Jump to content

தூக்கில் தொங்கிய சீட்டு – பாகம் 4


Recommended Posts

பரவலா எல்லா இடமும் சீட்டு பற்றி தான் பேச்சு. வேற கடைக்காரர் காச சுத்தீற்றாங்கள், இவர் இவர் காச எடுத்துக்கொண்டு ஓடிட்டார், இவர் தரேல்ல எண்டு. கிட்டத்தட்ட எல்லா பெரிய சீட்டுக்களும் தொங்கீற்று. கடைக்காரர் போட்ட சீட்டுகள் யாரோ சுத்தீற்றினம் எண்டு தான் கதை, பார்த்தா கடையில புதிய புதிய சாமான்கள் கிடக்கு. உடுப்பு கடைகளில புதிய டிசைன் உடுப்பு. இது போதாத குறைக்கு வேற இடத்தில புதுக்கடை. பெரிய விசயம் இல்ல, சீட்ட எடுத்த ஆக்களுக்கு காசு போகேல்ல, 60,000 வரவேண்டிய இடத்தில 25,000 குடுத்தா, மிச்சத்த கேக்க, இவர் தந்தா தாறன் எண்டு பதில். உதாரணத்துக்கு, மிச்சம் தரேல்ல எண்டா 20 பேரில 8 பேரா தந்தவே, மிச்சம் 12 தரேல்லையா? சாத்தியம் இல்லாத நிலை, மிச்சம் எங்க? ஒரு நகை கடைகாரர் தனக்கு கடன், சீட்டுக்கு தந்த காசுகளை தனக்கு எடுத்திட்டேர், இப்ப 20,000 தாறன், மிச்சம் 4 மாசத்தில தாறன் எண்டு சொல்லீட்டார். எங்க முறையிடுறது? சீட்டுக்கு பத்திரங்கள் இல்ல, எல்லாமே வாய்பேச்சில தான் நடக்கு. நடத்துற ஆக்களே இப்புடி செய்றது தவறு.

ஊரில சீட்டுகள் சுத்தினதால நிறைய பேர் கடனாழியா ஆகீற்றினம். இந்த சீட்ட எடுத்து மற்றது கட்டுவம் எண்ட ஆக்கள் நல்லா நாறி பொயிற்றினம். எடுக்கிற சம்பளம் 5000 மாசம் 4000, 4000 எண்டு இரண்டு சீட்டு புடிக்கிறது எப்படி. சீட்ட எடுத்த ஆக்களுக்கு முதல் 20,000 தாறன், மிச்சம் 5 மாசத்தில தாறன் எண்டு சீட்டு நடத்தின ஆக்கள் சொல்லீற்றினம். அடுத்த கூறல் நடக்கேக்க கட்டுக்காசு குடுக்க வேணும், ஆனா எத்தின மாசம் கட்டுறது. 20,000 முடிஞ்சா எங்க போறது. குடும்பம் குட்டி சாப்பாட்டுக்கு என்ன செய்றது. சில பேர் வட்டிக்கு காசு வாங்கி சீட்ட கட்டீற்று வாறினம். கட்டாட்டி மிச்ச காசும் வராமா போயிரும், அதோடு முகங்களில முழிக்க வேணும், அது நண்பரா இருக்கலாம். முதலில சீட்ட எடுத்த ஆக்களுக்கு காசுகள் சரியா தான் வந்தது, பிறகு தான் ஒருத்தன் சுத்த மற்றவன் சுத்த வெளிக்கிட்டான்.    

அண்ணாச்சீல நம்பிக்க வச்ச ஆக்கள் காச கட்டீற்று தான் வாறினம். சரி வேற வழி? எடுத்த ஆக்கள் கட்டாட்டி ஊரில வேற ஆக்கள் முகத்தில முழிக்க ஏலாது, மனசாட்சியும் வேணும். அண்ணாச்சி வருமானம் காணாது எண்டு தான் சீட்டு தொடங்கினவர். இரண்டு பேர் சுத்தீற்றினம், ஆறுமுகம் தருவன் தருவன் எண்டு இழுக்கிறேர். சில பேர் அண்ணாச்சீட்ட கட்டின காசயாவது தாங்க நாங்கள் சீட்டில இருந்து விலகுறம் எண்டும் கேட்டு; பார்த்திச்சினம். சீட்டுக்கு எண்டு விதிமுறைகள் இருக்கு, நடத்திறவர் எல்லாத்துக்கும் பொறுப்பு.

சந்திரன் வீட்டில தட்டினா மனிசி அவர் இல்ல எண்டு திருப்பி அனுப்பீற்றா. திரும்ப போக தப்பா நடந்தனிங்கள் எண்டு சொல்லி பொலிஸ்ட சொல்லீருவன் எண்டு மிரட்டி இருக்கிறா. இதுக்கு மேல என்னத்த பண்ண. சந்திரன் பாண்டிய பார்த்துத்தான் கட்டாட்டி எப்படியும் யாரும் ஒண்டும் பண்ண ஏலாது எண்டு தெரிஞ்சிற்று. பாண்டீன்ர மகள் புது வாகனத்தில திரியுறது ஆக்கள் பார்த்து இருக்கினம். புறோக்கர் இண்டைக்கு தாறன் நாளைக்கு தாறன் எண்டு தான் இன்னும் சொல்லுறேர். எடுக்கிற 6000 சம்பளத்திற்கு ரெண்டு சீட்டு, பழைய வீட்டு வட்டி, புது வீட்டுக்கு வட்டி, ரெண்டு கடனா எடுத்த சீட்டு அடுத்தது வட்டிக்கு வாங்கின காசு. பிள்ளைகள் மனிசியோட விடுமுறை போக சிங்கப்பூர்க்கு டிக்கட் போட்டிட்டார். மற்ற சீட்டும் கட்டாம திரியுறேர். எங்கட ஆக்கள் வீடு பாக்குறதுக்கு இவர புறோக்கர புடிச்சது. ஏனி புடிக்க தேவை இல்ல எண்டு தெரிஞ்சிற்று. விபரம் தெரிஞ்ச ஆக்கள் நிறைய பேர் இருக்கேக்க, எதுக்கு இவருக்கும் காசு குடுக்க வேணும். இதிலயும் பவுடி என்ன எண்டா, வீடு வித்தா இவருக்கு வீடு வாங்குற ஆக்கள் காசு குடுக்கினம், வீடு விக்குறவன் காசு குடுக்கிறான் அடுத்தது வங்கி காசு குடுக்குது. இது இவர்ர பக்கத்தது பிஸ்ணசு, இப்ப படுத்திட்டு. கடன்களால யாரும் வீடும் வாங்க வரவும் மாட்டினம்.

அடுத்த கூறலில திரும்ப அந்த 3 பேரின்ர காசு வரேல்ல, இன்னும் ஒரு கிழைமையில மிச்சம் தாறன் எண்டு சொல்லி அண்ணாச்சி அனுப்பீற்றார். போன முறை காசு யாரிட்டையோ கைமாறி குடுத்தவர். கிட்டத்தட்ட இந்த கூறலுக்கு 12000 குடுக்குமதி இருக்கு. இரண்டு பேர் சுத்தின காசு கிட்டத்தட்ட 90,000 கிட்ட வருது, இதில ஆறுமுகம் 50,000கு மேல குடுக்க வேணும். வருமானமும் கெட்டு போச்சு.

ஒரு நாள் சாமத்தில அண்ணாச்சிக்கு நித்திர வரேல்ல. இரவு முழுக்க ஜோசனை. ஒரு சிந்தனையும் இல்லாமல் கயித்த எடுத்தார், நல்ல இடம் தேடினார், தூக்க போட்டார். என்னடா சத்தம் கேக்குது எண்டு மனிசி ஓடிவர இவர் தொங்குறத பார்த்து அலரி அடிச்சு ஓடிவந்து கால புடிச்சிட்டா. இவர் விடு விடு எண்டு கத்த, குடும்பத்த குட்டிகளை யோசிக்கேல்லையே எண்டு மனிசி அலறிச்சு. படுத்த பிள்ளைகளும் ஓடிவந்து கத்த வெளிக்கிட்டுதுகள். கதிரைய காலுக்கு வச்சு இறக்கிச்சினம். என்னால முடியேல எண்டு அண்ணாச்சி அழுகை. உடனே மனிசி வீடுகளை விப்பம் எண்டு சொல்லிச்சு. வீட்ட வித்தா கூட எல்லா காசும் வராது, வங்கீன்ர பணம் (மோர்கேச்) ஒரு 600,000 இருக்கு, விக்குறது எண்டா 750,000 விக்கலாம், அனா யாராச்சும் வாங்க வேணுமே. போட்ட முதல் 150,000 வரும். அதுக்கு ஏற்ற வழிய பார்க்க வேணும். கடையில சேருறது உடனே கடனுக்கு போகுது. எனி யாரும் சுத்தாம இருந்தா சரி இல்லாட்டி இன்னும் தலையிடி. இந்த சீட்டோட அண்ணாச்சி நொந்து நூலாகிற்றார். சீட்டு முடிய இன்னும் 6 மாசம் இருக்கு, அதோட கொஞ்சம் நிம்மதி.

முடிவு…

கருத்து கூறல்:

நன்றி வாசித்தமைக்கு. எனது முதல் தொடர்கதை, தவறுகளுக்கு மன்னிக்கவும்.

சீட்டு 80,000 என்பது சிறிய தொகை. உண்மையில் 100,000 மேல் நடைபெறுகிறது. சம்பளம் குறைவாக எடுப்பவர்கள் கூட முதலில் கழித்து எடுத்து மீதியை கட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் இந்த சூதாட்டத்தில் இணைகிறார்கள். அதிக கழிவில் எடுப்பது நட்டம், அதனால் சில காலம் பொறுத்து எடுப்பம் என்பது சிலரது விருப்பு. சேர்த்து வைத்த காசுpனை ஈடுபடுத்தி நட்டம் பட்டவர்கள் அதிகமானவர்கள்.

பேராசைகள் நம்மவர்களுக்கு வந்தது போட்டி பொறாமையால். ஒருவர் வீடு வாங்கி விட்டார் நாங்களும் வாங்க வேண்டும். பணத்தை சேர்த்து வாங்குவதர்க்கு இரண்டு மூண்டு வருடங்கள் ஆகி விடும் அத்தோடு விலைகள் உயர்ந்து விடும். விரைவில் பணம் வேண்டும் என்றால் சீட்டே தகுந்தது. இது பிழையான சிந்தனை.

சீட்டினை சுத்தினவர்கள் தாங்கள் தருவம் தருவம் எண்டே சொல்லி காலத்தை ஓட்டுகிறார்கள். மற்றவரின் பணத்தில் சாப்பிடுவது எப்படி எண்டு தெரியவில்லை. தொண்டையில் உணவு ஒட்டுமா தெரியவில்லை.

நன்றி

கரன் தர்மலிங்கம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனமான உண்மைகளை எழுதியதற்கு நன்றி கரன். சீட்டுப் பிடிப்பவர் அடாவடியான ஆளாய் இருந்தால் கட்டுறவர்களோ,எடுத்தவர்களோ சுத்த மாட்டார்கள்... ஆனால் அவரிடம் கழிவுகள் குறைவாய் இருக்கும்.

கடன் பட்டு வாறவர்களுக்கு முதலில் விசாவும் இருக்காது, களவாய் வேலை கடனை அடைக்க ஒரே தெரிவு  அறா வட்டிக்கு காசு வாங்குதல் மற்றும் சீட்டுத்தான்.

சிலர் விழுந்த சீட்டைக் கேட்கப் போனவரிடம் " இப்ப என்னட்டை காசு இல்லை அடிக்கப் போறியோ அடிச்சுட்டுப் போ பிறகு காசு தரமாட்டன்" என்பார்கள்.

ஆனாலும் சீட்டுகள் ஜோராய் நடந்து கொண்டுதான் இருக்கு...! 

Link to comment
Share on other sites

கரன், 

முதல் தொடர்கதையையே நன்றாக தொய்வில்லாமல் எழுதியமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடர்ந்தும் எழுதுங்கள்.

சில எழுத்துப்பிழைகளையும் கவனத்தில் எடுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.