Jump to content

ஆறடி கிடங்குக்குள் இருந்து ஒரு குரல் ....


Recommended Posts

என் குரல் ஓய்ந்து போனதா?
ஓய வைக்கப்பட்டதா?
முடக்கப் பட்டு மண்ணுக்குள்
மூடப்பட்டதா?
புயல் புகுந்து சுழன்ற மண்ணின்
பூ என்றுதானே சொன்னார்கள்
இன்று புயலடித்து தின்ற
வாடிய மலரிதழாய்
கூடு விட்டு வெளியில் வர
முடியாது செத்து கிடக்கிறது
காரணம் தெரியவில்லை
அருகில் நின்றவரை கேட்கிறேன்
திரும்பி கூட பார்க்காது போகிறான்
நான் பார்ப்போரை கேட்டு கேட்டு
களைத்து என் தங்ககம் செல்கிறேன்.
தேடி தேடி செத்துப் போன மனம்
தோற்றுப் போய் கிடக்கிறது.

தொடர்ந்து  வாசிக்க  ....http://www.kavikkural.com/2016/03/21/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/

Link to comment
Share on other sites

ஆறடி கிடங்குக்குள் இருந்து ஓர் குரல்...

*********************************************************
என் குரல் ஓய்ந்து போனதா? 
ஓய வைக்கப்பட்டதா?
முடக்கப் பட்டு மண்ணுக்குள் 
மூடப்பட்டதா? 
புயல் புகுந்து சுழன்ற மண்ணின் 
பூ என்றுதானே சொன்னார்கள்
இன்று புயலடித்து தின்ற 
வாடிய மலரிதழாய் 
கூடு விட்டு வெளியில் வர 
முடியாது செத்து கிடக்கிறது
காரணம் தெரியவில்லை 
அருகில் நின்றவரை கேட்கிறேன்
திரும்பி கூட பார்க்காது போகிறான் 
நான் பார்ப்போரை கேட்டு கேட்டு
களைத்து என் தங்ககம் செல்கிறேன். 
தேடி தேடி செத்துப் போன மனம் 
தோற்றுப் போய் கிடக்கிறது.

என் குரல் துடிப்பற்று கிடப்பது ஏன்? 
நான் கேட்பது உங்களுக்கு 
கேட்கவில்லையா பிச்சையாய் 
உங்கள் பதிலிடுங்கள்.
நோக்கம் 
அறிந்து விட துடிக்கும் 
இதயத்தை அடக்க 
ஆசை கொள்கிறேன் 
முடியவில்லை எனக்கேன் 
இந்த நிலை ?
பணமா? என் குணமா?
பிறர் திணை வாழ 
நான் கொண்ட திண்ணமா? 
மாறி மாறி வினாக்கள் 
எழுந்து மறைகின்றன
தினமும் என் குரலுக்கான
பயணத்தில் மனதுக்கும்
எண்ணங்களுக்கும்
இடையே விடை அறிய 
துடிக்கும் பூகம்பம், 
எழுந்து துடித்து 
அடங்கி பெறும் நிலை
பூச்சியமாகும் போதும் 
மறுபடியும் மனசு 
எண்ணத் துவங்கும்

யாரோ அருகில் இருந்த
கிடங்கில் முனகுவது கேட்கிறது
ஓ.. நான் மரணித்து விட்டேனா? 
என் உடலை தொட முனைகிறேன்
முடியவில்லை...
இப்போது தான் புரிகிறது 
வல்லாதிக்க பாதங்களிடையே 
நசுக்கப்பட்டு சாகடிக்கப்பட்டேன்.
என் வசந்த காலங்கள் 
என நினைத்த என் 
தினங்கள் என்னை 
கொஞ்சம் கொஞ்சமாய் 
தின்று தீர்த்த போது
என் சுமாரகம் அற்று 
இருந்தது இந்த பூமி
இப்போது என் குரலை 
சொல்லி சலசலக்கிறது
நான் தான் மரணிக்க வைக்கப்பட்டேனே 
எதுக்கு இந்த சலசலப்பு? 
நாதிகளுக்காய் நிமிர்ந்து 
நின்ற என் குரல் 
உயர்ந்து நின்ற போது 
அஞ்சிய ஜெகமே இன்று 
என்னை ஏன் அஞ்ச வைக்கிறாய்? 
ஓங்கி கத்த எண்ணம் வந்தாலும் 
என் குரல் மண் துணிக்கைகளுக்கு 
கூட கேட்காத கனவாகவே
கிடக்கிறது
ஊடக புழுக்கள் தின்று 
கொண்டிருக்கும் என் உடலில் 
வழியும் இரத்த துளிகள் 
மண்ணோடு மரித்து போகிறதே... 
அத்தனையையும் தெரிந்து 
என் செவிகளும் கண்களும்
தங்கள் உணரிகளால்
உணர மறுத்தன
அப்போதும் என் குரல் 
மௌனித்தே கிடந்தது
எட்டுத்திக்கும் கட்டுக்கடங்காது
பாய்ந்த புது வெள்ளமான
என் குரல் 
அடக்கப்பட்டது ஏன்?

வாய் திறக்க முடியாது 
ஆறடி நிலத்திற்குள் 
நான் தூங்க முயல்கிறேன்
விழிகள் நிரந்தரமாய்
மூடியும் தூக்கம் வர 
மறுத்து அடம்பிடிக்கின்றன.
எனக்கு இனி வைகறை இல்லை
இருள் மட்டுமே என் 
விழிகளுக்கு கிடைக்கும் 
வெளிச்சம்
இப்போதெல்லாம் நான் 
வெளிச்சமற்ற வெளிச்சத்துக்குள் 
வாழ கற்று கொண்டுவிட்டேன்
முதிரன் தினமும்
என் குரலை 
புணர்ந்து கொள்கின்றான்...
அனுகன் என்று வந்தவன்
என் குரலை 
ரசித்து உண்கிறான்
பலர் என் விருப்பற்று
தங்கள் ஆண்மைகளை
விலைபேசி குரலை தின்கிறார். 
பெண்ணியவாதிகள் கூட 
பெண் என மறந்து என்னை 
கதறியழ வைக்கிறார்.

என் குரலாய் பல குரல்கள் 
முளைத்து வானவெளியில் 
புதுப்பயணம் தொடர்கிறன
இது என் குரலா? என் மனதின் 
வரிகளால் எழுந்த குரலா? 
என் பெயர் சொல்லு நிமிரும் 
ஆதிக்க வெறிக்குரலா? 
நினைவில்லை. இதை 
என்னை வஞ்சித்து தினமும் 
தின்று தீர்க்கும் இந்த உலகே 
தீர்மாினி்க்கட்டும் 
முடிவு தெரியாது 
நான் வெளிவர முடியா 
மண் சிறைக்குள் மல்லார்ந்து 
கிடக்கிறேன். 
கூரிய வாளால் என் குரலை 
கீறிக் கொள்கிறது இவ்வுலகு 
என் உடலை மறைத்து 
கிடக்கும் பருத்தி துணியின் 
மேலே நிர்வாண வர்ணம்
பூசி அழகு பார்க்கிறது என் இனம்
நானோ என் மானம் 
காக்கும் உடையின் மறைப்பில்
மரணித்து கிடக்கிறேன்
என் குரலும் 
விபச்சாரியாக்கப்பட்டு 
விட்டதோ? 
எழுந்த வினா முடிய முன்னே 
மறு வினா துளிர்த்தது பெற்று 
வளர்த்த தாயை, 
பெற்ற பிள்ளையை
இன்னொருத்தனுக்கு கூட்டி குடுக்கும்
துணிவு பெற்று 
வளைந்து கொடுக்கிறதோ
பல சமயங்கள் மௌனம்
சில நிமிடங்கள் குமுறல்
தினமும் களைத்து போகும் வரை 
என் குரல் தனித்து குமுறுகிறது
மண் துணிக்கைகள் மூடி
கிடக்கும் ஆறடி கிடங்குக்குள்ளே...

%E0%AE%86%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BF-%E0

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.