Jump to content

வெளிநாட்டுச் சிங்களவரிடம் நிதியினைத் திரட்டி போரை முன்னெடுக்க மகிந்த திட்டம்.


Recommended Posts

வெளிநாட்டுச் சிங்களவரிடம் நிதியினைத் திரட்டி போரை முன்னெடுக்க மகிந்த திட்டம்.

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களிடம் இருந்து பெருந்தொகை நிதியினைக் கோரியுள்ளார். இது தொடர்பான பரப்புரைகள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் ஐரோப்பாவில் இயங்கும் சிங்கள சேவைத் தொலைக்காட்சியில் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

சிங்கள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் இந்த அவசர நிதியினை கொடுத்துதவுமாறு வலியுறுத்தப்படுகின்றது.

நிதியினை வழங்க வரும் சிங்கள் மக்கள் டொச் வங்கி மூலம் குறைந்த அனுப்பு கூலியைக் கொடுத்து நிதியினை வழங்க முடியும் என அப்பரப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் இத்திட்டத்தினை ஐரோப்பாவில் இயங்கும் சிங்களத் தொலைக்காட்சி மூலம் சிங்கள மக்களுக்கு நேரடி ஒலிபரப்பு மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் செவ்விகள், சிங்கள மக்களின் செவ்விகள், தொலைக்காட்சி ஊடான தொலைபேசி உரையாடல்கள் மூலம் இப்பரப்புரைகள் விடுக்கப்படுகின்றன.

சில சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலிகளை அழித்தொழிப்பதற்கு இராணுவத்தைப் பலப்படுத்துமாறும் வெளிப்படையாகவே கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாகச் சொல்லப்போனால் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கும், விடுதலைப் புலிகள் மீதான போரை முன்னெடுக்கவுமே சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால் நிதிசேகரிக்கப்புத் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழின அழிப்புக்காகவே இரு மாதகால இடைவெளியில் மகிந்த அரசினால் நிதி சேகரிக்கப்படுகின்றது என்பதைப் புரிந்துகொண்டு புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் மேற்கொள்ளவேண்டிய பரப்புரைகளைச் செய்யுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

pathivu.

Link to comment
Share on other sites

பிரித்தானிய அரசாங்கத்தை புலிகளின் மீதான தடையை விலக்கக் கோரி மனு............. :lol::lol:

Link to comment
Share on other sites

மகிந்த அண்ணாவும் கடைசி முடிவு எடுப்பது என்று கச்சை கட்டிக்கொண்டு உலகம் எல்லாம் பிச்சை கேட்கிறார். பார்ப்போம் தமிழரா கொக்காவா என்று!!!.

Link to comment
Share on other sites

போரை முன்னெடுக்க மகிந்த புதிய திட்டம்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களிடம் இருந்து பெருந்தொகை நிதியினைத் திரட்டி தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தை முன்னெடுக்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளார். இது தொடர்பான பரப்புரைகள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் ஐரோப்பாவில் இயங்கும் சிங்கள சேவைத் தொலைக்காட்சி ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

சிங்கள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் இந்த அவசர நிதியினை கொடுத்துதவுமாறு வலியுறுத்தப்படுகின்றது.

நிதியினை வழங்க வரும் சிங்கள் மக்கள் டொச் வங்கி மூலம் குறைந்த அனுப்பு கூலியைக் கொடுத்து நிதியினை வழங்க முடியும் என அப்பரப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் இத்திட்டத்தினை ஐரோப்பாவில் இயங்கும் சிங்களத் தொலைக்காட்சி மூலம் சிங்கள மக்களுக்கு நேரடி ஒலிபரப்பு மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் செவ்விகள், சிங்கள மக்களின் செவ்விகள், தொலைக்காட்சி ஊடான தொலைபேசி உரையாடல்கள் மூலம் இப்பரப்புரைகள் விடுக்கப்படுகின்றன.

சில சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலிகளை அழித்தொழிப்பதற்கு இராணுவத்தைப் பலப்படுத்துமாறும் வெளிப்படையாகவே கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாகச் சொல்லப்போனால் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கும், விடுதலைப் புலிகள் மீதான போரை முன்னெடுக்கவுமே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷவால் நிதிசேகரிக்கப்புத் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழின அழிப்புக்காகவே இரு மாதகால இடைவெளியில் மகிந்த அரசினால் நிதி சேகரிக்கப்படுகின்றது என்பதைப் புரிந்துகொண்டு புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் மேற்கொள்ளவேண்டிய பரப்புரைகளைச் செய்யுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

www.sankathi.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.