Jump to content

தமிழ் போல் வாழ வாழ்த்துக்கள்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

உறவுகள் இங்கே வாழ்த்தலாம்..!

 

apk50z.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் நிறைந்த யாழ் இணையத்துக்கும் , நிர்வாகத்துக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மை இனத்தின் ஊடகமான யாழ்,

இன்று போல் என்றும்,

கருத்து சிறுபான்மையினர்குரிய இடத்தை கொடுத்து சேவையாற்றட்டும்,

என்று வாயார வாழ்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18 வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கணனியில் என்னைப் போல் பலருக்கும் ஏடு தொடக்கியதற்காக மிகவும் நன்றி.

Link to comment
Share on other sites

18 வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

இது ஒரு வரலாற்று ஆவணம். நாங்கள் இல்லை என்றாலும் எங்கள் எழுத்துக்கள்  இங்கே இருக்கும்.

என்னுடன் இருந்து இல்லாமல் போன நண்பன் எழுத துடித்த களம் இது. அவனுக்காக நான் சாகும் வரை யாழுடன் இருப்பேன்.

7 வருடங்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு நாளில் தான், சாலைக்கும் புதுமாத்தளனுக்கும் இடையில் ஒரு செய்மதி நிலையத்தில், ஜெரி அண்ணாவுடன் களமாடி வந்திருந்தான். நெஞ்சிலே கொழுவி இருத்த வேற்று கோது கவசத்தை கூட கழற்றாமல் சில பதிவுகளை இடவேண்டும் என்று புது பயனாளரை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருந்தோம். 

அரிச்சுவடியில் எழுதினால் தான், உள்ளே எழுத முடியும் என்று கூட தெரியாமல், எண்ணற்ற பயனாளர்களை உருவாக்கி முயற்சி செய்து கொண்டிருந்தோம். அதேவேளை thesamnet இல் பதிவுகளை எழுதி கொண்டிருந்தோம். சொல்ல வேண்டியவற்றை சொல்ல முடியாமல் போய் விடுமோ என்ற ஆதங்கம் தான்.

எப்படியும் இந்த தளத்தில் எழுதி விட வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். நான் எழுதுகிறேன் அவனுக்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் எண்ணங்களுக்கான இலத்திரனியல் பதிவேடாக யாழ் கடந்த 17 ஆண்டுகளில் பயணித்து 18ம் ஆண்டுக்குள் நுழையும் இவ்வேளையில்.. யாழ் தொடந்து தன் காத்திரமான பங்களிப்பை இனத்திற்கும் மொழிக்கும் நல்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. அது கருத்தியல் ரீதியாக இருக்கலாம்.. சமூக ரீதியாக இருக்கலாம்.. அல்லது காலத் தேவைகளின் பால் அமைந்ததாக இருக்கலாம். 

யாழ் தொடர்ந்து நீதிக்கும் நேர்மைக்கும் சத்தியத்திற்கும் சான்றிற்கும் அறிவிற்கும் அறிவியலுக்கும்.. முன்னுரிமை அளிக்க வேண்டுமே தவிர.. பொய்களுக்கும்.. புனைவுகளுக்கும்.. நேர்மையற்றவற்றிற்கும்.. அநீதிகளுக்கும்.. சான்றற்றவற்றிற்கும்... அறியாமைக்கும்.. போலிகளுக்கும்.. இடமளித்து குழப்பகரமான ஓர் ஏடாகி நிற்கக் கூடாது.

இந்த இடத்தில் இந்த வள்ளுவத்தை முன்னிறுத்தி யாழ் வாழ்த்துகிறோம்.

423 - எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

 

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் என்னுடன் பின்னிப் பிணைந்து விட்ட ஒரு களமாக ஆகி விட்டது!

நிறைய எழுத வேண்டும் என்று ஆசை! நேரம் கிடக்கும் போதெல்லாம் யாழுக்கு எழுதுவேன்!

பதினெட்டாவது வயது... ஒரு குழப்படி வயது!

அதையும் தாண்டி அவள் பயணிக்க வேண்டும்!

நாமார்க்கும் குடியல்லேம் என்று அவள் கூறினாலும், காலத்தின் மாறுதல்களுக்கு ஏற்றவாறு அவளது வடிவத்தை மாற்றி அலங்காரப்படுத்தும் மோகன் அண்ணாவுக்கும், சற்றே வழிமாறும் போது திரும்பியும் அவளைச் சரியான வழிக்குக் கொண்டு வந்து விடும் மட்டுறுத்தினர்களுக்கும் நல் வாழ்த்துக்களும் நன்றிகளும்!

வாழ்த்துக்கள் யாழ் களம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

 

உறவுகள் இங்கே வாழ்த்தலாம்..!

 

apk50z.jpg

தடைகள் பல தாண்டி....
தவறுகளை சீர்திருத்தி....
தண்டனைகளை மாற்றியமைத்து....
பவிசு வார்த்தைகளை  இனங்கண்டு..
பல படிகள் மேலெழுந்து....
வீறு நடை போட்டு வருவாய்....
18வது படியில் கம்பீரமாய் நிற்கும் யாழ்களமே.

நாமார்க்கும் குடியெல்லோம்.

Link to comment
Share on other sites

18 வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ராசவன்னியன்  உங்களை மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18 வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிஞ்சி பூப்பது 12 ஆண்டுக்கு ஒரு முறையாம்,
யார் சொன்னது ஆண்டுக்கு ஒரு முறை பூக்கிறது உனது பிறந்த நாள், அது நாம்(ன்) இளைப்பாறும் யாழினது பிறந்த நாள்!!!

18 வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.  1402653188.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18 வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ........இதில் பத்து வருடங்கள் நானும் யாழுடன் பயணித்துள்ளேன் என்று நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வந்தியதேவன் said:

 ராசவன்னியன்  உங்களை மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி.. வந்தியதேவன்.

 

நான் யாழ்களத்தில் இணைந்ததும், இதே நாள் தான் (30-03-2009). 

7 வருடம் பூர்த்தியாகிவிட்டது..!

7th-company-anniversary.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினெட்டாவது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கும் யாழ் களம் தொடர்ந்தும் தமிழர்களின் நாடியாய் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்!!!

இந்த வாழ்த்துத் திரியைத் திறந்து மீண்டும் யாழுக்குள் வந்திருக்கும் ராசவன்னியன் ஐயாவும் தொடர்ந்தும் நிலைத்திருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

12 hours ago, ராசவன்னியன் said:

 

உறவுகள் இங்கே வாழ்த்தலாம்..!

 

apk50z.jpg

தனது வாலிபத் தொடக்கத்தின் பராயத்தில் என்னையும் அணைத்து தனது 18 வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!!


இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு எனச் சுவைகள் அறுவகையாகும். இந்த அறுவகைச் சுவையும் யாழ்களம் அள்ளித் தருவதினால் களத்தை அருந்திச் சுவைக்கின்றோம். சுவையை உணரமுடியும் தவிரப் பார்க்கவோ, கேட்கவோ முடியாது. ஆனாலும்......  

சுவையைப் பார்க்கவைத்த ராசவன்னியர் அவர்களுக்குப் பாராட்டுகள்!! :)

Link to comment
Share on other sites

யாழ் இணையத்திற்கு இனிய வாழ்த்துகள் :)

ராஜவன்னியன் அண்ணா தொடர்ந்தும் இணைந்து இருங்கள் யாழுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.buzzle.com/img/articleImages/343834-29624-25.jpg

வணக்கம்.....
யாழ்களத்தின் 18´வது அகவையில்...  மீண்டும், கள உறவுகளைச்  சந்திப்பதில் மகிழ்ச்சி.
18 வயதை எட்டிய யாழ்களத்துக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

http://www.buzzle.com/img/articleImages/343834-29624-25.jpg

வணக்கம்.....
யாழ்களத்தின் 18´வது அகவையில்...  மீண்டும், கள உறவுகளைச்  சந்திப்பதில் மகிழ்ச்சி.
18 வயதை எட்டிய யாழ்களத்துக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பச்சை இல்லை ராசா

வாங்கோ

வாங்கோ

வாங்கோ.................

எம்மை வாழ்த்தாமல் உங்களால் இருக்கமுடியாது

அந்த மனசே போதும்....

நன்றி நன்றி நன்றி மீள்வரவுக்கு.

நன்றி நன்றி நன்றி யாழுக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

http://www.buzzle.com/img/articleImages/343834-29624-25.jpg

வணக்கம்.....
யாழ்களத்தின் 18´வது அகவையில்...  மீண்டும், கள உறவுகளைச்  சந்திப்பதில் மகிழ்ச்சி.
18 வயதை எட்டிய யாழ்களத்துக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மீண்டும் சந்திப்பதில் சந்தோசம்.:cool:

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

http://www.buzzle.com/img/articleImages/343834-29624-25.jpg

வணக்கம்.....
யாழ்களத்தின் 18´வது அகவையில்...  மீண்டும், கள உறவுகளைச்  சந்திப்பதில் மகிழ்ச்சி.
18 வயதை எட்டிய யாழ்களத்துக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உங்களை மீண்டும் யாழில் கண்டது மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து இணைந்திருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

http://www.buzzle.com/img/articleImages/343834-29624-25.jpg

வணக்கம்.....
யாழ்களத்தின் 18´வது அகவையில்...  மீண்டும், கள உறவுகளைச்  சந்திப்பதில் மகிழ்ச்சி.
18 வயதை எட்டிய யாழ்களத்துக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நாங்களும் தான், மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. தொடர்ந்து இணைந்திருங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.