Jump to content

தூக்கில் தொங்கிய சீட்டு – பாகம் 3


Recommended Posts

மூண்டாவது சீட்டுக்கு கூடியாச்சு. கழிவு இன்னும் பெரிசா தான் இருக்கு, கட்டாய கழிவு 13‘600. இந்த முறை 22‘500 மொத்த கழிவு. ஆறுமுகம் வாங்கீற்றார். கழிவு எப்புடியும் பெரிசா இருந்தாலும் இவருக்கு தேவையா இருக்கு. கழுத்தில கத்திய வச்சமாதிரி நிலமை. 130‘000ல நிண்ட கடன் சீட்ட கழிச்சு இப்ப 77‘000 கிட்ட நிக்குது. சீட்டு எடுத்ததால அந்த மாசத்தில கட்டுப்பணம் இல்ல. சொந்தக்காரர் யாரோ 15‘000 ஆயிரம் வட்டிக்கு தாறினம் எண்டதால இன்னும் 52‘000 எங்க போறது எண்ட யோசினை. வேற சீட்டுகள் நடக்குறதால அங்க தெரிஞ்ச ஆளுக்கு சீட்டு விழுந்திருக்கு. 65‘000 சீட்டுக்கு 11‘000 கழிவில 54‘000 வந்து இருக்கு. அத தர சொல்லி கெஞ்சி கூத்தாடி வாங்கீற்றார். யாரோ பாவம் வாங்குற சம்பளத்துக்கு ஏத்த சீட்டு போட்டிருக்கிறார். அந்த சீட்டு முடிய என்னும் ஜந்து மாசம் தான் இருக்கு. ஆறுமுகமோ தான் ஜந்து மாசத்தில திருப்பி தாறன் எண்டு சொல்லீற்றார். இல்லாத பொல்லாததுக்கு தன்ர புது வீட்டை பெற்றி பெரிசா சொல்லி திரியுறார். தன்ர பழைய வீட்ட வாங்க நல்ல காசுக்கு கேக்கிறாங்கள் எண்டுற நம்பிக்கையான வார்த்தைகள சொல்லி சமாளிக்கிறார். வாறவன் பார்க்கிறவன் எல்லாம் வீடு சின்னன், அதுக்கு ஏத்த விலையும் இல்ல எண்டு புறுபுறுப்பு தான். ஜந்து மாசத்தில பிள்ளைகளுக்கு பாடசாலை விடுமுறை வேற, எங்க போவம் எண்டு மனிசி கேட்டபடி, அதுக்கு ஒரு வழி பண்ண வேணும்.

மாசங்கள் ஓட எட்டாவது கூறலுக்கு வந்தாச்சு. 6வது சீட்ட சந்திரன் எண்டுற யாரோ எடுத்திற்றினம். 7வது சீட்ட 18‘000 கழிவுக்கு பாண்டி எடுத்திட்டேர். சும்மா எட்டிப்பார்க்கிற பாண்டிய இண்டைக்கு காணேல்ல. போன் பண்ணி கட்டுப்பணத்த மகளிட்ட சொல்லியாச்சு. பத்தாம் திகதி ஆகி கட்டுக்காசு இன்னும் வரேல்ல. போன் பண்ணினா தூக்கேல, கைபோனுக்கு அடிச்சும் தூக்கேல்ல. வேற சீட்டுக்காறர் அண்ணாச்சிட்ட கேட்டிருக்கிறினம் பாண்டின்ர கட்டுக்காசு வந்திற்றா எண்டு, ஏனெண்டா தங்களுக்கும் வரேல்லையாம். காட்டு தீ மாதிரி இந்த விசயம் பரவீற்று. பாண்டி சீட்ட சுத்தீற்றான், தொப்பி போட்டிற்றான் எண்டு கதை ஊர் முழுக்க.   

சின்னுக்கு விழுந்த சீட்ட வாங்க அவன் வந்திற்றான். இப்ப காசு குறையிது. அண்ணாச்சி தன்னட்ட இருந்தத போட்டு குடுத்திட்டேர். ஒரு காசு தான் வரேல்ல. குடுக்காட்டி நம்பிக்க போயிரும். இப்ப பிரச்சின அந்த ஒரு மாச கட்டுக்காசு இல்லை. பாண்டி 62‘000 எடுத்து இருக்கிறான். மொத்தமா கட்டின காசு ஒரு 20‘000 தான் வரும். இப்ப 42‘000 என்ன பதில் சொல்லுறது, எங்க போறது. சீட்டு தொடங்கினது இவர். அண்ணாச்சி பாண்டிய தேடி வீடு மட்டும் பொயிட்டேர், அங்க மகள் மட்டும் தான் நிண்டது. வீட்டு போன் வேலை செய்யேல, கைபோன் துலஞ்சிற்றாம். நம்பாம சிரிச்சிற்று வந்தார். திரும்ப ஒருக்கா போக யாரும் திறக்கேல. அடுத்த கூறலும் வருது. இந்த முறை காசு வராட்டி சனம் குழம்பீரும். கடைசியா ஒருக்கா பாண்டி வீட்ட போய் பார்ப்பம் எண்டு போனவர் தான், பாண்டின்ர மனிசி பொலிஸ்க்கு போன் அடிச்சிற்று. பொலிஸ் வந்தோண பாண்டி முகம் காட்டினான். பெரிசா ஒண்டும் கதைக்கேல, வைராக்கியமா உன்னால முடிஞ்சா காச வாங்கிப்பார் எண்டு சொல்லீட்டான். பொலிஸ் என்ன எண்டு கேக்க பாண்டி மட்டும் இவர் சும்மா சும்மா வந்து இடஞ்சல் பண்ணுறார் எண்டாச்சு. எனி இந்த பக்கம் வந்தா புடிச்சிற்று போயிருவம் எண்டு எச்சரிச்சாச்சு. ஐந்து நாளுக்கு பிறகு தான் தெரியும் பொலிஸ் வேறு ஒரு சீட்டு காரணையும் எச்சரிச்சது எண்டு. யாரும் பொலிஸிட்ட சொல்ல முடியாது பெரிய பிரச்சினை. இது கழவு வேலை புடிபட்டா சுவிஸ் பத்திரிகையில தலைப்பில வரக்கூடிய விடயம்.

அடுத்த கூறலில எல்லாரும் எடுப்பம் எண்ட எண்ணம் தான். பெரிய கலவரம் மாதிரி தான் இருக்கு. அண்ணாச்சி சீட்டுக்கு தான் பொறுப்பு கவலை பட வேண்டாம் எண்டு கொஞ்சம் சமாதானம் படுத்தினார். அடுத்த காசு கட்டுற திகதி வந்தாச்சு. 6வதா எடுத்த சந்திரனும், பாண்டி மற்றும் புறோக்கர் ஆறுமுகம் தரேல்ல. சந்திரன் இண்டைக்கு தாறன் தாறன் எண்டு மழுப்பல், பாண்டி வரப்போறது இல்ல. ஆறுமுகம் நேரடியா எடுத்த ஆக்களிட்ட குடுக்கிறன் எண்டு சொல்லீட்டான். 10 நாள் ஆச்சு இன்னும் காசு ஆறுமுகம் குடுக்கேல்ல. அண்ணாச்சி தலேல கை வைச்சு ஐயோ எண்டு கத்த வெளிக்கிட்டார்.

தொடரும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள், கரன்!

நான் உங்கள் கதையின் முதலாவது பகுதியில் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வருகுது!

கதையும் சூடு பிடிக்கிற மாதிரிக் கிடக்கு...!

Link to comment
Share on other sites

தொடருங்கள் கரன். ஒரே  திரியில்  ஒவ்வொரு தொடரையும் பதிந்தால் இலகுவாக வாசிக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கரன்

Link to comment
Share on other sites

பாகம் 4 கடைசி பாகம் ஆகும். எழுதி முடித்து விட்டேன், திருத்த வேலைகள் செய்ய வேண்டும். விடுமுறை காரணங்களால் சிறு தாமதத்துடன் வெளிவரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.