Jump to content

சிறுவன் அரவிந்த் கொலை3 மாணவர்கள் கைது


Recommended Posts

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் 11 வயது சிறுவன் அரவிந்த் கடத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 மாணவர்கள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் சிறுவனைக் கடத்தி பணம் கேட்டு பின்னர் அரவிந்தைக் கொலை செய்ததாக அந்த மூவரும் பேரும் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை சாலிகிராமம் லோகையா காலனியைச் சேர்ந்த அரவிந்த் செவ்வாய்க்கிழமை இரவு கடத்தப்பட்டு அன்று இரவே கொடூரமாக கொலை செய்யப்பட்டு விருகம்பாக்கம் தொலைபேசி இணைப்பகத்திற்குப் பின்னால் உள்ள புதரில் போடப்பட்டான்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் அரவிந்த்தைக் கொன்ற கொடூர நபர்களைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீஸார் மும்முரமாக ஈடுபட்டனர்.

அரவிந்த்தின் தந்தை கார்த்திகேயன், தாயார் அமுதா ஆகியோரிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களுக்கு யாருடனாவது முன்விரோதம் இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுதவிர கும்பகோணம், நாகப்பட்டனம் ஆகிய ஊர்களிலும் தனிப்படைகள் விரைந்தன.

விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள், ரவுடிகளையும் போலீஸார் ஒருவர் விடாமல் முழுமையாக வளைத்து விசாரணை நடத்தினர்.

அரவிந்த்தின் தாயார் அமுதா மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கிறார். அவருக்கும், குழுவைச் சேர்ந்த வேறு யாரேனுக்கும் பிரச்சினை இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

50க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் முக்கியத் துப்பு கிடைத்ததைத் தொடர்ந்து அந்த கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் 2 மாணவர்கள் உள்பட 3 பேர் சிக்கினர்.

விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கோகுல், ஸ்ரீராம், சுதன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் கோகுலும், சுதனும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீராம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலை செய்து வருகிறான்.

இந்த மூன்று பேரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பைக் வாங்குவதற்காகவும், செல்போன் வாங்குவதற்காகவும், புத்தாண்டு கொண்டாடத்திற்கு பணம் தேவைப்பட்டதாலும், அரவிந்த்தைக் கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டதாகவும்,

செவ்வாய்க்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்த அரவிந்த்தøக் கடத்திச் சென்று அவனது வீடு அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் மாடிக்குக் கொண்டு சென்றதாகவும்,

பின்னர் அரவிந்த்தின் தந்தை கார்த்திகேயனுக்குப் போன் செய்து 5 லட்சம் பணம் தருமாறு மிரட்டியதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் கார்த்திகேயன் போலீஸில் தகவல் தெரிவித்ததால் பயந்து போயும் ஆத்திரமடைந்தும், அரவிந்த்தை செங்கல்லால் கொடூரமாக அடித்து கொலை செய்து பிணத்தை தொலைபேசி இணைப்பகத்திற்குப் பின்னால் உள்ள புதரில் போட்டு விட்டு ஓடி விட்டதாக கூறியுள்ளனர்.

இந்தத் தகவல்களை இன்று மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கைதான 3 பேரும் சிறுவர்கள் என்பதால் அவர்களை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அரவிந்த்தைக் கடத்த திட்டம் தீட்டி, செங்கல்லால் அடித்துக் கொலை செய்தவன் கோகுல்தான். இவனுக்குத் துணையாக சுதன், ஸ்ரீராம் ஆகியோர் இருந்துள்ளனர். முதலில் கடத்தலை இவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. போலீஸார் உரிய முறையில் கேட்டதும் அனைத்தையும் கக்கியுள்ளனர்.

கோகுல் வாக்குமூல விவரம்:

அரவிந்த்தைக் கடத்தியது குறித்து கோகுல் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம்:

நான், சுதன், ஸ்ரீராம் ஆகியோர் நண்பர்கள். ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டோம். எங்கள் வயது கொண்டவர்கள் எல்லாம் மோட்டார் சைக்கிள், செல்போன் என வைத்திருப்பதைப் பார்த்து நாமும் அதுபோல வாழ வேண்டும் என விரும்பினோம்.

மோட்டார் சைக்கிள், செல்போன் வாங்க பணம் வேண்டும். எனவே என்ன செய்யலாம் என 2 மாதத்திற்கு முன்பு ஆலோசித்தோம். அப்போதுதான் சினிமாவில் கடத்தி வைத்துக் கொண்டு பணம் பறிப்பது போன்ற காட்சிகளைப் பார்த்து அதேபோல செய்யலாம் என தீர்மானித்தோம்.

யாரைக் கடத்தலாம் என பேச்சு வந்தபோது சுதன் என்னை கடத்தி வைத்து எனது வீட்டிலேயே பணம் கேட்கலாம் என யோசனை கூறினானான். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. இந் நிலையில்தான் நான் சைக்கிளில் லோகையா காலனி பகுதியில் போனபோது அரவிந்த் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

இதையடுத்து அவனை நெருங்கிய நான் வீடியோ கேம்ஸ் பார்க்கலாம் என கூறி சைக்கிளின் முன்பகுதியில் அமர வைத்துக் கொண்டேன். பின்னால் சுதன் உட்கார்ந்து கொண்டான்.

அப்பகுதியில் உள்ள எனது நண்பர் பிரவீனின் வீட்டுக்கு அரவிந்த்தை அழைத்துச் சென்றோம். பிரவீன் கிறிஸ்துமஸுக்காக தனது குடும்பத்துடன் வெளியூர் போயிருந்தான். அவனது வீட்டில் வளர்க்கும் நாய்க்கு சாப்பாடு போடுவதற்காக என்னிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்திருந்தார்கள்.

இதை பயன்படுத்தி பிரவீன் வீட்டுக்கு அரவிந்த்தை கொண்டு போய் அடைத்து வைத்தோம். உள்ளே போனதும் அவனது வாயை இறுக்கப் பொத்தினேன். இதில் அவன் மயங்கி விட்டான்.

பின்னர் நான் வெளியே வந்து அரவிந்த்தின் வீட்டுக்குப் போன் செய்து குரலை முரட்டுத்தனமாக வைத்துக் கொண்டு 5 லட்சம் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் அரவிந்த்தைக் கொன்று விடுவோம் என மிரட்டினேன்.

பிறகு வீட்டுக்கு வந்தேன். அப்போதும் அரவிந்த் மயங்கிய நிலையில்தான் இருந்தேன். இந்த சமயத்தில்தான் நாங்கள் அரவிந்த்தை கடத்திய விவரம் போலீஸாருக்குத் தெரிந்து விட்டதை அறிந்தோம்.

இதனால் பணம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தோம். மேலும் போலீஸில் சிக்கி விடுவோம் என்றும் எனது நண்பர்கள் பயமுறுத்தினர். இதைத் தொடர்ந்து நான் அங்கே இருந்த கான்க்ரீட் செங்கல்லை எடுத்து (ஹாலோ பிளாக் செங்கல்) அரவிந்த்தின் தலையில் ஓங்கி அடித்தேன். இதில் மண்டை உடைந்து அரவிந்த் ரத்த வெள்ளத்தில் பிணமானான்.

பின்னர் இரவு 11.30 மணியளவில் அரவிந்த் உடலை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வந்து அங்கே இருந்த புதரில் (இந்தப் புதர்ப் பகுதி அரவிந்த் வீட்டுக்கு வெகு அருகேதான் உள்ளது) வீசி விட்டோம். முதலில் போரூர் பக்கம் கொண்டு போய் ஏ>யில் போட்டு விடலாம் என தீர்மானித்தோம்.

ஆனால் அவ்வளவு தூரம் கொண்டு போக முடியாது என்பதால் இங்கேயே போட்டு விட்டோம். பின்னர் பிரவீன் வீட்டுக்குச் சென்று தூங்கினோம். காலையில்தான் எங்களது வீடுகளுக்குச் சென்றோம் என்று கூறியுள்ளான் கோகுல்.

கோகுல், சாலிகிராமம் அண்ணா தெருவில் வசித்து வரும் தத்தன் என்பவரின் மகன். 17 வயதாகும் இவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10வது படித்து வருகிறான். சுதன் சாலிகிராமம் அருணாச்சலா தெருவைச் சேர்ந்தவன். இவனும் 10வது படித்து வருகிறான். இவனது வயது 16.

கோகுல் அரவிந்த்தைக் கொலை செய்தபோது வீட்டுக்கு வெளியே காவலுக்கு நின்றவன் ஸ்ரீராம். இவன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலை செய்து வருகிறான்.

18 வயதுக்கு உட்பட்ட 3 பேர் படு சாவகாசமாக அரவிந்த்தைக் கடத்தி கொலை செய்து வீட்டுக்கு அருகிலேயே கொண்டு வந்து போட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரவிந்த் காணாமல் போனது குறித்து கிட்டத்த 10 மணிக்கு முன்பாகவே அவனது தந்தை கார்த்திகேயன் போலீஸில் புகார் கொடுத்து விட்டார்.

ஆனால் போலீஸார் படு மெத்தனமாக தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளனர். மின்னல் வேகத்தில் தேடுதல் வேட்டையை நடத்தியிருந்தால் ஒரு வேளை அரவிந்த்தை உயிருடன் மீட்டிருக்க முடியும்.

ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு அப்பாவிச் சிறுவனை அநியாயமாக 3 சிறுவர்கள் கொலை செய்துள்ள சம்பவம் சென்னை மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அரவிந்த் உடல் தகனம் விஜய்காந்த் கண்ணீர்:

இந் நிலையில் கொலை செய்யப்பட்ட அரவிந்த்தின் உடல் போரூர் சுடுகாட்டில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அரவிந்த் வீடு உள்ள அதே பகுதியில் வசித்து வரும் நடிகர் விஜயகாந்த், இயக்குநர் ஹரி உள்ளிட்டோர் சிறுவன் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அரவிந்த்தின் பெற்றோருக்கு விஜயகாந்த் ஆறுதல் கூறினார். பின்னர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், மிகக் கொடூரமாக அரவிந்த் கொல்லப்பட்டுள்ளான். ஈவு இரக்கமற்ற அந்தக் கொடியவர்களை, விசாரணையே இல்லாமல் தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

விஜயகாந்த்தின் கருத்தையே அந்தப் பகுதி மக்களும் பிரதிபலித்தனர். விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அரவிந்த் வீடு முன்பு கூடியிருந்து அழுதபடி இருந்தனர்.

பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பெண் போலீஸாரும் துக்கத்தை அடக்க முடியாமல் அழுதபடி நின்றிருந்தனர். மாலை 3 மணியளவில் அரவிந்த்தின் உடல் தகனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

போரூர் சுடுகாடு வரையிலும் சாலையின் இரு மருங்கிலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி நின்று அரவிந்த்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தங்களது சொந்தப் பிள்ளையை இழந்தது போல அத்தனை பேரும் கண்ணீர் விட்டு அழுதது அப்பகுதியையே பெரும் சோகக் கடலில் ஆழ்த்தியது.

http://thatstamil.oneindia.in/news/2006/12/29/murder.html

Link to comment
Share on other sites

கொலையாளிகளை காட்டிக் கொடுத்த காயம்!

சென்னை: அரவிந்த் கொலையில் கொலையாளிகளை காட்டிக் கொடுத்தது ஒருவனின் கையில் இருந்த காயம் தான் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து கமிஷ்னர் லத்திகா சரண் கூறியதாவது:

அரவிந்துடன் விளையாடி அருள், உமா ஆகியோரிடம் விசாரித்தபோது, அரவிந்த் கார் பக்கமாக சென்று ஒளிந்ததாகக் கூறினார்கள். அப்போது யார் அங்கே இருந்தார்கள் என்று கேட்டபோது கோகுல், ஸ்ரீராம் ஆகியோர் கார் அருகே இருந்ததாகக் கூறினர்.

அது தான் எங்களுக்குக் கிடைத்த முதல் க்ளு. இந்த இருவரும் அரவிந்தை ஏமாற்றி பிரவீன் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். அரவிந்த் சிறிது நேரத்தில் வெளியே செல்ல முயன்றுள்ளான்.தி ஆனால், அவன் மறுக்கவே அவனை அடித்தும் கழுத்தை பிடித்தும் நெறித்தும் தாக்கியதில் அவன் மயங்கிவிட்டான்.

இடையில் அரவிந்தின் அம்மாவுக்கு பணம் கேட்டு போன் செய்த இவர்கள் மீண்டும் பிரவீன் வீட்டுக்குள் போனபோது அரவிந்த் மயக்கம் தெளிந்து எழுந்துள்ளான். இதையடுத்து அவன் வாயில் துணியை வைத்து அமுக்கி, அவன் மீது ஏறி உட்கார்ந்து ஹாலோ பிளாக் செங்கல்லால் தலையிலும் முகத்திலும் அடித்துள்ளனர். இதில் அவன் இறந்துவிட்டான்.

இதையடுத்து உடலை முட்புதறில் கொண்டு வந்து போட்டுவிட்டு, போலீஸ் மோப்ப நாய் வந்தால் திசை திருப்ப மிளகாய் பொடியை தூவியுள்ளனர். கில்லி படத்தின் மூலம் இந்த டெக்னிக்கை அவர்கள் கற்றார்களாம். (அதில் விஜய் மிளகாய் பொடியை தூவி நாய்களை திசை திருப்புவார்)

மீண்டும் பிரவீண் வீட்டுக்கு வந்து ரத்தக் கறையை எல்லாம் கழுவிவிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

ஆனால் அருள், உமா ஆகியோர் தந்த தகவலை வைத்து இந்த மாணவர்களை போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போது ஒருவன் கையில் காயம் இருந்தது. இது என்ன காயம் என்று கேட்டபோது பிரவீன் வீட்டு நாய் கடித்துவிட்டதாகக் கூறினர்.

இதையடுத்து பிரவீன் வீட்டுக்கு போலீசார் போய் பார்த்தனர். அப்போது அந்த வீட்டில் ரத்த வாடை வீசியது. மேலும் சில தடயங்களும் சிக்கின. இதை வைத்தும் அங்கிருந்த கார் டிரைவரிடம் விசாரணை நடத்தியதிலும் இந்த மூன்று பேரும் தான் கொலையை செய்து உறுதியானது. இதை பின்னர் அவர்களே கொலையை ஒப்புக் கொண்டு, எப்படி கொலை செய்தோம் என்பதையும் விளக்கினர் என்றார் லத்திகா சரண்.

கொலையாளிகள் பெற்றோர் மாயம்:

இந் நிலையில் ஸ்ரீராம், சுதன் ஆகியோரின் பெற்றோரும் குடும்பத்தினரும் அவமானம் கருதி தலைமறைவாகிவிட்டனர். அவர்களது வீடுகள் பூட்டப்பட்டுள்ளன.

முக்கிய குற்றவாளியான கோகுலின் பெற்றோர் மட்டுமே வீட்டில் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, கோகுல் இப்படி செய்திருக்க மாட்டான். ஆனால் அப்படிச் செய்திருந்தால் தண்டனையை அனுபவிக்கட்டும் என அழுதபடி கூறினர்.

கொலையாளிகள் படம் வெளியிடப்படாது?:

கொலையாளிகள் மூவருமே மைனர்கள் என்பதால் சட்டப்படி அவர்களது படத்தை போலீசார் வெளியிட முடியாது. மேலும் கைதான அந்த மூவரையும் நிருபர்களிடமும் போலீசார் காட்டவில்லை.

இந்தக் கொலையை துப்பு துலக்கியது இன்ஸ்பெக்டர் ஐயப்பன், எஸ்.ஐகள் சந்துரு, கோவிந்தராஜ், சந்துரு தலைமையிலான கிரைம் பிரிவு போலீசார் ஆவர்.

http://thatstamil.oneindia.in/news/2006/12/29/police.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.