Jump to content

தமிழினியின் ஒரு போர்வாளின் நிழலில் புத்தகத்தில் இருந்து சில குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு மாகாணப் போராளிகளுடன் மேற்கொள்ளப்பட்ட சகோதர யுத்தம் எத்தனை வலிகளை அந்த மக்களுக்கு ஏற்படுத்தியிருந்தது என்பதை நேரடியாக அவர்களிடம் கேட்டறிந்தபோது ஏற்பட்ட மனத் துயரம் நினைத்துப் பார்க்கவும் முடியாத அளவுக்குச் சோகமானது. பல வருடங்களாக எம்முடன் ஒன்றாயிருந்து போரிட்டவர்களின் வாழ்க்கை, பின்பு எமது கரங்களாலேயே முடிவு கட்டப்பட்டபோது, வஞ்சகப் பொறியினுள் அகப்பட்ட பொறுப்பாளர்களின் பலவீனம் காரணமாகவும், முதுகில் குத்திய துரோகத்தை என்றும் மன்னிக்க முடியாது எனச் சூளுரைத்து, சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தடம் மாறிய சாதாரண கீழ்நிலைப் போராளிகளுக்குச் சிறு மன்னிப்பேனும் வழங்குவது தமது மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட செயல் என்பதால் அப்போராளிகள் ஈவிரக்கமின்றி இயக்கத்தால் கொன்றழிக்கப்பட்ட போதும் நாம் மீண்டும் ஒரு கண்ணுக்குப் புலப்படாத வஞ்சகப் பொறியினுள் விழவே செய்தோம். இக்கொடும் பழிவாங்கலில் உயிரிழந்த தமது பிள்ளைகளின் உடல்கள்கூட தமக்குத் தரப்படவில்லையென அழுது அரற்றிய எத்தனையோ பெற்றோரை ஆற்றுப்படுத்தும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.

"எங்கட புள்ளைகள் நாட்டுக்காக எண்டுதானே போராடப் போனதுகள்; இயக்கத்தை நம்பிப்போன பிள்ளைகளை இயக்கமே சுட்டுக் கொன்னு போட்டுதே" என்று அவர்கள் கதறினார்கள். இயக்கம் எமக்குத் தந்திருந்த அரசியல் விளக்கங்களை அந்த அப்பாவிப் பெற்றோருக்கு எப்படிப் புரியவைக்க முடியும்? அந்தச் சூழ்நிலைகள் மிகவும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் நிறைந்தவை. மனதுக்கு மிகவும் கடினமானவை. ஒரு விடுதலைப் போராட்டம் இத்தகைய கட்டங்களையும் கடந்துதான் முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கும் என்பதை ஜீரணித்துக்கொள்வது என்பது எனக்கு மட்டுமல்ல, பல போராளிகளுக்கும் நெருப்பை விழுங்குவதாகவே இருந்தது. 

வெருகலாற்றுக் கரையில் பெண் போராளிகளும் நிறுத்தப்பட்டிருந்தனர். வன்னியிலிருந்து மாலதி படையணி பெண் போராளிகளும் தாக்குதலுக்காக அனுப்பப்பட்டிருந்தனர். ஆயுதமேந்திய பெண்களின் வாழ்க்கையில் இது மோசமான கறை படிந்த நாட்களாயிருந்தன. கிழக்கு மாகாணப் பெண் போராளிகள் பாதுகாப்புத் தேடித் திக்குத்திசையற்று அலறியடித்தபடி வீதிகளில் ஓடியதும், அவர்களுடைய காயங்களுக்கு இலங்கை இராணுவத்தினர், முதலுதவியளித்து வீடுகளுக்கு அனுப்பிவைத்த கதைகளையும் நேரிலே கண்ட பொதுமக்கள் எம்மிடம் சொன்னபோது எதுவுமே பேசமுடியாமல் வாயடைத்து நின்றோம். 2009இல் முள்ளிவாய்க்காலில் அதே நிலைமை எமக்கும் வந்தபோதுதான் அந்த வலியின் கொடூரத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. இனத்தின் விடுதலைக்காக என்ற நியாயத்திற்குள் புதையுண்டுபோன உண்மைகளுக்கு எந்த ஆராய்ச்சி மணியை அடித்து யாரிடம் நீதி கேட்க முடியும்?

(பக்கங்கள் 88 - 89)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி வரியில் இருக்கும் கேள்வியைத் தான் பலர் இங்கே கேட்டுக் கொண்டிருக்கிறோம் மீள மீள. நாமே எம்மை மன்னித்து ஏற்றுக் கொள்வது தான் வழி! ஆனால் மன்னிப்பிற்கு முன்னர் "நாம் அநியாயம் செய்தோம்" என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்! அது தான் பலருக்கு இயலாத செயல், முட்டுப் பட்டு நிற்கிறோம்!

Link to comment
Share on other sites

அந்த வலி வந்திராவிட்டால் விடுதலைக்காக என்ற நியாயத்திற்குள் தமிழினியும் உண்மையை நிட்சயம் புதைத்திருப்பார் .

இந்த வசனம் பழைய நினைவு ஒன்றை கிளறிவிட்டது ,

"உட்கொலைகள் பற்றி விவாதித்துகொண்டு இருக்கும் போது தலைமை சொன்னது ஆயுதம் வந்து தாக்குதல்கள் நடத்த இவை அனைத்தும் மறக்கப்பட்டுவிடும் " 

தாங்கள் செய்த அராஜகத்தை உணராமல் உங்களை நம்பி வந்தவர்களை கொலை செய்து புதைத்துவிட்டு, தாக்குதல் நடாத்த அவை மறந்துபோய்விடும் என்று சொல்ல எப்படிப்பட்ட குரூர மனம் வேண்டும் .

அந்த பிள்ளைகளின் பெற்றோர் பற்றி ஒரு கணம்  சிந்தித்தால் இப்படியான சிந்தனைகள் வராது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல நூறு மைல்களைக் கால்நடையாகவே நடந்து வந்து யுத்தத்தில் பங்கெடுத்திருந்தார்கள். முள்ளியவளை புதன்வயல் பகுதியில் அமைந்திருந்த அன்பரசி படையணி முகாமுக்கு அரசியல் வகுப்புகளை நடத்துவதற்காகப் பல தடவைகள் போயிருக்கிறேன். முள்ளியவளை ரங்கன் முகாமில் அடிக்கடி கலை நிகழ்வுகளும் இசைக்குழு நிகழ்வுகளும் நடாத்தப்படும். மீன்பாடும் தேன்நாட்டின் வாரிசுகளான கிழக்கு மாகாணப் போராளிகள் அற்புதமான கலையாற்றல் உள்ளவர்களாக இருந்தனர். அவர்களுக்கே உரிய பாணியில் லாவகமான நகைச்சுவை ததும்ப அவர்கள் தமிழ்ப்பேசும் அழகே அழகு. எனது மனங்கவர்ந்த பல தோழிகள் அம்முகாம்களில் இருந்தனர். வன்னிப் போர்க்களத்தில் கிழக்கு மாகாணப் போராளிகளின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாதிருந்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் பாரிய வெற்றிகளைப் பெற்றிருக்கவே முடியாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

(பக்கங்கள் 20 - 21)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம் மல்லாவி பிரதேசத்தில் எனக்கு ஏற்பட்டது. ஆட்சேர்ப்புப் போராளிகளின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட உயர்தரம் படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவி பயிற்சிக்கும் அனுப்பப்பட்டுவிட்டார். ஒருநாள் எமது முகாமுக்கு அந்தப் பெண்ணின் தந்தை வந்திருந்தார். அவர் ஏனைய பெற்றோர்களைப் போல் போராளிகளை ஏசவோ அல்லது தமது மகளைத் தந்துவிடும்படி எம்மிடம் அழுது மன்றாடவோ இல்லை. அவரது இரு கால்களும் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியின் உதவியுடனே வந்திருந்தார். இயக்கத்தின் சார்பில் நான்தான் அவரை எதிர்கொள்ள வேண்டிய நிலை. அந்தத் தகப்பன் சொன்னார் "தங்கச்சி, நான் பிச்சைக்காரன். நாளாந்தம் கிடைக்கிற வேலைகளைச் செய்து பிச்சைக் காசு மாதிரி சேர்த்துத் தான் என்ர மகளைப் படிப்பிச்சனான், மகள் போராடப் போனது எனக்குக் கவலையில்லை; போகட்டும், ஊரோட ஒத்ததுதான் எனக்கும். ஆனால் நாளைக்கு வெளிநாடுகளில இருந்து டொக்டரா எஞ்சினியரா படித்த புத்திசாலிகளாக ஆட்கள் வந்து இறங்கும்போது, நாட்டுக்காகப் போராடின என்ர மகளும் என்ர குடும்பமும் அவையளுக்கு முன்னால படிக்காத பிச்சைக்காரர்களாய்த்தானே நிற்கப் போறம். அத நினைச்சாத்தான் எனக்குக் கவலையாயிருக்கு" என்றார். அந்தத் தகப்பனுக்கு நான் எத்தனையோ ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னபோதும் எனது மனதில் அவரது கேள்வி விடை பெற முடியாத வினாவாகப் பதிந்துபோனது. அதன்பிறகு நான் அந்தத் தகப்பனையோ மகளையோ எங்கும் சந்திக்க முடியவில்லை ஆனாலும் கண்ணீருடன் கலந்து வெளிப்பட்ட அந்த வார்த்தைகளில் நிறைந்திருந்த உண்மை என் இதயத்தை நெருடிக்கொண்டேயிருந்தது.

(பக்கம் 26)

Link to comment
Share on other sites

“ஒருநாள் நானும் தளபதிகள் விதுஷாவும், துர்க்காவும் தலைவரை சந்திப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தோம். அது சமாதானம் தொடங்கிய ஆரம்ப கால கட்டம். அந்த சந்திப்பில் தலைவர் பல விடயங்கள் பற்றியும் எம்மோடு பேசிக்கொண்டிருந்தார். அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்;
“மட்டக்களப்பு, அம்பாறைப் போராளிகள் போராட்டத்தில எவ்வளவோ கஷ்டங்களைப் பட்டிருக்கிறாங்கள் அவங்கட குடும்பங்களுக்கும் அந்த மக்களுக்கும் நிறைய வேலைகள் செய்யவேணும். நிதித்துறை மூலமா ஒரளவு பண உதவியையும் செய்து கருணாவுக்கும் சொல்லியிருக்கிறன், அந்தச் சனத்திற்கு நிறைய உதவிகள் செய்யச் சொல்லி. அவன் செய்யிறான், இவங்கள் பொட்டு ஆக்கள் என்னட்ட வந்து அங்க அது பிழை இது பிழை எண்டு சொல்லிக் கொண்டு நிக்கிறாங்கள், தளபதிமாருக்குள்ள முதலில ஒற்றுமை இருக்கவேணும்” என்று குறிப்பிட்டார்.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்லாயிரக்கணக்கான உயிர்களின் குருதியில் நனைந்த ஏ9 வீதி 2002 திறக்கப்பட்டபோது புலிகள் இயக்கம் இராணுவ பலத்தின் உச்சத்தில் இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது. அப்பலத்தை அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியான பலமாக மாற்றியமைக்கும் தந்திரோபாயத்தில் புலிகளின் தலைமைக்கு ஏற்பட்ட படுதோல்வி, பின்னொரு நாளில் முள்ளிவாய்க்கால் வீதியை மக்கள் தாமாகவே தள்ளித் திறந்துகொண்டு வெளியேறிச் செல்லக் காரணமாய் அமைந்தது.

(பக்கம் 36)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினசரி பாடசாலைக்கும், மாலை வகுப்புகளுக்கும் சென்றுவருவது நெருப்பின் மீது நடப்பதுபோல இருந்தது. இந்திய இராணுவத்தினருக்கு உதவியாக இருந்த சில தமிழ் இளைஞர்கள் ஊரிலே பல இளைஞர்களைப் பலவந்தமாகப் பிடித்துச் சென்று பயிற்சிகள் கொடுப்பதையும் அறிய முடிந்தது. அதனால் எமது வகுப்புகளில் படித்த பல ஆண் மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்திவிட்டுக் காணாமல் போகத் தொடங்கியிருந்தார்கள். நெற்றியில் சிவப்புத் துணிகளைக் கட்டியிருந்த தமிழ் இளைஞர்களும் இந்தியப் படையினரும் வீதி நீளத்திற்கும் நிற்பார்கள். அவர்களுடைய பார்வைகளையும் கேலிகளையும் காணும்போது மனதிற்குள்ளே ஆத்திரமும் கோபமும் கொப்பளித்துக் கொண்டிருக்கும். ஆனாலும் அதைச் சகித்துக்கொள்வதைத் தவிர மாணவர்களாகிய எமக்கு வேறு வழியிருக்கவில்லை. காடுகளுக்குள்ளே மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீது அளவற்ற மதிப்பும் நம்பிக்கையும் உருவானது. அவர்களால் மட்டும்தான் இத்தகைய துன்பங்களுக்கெல்லாம் ஒரு விடிவைக் கொண்டுவர முடியும் எனக் கனவு காணத் தொடங்கினோம்.

(பக்கம் 43)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1991.07.29ஆம் திகதி நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு போராளியாக என்னை இணைத்துக்கொண்டேன். அன்றிருந்த சூழ்நிலையில் அதைத் தவிர எனக்கு வேறு எந்தத் தேர்வுகளும் இருந்ததாகத் தெரியவில்லை. எனது வாழ்க்கையில் சரியானதொரு தீர்மானத்தை நான் எடுத்துவிட்டதாகவே நம்பினேன். எமது மூத்த அரசியல் தலைவர்கள் மேடைகளில் செய்த போர்ப் பிரகடனங்களுக்காக இளைய தலைமுறையின் வாழ்வு, யுத்த வேள்வித் தீயில் ஆகுதியாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்காக இளைய தலைமுறையினர் அந்த நெருப்புக்குள் ஆவேசத்துடன் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.

(பக்கம் 46)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசன்,ஒரு நூல் புதுசாய் வெளியிட்டால் அதை வாங்கி வாசித்து விட்டு உங்கள் விமர்சனத்தை மட்டும் வையுங்கள்...இப்படி பக்கம்,பக்கமாய் எழுதி ஒட்டினால் மற்றவர்கள் வாங்கி வாசிக்கிறதில்லையா அல்லது இந்த நூலைத் தான் விற்பதில்லையா?...ஆவலினால் விரும்பிய ஒர்,இரு பக்கங்களை பிரதி எடுத்துப் போடுவது வேறு ஆனால் நீங்கள் முழு நூலையும் அல்லவா பிரதி எடுத்துப் போடுகிறீர்கள்.புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.நன்றி

Link to comment
Share on other sites

என்னுங்க  இன்னும்  துரோகி  பட்டம்  கொடுக்காமல் தேசியவாதிகள் அமைதி காப்பதன் காரணம் என்ன ......இதை  மற்றவர்கள்  எழுதினால் அவர்  ஆள்  இவர் ஆள்  என  பட்டம்  கொடுத்தார்கள் மட்டு அம்பாறை  போராளிகள்  பற்றி தமிழினி   அக்கா  அழகாக  சொல்லியுள்ளார் உண்மைகளை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

வாசன்,ஒரு நூல் புதுசாய் வெளியிட்டால் அதை வாங்கி வாசித்து விட்டு உங்கள் விமர்சனத்தை மட்டும் வையுங்கள்...இப்படி பக்கம்,பக்கமாய் எழுதி ஒட்டினால் மற்றவர்கள் வாங்கி வாசிக்கிறதில்லையா அல்லது இந்த நூலைத் தான் விற்பதில்லையா?...ஆவலினால் விரும்பிய ஒர்,இரு பக்கங்களை பிரதி எடுத்துப் போடுவது வேறு ஆனால் நீங்கள் முழு நூலையும் அல்லவா பிரதி எடுத்துப் போடுகிறீர்கள்.புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.நன்றி

ரதி, இங்கு இந்தப் புத்தகத்துக்கு விமர்சனம் எதுவும் இப்போது தேவையில்லை.  அத்துடன் முழுநூலினையும் பக்கம் பக்கமாக நான் எழுதியும் ஒட்டவில்லை. எமது சமுகத்துக்கும் முக்கியமாக யாழ் இணையத்துக்கும் தற்போது தேவை என கருதும் விடயங்களை மட்டுமே இணைக்கின்றேன். இந்த நூலுக்காக அதன் விற்பனை விலையைவிட பலமடங்கு அன்பளிப்பும் செய்திருக்கின்றேன். தமிழினியின் கணவர் திரு. ஜெயக்குமரன் இந்தநூல் வருமானத்தை தமிழினியின் விருப்பப்படி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யவே விரும்புகின்றார். யாழ் இணையத்தில் ஓரு சிலரே இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பர். மற்றவர்கள் எல்லோரும் புத்தகத்தில் என்ன இருக்கிறது என அறியாமலேயே தமிழினியை வைத்துக் கும்மி விட்டுப்போவார்கள்.  அங்கொண்டும் இங்கொன்றுமாகவே இணைக்கின்றேன். இது இன்னும் அநேகமானோரை புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தூண்டும்.  முழுமையான புத்தகத்தை நான் ஒருபோதும் இணைக்கப்போவதில்லை. உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் இந்த திரிக்குள் வராமல் இருங்கள். மற்றும்படி நிர்வாகம் தேவையற்றது எனக் கருதினால் பூட்டிவிடட்டும். தேவைப்படும் இடத்து யாழ் களத்தினூடகவே திரு ஜெயக்குமரன் அவர்களுக்கு நிதி வழங்கவும் தயாராகவே இருக்கின்றேன். இந்தப் புத்தகத்தில் தமிழினி எழுதியிருப்பதனை எல்லா தமிழ் பேசும் மக்களும் அறிந்துகொள்ளவேண்டும். புரிந்துகொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பணக்காரத்தனத்தை உங்களோடு வைத்திருங்கள்.நீங்கள் யார் என்று எனக்குத் தெரியும் அக்கா ஆஆஆஆஆஆஅ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2016 at 2:56 PM, அஞ்சரன் said:

என்னுங்க  இன்னும்  துரோகி  பட்டம்  கொடுக்காமல் தேசியவாதிகள் அமைதி காப்பதன் காரணம் என்ன ......இதை  மற்றவர்கள்  எழுதினால் அவர்  ஆள்  இவர் ஆள்  என  பட்டம்  கொடுத்தார்கள் மட்டு அம்பாறை  போராளிகள்  பற்றி தமிழினி   அக்கா  அழகாக  சொல்லியுள்ளார் உண்மைகளை .

தனது சொந்த இனத்தை காட்டி கொடுப்பவன் 
 தனது  சொந்த வாழ்விற்காக சொந்த நாட்டை காட்டி கொடுப்பவன் =துரோகி 

என்று தமிழ் பிறந்த காலத்திலேயே இருந்து இந்த சொல் நடைமுறையில் இருக்கிறது.

இனி யானையும் மாற்றுகருத்தாக பூனை என்றுதான் கூப்பிட வேண்டுமா ?
மேல் வீட்டில் பிரச்சனை இல்லாதவர்கள் ஏன் அந்த வில்லங்கத்திட்கு போக வேண்டும்.

யார் எதை செய்கிறார்களோ 
அவர்கள் அதுவாகி போகிறார்கள்.

காட்டு கத்து கத்தி 
யானையை பூனையாக்காலமா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 க்கு முன்

2009 க்குப்பின்.....

புலிகளுக்கும்  இதுதான் வரையறை....

இனி காலமும் செயல்களுமே  பதில் சொல்லும்.....

Link to comment
Share on other sites

தமிழினியின் நூலை அனைவரும் வாங்கி வாசிப்பதே சரியாக இருக்கும். அவரது கருத்துகளை எல்லாரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் அவர் சுயசரிதையின் பக்கங்களை உறவுகள் யாழில் பிரதியிட முனைவதன் தாற்பரியங்களை புரியமுடினும், அவர் புத்தகத்தினை வாங்கி வாசித்து கிரகித்துக் கொள்வதே தார்மீக அடிப்படையில் சரியாக இருக்கும் என்பதால் அவ்வாறு பிரதியிடலை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிழலி. தனிப்பட்ட காரணங்களுக்காக இல்லாமல் தமிழினி தன்னுடைய சுயசரிதத்தில் என்ன சொல்லியிருக்கின்றார் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதால் இணைத்தேன். திரியைப் பூட்டிவிடுங்கள்

Link to comment
Share on other sites

On 3/11/2016 at 3:07 PM, arjun said:

அந்த வலி வந்திராவிட்டால் விடுதலைக்காக என்ற நியாயத்திற்குள் தமிழினியும் உண்மையை நிட்சயம் புதைத்திருப்பார் .

இந்த வசனம் பழைய நினைவு ஒன்றை கிளறிவிட்டது ,

"உட்கொலைகள் பற்றி விவாதித்துகொண்டு இருக்கும் போது தலைமை சொன்னது ஆயுதம் வந்து தாக்குதல்கள் நடத்த இவை அனைத்தும் மறக்கப்பட்டுவிடும் " 

தாங்கள் செய்த அராஜகத்தை உணராமல் உங்களை நம்பி வந்தவர்களை கொலை செய்து புதைத்துவிட்டு, தாக்குதல் நடாத்த அவை மறந்துபோய்விடும் என்று சொல்ல எப்படிப்பட்ட குரூர மனம் வேண்டும் .

அந்த பிள்ளைகளின் பெற்றோர் பற்றி ஒரு கணம்  சிந்தித்தால் இப்படியான சிந்தனைகள் வராது .

புளட்டில் இருந்தும் வெட்டி தாட்ட ஆட்கள் (நீங்கள் இல்லா விட்டாலும்  புளட்டில் உள்ளவர்கள்) எப்படி இந்த கருத்தை கூறுவீர்கள்?
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.