Jump to content

புத்தரின் மறுபிறப்பென நம்பப்படும் இளைஞன் 9 மாதங்களின் பின் மீண்டும் தென்பட்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் மறுபிறப்பென நம்பப்படும் இளைஞன் 9 மாதங்களின் பின் மீண்டும் தென்பட்டார்

[27 - December - 2006] [thinakkural]

புத்தரின் மறுபிறவி என்று சிலரால் நம்பப்பட்ட இளைஞன் ஒருவன் கடந்த 9 மாதங்களாக காணாமற்போய் பின்னர் மீண்டும் கிழக்கு நேபாளப் பகுதியில் காணப்பட்டதாக நேரில் கண்டவர் ஒருவரும் தொலைக்காட்சி சேவையொன்றும் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

நேபாளத் தலைநகர் காத்மண்டுவுக்கு 150 கிலோ மீற்றர் கிழக்கேயுள்ள பாரா மாவட்டத்தின் பில்லுவா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் ராம் பகதூர் பாம்ஜன் ( வயது 16) என்ற இந்த இளைஞனைக் கண்டதாக உள்ளூர் பத்திரிகையாளரான ராஜு சிரஸ்தா `ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

பாம்ஜன் இரட்ணபுரி கிராமத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் கடந்த மார்ச் மாதம் காணாமல் போனார். இவர் கடந்த 9மாதங்களாக எந்தவித உணவுமின்றி தியானத்திலிருந்ததாக சொல்லப்படுகின்றது.

இதற்கும் கூடுதலான காலப்பகுதிக்கு என்னால் தியானத்தில் இருக்க முடியும். என்னால் தொடர்ந்து 6 வருடங்களுக்கு தியானத்தில் இருக்க முடியுமென பாம்ஜன் சிரஸ்தாவிடம் தெரிவித்துள்ளார்.

புத்தமதத்தை சேர்ந்தவர்கள் உட்பட நூற்றுக்கதிகமானவர்கள் கூட்டம் கூட்டமாக சென்று இந்த இளைஞனை தியானத்திலிருக்கும்போது நேராக கண்டுள்ளனர்.

மக்கள் தமது கைகளை அவரிடம் திணித்தும், தமது தலைகளை தாழ்த்தி பக்தியுடன் அந்த இளைஞன் முன் இருந்ததை அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் காண்பித்துள்ளது.

நான் புத்தர் என நினைக்கவில்லை. ஆனால், இவரிடம் தியானம் தொடர்பான மேலதிகமான சக்தி உள்ளது. இவர் மூலிகைகளை உண்கின்றாரென அந்த உள்ளூர் நிருபர் மேலும் தெரிவித்தார்.

கணக்கெடுப்பின்படி நேபாளத்தில் பெரும்பான்மையாகவுள்ள இந்துக்களும் அயல்நாட்டிலுள்ள இந்தியர்களும் கூட்டம் கூட்டமாக இவர் தியானத்தில் இருந்ததை பார்த்துள்ளனர். ஆனால் அருகில் சென்று பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இவரை 50 மீற்றர் தொலைவில் இருந்தே பார்த்துள்ளனர்.

எனினும், சிரஸ்தா இந்த இளைஞனை மிக அருகில் சென்று பார்த்துள்ளார். "இவர் ஒரு மரத்தின் கீழ் தியானத்தில் இருக்கின்றார். இவரது மார்பைச் சுற்றி சாம்பல் நிற சால்வை சுற்றியிருந்தது. சமதரையில் வளைந்த பட்டாக் கத்தியொன்றும் இருந்தது என அந்த உள்ளூர் நிருபர் இவரைப் பார்வையிட்ட பிறகு தெரிவித்தார்.

நேபாளத்தில் 2,600 வருடத்துக்கு முன் புத்தபெருமான் லும்பினியில் அவதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.