Jump to content

கல்லறை வரை சுமந்து செல்லும் ரகசியங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Indian+Village+Women+Pouring+water+from+

அன்றைய பொழுது வழமை போலவே விடிந்தது!  பிள்ளைகள் இன்னும் நித்திரையால் எழும்பவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட வாசுகி மனுசன் இன்னும் கிடக்கிறாரா என்று விறாந்தையை எட்டிப்பார்த்தாள்! அவர் குப்புறப்படுத்தபடி ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்! அவரது சாரம் இடுப்பில் பத்திரமாக இருந்ததைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டாள்!

பிள்ளைகள் நித்திரையால் எழும்ப முன்னம் அவள் செய்ய வேண்டிய தினசரிக் கடமைகளில் இதுவும் ஒன்றாகிப் போனது!

மனுஷன் எழும்பிறதுக்கு முந்திக் கோயிலடிக்குப் போய்த் தண்ணி அள்ளிக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்த படியே, வாசலில் நின்ற வேப்ப மரத்திலிருந்து ஒரு குச்சியை லாவகமாக ஒடித்து..வாய்க்குள் வைத்துக் கடித்தபடியே, குடத்தை எடுத்து இடுப்பில் அணைத்த படி கோயிலடியை நோக்கி நடந்தாள்! அவளது உலகமெல்லாம் அந்தக் கோயிலடியும். அதையொட்டிய கடற்கரையும் அந்தக் கோயிலடிக் கிணறும் தான்! அங்கு வரும் பெண்கள் தான் அவள் வாசிக்கும் செய்தித் தாள்கள்! அன்றைக்கு முதல் நாள், ஊரில் நடந்த அவ்வளவும் அவள் தண்ணீர் அள்ளிக்கொண்டு வீட்டுக்கு வரும் போது அவளுக்குத் தெரிந்திருக்கும்! அத்துடன் அன்றைக்கு வாங்க வேண்டிய மீன், மரக்கறி, அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் எங்கெங்கு மலிவாய்க் கிடைக்கும் எனற விபரங்களும் அவளுக்குத் தெரிந்திருக்கும்! அன்றைக்குக் கடல் வத்தா அல்லது நுவைப்பா என்பதையும் அவதானித்து வைத்திருப்பாள்! இவ்வளவையும் தவிர வேறு எதுவுமே அவளுக்கு இப்போது தேவைப்படுவதில்லை!

தண்ணீரைச் சுமந்து கொண்டு வரும்போது.. குடத்தினுள் தண்ணீர் ஏற்படுத்தும் சத்தம் அவளுக்கு மிகவும் பிடிக்கும்!

;கிளக்'...’கிளக்’ என்ற அந்த ஓசை ஒரு பிரபஞ்சத்தின் அசைவைப் போல..அவளுள் புதைந்து போக.. ஒரு முனிவனின் ஒரு நிலைப்பட்ட மனதைப் போல..அவள் மனம் அந்த ஓசையுடன் ஒன்றிப்போயிருக்கும்!  வீட்டை நோக்கிக் கால்கள் தாங்களாகவே நடந்து கொண்டிருந்தன! அவள் சிறுமியாக இருந்த காலத்தில், தண்ணீர் வண்டில் மாடுகள்..தண்ணீர் ஏற்றிய வண்டிலை இழுத்துக் கொண்டு, நடத்துனர் இல்லாமலே அவற்றின் வீட்டை நோக்கி நடந்து போவதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறாள்! இப்போது தானும் அந்த வண்டில் மாடுகளைப் போன்று ஆகிவிட்டதை எண்ணி அவளுக்கே சிரிப்பு வந்தது! அவள் வரும் பாதையில் இருக்கின்ற காவோலை வேலி வரும்போது மட்டும் அவளது தொண்டைக் குழிக்குள் எதுவோ அடைப்பது போல இருக்கும்! அன்றைக்கும் அவள் அவ்வாறே உணர்ந்தாள்! போதாக் குறைக்கு வேலிக்குள் நத்தையைத் தேடிக்கொண்டிருந்த செண்பகம் ஒன்று அவள் வருவதைக் கண்டு...க்கும்,,,க்கும் என்று எதையோ சொல்ல முயற்சிப்பது போல அவளுக்குத் தெரிந்தது!

அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தவள் குசினி அடுப்பில் கேத்திலை வைத்துத் தேயிலையைப் போட்டுக் கொஞ்ச நேரம் ஊற விடவும் குழந்தைகள் எழும்பி விட்டன! அவர்களுக்குத் தேனீரைக் கொடுத்தவள்..இன்னும் கணவன் எழும்பாததைக் கண்டு தானும் தேனீரைப் பருகத் தொடங்கினாள்!

தேனீரை வாயில் வைக்கக் கூட இல்லை..அப்போது..’அடியேய்..வள்ளுவனின்ர மனிசி வாசுகியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறியா? உனக்கும் பேர் வாசுகி தானே..என்று தொடங்கவும் இண்டைக்கு விடிஞ்ச மாதிரித் தான் எனத் தனக்குள் நினைத்துக் கொண்டவள், ஒரு கோப்பையில் தேனீரை ஊத்திக்கொண்டு போய்க் கணவனுக்கு அருகில் வைத்தாள்! மிச்சத்தை எல்லாம் அவள் காதில் வாங்கிக் கொள்ளதிருக்கத் தன்னைப் பழக்கப் படுத்தி..நீண்ட நாட்களாகி விட்டன!

கலியாணமான புதுசில் எல்லோரையும் போல அவளிடமும் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன என்பது என்னவோ உண்மை தான்! கொழும்பில ஒரு கடையில மனுஷன் வேலை செய்ததும் அவளுக்குத் தெரியும்! எல்லோரையும் போலத் தனக்கும் கொழும்பு வாழ்க்கை வரப்போகுது எண்டு அவள் ஆசைப்பட்ட காலமும் இருந்தது! கலியாணம் கட்டிக் கொஞ்ச நாளைக்கு அவரிடமிருந்து ஒவ்வொரு மாசமும் மணி ஓடர் ஒழுங்காக வந்தது தான்! அந்தக் காசைச் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு மகாராணியைப் போல அவள் உணர்ந்திருக்கிறாள்! அவருக்குக் குடிப்பழக்கம் இருந்தது என்று அவளுக்கு ஒருவரும் சொல்லவுமில்லை! அவளும் யாரையும் கேட்டதும் இல்லை! ஊருக்குள்ள எல்லாமே ஒரு ‘புரிந்துணர்வு' அடிப்படியில தான் நடப்பது வழக்கம்! குடி மட்டும் தான் என்றாலும் அவள் பொறுத்துக் கொண்டு தான் இருப்பாள்! ஆனால்.. அவனது நடிப்புத் தான் அவளுக்கு அதிகம் ஆத்திரம் ஊட்டியது!

ஒரு நாள் இப்படித் தான்,,ஒரு இரவு அவள் கடலுக்குப் பந்தம் கொண்டு போயிருந்தாள்! அனேகமாக..இரவில் பெண்கள் கடலுக்குப் போவது வழக்கமில்லை எனினும், சில பெண்கள் தலைப்பாகை கட்டிய படி கடலுக்குப் போவதுண்டு! அண்டைக்கு அமாவாசை இரவாக இருந்த படியால் நிறையத் திரளி மீன்களும், முரல் மீன்களும் அவளிடம் பிடிபட்டன!

மனுஷன் கொழும்பாலை அண்டைக்குக் காலமை தான் வந்திருக்குது எண்டு நினைச்சு மீன் குழம்பும், பொரிச்ச மீனுமாக மனுசனுக்குச் சாப்பாட்டைக் கொடுத்தாள்! அவள் குசினிக்குள் மீண்டும் சென்ற போது..மனுஷன் என்னவோ புறு ப்றுத்தது போல கிடந்தது! என்னவென்று அவளுக்கு வடிவாகக் கேட்கவில்லை! கொழும்பால வந்து நேர தாய் வீட்டுக்குப் போய், அந்கிருந்து தான் வீட்டுக்கு வந்திருந்தார்! தாய் தான் ஏதாவது வத்தி கொழுத்தி வைச்சிருப்பா..என்று தனக்குள் நினைத்தவள், கலீரென்ற சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தாள்! அவளது ஒரே சொத்தான மாக் கோப்பை முத்தத்தில் சிதறிக்கிடக்க, கொட்டிக்கிடந்த பருக்கைகளைப் பொறுக்கக் காகங்கள் போட்டி போட்ட படி இருந்தன! மனுஷன் படலைக்குள்ளால வீதியை நோக்கி ஓடிக்கொண்டிருந்ததை அவள் கண்டாள்! மனுஷன் ஊருக்குள்ள போய்த் தன்னைப் பரிசு கெடுக்கப் போகுது எண்டு தனக்குள் நினைத்துக்கொண்டவள்...முந்தானையால் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்!

கொஞ்ச நேரத்தால யாரோ ஓடிவந்து ‘எடியே வாசுகி.. உன்ர மனுஷன் மருந்து குடிச்சிட்டானாம்.. ஓடி வாடி என்று சொல்லவும் பதறிப் போய் அவளது கைகள், கால்கள் எல்லாம் தாங்களாக நடுங்கத் தொடங்க.. அவள் சனங்கள் ஓடிய திசையில் ஓடத் தொடங்கினாள்! பிள்ளைகள் அழுவதைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை! யாரோ குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வந்தது மட்டும் அவளுக்கு நினைவில் இருந்தது!

பனை வடலிகளுக்கிடையில் அவன் வளர்த்தப் பட்டிருந்தான்! வாயிலிருந்து நுரை மாதிரி எதுவோ வந்து கொண்டிருந்தது! அவளைக் கிட்ட விடாதையுங்கோ என்ற படி தாய்க்காரி..மார்பிலும் தலையிலும் மாறி..மாறி அடித்த படி அழுது கொண்டிருந்தாள்! அவளுக்கு..அவள் செய்த குற்றம் தான் என்ன என்று தெரியவேயில்லை! ஐயோ..அவரை ஆஸ்பத்திருக்காவது கொண்டு போங்கோ..நான் கிட்ட வரயில்லை என்று சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தாள்! அதெல்லாம் வேண்டாம் என்று தாய்க்காரி சொல்ல.. அவளுக்குப் பளீரென மூளையில் எங்கோ ஒரு பொறி தட்டிய மாதிரி இருந்தது! அவன் அருகில் ஒரு அலுமினியப் பொலிடோல் போத்தில் கிடந்தது! மருந்தை அந்தக் காவோலை வேலிக்குள்ள முந்தியே மறைச்சு வைச்சிருந்தவனாம் எண்டு,, ஊர்ப் பெருசு ஒண்டு ,,இன்னொரு ஊர்ப் பெருசுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்ததையும் அவள் கவனித்திருந்தாள்!

கொஞ்ச நேரத்தில ‘நிரம்பவும்' சத்தியெடுத்த பிறகு...மனுஷன் கண் திறந்ததைக் கண்ட பிறகு தான்.. அவளுக்குக் கொஞ்சம் மூச்சு வந்தது! பின்னர் கொஞ்ச நாளால மனுஷன் கொழும்புக்குப் போக அவளது இயல்பு வாழ்க்கை அவளுக்குத் திரும்பக் கிடைத்த மாதிரி இருந்தது!

இதே போல மனுஷன் கோப்பை எறிவதும்,,,மருந்து குடிக்கிறதும் ஒவ்வொரு முறை கொழும்பால வாற போதும் நடக்கத் தொடங்க..அவளுக்குள் இருந்த யாரோ விழித்துக் கொண்ட மாதிரி இருந்தது! ஊரவர்கள் ஒரு புழுவைப் பார்ப்பது போல அவளைப் பார்ப்பதாக அவள் உணர்ந்தாள்!

இந்த வருஷம் சித்திரைத் திருவிழாவுக்கு மனுஷன் ஊருக்கு வருவாராம் என்று தாய்க் காரி சொல்லவும்.. அவர் எனக்குக் கணவராக இருக்கிறாரா...அல்லது தாய்க்குப் பிள்ளையாக இருக்கிறாரா அல்லது அவரது குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கிறாரா என்று அவளால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை!

வழக்கம் போலக் கோவில் திருவிழா முடிந்த கையோடு கோப்பை பறந்தது! இப்போதெல்லாம் மாக் கோப்பை உபயோகிப்பதை அவள் முற்றாகவே நிறுத்தியிருந்தாள்! வெறும் அலுமினியக் கோப்பை மட்டும் முத்தத்தில் அநாதரவாகக் கிடந்தது!

மனுஷன் மருந்து குடிசிட்டானாம்.. என்று பக்கத்து வீட்டு அக்கா சொல்ல அவளும் ஓடிப்போனாள்! ஆனால் ,,அவளது ஓட்டத்தில் இந்த முறை வேகம் இருக்கவில்லை! ஒரு ‘உறுதி' இருந்தது! ஏதோ ஒன்றுக்கு முடிவு கட்டி விட்டது போல ஒரு ‘திருப்தி' அவள் மனசு நிறைய நிறைந்திருந்தது!

அதே வடலிகளுக்கிடையில் ,,அவளது கணவன் வளர்த்தப் பட்டிருந்தான்! அதே வெள்ளை நிற ,முரை வாயிலிருந்து வழிந்து கொண்டிருந்தது! அதே பொலிடோல் போத்தில் அவனருகில் கிடந்தது! அவன் ‘புழுவாக; நெளிந்து கொண்டிருந்தான்! ஐயோ… என்ர பிள்ளையை ஆஸ்பத்திரிக்கு உடனே கொண்டு போங்கோ! என்று தாய்க்காரி அலறிக்கொண்டிருந்தாள்! போத்திலுக்க ஆரோ பொலிடோலை ஊத்தி வைச்சிட்டினம் போல கிடக்குது! பிள்ளையின்ர வாயெல்லாம் மருந்து மணக்குது,,,ஐயோ… ஐயோ ..என்ர ராசா,,என்ன விட்டிட்டுப் போயிராதை அப்பு..என்று தாய்க்காரி உண்மையாகவே அழுது கொண்டிருந்தாள்! முதலில் அசட்டை செய்த பெரிசுகளும் ..ஒரு காரைப் பிடிச்சு.. அவனை ஆஸ்பத்திருக்குக் கொண்டு போக..அவனும் ஒரு மாதிரி உயிர் தப்பியிருந்தான்!

அதன் பிறகு அவன்.. தாய் வீட்டுக்குப் போவதேயில்லை! சில வேளைகளில் குடித்தாலும்..நள்ளிரவு என்றாலும் வீட்டு விறாந்தைக்கே வந்து விடுகிறான்! பொலிடோல் குடிக்கிற ‘விளையாட்டு' அறவே நின்று போயிருந்தது!

அடியே.. வாசுகி...ஆரு அவனுக்கு ‘மருந்து' வைச்சிருப்பினம் எண்டு நீ நினைக்கிறாய்? என்று பக்கத்து வீட்டு அக்கா அவளிடம் விடுப்பு விசாரித்தாள்! அக்கா ..ஆர் வைச்சதேண்டு தெரிஞ்சால் ..வைச்சவரின்ர குடலை இந்த வாசுகி உருவி எடுத்திருவாள் எண்டு உனக்குத் தெரியாதா? என்று கணவனுக்குக் கேட்கும்படியாகவே உரத்துப் பதில் சொன்னாள்...வாசுகி!

(யாவும் கற்பனை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசுகி வள்ளுவரின் மனைவி மட்டுமல்ல , பாற்கடலைக் கடையும்போது  விசத்தைக் கக்கியதும் வாசுகிதான்....!

நல்ல கதை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசுகி கல்லறை வரை ரகசியத்தை சுமக்க போர என்று சொல்லுறீயள்.....பகிர்வுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை, கதையை விட அந்தப் படம் சுப்பராய் இருக்குது...உங்களுக்கு தெரிஞ்ச ஆட்களுக்கு யாரோ நடந்திருக்குது போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியில் அவசரப்பட்டு முடிச்சுட்டீங்களோ என்று நினைக்கத் தோணுது புங்கையண்ணா...வாசுகிக்கு நாளடைவில் எல்லாம் பழக்கபட்டு விட்டது போலும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை அண்ணா ஒரு கதை எழுதுங்கோ என்று நெடுக்ஸ் கேட்டமாதிரி ஒரு கனவு வந்ததுtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/18/2016 at 7:13 AM, suvy said:

வாசுகி வள்ளுவரின் மனைவி மட்டுமல்ல , பாற்கடலைக் கடையும்போது  விசத்தைக் கக்கியதும் வாசுகிதான்....!

நல்ல கதை...!

வாசுகியைப் பற்றி இன்னுமொரு கதையும் எழுத நினைச்சனான்!

அது சிவனுக்கே.. நிலாக் காட்டின மாதிரிக் கதை!

உங்கட கருத்துக்குப் பிறகு எழ்துவதை  மறு பரிசீலனை செய்கிறேன்!

கருத்துக்கு நன்றி..சுவியர்!

 

On 3/19/2016 at 3:03 PM, putthan said:

வாசுகி கல்லறை வரை ரகசியத்தை சுமக்க போர என்று சொல்லுறீயள்.....பகிர்வுக்கு நன்றிகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...புத்தன்!

இரகசியங்களை சுமக்கப் போறா என்று வந்திருக்க வேண்டும்!

Link to comment
Share on other sites

புங்கை அண்ணா, 

இந்த கிணத்தடியை பார்க்கும்போது, கப்பூது கிராமத்திலே இருந்து வல்லைக்குள்ளாலே வந்து கிராய் - இமையாணன் வீதியிலே மிதக்கும்போது, கிராய் பிள்ளையார் கோவிலை (சிவசிதம்பரத்தின்டை கோவில் என்றும் சொல்லுவார்கள்) ஒட்டி இருக்கிற கிணறு மாதிரி தெரிகிறது. 

உங்கள் கதைகள் மீண்டும் எங்களை "அந்த" காலத்துக்கே கொண்டு செல்வதில் தவறுவதில்லை. நன்றி அண்ணா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதையும் எழுதுங்கோ புங்கை....! உங்கள் எழுத்துநடை ரசிக்கும் படியும், வசீகரமாயும் இருக்கு....! இன்று பங்குனி 2ம் திங்கள் ....!

"கள் போதி மனதை மயக்கும் கடவுள் போதை மனதைத் தெளிவாக்கும்...! என்று கலண்டரில் போட்டிருக்கு...!  ஏதோ ஒரு போதையைப் போட்டுத் தாக்குங்கோ.... !!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2016 at 7:40 AM, ரதி said:

புங்கை, கதையை விட அந்தப் படம் சுப்பராய் இருக்குது...உங்களுக்கு தெரிஞ்ச ஆட்களுக்கு யாரோ நடந்திருக்குது போல

நன்றி..ரதி!

உங்கள் கருத்துக்கள் எப்போதும் ஊக்கமளிப்பவையாக இருக்கும்! நன்றி!

நீண்ட காலங்களின் முன்பு.. மிளகாய்த் தோட்டங்களிலும், போயிலைத் தோட்டங்களிலும் 'பொலிடோல்' என்ற கிருமிநாசினி உபயோகிப்பார்கள்! வெறும் போத்தல்களை வேலிகளில் தான் சொருகி வைப்பார்கள்! அதை வைத்துத்தான் ஒருவர் பெரிய விளையாட்டெல்லாம் காட்டினார்! அந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துத் தான் எழுதினேன்!

பின்வரும் படத்தில் உள்ள மாதிரி அலுமினியப் போத்தில்களாக அவை இருக்கும்!

aluminium-bottles-for-pesticides-900084.

On 3/19/2016 at 8:55 AM, யாயினி said:

இறுதியில் அவசரப்பட்டு முடிச்சுட்டீங்களோ என்று நினைக்கத் தோணுது புங்கையண்ணா...வாசுகிக்கு நாளடைவில் எல்லாம் பழக்கபட்டு விட்டது போலும்......

கொஞ்சம் அவரப்பட்டுத் தான் முடித்தேன், யாயினி!

ஏனெனில் கதைகளை அதிகம் நீட்டினால் யாழ் கள வாசகர்கள்.. வாசிக்கவே மாட்டார்கள்!

அதனால் சில வேளைகளில் ..சுருக்கமாக முடிக்க வேண்டியிருக்கின்றது!

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி...யாயினி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பொலிடோலை குடித்து எத்தனை பேர் இறந்துவிட்டார்கள் ஊரில். 

நல்ல கதை, தொடர்ந்து எழுதுங்கள். 

5 hours ago, புங்கையூரன் said:

 

கொஞ்சம் அவரப்பட்டுத் தான் முடித்தேன், யாயினி!

ஏனெனில் கதைகளை அதிகம் நீட்டினால் யாழ் கள வாசகர்கள்.. வாசிக்கவே மாட்டார்கள்!

அதனால் சில வேளைகளில் ..சுருக்கமாக முடிக்க வேண்டியிருக்கின்றது!

 

யார் சொன்னார்கள், வாசிக்க பலர் உள்ளார்கள் மெகா தொடர் எழுதினாலும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2016 at 6:21 PM, கிருபன் said:

புங்கை அண்ணா ஒரு கதை எழுதுங்கோ என்று நெடுக்ஸ் கேட்டமாதிரி ஒரு கனவு வந்ததுtw_blush:

நன்றி...கிருபன்!

நல்ல வேளை நெடுக்கர் இதுவரை இந்தப் பக்கம் வராததால் தப்பியுள்ளேன் என்று நினைக்கிறேன்!

On 3/21/2016 at 7:25 PM, பகலவன் said:

புங்கை அண்ணா, 

இந்த கிணத்தடியை பார்க்கும்போது, கப்பூது கிராமத்திலே இருந்து வல்லைக்குள்ளாலே வந்து கிராய் - இமையாணன் வீதியிலே மிதக்கும்போது, கிராய் பிள்ளையார் கோவிலை (சிவசிதம்பரத்தின்டை கோவில் என்றும் சொல்லுவார்கள்) ஒட்டி இருக்கிற கிணறு மாதிரி தெரிகிறது. 

உங்கள் கதைகள் மீண்டும் எங்களை "அந்த" காலத்துக்கே கொண்டு செல்வதில் தவறுவதில்லை. நன்றி அண்ணா. 

பகலவன், ஒரு வாசகனின் கருத்துக்களே... (அவை எந்த வடிவில் வந்தாலும்) ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களுக்குக் கிடைக்கும் அதி உச்சமான ஊக்குவிப்பாகும்!

உங்கள் கருத்துகள் மேலும் எழுதவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன!

உங்கள் அனுபவப் பகிர்வுகளை...அவற்றுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் நகைச்சுவைத் தன்மைக்காகவே தேடித் தேடி வாசிப்பேன்!

நீங்கள் கூறிய கிராய் கிராமத்துக்குப் போனது நினைவிருக்கிறது!

உங்கள் கருத்து ஒரு கேள்வியையும் தோற்றுவித்து விட்டது!

'கிராய்' என்ற வார்த்தையில் தோற்றம் எப்போது ஏற்பட்டது?

புங்குடு தீவிலும் பெரிய கிராய் , சின்னக்கிராய் என்று இரு பிரிவுகள் இருக்கின்றன!

நான் கிராய் என்றால் 'கழி' (மழைக்காலங்களில் தண்ணீர் தங்கி நிற்கும் பள்ளங்கள்) என்று இதுவரை நினைத்திருந்தேன்!

உங்கள் கருத்தை வாசித்த பின்னர் கிராய் என்பது 'ஊர்' என்று பொருள் தருமோ தெரியாது!

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, அல்லது யாரவது மொழி வல்லுனர்கள் விளக்கம் தருவீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.