவற்றிலிருந்து  தனித்து  நின்று  பேசுகிறது  என்றுதான் சொல்வேன்
  
Thamilini%2BBook.png


 
சில இடங்களை  வாசிக்கும்போது, கைகள்  நடுங்கியது.  உயிரை  உருவி  எடுத்து  வெளியில்  எறிந்தது போன்ற  வெறுமையுடன் அடுத்த  பக்கத்துக்கு  செல்லவேண்டியதாகவும்  இருந்தது.   மக்களின் முன்னால்  தயங்காமல்  தன்  குற்றங்களை  ஒப்புக்கொண்டு கூற்றவாளிக்கூண்டில் ஏறிநின்று  பேசுகின்ற  ஒப்புதல் வாக்குமூலமாகவும்   தனது  விசுவாசத்தினதும்  அதன்  வீரியத்தின் நீட்சியில்   புறக்கணிக்கப்பட்ட  பொதுக்கடமைகளையும் வெளிப்படையாகபேசுகின்ற  -  உண்மைக்கு  நெருக்கமான - படைப்பாகவும்  அது  காணப்படுகிறது
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா, புத்தகத்திலே என்ன பெரிசாய் அவ எழுதி இருக்க போறா???...நடந்து முடிந்த மு.வாய்க்கால் முழுத் தவறையும் புலனாய்வுப் பிரிவின் மீதும்,பொட்டரின் மீது சுமத்தி இருப்பார்...அவர்கள் சொல்லித் தான் பலவந்தமாக ஆட்களை இயக்கத்திற்கு பிடித்தோம் என்பார்...கருணா மீது ஒரு பிழையும் இல்லை என்பார்.சிங்கள இராணுவத்தினர் எவ்வளவு கண்ணியமானவர்கள்.தங்களை மிக கண்ணியமாக நடத்தினர் என எழுதினாலும் ஆச்சரியமில்லை.......

புத்தகத்தை வாசிக்காமல் கருத்து சொல்வது தப்புத் தான்.ஆனால் என்னுடைய ஊகம் இது தான்

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

அர்ஜீன் அண்ணா, புத்தகத்திலே என்ன பெரிசாய் அவ எழுதி இருக்க போறா???...நடந்து முடிந்த மு.வாய்க்கால் முழுத் தவறையும் புலனாய்வுப் பிரிவின் மீதும்,பொட்டரின் மீது சுமத்தி இருப்பார்...அவர்கள் சொல்லித் தான் பலவந்தமாக ஆட்களை இயக்கத்திற்கு பிடித்தோம் என்பார்...கருணா மீது ஒரு பிழையும் இல்லை என்பார்.சிங்கள இராணுவத்தினர் எவ்வளவு கண்ணியமானவர்கள்.தங்களை மிக கண்ணியமாக நடத்தினர் என எழுதினாலும் ஆச்சரியமில்லை.......

புத்தகத்தை வாசிக்காமல் கருத்து சொல்வது தப்புத் தான்.ஆனால் என்னுடைய ஊகம் இது தான்

 

உங்கள் கணிப்பு தப்பு,

மிகவும் நேர்மையான போராளி என்று அவர் படைப்புகள் மூலம் அறிய கூடியதாக இருந்தது ,புலிகளின் தலைமை  மீது சில விமர்சனங்கள் இருக்க சந்தர்ப்பம் இருக்கு மற்றபடி ஏதும் பெரிதாக இருக்காது ஏனெனில் புலிகளின் செயற்பாடுகளை மனதார சரியென்று நம்பி செயற்பட்ட ஒருவர் .

நான் வாசிக்க ஆவலாக இருப்பதற்கு காரணம்  இதுவரை எவரும் சொல்லாத எழுதாத விடயங்கள் அதில் இருக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை உங்கள் யதார்த்தமான கருத்துக்கு.
புலிகளின் பாசறையில் தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்த / தலைமைத்துவம் கொண்ட போராளி தான் தமிழினி அக்கா.                               அந்தர் பல்டி எல்லாம் அடித்து கதை எழுதி இருக்க மாட்டார் என்பதுவே என் யூகமும்.
யுத்த பூமியின் கொடூரம், அடைந்த சின்னபின்னம், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், சிறை வாழ்வு, நோயுற்ற நிலை, உதவிக்கரம் நீட்டியவர்கள், சுடு சொல்லில் திட்டியவர்கள் என்பதன் பிரதிபலிப்புகளாக இந்த புத்தகம் இருக்கும் என நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இருக்கும் போது இது வந்திருக்க வேண்டும்.

இப்போ இதில் யார் யாரின் சேர்ப்பு இருக்குமோ எனும் சந்தேகம் வராமலில்லை.

இருக்கும் போதும் ஒரு கட்டாயத்தின் பேரில் எழுதப் பட்டதா எனும் சந்தேகமும் தொனிக்கவே செய்தது.

கட்டாயம் வாங்கிப் படிப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, arjun said:

உங்கள் கணிப்பு தப்பு,

மிகவும் நேர்மையான போராளி என்று அவர் படைப்புகள் மூலம் அறிய கூடியதாக இருந்தது ,புலிகளின் தலைமை  மீது சில விமர்சனங்கள் இருக்க சந்தர்ப்பம் இருக்கு மற்றபடி ஏதும் பெரிதாக இருக்காது ஏனெனில் புலிகளின் செயற்பாடுகளை மனதார சரியென்று நம்பி செயற்பட்ட ஒருவர் .

நான் வாசிக்க ஆவலாக இருப்பதற்கு காரணம்  இதுவரை எவரும் சொல்லாத எழுதாத விடயங்கள் அதில் இருக்கலாம் .

இதுவரை எல்லாம் தெரிந்த மாதிரி பிலிம் காட்டிவிட்டு...... இன்று மிச்சம் மீதி இருப்பதையும் வாசித்து புலிவாந்தி எடுக்க புது புத்தகம் தேடுகின்றது ------

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

இவர் இருக்கும் போது இது வந்திருக்க வேண்டும்.

இப்போ இதில் யார் யாரின் சேர்ப்பு இருக்குமோ எனும் சந்தேகம் வராமலில்லை.

இருக்கும் போதும் ஒரு கட்டாயத்தின் பேரில் எழுதப் பட்டதா எனும் சந்தேகமும் தொனிக்கவே செய்தது.

கட்டாயம் வாங்கிப் படிப்பேன்.

தமிழினி இருக்கும் போதே இவரது நூல் வெளியிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது கோசான். அவர் உயிருடன் இருக்கும் போதே இது தொடர்பான விடயங்கள் தொடங்கப்பட்டு நடந்து வந்ததை அறிந்து இருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒருமுறை தமிழினி மேலும் இரு போராளிகளுடன் சமாதான காலத்தில் சுவிஸ் நாட்டிற்கு வந்த சமயம் எனது வீட்டிற்கும் வந்திருந்தார். அவரை அழைத்துவந்த மாநிலப்பொறுப்பாளர் கடந்த வருடம் அவரின் முகநுhல் புறோபைல் படத்தில் நடிகர் விஜய் குடியிருந்தார் என்பது வேறு விடயம்.

அது ஒரு வெள்ளிக்கிழமை இரவு நேரம். வரவேற்பறையில் தமிழினியும் இன்னபிற பணியாளர்களும் உட்கார்ந்திருந்தார்கள். எனக்கு தமிழினி யார் என்றே தெரியாது. யாரோ ஒரு போராளி வந்திருக்கின்றார் என்பதோடு சரி.

சம்பிரதாயத்திற்காக வரவேற்பறை சுவரில் சாய்ந்துநின்று வணக்கம் வைத்தேன். அந்த சுவர் இப்படி எத்தனையோ வணக்கங்களை கண்டிருக்கின்றது.

இப்பொழுது அந்த மாநிலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவரும் நானும் அப்போது தளபதி படத்தில் வரும் ரஜனி & மம்முட்டி போல் உயிர்நண்பர்கள். வெள்ளி இரவு என்றாலே நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடிப்பது வழக்கம். அன்று அவன் தான் என்னை ஏற்றிச்செல்வதற்கு வந்திருந்தான். அப்படி தமிழினியுடனும் பேசும் வாய்ப்பு அவனிற்கும் அமைந்தது.

மரியாதை நிமித்தமாகவென்றாலும் ஏதாவது பேசியாக வேண்டும். என்ன கேட்கலாம் என்ற சிந்தனையில் இருந்த போது அவரே மேசையில் இருந்த கடிதத்தில் ஒரு நீண்ட ஜேர்மன் சொல்லைக்காட்டி அதனை வாசித்து காட்ட முடியுமா என்றார். நான் வாசித்துக்காட்டியதும் அவரும் அவருடன் வந்த பெண்ணும் (மெய்பாதுகாவலராக இருக்க வேண்டும்) ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள்.

எவ்வளவு பெரிய ஒரு போராளிக்கு இவ்வளவு சின்ன ஆசையா என்று நினைத்துக்கொண்டேன்.

இப்பொழுது எனது முறை. ஏதாவது கேட்டாக வேண்டும். இல்லாதுவிடின் அவர் சென்ற பின்னர் எனக்கு அப்பாவால் இலவச வகுப்புகள் எடுக்கப்டலாம்.

அடுத்த நாள் தமிழனி பங்குபற்றும் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. "பெடியனும் பெட்டையும் சேர்ந்து ஒரு அமைப்பில வேலை செய்யிறதை பெற்றோர்கள் தப்பா நினைக்கினம். இதைபற்றி நீங்கள் ஒருக்கா கூட்டத்தில கதையுங்கோ" என்று ஒரு கோரிக்கை வைத்தேன். அவனவனுக்கு அவனவன்ரை பிரச்சனை முக்கியம்.

அந்த கோரிக்கைக்கு ஒரு காரணமும் இருந்தது. நான் அப்பொழுது ஒரு அமைப்பில் இருந்த ஒருத்தியை லைன் போட்டுக்கொண்டிருந்தது தான் காரணம். அப்புறம் என்னாச்சா? அந்த லைன் அறுந்து ரெம்ப நாளாகிவிட்டது. அது வெறும் அவுட்கோயிங்க் லைன் மட்டுமே. இறுதிவரை இன்கம்மிங்க வரவேயில்லை. 
தமிழினியக்கா என்ன நினைத்தாவோ தெரியவில்லை "சரி சொல்லுறனப்பன்" என்றுவிட்டு மற்றவர்களுடன் வேறுவிடயங்கள் பற்றி பேசத்தொடங்கினார்.

அதன் பின்னர் அவரை நான் சந்தித்ததும் இல்லை. அவ்வப்போது ஊடகங்களில் பார்க்கின்ற முகம் மட்டுமே. 
இறுதியாக யாராலுமே மறக்க முடியாத அந்த புகைப்படத்தில் தான் பார்த்தேன்.
நோய்தின்று முடித்த உடலை வெள்ளை துணிகளால் மூடி பெட்டிக்குள் வைத்திருந்த அந்த புகைப்படத்தை தான் சொல்கின்றேன்.

எவ்வளவு பெரிய ஒரு ஆளுமை. இப்படியா முடியவேண்டும்? எங்காவது பார்த்து பேசிய மனிதர்கள் மரணிக்கும் போது மட்டுமே மரணத்தின் வலியை உணருகின்றவர்களில் நானும் ஒருவன். தமிழினி அக்காவின் மரணம் அப்படி தான் இருந்தது.

அவரின் மரணத்திற்கு பின்னர் நடந்ததெல்லாம் என்னவோ சுயநல அரசியல்கள் தான். இறுதிவரை அவருடன் தொடர்பில் இருந்ததாக ஒருவர் வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டார். ஆனால் தமிழினியின் குடும்பத்தாரோ இறுதிச்சடங்கிற்கு கூட பணமில்லாமல் பிச்சையெடுக்கும் நிலமை. இன்னொரு பகுதி அவரிற்கு என்ன பதவி கொடுத்து கெளரவிக்கலாம் என்ற சண்டையில் மும்முரமாக இருந்தது. அரசியல் தலைவியை வைத்தே அரசியல் செய்துகொண்டார்கள். ஆனால் பாவம். இறுதிவரை தமிழினியால் வழக்கறிஞரிற்கு கூட பணம் கொடுக்க முடியாமல் இக்கட்டாண நிலையிலிருந்தார். அவர் கட்டிக்காத்து வந்த அமைப்பை இப்பொழுது கொண்டிளுப்பவர்களோ, அவரை வைத்து அரசியல் செய்பவர்களோ அல்லது அவருடன் இறுதிவரை தொடர்பிலிருந்ததாக சொன்ன அந்த நபரோ இதைபற்றி அறிந்திருக்கவில்லை போலும்.

இறுதியில் சிங்கள வழக்கறிஞரான மஞ்சுல பத்திராஜாவால் (Manjula Pathirajah) பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் சிறையிலிருந்து தமிழினியை வெயியே கொண்டுவந்தார்.

இங்கே நான் சொல்வது யாரோ ஒருவரைபற்றியதல்ல.ஒரு தலைவியை பற்றி. அவரிற்கே இந்நிலையென்றால்...

தமிழினியின் உண்மையான நிலைப்பாடு தெரியவரும் பட்சத்தில் அவரையும் துரோகியாக்கவதற்கான வேலைகளில் இதே அமைப்புகள் இறங்கும் என்று உள்பெட்டியில் சில நண்பர்கள் வருத்தம் தெரிவித்தார்கள்.

இக்கருத்திற்கு வலுச்சேர்தாற்போல் ஒரு ஆரம்பகால பணியாளர் தனக்கு தமிழினியின் விடுதலை மீது சந்தேகம் இருப்பதாக என்னிடம் சில மாதங்களிற்கு முன்னர் கூறியிருந்தார்

"எல்லா மனிதர்களையும் போல் 2009ற்கு பின்னர் போராளிகளிற்கு விடிவதில்லை. அவர்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டு, அவர்களை நடுத்தெருவில் பிச்சையெடுக்க வைத்த எங்களிற்கு அவர்களின் கொள்கைப்பிடிப்பு பற்றி பேசுவதற்கு ஏதாவது அருகதையிருக்கிறதா" என்று கேட்டதும் அவர் ஆம்/இல்லை என்ற தோணியில் தலையசைத்திருந்தார்.

இப்படி ஒரு சூழ்நிலையில் தான் கூர்வாளின் நிழலில் சுயசரிதையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன்.

Google Play Storeஇல் இந்த புத்தகம் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது. இலவசமாக சில பக்கங்களை வாசிக்கும் வசதியும் அங்கே உள்ளது. அப்படி வாசித்தவற்றில் முன்னுரையிலே அனைவரின் சந்தேககங்களிற்கும் முற்றுப்புள்ளி வைத்தாற்போல் "விசாரணையின்போதோ அல்லது அதன் பின்னரோ சக போராளி ஒருவர்கூட தன்னால் எதிரியிடம் காட்டிக்கொடுக்கப்படவில்லை. தான் சார்ந்திருந்த அமைப்புக்கு உரியதான ஒரு சதம் பணத்தையோ சிறு பொருளையோ தான் எதிரியிடம் ஒப்படைக்கவோ அல்லது சொந்தப்பாவனைக்கு எடுத்துக்கொள்ளவோ இல்லை". என்று எழுதப்பட்டிருக்கின்றது.

"இனியும் ஆயுதப்போராட்டம் என்ற வழிமுறையில் எமது அடுத்த சந்ததி சிந்திக்கக்கூடாது என்பதை எனது ஆத்மாவிலிருந்து கூறுகின்றேன். எமது எதிர்காலச்சந்ததி தமது அறிவாற்றலால் உலகத்தை வென்றெடுக்க வேண்டும். போர்க்களங்களில் உயிரைக்கொடுத்த வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த யுத்தம் எங்களோடு முடிந்துபோகவேண்டும் என்றுதான் எண்ணினார்களே தவிர அடுத்த சந்ததிக்கு அது தொடர வேண்டும் என நினைத்திருக்கவில்லை" இது தமிழினியின் வரிகள்.

இன்னுமோர் இடத்தில் இப்படி எழுதுகின்றார் "நாடு கிடைத்ததும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற எங்களின் புத்திஜீவிகள் நாட்டை முன்னேற்றுவார்கள் என்று நாங்கள் நம்பிக்கொண்டிருந்தோம்".

இப்பொழுது எனது மனசாட்சி என்னை கொல்வது போல் உங்களின் மனசாட்சியும் உங்களை கொன்றுகொண்டிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா, நீங்கள் நினைக்கின்ற மாதிரி புத்தகம் இருந்தால் சந்தோசம்...எதற்கும் புத்தகம் வரட்டும் வாசித்து விட்டுக் கருத்துக் கூறலாம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.