Jump to content

விளைச்சலைத் தேடும் கட்டாந் தரைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

delfini-e-balene-sri-lanka-2.jpg

அனுராதபுரப் புகையிரத நிலையத்தில் ஒரு பெருமூச்சோடு தனது பயணத்தின் பாதி தூரம் கடந்த நிம்மதிய்டன்  தன்னைச் சற்று ஆசுவாசப் படுத்தியது அன்றைய யாழ்தேவி! தனது பயணத்தின் பாதித் தூரம் கடந்த நிம்மதியுடன் வாசுகியும் தனது பயணப் பொதியைத் தோளில் தொங்கவிட்ட படியே யாழ்தேவியை விட்டு இறங்கினாள்! ஏழு வருடங்களுக்கு முன்னர் அங்கு ரீச்சர் வாசுகியாக இறங்கும் போதிருந்த பயமும், தயக்கமும் அவளிடமிருந்து விடை பெற்று நீண்ட காலம் போய் விட்டது போல இருந்தது!  வழக்கமாக அவளுடன் கூடவே பயணிக்கும் மாம்பழம், பலாப்பழம், நல்லெண்ணெய், பனங்கிழங்கு, முருங்கைக்காய் போன்றவையும் அவளுடன் இன்று பயணிக்கவில்லை!

 

பாரதி கண்ட புதுமை பெண்ணைப் போன்ற மனநிலையில் அனுராதபுரம் பஸ் நிலையத்தை நோக்கி அவளது கால்கள் நடந்து கொண்டிருந்தன! முன்பெல்லாம் நேரே புகையிரத நிலையத்திலிருந்து, பஸ் நிலையத்துக்கு ஓடியே போயிருப்பாள்! இருட்ட முன்னர் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்று பயம் மட்டுமே மனது முழுவதும் நிறைந்திருக்கும்! இப்போதெல்லாம் அவசரம் அவளுடன் படணிப்பதில்லை! நிறைய நேரம் இருந்தது போல இருக்கவே அவசரமில்லாமல் அனுராதபுரத்தின் புனித நகர்ப் பகுதிக்குள்ளால் நடந்து செல்ல எண்ணினாள்!

 

ருவான் வெலிசாய விகாரையின் சுற்றுக் மதில்களை அலங்கரிக்கும் யானைகளையும், புனித வெள்ளரச மரத்தையும், தூப ராப விகாரையின் அழிவையும் ஒரு வெளிநாட்டுப் பயணியைப் போல... எந்த விதப் பற்றோ அல்லது வெறுப்போ இல்லாத நிலையில் அவளால் ரசிக்க முடிந்தது! வழியில் சந்தித்த பிக்கு அவளை ஏற இறங்கப் பார்த்ததை அவள் கடைக் கண்ணால் கவனித்தாலும், அதைக் கவனிக்காதது போல நடந்து கொண்டிருந்தாள்! அருகில் வந்த பிக்கு, அழகிய தமிழில் வணக்கம் என்றார்! பதிலுக்கு வணக்கம் சொள்ளவளிடம், வெளி நாடா என்று கேட்டார்! இல்லை என்று கூறியவள், தனது பயணத்தின் இடையில் கிடைத்த அவகாசத்தில் விகாரைகளைப் பார்த்து விட்டு போக நினைத்ததாகக் கூறி விட்டுத் தொடர்ந்து நடந்தாள்! அவள் கனகாலத்தின் பின்னர் வந்திருக்கிறாள் என்பதை அந்த பிக்கு மணந்திருக்க வேண்டும்! பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம்  என்று கனக்க விளங்கப்  படுத்தியதிலிருந்து  எதோ மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டாலும் அதனை அவள் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை! வரிடமிருந்து பலவந்தமாகத் தன்னைப் பிடுங்கிக் கொண்டவள் பழைய பஸ் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்!

 

அவளுக்கு எப்போதுமே பிடித்த அனுராதபுரத்திலிருந்து புத்தளம் செல்லும் பஸ் பாதையில் பயணம் செய்யப் போகின்றோம் என்ற எண்ணமே அவளுக்குள் ஒரு புத்துணர்வை ஊட்டியிருக்க வேண்டும்! இரண்டு பக்கமும் ஓங்கி வளர்ந்த மரங்கள் வீதிக்குக் குடை பிடிப்பது போல ஒரு அலங்கார வளைவு மாதிரி வீதியைப் பல இடங்களில் மூடியிருக்கும்! அத்துடன் சாதாரண சிங்கள மக்களின் காட்டுத் தடிகளால் கட்டப் பட்டு மண்ணுருண்டை கொண்டு வடிவமைக்கப் பட்ட வீடுகளும், செவ்விளனி மரங்களின் வரிசைகளும், இடைக்கிடை வந்து போகும்! இடையிடையே பிணங்கள் எரிந்து வெறும் சாம்பல் மட்டுமே பூத்துக் கிடக்கும் சுடலைகளும் மாறி மாறி வந்து போகும்! அவற்றின் அருகே கட்டப் பட்டிருக்கும் வெள்ளைக் கொடிகள் அவற்றை அடையாளம் காட்டும்! இடைக்கிடையே தோன்றி மறையும் பெரிய ஈரப்பலா மரங்களை விட வேறு எதுவும் புதிதாக மாறி விடவில்லை என்பதையும் அவதானித்தாள்! அந்தப் பஸ்சுக்குள் பயணிக்கும் போது.. வழக்கமாகத் தமிழர்கள் சிலரும் பயணிப்பதுண்டு! ஆனால் இன்று அவ்வாறு ஒருவரையும் அவளால் காண முடியவில்லை! வழக்கம் போல முஸ்லிம் வியாபாரிகள் பயணித்தாலும் அவர்கள் சிங்களத்திலேயே தங்களுக்குள் உரையாடிய படி இருந்தார்கள்!

பஸ் புத்தளத்தை அடைந்ததும் ..புத்தளம் கூட அவ்வளவு மாறி விடவில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்! பசி வயிற்றைக் கிள்ளியது போலிருக்க ஒரு சாப்பாட்டுக் கடையினுள் போய் அமர்ந்தவள் சாப்பாடு ஓடர் பண்ணும் போது ஒரு 'குருமா' வும் ஓடர் பண்ணவும் சாப்பாடு ஓடர் எடுத்தவன் அவளை மேலும் கீழும் சில முறை பார்த்தது அவளுக்கு ஒரு மாதிரியிருந்தது! அவள் நோர்வேயில் இருக்கும் போது அவளது வேலையே,,மீன்களைக் கீறிச் சுத்தப்படுத்துவதும்..அவற்றை தரம் பிரிப்பதும் தான்! எனவே மீன் சாப்பிடுவதை அவள் அவ்வளவு விரும்புவதில்லை! இங்கே யாருக்காக அவள் வேடம் போட வேண்டும் என நினைத்தவள் கடைப் பையனின் பார்வையை முற்றாக அலட்சியப் படுத்தினாள்! சாப்பாடு வந்தது அதை அவள் சாப்பிட்டு முடிக்கும் வரையும் அவளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த கடை முதலாளி அவளிடம் வந்து, இப்பெல்லாம் ரொம்ப மாறிட்டீங்க ரீச்சர் என்றவனை அண்ணார்ந்து பார்த்தவளின் முகத்தில் புன்முறுவல் பூத்தது! எந்த விதக் குற்றவுணர்வும் இல்லாதவளாக...அனஸ்..எப்படியிருக்கிறீங்க என்று அவள் கேட்கவும் அவள் தன்னை அடையாளம் கண்டுகொண்டதைக் கண்டு அனஸுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! ரீச்சர் கல்பிட்டிக்குத் தானே போறீங்க...நானும் இண்டைக்குக் கடை பூட்டினப் பிறகு அங்க தான் போகப் போறன்! நீங்கள் என்னுடனேயே வரலாம் ரீச்சர் என்று கூறியவன் பதிலுக்காகக் காத்திருக்கவில்லை! அவன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்றும் பெற்றோருடன் தான் தங்கியிருப்பதாகவும், அவள் ஸ்கூட்டரில் தன்னுடனேயே வரலாம் என்று கூறவும் அவளால் மறுக்க முடியவில்லை! அவளது முந்தைய குவாட்டர்சில் இருந்து அவனது வீடு வெகு தூரத்தில் இல்லை என்பதால் அவனது பெற்றோருடனும் அவளுக்குப் பழக்கம் உண்டு!

பாலாவி தாண்டியபோது.. வீதியின் இருமருங்கிலும் தென்னை மரங்கள் தோன்றத் தொடங்கின! கல்பிட்டியை நோக்கிச் செல்லச் செல்ல அவற்றின் அடர்த்தி அதிகரித்த படியே சென்றது! யாழ்ப்பாணத் தென்னை மரங்களைப் போல இல்லாது, இந்தத் தென்னை மரங்களில் திட்டுத் திட்டாக ஒரு விதமான் ஒட்டுண்ணித் தாவரம் வேர்களைப் போலத் தொங்கிக் கொண்டிருக்கும்! அத்துடன் ஒரு பெரிய வகை வண்டுகளும் அந்தத் தென்னைகளில் வசிப்பதுண்டு! கழுதைகள் கத்தும் போது அந்த வண்டுகள் விழுந்து விடும் என்று ஊரவர்கள் கூறுவார்கள்! வீதியோரங்களில் மணல் மேடுகளில் படர்ந்திருந்த கசுக்கொட்டை மரங்களும், அவற்றின் கீழே வெய்யிலுக்காகப் படுத்திருந்த பூ ஆமைகளும், கடலின் மணமும் கல்பிட்டி அண்மித்து விட்டதற்குக் கட்டியம் கூறின!

இது வரை மௌனமாக ஸ்கூட்டரை ஒட்டிக்கொண்டு வந்த அனஸ்.. ஜெயனுதீன் மாஸ்ரரின்ர வாப்பா போன வருஷம் மௌத்தாயிட்டங்க என்று மெதுவாகக் கூறினான்! அப்படியா என்று கூறியவள் நல்ல மனிசன் என்று மட்டும் கூறினாள்!

அவருக்கு இன்னமும் ‘நிக்காஜ்' சரி வரல்ல..அதே மாசுக்கருவாட்டைத் தான் இன்னும் சமையலுக்குப் பாவிக்கிறாங்க.. என்று கூறிச் சிரித்தான்! மாஸ்ரர் பாவம் என்று கூறியவன்… ரீச்சர் என்ன மாதிரி என்று கேட்டான்! ரீச்சரும் பாவம் என்று அவனது பாணியிலேய பதிலளித்தவள்,  கும்ப்பாக் கிழவன் எப்படி என்று விசாரித்தாள்! இருக்காரு என்று ஒரு உணர்வையும் காட்டாது பதில் வந்தது! மாஸ்ரர் ஒரு மாசிக்கருவாட்டுத் துண்டு ஒன்றை ஒரு கம்பியில் கொழுவி வைத்திருப்பார்! பின்னர் சமைக்கும் ஒவ்வொரு கறிகளுக்குள்ளும் அந்த மாசிக்கருவாட்டை கொஞ்ச நேரம் இறக்கி ஊற விடுவார்! பின்னர் கொஞ்ச நேரத்தில் அதை வெளியே எடுத்து அடுத்த நாள் சமையலுக்காக அதை பத்திரப் படுத்தி விடுவார்!

ஜெய்னுதீன் மாஸ்ரும், அவளும் ஒரே பாடசாலையில் ஒன்றாகப் படிப்பித்தவர்கள் தான்! அவளுக்கும், அவருக்கும் இடையில் ஒரு விதமான காதல் மாதிரி ஒன்று ஏற்பட்டது என்னவோ உண்மை தான்! பெண்ணென்றும் பார்க்காது..சம்பிரதாயங்களையும் மறந்து,, நேரடியாகவே தனது காதலை அவரிடம் அவள் கூறியதும் உண்மை தான்! கற்பிட்டி ஒல்லாந்தர் கோட்டையின் திறை சேரியின் இறுகப் பூட்டப் பட்ட இரும்புக் கதவுகளைப் போல, அவரது முகம் எந்த விதமான உணர்சிகளையும் பிரதி பலிக்கவில்லை! பரவாயில்ல்லை மாஸ்ரர் என்றவள்,, மறந்திடுங்கோ மாஸ்ரர் என்ற படி அவ்விடத்தை விட்டு அகன்றதும் நினைவுக்கு வந்தது! ஒன்றுமில்லை ரீச்சர்...மார்க்கம் என்று அவர் கூறியது மட்டும் மெதுவாக அவளுக்குக் கேட்டது போல இருந்தது!

அதன் பின்னர் விடுமுறைக்காக வீட்டுக்கப் போனவளின் வாழ்க்கை திசை மாறிப் போனதுடன் அனைத்துத் தொடர்புகளுமே விடு பட்டுப் போயின!

மறு நாள் கண் விழித்தவள் அனஸின் அம்மா வட்டிலப்பம் செய்து கொண்டிருப்பதை அவதானித்தாள்! உங்களுக்கு இது இப்பவும் பிடிக்கும் தானே ரீச்சர் என்று அவர் கேட்கவும்.. நான் நானாகத் தான் இருக்கிறேன் என்று சிரித்தபடியே கூறியவள் இரண்டு ஐயாயிரம் ரூபாய் நோட்டுக்களை அவரிடம் கொடுத்தாள்! அனஸின் தாய் மவன் என்ன சொல்லுவானோ என்று தயங்கிய மாதிரிக் கிடந்தது! நான் உங்கள் மகள் மாதிரி என்று கூறியவள் அந்தப் பணத்தை அவளது கைக்குள் வலிந்து திணித்தபடியே ‘கும்ப்பாக் கிழவனின்; வீட்டுக்குக் கூட்டிப் போகும் படி கேட்டாள்!  

அவள் குடிசையை அண்மித்த போது கும்பாவின் நாய் குரைத்ததைக் கேட்ட கும்பா நொண்டியபடி வெளியே வந்தான்!

வாசுகியைக் கண்டதும் அவனது முகம் மலர்ந்தது! எனக்குத் தெரியும் பிள்ளை நீ என்னை மறக்க மாட்டாய் என்று கூரியவனிடம் காலுக்கு என்ன நடந்தது என்று விசாரித்தாள்! அது ஒரு திருக்கை வெட்டிப்போட்டுது என்று சொன்னவன்.. அதெல்லாம் மாறியிடும் பிள்ளை.. எப்படி வெளிநாட்டு வாழ்க்கை? என்ற படியே கதையின் திசையை மாற்றினான்!

கும்பா மீன் பிடிக்கிறது உனக்குத் தொழில்...அந்த மீனை வெட்டிறது எனக்குத் தொழில்..அவ்வளவு தான் வித்தியாசம் என்றாள்! அப்படியெண்டால் நீ படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கேல்லையா பிள்ளை என்று கேட்டவனின் முகத்தில் ஒரு ஆதங்கம் தோன்றி மறைந்தது! அங்கு அவள் வாழ்ந்த காலத்தில் கும்பா அவளின் தந்தையைப் போலவே எல்லா உதவிகளையும் செய்திருந்தான்! நான் ஒருத்தருக்கும் ஒரு சாமானும் வாங்கேல்லை கும்பா! ஆனால் உனக்கு மட்டும் தான் ஒரேயொரு சாமான் வாங்கினனான் என்ற படி,, ஒரு வெளிநாட்டு விஸ்கிப் போத்தலொன்றை அவனிடம் கொடுக்க,,அவன் கண்களில் தோன்றிய பிரகாசம் நீண்ட நேரமாக மறையவேயில்லை!

கும்பாவிடம் விடை பெற்றுத் திரும்புகையில்,,அவளும் ஜெய்னுதீன் மாஸ்ரரும் மாலை நேரங்களில் சந்தித்துப் பேசும் சிறிய குடிசைப் பள்ளிவாசல் குறுக்கிடவும் அனஸின் அம்மாவே..மகள் அங்க போவம் என்று கூறினாள்! கூடப் பிறந்த சொந்தங்கள் எல்லாமே கொஞ்சம் விலகிச் செல்லுற மாதிரிப் பழகிற போது.. ஒரு குறுகிய காலம் மட்டும் தன்னுடன் பழகியவர்களால் மட்டும் எவ்வாறு எனது விருப்பங்களையும் எதிர் பார்ப்புகளையும் புரிந்து கொள்ள முடிகின்றது என்பதை அவளால் இறுதிவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை!

அந்த குடிசைப் பள்ளிவாசலுக்குள் ஒரு விதமான எண்ணெய்த் தன்மையான மணலைப் போட்டிருந்தார்கள்! அதனுள் கால்கள் புதையும் போது இனந்தெரியாத ஒரு உணர்வில் மனம் சாந்தமடைவதை அவள் உணர்ந்திருந்தாள்! அதனுள் யாரோ ஒரு முஸ்லிம் பெரியவரின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக மாஸ்ரர் கூறியது அவள் நினைவுக்கு வந்தது! இறுதியில் நீங்கள் கூட உருவ வழிபாடு செய்கின்றீர்கள் என்று அவள் அவருடன் வாக்குவாதப் பட்டதும் அவள் நினைவுக்கு வந்தது!

அன்றைய மாலையில்.. அவள் வரவைக் கேள்விபட்ட ஜெயனுதீன் மாஸ்ரர் அவளைத் தேடி வந்தார்! அவரை எதிர்பாராமல் கண்டதும் அவளது இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது! சிறிது நேரத்தில் தன்னைச் சுதாரித்துக் கொண்டவளிடம்...ரீச்சருக்கு விருப்பமெண்டால் மாஸ்ரரோட வெளிய நடந்து போயிற்று வாங்கோ என்றாள் அனஸின் அம்மா!

சிறிது நேரம் சேர்ந்து நடந்தவர்கள் பழைய நினைவுகளை மட்டும் பகிர்ந்து கொண்டார்கள்!

வீட்டை அண்மித்ததும் மெல்ல இருளத் துவங்கியது!

திடீரென ரீச்சர் உங்கட கழுத்தில தாலியைக் காணவில்லையே என்று ஜெயனுதீன் மாஸ்ரர் கேட்கவும் ,நான் இன்னும் திருமணம் செய்யவில்லை என்று கூறினாள்!

ஏன் என்று மாஸ்ரர் கேட்கவும் எனக்கு அதில் இப்போது ஆர்வமில்லை என்று கூறியவள் எனக்கு இப்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்றும் கூறினாள்! இரண்டு அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதைத் தான் வாசுகி அவ்வாறு குறிப்பிட்டிருந்தாள்!

ரீச்சர் நீங்கள் விரும்பினால் என்று ஜெய்னுதீன் மாஸ்ரர் கூறவும்,,தனது விரல்களால் சைகை காட்டி அவரது வசனத்தை இடை நடுவில் நிறுத்தியவள்....அன்றைக்கும், இன்றைக்கும் எனக்கு உள்ள வித்தியாசம் பணம் மட்டும் தானே மாஸ்ரர்? வேறு எதுவும் மாறி விடவில்லையே? மார்க்கம் இப்போது எங்கே போய் விட்டது மாஸ்ரர் என்று கேட்ட படி வீட்டின் பின் புறமிருந்த முருங்கை மரத்தின் கீழ் பார்வையைச் செலுத்தினாள்!

முன்பே புதைக்கப் பட்ட நண்டுக் கோதுகள் நிலவு வெளிச்சத்தில் பளபளத்தது அவளுக்குத் தெரிந்தது! காற்று மணல்களை அகற்றியிருக்க வேண்டும்!

வணக்கம் மாஸ்ரர் ....நண்பர்களாகவே இருப்போம் என்று கூறிய படி விடை பெற்று நடந்தாள்!

மாஸ்ரர் வாசலில் உறைந்து போய் நின்றது.அவளது கடைக்கண்ணில் விம்பமாகிப் பிரதிபலித்தது!

(யாவும் கற்பனை)

Link to comment
Share on other sites

புங்கை அண்ணா பச்சை முடிந்துவிட்டது. உங்களுக்குள் ஆயிரம் செங்கை ஆழியான்கள் புதைந்து இருக்கிறார்கள். வாசிக்கும்போதே காட்சி கண்ணுக்குள் விரியவைக்க உங்களால் எப்போதுமே முடியும் என்று மறுபடியும் நிரூபித்து இருக்கிறீர்கள்.

எனக்கு இலங்கையில் பிடித்தமான இடங்களில் அனுராதபுரமும் ஒன்று. பழையநகரும், கதிரேசன் கோவிலும், ஸ்டார் லோட்ஜும் கண்களில் வந்து போயின. நான் மனசு குழப்பமான நாட்களில் புகையிரத பாதையில் நடப்பதை விரும்புவேன். 

நீங்கள் தொடர்ந்து எழுதவேணும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைக்கும், இன்றைக்கும் எனக்கு உள்ள வித்தியாசம் பணம் மட்டும் தானே மாஸ்ரர்? வேறு எதுவும் மாறி விடவில்லையே?

 

புங்கை கலக்கிட்டீங்கள்.....அந்தமாதிரி ஒரு சிறுகதை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுகதையென்றால் இப்படி இருக்க வேணும். அயர்ச்சியின்றி வாசிக்க முடிந்தது. அனுராதபுரம்... திகிலைத் தொன்டைக்குள் வைத்துக் கொண்டு புண்ணகையைத் தந்து வாழும் புராதனம்....! tw_blush:

நன்றி புங்கை....!

Link to comment
Share on other sites

புங்கை அண்ணை, விடியக்காலத்தால எல்லாப்பச்சையையும் முடித்து விட்டேன். மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். இரண்டு தேரை அழகாக நகர்த்தியிருக்கிறீர்கள். அதே சமயம் ஒரு தேரர்ரயும் வறுத்து எடுத்துவிட்டீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாத இடங்களையெல்லாம் நேரே பார்த்தமாதிரி கதையில் விபரிப்பு இருந்தது. ஆனால் மாஸ்ரர் பணத்திற்காக மார்க்கத்தை தளர்த்தியதற்கான காரணம் கதையில் தெளிவாக வரவில்லை. அனுபவங்கள் கூட உலகத்தின் மீதான பார்வையும் விசாலமாகலாம் அல்லவா. முந்தைய சிந்தனைகள் காலாவாதியாகவும் கூடும்!

Link to comment
Share on other sites

12 hours ago, புங்கையூரன் said:

 

 

முன்பே புதைக்கப் பட்ட நண்டுக் கோதுகள் நிலவு வெளிச்சத்தில் பளபளத்தது அவளுக்குத் தெரிந்தது! காற்று மணல்களை அகற்றியிருக்க வேண்டும்!

 

இதற்கான அர்த்தம் புதைந்த காதல் மீண்டும் வெளிச்சத்துக்கு வருகிறது என்று எடுத்து கொள்ளலாம் தானே, காலமும் அனுபவமும் பக்குவமும்  சில தடைகளை அகற்றி இருக்கின்றன என்றும் எடுக்கலாம் இல்லையா.

 

புதைக்கப்பட்ட நண்டு கோதுகள் - மறைந்த காதல்

பளபளத்தது - துளிர் விட்டது

காற்று - காலம் + அனுபவம் + பக்குவம் 

மணல் - தடைகள்/திரைகள்/மார்க்கம் 

புங்கை அண்ணா , 

மாஸ்ரர் அவள் நினைவாக நிக்காஜ் செய்யாமல் இருந்தது கூட அவளது காதல் காரணமாக இருக்க எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கின்றன அல்லவா.?

அவளது திருமண நிலை தெரியாத மாஸ்ரரினால் அவளது பொருளாதார நிலைமையை எப்படி தெரிந்திருக்க முடியும்.

கிருபனின் கேள்விகளில் நியாயம் இருக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2016 at 9:34 PM, பகலவன் said:

புங்கை அண்ணா பச்சை முடிந்துவிட்டது. உங்களுக்குள் ஆயிரம் செங்கை ஆழியான்கள் புதைந்து இருக்கிறார்கள். வாசிக்கும்போதே காட்சி கண்ணுக்குள் விரியவைக்க உங்களால் எப்போதுமே முடியும் என்று மறுபடியும் நிரூபித்து இருக்கிறீர்கள்.

எனக்கு இலங்கையில் பிடித்தமான இடங்களில் அனுராதபுரமும் ஒன்று. பழையநகரும், கதிரேசன் கோவிலும், ஸ்டார் லோட்ஜும் கண்களில் வந்து போயின. நான் மனசு குழப்பமான நாட்களில் புகையிரத பாதையில் நடப்பதை விரும்புவேன். 

நீங்கள் தொடர்ந்து எழுதவேணும்.  

அபச்சாரம்...அபச்சாரம்!!!

வருகைக்கு நன்றி..பகலவன்!

கலாநிதி குணராசா (செங்கை ஆழியான்) அவர்கள் எனது தந்தையாரின் புவியியல் பேராசிரியராக இருந்தவர்! எனது இளமைக்காலத்தில் நெடுந்தீவின் கழிகளில் (மழைக் காலத்தில் மழைநீர் தங்கும் நீர் நிலைகள்)ஆசை தீர நீந்தியிருக்கிறேன்! அவர் கூறும் கூழைக்கடாக்கள் எனும் பெலிக்கன் பறவைகள் அந்த நீர் நிலைகளை நோக்கித் தான் வலசைக் காலத்தில் வருபவை ! எருக்கிழறிப் பறவைகளையும், தாராக்களையும் எனது தந்தையாரின் ஆசிரிய நண்பர்கள் வேட்டையாடி வீட்டுக்குக் கொண்டு வருவதுமுண்டு! இந்தக் கழிகளில் விளையும் றால்கள் ஐந்து, ஆறு அங்குலங்களுக்கு மேல் நீளமானவை! இதை ஏன் எழுதுகின்றேன் என்றால்,, இவ்வளவுக்கு நெடுந்தீவில் வாழ்ந்த அனுபவங்கள் இருந்தும்...செங்கை ஆழியானின் வாடைக்காற்றை வாசித்த பின்னர் தான் நெடுந்தீவின் உண்மையான பரிமாணம் எனக்குத் தெரிந்தது!

அவருடன் இந்தக் கற்றுக்குட்டியை கொண்டு போய்..ஒப்பிட்டதைத் தான் அபச்சாரம் என்று குருப்பிட்டேன்!

நிச்சயமாகத் தொடர்ந்து எழுதுவேன்! எனக்கும் அனுராதபுரத்தின் புனித நகர்ப்பகுதியில் நடந்து திரிவது பிடிக்கும்! குறிப்பாக எல்லாளனின் நினைவுத்தூபி உள்ள இடத்துக்கு வரும் போது நினைவுகள் பின்னோக்கிச் செல்லும்! துட்ட காமினியின் தாயான விகாரமாதேவிக்கு எல்லாளன் மீது காதல் ஏற்பட்டதாகவும் எல்லாளன் அதை நிராகரித்த படியால் தான்... துட்டகாமினியை தமிழர்கலில் வெறுப்பு ஏற்படும் படி அவள் வளர்த்தெடுத்தாள் என்றும் ஒரு கதை உண்டு! இதை எனக்குச் சொன்னவர் ஒரு புத்த பிக்கு! எல்லாளன் விகாரமாதேவியை மணந்திருந்தால்... இலங்கையின் சரித்திரமே மாறிப்போயிருக்கும்!

அதிகமாக அலம்புகிறேன் போல உள்ளது...நன்றி!

On 3/30/2016 at 9:54 PM, putthan said:

 

 

புங்கை கலக்கிட்டீங்கள்.....அந்தமாதிரி ஒரு சிறுகதை.....

வணக்கம் புத்தன்! பணம் தான் ஜெயனுதீன் மாஸ்ரரின் மனமாற்றத்துக்குக் காரணம் என்பதை... இந்தக் கதையில் தெளிவாக வெளிக்காட்ட இயலவில்லை! பின்னால்..கிருபனும் பகலவனும் கூட இந்தச் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்! அவர்களுக்குப் பதிலிடும் போது கொஞ்சம் விளக்கமாக விபரிக்கிறேன்!

வரவுக்கு நன்றி புத்தன்!

Link to comment
Share on other sites

மிக அழகாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். 

ஒரே ஒரு ஆதங்கம். கதையின் 80 வீதம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மனதில் பதிந்திருந்ததை சுதந்திரமாக அவிழ்த்து விட்டபடி வந்தவர், திடீரென்று ஏதோ ஒரு பெட்டகத்திற்குள் வலுக்கட்டாயமாகப் புகுந்து 'உள்ளேன் ஐயா' என்பதாகக் கட்டுப்பட்டது கதையின் வீரியத்தைக் குறைத்ததாகப் படுகிறது. 

'கும்பாவிடம் விடைபெற்றுத்திரும்புகையில்...' என்றாரம்பிக்கும் இடத்தில் இருந்து கதையின் இறுதிவரை உள்ளபகுதியை அழித்துவிட்டு, மீண்டும் கதையைத் எழுதத் தொடங்கிய மனநிலைக்கு மீண்டு ஒரு முடிவை நீங்கள் எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. வாசகர்கள் செல்லாத ஒரு இடத்தை வாசகர்களிற்குப் பரிட்சயப்படுத்துவதற்காக மிக நிதானமாக நீங்கள் ஆரம்ப காட்சிகளை நகர்த்தியமை தவிர்க்க முடியாதது தான். எனினும் உங்களின் ஆழுமையான எழுத்தால் வாசகர்களை அந்தக் களத்திற்கு இட்டுச் சென்று விட்டீர்கள். எனவே முடிவு இனி இந்தக் காட்சிகள் உங்களிற்குள் பதிந்திருந்து உங்களிற்குள் கிழப்பும் பிரளயத்தை, தாண்டவத்தை கட்டின்றி, வாசகரை மறந்து உங்களிற்காக மட்டும் கட்டற்ற பிரவாகமாக நீங்கள் இறுதிப் பந்திகளில் மீள எழுதவேண்டும். வட்டிலாப்பத்தைக், காதலை, தென்னையில் ஒட்டியிருந்த தாவரத்தை, அதற்குள் ஒளித்திருந்த வண்டுகளைக், கழுதையினை, கடலை, கடலிற்குள் கும்பானை, கட்டுமரத்தை, மாசிக்கருவாடு நாக்கைத் தொடும் தருணத்தை, மாசிக்கருவாடூடான உருவகத்தால் ஜெயனுதீன் சார்ந்த இழமையின் அனைத்துக் கிளர்க்சிகளையுமாக பிரளயமாய்க் கொட்டித்தீர்த்து, அந்தச் சுழற்சியில் வாசகரைச் சிக்கிச் சின்னாபின்னமாகச் செய்து தனது இழமையினைப் பதிந்து விட்டு வாசுகி நோர்வே மீண்டால் போதும். முடிவென்று எதனையும் வலுக்கட்டாயமாகக் காட்டவேண்டியமை தேவையே இல்லை என்பது தாழ்மையான கருத்து.

எழுதுங்கள்....நிச்சயம் இன்னமும் பலபடி அருமையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாந்தரைகள் கருவுள்ள காத்திரமான கதை.

On 30.3.2016 at 0:54 PM, putthan said:

புங்கை கலக்கிட்டீங்கள்.....அந்தமாதிரி ஒரு சிறுகதை.....

ஒரு எழுத்தாளனை பார்த்து இன்னொரு எழுத்தாளன் சொல்லுற கருத்தே உது? ஒரு இரண்டு பந்தி எழுதி விளாசித்தள்ளிருக்க வேண்டாம்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2016 at 10:11 PM, Surveyor said:

புங்கை அண்ணை, விடியக்காலத்தால எல்லாப்பச்சையையும் முடித்து விட்டேன். மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். இரண்டு தேரை அழகாக நகர்த்தியிருக்கிறீர்கள். அதே சமயம் ஒரு தேரர்ரயும் வறுத்து எடுத்துவிட்டீர்கள். 

வரவிற்கும் கருத்துக்கும் நன்றி, சேர்வயர்!

தேரர் தானாக வந்து தாச்சிக்குள் விழுந்து போனார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2016 at 10:14 PM, கிருபன் said:

தெரியாத இடங்களையெல்லாம் நேரே பார்த்தமாதிரி கதையில் விபரிப்பு இருந்தது. ஆனால் மாஸ்ரர் பணத்திற்காக மார்க்கத்தை தளர்த்தியதற்கான காரணம் கதையில் தெளிவாக வரவில்லை. அனுபவங்கள் கூட உலகத்தின் மீதான பார்வையும் விசாலமாகலாம் அல்லவா. முந்தைய சிந்தனைகள் காலாவாதியாகவும் கூடும்!

 

On 3/30/2016 at 10:33 PM, பகலவன் said:

இதற்கான அர்த்தம் புதைந்த காதல் மீண்டும் வெளிச்சத்துக்கு வருகிறது என்று எடுத்து கொள்ளலாம் தானே, காலமும் அனுபவமும் பக்குவமும்  சில தடைகளை அகற்றி இருக்கின்றன என்றும் எடுக்கலாம் இல்லையா.

 

புதைக்கப்பட்ட நண்டு கோதுகள் - மறைந்த காதல்

பளபளத்தது - துளிர் விட்டது

காற்று - காலம் + அனுபவம் + பக்குவம் 

மணல் - தடைகள்/திரைகள்/மார்க்கம் 

புங்கை அண்ணா , 

மாஸ்ரர் அவள் நினைவாக நிக்காஜ் செய்யாமல் இருந்தது கூட அவளது காதல் காரணமாக இருக்க எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கின்றன அல்லவா.?

அவளது திருமண நிலை தெரியாத மாஸ்ரரினால் அவளது பொருளாதார நிலைமையை எப்படி தெரிந்திருக்க முடியும்.

கிருபனின் கேள்விகளில் நியாயம் இருக்கிறது.

 

கிருபனுக்கும், பகலவனுக்கும் நன்றிகளும், வணக்கங்களும்!

உங்கள் இருவரதும் வாதங்களும் நியாயமானதே எனினும், கனம் கோட்டார் அவர்கள் எனது பக்கத்து நியாயங்களையும் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன்!

முதலாவது..இந்தக் கதையை யாழ் மகளின் பதினெட்டாவது பிறந்த தினத்தில் வெளியிட வேண்டிய அவசரத்தின் எழுதி முடிக்க வேண்டியிருந்தது! வழக்கமாக சுமே போன்றவர்கள் பலர் கவிதை எழுதி வாழ்த்துவார்கள்! இந்த முறை எல்லாரும் தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டிருந்தது ஒரு மாதிரி இருந்தது! அதனால் அவசரப்பட்டுக் கதையை முடிக்க வேண்டி இருந்தது!

இரண்டாவதாக வாசுகியும் ஒரு சாதாரணப் பெண் தான் என்பதை நான் தெளிவாக விளக்கியிருக்க வேண்டும்! தனது காதல் நிராகரிக்கப் பட்டதை எல்லாப் பெண்களையும் போல அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! புலத்து வாழ்க்கையில் காதல் மட்டுமல்ல அவளது சொந்தங்களும் கூடத் தொலைந்து போயிருந்தன! அதையும் தெளிவாகக் காட்டத் தவறி விட்டேன்! எனினும் அவளுக்குள் ஒரு நப்பாசை அவள் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது! அதற்காகத் தான் அவள் கற்பிட்டிக்கு வந்தாள்!

எனினும் முருங்கை மரத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த நண்டுக் கோதுகள்..அங்கே 'மார்க்கம்' புதைக்கப்பட்டிருந்ததை அவளுக்குக் கூறிக்கொண்டிருந்தன! அதை விளக்கத் தவறியது எனது தவறு தான்!

மார்க்கத்தைப் பின்பற்றும் ஒரு முஸ்லிம்..நண்டு சாப்பிடுவதை 'ஹலால்' என்று ஏற்றுக்கொள்வதில்லை!

அந்த நண்டுக் கோதுகளைக் கண்ட பின்னரே..மார்க்கம் என்பது மாஸ்ரர்  கூறிய வெறும் சாட்டுத் தான் என்பதை அவள் புரிந்து கொண்டாள்! அதனால் தான் மாஸ்ரரின் மன மாற்றம் வெறும் பணத்துக்காகவே என்ற முடிவுக்கு அவளால் தீர்க்கமாக வர முடிந்தது!

ஆர்வமுள்ளவர்கள் வாசிக்க...

http://www.islamic-laws.com/halalharamfooddrinks.htm

Link to comment
Share on other sites

நன்றி புங்கை அண்ணா உங்கள் விளக்கத்துக்கு. நீங்கள் இன்னும் சில படிகள்  மேலே இருக்கிறீர்கள். உங்களை விளங்கி கொள்ளவே இன்னும் சில கதைகள் தேவைபடலாம்.

எனவே தொடர்ந்து எழுதி உங்களை எங்களுக்கு புரியவையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையை நன்றக நாகர்த்தியுள்ளீர்கள் புங்கை, கண் முன்னே காட்சிகள் விரிகின்றது

18 hours ago, பகலவன் said:

நன்றி புங்கை அண்ணா உங்கள் விளக்கத்துக்கு. நீங்கள் இன்னும் சில படிகள்  மேலே இருக்கிறீர்கள். உங்களை விளங்கி கொள்ளவே இன்னும் சில கதைகள் தேவைபடலாம்.

எனவே தொடர்ந்து எழுதி உங்களை எங்களுக்கு புரியவையுங்கள்.

நீங்களும்தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.