Jump to content

அனாதை குழந்தையம்மா நான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனாதைக் குழந்தையம்மா ..
:..:..:..:..:..:..:..:..:..:..:..:..:..:..:..
அன்புள்ள அம்மாவுக்கு…!

அழுது…அழுது…
அடம்பிடித்து
வேப்ப மரத்தில்
ஏறியொழித்து…
இன்னும்….இன்னும்….
எத்தனை….எத்தனை…

விட்டாயா…?

ஏஐன்சிக்குக் காசுகட்டி
எல்லாம் முடிந்தபின் – எனை
கொற கொறவென
இழுத்தபோது
படலையைப் பற்றியபடியே
நானிட்ட கூச்சல்
ஊரையே கூட்டியதே…!

மறந்துவிட்டாயா…?

ஏனம்மா என்னை
ஐரோப்பியத்தெருக்களில்
அனாதையாய்
அலையவிட்டாய்…?

“உயிரெண்டாலும்
மிஞ்சுமெண்டுதான் மோனை

ஐயோ…
வேண்டாம் நிறுத்து…!

உணர்விழந்த உடலுக்கு
உயிரெதற்கம்மா…?

நான்
சின்னப்பொடியனெண்டாப்போலை
காம்பில வாறவன் போறவன்
வெள்ளை.. கறுவல்..
காப்பிலி.. சப்பட்டை..
எல்லாரும் என்னப்போட்டு…
என்னண்டு சொல்லுறது

அழாதையம்மா…

அம்மா…அப்பா…
அக்கா…தம்பி…
எல்லாரும் இருந்தும்
அரவணைக்க ஆருமில்லாம
நாடு நாடாய்…
அகதியாய்…அனாதையாய்…
இந்தச் சின்ன வயசில

ஏனம்மா…?

அழாதையம்மா…

இஞ்ச
எங்கட பொடியளே
வாய்க்கை சாராயத்தை ஊத்தி
சிகரெட்டையும்
அமத்துறாங்கள்

எப்பிடியம்மா நான்…?

இதுக்காகவா
என்னைப் பெற்றாய்…?

இங்கு என்னைப்போல்
இன்னும் எத்தனை
சிறுவர்கள்
துளிர் விடும் பருவத்தில்
உறவறுந்து… உயிரறுந்து …

ஏனம்மா…?....

எனது வலிகளை
என்னும் எழுதினால்
இதயம் வெடித்துவிடும் 
எனக்கும் -  உனக்கும் ..

அழாதையம்மா…

எப்போதாவது - மீண்டும்
உன்னை சந்திப்பேனா
எனும் ஏக்கத்துடன்

உன்  மகன்
ரமேஷ் வவுனியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலி... வலிமையாய் பேசுகின்றது....!

கொடிது வறுமை கொடிது

அதனிலும் கொடிது 

இளமையில் வறுமை....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் கவிதை நன்றாக இருக்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவரின் கவிதை நன்றாக இருக்கே

அவர் யாரெண்டு தெரியுமா உங்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழனின் மொத்த வாழ்வுமே ஒரு பார்சல் பார்சிங் போல அமைந்து விடுகின்றது!

ஒரு பிரச்சனை என்று வரும்போது..அதைச் சுமக்காமல் இன்னொருவரின் தோள் மீது சுமத்தி விடுவதே வழக்கமாகி விட்டது!

அந்த இன்னுமொருவன்/ இன்னுமொருத்தி ஒரு ஏமாளியாய் இருந்தால்  அவருக்கு/ அவளுக்கு சமுதாயக் கெளரவம் என்ற போர்வையைப் போர்த்தி விட்டு மற்றவர்கள் எதுவுமே நடவாதது போல நகர்ந்து கொண்டேயிருப்பார்கள்!

தங்கைகளுக்காகத் தங்கள் வாழ்வைத் தொலைத்த தமையன்களும், தம்பிகளுக்காகத் தங்கள் வாழ்வைத் துறந்த அக்காக்களும் கூட எமது சமூகத்தில் நிறைய உண்டு!

அதே வரிசையில் இந்த அகதிப் பையனின் அம்மாவும் உள்ளடக்கம்!

அந்தக் குழந்தையின் ஏக்கத்தை, ஆற்றாமையைக் கவிதையாக வடிக்க வன்னியன் போன்றவர்களால் தான் முடியும்!

சாந்தி அக்காவுக்குத் தான் நேரமில்லை...ஒரு சமூகத்திற்காகத் தனது நேரத்தை ஒதுக்கியுள்ளார்!

நீங்களாவது நேரம் கிடைக்கும் போது உங்கள் நேரத்தின் ஒரு பகுதியை யாழுக்கு ஒதுக்கினால் என்ன வன்னியன்?

ஏதோ கேட்க வேண்டும் போல இருந்தது... கேட்டேன்!

அரசியலை விட்டு விலகி....மனித உணர்வுகளை..வாழ்க்கையை...வனையும் பாதையில் பயணிப்போம்!

உங்கள் கவிதை...அந்தக் குழந்தையின் ஏக்கத்தை அப்படியே பிரதி பலித்திருக்கின்றது!

இணைப்புக்கு நன்றி...நந்தன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

அவர் யாரெண்டு தெரியுமா உங்களுக்கு

எனக்குத் தெரியும். யாழ்களத்தில்... நன்கு பரிச்சயமானவரின் கணவர்.
எதற்கும்.... மற்றவர்களுக்கு தெரிந்திருக்கின்றதா என்பதை அறிய... இப்போது பதிலை கூறாமல் இருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

எனக்குத் தெரியும். யாழ்களத்தில்... நன்கு பரிச்சயமானவரின் கணவர்.
எதற்கும்.... மற்றவர்களுக்கு தெரிந்திருக்கின்றதா என்பதை அறிய... இப்போது பதிலை கூறாமல் இருக்கின்றேன்.

அமைதிக்கு பெயர் போனவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வந்தியதேவன் said:

அமைதிக்கு பெயர் போனவர்

சரியான பதில். வந்தியத்தேவன்.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 03/04/2016 at 10:54 PM, நந்தன் said:

அவர் யாரெண்டு தெரியுமா உங்களுக்கு

எனக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?

அவரின் வேறு கவிதைகளையும் வாசித்துள்ளேன்.மிக நன்றாக எழுதக் கூடியவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.